உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27038 topics in this forum
-
பிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவினால் மல்லையாவுக்கு நெருக்கடி: சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு YouTube விஜய் மல்லையா. - படம். | ராய்ட்டர்ஸ். விமானங்களை குத்தகைக்கு விடும் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்குமாறு விஜய் மல்லையாவுக்கு பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே நிதி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் விஜய் மல்லையாவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமையிலான கிங்பிஷர் நிறுவனம், 2014-ம் ஆண்டு விமானங்களை குத்தகைக்கு விடும் பிஓசி ஏவியேஷன் நிறுவனத்துடன் 4 விமானங்களுக்கு ஒப்பந்தம்…
-
- 0 replies
- 340 views
-
-
பெருஞ்சோகம்: தங்க பூமியில் பசியில் மடியும் குழந்தைகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தங்க பூமியின் பெருஞ்சோகம் இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில், பசியினால், ஊட்டச்சத்து குறைபாட்டினால், தட்டமையால் கடந்த சில தினங்களில் மட்டும் 72 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள். இந்தப் பகுதி தங்க பூமி என்று அறியப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கம் இங்குதான் உள்ளது. வேட்டைக்காரரை கொன்ற சிங்கம் தென் ஆஃப்ரிக்காவில் உள்ள க்ரூகர் தேசிய பூங்காவில் சந்தேகத்திற்குரிய வேட்டைக்காரரை சிங்கங்கள் கொன்று தின்றன என்று காவல்துறையினர் கூ…
-
- 0 replies
- 362 views
-
-
‘பணக்கார முதல்வர் யார்?’: மாநில முதல்வர்கள் மத்தியில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (ஆங்கிலம்) - 'பணக்கார முதல்வர் யார்?' இந்தியாவில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் சாமானியர்களிடம் மட்டும் இல்லை, மாநில முதல்வர்கள் மத்தியிலும் நிலவுகிறது என்று விவரிக்கிறது ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் ஆய்வு முடிவுகளை ஆதாரம் காட்டி வெளிவந்துள்ள தி இந்து நாளிதழ் செய்தி. தேசத்தின் ஏழை முதல்வருடன் ஒப்பிடுகையில் தேசத்தின் பணக்கார முதல்வர் 680 மடங்கு செல்வந்தராக உள்ளார் என்கிறது அந்த செய்தி. நாட்டின் பணக்கார முதல்வர் தெலுங…
-
- 0 replies
- 547 views
-
-
ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்: தலிபான் தலைவர் ஆப்கனில் கொலை YouTube ஆப்கானிஸ்தானின் பர்மல் பகுதியில் மர்காவில் நேற்று அமெரிக்கப் படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தின என்று பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் கான் சேட் மெஹ்சூத், அவரது மைத்துனர், 2 பாதுகாவலர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 2011-ல் கராச்சியில் மெஹ்சூத் தாக்குதல் நடத்தியதில், 18 கடற்படை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பன்னு பகுதியில் சிறைச்சாலையை உடைத்து 400-க்கும் மேற்பட்ட கைதிகளை மெஹ்சூத் விடுதலை செய்தார். மேலும்…
-
- 1 reply
- 429 views
-
-
உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில், பசி பட்டியுடன் பரிதவிக்கும் ரோஹிஞ்சா அகதிகளின் அவலம், ஐ.எஸ். குழுவால் சின்னாபின்னமான நாட்டை மீள்கட்டியெழுப்ப இராக் அரசு புதிய முயற்சி உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 296 views
-
-
உலகிலேயே மிக உயரமான ஹோட்டல் துபாயில் இன்று திறப்பு துபாயில் திறக்கப்பட உள்ள ஜவோரா ஹோட்டல் - படஉதவி: ஏஎப்பி, கெட்டி இமேஜஸ் உலகிலேயே மிகவும் உயரமான ஹோட்டல் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்ள துபாய் நகரில் இன்று திறக்கப்படுகிறது. உலகின் உயரமான கட்டிடங்களுக்கு புகழ்பெற்றது துபாய் நகரமாகும். இங்குள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர்(2716 அடி)உயரமாகும். உலகிலேயே மிக உயரமான கட்டிடம் எனப் பெயர் பெற்றதாகும். அதன் பின் உயரமான ஹோட்டல்கள் திறக்கப்பட்டு வருகின்றன. துபாயில் இதுவரை உயரமான ஹோட்டலாக ஜே.டபிள்யு மாரியாட் மார்குயிஸ் ஹோட்டல் இருந்து வந்தது. அதைவிட உயரமாக இன்று துபாயில…
-
- 0 replies
- 529 views
-
-
71 பயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் நொறுங்கியது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்கு சென்ற ஒரு ரஷ்ய விமானம் நொறுங்கியது. விமானம் ரேடார் திரைகளில் இருந்து மறைந்த பிறகு இந்த விபத்து நடந்துள்ளது. 71 பயணிகள் மற்றும் விமான குழுவினர் இதில் பயணித்துள்ளனர். சரடோவ் ஏர்லைன்ஸின் ஏஎன்148 என்ற இந்…
-
- 2 replies
- 760 views
-
-
பிரபலமாகும் பக்கோடா வேலை: இன்றைய உலகில் வேலைவாய்ப்பின் உண்மை நிலை என்ன? கடந்த 20 நாட்களாக சமூக வலைத்தளங்கள் முதல் கிராமத்தில் பட்டிதொட்டி வரை பேசும் பொருளாக மாறிவிட்டது பக்கோடா வேலை. ஜனவரி 19-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சியே இந்தப் பக்கோடா வேலைவாய்ப்பு விவாதப்பொருளாக மாறக் காரணம். “உங்கள் அலுவலகம் முன் 'பக்கோடா’ கடை ஒன்றை யாராவது திறந்துவிட்டால், அது வேலை செய்வதைக் குறிக்கவில்லையா? ஒரு நாளைக்கு அவர் 200 ரூபாய் சம்பளத்தைத் தன்னுடைய கணக்கில் பெறுகிறார். மிகப்பெரிய அளவில் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்பதே …
-
- 0 replies
- 282 views
-
-
நாளிதழ்களில் இன்று: “மன்னிப்பு தமிழ் வார்த்தையா?” - குரூப் 4 குழப்பமும், கிண்டல் செய்யப்பட்ட விஜயகாந்தும் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `மன்னிப்பு தமிழ் வார்த்தையா...?` தமிழகத்தில் நடைப்பெற்ற குரூப் 4 தேர்வில் `மன்னிப்பு` எந்த மொழி வார்த்தை என்று கேட்கப்பட்டு இருந்தது. பெரும்பாலானோர் அது தமிழ் வார்த்தை என்று பதில் அளித்து இருந்தனர் என்றும், அது உருது வார்த்தை என்றும் விவரிக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி. ரமணா திரைப்படத்தில், `மன்னிப்பு எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை` என்பார் விஜயகாந்த். `மன்னிப்ப…
-
- 0 replies
- 490 views
-
-
“சிறையான சொகுசு விடுதி” - மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சிறையான சொகுசு விடுதி மீண்டும் திறப்பு படத்தின் காப்புரிமைAFP/GETTY கடந்த நவம்பர் மாதம் செளதியில் ஊழல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்ட இளவரசர்கள், அமைச்சர…
-
- 0 replies
- 214 views
-
-
அபுதாபியில் முதல் இந்து கோயில்: அடிக்கல் நாட்டினார் மோடி துபாய் ஒபேரா ஹவுசில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசிய காட்சி - பிடிஐ ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி நகரில் முதல் இந்து கோயில் கட்டும் திட்டத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மேற்கு ஆசியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். பாலஸ்தினம், ஜோர்டான் நாடுகளில் பயணத்தை முடித்து, ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு நேற்று மோடி வந்தார். 2015-ம் ஆண்டுக்குப் பின் இந்த நாட்டுக்கு பிரதமர் மோடி 2-வது முறையாக வந்துள்ளார். அந்நாட்டு இளவரசர் முகம்மது பின் ஜயத் அல் நயானைச் சந்தித்து பிரதமர் …
-
- 3 replies
- 982 views
-
-
உலகில் வேகமாக தண்ணீர் காலியாகும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTONY KARUMBA தண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் உலகின் முக்கிய நகரமாக தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுன் விரைவில் மாறிவிடும். வரும் சில வாரங்களில் இங்கு வாழும் மக்களுக்கு, குடிநீரே கிடைக்காமல் போகலாம். ஆனால், இந்தத் தண்ணீர் பிரச்சனை கேப் டவுனில் மட்டு…
-
- 1 reply
- 1k views
-
-
பேசும் படம்: வான்வழித் தாக்குதலும் சிரியாவும் YouTube சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகில் கிழக்கில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுடாவில் சிரிய அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அப்பகுதி முற்றிலும் வான் வழித் தாக்குதல்களால் முற்றிலுமாக சிதைவுண்டு காணப்படுகிறது. அவற்றின் தொகுப்பு இதோ: ராணுவ விமானத்திலிருந்து பொதுமக்களின் பகுதிகளில் குண்டுகள் தாக்குதலிருந்து தப்பித்த குடும்பம்... தாக்குதலில் காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி …
-
- 0 replies
- 416 views
-
-
நாளிதழ்களில் இன்று: விரைவில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் போகிறார் கமல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா: "விரைவில் கட்சியை பதிவு செய்ய போகிறார் கமல்" நடிகர் கமலஹாசன் விரைவில் தனது கட்சியை பதிவு செய்ய இருப்பதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா` நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தயாராக உள்ளது என்று கமலஹாசன் நற்பணி இயக்க தலைவர் ஒருவர் கூறியதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது. ஒரு கட்சியை பதிவு செய்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும் என்று தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி கூறியதாகவும் அந்…
-
- 0 replies
- 235 views
-
-
வான் கருணை: “கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்ட கேப் டவுனில் பெய்தது மழை” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். கேப் டவுனில் மழை படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES வறட்சியால் சூழப்பட்டு கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள கேப் டவுனில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்க…
-
- 0 replies
- 359 views
-
-
ஜாவா தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற பஸ் விபத்து 27 பேர் பலி!!! இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 27 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சுபாங் பகுதியில் உள்ள மலைப்பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக சுமார் 40 பேர் கொண்ட ஒரு குழுவினர் பஸ்ஸில் சென்றுள்ளனர். அந்த பஸ் மலையில் இருந்து இறங்கிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்த பஸ் பலமுறை உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. http://www.virakesari.lk/article/30509
-
- 0 replies
- 223 views
-
-
“வட கொரியாவுக்கு வாருங்கள்” தென் கொரிய அதிபருக்கு கிம் ஜாங்-உன் அழைப்பு பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தென் கொரிய அதிபரான மூன் ஜே-இன்னை வட கொரியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். கொரிய தலைவர்களுக்கிடையே பல பத்தாண்டுகளுக்கு பிறகு நடக்கும் முதல் சந்திப்பாக இது இருக்கலாம். கொரியர்களால் "இதை செயலாற்றி காண்பிக்க முடியும்" என்று கூறும் மூன், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு வட கொரியா ஒத்துழைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட நிலையில், தென் கொரியாவின் அதிபர் மாளிகையில் நடந்த அதிகாரப்பூர்வ சந்திப்பின்போத…
-
- 0 replies
- 358 views
-
-
இஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இஸ்ரேல் நாட்டுப் போர் விமானம் ஒன்றை சிரியா சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவின் விமானப் பாதுகாப்பு அமைப்பையும், அந்நாட்டில் உள்ள இரானிய இலக்குகளையும் தாக்குவதற்காகச் சென்ற இஸ்ரேலின் ஜெட் போர் விமானம் ஒன்று சிரியாவின் விமான எதிர்ப்புத் தாக்குதல் வீழ்த்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 571 views
-
-
வட கொரியாவின் ராணுவ தலைவர் திடீர் பணி நீக்கம் கிம் ஜோங் உன் - Getty Images வட கொரிய அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்றது முதலாக, அதற்கடுத்த உயர் பதவியான ராணுவ தலைவர் பதவியை வாங் பியாங் வகித்து வந்தார். இந்நிலையில், அவரது அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசுப் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சில ஒப்பந்தங்கள் தொடர்பாக வாங் பியாங் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பதவியிலிருந்து வாங் பியாங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, அந்தப் பதவியை ராணுவ அமைச்சராக இருக்கும் கிம் ஜாங் காக் கூடுதலாக கவனிப்பார் என்ற…
-
- 0 replies
- 374 views
-
-
காங்கோவின் கண்ணீர்க் கதை! மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள், படுகொலைகள் அதிரவைக்கின்றன. 1998 முதல் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 54 லட்சம் பேர் இறந்துள்ளனர். மாதந்தோறும் 45,000 பேர் கொல்லப்படு கிறார்கள். கலகக் கும்பல்கள் இடையிலான ஆயுதமேந்திய சகோதர யுத்தமும் உள்நாட்டுப் போரும் உலகின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்கவேயில்லை. அதிபர் ஜோசப் கபிலாவின் பதவிக்காலம் முடிந்தும் ராணுவத்தின் துணையுடன் ஆட்சி யில் நீடிக்கிறார். அவர் பதவிவிலக வேண்டும் என்று காங்கோ மக்கள் போராடிவருகிறார்கள். மக்கள் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கும் கபிலா, தன்னைப் பதவியிலிருந்து இறக்க வெளிநா…
-
- 1 reply
- 381 views
-
-
அழியும் இனத்தின் ஆண் தவளை இணைய பெண் தவளை தேடல் தீவிரம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தவளை இனத்தை காக்க முயற்சி பொலிவியாவில் உள்ள 10 வயதாகும் சேவென்காஸ் வகை நீர்த் தவளை ஒன்றுக்கு இனப்பெருக்கம் செய்ய இணை ஒன்றைத் தேடும் முயற்சியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இறங்கியுள்ளனர். படத்தின் காப்புரிமைAFP ரோமியோ என்று பெயரிடப்பட்ட அந்த தவளையே அந்த இனத்தின் கடைசி ஆண் தவளை என்று கருதப்படுகிறது. 'ஜூலியட்டுக்காக காத்திருக்கும் ரோமியோ' என்று குறிப்பிட்டு அந்தத் தவளையின் பெயரில் டேட்டிங் இணையதளம் ஒன்று கணக்கு ஒன்றை உருவாக்கியுள்ளது. …
-
- 0 replies
- 357 views
-
-
குளிர்கால ஒலிம்பிக்: தென்கொரிய விருந்தில் வடகொரியாவைத் தவிர்த்த அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தென் கொரியாவின் பியோங்யாங் நகரில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்கவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதிகாரபூர்வ விருந்தில் வடகொரியா அதிகாரிகளுடன் மேசையைப் பகிர்ந்துகொள்ளாமல் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தவிர்த்தார். படத்தின் காப்…
-
- 0 replies
- 161 views
-
-
ஆண்டில் இரண்டாவது முறையாகவும் அமெரிக்காவில் "ஷட்டவுன்" அமெரிக்க காங்கிரசில் செலவின மசோதா குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்றப்படாததால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக அரசு அலுவலகங்கள் கதவடைப்புக்கு உள்ளாகியுள்ளது அமெரிக்காவில் அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறாததால் கடந்த மாதம் 19ஆம் திகதி அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கி வந்தன. எல்லை பாதுகாப்பு மற்றும் மெக்சிகோ சுவருக்கு நிதி, சிறுவயதில் குடியேறியவர்களுக்கு பாதுகாப்பு ஆகியவை குறித்து அதிபரின் கொள்கையில் முரன்பாடு கொண்ட ஆளும்கட்சி எம்.பி.க்கள் மசோதா நிறைவேறுவதற்கு தடையாக நின்றனர். செலவின மசோதாவை ந…
-
- 1 reply
- 385 views
-
-
தென் கொரியா சென்றடைந்தார் வட கொரிய தலைவரின் தங்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியாவின் உயரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் தங்கை கிம் யோ-ஜாங் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பியோங்சாங் சென்றடைந்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP Image captionகிம் ஜாங் உன்னின் தங்கை கிம் யோ-ஜங் சகோதருக்கு மிகவும் நெருங்கியவர் என்று கர…
-
- 0 replies
- 327 views
-
-
சிரியாவின் கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்கள் - அரசுப் படைகள் கடும் மோதல்,தென்கொரியாவில் களைகட்டியது குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.
-
- 0 replies
- 197 views
-