Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * எட்டு ஆண்டுகள் அமெரிக்க அதிபராக பணியாற்றிய பின்னர் தனது பிரியாவிடை உரையை வழங்க தனது அரசியல் ஆரம்பக் களமான சிக்காக்கோவுக்கு சென்றார் ஒபாமா. * சைப்பிரஸின் எதிர்காலம் குறித்து பேச்சுக்கள் தொடர்கின்றன. பிரிந்த நாட்டின் துருக்கிய பக்க தலைவர்கள் பிபிசியிடம் பேசினார்கள். * ஜிம்பாப்வே-யின் சர்ச்சைக்குரிய காணி மறுசீரமைப்புத் திட்டத்தை அடுத்து அங்குள்ள விவசாயிகள் எப்படி தாக்குப் பிடிக்கிறார்கள்?பிபிசியின் சிறப்பு தகவல்.

  2. ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் கால­மானார் ஜேர்­ம­னிய முன்னாள் ஜனா­தி­பதி ரோமன் ஹேர்ஸொக் தனது 82 ஆவது வயதில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை கால­மானார். அந்­நாட்டில் அர­சியல் மற்றும் சமூக சீர்­தி­ருத்­த­மொன்றை வலி­யு­றுத்­தி­யதன் மூலம் அவர் அங்­குள்ள மக்­களின் மனதில் நீங்­காத இடத்தைப் பிடித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர் 1994 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1999 ஆம் ஆண்டு வரை அந்­நாட்டின் வைப­வ ­ரீ­தி­யான, அதே­ச­மயம் செல்வாக்குமிக்க ஜனாதிபதி பதவியை வகித்தார். http://www.virakesari.lk/article/15334

  3. #ObamaFarewell அதிபராக இறுதி உரையிலும் தன் மனைவிக்கு மதிப்பளித்த ஒபாமா! அமெரிக்க அதிபர் ஒபாமா சிக்காகோவில் ’Farewell’ உரையாற்றி வருகிறார். ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் வரும் 20-ம் தேதி நிறைவடைகிறது. அதிபராக ஒபாமா பேசும் கடைசி உரை என்பதால் ஒபாமாவுக்கு பிரியாவிடையளிக்க ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டுள்ளனர். ஒபாமா பேசத் தொடங்கியதும், திரண்டிருந்த மக்கள் ’மேலும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருங்கள் ஒபாமா’, என்று கோஷமிட்டனர். அதற்கு சிரித்து கொண்டே மறுப்பு தெரிவித்துவிட்டார். ஒபாமா பேசுகையில்,’ கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் எந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெறவில்லை. முன்பை விட அமெரிக்கா வலிமை அடைந்துள்ளது. அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டு உணர்வை ம…

  4. அவுஸ்­தி­ரே­லிய கடற்­க­ரையில் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக விபத்­துக்­குள்­ளாகி விழுந்த விமானம் பெண்­ணொ­ருவர் பலி ; மூவர் காயம் அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயீன்ஸ்­லாந்து மாநில கடற்­க­ரையில் சிறிய ரக விமா­ன­மொன்று அங்கு கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக நேற்று செவ்­வாய்க்­கி­ழமை விழுந்து விபத்­துக்­குள்­ளா­னதில் அதில் பயணம் செய்த சுமார் 20 வயது மதிக்­கத்­தக்க பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஏனைய மூவர் காய­ம­டைந்­துள்­ளனர். மிடில் தீவுக்கு அண்­மை­யி­லுள்ள கடற்­க­ரையில் இடம்­பெற்ற மேற்­படி விபத்­தை­ய­டுத்து அதில் பயணம் செய்த பெண்­ணொ­ரு­வரும் இரு ஆண்­களும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் விமான சிதை­வு­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட்­டனர். …

  5. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் -கமல்ஹாசன் ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா டுடே கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய ரசிகன் நான். இப்போட்டியை வெறுப்பவர்கள் பிரியாணியையும் வெறுக்கவேண்டும் என்று கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளுடன் தொடர்புபடுத்தி குழம்பக்கூடாது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளில் அவைகள் காயப்படுத்தப்படுகிறது, அவை உயிரிழக்கவும் நேரிடுகிறது, ஆனால் தமிழகத்தில் காளைகள் தெய்வமாக கருதப்படுகிறது, குடும்பத்தில் ஒருவராக காளைகள் வளர்க்கப்படுகிறது. ஜல்…

  6. ஆஃப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் இதுவரை 34 பேர் மரணம். ஜனவரி 10-ம் தேதி காலையில் ஆஃப்கானிஸ்தானின் காபுல் நகரத்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பின் காரணமாக இதுவரை 34 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தத் தாக்குதலில் இருபதுக்கும் அதிகமான நபர்கள் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கந்தாகர் கவர்னர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், `கந்தாகர் கவர்னர் ஹமாயுன் அசிசி, அரபு நாட்டுத்தூதர் இன்னும் சில அரசு அதிகாரிகள் என இந்தத் தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு தாலிபன் முழுபொறுப்பு ஏற்றுள்ளது' என்றார். இந்தத் தாக்குதல் காபுலின் அமெரிக்க பல…

  7. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான மியான்மாரின் பிரச்சினைகள் உலக வரைபடத்தில் சிறிய விடயமாகவே காணப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத வலைப்பின்னல்களில் ஒன்று தற்போது மியான்மார் அரசாங்கத்தை அச்சுறுத்தி வருகின்றது. மியான்மாரில் வாழும் சிறுபான்மை ரொகிங்யா முஸ்லீம் சமூகம் மீதான மியான்மார் அரசாங்கத்தின் கண்டிக்கத்தக்க நடவடிக்கையே இதற்கான காரணமாகும். இந்த உண்மையை அறிந்த சிலர் இது தொடர்பில் அதிர்ச்சியடைய மாட்டார்கள். ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய அரசிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சிறிலங்காவைப் போலவே, மியான்மாரில் வாழும் பௌத்தர்களுக்கும் சமாதானம் என்பது தொலைவிலேயே காணப்படுகிறது. இந்த மக்களின் ஒரு சாரார் யுத்தத்தில் ஈடுபடுகின்றனர். ச…

  8. பால்பாயிண்ட் பேனா: நெருடலில் சீனா சீனா வின்வெளியில் ராக்கெட்டுகளை ஏவியுள்ளது, கோடிக்கணக்கான ஸ்மார்ட்ஃபோன்கள், அதியுயர் ரயில் வண்டிகள் ஆகியவற்றை தயாரித்துள்ளது. ஆனால் ஒரே ஒரு விஷயம் சீனாவுக்கு நெருடலாக இருந்துவருகிறது. பேனா முனையில் உயர் தொழில்நுட்பம் உள்ளது அது பால்பாயிண்ட் பேனா. பார்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்தப் பேனாக்களை உயர்தரத்தில் தம்மால் உருவாக்க முடியவில்லை என்று பிரதமர் லீ க சாங் கடந்த ஆண்டு தேசியத் தொலைக்காட்சியில் புலம்பினார். ஜெர்மனி, சுவிட்சர்லாந்த மற்றும் ஜப்பானிலிருந்து வரும் பேனாக்களை விட உள்நாட்டில் செய்யப்படும் பேனாக்கள் கறகறவென எழுதுகின்றன என்று அவர் குற்றஞ்சாட்டினார். இதில் பிரச்சினை…

  9. கருகிய பரோட்டா, டீ - இதுதான் எங்கள் உணவு- பி.எஸ்.எஃப் ஜவான் குமுறலால் பரபரப்பு இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரில், பாதுகாப்பு பணியில் உள்ள ஒரு எல்லை பாதுகாப்புப் படை சிப்பாயொருவர் தங்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரம் குறைந்து இருப்பதாக தெரிவித்து அது தொடர்பாக வெளியிட்ட காணொளிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து தேஜ் பகதூர் யாதவ் வெளியிட்ட படம் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் உள்ள தேஜ் பகதூர் யாதவ் என்ற சிப்பாய் தனது முகநூலில் வெளியிட்டுள்ள தகவலில், தங்களுக்கு காலை உணவாக ஒரு கோப்பை தேனீரும், கருகிய பரோட்டாவும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், ‘’ எங்…

  10. இன்றைய செய்தியறிக்கையில், * டொனால்ட் டிரம்பின் மருமகனுக்கு வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவி கொடுக்கப்பட்டமை விமர்சனங்களை தூண்டியுள்ளது. அதனை உறுதி செய்வதற்கான ஆய்வை செனட் சபை ஆரம்பித்துள்ளது. * பிரேசில் அரசாங்கம் அமெசான் பகுதிகளில் பெரும் நீரணைகளை கட்ட திட்டமிட, அங்குள்ள பழங்குடியின மக்களுக்கும் பெரு நிறுவனங்களுக்கும் இடையே மோதல். * உடற்பயிற்சியில் அதீத ஆர்வம் மிக்க செனகல் மக்கள்.உடற்பயிற்சி களங்களாகும் கடற்கரைகள்.

  11. இந்திய உணவகத்தில் உணவு உண்ட லண்டன் சிறுமி மரணம் லண்டனில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் உணவு வாங்கிச் சென்று சாப்பிட்ட பதினைந்து வயதுச் சிறுமி உயிரிழந்ததையடுத்து இருவர் கைது செய்யப்பட்டனர். மேகன் லீ என்ற இந்தச் சிறுமி லங்கஷயரில் உள்ள ரோயல் ஸ்பைஸ் என்ற இந்திய உணவகம் ஒன்றில் உணவுப் பொதி ஒன்றை வாங்கிச் சென்றிருக்கிறார். அதை உண்ட அவருக்கு கடும் ஒவ்வாமை ஏற்பட்டது. இதைக் கண்டு பதறிய அவரது உறவினர்கள் உடனடியாக மேகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், இரண்டு நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் அது பலனளிக்காததால் மேகன் உயிரிழந்தார். இதையடுத்து திட்டமிட்ட படுகொலை என்ற ச…

  12. மருமகனை முக்கிய பதவியில் நியமித்தார் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது மகளின் கணவரான ஜேரட் குஷ்னரை அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்களில் ஒருவராக நியமித்துள்ளார். Reuters 35 வயதாகும் ஜேரட் குஷ்னர் அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள இவர், அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அம்சங்களை கவனிப்பார். டிரம்பின் மகளான இவான்கா டிரம்பை திருமணம் செய்துள்ள குஷ்னர், ஒரு சொத்து மேம்பாட்டாளராக உள்ளார்.…

  13. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இரானின் காலஞ்சென்ற முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரஃப்சஞ்சானிக்காக மூன்று நாள் துக்கம் அனுட்டிக்கிறது. * ஐரோப்பாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடும் குளிர் தாக்கியதில் இருபது பேர்வரை பலி. * பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் போது உயிர்களை காப்பாற்ற ஒரு ஏற்பாடு. தனது பிரஜைகளுக்கு முதலுதவி பயிற்சிகளை பிரிட்டன் வழங்குகின்றது.

  14. பிரபல ஹாலிவுட் நடிகையிடமிருந்து நகைகளை கொள்ளையடித்தவர்கள் கைது கடந்த அக்டோபர் மாதம் மேற்கு பாரிஸில் கிம் கர்டாஷியன் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிம் கர்டாஷியன் அமெரிக்க ரியாலிட்டி டிவி நட்சத்திரமான கிம் கர்டாஷியன் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சமயத்தில் குறைந்தது இருவர் போலிஸ் உடையில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். கர்டாஷியனுக்கு சொந்தமான மேற்கு பாரிஸில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த ஆண்கள், கிம்மை கட்டிப்போட்டு அவருடைய கழிவறையில் பூட்டி அடைந்துவிட்டனர். 10 மில்லிய…

  15. பச்சிளம் பாலகனை கொடூர கொலையாளியாக்கிய ஐ.எஸ் அமைப்பு : அதிர்ச்சி காணொளி ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை, பாலர் பாடசாலை செல்லும் சிறுவன் ஒருவன் சுட்டுக் கொலை செய்யும் அதிர்ச்சி காணொளி ஒன்றை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் இறுதியில் ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள காணொளி தொகுப்புகளில், அவ்வமைப்பை சேர்ந்த சிறுவர் படைகளின் பயிற்சிகள் மற்றும் அவர்களின் பழிவாங்கல் செயற்பாடுகளை படமாக்கி வெளியிட்டுள்ளனர். பாலர் பாடசாலை செல்லும் வயதை ஒத்த பாலகன் தன்னிலை அறியாமல் விளையாட்டு பூங்காவில் கட்டப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டுக்கொள்வதும் 7 இலிருந்து 10 வயது மதிக்கத்தக்க சிறுவ…

  16. சவூதியில் தனித்து வாழும் பெண்களின் தொகையை குறைக்க புதிய முயற்சி சவூதி அரேபியாவில் விவாகரத்துப் பெற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் முதிர் கன்னிகளின் தொகை அதிகரித்து வருவதால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வினர் திருமணப் பொருத்த வட்ஸ்அப் பக்கத்தை உருவாக்கி ஏற்கனவே திருணம் செய்த ஆண்களுக்கு அந்தப் பெண்களைத் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டைச் சேர்ந்த 8 அதிகாரிகள் கூட்டிணைந்து பலதார திருமணம் என்ற தலைப்பின் கீழ் மேற்படி வட்ஸ்அப் பக்கத்தை ஸ்தாபித்துள்ளனர். சவூதி அரேபியாவில் வாழ்க்கைத் துணை யற்று இருக்கும் பெண்களின் தொகையைக் குறைக்கும் வக…

  17. பாலியல் அடிமைகள் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென் கொரிய மதகுரு தீக்குளிப்பு தென் கொரி­யா­வா­னது இரண்டாம் உலகப் போர் கால­கட்­டத்தில் ஜப்­பானால் பாலியல் அடி­மை­க­ளாக நடத்­தப்­பட்ட பெண்கள் தொடர்பில் அந்­நாட்­டுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து தென் கொரிய பௌத்த மத­குரு ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்­டுள்­ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தனர். குறிப்­பிட்ட 64 வயது மத­குரு சனிக்­கி­ழமை இரவு மத்­திய சியோலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் முன்­னி­லையில் தென் கொரிய ஜனா­தி­பதி பார்க் கெயுன்–ஹை பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்­த­வாறு தனக்குத் தான…

  18. பிரித்தானியாவின் நிலக்கீழ் புகையிரத சேவை பணிப்புறக்கணிப்பால் பாதிப்பு – பலமில்லியன் பயணிகள் அவதி:- பிரித்தானியாவின் பொதுப் போக்குவரத்து தொழிலாளர்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால், பல மில்லியன் பொது மக்கள், அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். இன்று காலை குறித்த போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளாவிய ரீதியில் போக்குவரத்துளை மேற்கொள்வதில், மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதனை அவதானிக்க கூடியதாக இருந்தது என, குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் பணிப் புறக்கணிப்புப் போராட்டங்களால் நான்கு மில்லியன் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது ! …

  19. 10 வயது பத்திரிகையாளரைப் பார்த்து நடுங்கும் இஸ்ரேல்... ஏன்? 'போரும், போராட்டமும் இறுதியில் அநாதைகள் ஆக்குவது என்னவோ குழந்தைகளைத்தான்' என்பார்கள். ஆனால், பல யுகங்களாகத் தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீனியப் போர், பத்து வயதாகும் ஜன்னா ஜிகாதை ஊடகவியலாளராக்கி இருக்கிறது. உலகின் மிகச்சிறிய பத்திரிகையாளர் ஜன்னாவாகத்தான் இருக்க முடியும். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நிகழ்த்திவரும் தொடர் தாக்குதல்களை உலகத்துக்கு, தான் எடுக்கும் காணொளிகள் வழியாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறாள் ஜன்னா. இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதியான நபி சலேதான் ஜன்னா ஜிகாத் இருப்பிடம். இத்தனைக்கும் அவளது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் கிடையாது. பிறகு அவளுக்குள் எப்படி…

  20. உயிருக்கு ஆபத்து இருந்தாலும் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் : போப் ஆண்டவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 80), பயணங்களின்போது தன் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் என சூசகமாக உணர்த்தி உள்ளார். இத்தாலியை சேர்ந்த எழுத்தாளர் ஆன்ட்ரியா டோர்னியெல்லி எழுதிய ‘பயணம்’ என்ற புத்தகத்துக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், அணிந்துரை எழுதி உள்ளார். அதில் அவர், “எனக்கு பயணங்களின்போது ஆபத்துகள் இருப்பதை நான் அறிந்திருக்கிறேன். ஒரு வேளை நான் அதில் பொறுப்பற்று இருக்கலாம். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் என்னுடன் பயணம் செய்கிறவர்களுக்காக, பல்வேறு நாடுகளில் என்னை சந்திக்க வருகிற மக்களுக்க…

  21. ஃபுளோரிடா தாக்குதல் தொடர்பாக முன்னாள் படை வீரர் மீது வழக்குப்பதிவு வெள்ளியன்று ஃபோர்ட் லோடர்டேல் விமான நிலையத்தில் ஐந்து பேரை கொன்றதாக போர் வீரர் ஒருவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எஸ்டீபன் சாண்டியாகோ எஸ்டீபன் சாண்டியாகோ துப்பாக்கிச்சூட்டில் கொலை மற்றும் காயம் ஏற்படுத்தியதாக நிருபிக்கப்பட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து பல கேள்விகளை சந்தித்து வருகின்றனர் நவம்பரில் அலாஸ்காவில் உள்ள எஃப்பிஐ அலுவலகத்திற்கு வந்த சாண்டியாகோவிற்கு மனநல மதிப்பீடு பரிந்துரைக்கப்பட்டதாக எஃப்பிஐ ஒப்புக் கொண்டுள்ளது. அந்த மதிப்பீட்டிற்க…

  22. தண்டனைகளே என்னை சாதிக்க வேண்டுமென தூண்டியது: ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீண்ட பாலியல் அடிமையின்; வாக்குமூலம் சிரியாவின் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் பாலியல் அடிமையாக சிறைவைக்கப்பட்டிருந்தப் பெண் குறித்த பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் காயமுற்றவாறு மீண்டுள்ளார். லுமியா ஆஜி பஜார் என்ற குறித்த இளம் வயது பெண் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு தான் பெற்ற ஐ.எஸ் அமைப்பின் அனுபவமாக பகிர்ந்துள்ளதாவது, ‘தானும் தன்னைப்போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் அடிமைக்காக விற்கபட்டுள்ளோம். தன்னை ஒரு வயதான ஐ.எஸ் தலைவரின் பாலியல் அடிமையாக விற்றனர். குறித்த கொடூரன் தனது(லுமியா) மதத்திற்கு விரோதமான ஆடைகளை அணியச்செய்ததோடு, வெறிபிடித்த படைகளு…

  23. மலேசிய விமான பாகங்கள் நெதர்லாந்து பத்திரிகையாளரிடம் இருந்து பறிமுதல் 2014 ஆம் ஆண்டு உக்ரைனில் பறந்து கொண்டிருந்த மலேசிய பயணியர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து நெதர்லாந்து பத்திரிகையாளர் எடுத்ததாக நம்பப்படுகின்ற பொருட்களை நெதர்லாந்து காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிபோல் விமான நிலையத்தில் வைத்து, மிசெல் ஸ்பெக்கர்ஸிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த பொருட்களை ஆய்வு செய்யப் போவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். உலோகப் பகுதிகளும், மனிதரின் எச்சமாக இருக்கக்கூடிய ஒரு பொருளும் இதில் அடங்குகின்றன. தன்னுடைய மடிக்கணினி, தொலைபேசி மற்றும் புகைப்படக்கருவியை காவல்துறையினர் எடுத்து சென்றுவிட்டதாக ஸ்பெக்கர்ஸ் கூ…

  24. எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் பலி (ந.ஜெகதீஸ்) நாடளாவிய ரீதியில் கடந்த வருடத்தில் எயிட்ஸ் நோயாளர் தொகை அதிகரித்துள்ளதாகவும் வருட இறுதிவரை எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரையில் எச் .ஐ. வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளனர் . குறித்த நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தோர் தொகையானது கடந்த 2015 ஆம் ஆண்டை விடவும் கனிசமான அளவு அதிகரித்துள்ளது. இதேவேளை, நோய் தொற்றுக்குள்ளான 259 பேர்…

  25. பெங்களூரில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்து- ஏராளமானோர் சிக்கியுள்ளதாக அச்சம்:- பெங்களூரில் மூன்று அடுக்கு மாடிக்கட்டம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டுமானப் பணியின் விபத்து நேரிட்டதால் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது. பெங்களூருவின் வொயிட் ஃபில்ட் பகுதியில் மூன்று அடுக்கு மாடிக் கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை இந்தக் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் அவசர சேவைகள் பிரிவினர் மீட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.