உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26889 topics in this forum
-
பிரிட்டனின் பல பாகங்களில் வெள்ளம். போக்குவரத்து பாதிப்பு பிரிட்டனில் திடீரென பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பாகங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பாகங்கள் வெள்ளத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மில்ரன் நீஸூக்கும் மத்திய லண்டனின் யூஸ்ரனுக்கும் இடையேயான தொடரூந்து வற்ஃபோர்ட் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரூந்து நிலையங்கள் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் பல இடங்களில் மின்னல் தாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. …
-
- 3 replies
- 389 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பாலியல் அடிமையாக இருந்த பெண் ஐ.நா.வின் நல்லெண்ண தூதுவராக நியமனம் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்த நதியா முராத் ஐ.நா.வின் மனிதக் கடத்தலுக்கு எதிரான நல்லெண்ணத் தூதுவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் தனது வலைத்தளத்தில் கருத்து பதிவசெய்துள்ள நதியா, இனப்படுகொலை மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதிய வாழை்வை அமைத்துக்கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். அதுமாத்திரமின்றி மனித கடத்தலை இல்லாது ஒழிப்பதே தனது பிரதான நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஈராக்கில் இடம்பெற்ற போரின் போது நதியாவின் கண் முன்னர் அவரது தாய் மற்றும் சகோதரர் ஐ.எஸ். தீவிரவாதிகா…
-
- 2 replies
- 452 views
-
-
அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக 21 சிறுவர்கள் வழக்குத் தாக்கல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அடுத்த தலைமுறையினருக்கு காலநிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய பாதக விளைவுகளைத் தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டி 21 சிறுவர்களை உள்ளடக்கிய குழுவொன்று அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த வழக்குத் தாக்கல் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவெங்குமுள்ள 8வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வய துடைய மேற்படி சிறுவர்களை உள்ளடக்கிய 'எங்கள் சிறுவர்களது அறக்…
-
- 0 replies
- 416 views
-
-
பிரான்ஸின் டொனால்ட் ட்ரம்ப்hக மாறும் முன்னாள் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி எதிர்வரும் 2017ம் ஆண்டு நடைபெற உள்ள பிரான்ஸின் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் முன்னாள் அதிபர் நிக்கோலா சார்க்கோஸி , அமெரிக்காவின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பை போல சச்சரவு மிக்க கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸின் கொள்கைளுக்கு முற்றிலும் மாறாக குடியேற்ற விவகாரத்தில் கடுமையான விதிகளை நடைமுறைபபடுத்துவது , குடியேறியிருப்பவர்கள் தமது குடும்பத்தவரை அழைப்பதை தடைசெய்வது , வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் மிக இறுக்கமான சட்டவிதிகளை நடைமுறைப்படுத்துவது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வரும் சராக்கோ…
-
- 0 replies
- 331 views
-
-
பங்களாதேஷ் தலைநகரிலுள்ள வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்ததால் பரபரப்பு பங்களாதேஷின் டாக்கா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கடும் மழைவீழ்ச்சியையடுத்து அந்நகரின் வீதிகளிலும் கார் தரிப்பிடங்களிலும் இரத்த வெள்ளம் பாய்ந்ததால் பிரதேசவாசிகள் பெரும் திகைப்புக்குள்ளானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளையொட்டி அந்நகரின் சில பிரதேசங்களில் செம்மறியாடுகள், ஆடுகள் மற்றும் மாடுகள் உள்ளடங்கலான கால்நடைகள் பெருமளவில் பலி கொடுக்கப்பட்டிருந்ததால் அந்தக் கால் நடைகளின் குருதி வெள்ள நீரில் கலந்த தாலேயே இவ்வாறு வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்துள்ளது. h…
-
- 0 replies
- 478 views
-
-
பெங்களூரு ஏன் எரிகிறது? காவிரி வெறும் நீர்ப் பிரச்சினை மட்டும் இல்லை; ஒரு சமூகவியல் பிரச்சினையும்கூட அவர்கள் படையாய்க் கிளம்பினார்கள். உடல் மண்ணுக்கு, உயிர் காவிரிக்கு என்ற கோஷம் இல்லை அது. எமக்கு மிஞ்சித்தான் தான தர்மம் என்கிற கோஷமாக கன்னட அமைப்புகள், விவசாயிகள் எழுப்பிய கோபக் குரலாகத்தான் ஆரம்பித்தது அது. எங்களுக்கே குடிக்க நீர் இல்லை, விவசாயத்துக்கு இல்லை எனும்போது தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை 15 நாட்களுக்கு (செப். 5-லிருந்து செப்.20 வரை) விநாடிக்கு 15,000 கன அடி நீர் விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் எப்படிச் சொன்னது என்கிற அதிர்ச்சியும் கோபமும் கலந்த எதிர்ப்பாகத்தான் முதலில் இருந்தது. காவிரி நதி நீர்ப்…
-
- 0 replies
- 418 views
-
-
ஜேர்மனியில் அடைக்கலம் புகுந்தோருக்கும் ஜேர்மனியருக்கும் இடையே மோதல் ஜேர்மனியின் கிழக்குப்பகுதியில் உள்ள போற்சென்; நகரத்தில் புகலிடம் கோரிய வெளிநாட்டவர்களுக்கும் நகரவாசிகளுக்கும் இடையே மோதல் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவருக்கு எதிரான குரோத மனப்பான்மையின் வெளிப்பாடாக நகரவாசிகள் புகலிடம் கோரியிருப்பவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிதீவிர வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த 80க்கும் அதிகமானவர்கள் 20க்கும் மேற்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை தாக்கியதாகவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் பதிலுக்கு தாக்கயதையடுத்து கலவரம் நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. மோதலில் ஈடுபட்ட அதி வலதுசாரி அமைப்பினர் புகலிடக்…
-
- 0 replies
- 465 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * நான்காவது நாளாக நீடிக்கும் சிரிய போர்நிறுத்தம்; அலெப்போவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகள் கிடைக்கவில்லை என்று புகார். * சட்டவிரோத வர்த்தகத்தால் அருகிவரும் அபூர்வ பறவை இனங்கள்; அவற்றின் அழிவைத்தடுக்கப் போராடும் இந்தோனேஷியா அதிகாரிகள். * உறைபனி ஏரிகளுக்குள் புதையுண்டிருக்கும் ரகசியங்களை பாதுகாக்கப் போராடும் விஞ்ஞானிகள்; ஆல்ப்ஸ்மலை உறைபனி அண்டார்டிகாவுக்கு பயணிப்பது ஏன்?
-
- 0 replies
- 501 views
-
-
யாழ் மருத்துவமனை படுகொலையில் தொடர்புடைய இந்திய இராணுவ அதிகாரிக்கு ஐநாவில் உயர் பதவி 1 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் மருமகனும் இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படையில் அங்கம் வகித்தவருமான மேஜர் சி;த்தார்த் சட்டர்ஜிக்கு கென்யாவில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட இணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படையினர் யாழ் பொது மருத்துவ மனையில் அத்துமீறி நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் உள்ளவரும் , போர்க்குற்றம் புரிந்தவருமான மேஜர் தர அதிகாரியான சித்தார்த் சட்டர்ஜிக்கு ஐக்கிய நாடுகள் சiபின் உயர் பதவி எவ்வாறு வழங்கப…
-
- 0 replies
- 472 views
-
-
11,000 பேரின் ஆர்ப்பாட்டப் பேரணியை தனியாக தடுக்க முயன்ற சிறுவன் 2016-09-15 14:39:16 மெக்ஸிக்கோவில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்தபோது, 12 வயதான சிறுவனொருவன் தனியாக வீதியில் நின்று அவர்களை தடுக்க முயற்சித்துள்ளான். செலேயா நகரில் நடைபெற்ற இப் பேரணியில் சுமார் 11,000 பேர் கலந்துகொண்டனர். அப்போது மேற்படி சிறுவன் வீதியின் மத்தியில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கோரினான். இச் சிறுவனின் உறவினர் ஒருவரும் ஓரினச் சேர்க்கையாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனத் தா…
-
- 0 replies
- 423 views
-
-
பெங்களூரில் வரும்25ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு பெங்களூரு: பெங்களூரில் 144 தடை உத்தரவு வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களையடுத்து வன்முறையாள்களை கட்டுப்படுத்தவும், பதட்ட சூழ்நிலையை போக்கவும் பெங்களூருவில் 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து அங்கு படிப்படியாக வன்முறை சம்பவங்கள் குறைய துவங்கின. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறபட்டு இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. மேலும் மீண்டும் வன…
-
- 0 replies
- 498 views
-
-
தமிழர்கள் வெளியேறியதால் பரிதவிக்கும் கர்நாடகம் வெறிச்சோடி கிடக்கும் பெங்களூரு நகரத்தின் முக்கிய வர்த்தக பகுதிகளில் ஒன்று | கோப்புப் படம்: கே.கோபிநாதன். பெங்களூருவில் வெடித்த வன்முறை காரணமாக அங்கு வசித்து வந்த ஏராளமான தமிழர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர். மேலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அச்சம் காரணமாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கட்டுமானம் உட்பட பல்வேறு தொழில்களுக்கு ஆள் கிடைக்காமல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. முடங்கிய மயானங்கள் மேலும் பெங்களூருவில் உள்ள கல்லறை மற்றும் சுடுகாடுகளில் பணியாற்றி வந்த மயான ஊழியர்களும் தமிழகத்தில் உள்ள அவரவர் சொந்த ஊர…
-
- 1 reply
- 717 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * லிபியா நிலைகுலைந்ததற்கு பிரிட்டன் மற்றும் பிரெஞ்சு தலையீடே காரணம் என்று குற்றச்சாட்டு; ஐஎஸ் அமைப்பின் வளர்ச்சிக்கும் அதுவே காரணம் என்கிறது பிரிட்டன் நாடாளுமன்ற நிலைக்குழு. * அண்டவெளியை அளந்து பார்க்கும் அபூர்வ முயற்சி; நூறுகோடிக்கும் அதிகமான நட்சத்திரங்களை கண்டுபிடித்திருக்கும் அறிவியல் சாதனை. * அவசரப்பட்டால் அழிவு அதிகரிக்கும்; நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் பகோடாக்களை புனரமைப்பதில் நிதானம் தேவையென நிபுணர்கள் எச்சரிக்கை.
-
- 0 replies
- 579 views
-
-
9/11 தாக்குதல் வைபவத்தில் மயங்கி விழுந்தவர் ஹிலாரி அல்ல ; சமூக வலைத்தளத்தில் பரபரப்பு அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க் நகரில் இடம்பெற்ற 9/11 தாக்குதல் தின வைபவத்தில் மயங்கி விழுந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வைபவத்தில் கலந்து கொண்டவர் ஹிலாரி கிளின்டன் அல்ல எனவும் அவரைப் போன்ற உருவத் தோற்றத்தைக் கொண்ட பிறிதொருவர் என அவரது எதிர்ப்பாளர்கள் விநோதமான உரிமைக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஹிலாரி கிளின்டனுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ள நிலையில் அவர் தன்னைப் போன்ற ஒருவரை தனக்குப் பதிலாக குறிப்பிட்ட ஞாபகார்த்த த…
-
- 0 replies
- 578 views
-
-
பெங்களூருவில் இயல்பு நிலை திரும்புகிறது: பதற்ற பகுதிகளில் மட்டும் தடை உத்தரவு நீட்டிப்பு பெங்களூரு தீபாஞ்சலி நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பாதுகாப்புப் பணியில் மத்திய படையினர் | படம்: மோகித் எம்.ராவ் தமிழ்நாட்டுடன் காவேரி நதிநீரைப் பங்கிடும் விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் வன்முறைகள் வெடித்த பெங்களூரில், இரண்டு நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை இயல்பு நிலை திரும்பி வருகிறது. பதற்றமான பகுதி என கண்டறியப்பட்ட 16 காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக பெங்களூரு காவல் ஆணையர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதேவேளையில் மைசூர…
-
- 2 replies
- 465 views
-
-
அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட அமெரிக்க போர் விமானங்கள் தென்கொரியாவுக்கு அனுப்பப்பட்டன: வடகொரியாவுக்கு எச்சரிக்கை அமெரிக்க விமானப் படையின் பி-1பி ரக போர் விமானம். (கோப்புப் படம்) அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட பி-1பி ரக அமெரிக்க போர் விமானங்கள் நேற்று தென் கொரியாவுக்கு அனுப்பப்பட் டன. இதன்மூலம் வடகொரியா வுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 9-ம் தேதி 5-வது முறையாக வடகொரியா அணுகுண்டு சோதனையை நடத்தியது. இது ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட சக்தி வாய்ந்ததாகும். அடுத்ததாக 6-வது அணுகுண்டு சோதனையையும் நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுக…
-
- 0 replies
- 408 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமலுக்கு வந்தது சிரிய போர்நிறுத்தம்; ஆனால் ஏற்கனவே நடந்திருக்கும் அழிவின் அளவென்ன? அதிகபட்ச தாக்குதலுக்குள்ளான அலெப்போ நகரிலிருந்து பிபிசியின் பிரத்யேக செய்திகள். * திபெத் ஆறுகளின் வெள்ள அளவு குறித்து, சீனா ரகசியம் காப்பதாக நேபாளம் புகார்; இந்தியா, வங்கதேசமும் வெள்ளத்தால் பாதிக்கப்படலாமென கூடுதல் கவலைகள். * ஒன்று போல் தோன்றும்—ஆனால் இவை வெவ்வேறானவை; ஒட்டகச் சிவங்கிகள் ஓரினமல்ல—நான்கு வெவ்வேறு இனங்கள் என்கிறது ஆய்வின் முடிவு
-
- 0 replies
- 362 views
-
-
சுதந்திர நடமாட்டத்துக்கு பிரிட்டன் அனுமதித்தால் மட்டுமே பொது சந்தையில் இடம் -EU திட்டவட்டம்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுசந்தையில் தொடர்ந்து நீடிப்பதற்கு பிரிட்டன் ஒன்றியத்தின் குடிமக்கள் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்க வேணடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் பிரிட்டனில் குடியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டால் ஒன்றியத்தின் தனி சந்தையில் பிரிட்டனுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் விலகுவது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒன்றியத்தின் சார்பாக முன்னெடுப்பவரும் , பெல்ஜியத்தின் முன்னாள் பிரதமருமான வெர்கொவ்ஸராட் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 420 views
-
-
ஐ.எஸ். அமைப்பின் சார்பில் ஜெர்மனியில் தாக்குதல் திட்டம்: 3 சிரியா நாட்டு நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது வடக்கு ஜெர்மனியில் பல வீடுகளில் தீவிர சோதனை நடத்திய 200 போலிஸ் அதிகாரிகள், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பிற்காக தாக்குதல் நடத்த தயாரிப்பு பணிகளை மேற்கொண்டதாக, புலம் பெயர்ந்த மூன்று சிரியா நாட்டு பிரஜைகளை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சமீபமாக, தெற்கு ஜெர்மனியில் தொடர் தாக்குதலில் 10 நபர்கள் இறந்தனர். அந்த சம்பவம் நடந்த இரண்டு மாதங்களுக்குள், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க வழக்கறிஞர்கள் , கைதான இளைஞர்கள் கடந்த ஆண்டு ஜெர்மனிக்கு வந்ததாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ஐரோப்பாவிற்கு பயணம் …
-
- 0 replies
- 335 views
-
-
தற்போது நான் சிறப்பாக உணர்கிறேன்: ஹிலரி கிளிண்டன் முக்கியத்துவம் வாய்ந்த செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு நிகழ்ச்சியின் போது, சுகவீனம் அடைந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், தற்போது தனது உடல் நலன் மேம்பாடு அடைந்துள்ளது என்று உணர்வதாக தொலைபேசியின் வாயிலாக அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கோப்பு படம் தனக்கு நிமோனியா இருப்பதாக கண்டறியப்பட்ட தகவலை, முதலில் வெளியிடாததற்கு காரணம் அதனை தான் ஒரு தீவிர பிரச்சனையாக கருதாதது தான் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் கூறியுள்ளார். நிமோனியா என்ற நுரையீரல் தொற்று இருப்பதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று …
-
- 0 replies
- 383 views
-
-
மலேஷிய தாக்குதல் விவகாரம்: புதிய தகவல்கள் கசிந்துள்ளன மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சகீப் அன்சாரி மற்றும் அந்நாட்டிலுள்ள பௌத்த விகாரையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடனோ, அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்நாட்டில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு சம்பவத்துடனோ, இலங்கையர்கள் எவரும் தொடர்புப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேஷியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், அவர்கள் அனைவரும், தென்னிந்தியாவிலிருந்து மலேஷியாவுக்குச் சென்றவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. மேற்படி குழுவினர், இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான நம்பிக்கையில் இருப்பவர்கள் என்றும் மலேஷியாவின் பீனேக…
-
- 0 replies
- 451 views
-
-
ஃபுளோரிடாவில் மசூதி தீ வைக்கப்பட்டதா? ஓர்லாண்டோ இரவு கேளிக்கையகத்தில் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரி சென்று வந்த மசூதி மீது, தீ வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சாத்தியக்கூறு பற்றி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தின் ஆட்சியாளர்கள் புலனாய்வு மேற்கொண்டு வருகின்றனர். திங்கள் கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னால் ஃபோர்ட் பியர்ஸில் இருக்கும் இந்த இஸ்லாமிய மையத்தை யாரோ நெருங்கி வருவதை கண்காணிப்பு காணொளி பதிவு காட்டுவதாக உள்ளூர் புனித லூசி வட்டத்தின் ஷெரீப் அலுவலகம் கூறியுள்ளது. ஜூன் 12 ஆம் நாள் பல்ஸ் இரவு கேளிக்கையகத்தில் ஒமர் மாத்தீன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் இறந்தனர். 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். http://www.bbc.com/…
-
- 0 replies
- 405 views
-
-
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமறூன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்கிறார். பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான பழமைவாத கட்சியின் டேவிட் கமறூன் ஒக்ஸ்போர்ட்ஷயர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் துறக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியம் நீடிப்பதா அல்லது விலகுவதா என்ற கருத்துக்கணிப்பை கடந்த ஜூன் மாதம் நடத்திய டேவிட் கமறூன் நீடிக்க வேண்டும் என்ற முடிவை எட்டமுடியாத நிலையில் தனது பிரதமர் பதவியை துறந்திருந்தார். அதனையடுத்து புதிய பிரதமராக தற்போது பதவி ஏற்றிருக்கும் திரேசா மேயின் அரசியல் நடவடிக்கைளுக்கு இடையூறாக இருக்க விரும்பாத காரணத்தாலேயே நாடாளுமன்ற உறுப்பினர் பதவிய…
-
- 0 replies
- 375 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * தனது கலிபோர்னிய பிரச்சாரத்தை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன்; நிமோனியா பாதித்திருப்பதாக மருத்துவர் அறிவிப்பு. * கண் அறுவை சிகிச்சைக்கு ரோபோட்டை பயன்படுத்திய ஆக்ஸ்போர்ட் ஆய்வாளர்கள்; கண் அறுவை சிகிச்சையில் உலகின் முதலாவது ரோபோட் தொழில்நுட்ப புரட்சியை நேரில் படம் பிடித்தது பிபிசி. * மட்டக்களப்பில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள்; போரால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வுக்கு புதிய தொடக்கமா?
-
- 0 replies
- 515 views
-
-
பரிஸ் தாக்குதலை திட்டமிட்ட 15 வயதுச் சிறுவன் கைது உடனடியான வன்முறை நடவடிக்கையை திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட 15 வயதுச் சிறுவன், பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கைது செய்யப்பட்டதாக நீதி தகவல் மூலங்கள் இரண்டு தெரிவித்துள்ளன. இது, கடந்த ஒரு வாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுடன் தொடர்புடைய இரண்டாவது தாக்குதல் திட்டமாகும். எரிவாயு உருளைகள் மற்றும் டீசல் கொள்கலன்களுடன் நோற்றே டாமே கதிட்றல் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (04) கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் வழிகாட்டலில் பரிஸ் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதல் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததுடன், பெண்கள் நா…
-
- 0 replies
- 423 views
-