Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஒரு பக்கம் விமானங்கள் மாயமாவது, கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுவது என பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஆல்கஹால் அருந்திவிட்டு விமானத்தை ஓட்டும் முன்பே பிடிபட்ட விமானிகளை பற்றி தெரியவந்துள்ள விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் உள்ள விமானிகளிடம், விமானம் ஓட்டச் செல்லும் முன் செய்யப்படும் மருத்துவ பரிசோதனையில், கடந்த மூன்று வருடங்களில் 122 விமானிகள் குடித்துவிட்டு வந்தது தெரியவந்ததாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்திய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மும்பை விமான நிலையத்தில்தான் அதிகபட்சமாக 34 விமானிகள் பிடிபட்டுள்ளனர். அதன்பின் டெல்லியில் 31 பேரும், கொல்கத்தாவில் 18 பேரும…

  2. ராமாயணத்திலே லட்சுமணன் காயமடைந்து உயிருக்கு போரடிய போது, அனுமார் சஞ்சிவினி மூலிகை சஞ்சீவினி மலையில் இருந்து கொண்டுவந்து லட்சுமணனின் உயிரை காப்பாற்றுவார். ராமாயணத்தில் குறிப்பிடப்படும் சஞ்சிவினி மூலிகை தற்போது இருப்பதற்கான உறுதியான ஆதரங்கள் இல்லை. இந்நிலையில் சீனா எல்லையில் உள்ள இயம மலை பகுதியில் சஞ்சிவினி மூலிகையை கண்டுபிடிக்க ரூ 25 கோடியை உத்தரகாண்ட் அரசு ஒதுக்கியுள்ளது. இது குறித்து அம்மாநில மாற்று மருத்துவத்திற்கான அமைச்சர் சுரேந்திர சிங் நேகி கூறுகையில் “ நாம் முதலில் முயற்சி செய்யவேண்டும். உற்ய்தியுடன் முயற்சி செய்தால் கண்டிப்பாக கண்டுபிடிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.வரும் ஆகஸ்ட் மாதம் முதல் விஞ்ஞானிகள் சஞ்சிவினி மூலிகையை தேடும…

    • 1 reply
    • 574 views
  3. கடமைக்குத் திரும்பினார் அங்கெலா மேர்க்கெல் ஜேர்மனியின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், தனது விடுமுறையை இடைநிறுத்திவிட்டு, தனது கடமைக்காக மீளத் திரும்பியுள்ளார். ஜேர்மனியில் அதிகரித்துள்ள தாக்குதல்களைத் தொடர்ந்தே, அவர் இவ்வாறு திரும்பியுள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சம்பந்தமான கூட்டமொன்றைத் தலைமை தாங்கிய மேர்க்கெல், அதன் பின்னதாக விடுமுறையில் காணப்பட்டார். அதுவரை, உள்விவகார அமைச்சரான தோமஸ் டி மெய்ஸியாரேயே, நாட்டின் பொறுப்புகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். பிரான்ஸில் தேவாலயமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் இரண்டு பாதிரியார்கள் கொல்லப்பட்ட நிலையில், அந்த இடத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பொஸ்வா ஒலாண்டோ சென்றிரு…

  4. போகிமான் கோ விளையாடிய கனேடிய இளைஞர்கள்; சர்வதேச சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது போகிமான் கோ (Pokemon Go) எனும் ஸ்மார்ட்போன் கேம் விளையாட்டில் தீவிரமாக கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் சர்வதேச விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடாவைச் சேர்ந்த இவ்விருவரும் போகிமான்களைத் தேடிக் கொண்டு படகொன்றின் மூலம் ஏரியொன்றில் சென்று கொண்டி ருந்தனர். இதன்போது இவர்கள் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்துவிட்டனராம். கனேடிய எல்லையிலுள்ள அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மொன்டனாவிலுள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினர் இவ்விரு இளைஞர்க…

  5. சிரியாவில் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் அலெப்போ நகரை விட்டு மக்கள் வெளியேற சிரியா ராணுவத்துடன் சேர்ந்து மனிதநேய பாதைகளைத் திறக்க உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.அலெப்போ நகரிலிருந்து போராளிகளும் வெளியேற வேண்டும் என்று ரஷியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கி ஷொய்கு தெரிவித்துள்ளார்.போராளிகள் வசமிருந்த அலெப்போ நகரரின் கிழக்கு பகுதிக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் சிரியா ராணுவம் துண்டித்துவிட்டதாக அறிவிப்பு வெளியான அடுத்தநாள் ரஷியாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்பு தொண்டு நிறுவனங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், சிரியாவுக்கான ஐ.நா தூதர் ஸ்டெப்பன் டி மிஸ்டுரா, இதுகுறித்து தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்கிறார். பொதுமக்களுக்…

  6. பீஜிங், சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் அதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் தொடர்ந்த வழக்கில், ஐ.நா. சட்ட திட்டத்தின்படி செயல்படும் சர்வதேச தீர்ப்பாயம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘‘தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை’’ என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை சீனா நிராகரித்து விட்டது. இந்த நிலையில் ரஷியாவுடன் தென் சீனக்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடப்போவதாக சீனா அறிவித்துள்ளது. இந்த பயிற்சிகள் வரும் செப்டம்பர் மாதம் நட…

  7. 3500 அடி மலை உச்சியின் பாறை சரிவில் காரை நிறுத்திய சவூதி இளைஞர் - பொதுவாக சவூதி விமான பைலட்டுகள் உலகிலேயே துணிச்சல் மிக்க விமானிகளாக அறியப்படுகின்றனர். அதுபோல் பல சவூதி இளைஞர்களும் தங்களுடைய வாகனங்களை கொண்டு பல அசட்டுத் துணிச்சல் சாகசங்களில் ஈடுபடக் கூடியவர்' என்பது பரவலாக அறியப்பட்டதே. இப்படி சாகசம், துணிச்சல் என்ற பெயரில் உயிரோடு விளையாடும் இளைஞர்கள் பிடிபட்டால் ஜெயில் தண்டனை அல்லது கட்டாய ராணுவ சேவையில் தள்ளப்படுவார்கள். அதிலும் இன்றைய காலம் நயாப் பைசாவுக்கும் புண்ணியமில்லாத 'சோஷியல் மீடியா லைக்குகளுக்கு' அலையும் காலமிது. அதன் படி சவூதி இளைஞர் ஒருவர் 3500 அடி உயர ஒருவர் ஃபிபா மலையுச்சியின் சரிவான பாறையில் கொண்டு போய் தன்னுடைய காரை நிறுத்த…

  8. இன்றைய நிகழ்ச்சியில் * துருக்கியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறதா? தோல்வியில் முடிந்த இராணுவ சதியைத்தொடர்ந்து நூற்றி முப்பத்தியோரு ஊடகங்களை அதிகாரிகள் மூடியதால் அதிகரிக்கும் அச்சம். * "அமெரிக்க அதிபராக வருவதற்கு அதிகபட்ச தகுதியுடையவர் ஹிலரி கிளிண்டன்"; அங்கீகரித்து, ஆதரவளித்து பாராட்டினார் அதிபர் ஒபாமா. * ரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்; பயங்கரவாத தாக்குதலே தனது மிகப்பெரிய கவலை என்கிறார் பாதுகாப்புப்படையின் தலைவர்.

  9. ஆணாதிக்க சிந்தனை கொண்டவையா அமெரிக்க ஊடகங்கள்? அமெரிக்க வரலாற்றில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட நியமனம் செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை அண்மையில் ஹிலரி கிளிண்டன் பெற்றார். ஆனால், இது குறித்த செய்திகளை தாங்கி வெளிவந்த அமெரிக்காவின் பல்வேறு நாளிதழ்களிலும், முதல் பக்கத்தில் ஹிலரிக்கு பதிலாக அவரது கணவர் கிளிண்டன் இடம் பெற்றுள்ளது ஏன்? செய்தித்தாள்களின் முன்பக்கத்தில் பில்கிளிண்டனுக்கே முக்கியத்துவம் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகும் பல நாளிதழ்களும், ஹிலரி கிளிண்டனின் புகைப்படங்களுக்குப் பதிலாக, அவரது கணவரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான பில் கிளிண்டன் அல்லது அமெரிக்க அதிபர் பதவிக…

  10. குடியேறிகளுக்கு கட்டுப்பாடு வருமா?: ஜெர்மன் சான்சலர் பதில் ஜெர்மனியில் சமீபத்தில் தஞ்சம் கோரி வந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், குடியேறிகளை வரவேற்கும் தன்னுடைய கொள்கையை கைவிட முடியாது என ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மனியில் குடியேறிகளாக வந்த இருவர், இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் அமைப்பின் பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தியதன் மூலம், அவர்களுக்கு ஆதரவளித்த நாட்டை கேலி செய்துள்ளனர் என்று மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மனியில் பாதுகாப்பை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளார். ஆனால், ஜெர்மனியின் வெளிப்படையான கலச்சாரத்தை தீவிரவாதிகள் குறைத்து மதிப்பீடு செய்வதை அனுமதிக்க முடியாது என மெர்கல் கூறியுள…

  11. தீவிரவாதிகளை ஒடுக்க பிரான்ஸில் புதிய பாதுகாப்புப் படை தீவிரவாத தாக்குதல்களிலிருந்து பொதுமக்களை காப்பாற்ற தேசிய பாதுகாப்பு படை ஒன்று உருவாக்கப்படும் என்பதை பிரஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே தங்களிடம் உள்ள படையினரை கொண்டு இந்த புதிய படை ஆரம்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைகள் செப்டம்பரில் தொடங்க உள்ளது. போலிஸ் உதவிப் படைவீரருக்கு அதிக அளவிலான தன்னார்வலர்கள் சேரும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து அதிபரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பிரஞ்சு புரட்சி தொடங்கிய போது, கடைசி பிரஞ்சு தேசிய பாதுகாப்பு படை குழு அமைக்கப்பட்டது. 1872ல் அது கலைக்கப்பட்டது குறிப்பிடத்…

  12. குடியேறிகளின் ஆபத்தான கடல் பயணத்தை தடுக்க இத்தாலி புதிய முயற்சி வடக்கு மற்றும் மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து வரும் குடியேறிகள் ஐரோப்பாவிற்கு செல்ல மத்திய தரைக்கடலில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதை தடுக்க, இத்தாலி அரசு பன்முக ஊடக பிரசாரத்தை தொடங்கியுள்ளது. குடியேறிகள், மக்களை சட்டவிரோதமாக பயணம் மேற்கொள்ள வைக்கும் நபர்கள் பற்றியும் ஆபத்தான முறையில் ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு கடந்து செல்வது குறித்துமான ஆபத்தான தங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள இணையம், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வளைதலங்களை பயன்படுத்தி வருகிறது. 1.5 மில்லியன் டாலர் மதிப்பிலான இத்திட்டம் குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்…

  13. துருக்கி : ஊடகங்கள் மீதான பிடி இறுகுகிறது இருவாரங்களுக்கு முன்னதாக தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து எதிரிகளை ஒடுக்கி வருகின்ற துருக்கிய அரசாங்கம், நூற்றி முப்பதுக்கும் அதிகமான தொடர்பு ஊடக நிறுவனங்களை மூடியுள்ளது. தோல்வியில் முடிந்த சதியின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட, தடைசெய்யப்பட்ட மதகுருவான பெத்துல்லா குலனுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக பல பிரசுர நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மீது தொண்ணூறு, பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை இராணுவத்தை மீள்கட்டமைப்பு செய்வதற்கான கூட்டம் ஒன்றுக்கு சற்று முன்னதாக இரு உயர…

  14. இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் ஐ.எஸ். ஆதரவு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.துபாய் - கோழிக்கோடு இடையே இண்டிகோ விமானம் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இண்டிகோ விமானம் இன்று துபாயில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென எழுந்து நின்று ஐ.எஸ். ஆதரவு கோஷமிட்டதால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கோழிக்கோடு சென்ற விமானம் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. உடனே அதிகாரிகள் வந்து சம்மந்தப்பட்ட நபரை கைது செய்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=162435&category=…

    • 1 reply
    • 288 views
  15. ஜேர்மனி நாட்டில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் இருந்து தப்பிய நோயாளி ஒருவர் வணிக வளாகம் ஒன்றிற்குள் புகுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடமேற்கு ஜேர்மனியில் உள்ள Bremen நகரில் மனநல மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.பொலிசாரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக 19 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த மருத்துவமனையில் கடந்த ஞாயிறு அன்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று காலை நேரத்தில் மருத்துவமனையில் அந்த மனநோயாளி தப்பிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மனநோயாளி தப்பியபோது அவரை பிடிப்பதற்காக மருத்துவர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அப்போது, ‘என்னை நெருங்கினால் கொன்றுவிடுவேன்’ என மனநோயாளி மருத்துவரை கடுமையாக எதிர்த்துள்ளார்.சி…

  16. சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது மகனின் கண் முன்னால் ஆழமான பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது மகன் மற்றும் தந்தையுடன் சுவிஸில் உள்ள Plateau du Couloir என்ற பகுதியில் நேற்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளார். அதிகாலையில் சென்ற அவர்கள் மூவரும் உற்சாகமாக விளையாடி விட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு கீழே இறங்கியுள்ளனர்.சுமார் 3,500 அடி உயரத்தில் மூவரும் வந்துக்கொண்டு இருந்தபோது, 52 வயதான நபரின் பனிச்சறுக்கு சாதனத்தில் இருந்து ஒரு கம்பி கீழே விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அந்த கம்பியை எடுப்பதற்காக திரும்ப அந்த இடத்திற்க…

  17. ஆயுதங்களை கைவிட்டால் பொது மன்னிப்பு: சிரிய அதிபர் அறிவிப்பு பஷார் ஆசாத். ஆயுதங்களை கைவிட்டால் பொது மன்னிப்பு அளிக்கப்படும் என போராளிகளுக்கு சிரிய அதிபர் பஷார் ஆசாத் அறிவித்துள்ளார். அரசாணை மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார். அந்த அரசாணையில், பிணைக்கைதிகளாக பிடித்துவைத்திருப்பவர்களை விடுவித்து ஒரு மாத காலத்துக்குள் அரசிடம் சரணடைபவர்களுக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான அலப்போவைச் சுற்றிவளைத்திருந்த போராளிகளை அரசு…

  18. அமெரிக்காவில் ஆண்டு தோறும் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாகிறது.செல்வசெழிப்புமிக்க அமெரிக்காவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் அதை அமெரிக்கர்கள் சரிவர பயன்படுத்தாமல் வீணடிக்கின்றனர். இந்த தகவல் சமீபத்தில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட சர்வே மூலம் தெரியவந்துள்ளது.இங்கு ஆண்டுதோறும் 5,886 கோடி கிலோ எடையுள்ள உணவு பொருட்களை இங்கு வாழும் மக்கள் வீணடிக்கின்றனர். அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.11 லட்சம் கோடி (160 மில்லியன் டாலர்) என கணக்கிடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் வீணாவது குறித்து அமெரிக்க அரசு கவலைப்படுகிறது. எனவே அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு மீறி உணவு பொருட்கள் தயாரிப்பதால் சாப்பிட முடியாமல் காலாவதி ஆ…

  19. தென்கொரிய தூதரகத்தில் வட கொரியா நாட்டை சேர்ந்தவர் தஞ்சம் கோரியதாக பரபரப்பு ஹாங்காங்கில் உள்ள தென்கொரிய தூதரகத்தில், வட கொரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தஞ்சம் கோரியதாக பல கிழக்கு ஆசிய செய்தித்தாள்கள், செய்தி வெளியிட்டுள்ளன. கோப்புப்படம் தஞ்சம் கோரிய நபர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக ஹாங்காங் வந்துள்ள 18 வயது இளைஞர் என்று பெரும்பாலான தகவல்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து உறுதி செய்ய தூதரக அதிகாரிகளும், போலீசாரும் மறுத்து விட்டனர். ஆனால், ஆயுதம் தாங்கிய சாதாரண உடையில் உள்ள அதிகாரிகள் தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹாங்காங்கின் ராஜீய விவகாரங்கள் குறித்த அதிகாரங்களை வைத்துள்ள சீன அரசுக்கு இது குறித்து…

  20. ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை மருந்து பாக்கெட்டுகள் பறிமுதல்:ரியோவில் பரபரப்பு! பொதுவாகவே தென்அமெரிக்க நாடுகளில் போதை மருந்துக் கடத்தலும் அதனைப் பயன்படுத்துபவர்களும் அதிகம். கோகையின் என்ற போதை பொருள் இந்தக் கண்டத்தில் வெகு பிரபலம். பெரு, பொலிவியா, கொலம்பியா நாடுகளில் கோகையின் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படுகிறது. போதை மருந்துக் கடத்தல் கும்பல்களுக்கிடையே அடிக்கடி மோதல்களும் நிகழ்வது உண்டு. தென் அமெரிக்க மக்களிடையே கோகையின் எவ்வளவு பிரபலம் என்பதற்கு கால்பந்தை வைத்து இரு சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம். கடந்த 1994ம் ஆண்டு அமெரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடந்தது. மரடோனா தனது க…

  21. பிரிட்டனில் குடியேற காலக்கெடு நிர்ணயம்; பிரிட்டன் நாடாளுமன்ற குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள், தற்போதைய விதிகளில் பிரட்டனுக்குள் குடியேற வருவதற்கு காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என பிரிட்டன் உள்ள நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. குறிப்பிட்ட அந்த காலத்திற்குள் பிரட்டனில் குடியேறிய ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் நிரந்தரமாக அங்கு வாழும் உரிமையை பெற வேண்டும் என்று அந்த குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. அவர்களின் உரிமை குறித்து அறிவிக்கப்பட வேண்டும் எனவும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தையில் அவர்கள் ஒரு பேச்சுப் பொருளாக இருக்கக்கூடாது என்றும் அக்குழு தெரிவித்துள்ளது. பிரட்டன் அதிகாரப்பூர்வமாக ஐரோப்பாவி…

  22. உலக யுத்தம் குறித்து பாப்பாண்டவர் எச்சரிக்கை உலக யுத்தம் குறித்து புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஐரோப்பாவை இலக்கு வைத்து ஜிகாதிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும் தாம் மதங்களுக்கு இடையில் யுத்தம் நடைபெறுவதாக குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவைகள், பணம் மற்றும் வளங்களுக்காக இவ்வாறு மோதல் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். உலகம் பாதுகாப்பாற்ற நிலையை உணர்வதாகவும், உண்மையில் யுத்தம் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகம் சமாதானத்தை இழந்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த உண…

  23. ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் உள்ள கொயின்டிரின் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிஸாருக்கு காலை 9.30 மணியளவில் தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை தகவலொன்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு விரைந்து சென்று பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர், மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, விமான நிலையத்தில் ஏதேனும் வெடிகுண்டு உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால், வெடிகுண்டுகள் ஏதேனும் தென்படவில்லை, இந்நிலையில் தங்களுக்கு வந்த அ…

  24. துருக்கி ஜனநாயகத்தின் பலவீனம்! எர்டோகன் டான் - பாகிஸ்தான் நாளிதழில் வெளியான தலையங்கம் கடந்த வாரத்தில் துருக்கி நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப் பதற்கு அந்த நாட்டின் ராணு வத்தின் ஒரு பகுதியினர் கலகம் செய்தனர். அது அந்த நாட்டின் ஜனநாயகம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. துருக்கி அரசாங்கம், மக்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தினாலோ, இந்தக் கலகத்தைக் காரணமாகக் கொண்டு ஆத்திரத்துடன் செயல்பட்டாலோ இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் விளைவுகள் நீண்டகாலத்துக்கு நீடிக்கும். நாட்டில் இதுவரையிலும் 112 அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தற்காலிகப் பணிநீக்கம் அல்லது கைது நடவ…

  25. இன்றைய நிகழ்ச்சியில் * பிரான்ஸ் தேவாலயத்தில் மதகுரு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் மதத்தலைவர்கள் அதிபர் ஹொல்லாந்தோடு சந்திப்பு; வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரிக்கை. * அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக ஹிலரி கிளிண்டனை அறிவித்தது ஜனநாயககட்சியின் மாநாடு; கசப்புகள் நிறைந்த போட்டியின் இறுதியில் ஓங்கி ஒலித்தது ஒற்றுமைக்குரல். * மீர்கட் தொலைநோக்கியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.