உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26892 topics in this forum
-
சிறுவர்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்த கும்பல் சிக்கியது : 29 சிறுவர்கள் இனம்காணல் தமது வலையமைப்பின் மூலம் உலகத்தின் பல நாடுகளுக்கு மில்லியன் கணக்கான சிறுவர்களின் பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் இலங்கையர்கள் உட்பட 7 பேரை ஸ்பானிய சிவில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த வலையமைப்பினர் சுமார் 80 சிறுவர்களை பயன்படுத்தி இவ்வாறான பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளதாகவும் இதில் 29 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த வலையமைப்பின் தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபர் 13 வயதுக்கு குறைவான சிறுவர்க…
-
- 0 replies
- 307 views
-
-
பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக கனேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனி நபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள முயற்சித்திருந்தார் எனவும், இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். ஒன்டாரியொவின் ளுவசயவாசழல ல் இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் தாக்குதல் முயற்சியை முறிடியத்துள்ளனர். தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நபர் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த தகவல் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. எவ்வாறான தாக்குதல் எவ்வாறு முறியடிக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. ht…
-
- 0 replies
- 191 views
-
-
ரியோ ஒலிம்பிக்கும், ஆப்ரிக்க பிரேஸிலிய பூர்வகுடிகளின் கண்ணீரும்...! கடந்த ஜூன் 30- ம் தேதி. அன்று ஆர்வமாக நெட்டிசன்கள் உலக சமூக ஊடக தினத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். சமூக ஊடகத்திற்கும் தங்களுக்குமான பந்தத்தை உருக்கமாக, கிண்டலாக, நெகிழ்ச்சியாக என்று விதவிதமான நடைகளில் எழுதி, சமூக ஊடகத்தில் பகிர்ந்து கொண்டிருந்த, அதே நன்னாளில்தான், பிரேசிலின் ரியோ விமான நிலைய வாசலில், ஏறத்தாழ 30 காவலர்களும், தீயணைப்பு வீரர்களும் அவர்கள் நாட்டிற்கு வந்தவர்களை மிகவும் வித்தியாசமான வாசகங்கள் கொண்ட பதாகைகளை தாங்கி, வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். ஆம். சந்தேகம் வேண்டாம், 'வித்தியாசமான வாசகங்கள்' கொண்ட பதாகைதான். அதில் இவ்வாறாகதான் எழுதி இருந்தது, “நரகத்திற்கு உங்களை அன்புட…
-
- 0 replies
- 406 views
-
-
அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு இணையத்தளம் முடக்கம் அவுஸ்திரேலியாவின் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலைத் தொடர்ந்து, அவ்விணையத்தளத்தை முடக்குவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு, அந்நாட்டு அரசாங்கம் முயல்கிறது. இந்த இணையத் தாக்குதலின் காரணமாக, மக்களின் தனிப்பட்ட தகவல்கள் எவையும் திருடுபோகவில்லை என நேற்றுப் புதன்கிழமை தெரிவித்த அவுஸ்திரேலிய அரசாங்கம், முன்னெச்சரிக்கையாகவே இவ்விணையத்தளத்தை முடக்கும் முடிவை எடுத்ததாகத் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் ஆரம்பித்த இந்த இணையத் தாக்குதல்கள…
-
- 0 replies
- 251 views
-
-
விமான விபத்தில் உயிர்தப்பியவருக்கு 6.5 கோடி பரிசு விமான விபத்தில் உயிர்தப்பிய கேரளாவை சேர்ந்த ஊழியருக்கு துபாய் லாட்டரியில் ரூ.6.5 கோடி பரிசாக கிடைத்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு கடந்த 3-ந் திகதி துபாய் விமான நிலையத்தில் தரை இறங்கிய எமிரேட்ஸ் விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. இதில் பயணம் செய்த 282 பயணிகள் உள்பட மொத்தம் 300 பேர் உயிர்தப்பினார்கள். இவர்களில் ஒருவர் முகம்மது பஷீர் அப்துல் காதர் (வயது 62). கேரளாவை சேர்ந்த இவர் துபாயில் ஒரு கார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் ரம்ஜான் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு குடும்பத்தினருடன் சென்றபோது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ´டூட்டி பிரீ´ கடையில் லாட்…
-
- 7 replies
- 670 views
-
-
16 ஆண்டுகள் உண்ணாமல் உயிர் வாழ்ந்தது எப்படி? வெளியாகியது உண்மை மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தால் அப்பாவி மணிப்பூர் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐரோம் ஷர்மிளா கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தியும் அரசு தந்து கோரிக்கையை ஏற்காததால், தானே முதல்வராகும் எண்ணத்தில் 16 ஆண்டுகால போராட்டத்தை தேன் அருந்தி முடித்து கொண்டார். இவ்வளவு ஆண்டுகள் போராட்டம் நடத்தியும் ஷர்மிளாவின் உடல்நலத்தில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்த இரகசியத்தை ஷர்மிளாவின் சகோதரர் ஐரோம் சிங்கஜித் வெளியிட்டார். அவர் கூறுகையில்…
-
- 0 replies
- 254 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் மீது துருக்கி அமைச்சர் புகார் கடந்த மாதம் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பதில், துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராவதை தடுக்கும் வண்ணம் உள்ளது என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சர் மெவ்லுட் சவுசோக்லு தெரிவித்துள்ளார். துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அதிகாரிகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வை மிகவும் தவறாக உள்ளதாகவும் மேலும் மேற்கத்திய நாடுகள் துருக்கியுடனான நட்பை துண்டித்தால் அது அவர்களின் தவறே ஒழிய அங்காரா, ரஷியா, சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் கொண்ட உறவு காரணம் அல்ல என அமைச்சர் தெரிவித்துள்ளார். சு…
-
- 0 replies
- 225 views
-
-
தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சிறப்பு சிம்கார்டு வழங்க பரிசீலனை தாய்லாந்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள், ஒரு சிறப்பு சிம் கார்டை பயன்படுத்தும் திட்டத்தை கொண்டு வர அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன் மூலம் அதிகாரிகள் வெளிநாட்டு பயணிகளின் அலைபேசி, இயக்கத்தில் இல்லாத நேரத்திலும் அதை கண்காணிக்க முடியும். கோப்புப்படம் தாய்லாந்தின் தொலைத்தொடர்பு ஒழுங்காற்றுத் துறை, இந்த நடவடிக்கையை கொள்கையளவில் அங்கீகரித்துள்ளது. இது தனிநபர்களின் உரிமையில் தலையிடுவதாக இருக்கும் என்ற கூற்றை அது மறுத்துள்ளது. தேசிய ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு ஆணையம் இந்த திட்டம் குற்ற நடவடிக்கையை தடுக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. தாய்…
-
- 0 replies
- 213 views
-
-
ஜேர்மனி நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அந்நாட்டை சேர்ந்த குடும்பத்தினர் புகலிடம் கோரி ரஷ்ய நாட்டிற்கு சென்றுள்ளனர்.ஜேர்மனியில் வசித்து வந்த Andre drove, Carola Griesbach தம்பதியினர் மற்றும் இவர்களது இரண்டு மகள்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோர், கடந்த 2015 ஆம் ஆண்டு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு பயணித்துள்ளனர். அந்நாட்டிற்கு சென்ற இவர்கள், எங்கள் தாய்நாடான ஜேர்மனியில் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, மேலும் எங்கள் குழந்தைகள் வளர்வதற்கான பாதுகாப்பான சூழல் அங்கு இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம் என்னவென்றால், ஜேர்மன் நாட்டில் அளவுக்கதிமான குடியேறிகள் வந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், …
-
- 4 replies
- 595 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஹிலாரி கிண்டனை தடுக்க ‘’துப்பாக்கி ஆதரவாளர்கள்’’ அதனை பயன்படுத்தும் தமது உரிமையை பயன்படுத்த வேண்டும் என்று பேசியதற்காக டொனால்ட் ட்ரம்ப் விமர்சிக்கப்படுகிறார். * நைஜீரியாவில் காணிகளுக்கான பிரச்சினை. விவசாயிகளுக்கும், மாடு மேய்ப்போருக்குமான மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் பலி. * பிரிட்டனின் உயரமான மலைகளின் உயிரினங்களை தேடி ஒரு பயணம். அவை கடலில் மூழ்கிக்கிடக்கும் மலைகள்.
-
- 0 replies
- 433 views
-
-
பாக்தாத் மருத்துவமனையில் தீ விபத்து: 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு பாக்தாத்தின் பெரிய மருத்துவமனை ஒன்றில் உள்ள மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால், குறைந்தது 11 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. விபத்து நடந்த மருத்துவமனை (கோப்பு படம் ) இராக் தலைநகர் பாக்தாத்தின் மேற்கு பகுதியில் உள்ள யார்மூக் மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தினை மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து இராக் சுகாதார அமைச்சக பேச்சாளர் ஒருவர் கூறுகையில், தீ விபத்து ஏற்பட்டது குறித்த ஆரம்ப விசாரணைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்சார பழுதே காரணம் என்று சுட்டிக்காட்டுவதாக தெரிவித்தார். …
-
- 0 replies
- 182 views
-
-
நவ்ரு தடுப்பு நிலையத்தில் 2,000க்கு மேற்பட்ட துன்புறுத்தல்கள் நவ்ருவிலுள்ள அகதிகளுக்கான அவுஸ்திரேலிய தடுப்பு நிலையத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் முயற்சிக்கப்பட்ட தானாக தாக்கிக் கொள்ளுதல் உட்பட 2,000க்கு மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று நேற்றுப் புதன்கிழமை (10) தெரிவித்துள்ளது. மேற்கூறப்பட்ட சம்பவங்களில், அரைவாசிக்கும் மேலானவை, சிறுவர்களுடன் தொடர்புடையவை எனக் கூறப்பட்டுள்ளது. கார்டியன் அவுஸ்திரேலியாவால் பிரசுரிக்கப்பட்டுள்ள கசிந்த ஆவணங்களின் மூலம், அவுஸ்திரேலியாவினால், அயலிலுள்ள தென் பசுபிக் தீவுகளில் நடாத்தப்படும் இரண்டு அகதிகள் தடுப்பு நிலையங்களில் ஒன்றான நவ்ருவில் மேற்கொள்ளப்…
-
- 1 reply
- 264 views
-
-
ஸ்பெயின், போர்ச்சுக்கல் நாடுகளுக்கு அபராதம் ரத்து- ஐரோப்பிய ஒன்றியம் அதிகப்படியான வரவு செலவு திட்ட பற்றாக்குறைகள் தொடர்பாக ஸ்பெயினுக்கும், போர்ச்சுகல்லுக்கும் அபராதங்களை ரத்து செய்ய ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேலாக வரவு செலவு திட்டப் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றிய விதிமுறையை இந்த இரு நாடுகளும் மீறி இருக்கின்றன. இந்த வரையறைக்கு கீழே அதனுடைய பற்றாக்குறைய கொண்டுவர இரண்டு ஆண்டுகள் ஸ்பெயினுக்கு வழங்கியிருக்கும் அதேவேளையில், மொத்த உள்ளநாட்டு உற்பத்தியில் இரண்டரை சதவீதத்திற்குள் பற்றாக்குறையை கொண்டுவர போர்ச்சுக்கல்லுக்கு ஓராண்டு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன…
-
- 0 replies
- 256 views
-
-
போர்த்துக்கலில் பாரிய காட்டுத்தீ ; 174 பேர் காயம் ; 400 பேர் இடம்பெயர்வு ( அதிர்ச்சியூட்டும் படங்கள் ) போர்த்துகல் நாட்டின் மெடீரா தீவில் பன்ஜல் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயினால் 174 பேர் காயமடைந்துள்ளதோடு 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். காட்டுக்குள் ஏற்பட்ட தீவிபத்தானது, அருகில் இருக்கும் இருப்பிடங்களை நோக்கி பரவி வருவதால், பன்ஜல் நகரில் உள்ள சுமார் 400 பேர் இருப்பிடத்தினை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 27 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த தீயினை அணைக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள், 26 தீயணைப்பு விமானங்கள் மற்றும் 1262 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர். வடக்குபகுதியில் தான் …
-
- 0 replies
- 458 views
-
-
ஜனாதிபதியாவதற்கு ட்ரம்பிடம் அடிப்படை பண்புகளே இல்லை; அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டறிக்கையில் தெரிவிப்பு டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதியாக இருப்பதற்கான அடிப்படை பண்புகளே இல்லை எனவும் அவர் ஜனாதிபதியானால் அமெரிக்காவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகுமென்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாாரி கிளிண்டனும் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சி.ஐ.ஐ.ஏ. முன்னாள் இயக்குநர் மைக்கல் மோரல…
-
- 0 replies
- 231 views
-
-
அகதியாக மாறிய சீன சுற்றுலாப்பயணி சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர், ஜேர்மனிக்கான சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டபோது, அகதியாகக் கருதப்பட்டு, அகதி முகாமொன்றில் 12 நாட்கள் தங்கியிருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அவரது முழுப் பெயர் வெளியிடப்படாததோடு, "திரு. எல்" என்று மாத்திரமே அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மண்டரின் மொழி மாத்திரமே பேசத்தெரிந்த குறித்த சுற்றுலாப்பயணி, தன்னுடைய பணப்பையைத் தொலைத்துள்ளார். பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிடும் நோக்கில் சென்ற அவர், அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அலுவலகத்துக்கு மாறிச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், அங்கு வழங்கப்பட்ட படிவத்தை நிரப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அங்கி…
-
- 0 replies
- 365 views
-
-
ரியோ டி ஜெனீரோவில் பதற்றம் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் பேர் காவல் பண…
-
- 0 replies
- 306 views
-
-
இலங்கையிலிருந்து வந்த இஸ்ரேல் பெண்ணிடம் இருக்கும் குழந்தை யாருடையது? கோப்புப்படம் இலங்கையிலிருந்து ஒரு வயதுக் குழந்தையுடன் நாடு திரும்பியுள்ள இஸ்ரேல் பெண்ணொருவரிடம் இருந்த குழந்தை யாருடையது பற்றிய கேள்வி எழுந்துள்ளதால், அவர் டெல் அவிவ் விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ளார். 49 வயதான கெலிட் நாகாஷ் வைத்திருக்கும் குழந்தை அவருடைய பௌதீக ரீதியான குழந்தை தானா என்பதை அறிய டிஎன்எ சோதனை நடத்தப்படும். சோதனை எதிராக அமையுமானால், அந்த குழந்தை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்று ஆட்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். இலங்கையை விட்டு வருவதற்கு இன்னொரு குழந்தையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி இருப்பதை விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தபோது நாக…
-
- 5 replies
- 748 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கிய விமானப்படையால் ரஷ்ய ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இரு நாட்டு தலைவர்களும் முதல் தடவையாக சந்திக்கிறார்கள். இராஜதந்திர உறவுகள் மேம்படுமா? * உங்கள் கலாச்சாரம் மற்றும் குடும்ப மானத்துக்கு எதிரான போராட்டம். ஆண்களின் குற்றக்குழுவால் வழி தவறிய பிரிட்டனில் உள்ள ஆசிய முஸ்லிம் பெண் ஏனையவர்களுக்கு உதவ முயல்கிறார். * தன்சானியாவில் சர்க்கரைக்கான தட்டுப்பாடும், விலை மற்றும் வரி அதிகரிப்பும் வணிகங்களின் இலாபத்தை பாதிக்கின்றதாம்.
-
- 0 replies
- 410 views
-
-
நேபாலில் லட்சக்கணக்கில் எருமைகள் மற்றும் விலங்குகள் கோயில் திருவிழாவில் கொல்லப்படுவது பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழத்துகிறது. உலகின் மிகப்பெரிய அளவிலான விலங்குகள் உயிர்த்தியாக திருவிழா நேபாலத்தில் உள்ள காதிமை (Gadhimai) கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது. 2009 ல் நடந்த திருவிழாவில் மட்டும், பக்தர்கள் கொண்டுவந்த நீர் எருமை, ஆடு, பன்றி, கோழி, புறா, மற்றும் எலிகள் என 5 லட்சம் உயிர்கள் இரண்டு நாட்களில் பயங்கரமாக படுகொலை செய்யப்பட்டன. இந்து மத தெய்வமான காதிமைக்கு விலங்குகளை பலி கொடுத்தால் தங்களுக்கு பாதுகாப்பும் செழுமையும் ஏற்படும் என்ற நம்பிக்கையில்தான் பக்தர்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் விலங்குகளை கொண்டுவந்து கொடுக்கின்றனர். அவைகள் மொத்தமாக திருவிழா நாளில் படுக…
-
- 0 replies
- 401 views
-
-
போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது. பிரான்சிஸ் கடந்த மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி தனது புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில், போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட 143 பதிவுகளை செய்துள்ளார். அதில் சில வசனங்கள் ஆங்கில மொழியிலும், மேலும் மொழிபெயர்க்கப்பட்ட பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. 1.2 பில்லியன் கத்தோலிக்கர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் தனது மூன்றாவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்ஸ்டாகிராமில் இணைந்தார் என்பது…
-
- 0 replies
- 246 views
-
-
உத்தரப் பிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று தேசியக் கீதம் பாட தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், தனியார் பள்ளி அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டது. தனியார் பள்ளி நிர்வாகியும் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பஹாராவில் உள்ள எம்.ஏ. கான்வென்ட் என்ற தனியார் பள்ளியில் சுதந்திர தினத்தன்று தேசியக் கீதம் பாட தடை விதித்து அதன் மேலாளர் ஜியா உல் ஹக் என்பவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தப் பள்ளியில் முதல்வராக பணியாற்றியவர் உள்பட 8 ஆசிரியர்கள் தங்களது வேலையை ராஜிநாமா செய்தனர். இதையடுத்து, அவர்கள் அளித்த பேட்டியில், கடந்த 12 ஆண்டுகளாகவே தேசியக் கீதத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் தகவலை வெளியிட்டனர். அந்தப் பள்ளி போதிய அனுமதியின்றி 20…
-
- 0 replies
- 299 views
-
-
மணிக்கு 1200 கி.மீ., வேக போக்குவரத்து: தயாராகிறது துபாய் துபாய்: மணிக்கு 1200 கி.மீ., வேகத்தில் பயணம் செய்யக் கூடிய போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் துபாய் மும்முரமாய் ஈடுபட்டுள்ளது. ஒரு டியூப் வடிவ அமைப்பை ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையே ஏற்படுத்தி அதன் வழியே, 'கேப்ஸ்யூல்' போன்ற சாதனத்தில் அமர்ந்து பயணிகள் செல்லக் கூடிய வகையில் இப்போக்குவரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு இன்னமும் டிசைன் செய்யப்படவில்லை. எனவே, அடுத்த மாதம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த 100 பொறியாளர்களை அழைத்து, அவர்களுக்கிடையே 48 மணி நேரத்திற்கு ஒரு போட்டியை நடத்தி…
-
- 9 replies
- 667 views
-
-
எங்கே விழுந்தது மலேசிய விமானம்? - புதிய தகவல்கள் காணாமல் போன விமானத்தில் பயணித்த உறவினர்களின் துயரம் (கோப்புப்படம்) இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, 239 பயணிகளுடன் இந்தியப் பெருங்கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது காணாமல் போன மலேசிய பயணிகள் விமானம் எம்.எச் 370, நிமிடத்துக்கு 20 ஆயிரம் அடி (6 ஆயிரம் மீட்டர்) வேகத்தில், மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலுக்குள் விழுந்திருப்பதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்.எச். 370 விமானத்தின் தானியங்கி சிக்னல்களை ஆய்வு செய்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கிடைத்த இந்தப் புதிய தகவல்களும், போயிங் விமான உற்பத்தி நிறுவனத்தின் பதிவிறக்கங்களும் …
-
- 0 replies
- 296 views
-
-
ஸ்ரீநகர், காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு அதிகாரி உள்பட 3 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். தேடுதல் வேட்டை காஷ்மீரில் அடிக்கடி ஊடுருவும் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக ராணுவமும், மாநில போலீசாரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் செக்டாரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று ரகசிய தகவல்…
-
- 0 replies
- 178 views
-