உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
27052 topics in this forum
-
ஜேர்மனி நாட்டில் உள்ள மனநல மருத்துவமனை ஒன்றில் இருந்து தப்பிய நோயாளி ஒருவர் வணிக வளாகம் ஒன்றிற்குள் புகுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடமேற்கு ஜேர்மனியில் உள்ள Bremen நகரில் மனநல மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது.பொலிசாரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக 19 வயதான அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த மருத்துவமனையில் கடந்த ஞாயிறு அன்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், நேற்று காலை நேரத்தில் மருத்துவமனையில் அந்த மனநோயாளி தப்பிவிட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மனநோயாளி தப்பியபோது அவரை பிடிப்பதற்காக மருத்துவர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார். அப்போது, ‘என்னை நெருங்கினால் கொன்றுவிடுவேன்’ என மனநோயாளி மருத்துவரை கடுமையாக எதிர்த்துள்ளார்.சி…
-
- 0 replies
- 265 views
-
-
சுவிட்சர்லாந்து நாட்டில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது மகனின் கண் முன்னால் ஆழமான பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 52 வயதான நபர் ஒருவர் தனது மகன் மற்றும் தந்தையுடன் சுவிஸில் உள்ள Plateau du Couloir என்ற பகுதியில் நேற்று பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளார். அதிகாலையில் சென்ற அவர்கள் மூவரும் உற்சாகமாக விளையாடி விட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு கீழே இறங்கியுள்ளனர்.சுமார் 3,500 அடி உயரத்தில் மூவரும் வந்துக்கொண்டு இருந்தபோது, 52 வயதான நபரின் பனிச்சறுக்கு சாதனத்தில் இருந்து ஒரு கம்பி கீழே விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அந்த கம்பியை எடுப்பதற்காக திரும்ப அந்த இடத்திற்க…
-
- 0 replies
- 307 views
-
-
ஆயுதங்களை கைவிட்டால் பொது மன்னிப்பு: சிரிய அதிபர் அறிவிப்பு பஷார் ஆசாத். ஆயுதங்களை கைவிட்டால் பொது மன்னிப்பு அளிக்கப்படும் என போராளிகளுக்கு சிரிய அதிபர் பஷார் ஆசாத் அறிவித்துள்ளார். அரசாணை மூலம் அவர் இதனை அறிவித்துள்ளார். அந்த அரசாணையில், பிணைக்கைதிகளாக பிடித்துவைத்திருப்பவர்களை விடுவித்து ஒரு மாத காலத்துக்குள் அரசிடம் சரணடைபவர்களுக்கு எவ்வித தண்டனையும் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரமான அலப்போவைச் சுற்றிவளைத்திருந்த போராளிகளை அரசு…
-
- 0 replies
- 146 views
-
-
அமெரிக்காவில் ஆண்டு தோறும் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான உணவுப் பொருட்கள் வீணாகிறது.செல்வசெழிப்புமிக்க அமெரிக்காவில் உணவுக்கு பஞ்சமில்லை. ஆனால் அதை அமெரிக்கர்கள் சரிவர பயன்படுத்தாமல் வீணடிக்கின்றனர். இந்த தகவல் சமீபத்தில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட சர்வே மூலம் தெரியவந்துள்ளது.இங்கு ஆண்டுதோறும் 5,886 கோடி கிலோ எடையுள்ள உணவு பொருட்களை இங்கு வாழும் மக்கள் வீணடிக்கின்றனர். அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் ரூ.11 லட்சம் கோடி (160 மில்லியன் டாலர்) என கணக்கிடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் வீணாவது குறித்து அமெரிக்க அரசு கவலைப்படுகிறது. எனவே அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அளவுக்கு மீறி உணவு பொருட்கள் தயாரிப்பதால் சாப்பிட முடியாமல் காலாவதி ஆ…
-
- 0 replies
- 282 views
-
-
தென்கொரிய தூதரகத்தில் வட கொரியா நாட்டை சேர்ந்தவர் தஞ்சம் கோரியதாக பரபரப்பு ஹாங்காங்கில் உள்ள தென்கொரிய தூதரகத்தில், வட கொரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தஞ்சம் கோரியதாக பல கிழக்கு ஆசிய செய்தித்தாள்கள், செய்தி வெளியிட்டுள்ளன. கோப்புப்படம் தஞ்சம் கோரிய நபர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்காக ஹாங்காங் வந்துள்ள 18 வயது இளைஞர் என்று பெரும்பாலான தகவல்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து உறுதி செய்ய தூதரக அதிகாரிகளும், போலீசாரும் மறுத்து விட்டனர். ஆனால், ஆயுதம் தாங்கிய சாதாரண உடையில் உள்ள அதிகாரிகள் தூதரகத்துக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹாங்காங்கின் ராஜீய விவகாரங்கள் குறித்த அதிகாரங்களை வைத்துள்ள சீன அரசுக்கு இது குறித்து…
-
- 0 replies
- 429 views
-
-
ஒலிம்பிக் சின்னம் அச்சிடப்பட்ட போதை மருந்து பாக்கெட்டுகள் பறிமுதல்:ரியோவில் பரபரப்பு! பொதுவாகவே தென்அமெரிக்க நாடுகளில் போதை மருந்துக் கடத்தலும் அதனைப் பயன்படுத்துபவர்களும் அதிகம். கோகையின் என்ற போதை பொருள் இந்தக் கண்டத்தில் வெகு பிரபலம். பெரு, பொலிவியா, கொலம்பியா நாடுகளில் கோகையின் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படுகிறது. போதை மருந்துக் கடத்தல் கும்பல்களுக்கிடையே அடிக்கடி மோதல்களும் நிகழ்வது உண்டு. தென் அமெரிக்க மக்களிடையே கோகையின் எவ்வளவு பிரபலம் என்பதற்கு கால்பந்தை வைத்து இரு சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம். கடந்த 1994ம் ஆண்டு அமெரிக்காவில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி நடந்தது. மரடோனா தனது க…
-
- 0 replies
- 222 views
-
-
பிரிட்டனில் குடியேற காலக்கெடு நிர்ணயம்; பிரிட்டன் நாடாளுமன்ற குழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள், தற்போதைய விதிகளில் பிரட்டனுக்குள் குடியேற வருவதற்கு காலக்கெடு ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் என பிரிட்டன் உள்ள நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. குறிப்பிட்ட அந்த காலத்திற்குள் பிரட்டனில் குடியேறிய ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் நிரந்தரமாக அங்கு வாழும் உரிமையை பெற வேண்டும் என்று அந்த குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது. அவர்களின் உரிமை குறித்து அறிவிக்கப்பட வேண்டும் எனவும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தையில் அவர்கள் ஒரு பேச்சுப் பொருளாக இருக்கக்கூடாது என்றும் அக்குழு தெரிவித்துள்ளது. பிரட்டன் அதிகாரப்பூர்வமாக ஐரோப்பாவி…
-
- 0 replies
- 250 views
-
-
உலக யுத்தம் குறித்து பாப்பாண்டவர் எச்சரிக்கை உலக யுத்தம் குறித்து புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் ஐரோப்பாவை இலக்கு வைத்து ஜிகாதிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும் தாம் மதங்களுக்கு இடையில் யுத்தம் நடைபெறுவதாக குறிப்பிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவைகள், பணம் மற்றும் வளங்களுக்காக இவ்வாறு மோதல் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். உலகம் பாதுகாப்பாற்ற நிலையை உணர்வதாகவும், உண்மையில் யுத்தம் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகம் சமாதானத்தை இழந்து யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த உண…
-
- 0 replies
- 344 views
-
-
அழகுராணி குமாரி மகேந்திரனை கழுத்தில் கத்தியால் குத்திய தாயார் - குற்றம் புரிந்துள்ளார் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு பிரிட்டனில் வசிக்கும் அழகு ராணியான குமாரி மகேந்திரனை (26) அவரின் தாயார் சித்ராணி மகேந்திரன் (74) கத்தியால் குத்தியமை தொடர்பான வழக்கு பிரிட்டனின் வேல்ஸிலுள்ள கர்டிவ் கிரவுண் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது. வேல்ஸ் பிராந்தியத்தின் உள்ளூர் அழகுராணி போட்டிகளில் பங்குபற்றிய பின்னர், 2013 மிஸ் வேல்ஸ் அழகுராணி போட்டியிலும் பங்குபற்றியவர் குமாரி மகேந்திரன். குமாரி மகேந்திரன் உறங்கிக் கொண்டிருந்தபோது அவரின் தாயார் கழுத்தில் கத்தியால் குத்தியதாக நீத…
-
- 4 replies
- 617 views
- 1 follower
-
-
ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை ஜெனிவா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனிவாவில் உள்ள கொயின்டிரின் விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது என ஜெனிவா பொலிஸாருக்கு காலை 9.30 மணியளவில் தொலைபேசி வாயிலாக எச்சரிக்கை தகவலொன்று வந்துள்ளது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு விரைந்து சென்று பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர், மேலும் பயணிகளையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு, விமான நிலையத்தில் ஏதேனும் வெடிகுண்டு உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர்.ஆனால், வெடிகுண்டுகள் ஏதேனும் தென்படவில்லை, இந்நிலையில் தங்களுக்கு வந்த அ…
-
- 0 replies
- 260 views
-
-
துருக்கி ஜனநாயகத்தின் பலவீனம்! எர்டோகன் டான் - பாகிஸ்தான் நாளிதழில் வெளியான தலையங்கம் கடந்த வாரத்தில் துருக்கி நாட்டில் ஆட்சியைக் கவிழ்ப் பதற்கு அந்த நாட்டின் ராணு வத்தின் ஒரு பகுதியினர் கலகம் செய்தனர். அது அந்த நாட்டின் ஜனநாயகம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. துருக்கி அரசாங்கம், மக்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தினாலோ, இந்தக் கலகத்தைக் காரணமாகக் கொண்டு ஆத்திரத்துடன் செயல்பட்டாலோ இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் விளைவுகள் நீண்டகாலத்துக்கு நீடிக்கும். நாட்டில் இதுவரையிலும் 112 அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான படைவீரர்கள் தற்காலிகப் பணிநீக்கம் அல்லது கைது நடவ…
-
- 0 replies
- 227 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பிரான்ஸ் தேவாலயத்தில் மதகுரு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் மதத்தலைவர்கள் அதிபர் ஹொல்லாந்தோடு சந்திப்பு; வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரிக்கை. * அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக ஹிலரி கிளிண்டனை அறிவித்தது ஜனநாயககட்சியின் மாநாடு; கசப்புகள் நிறைந்த போட்டியின் இறுதியில் ஓங்கி ஒலித்தது ஒற்றுமைக்குரல். * மீர்கட் தொலைநோக்கியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா
-
- 0 replies
- 286 views
-
-
சிரியா இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 44 ஆக உயர்வு: தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்றது சிரியாவில் இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளது. வடக்கு சிரியாவில் உள்ள காமிஷ்லி நகரில் குர்திஷ் போராளிகளின் தலைமை முகாம் மீது லொரியில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை ஏற்றி வந்த தற்கொலைப்படை வெடிக்கச் செய்தான். அதன்பின்னர் சில நிமிடங்களில் மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதியும் வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதல்களில் 31 பேர் பலியானதாகவும், 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டிருப்ப…
-
- 0 replies
- 221 views
-
-
சென்னை சென்னை விமான நிலை யம் உள்நாட்டு முனை யத் தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு மதுரைக்கு தனியார் பயணிகள் விமானம் புறப் பட்டு சென்றது. இதில் 28 பயணிகளும், 5 விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டு தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விமானி சென்னையில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அந்த விமானம் மீண்டும் சென்னையிலேயே தரையிறங்க நடவடிக்கை எடுக் கப்பட்டது. விமானி சாதுர்யமாக செயல்பட்டு காலை 10.30 மணியள வில் விமானத்தை பத்திர மாக சென்னை விமான நிலை யத்தில் தரை இறக்கினார். இதன் காரணமாக விமா னத்தில் இருந்த 33 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். …
-
- 0 replies
- 413 views
-
-
இந்தியாவின் பீகார் மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு திருப்பலியில் பயன்படுத்தப்படும் திராட்சை மதுவை தயாரிக்க வழங்கப்பட்ட உரிமத்தினை ரத்து செய்துள்ளது.கிறிஸ்துவ மத சேவையான திருப்பலி அல்லது நற்கருணையின் போது இந்த மது பயன்படுத்தப்படும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பீகாரில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு விதிக்கப்பட்ட தடையின் நீட்சியாக கிறிஸ்துவ தேவாலயங்களில் புனித மதுவை தயாரிக்கும் உரிமம் ரத்து செய்துள்ள நடவடிக்கை வந்துள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் அளிக்கப்படும் திருப்பலி ஒயினை (மதுவை) தயாரிக்கும் மது தயாரிப்பு கூடத்தின் பொறுப்பாளராக உள்ள ஒரு மத குரு இது குறித்து …
-
- 0 replies
- 266 views
-
-
துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு அமெரிக்க மற்றும் ஜேர்மன் அரசாங்கங்களின் எதிர்வினைகளை மதிப்பிட்டால், அவர்கள் கிளர்ச்சியாளர்களை அரசியல்ரீதியில் ஆதரித்தார்கள் என்பதிலும் அவர்களது வெற்றியை எதிர்பார்த்திருந்தார்கள் என்பதிலும் அங்கே எந்த சந்தேகமும் இருக்க முடியாது. பேர்லினைப் போலவே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு சுருக்கமாக கண்டனம் தெரிவிப்பதற்கு முன்னதாக வாஷிங்டனும் நிறைய நேரம் எடுத்துக் கொண்டதுடன், கிளர்ச்சியாளர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள் என்பது தெளிவானபோது மட்டுந்தான் அவர்கள் ஐயத்திற்கிடமற்ற விதத்தில் பேசினார்கள். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்த அன்றிரவு முதலில் பேசியவர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி ஆவார், இவர் மாஸ்கோ இல் இரு…
-
- 0 replies
- 386 views
-
-
தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் வெளியேற்றவேண்டும்- ஜெர்மன் மாகாண அமைச்சர் ஜெர்மனிக்கு வந்து தஞ்சம் கோரி, அக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பித்த குடியேறிகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படவேண்டும் என்று ஜெர்மனியின் மாகாணமான, பவேரியாவின் உள்துறை அமைச்சர், ஜோச்சிம் ஹெர்மான் கூறியிருக்கிறார். தஞ்சம் கோரிகளின் சொந்த நாடுகளில் போர் நடந்து கொண்டிருந்தால் கூட , அவர்கள் வெளியேற்றப்படவேண்டும் என்று அவர் கூறினார். தனது பவேரியா மாகாணத்தில் நடந்த பல இஸ்லாமியவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பேசிய ஹெர்மன், தேவைப்பட்டால், இதைச் செய்ய ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களை மாற்ற வேண்டும் என்றார். இந்த சட்டங்கள் ஒரு சில அகதிகளை நாட்டிலிருந்து வெள…
-
- 0 replies
- 306 views
-
-
ஹிலரி , ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் வேட்பாளரானார் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளரானார் ஹிலரி இதன் மூலம், அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளராக எந்த ஒரு பிரதான கட்சியின் வேட்பாளாராகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் பெண்மணியாகிறார் ஹிலரி. ஒவ்வொரு மாநிலமாக பதிவான வாக்குகளை சரிபார்த்தபின், பிலடெல்ஃபியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஹிலரி கிளிண்டனை, தங்கள் கட்சியின் வேட்பாளராக அதிகாரபூர்வமாக நியமித்தனர். …
-
- 0 replies
- 359 views
-
-
வடக்கு பிரான்ஸில் தேவாலயத்தில் ஆட்களை பணயம் வைத்தவர்கள் கொல்லப்பட்டனர் வடக்கு பிரான்ஸில் ரூவானுக்கு அருகே தேவாலயம் ஒன்றில் ஆட்களை பிடித்து பணயமாக வைத்திருந்த இரு ஆயுதபாணிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடக்கு பிரான்ஸில் தேவாலயத்தில் ஆட்களை பணயம் வைத்தவர்கள் கொல்லப்பட்டனர் 4 முதல் 6 பேர் வரை இவர்களால் பிடித்து அங்கிருந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ஒரு மதகுரு, இரு சகோதரிகள் மற்றும் தேவாலயத்துக்கு வந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக உள்ளூர் ஊடகம் ஒன்று கூறியுள்ளது. அங்கு பல துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதாக பிரான்ஸ் 3 தொலைக்காட்சி கூறியுள்ளது. போலிஸாரும், அவசர உதவி சேவைகளும் அங்கு வந்து சேர்ந்துள்ளனர். http…
-
- 5 replies
- 741 views
-
-
தனது தாயாரின் மரணம் தன்னில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பல ஆண்டுகள் வெளியே பேசாமல் இருந்ததற்காக பிரித்தானியா எலிசபெத் இராணியாரின் பேரனான இளவரசர் ஹரி வருத்தம் தெரிவித்துள்ளார்.கார் விபத்தில் 1997 ஆம் ஆண்டு அவரது தாயான இளவரசி டயானா இறந்த போது ஹரிக்கு பன்னிரண்டு வயது.மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உதவி கோருவதை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு தொண்டு நிறுவனத்தை இளவரசர் ஹரி ஆரம்பித்து வைத்தார். இதில் விளையாட்டு நட்சத்திரங்கள் உட்பட பல நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய 31 வயதான ஹரி, இந்த நிகழ்வு, யார் வேண்டுமானாலும் மனநல பிரச்சினையால் பாதிக்கப்படலாம் என்பதை உணர்த்த ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.தனிப்பட்ட பிரச்சினைகளை மனந்திறந்து பேசுவதன் அவசியம…
-
- 1 reply
- 443 views
-
-
ஹிலரிக்கு ஆதரவாக மிஷேல் ஒபாமா உணர்ச்சிகர உரை ; ட்ரம்ப் மீது கடும் சாடல் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனை அறிவிப்பதில் அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஒற்றுமையுடன் இருப்பதற்கு, உணர்ச்சிமிக்க உரை ஒன்றை அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷேல் ஒபாமா ஆற்றியுள்ளார். செனட் அவை உறுப்பினர் பெர்னி சான்டர்ஸின் ஆதரவாளர்களால் அமளியோடு நடத்தப்பட்டப் போராட்டங்களுக்கு பின்னர் பேசிய மிஷேல், ஹிலாரி கிளிண்டன் அழுத்தங்களால் ஒருபோதும் சோர்ந்து போகவில்லை என்று கூறி அமெரிக்க வெளியுறவு செயலாராக அவர் செய்த பணியை புகழ்ந்து பேசினார். அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட 140 எழுத்துச் சொற்களைப் பயன்படுத்தி மட்டுமே, பிரச்சனைகளை எளிமைப்படுத்திவிட முடியாது என்று ஹிலாரி கிளிண்டன…
-
- 2 replies
- 400 views
-
-
உலகிலேயே உயரமானவர்கள் யார்? டச்சு நாட்டு ஆண்களும், லாத்வியா நாட்டு பெண்களும் தான் உலகிலேயே உயரமானவர்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம், க்வாட்டமாலா நாட்டு பெண்களும், கிழக்கு தைமோர் நாட்டு ஆண்களும் தான் உலகிலேயே குள்ளமானவர்கள் என்று ஆய்வில் தெரிவந்துள்ளது. மனிதர்களின் உயரங்களில், மரபியல் தாக்கங்களால் சில மாற்றங்கள் ஏற்படலாம் எனினும் நல்ல சத்தூட்டம், சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது என லண்டன் இம்பிரியல் கல்லூரியின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கத்திய சமூகங்களில் மனிதர்கள் உயரமாக வளர்வது சராசரியாக உள்ளது. மேலும் ஆப்ரிக்காவின் சில இடங்களில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அவர்கள் கண்ட வ…
-
- 1 reply
- 361 views
-
-
Jul 26 2016, 6:38 pm ET Hillary Clinton Becomes First Female Nominee of Major U.S. Political Party PHILADELPHIA — Hillary Clinton is now officially the Democratic presidential nominee, making history as the first woman ever to secure the backing of a major American political party. Clinton was formally nominated on the second evening of the Democratic National Convention on Tuesday, more than nine years after launching her first presidential bid. It was largely an evening of unity after an opening night marked by resistance from die-hard supporters of Democratic runner-up, Vermont Sen. Bernie Sanders. In a cul…
-
- 0 replies
- 252 views
-
-
வியேண்டியன், வடகொரியா, உலக நாடுகளின் ஏகோபித்த எதிர்ப்பையும், ஐ.நா.வின் பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டில் இருந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. 3 முறை தொடர்ந்து அணுகுண்டு சோதனைகளை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிபயங்கர ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி உலக அரங்கை அந்த நாடு அதிர வைத்தது. வடகொரியாவின் அத்துமீறிய செயல்களால் கடும் அதிர்ச்சி அடைந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் அந்த நாட்டுக்கு எதிராக மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. ஆனாலும் வடகொரியா, தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் தாவி சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் வாய்ந்த ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அடுத்தடுத்த அணு ஆ…
-
- 1 reply
- 390 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பிரான்ஸ் தேவாயலத்துக்குள் மதகுரு ஒருவர் படுகொலை; நார்மாண்டியில் தேவாலய பூஜைக்குள் புகுந்த இரண்டு ஆயுததாரிகள் பணயக்கைதிகளை பிடித்து வைத்த விபரீதம். * ஜப்பான் மாற்றுத்திறனாளிகளின் மையத்திலிருந்த பத்தொன்பது பேர் கத்தியால் குத்திக்கொலை; மையத்தின் முன்னாள் பணியாளர் கைது. * சூரிய ஒளி மின்சார விமானத்தின் முதலாவது உலக சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்தது; பதினாறு மாதங்களின் முடிவில், பயணத்தைத் துவக்கிய அபுதாபியிலேயே பயணத்தை முடித்து சாதனை.
-
- 0 replies
- 401 views
-