உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26883 topics in this forum
-
உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- உலகையே திரும்பிப் பார்க்க வைத்த குட்டிக் குழந்தை சார்லி கார்ட் மரணித்துவிட்டதாக பெற்றோர் அறிவித்துள்ளனர். பிரித்தானியா மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் சார்லிக்காக பிரார்த்தனையும் வேண்டுதல்களும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிகிச்சை முறைமை தொடர்பில் கடுமையாக பல நீதிமன்றங்களில் போராடிய பெற்றோர் இறுதியில் தங்களது போராட்டத்தை கைவிட்டிருந்தனர். 11 மாத சிசுவான சார்லி கார்ட்டின் உயிர் பிரிந்து விட்டதாக அவரது பெற்றோர்களான Connie Yates மற்றும் Chris Gard உருக்கமாக தெரிவித்துள்ளனர். Great Ormond Street மருத்துவ மனையுடன் மிக நீண்ட அடிப்படையிலான ஓர…
-
- 0 replies
- 465 views
-
-
வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை சோதனையால் பரபரப்பு அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய புதியதொரு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியுள்ளதாக தென் கொரியாவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகனும் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைKCNA இந்த ஏவுகணை 3 ஆயிரம் கிலோமீட்டர் (1,865 மைல்) உயரம் சென்றதாகவும், ஜப்பான் கடலில் விழுந்ததாகவும், ஐப்பானிய தேசிய ஒளிபரப்பு நிறுவனமான என்ஹெச்கே அறிவித்திருக்கிறது. முதலாவது ஐசிபிஎம் சோதனை நடத்திய மூன்று வாரங்களுக்கு பிறகு வட கொரியா இந்த புதிய சோதனையை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவும், தென் கொரிய ராணுவமும் தரை…
-
- 0 replies
- 652 views
-
-
பதவி விலகினார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்! கறுப்புப்பண குற்றச்சாட்டில் உச்சநீதிமன்ற உத்தரவால் பரபரப்பானது பாகிஸ்தான் அரசியல்! ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகம் உட்கொள்வதால் ஆபத்து! எச்சரிக்கும் புதிய ஆய்வின் முடிவுகள்! மற்றும் அல்பினோக்களுக்கு எதிரான மனநிலையை கால்பந்து மைதானம் மூலம் மாற்ற முயற்சி! தோலின் நிறமாற்றத்தால் ஆபத்தை எதிர்கொள்பவர்களின் ஏக்கம் தீருமா என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 336 views
-
-
ஜெர்மனி சூப்பர் மார்க்கெட்டில் கத்தி தாக்குதல்: ஒருவர் பலி- பலர் காயம் ஜெர்மனியில் இன்று சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த நபர் திடீரென கத்தியால் சரமாரியாக வெட்டியதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். பெர்லின்: ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஹம்பர்க் நகரின் பாம்பெக் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இன்று வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஓடி வந்துள்ளார். வந்த வேகத்தில் வாடிக்கையாளர்களை நோக்கி சென்ற அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை…
-
- 1 reply
- 377 views
-
-
உலகமயமாகும் பெரியார்: ஜெர்மனியில் தொடங்கிய சர்வதேச மாநாடு! உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியாருக்கும், ஜெர்மனிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பார்வையாளராக 1932-ம் ஆண்டு ஜெர்மனி சென்றிருந்தார் பெரியார். அங்கு 27 நாள்கள்வரை தங்க நேர்ந்தபோது, அந்நாட்டைச் சிலாகித்திருக்கிறார். அவரது எண்ணத்தில் அந்நாட்டிற்கு தனியிடம் இருந்திருக்கிறது. அதே ஜெர்மனியில் நேற்று தொடங்கியிருக்கிறது பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு. தந்தை பெரியாரின் தத்துவமும், சிந்தனைகளும் பல நாடுகளில் பரவியிருக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவில் பெரியா…
-
- 1 reply
- 415 views
-
-
பனாமா ஊழல் வழக்கு: பிரதமர் பதவியிலிருந்து நவாஷ் ஷெரீப் தகுதி நீக்கம்- பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்பளித்ததுள்ளது. அதில், பனாமா ஊழல் வழக்கல் பாகிஸ்தான் பிரதமர் நாவாஷ் ஷெரீப் சொத்து குவித்தது நிரூபணமானதால் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நவாஷ் ஷெரீப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்ததவும் நீதிமன்றம் உத்தரவிட்…
-
- 1 reply
- 528 views
-
-
பில்கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் அமேசானின் ஜெஃப் பெஸாஸ் ஜெஃப் பெஸாஸ் - படம் | வி.சுதர்சன் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயலதிகாரியான ஜெஃப் பெஸாஸ், பில்கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார். இதனை ப்ளூம்பர்க் மற்றும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று அமேசான் பங்குகள் 1.6% உயர்வாகத் தொடங்கியது இதனால் பெஸாஸ் சொத்தில் 1.4 பில்லியன் டாலர்கள் அதிகரிக்க பில்கேட்சைப் பின்னுக்குத் தள்ளினார். கடந்த மே, 2013 முதல் ப்ளூம்பர்க் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடம் வகித்து…
-
- 0 replies
- 353 views
-
-
அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகளும் நம்பிகளும் பணிபுரிய தடைவிதிக்கும் அதிபர் ட்ரம்பின் உத்தரவுவை யாருமே எதிர்பார்க்கவில்லை. அமெரிக்க அரசியலில், இது கோபம், குழப்பம் என பலவித எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் இராணுவ தளபதியும் குடியரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் மெக்கேய்ன், இராணுவத்தில் பணிபுரியத்தேவையான தகுதிகள் கொண்ட அனைவருமே அதில் இணைந்து பணிபுரிய அனுமதிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த தடைக்கு அமெரிக்க அரசால் கூறப்படும் காரணங்கள் பொய்யானவை என்று திருநங்கை செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
-
- 0 replies
- 365 views
-
-
ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடமில்லை': ட்ரம்ப்பின் முடிவுக்கு வலுக்கும் கண்டனங்கள்! 'அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் இல்லை' என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிர்ச்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார், ட்ரம்ப். ஏழு இஸ்லாமிய நாடுகள் மீதான தடை, ஒபாமாவின் சுகாதாரத் திட்டம் ரத்து, ஹெச் 1 பி விசாவில் கட்டுப்பாடு என அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டுவந்தார். இந்நிலையில், தற்போது அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு இடம் இல்லை என்று அறிவித்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளைச் சேர்க்கும் திட்டத்தை, முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டுவந்தார். ட்ரம்ப்…
-
- 0 replies
- 243 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் அகதிகள் தஞ்சம் கோரும் உரிமை குறித்த முக்கிய தீர்ப்பு! ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்படுவார்கள் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் ; ஐஎஸ் அமைப்பில் இணைந்த வெளிநாட்டுப்பெண்களின் எதிர்காலம் என்ன? சொந்தநாடு திரும்பமுடியுமா? இழந்த வாழ்வை மீட்க முடியுமா? பிபிசியின் பிரத்யேக புலனாய்வு! மற்றும் நோயை கண்டறியும் நாய்கள்! புற்றுநோய்க்கு அடுத்து பார்கின்ஸைன்ஸ் நோயை கண்டுபிடிக்கவும் நாய்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 313 views
-
-
பிரான்ஸின் தென்கிழக்கு பரவிய காட்டுதீயை அடுத்து 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியில் பரவிய காட்டுதீயை அடுத்து சுமார் 10000ற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போர்மெஸ்-லெஸ் மிமோசெஸ் என்ற இடத்தில் பரவிய காட்டுதீயை அணைப்பதற்காக அதிகாரிகள் பெருமளவு தீயணைப்பு படையினரை ஈடுபடுத்தியுள்ளது மத்தியதரை கரையோரப்பக்கமாக உள்ள இந்த பகுதியில் சுமார் 4000 ஏக்கர் நிலம் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் காட்டுத்தீ பரவியதை தொடர்ந்து சுமார் 10,000ற்கும் அதிகமான மக்களை வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர் திங்கட்கிழ…
-
- 0 replies
- 335 views
-
-
2040 முதல் பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு பிரித்தானியாவில் தடை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நைட்டிரஜன் ஓக்ஸைட் காரணமாக பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுகின்றது என்ற அச்சம் காரணமாக 2040 முதல் புதிய பெட்ரோல் டீசல் கார்கள் மற்றும் வாகனங்களிற்கு தடை விதிப்பதற்கு பிரிட்டன் தீர்மானித்துள்ளது.அரசாங்கத்தின் சுத்தமான காற்று திட்டம் குறித்த வாக்குறுதியின் ஓரு பகுதியாகவே இந்த தடையை அறிமுகப்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளது மாசடைந்த காற்று பொதுமக்களின் உடல்நலத்திற்கு ஏற்படுத்தி வரும் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரசாங்கம் இந்த தடை ஹைபிரிட் வாகனங்களிற்கும் பொருந்தும் என …
-
- 0 replies
- 255 views
-
-
தடை விதிக்கப்பட்டு 50 நாட்களானது: கத்தார்வாசிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனரா? படத்தின் காப்புரிமைAFP சில வளைகுடா நாடுகள் கத்தார் மீது தடை விதித்து 50 நாட்கள் முடிவடைந்துவிட்டது. கத்தார் தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டிய செளதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகள், அதனுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாக கடந்த ஜூன் ஐந்தாம் தேதியன்று அறிவித்தன. அதன்பிறகு, இரு தரப்புக்குமிடையே சீர்குலைந்த உறவுகளை சரி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை எந்த இறுதி முடிவும் ஏற்படவில்லை. ஆனால் கத்தாரின் வெளியுறவு கொள்கைகளை அதன் அண்டை நாடுகள் விமர்சிப்பது இது முதல்முறையும்…
-
- 0 replies
- 342 views
-
-
ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட இராக்கிய நகரின் இன்றைய நிலை என்ன? பிபிசி செய்தியாளரின் நேரடி படப்பிடிப்பு!! சௌதியில் இருந்து ஆயிரக்கணக்கில் வெளியேறும் எத்தியோப்பிய பணியாளர்கள்! அவர்களின் எதிர்காலம் என்ன? என்பதை விளக்கும் செய்தித்தொகுப்பு!! மற்றும் கிரீன்லாண்ட் உறைபனியில் வேகமாய் வளரும் பாசி! காலநிலைமாற்றத்தின் பாதிப்பை அதிகரிக்குமா என்பதை ஆராயும் ஆய்வு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 384 views
-
-
மத்திய மியான்மரில் உள்ள பௌத்த பகோடா ஆலயம் கடுமையான மழைவீழ்ச்சியால் வெள்ளப்பெருக்கால் நீரில் அமிழ்ந்துள்ளது . பகோடா 2009 இல் மாகவே என்ற பகுதியில் அமைக்கப்பட்டது. குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் 90,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த மாதம் மியன்மார் வெள்ளம் இடம்பெயர்ந்துள்ளனர், http://www.bbc.co.uk/news/av/world-asia-40705792/pagoda-collapses-into-river-in-myanmar
-
- 0 replies
- 681 views
-
-
ரஷ்ய தொடர்பு குறித்த விசாரணை: குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் டிரம்பின் மருமகன் தாமோ, டிரம்பின் பிரசாரக் குழுவைச் சேர்ந்த வேறு எவருமோ அமெரிக்கத் தேர்தல் தொடர்பாக ரஷ்யாவுடன் எந்த ரகசியக் கூட்டும் வைக்கவில்லை என்று டிரம்பின் மருமகன் ஜேர்டு குஷ்னர் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS தமக்கு முறைகேடான தொடர்புகள் ஏதுமில்லை என்றும் தமது வணிகத்துக்குத் தாம் ரஷ்ய நிதியைச் சார்ந்து இருக்கவில்லை என்றும் அவர் கூறுவார். தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து விசாரணை நடத்தும் செனட் குழுவின் கூட்டத்துக்கு முன்பு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார் குஷ்னர். அதிபர் டிரம்பின் முதுநிலை ஆலோசகராக இருக்கும் இவர், டிரம்பின் தேர்தல் பிரசாரக் குழுவில் டிஜிட்டல் உத்திகளை வக…
-
- 1 reply
- 391 views
-
-
டயானாவுடனான கடைசி உரையாடலை நினைத்து வருந்தும் வில்லியம், ஹாரி படத்தின் காப்புரிமைTHE DUKE OF CAMBRIDGE AND PRINCE HARRY இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி தங்களது தாயுடனான கடைசி உரையாடல் என்பது விரக்தியடைந்த அவசர தொலைப்பேசி அழைப்பு என்று தங்களுடைய வருத்தத்தை மனம் திறந்து பேசியுள்ளனர். இளவரசி டயானாவின் உயிர் பிரிந்தபோது இளவரசர் ஹாரிக்கு 12 வயது. ''எனக்கு நினைவில் இருப்பது என்னவென்றால் என் வாழ்க்கை முழுவதும் நான் வருந்தும் ஒரே விஷயம் அந்த தொலைபேசி அழைப்பு எவ்வளவு குறுகியதாக இருந்தது மட்டுமே'' என்கிறார் ஹாரி. டயானா இறந்து 20 ஆண்டுகளை குறிக்கும் ஐடிவி ஆவணப்படத்திற்காக ஹாரி மற்றும் வில்லியம் மனம் திறந்து பேசியுள…
-
- 1 reply
- 593 views
-
-
ஆப்கன் தலைநகர் காபூலில் கார்குண்டுத்தாக்குதலில் 24 பேர் பலி பலர் படுகாயம்! அமெரிக்கப்படைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வலுக்கும் கோரிக்கைகள்! துருக்கிய எதிர்கட்சிப்பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்!ஊடகங்களுக்கு எதிரான தாக்குதலென வலுக்கும் குற்றச்சாட்டு! மற்றும் ஸ்காட்லாந்தில் அமையும் உலகின் முதல் மிதக்கும் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் குறித்து கடலுக்குள் இருந்து பிபிசி செய்தியாளர் தரும் பிரத்யேக செய்திகள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 215 views
-
-
சற்றுமுன் மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் அதிரடி சுற்றிவளைப்பு மாலைதீவின் பாராளுமன்றம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த நடவடிக்கை அந்த நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமினின் உத்தரவிற்கமைய எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலை தீவு சபாநாயகர் அப்துல்லா மஸிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அந்நாட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, மா…
-
- 0 replies
- 440 views
-
-
75 மைல் தூரம் பயணித்து எதிரிகளின் விமானங்களை தாக்கக் கூடிய புதிய வகை ஏவுகணை ஈரானானது 75 மைல் தூரம் பயணித்து எதிரிகளின் போர் விமானங்களைத் தாக்கக் கூடிய புதிய வகை ஏவுகணையொன்றின் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. அந்த சேயத் – -3 ஏவுகணையானது 17 மைலுக்கும் அதிகமான உயரத்திலுள்ள இலக்கைத் தாக்கக் கூடியதாகும். இது தொடர்பில் அந்நாட்டு வான் பாதுகாப்புத் தலைவர் பிறிகேடியர் ஜெனரல் பர்ஸாத் இஸ்மாயிலால் வைபவமொன் றில் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேற்படி ஏவுகணையானது ஒரேசமயத்தில் 30 இலக்குகளை இனங்கண்டு அவற்றில் 12 இலக்குகளை ஒரேசமயத்தில் தாக்கக் கூடியது என அவ…
-
- 0 replies
- 450 views
-
-
எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவ வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும்: நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை தாக்கல் கோப்புப் படம் எதிரி நாடுகளுடன் போர் மூண்டால் இந்திய ராணுவத்தின் வெடிபொருட்கள் பத்தே நாட்களில் காலியாகிவிடும் என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத் தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் டோக்லாம் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் கடந்த ஜூன் 16-ம் தேதி அத்துமீறி நுழைந்தனர். அங்கு இந்திய ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை அழித்தனர். மேலும…
-
- 0 replies
- 394 views
-
-
இந்திய பீரங்கி உதிரிபாகங்களிலும், போலியை புகுத்திய சீனா.. பகீர் தகவல் அம்பலம்.. சிபிஐ விசாரணை. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது என மிகவும் மலிவான விலையிலான சீன உதிரி பாகங்கள் இந்திய தயாரிப்பு பீரங்கிகளில் பொருத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லியை தலைமையகமாக செயல்படும் நிறுவனம் ஒன்றின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. 1999 கார்கில் போரில் போது இந்திய ராணுவத்தில் தனுஷ் எனப்படும் போபர்ஸ் பீரங்கிகள் முக்கிய பங்கு வகித்தன. இவ்வகையான பீரங்கிகள் புதிய தொழில் நுட்பங்களுடன் இப்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வருகிறது.போலி உதிரிபாகங்ககள்: போபர்ஸ் பீரங்கிகள் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயா…
-
- 0 replies
- 528 views
-
-
சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 16 பிரிட்டிஷ் குழந்தைகள் படத்தின் காப்புரிமைINDIA DIRECT தன்னார்வத் தொண்டு நிறுவனம் நிதியுதவி செய்யும் குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று உதவிசெய்வதற்காக சென்னை வந்த பிரிட்டனைச் சேர்ந்த 16 மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சரகம் விசாரித்துவருகிறது. ஜூலை 17ஆம் தேதியன்று இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, சென்னை வந்தடைந்த 16 மாணவர்களும் அவர்களுடன் இருந்த மூன்று ஆசிரியர்களும் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, அடுத்த விமானத்திலேயே பிரிட்டன் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் 19ஆம…
-
- 3 replies
- 664 views
-
-
நியூஸிலாந்தில் கடும் புயல்! – அவசர நிலை பிரகடனம்!! நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் நிலவி வரும் கடும் புயல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த அவசரநிலை இன்று (சனிக்கிழமை) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தெருக்கள் பல மூடப்பட்டுள்ளன என்றும் இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நியுசிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் எனும் இடத்தில் உள்ள நதிகள் பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரி…
-
- 0 replies
- 421 views
-
-
பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு குளோபல் தமிழ்ச்செய்தியாளர் பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிரு;நது பிரித்தானியா வெளியேறியுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கக்கூடிய சாத்தியம் குறைவு என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் எதிர்வரும் 2019ம் ஆண்டில் முழுiயாக வெளியேறும் என்பது குறிப்…
-
- 0 replies
- 194 views
-