உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26885 topics in this forum
-
நெருப்புடன் விளையாடுகிறது ஈரான்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை ட்ரம்ப். | படம்.| ஏ.பி. ஈரானின் ஆயுதக் கொள்முதல் வலைப்பின்னல்களில் புதிய தடை உத்தரவுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள் நுழைய தடை உத்தரவினால் ஏற்பட்டுள்ள தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் ஏமனில் ஹூதி போராளிகளை ஈரான் ஆதரிப்பது ஆகியவற்றினால் அமெரிக்கா இந்த புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் தெரிவித்தான்ர். ஹூதி போராளிகள் சமீபத்தில் சவுதியின் போர்க்கப்பலை த…
-
- 0 replies
- 545 views
-
-
'பெண்கள் போல நடந்து கொள்ளுங்கள்!'- ட்ரம்பின் அதிரடி உத்தரவு அதிரடி உத்தரவுகளுக்குச் சொந்தக்காரர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் நுழையக்கூடாது என்று தடை உத்தரவு போட்டு பலரின் வெறுப்புகளையும் சம்பாதிப்பவர், மறுபுறம் H1b விசாவை இறுக்கிப்பிடித்து ஒட்டுமொத்த பிறநாட்டு மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் வியாழன் அன்று ஒரு புது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் ட்ரம்ப். அதில் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். வெள்ளை மாளிகைக்கு வேலைக்கு வரும் அனைத்து ஊழியர்களும் சிறப்பான ஆடை அணிந்து…
-
- 0 replies
- 662 views
-
-
டிரம்பின் தடை உத்தரவிற்கு தடை : அமெரிக்க நீதிபதியின் அதிரடி உத்தரவு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் குறிப்பிட்ட ஏழு நாடுகளுக்கு தடைவிதித்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக, நாடு தழுவியரீதியில் அமுலில் வரும்படியான தற்காலிக தடை உத்தரவொன்றை சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி தீர்ப்பாக வழங்கியுள்ளார். ஜனாதிபதி டிரம்பின் நிர்வாக உத்தரவிற்கு எதிராக செயற்படுவதற்கு, அமெரிக்க மாகாணங்களுக்கு சட்ட வரையறை இல்லையென அரச சட்டத்தரணிகள் கூறிவந்த நிலையிலும், சியாட்டல் மாவட்ட மத்திய நீதிபதி ஜேம்ஸ் ரொபர்ட் குறித்த நிர்வாக ஆணைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளார். டிரம்பின் உத்தரவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு…
-
- 4 replies
- 1k views
-
-
கச்சா எண்ணெய் 35 கி.மீ. தூரம் பரவியது : சென்னை கடலில் ஆபத்து நீடிப்பு... சென்னை: சென்னையில் எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதி ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவு, இப்போது 35 கிலோ மீட்டர் தூரம் பரவி, பாலவாக்கத்தை தாண்டி பரவிக்ெகாண்டிருக்கிறது. இதனால், கடலில் மீன்வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் இல்லாததால் சென்னை கடல் பகுதியில் கலந்துள்ள ஆயிலை முழுவதும் அகற்ற முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய கப்பல் நிறுவனம் மீது மீஞ்சூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த…
-
- 4 replies
- 951 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * கிழக்கு யுக்ரைனில் அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் முடிவுக்கு வரவேண்டுமென ஐநா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கோரிக்கை; * உள்நாட்டுப் போர் காரணமாக சிரியாவிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகள் ஜோர்டானுக்கு இடைபட்ட பகுதியில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத சூனியப்பிரதேசத்தில் சிக்கித்தவிப்பு; * உலகப்புகழ்பெற்ற கம்போடியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமான அங்கோர் வாட்டின் அருகில் வாழ்பவர்கள் அந்த பகுதியின் சுற்றுலா வருமானத்தால் பலன் பெறுகிறார்களா? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 249 views
-
-
அமெரிக்க எச்1பி மசோதா இந்திய ஐ.டி துறையில் ஏற்படுத்தும் கவலைகள் அமெரிக்க பணியாளர்களுக்கு "மாற்றாக" வெளிநாட்டைச் சேர்ந்த உயர் திறன் பணியாளர்களை நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்த, அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் புதிய சட்ட மசோதா முன்மொழியப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்திய ஊடகங்கள் இந்த நடவடிக்கை தகவல் தொழில்நுட்ப துறைக்கு ஒரு பின்னடைவு என்று விவரித்துள்ளன்; மேலும் இந்திய அரசு இது குறித்து அமெரிக்க நிர்வாகத்திடம் தனது கவலையை தெரிவித்துள்ளது. எச்-1 பி விசா என்றால் என்ன? எச்-1 பி என்ற ஒரு வகை விசா, திறமைவாய்ந்த வெளிநாட்டினர் குறிப்பாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்காவில் பணிபுரிய வழி…
-
- 0 replies
- 483 views
-
-
பாலியல் குற்றச்சாட்டின் பேரில் சவுதி தூதரக அதிகாரிக்கு நான்கு பிரம்படி, 26 மாத சிறை; சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு ஹோட்டல் பணிப்பெண் ஒருவரை பலவந்தப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், சவுதி தூதரக அதிகாரியொருவருக்கு சிங்கப்பூர் அரசு நான்கு பிரம்படியும் 26 மாத சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள சவுதி அரேபிய தூதரக அதிகாரி பாந்தர் யெஹியா ஏ.அல்ஸஹ்ரானி (39). இவர் கடந்த வருடம் விடுமுறையைக் கழிக்கும் முகமாக சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவரை பலவந்தப்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் …
-
- 6 replies
- 624 views
-
-
பாரிஸின் லூவ்ர் அருங்காட்சியகத்தில் படையினரைத் தாக்கியவர் மீது துப்பாக்கி சூடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற லூவ்ர் அருங்காட்சியகத்தில், படையினர் குழு ஒன்றின் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய ஒருவரை, பிரெஞ்சு சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பலத்த காயப்படுத்தியுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES படையினரில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். தாக்குதல்தாரி மீது ஐந்து துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டதாகவும், அவர் அரபு மொழியில் `இறைவன் பெரியவர்` என்று கூக்குரலிட்டதாகவும் அந்த அதிகாரி கூறினார். தாக்குதல்தாரி வயிற்றில் சுடப்பட்டார். ஆனால் அவரை அவசர சேவைப் பி…
-
- 0 replies
- 252 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற நாடாளுமன்றம் ஒப்புதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற (பிரெக்ஸிட்) அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் உட்பட 28 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் இருந்த வெளியேறுவது தொடர்பாக பிரிட்டனில் கடந்த ஜூனில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 52 சதவீத பிரிட்டிஷ் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரத்தால் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகி புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றார். இந்நிலையில் பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி ஜினா மில்லர் என்ற பெண் தொழிலதிபர் பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசார…
-
- 1 reply
- 316 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் ஆசியாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுளார். முதலில் தென்கொரியாவை அவர் சென்றடைந்தார். * அமெரிக்க அதிபரின் மெக்ஸிகோ சுவர் போல, அல் ஷபாப்பின் தாக்குதலை தடுக்க, கென்யா தனது எல்லையில் வேலி அமைக்கிறது. * எகிப்தில் கண்ணாடி கைவினைப் பொருட்களை தயாரிக்கும் கிராமம் ஒன்றுக்கு சென்று, பிபிசி வழங்கும் சிறப்புத் தகவல்.
-
- 0 replies
- 306 views
-
-
பேரழிவை ஏற்படுத்திய ஹிட்லரின் கொடூர ‘ஆயுதம்’ ஏலத்திற்கு! அடோல்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி விரைவில் ஏலத்திற்கு வரவிருக்கிறது. நாஸிப் படையினரால் ஹிட்லருக்கு பரிசளிக்கப்பட்டிருந்தது இந்தத் தொலைபேசி. இரண்டாம் உலக யுத்தத்தின்போது, பெரும்பாலான கட்டளைகளை இந்தத் தொலைபேசி வாயிலாகவே ஹிட்லர் பிறப்பித்ததாகக் கருதப்படுகிறது. இலட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கும் ஆணைகளையே ஹிட்லர் இந்தத் தொலைபேசி மூலம் பிறப்பித்ததாகவும் கூறப்படுகிறது. 1945ஆம் ஆண்டு முதல் பேர்லினில் வைக்கப்பட்டிருந்த இந்தத் தொலைபேசி, முதன்முறையாக அமெரிக்காவில் ஏலத்தில் விடப்படவிருக்கிறது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் ஏல விற்பனை நிறுவனமே இதை ஏலத்தில்…
-
- 0 replies
- 308 views
-
-
ஆஸி. - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சிக்கும் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் ஒபாமா நிர்வாகத்தில் கையெழுத்தான ஆஸ்திரேலிய - அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் ஓர் "வாய்பேசா ஒப்பந்தம்" என்று ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களிடமிருந்து வேறுபட்ட கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகதிகளுக்கு விதித்துள்ள தடை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தின் இறுதியில் கையெழுத்தான ஆஸ்திரேலிய-அம…
-
- 8 replies
- 908 views
-
-
சீனா மீது போர் தொடுக்கப் போகிறதா அமெரிக்கா? ட்ரம்ப்பின் அதிரடி வியூகம் 2014-ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபை கணக்கீட்டின்படி, உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் சந்தேகமே இல்லாமல் அமெரிக்கா இருக்கிறது. இரண்டாவது இடம் சீனாவுக்கு. ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவீட்டின்படி அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு வந்து விட்டது சீனா. மேலும் இருதரப்புக் கொள்கைகள் தொடங்கி, எல்லைப்பரப்பு நிர்ணயம் வரை ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக தனது மறைமுக எதிரியாகக் கருதுவது சீனாவைத்தான். இந்தியாவுடன் அருணாச்சலப் பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பது தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபட்ட நிலையில் இர…
-
- 0 replies
- 770 views
-
-
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஐந்து வயது ஈரானியச் சிறுவன் தடுத்து வைப்பு! ட்ரம்ப்பின் குடிவரவு உத்தரவையடுத்து, பாதுகாப்புக் காரணங்கள் கருதி ஐந்து வயது ஈரானியச் சிறுவனை அதிகாரிகள் தடுத்து வைத்த சம்பவம் வொஷிங்டன் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தைச் சேர்ந்தவன் இந்தச் சிறுவன். அங்கிருந்து, தனது உறவினர் ஒருவருடன் வொஷிங்டனில் உள்ள டல்லஸ் விமான நிலையத்துக்கு வந்திறங்கினான். அங்கு அவனை விசாரித்த விமான நிலைய அதிகாரிகள், அவன் அமெரிக்க குடிமகனுக்கான ஆதாரங்களை வைத்திருந்தபோதும், ஈரானிய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தினால் தடுத்து வைக்கப்பட்டான். சிறுவனை வரவேற்கவென டல்லஸ் விமான ந…
-
- 0 replies
- 310 views
-
-
-
- 0 replies
- 342 views
-
-
ஒரு சிறுமி சிலையும் ஜப்பான் - கொரியா இரு நாடு பூசலும்! வட கிழக்கு ஆசியா எப்போதும் ராணுவரீதியாகக் கொதிநிலைக்கு உள்ளாகும் பகுதி. சர்ச்சைக்குரிய தீவுகளுக்கும் கடல் பகுதிகளுக்கும் சீனா சொந்தம் கொண்டாடிவருகிறது. எப்படிச் செயல்படும் என்று எதிர்பார்க்கவே முடியாத வட கொரியா, ஏவுகணைகளை வைத்துக்கொண்டு அச்சுறுத்துகிறது. இவற்றின் மத்தியில்தான் ஒரு பதின்ம வயதுச் சிறுமிக்கு எழுப்பப்பட்ட வெண்கலச் சிலை ஜப்பான் - தென் கொரியா இடையில் பூசலை உண்டாக்கியிருக்கிறது. தென் கொரியாவின் பூசன் நகரில், ஜப்பானியத் தூதரகத்துக்கு எதிரில் கடந்த டிசம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்டது சர்ச்சைக்குரிய அந்தச் சிலை. இரண்டாவது உலகப் போர் க…
-
- 0 replies
- 362 views
-
-
’ பாலூட்டும் தாய் என்பதை விமான நிலையத்தில் நிரூபிக்க ஜெர்மனி போலிசார் நிர்ப்பந்தம்’ ஜெர்மனி நாட்டின் பிராங்க்ஃப்ர்ட் விமான நிலையத்தில் ஒரு பெண், பாலூட்டும் தாயா என்று நிரூபிக்க தனது மார்பகங்களை அழுத்தி காட்ட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர் என்று அந்த பெண் காவல் துறையினரிடம் என்று புகார் அளித்துள்ளார். படத்தின் காப்புரிமைGAYATHRI BOSE Image caption’அவமானகரமான , அதிர்ச்சியூட்டும் நிகழ்வு’- காயத்ரி போஸ் புகார் செய்துள்ள காயத்திரி போஸ் இந்த அனுபவம் தன்னை ''அவமானப்படுத்துவதாக'' இருந்தது என்றும் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.…
-
- 1 reply
- 581 views
-
-
டிரம்பின் உத்தரவால் இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய குடிவரவு கட்டுப்பாட்டினால், இலங்கையை சேர்ந்தவர்களும் பாதிப்படைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலுள்ள, ஜோன் எப் கெனடி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த 71 பேர், தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களுள், அதிகமானவர்கள் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்ட நாடுகளில் இலங்கை, துருக்கி, பாகிஸ்தான், பிரான்ஸ்,சுவிஸர்லாந்த…
-
- 0 replies
- 456 views
-
-
ஆபாச இணையதளத்தில் டிரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதி பதவியேற்பு விழாவின் போது டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது ஆபாச இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. கடந்த 31 ஆம் திகதி ஸ்கூட்டி டி என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச இணையதளம் ஒன்றில் ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவின் போது டிரம்ப் ஆற்றிய உரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளதாக பதிவேற்றியுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் தற்போது பலராலும் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/16103
-
- 1 reply
- 711 views
-
-
ஐ.எஸ்.ஸிடம் சிக்க விரும்பாத பிரித்தானிய வீரர் போர்க்களத்தில் தற்கொலை ஐ.எஸ்.இயக்கத்திற்கு எதிராக குர்திஷ் படைகளுடன் இணைந்து போரிட்ட பிரித்தானிய வீரர் ஒருவர், ஐ.எஸ்.ஸிடம் சிக்காமல் இருப்பதற்காக தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட விடயம் தற்போது தெரியவந்துள்ளது. ரயான் லொக் (20) என்பவர் ஒரு பிரித்தானியர். இவர் சமையல் கலை நிபுணராகப் பணிபுரிந்துவந்தவர். கடந்த ஓகஸ்ட் மாதம், தனது குடும்பத்தினரிடம் துருக்கிக்கு உல்லாசப் பயணம் செல்வதாகக் கூறிவிட்டு சிரியா சென்றவர், அங்கு குர்திஷ் படைகளுடன் இணைந்துகொண்டார். கடந்த டிசம்பர் மாதம், ரக்காவில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரின்போது, எதிர்பாராத விதமாக ஐ.எஸ்.ஸிடம் ரயான் சிக்கிக்கொள்ளும்படியான சூழல் உரு…
-
- 0 replies
- 303 views
-
-
ஐ.எஸ்.ஸை எதிர்க்கும் சிரிய படைகளுக்கு முதன்முறையாக கவச வாகனங்களை வழங்கியது அமெரிக்கா ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை 30 நாட்களுக்குள் அழித்தொழிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அதற்கான முன் நடவடிக்கையாக சிரிய இராணுவப் படையினருக்கு முதன்முறையாக அமெரிக்க கவச வாகனங்களை அளிக்க உத்தரவிட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டிருக்கிறது சிரியா. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிடும் குர்திஷ்-சிரிய கூட்டுப்படைகளுடன் இணைந்து அமெரிக்காவும் ஐ.எஸ். மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜனவரி 20ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப், பயங்கரவாதத்தை குற…
-
- 0 replies
- 504 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தான் விதித்த அமெரிக்க குடியேறிகள் மீதான தடை குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க அரச தலைமை வழக்கறிஞரை நீக்கினார் அதிபர் டொனால்ட் டிரம்ப்; அமெரிக்காவுக்கு செல்லவிரும்பிய பன்னாட்டு அகதிகள் மத்தியில் பெருகும் விரக்தி. * ரஷ்யாவின் குடும்ப வன்முறைகளுக்கான தண்டனை குறைப்பு; பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம் என்றும் கவலை. * பிரிட்டனில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்க உதவும் சிறிய ஸ்கானர்கள்; குறைப்பிரசவ குழந்தைகளுக்கு உதவும் மருத்துவ புரட்சி குறித்த விரிவான தகவல்கள்.
-
- 0 replies
- 281 views
-
-
அமெரிக்காவில் தொடரும் அதிரடி: டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த தலைமை வழக்கறிஞர் நீக்கம் அமெரிக்காவில் அகதிகளை அனுமதிக்க மறுக்கும் அதிபர் டிரம்பின் உத்தரவை ஏற்க மறுத்த தலைமை வழக்கறிஞர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 20-ந் தேதி பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உள்நாட்டுப்போரில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்துள்ளார். மேலும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுக…
-
- 0 replies
- 498 views
-
-
விசா தடை பட்டியலில் பாக். சேர்க்கப்படலாம்: அமெரிக்க அதிபர் மாளிகை தகவல் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் வருங்காலத்தில் பாகிஸ்தானியர் சேர்க்கப்படலாம் என்று வெள்ளை மாளிகை உயரதிகாரி ரீன்ஸ் ப்ரிபஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் கூறும்போது, “7 நாடு களில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக முந்தைய ஒபாமா நிர்வாகமும் நாடாளு மன்றமும் கண்டறிந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளிலும் இதே பிரச்சினை உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு எதிராக முதற்கட்டமாக சோதனை நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. வருங் காலத்தில் தடை விதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள…
-
- 0 replies
- 291 views
-
-
அமெரிக்கா முழுவதும் ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: அதிபர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் அதிபர் ட்ரம்புக்கு எதிராக வாஷிங்டனில் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். | படம்: ஏஎப்பி அகதிகள், முஸ்லிம்களுக்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வருகிறது. அதிபர் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிரியா, ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்காவில் நுழைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தடை விதித்துள்ளார். இதை கண்டித்து அமெரிக்கா முழுவத…
-
- 0 replies
- 328 views
-