Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது - விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி கருத்து ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது என அவரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரியான ஜோன் நிக்ஸன் தெரிவித்துள்ளார். சதாம் ஹுசைனை விசாரணைக்குட்படுத்திய ஜோன் நிக்ஸன் எழுதியுள்ள னுநடிசநைகiபெ வுhந Pசநளனைநவெ: வுhந ஐவெநசசழபயவழைn ழுக ளுயனனயஅ ர்ரளளநin எனும் நூலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சதாம் ஹுசைன் தன்னிடம்" அமெரிக்கா நினைப்பதை போன்று அரபு மொழியையும் எம்மக்களையும் புரிந்து செயற்பட முடியாது. எமக்குள்ளே பல்வேறு கலாசார மற்றும் சமூக செயற்பாடுகள் அடங்கியுள்ளன. அதனை உள்ளூர் நபர்களை தவிர வெளிநாட்டவர்;களால் சரியான முறையில் …

  2. ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தில் விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவுனர் எட்வட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றார். ஹொங்கொங்கில் வைத்து ஸ்னோவ்டனுக்கு இலங்கையரான சுபுன் திலின கெலபாத்த மற்றும் அவரது மனைவி நதீகா தில்ருக்ஸி நோனீஸ் ஆகியோர் அடைக்கலம் வழங்கியிருந்தனர். குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உரிய நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகவும் இதனால் சிறையில் தடுத்து வைத்து நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகவும் சீன ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சட்ட…

  3. பிரேஸில் கால்பந்தாட்ட வீரர்களை காவு கொண்ட கோர விமான விபத்து ; கடைசி தருணத்தில் ஆசனம் மாறியதால் உயிர் பிழைத்த வீரர் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி பிரேஸில் நாட்டின் கழகமொன்றின் கால்பந்து வீரர்கள் பயணம் செய்த விமானம் கொலம்பியாவில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 76 பேர் பலியானர்கள். குறித்த விமான விபத்தில் 6 பேர் மட்டுமே உயிர் பிழைத்தார்கள். அதில் ஒருவரான பிரேசில் உள்ளூர் அணியான செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக வீரர் ஆலன் ரூஸ்செல் (27) வைத்தியசாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் உயிர் பிழைத்ததை பற்றி கூறுகையில், நான் விபத்து ந…

  4. சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்! "புவியின் அனைத்து சாம்ராஜ்ஜியங்களிலும் சிதறிக் கிடப்பாய்" என்பது புகழ்பெற்ற ஹீப்ரு வாசகம். இன்று உலக நாடுகளில் வாழும் மக்கள்களில் பூர்வகுடிகளை மட்டுமே கொண்ட நாடு என ஒன்று தனியாக இருக்க வாய்ப்பில்லை. ஆதியில், கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மக்கள் தன் தேவைகளின் பொருட்டு பல திசைகளுக்குப் பயணித்தனர். அவ்விதம் பிரிந்ததன் தொடர்ச்சியே பல இனங்கள், பல நாடுகள். பின் வந்த காலங்களில் தேவையின் பொருட்டே மனிதர்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் செல்லவும் வேண்டியிருந்தது. இது அனைவருக்கும் பொதுவானது. தமிழில்கூட 'திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு' என்று சொல்லப்படுகிறது. அப்படி, பல்வேறு காலகட்டத்தில் மனிதர்கள் தொழில் ரீதியாகவும், இயற்கை பேரிடர் ரீதியாகவும…

  5. ஜனாதிபதி தேர்தலில் 94 வயதில் போட்டியிடப்போகும் ஆபிரிக்க தலைவர் (லோகேஸ்வரன்) சிம்பாபேவின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் 94 வயது பூர்த்தியை அடையும் இவர் 2018 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் 2013ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் திருத்தத்தில் அவர் மேலும் ஒருமுறைதான் தலைவராக இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆபிரிக்க பிராந்தியத்தில் சுதந்திரமடைந்த காலம் தொட்டு ஒரு நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வரும் ஜனாதிபதி இவராவார் …

  6. இந்தோனேசியாவில் விமான விபத்து : 13 பேர் பலி இந்தோனேசியா நாட்டில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்திம் டிமிக்கா என்ற இடத்தில் இருந்து வாமெனா என்ற இடத்தை நோக்கி இன்று காலை உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ‘ஹெர்குலஸ் சி-130’ ரக விமானம் மோசமான வானிலை காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் இருந்த 3 விமானிகளும், 10 இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். http://www.virakesari.lk/

  7. தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் நன்றி ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்திய வம்சாவளியினருக்கு டிரம்ப் தனது நன்றியை தெரிவித்தார். வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், இப்போது நாடு முழுவதும் பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் புளோரிடா மாகாணம், ஆர்லண்டோ நகரில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஆதரித்து வெற்றி பெறச்செய்ததற்காக இந்…

  8. அமெரிக்க நீர்முழ்கியை கைப்பற்றிய சீனா சர்வதேச கடற்கரை பகுதியில் வைத்து சீனா கைப்பற்றி இருக்கும் அமெரிக்காவின் ஆளில்லா நீர்முழ்கி ஆய்வு வாகனத்தை ஒப்படைத்துவிட கோரியிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வியாழக்கிழமையன்று தென் சீன கடலில் வைத்து அமெரிக்காவின் இந்த ஆளில்லா நீர்முழ்கி வாகனத்தை சீன கடற்படை கைப்பற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. யுஎஸ்என்எஸ் பௌவ்டிச் என்கிற இந்த ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் கடலியல் சார் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. "கடல் மிதவை" எனப்படும் இந்த ஆளில்லாத நீழ்மூழ்கி கருவி நீரின் உப்பு தன்மையையும், வெப்பநிலையையும் சோதிக்கப் பயன்படுகிறது. நீருக்கடியிலுள்…

  9. தென் கொரிய அதிபர் பதவியை குறிவைக்கும் பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தான் பிறந்த தென் கொரியாவில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார். தென் கொரிய அதிபர் தேர்தலை குறிவைக்கும் பான் கீ மூன் டிசம்பர் மாத இறுதியில் உலகின் உயர்நிலை தூதராக பான் கி மூனின் பதவிர்காலம் முடிவடைய உள்ளது. ஐ.நாவின் பொது செயலாளராக பான் கி மூன் கடைசியாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், சிறிது காலம் ஓய்வுக்கு பிறகு தென் கொரியா செல்ல இருப்பதாகவும், அங்கு தன்னால் இயன்ற சேவைகளை நாட்டுக்கு செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அட்டவணைப்படி, அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தென் கொரிய அதி…

  10. Dangerous waves could be headed to some South Pacific coasts after an 7.9-magnitude earthquake struck in the sea off Papua New Guinea on Saturday night, the Pacific Tsunami Warning Center said in a preliminary alert. The quake struck in the ocean about 45 kilometers east of Papua New Guinea's New Ireland island, also known as Latangai, at about 8:51 p.m. (5:51 a.m. ET), the US Geological Survey said. Hazardous tsunamis are possible though about midnight local time along some coasts of that country, as well as the Solomon Islands, Pohnpei, Chuuk, Indonesia, Nauru, Kosrae and Vanuatu, the PTWC said. http://www.cnn.com/2016/12/17/asia/earthquake-papua-new-guin…

  11. இணையவெளி ஊடுருவல்: ரஷ்யாவுக்கு ஒபாமா எச்சரிக்கை அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வலையமைப்பில் புகுந்து மின்னஞ்சல்களை திருடியதாகவும், இந்த நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினிடம் ஆணையிட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்திருக்கிறார். "விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் ரஷ்யாவில் எதுவும் நடைபெறுவதில்லை" - ஒபாமா வலையமைப்பில் புகுந்து நடைபெற்றிருக்கும் தரவு திருட்டு பற்றி ரஷ்ய அதிபர் நன்கு அறிவார் என்பதை குறிப்பிட்டு, "விளாடிமிர் புதினுக்கு தெரியாமல் ரஷ்யாவில் எதுவும் நடைபெறுவதில்லை" என்று ஒபாமா தெரிவித்திருக்கிறார். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை பற்றி கடந்த செப்டம்பரில் நடைபெற்ற உச்சி மாநாட…

  12. அமெரிக்க ஊடக விமர்சனங்களால் லாபமடைந்த ட்ரம்ப் ! நடந்து முடிந்த அமெரிக்கத் தேர்தலில் ஹிலரி கிளின்டன் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகவும், டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சி வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர். பெரும்பான்மை ஓட்டு வித்யாசத்தில் ட்ரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார் டொனால்டு டிரம்ப். ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் ஷோரன்ஸ்டெய்ன் ஊடக, அரசியல், மக்கள் கொள்கை மையம் (Shorenstein Center on Media, Politics and Public Policy) சார்பில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க தேர்தலில், அமெரிக்க பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்கு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அமெரிக்கத் தேர்தல் சமயத்தில் ஏபிசி, என்பிசி, சிபிஎஸ், சிஎன்என் உள்ளிட்ட ஊடக நிகழ…

  13. அமெரிக்க நகர மேயராக இந்திய பெண் தேர்வு கலிபோர்னியா மாநிலத்தின் கூப்பர்டீனோ நகர மேயராக தேர்வு செய்யப்பட்ட சவீதா வைத்தியநாதனுக்கு அவரது மகள் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தின் முக்கிய நகராக விளங்கும் கூப்பர்டீனோ நகரின் புதிய மேயராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளதால் உலக அளவில் பிரபல நகராக கூப்பர்டீனோ விளங்குகிறது. இந்நிலையில் இந்நகரில் முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவீதா வைத்தியநாதன் என்ற பெண் கடந்த வாரம் புதிய மேயராக பதவியேற்றார். எம்பிஏ பட்டதாரியான சவீதா, உயர்ந…

  14. ஜெர்மனில் ஆணி வெடிகுண்டை வெடிக்க வைக்க முயற்சித்ததாக 12 வயது சிறுவனிடம் விசாரணை ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில், குறித்த நேரத்தில் வெடிக்கக் கூடிய ஆணி வெடிகுண்டை வெடிக்க வைக்க முயற்சித்ததாக 12 வயது ஜெர்மன் சிறுவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த சிறுவனின் பெற்றோர் இராக்கை சேர்ந்தவர்கள் என்றும் சமீபத்தில் அவர் தீவிரவாத எண்ணம் கொண்டவராக மாறியிருக்கிறார் என்று ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நவம்பர் மாதத்தின் இறுதியில், மேற்கு நகரமான லுட்விக்ஸ்ஷஃபெனில் தோள் பை ஒன்றில் இந்த கருவியை அவர் விட்டு சென்றுள்ளார். ஆனால், குண்டு வெடிக்காமல், முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பின், ஒருவாரத்திற்குமுன், அந்த வெட…

  15. மேற்குலகம் ரஷ்யாவின் கோபத்தை தூண்டியிருப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் சோவியத் தலைவர் மிகையில் கோர்பச்சோவ், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் "துரோகத்தால்" சின்னாபின்னமாகியது என்று தெரிவித்திருக்கிறார். மிகையில் கோர்பச்சோவ் 85 வயதான மிகையில் கோர்பச்சோவ் இப்போது மிகவும் அரிதாகவே பேட்டி கொடுக்கிறார் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ்கோவில் இருக்கும் பிபிசியின் ஸ்டீவ் ரோசென்பாக்கிற்கு, மிகையில் கோர்பச்சோவ் மிகவும் அரிதான பேட்டி ஒன்றை வழங்கினார். இப்போது 85 வயதாகியிருக்கும் மிகையில் கோர்பச்சோவ் உடல் சுகவீன பிரச்சனைகளோடு வாழ்ந்து வருகிறார். ஆனால், அவருடைய நகைச்சுவையுணர்வு அழிக்க முடியாத ஒன்றாக உள்ளது. நாங்கள் சந்தித்தபோது, அவருடைய ஊ…

  16. இன்றைய நிகழ்ச்சியில், * பரஸ்பரக் குற்றச்சாட்டுகளுகு இடையே கிழக்கு அலெப்போவில் இருந்து மக்கள் வெளியேற்றம் நிறுத்தம். இராணுவ நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கும் என்கிறது சிரியாவின் அரசு. * அமெரிக்க தேர்தலின்போது, இணையதளத்தில் அத்துமீறியதற்காக ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அதிபர் ஒபாமா கூறுகிறார். * பிரிட்டனின் தெருக்களில் கண்ணைக்கவரும் சிவப்பு நிற பொதுத்தொலைபேசிப் பெட்டிகள் விரைவில் அகலப்போகின்றன.

  17. செக்குடியரசிடம் பெற்ற கடனை மதுபானமாக வழங்கும் கியூபா..! பனிப்போர் காலம் தொட்டே கியூபாவானது உலகில் சிறப்புமிகு ரம் மதுபான தயாரிப்பை கொண்டு தனது நாட்டு கடன்களை அடைத்து வருகின்றது. இதனடிப்படையில் செக் குடியரசு நாட்டிடம் பெற்ற பெருந்தொகை கடனையும் ரம் மதுபானத்தை கொண்டு செலுத்துவதற்கு தயாராகியுள்ளது. இதுபற்றி செக்குடியரசின் நிதிஅயமைச்சு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, கியூபா செக்குடியரசு என்பன கம்யூனிச வலய நாடுகளாக இருந்த காலத்திலிருந்தே கியூபாவானது சுமார் 276 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அக்கடன் தொகையை கியூபா எமது நாட்டுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. …

  18. இலங்கை எப்படி மலேரியாவை ஜெயித்தது? ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பின் கூட்டம் இலங்கையில் கடந்த செப்டம்பர் 5-ல் நடைபெற்றது. 'மலேரியா இல்லாத நாடு' என்று அது இலங்கையை அறிவித்தது. பொது சுகாதாரம் தொடர்பான இலங்கையின் பெரும் சாதனைகளில் இது ஒரு மைல்கல். வாழ்நாள் அதிகரிப்பு, சிசு மரண விகிதம், சராசரிக் குடும்பத்தின் அளவு என்ற நல்வாழ்வு தொடர்பான மற்ற குறியீடுகளிலும் இது எதிரொலிக்கிறது. தென் கிழக்கு ஆசியாவில் 11 நாடுகள் உள்ளன. இலங்கையைத் தவிர்த்து மாலத்தீவுகளும் மலேரியாவை ஒழித்துள்ளது. இது ஒன்றும் தற்செயலாக நடந்தது அல்ல. இரு நாடுகளுக்கும் மக்களின் நல்வாழ்வு பற்றிய விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்…

  19. பிரான்ஸில் வெல்லப்போவது வலதுசாரிகளா அதிதீவிர வலதுசாரிகளா? பிரெஞ்சு அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அதிபர் ஹொல்லாந்தே முடிவெடுத்திருப்பதில் வியக்க ஏதும் இல்லை. ஹொல்லாந்தேயின் பதவிக் காலத்தின் கடைசிக் கட்டத்தில் - பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற நிலை, வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சநிலை, தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், சொந்தக் கட்சிக்குள் சண்டை, தலைவர்களின் தனிப்பட்ட ஊழல் என்று சிக்கல்கள் மேல் சிக்கல்கள் அணிவகுத்து நிற்கின்றன. மக்களிடையே அவருடைய செல்வாக்கு கடுமையாக வீழ்ந்திருக்கிறது. "சோஷலிஸ்ட் கட்சியின் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் ஒருவேளை ஹொல்லாந்தே போட்டியிட்டால், அவருக்கு எதிராகப் போட்டியிடுவோம்" என்று கட்சிக்குள்ளேயே குரல்கள் கேட்கி…

  20. சிரியாவின் அலெப்பா நகர மக்களுக்காக ஈஃபிள் டவர் விளக்குகள் அணைப்பு! சிரியாவின் அலெப்போ நகர மக்களுக்காக ஈஃபிள் டவர் விளக்குகள் அணைப்பு! சிரியா நாட்டில் ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தாக்குதல் தொடர்ந்து நடந்த வண்ணமே இருக்கின்றன. போர் நிறுத்த நடவடிக்கைகளும் அமைதியைத் தரவில்லை. இந்தப் போரில் அலெப்போ நகரை மையமாக கொண்டே கடும் தாக்குதல் தொடர்கின்றன. இதில் பொதுமக்களும் பெருமளவில் கொல்லப்படுகின்றனர். இம்மாதிரியான கொடூரமான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, நகரில் இயல்பான வாழ்க்கை நிலவ வேண்டும் என உலகம் தழுவிய அளவில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் பாரீஸ் நகரத்தில் உள்ள, உலக புகழ்பெற்ற ஈபிள் டவரும் இணைந்துகொள்கிறத…

  21. விண்ணையும் வசப்படுத்தும் இஸ்ரோ பெண் விஞ்ஞானிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஒரு செயற்கைக்கோளைச் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியபோது, பெங்களுருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்(இஸ்ரோ), தங்களது தலையில் பூச்சூடி, அழகான சேலை அணிந்த பெண்கள் , தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய புகைப்படம் மிகப் பிரபலமானது. அந்த புகைப்படம், இந்தியாவில், விண்வெளி ஆராய்ச்சித் துறையில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்ற வழமையான ஒரு கருத்துணர்வுக்கு சவால் விடுவதாக இருந்தது. ஆனால், பின்னர், இஸ்ரோ(Isro) அந்தப் புகைப்படத்தில் காணப்பட்ட ப…

  22. இன்றைய நிகழ்ச்சியில், *அலெப்போவில் கிளர்ச்சிக்காரர் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பம். ஆயிரக்கணக்கானோர் வெளியேறவுள்ளனர். * சிகிச்சைக்காக சினைப்பையை நீக்கி பத்திரமாக வைத்து மீண்டும் அதன் மூலம் குழந்தை பெற்ற பெண்ணின் கதை. * அமைதியீனத்தை தடுக்கும் ஆயுதமாக யோகாவை கையில் எடுத்துள்ள தென்னாப்பிரிக்க சிறைகள்.

  23. ஜெட் ஏர்வேஸுக்கும், தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பா? - புலனாய்வுப் பத்திரிகையாளரின் தகவல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில், அதன் தலைவர் நரேஷ் கோயல்,பத்திரிக்கையாளர் ஒருவருக்கு எதிராக ஆயிரம் கோடி ருபாய் நஷ்டஈடுகேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்குக்கு ஆளாகியுள்ள பத்திரிகையாளரின் பெயர் ஜோஸி ஜோசப். புலனாய்வு பத்திரிகையாளரான இவர், "A feast of vultures" என்ற பெயரில் ஒரு புத்தகத்தை அண்மையில் வெளியிட்டார். அதில், இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் இடையே நடக்கும் மறைமுகப் பேரங்கள் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து எழுதி இருந்தார். அந்த புத்தகத்தின் ஒரு பகுதியில், நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கும், ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவ…

  24. குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹிட்லர் பிறந்த வீட்டை சொந்தமாக்கிய ஆஸ்ட்ரியா அரசு அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீட்டை அரசு கையகப்படுத்த அனுமதிக்கும் ஒரு சட்டத்தை ஆஸ்திரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஹிட்லர் பிறந்த வீடு அந்த கட்டடத்தின் உரிமையாளரான கெர்லிண்டே பொம்மெர், அந்த கட்டடத்தை விற்கவோ அல்லது புதுப்பிக்கவோ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நாடாளுமன்றம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. நவ நாஜி ஆதரவாளர்களுக்கு இந்த வீடு ஒரு புனிதமான இடம்போல மாறிவிடக் கூடாது என்பதற்காக ஆஸ்திரிய அரசு பிரவ்நோவ் ஆம் இன் என்ற நகரில் உள்ள இந்த வீட்டை ஒரு ஏலத்தின் போது குத்தகைக்கு எடுத்திருந்தது. குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹிட்லர் ப…

  25. ராணுவத்திடம் சிக்கி இறப்பதை விட தற்கொலையே மேலானது! - சிரியா பெண்ணின் கடிதம்! சிரியா நாட்டில் அரசு ராணுவத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள், அலெப்போ நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இந்த யுத்தத்தில் பலியாகி உள்ளனர். எழுபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அலெப்போ நகரை மையமாக கொண்டு நடைபெறும் இந்தச் சண்டையைத் துயரத்தைத் தணிக்கும் விதத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சிரியா ராணுவமும், கிளர்ச்சியாளர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதே மாதம் 19-…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.