உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட இராக்கிய நகரின் இன்றைய நிலை என்ன? பிபிசி செய்தியாளரின் நேரடி படப்பிடிப்பு!! சௌதியில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறும் எத்தியோப்பிய பணியாளர்கள்! அவர்களின் எதிர்காலம் என்ன? என்பதை விளக்கும் செய்தித்தொகுப்பு!! மற்றும் கிரீன்லாண்ட் உறைபனியில் வேகமாய் வளரும் பாசி! காலநிலைமாற்றத்தின் பாதிப்பை அதிகரிக்குமா என்பதை ஆராயும் ஆய்வு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 381 views
-
-
மத்திய மியான்மரில் உள்ள பௌத்த பகோடா ஆலயம் கடுமையான மழைவீழ்ச்சியால் வெள்ளப்பெருக்கால் நீரில் அமிழ்ந்துள்ளது . பகோடா 2009 இல் மாகவே என்ற பகுதியில் அமைக்கப்பட்டது. குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த மாதம் மியன்மார் வெள்ளம் இடம்பெயர்ந்துள்ளனர், http://www.bbc.co.uk/news/av/world-asia-40705792/pagoda-collapses-into-river-in-myanmar
-
- 0 replies
- 678 views
-
-
டயானாவுடனான கடைசி உரையாடலை நினைத்து வருந்தும் வில்லியம், ஹாரி படத்தின் காப்புரிமைTHE DUKE OF CAMBRIDGE AND PRINCE HARRY இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி தங்களது தாயுடனான கடைசி உரையாடல் என்பது விரக்தியடைந்த அவசர தொலைப்பேசி அழைப்பு என்று தங்களுடைய வருத்தத்தை மனம் திறந்து பேசியுள்ளனர். இளவரசி டயானாவின் உயிர் பிரிந்தபோது இளவரசர் ஹாரிக்கு 12 வயது. ''எனக்கு நினைவில் இருப்பது என்னவென்றால் என் வாழ்க்கை முழுவதும் நான் வருந்தும் ஒரே விஷயம் அந்த தொலைபேசி அழைப்பு எவ்வளவு குறுகியதாக இருந்தது மட்டுமே'' என்கிறார் ஹாரி. டயானா இறந்து 20 ஆண்டுகளை குறிக்கும் ஐடிவி ஆவணப்படத்திற்காக ஹாரி மற்றும் வில்லியம் மனம் திறந்து பேசியுள…
-
- 1 reply
- 589 views
-
-
ரஷ்ய தொடர்பு குறித்த விசாரணை: குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் டிரம்பின் மருமகன் தாமோ, டிரம்பின் பிரசாரக் குழுவைச் சேர்ந்த வேறு எவருமோ அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக ரஷ்யாவுடன் எந்த ரகசியக் கூட்டும் வைக்கவில்லை என்று டிரம்பின் மருமகன் ஜேர்டு குஷ்னர் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS தமக்கு முறைகேடான தொடர்புகள் ஏதுமில்லை என்றும் தமது வணிகத்துக்குத் தாம் ரஷ்ய நிதியைச் சார்ந்து இருக்கவில்லை என்றும் அவர் கூறுவார். தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரணை நடத்தும் செனட் குழுவின் கூட்டத்துக்கு முன்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார் குஷ்னர். அதிபர் டிரம்பின் முதுநிலை ஆலோசகராக இருக்கும் இவர், டிரம்பின் தேர்தல் பிரசாரக் குழுவில் டிஜிட்டல் உத்திகளை வக…
-
- 1 reply
- 389 views
-
-
ஆப்கன் தலைநகர் காபூலில் கார்குண்டுத்தாக்குதலில் 24 பேர் பலி பலர் படுகாயம்! அமெரிக்கப்படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வலுக்கும் கோரிக்கைகள்! துருக்கிய எதிர்கட்சிப்பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்!ஊடகங்களுக்கு எதிரான தாக்குதலென வலுக்கும் குற்றச்சாட்டு! மற்றும் ஸ்காட்லாந்தில் அமையும் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் குறித்து கடலுக்குள் இருந்து பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேக செய்திகள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 212 views
-
-
சற்றுமுன் மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடி சுற்றிவளைப்பு மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நடவடிக்கை அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, மா…
-
- 0 replies
- 438 views
-
-
75 மைல் தூரம் பயணித்து எதிரிகளின் விமானங்களை தாக்கக் கூடிய புதிய வகை ஏவுகணை ஈரானானது 75 மைல் தூரம் பயணித்து எதிரிகளின் போர் விமானங்களைத் தாக்கக் கூடிய புதிய வகை ஏவுகணையொன்றின் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. அந்த சேயத் – -3 ஏவுகணையானது 17 மைலுக்கும் அதிகமான உயரத்திலுள்ள இலக்கைத் தாக்கக் கூடியதாகும். இது தொடர்பில் அந்நாட்டு வான் பாதுகாப்புத் தலைவர் பிறிகேடியர் ஜெனரல் பர்ஸாத் இஸ்மாயிலால் வைபவமொன் றில் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேற்படி ஏவுகணையானது ஒரேசமயத்தில் 30 இலக்குகளை இனங்கண்டு அவற்றில் 12 இலக்குகளை ஒரேசமயத்தில் தாக்கக் கூடியது என அவ…
-
- 0 replies
- 447 views
-
-
எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவ வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும்: நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் கோப்புப் படம் எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவத்தின் வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும் என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத் தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் டோக்லாம் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கடந்த ஜூன் 16-ம் தேதி அத்துமீறி நுழைந்தனர். அங்கு இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தனர். மேலும…
-
- 0 replies
- 391 views
-
-
சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 16 பிரிட்டிஷ் குழந்தைகள் படத்தின் காப்புரிமைINDIA DIRECT தன்னார்வத் தொண்டு நிறுவனம் நிதியுதவி செய்யும் குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று உதவிசெய்வதற்காக சென்னை வந்த பிரிட்டனைச் சேர்ந்த 16 மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சரகம் விசாரித்துவருகிறது. ஜூலை 17ஆம் தேதியன்று இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, சென்னை வந்தடைந்த 16 மாணவர்களும் அவர்களுடன் இருந்த மூன்று ஆசிரியர்களும் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, அடுத்த விமானத்திலேயே பிரிட்டன் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் 19ஆம…
-
- 3 replies
- 659 views
-
-
இந்திய பீரங்கி உதிரிபாகங்களிலும், போலியை புகுத்திய சீனா.. பகீர் தகவல் அம்பலம்.. சிபிஐ விசாரணை. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது என மிகவும் மலிவான விலையிலான சீன உதிரி பாகங்கள் இந்திய தயாரிப்பு பீரங்கிகளில் பொருத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லியை தலைமையகமாக செயல்படும் நிறுவனம் ஒன்றின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. 1999 கார்கில் போரில் போது இந்திய ராணுவத்தில் தனுஷ் எனப்படும் போபர்ஸ் பீரங்கிகள் முக்கிய பங்கு வகித்தன. இவ்வகையான பீரங்கிகள் புதிய தொழில் நுட்பங்களுடன் இப்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வருகிறது.போலி உதிரிபாகங்ககள்: போபர்ஸ் பீரங்கிகள் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயா…
-
- 0 replies
- 524 views
-
-
நியூஸிலாந்தில் கடும் புயல்! – அவசர நிலை பிரகடனம்!! நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் நிலவி வரும் கடும் புயல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த அவசரநிலை இன்று (சனிக்கிழமை) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தெருக்கள் பல மூடப்பட்டுள்ளன என்றும் இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நியுசிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் எனும் இடத்தில் உள்ள நதிகள் பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரி…
-
- 0 replies
- 418 views
-
-
பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு குளோபல் தமிழ்ச்செய்தியாளர் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிரு;நது பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கக்கூடிய சாத்தியம் குறைவு என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் எதிர்வரும் 2019ம் ஆண்டில் முழுiயாக வெளியேறும் என்பது குறிப்…
-
- 0 replies
- 191 views
-
-
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவால் கைது செய்யப்பட்ட செளதி இளவரசர் செளதியின் ஒரு இளவரசர் செளத் பின் அப்தெலாஜிஸ் பின் முசைத் அல் செளத், பலரை அடிக்கும் காணொளிக் காட்சி, சமூக ஊடகங்களில் பரவலானதை அடுத்து, அவரை கைது செய்ய செளதி அரசர் சல்மான் பின் அப்தெலாஜிஸின் உத்தரவிட்டார். படத்தின் காப்புரிமைAFP Image captionஇளவரசரை கைது செய்ய உத்தரவிட்ட செளதி அரசர் சல்மான் இதுபோன்ற வேறு எந்தவிதமான மீறல்களிலும் இளவரசர் செளத் பின் அப்தெலாஜிஸ் பின் முசைத் அல் செளத் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரியாத் போலீஸால் கைது செய்யப்பட்டதாக செளதி அரேபிய அரசின் அல்-இக்பரியா தொலைகாட்சியின் @alekhbariyatv என்ற டிவிட்ட…
-
- 1 reply
- 427 views
-
-
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 21/07/17 உலகில் எந்த நாட்டிலும் ஓராண்டில் இல்லாத வகையில் யேமனில் காலரா நோய் பரவியுள்ளது. இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஜெரூசலேமின் முக்கிய மசூதியில் இஸ்ரேல் செய்த கூடுதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு பாலஸ்தீனர்கள் எதிர்ப்பு! இஸ்ரேல் காவல்துறைக்கும் பாலஸ்தீன வழிபாட்டாளர்களுக்கும் கடும் மோதல்!! மற்றும் தூரிகைகள் செய்யும் சுவரோவியப்போராட்டம்! palm oil விவசாயத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம். இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 296 views
-
-
துருக்கி மற்றும் கிரேக்கத் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இருவர் பலி, 200 பேர் காயம் துருக்கி மற்றும் கிரேக்கத் தீவுகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கதால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளனர். கிரேக்கத் தீவுப் பகுதி மற்றும் துருக்கி கடற்கரைப் பகுதிகளில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கிரேக்கத்திலுள்ள புராதன சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் பல பாதிப்படைந்துள்ளன. இதில் 2 பேர் பலிய…
-
- 0 replies
- 280 views
-
-
மாயமான மலேசியா விமானத்தை (எம்ஹெச் 370) தேடும் பணியின் போது கடலுக்குள் புதைந்து கிடக்கும் புதிய உலகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதில் எரிமலைகள், பள்ளத் தாக்குகள் மற்றும் உயரமான முகடுகள் இருப்பது போன்ற வரைபடத்தை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தை (எம்ஹெச் 370) தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் தேடும் பணியில் ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன. இந்தியப் பெருங் கடலின் ஆழ்ந்த பகுதிகளில் அனைத்து விதமான தகவல்கள் அடங்கிய புள்ளி விவரம் சேகரிக் கப்பட்டு, நவீன தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சுமார் 1.20 லட்சம் சதுர கிலோ மீட்டர் தூரத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்தத் துப்பும் கிடைக்க …
-
- 0 replies
- 442 views
-
-
சௌதி: மரபை மீறி கவர்ச்சி ஆடை அணிந்து காணொளி வெளியிட்ட பெண்ணால் பரபரப்பு பொதுவெளியில் பாரம்பரியமான, பழமைவாத உடை அணியும் வழக்கம்கொண்ட செளதி அரேபியாவில், இளம்பெண் ஒருவர் மரபை மீறிய உடையணிந்து எடுக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். படத்தின் காப்புரிமைCHRISTOPHER FURLONG/GETTY IMAGES ஆளரவமில்லா ஒரு புராதன கோட்டையில் சிறிய, இறுக்கமான, கையில்லா உடைகளை அணிந்து, அந்தப் பெண் நடப்பது அந்த காணொளிக் காட்சியில் காட்டப்பட்டுள்ளது. செளதி அரேபியாவில் பெண்கள், கைகள் மற்றும் பாதங்கள் தவிர இதர உடல் பாகங்கள் மூடுமாறு, நீண்ட, தளர்வான ஆடைகளை அணியவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 4 replies
- 2.1k views
-
-
டிமென்ஷியா வராமல் தடுக்க ஒன்பது வழிகள்! புதிய ஆய்வின் ஆச்சரியமூட்டும் முடிவுகள் குறித்த தகவல்கள், மடகாஸ்கரின் நீலமணிக்கல் சுரங்கங்கள் அபூர்வ விலங்கான லீமாரை வேகமாக அழிக்கிறதா? பிபிசியின் நேரடிச் செய்தித் தொகுப்பு!! மற்றும் சிங்கப்பூரின் அரசியலை சித்திரப்படங்கள் மூலம் சொல்லும் ஒருவரின் படைப்பு காமிக்ஸ் உலகின் உயர்ந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 335 views
-
-
சற்றுமுன்: இந்திய நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு..! 4 hours ago இந்திய நாட்டின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17) நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் மீரா குமார் போட்டியிட்டனர். இதில் ராஜ்ய சபா, லோக் சபா எம்பிக்கள் மற்றும் மாநில எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர். மொத்தம் 99% வாக்கு பதிவாகியுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி,…
-
- 0 replies
- 572 views
-
-
ஒசாமா பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்: ராபர்ட் ஓ நீல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption2011-ஆம் ஆண்டு மே 2, பாகிஸ்தானின் அபோட்டாபாதில் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார் 2011 மே மாதம் இரண்டாம் தேதியன்று பாகிஸ்தானின் ஜலாலாபாத், அபோட்டாபாதில் ரகசியமாக மறைந்து வாழ்ந்த ஒபாமா பின்லேடனை, அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். ஒசாமா பின்லேடனை சுட்டது யார், ஒசாமா மீது எத்தனை குண்டுகள் பாய்ந்தன என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. எனினும், அமெரிக்க கடற்படையின் முக்கியமான சிறப்பு நடவடிக்கைகள் படை அதிகாரி ராபர்ட் ஓ நீல் எழுதியுள்ள பு…
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரிட்டன்: 21 வயதில் மருத்துவராகி இந்திய மாணவர் சாதனை படத்தின் காப்புரிமைDOSHI FAMILY Image caption2012-இல் மருத்துவப் படிப்பைத் தொடங்கியபோது அர்பன் தோஷிக்கு 17 வயதே ஆகியிருந்தது. ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் பிரிட்டன் வரலாற்றில் மிகவும் இளம் வயது மாணவராகக் கருதப்படுகிறார். தனது 21 வயது, 334 நாட்களில், திங்களன்று, அர்பன் தோஷி மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார். தன்னுடைய 17-ஆம் வயதில், பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் அவர் வசித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இளங்கலைத் தேர்வில் வெற்றி பெற்றபின் மருத்துவப் படிப்பில் சேர அவர் அனுமதிக்கப்பட்டார். 2010-ஆம் ஆண்டு தனக்கு 21 வயது 352 …
-
- 0 replies
- 451 views
-
-
கத்தார் மீதான நிபந்தனைகளை கைவிட்டது செளதி கூட்டணி; 6 புதிய கொள்கைகளை ஏற்க கோரிக்கை படத்தின் காப்புரிமைREUTERS Image captionதனது இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமான எந்த நடவடிக்கையினையும் ஏற்றுக்கொள்ள கத்தார் மறுக்கிறது கத்தார் மீதான தடையை முன்னெடுத்துள்ள நான்கு அரபு நாடுகள், கடந்த மாதம் தாங்கள் வைத்த 13 குறிப்பிட்ட நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற வேண்டும் என மேற்கொண்டு வலியுறுத்தப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகல், கத்தார் தற்போது ஆறு முக்கிய கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதம் மற…
-
- 1 reply
- 325 views
-
-
லிபியாவிலிருந்து இத்தாலிக்கு செல்ல முயல்பவர்கள் தொடர்ந்து நடுக்கடலில் உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது! இந்த ஆண்டு மட்டும் சுமார் இரண்டாயிரம் பேர் பலி! தென்னாப்பிரிக்காவில் அமையும் பத்தாயிரம் மடங்கு சக்திவாய்ந்த தொலைநோக்கி! வேற்றுக்கிரக உயிர்களை கண்டுபிடிக்குமா? மற்றும் இந்திய உதவி பெறும் ஜிம்பாப்வேயிலுள்ள கூடை முடைவோரின் வாழ்க்கை குறித்த சிறப்பு பார்வை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 250 views
-
-
ஜெர்மனி ஜி20 உச்சி மாநாட்டில் டிரம்ப் - புதின் ரகசிய உரையாடல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் இந்த மாதம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் முன்பு வெளியில் அறிவிக்கப்படாத கூட்டம் ஒன்றில் இரண்டாவது முறையாக சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அதிகாரபூர்வ அமர்விற்கு பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து வெள்ளை மாளிகை எதையும் வெளியிடவில்லை. இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ''போலியான செய்தி'' என்று கூறி மறுக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப். கடந்த ஆண்டு நடைபெற்…
-
- 0 replies
- 331 views
-
-
காங்கிரஸ் கட்சி தரைமட்டமாக என்ன காரணம் ? | Socio Talk காந்தி, நேரு, இந்திரா காந்தி, சோனியா காந்தி விழியில் நடந்து வந்த காங்கிரஸ் கட்சி, இப்போது அதை எடுத்து வழி நடத்துவது யார்? ராகுல் காந்தியா? பிரியங்கா காந்தியா? காங்கிரஸ் கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதா? காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் என்னவாகும்? மேலும் பல கேள்விகளும் அதற்கான விடைகளும்.
-
- 0 replies
- 401 views
-