Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமைச்சரவையை உருவாக்குவதில் தெரீசா மே அதிரடி பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை நிறைவு செய்துள்ளார். ஆரம்பமே சர்ச்சை: போரிஸ் ஜான்சன் இந்த அமைச்சரவையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற தரப்பு மற்றும் நீடித்திருக்க வேண்டும் என்று கூறிய இரண்டு தரப்பினருக்கும் இடமளித்துள்ளார். விலக வேண்டும் என்ற தரப்பிலிருந்து புதிய வெளியுறவு அமைச்சராக போரிஸ் ஜான்சன் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பதவிக்குத் தன்னுடன் போட்டியிட்டு பின்னர் விலகிக் கொண்ட ஆன்ரியா லீட்சம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறார். …

  2. அமெரிக்காவில் போலிஸ் மற்றும் அவர்கள் சேவை செய்யும் சமூகங்கள் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டிய பணியில் அமெரிக்கா அதற்கு அருகில் கூட இல்லை என அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.வாஷிங்டனில் பேசிய அதிபர் ஒபாமா, கருப்பின மற்றும் ஹிஸ்பானிக் சமூகங்களிடம் நம்பிக்கையை வளர்க்க நிறைய விஷயங்கள் செய்யப்பட வேண்டும் என்றும், போலிஸ் வன்முறைகள் முறையாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.மிக சமீபத்தில் லூயிசியானா மற்றும் மின்னெசோட்டா மாகாணங்களில், பெரிதும் அறியப்பட்ட சம்பவங்களில் கறுப்பின ஆண்கள் அடுத்தடுத்து போலிஸால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து, அதிபர் ஒபாமா அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை சந்தித்து வருகிறார். …

  3. பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே. தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துவார். அவருடைய தலை வழுக்கையாக இருக்கும். உச்சந்தலையில் இருந்த முடிகள் ஒட்டு மொத்தமாக கொட்டி விட்டன. தலையின் இரு பக்கங்களில் மட்டும் முடி உள்ளது.ஆனால், இந்த முடியை அலங்காரம் செய்வதற்கு அவர் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார். இதற்காக மட்டும் மாதம் ரூ. 7 லட்சம் செலவு செய்வதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவலை பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் கனார்டு என்ஜய்ன் என்ற வார பத்திரிகை வெளியிட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டில் பெரும்பாலான தலைவர்கள் ஆடம்பரம் மற்றும் அலங்கார பிரியர்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=161486&a…

  4. மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களின் செயல்பாடுகள் குறித்து மத்திய உளவுத்துறை தயாரித்துள்ள தரவரிசை பட்டியலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதல் இடத்தில் உள்ளார். இந்த ரகசிய அறிக்கை டெல்லியில் நடைபெறவிருக்கும் முதல்வர்கள் மாநாட்டுக்கு முன்பாக ேமாடியிடம் அளிக்கப்பட்டிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லியில் வரும் 16ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெற இருக்கிறது. மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்கள், அவற்றின் மத்திய அரசின் பங்கு குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது. மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்கள் எந்த அளவில் உள்ளன, …

  5. உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியல்; ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது அமெரிக்கா: 2016-ஆம் ஆண்டில் உலகின் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல பத்திரிகை, ஃபோர்ப்ஸ் இதழ். இது ஆண்டுதோறும் உலக பிரபலங்களின் பல்வேறுவிதமான தரவரிசை பட்டியல்களை வெளியிட்டுவருகிறது. இது தற்போது 2016-ஆம் ஆண்டின் உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் இந்த ஜூன் வரை எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் இந்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு ரூ.22…

    • 1 reply
    • 666 views
  6. இன்றைய நிகழ்ச்சியில் * தன் புதிய அமைச்சரவையை அறிவித்தார் பிரிட்டனின் புதிய பிரதமர் தெரீசா மே; ஐரொப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சு வார்த்தைகளை கையாள வேண்டிய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கருத்தென்ன? * ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் அகதிகளை கடுமையாக நடத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுக்கிறது ஹங்கேரி; ஆனால் ஹங்கேரிக்குள் நுழைவதற்காக செர்பியாவில் காத்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு. * மீண்டும் செயற்படத்துவங்கியது தஜிகிஸ்தானின் உலகப்புகழ் பெற்ற அதி உயர தொலைநோக்கி; உள்நாட்டுப்போரால் முடங்கிய விண்ணாய்வு மீண்டும் மேம்படும் என்கிறார்கள் விண் ஆய்வாளர்கள்.

  7. 'ஆஸ்திரேலியா போனால் போதும், பிழைத்துக் கொள்வோம் !' - தமிழ் அகதிகளின் இறுதி நம்பிக்கை சட்டத்திற்குப் புறம்பாக ஒரு நாட்டிற்குள் குடிபுக எண்ணுபவர்களும், சட்டப்படி அனுமதி கோரி அடுத்த நாடுகளை அண்டுபவர்களின் வாழ்வும் வலிமிக்கதே. இந்தப் போராட்டத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இன்றைய நாளில், உலக அளவில் சுமார் ஆறு கோடி மக்கள் அகதிகளாக இருக்கின்றனர். இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்த ஏராளமான தொப்புள் கொடி உறவுகள், இங்கிருக்கும் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர், அன்றாடக் கூலித் தொழிலாளிகளாக தங்கள் வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். எங்கு வேலைக்குப்போனாலும் அவர்கள் மாலையில் முகாமிற்க…

  8. லண்டனில் கெளரவமிக்க விருதை வென்ற சென்னையின் 'வேதனை' புகைப்படம்! அது ஒரு வேதனை தரும் புகைப்படம் தான். ஆனால் அத்தனை தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது. சென்னை மக்களுக்கு கடல் அரிப்பு ஒரு வேதனை தரும் விஷயம். தினம் தினம் கடலுக்குள் செல்லும் வீடுகள். ஒவ்வொரு முறையும் வீடுகளை இழக்கும் மீனவர்களின் வாழ்க்கை போராட்டத்தை அந்த புகைப்படம் அத்தனை அழகாக விளக்கியிருந்தது. சாந்குமார் என்ற பத்திரிகை புகைப்பட கலைஞர்தான் இந்த புகைப்படத்தை எடுத்தவர். தற்போது இந்த புகைப்படத்திற்கு லண்டனை சேர்ந்த 'அட்கீன்ஸ்' சுற்றுச்சூழல் விருதும் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும் இந்த விருது ஒரு பெரும் கனவு. கிட்டத்தட்ட போட்டோகிராபியின் உச்சத்தைத் தொடுவது போன்ற உணர்வைத் …

  9. பிரிட்டன் வெளியேற்றம்: அரசுக்கு கால அவகாசம் வேண்டும் - பிரதமர் தெரீசா மே பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்குத் தேவையான பேச்சுவார்த்தைகளுக்கு தயார் செய்வதற்கு தங்களுடைய அரசுக்கு கால அவகாசம் வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கெலா மெர்கல் மற்றும் ஃபிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் ஆகியோரிடம் தெரீசா மே தெரிவித்துள்ளார். இச்சூழலில், தெரீசா மேவின் முயற்சிகள் வெற்றியடைய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தெரீசா மேவிற்கு வாழ்த்துக்கள் கூறி சுமுகமான போக்கை கடைப்பிடித்தாலும், ஐரோப்பிய ஒ…

  10. 103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி. இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹுலிக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும் திம்மக்கா தனது வாழ்க்கையில் துன்பங்களை சகித்து வாழ்ந்துள்ளதாக கூறுகிறார். மேலும், அவருடைய மோசமான வறுமையும் நிழலாக இன்னும் அவரை தொடர்கிறது. சில பலன்களையும் மரங்களால் அடைந்து வந்திருப்பதாக கூறுகிறார். கடந்த கால வாழ்க்கை திம்மக்கா இளம்பெண்ணாக இருந்தபோது ஒரு விவசாயியை திருமணம் செய்துள்ளார். கணவருடைய வருமானம் மிகக்குறைவுதான். கணவர் உட்பட அங்கு வசிக்கும் சக கிராமத்தினர் புதுமனைவி வந்ததும் குழந்தை பெற்ற…

    • 0 replies
    • 300 views
  11. ஹிஸ்புல் முஜாகீதின் இயக்கத்தின் கமாண்டர் புர்கான் வானி இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது. இதுவரை 35க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சுமார் 1,400 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு அமலில் இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 5 நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் கடைகள் திறக்கப்படாததால், மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.வீட்டை விட்டு வெளியே சென்று உணவுபொருட்களைத்தேட முடியாத நிலை. தேடினாலும் கிடைக்காது. அல்லது உயிரே பறிபோனலும் வியப்படையை ஒன்றும் இல்லை என்பதே தற்போதைய காஷ்மீ…

  12. ஜனநாயகம் என்றால் என்ன என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.அருணாசலப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் அரசை ஏற்படுத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து சுட்டுரையில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில், "ஜனநாயகம் என்றால் என்ன என்பது குறித்து, பிரதமர் மோடிக்கு விளக்கியமைக்காக உச்ச நீதிமன்றத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான நபம் துகி கருத்து தெரிவித்ததாவது: …

  13. பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரானார் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும், தெரீசா மே, தனது புதிய அமைச்சரவையை நியமித்திருக்கிறார். புதிய வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் லண்டனின் முன்னாள் மேயரும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவருமான, போரிஸ் ஜான்சன் புதிய அமைச்சரவையில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பிரிட்டிஷ் நிதியமைச்சராக இருந்த ஜார்ஜ் ஆஸ்போர்ன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய நிதியமைச்சராக, ஏற்கனவே வெளியுறவு அமைச்சராக இருந்த பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார். …

  14. விவசாயம் செய்யவா? ,கற்பிக்கவா போகிறீர்கள்? : டேவிட் கமெரோனிடம் வினவிய 6 வயது சிறுமிகள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன் பதவி விலகுவதற்கு முன்னர் இறுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றுக்குள் விஜயம் செய்து அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது அவரைச் சூழ்ந்து கொண்ட 6 வயதுடைய சிறுமியர் குழுவொன்று அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளும் முகமாக அவரிடம் 'விவசாயம் செய்யவா அல்லது கற்பித்தலில் ஈடுபடவா விரும்புகிறீர்கள்?' என வினவினர். அதற்குப் பதிலளித்த டேவிட் கமெரோன், “விவசாயிகள் முக்கிய தொழிலை மேற்கொள்கிறார்கள் எனக் கருதுகிறேன். ஆனால் 3 பிள்ளைகளுக்க…

  15. தென் சீனக் கடல் பகுதியில் தனது உரிமை கோரலுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம் தீர்ப்பளித்த பிறகு, அப்பகுதியில் விமான பாதுகாப்பு மண்டலம் ஒன்றை தான் அமைக்கவுள்ளதாக சீனா எச்சரித்துள்ளது.இதன் மூலம் இப்பகுதியில் நுழையும் அனைத்து வெளிநாட்டு விமானங்களும் தங்களின் வருகையை சீன அதிகாரிகளிடம் அறிவிப்பது தேவையாக அமையக்கூடும். அதே வேளையில், மேற்கூறிய கடல் பகுதியில் தனது கட்டுப்பாட்டில் உள்ள பவழப்பாறை திட்டுகளுக்கு இரண்டு சிவிலியன் விமானங்களை சீனா அனுப்பியுள்ளது. நிரந்தர மத்தியஸ்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், அப்பகுதியில் தனது உரிமையினை நிலைநாட்டுவதில் தொடர்ந்து சீனா கொண்டுள்ள உறுதியை எடுத்துக் காட்டும் விதமாக, இவ்விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தோ…

  16. ஜோர்டான் எல்லையில் எந்த நாட்டுக்கும் சொந்தமற்ற நிலப்பரப்பில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த சிரியா மக்களுக்கு உதவிகளை விநியோகம் செய்ய, ஜோர்டான் அரசு ஓப்புதல் வழங்கியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.கடந்த மாதம் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு ஜோர்டான் நாட்டு சிப்பாய்கள் ஏழு பேரை முகாமிற்கு அருகில் தற்கொலை தாக்குதலில் கொன்றதையடுத்து, ஜோர்டன் தனது எல்லையை மூடியது. ஜோர்டான் குடியிருப்புவாசிகளின் நிலை குறித்து கவலைகள் வளர்ந்து வருகின்றன.ஆனால் ஐ.நாவின் உணவு முகமை, (WFP) , ஒரே ஒரு முறை உதவிகளை வழங்க ஜோர்டான் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. http://www.seithy.com/br…

  17. டேவிட் கேமரன்: இடைவேளையோடு முடிந்த இளவயது கனவு பதிமூன்று ஆண்டுகளுக்குப்பின் கன்சர்வேடிவ் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்த பிரதமர் இவர். கடந்த நூறாண்டுகளில் பிரிட்டனில் ஆட்சிக்கு வந்த மிக இளவயது பிரதமரும் கூட. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரட்டன் வெளியேறக்கூடாது என்று போராடித்தோற்ற பிரதமராகவே, ஒரு தோல்வியாளராகவே டேவிட் கேமரன் வரலாற்றில் அறியப்படுவார். செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்து, ஈடன் தனியார் பள்ளியிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் படித்தவர். இளம் வயது முதலே அரசியலில் ஆர்வமும் பிரதமராக வேண்டும் என்று கனவும் கண்டவர். அதற்கேற்ப 2001 ஆம் ஆண்டு அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்தது முதலே …

  18. பிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார் ராணி எலிசபெத்துடன் தெரீசா மே சந்திப்பு பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார். ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார். உள்துறை அமைச்சராக இருந்த தெரீசா மே, மார்க்கரெட் தாட்சருக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். அநீதிக்கு எதிராக போராடுவேன் ராணி எலிசபெத்தை சந்தித்த பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவ்னிங் தெருவுக்கு தனது கணவர் பிலிப்புடன் வந்த தெரீசா மே, அங்கு கூடியிருந்த சர்வதேச செய்தியாளர்களின் மத்தியில் உரையா…

  19. இன்றைய நிகழ்ச்சியில் , பிரிட்டிஷ் பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகும் டேவிட் கேமரனுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு மழை. ஆனால் அவரது ஆட்சிக்காலம் எப்படி பார்க்கப்படும். தென் சீனக்கடலில் சீனாவுக்கு சட்ட உரிமையில்லையென சர்வதேச தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு சீனா பதிலடி. தென் சீனக்கடலில் வான்பாதுகாப்பு வலையம் அமைக்கப்போவதாக எச்சரிக்கை.

  20. அரியணையிலிருந்து விலக ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ முடிவு வரும் ஆண்டுகளில், தனது அரியணையிலிருந்து விலகிட ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, தன் விருப்பத்தினை வெளிப்படுத்தியுள்ளதாக ஜப்பானின் தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ 82 வயதாகும் ஜப்பான் பேரரசர் உடல் நலக்குறைவால் பாதிப்படைந்துள்ளார். அகிஹிட்டோவின் பதவி விலகல், அவரது மகனான பட்டத்து இளவரசர் நாருஹிட்டோ ஜப்பான் பேரரசரின் அரியணையான, கிரிஸான்தமம் அரியணையிலேற வழிவகுக்கும். 1989-ஆம் ஆண்டில் தனது தந்தை ஹிரோஹிட்டோவை தொடர்ந்து, பேரரசர் அகிஹிட்டோ அரியணைக்கு வந்தார். கடந்த 2011-ஆம் ஆண்டில், பேரழிவினை ஏற்படுத்திய பூகம்பம் மற்றும் சுனாமியை தொடர்ந்து, இது …

  21. புதுடெல்லி, காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தபோது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்தனர் என்று தெரியவந்து உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் குல்காமில் தாம்கால் காஞ்ச் போராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட போது தானியங்கி துப்பாக்கிகள் உள்பட 70 துப்பாக்கிகளை எடுத்து சென்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது. செவ்வாய்கிழமை, பாதுகாப்பு படையினரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்கும் செயலில் இரண்டு பிரிவினைவாதிகள் ம…

  22. சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்ஹான் வானியை ஊடகங்கள் 'ஹீரோ' வாக சித்தரிப்பது கவலை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.காஷ்மீரில் இஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரில் பயங்கர வன்முறை வெடித்தது. வன்முறைச் சம்பவங்களில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இது குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் கவலை அளிப்பதாகவும், தீவிரவாதியை ஹீரோவாக சித்தரிக்கும் ஊடகங்கள் கவலையை ஏற்படுத்துகின்றன என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். புர்ஹான் வானி ஒரு தீவிரவாதி, பீல தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டவன், நாட்டின் நலனுக்கு எதிராக செயல்பட்டவன். ஆனால் அவனை ஒரு ஹீரோ போல சித்தரிப்பது தவறான உதாரணமாக…

    • 2 replies
    • 372 views
  23. LIVE BLOG 2016-07-13 12:25:01 நான் இன்று பதவி விலகியதையடுத்து எதிர்காலத்தில் வலுவான ஒரு நாட்டை மக்களால் காண முடியும். இதேபோன்று நாட்டை பாதுகாப்பதை ஒரு கௌரவமாக நினைக்கின்றேன் : டேவிட் கெமரூன் 2016-07-13 11:18:01 பிரதமர் பிரதமர் அலுவலகத்தில் உள்ள தனது பொருட்களை எவ்வித உதவியும் இன்றி தானே எடுத்துச் செல்வதை படத்தில் காணலாம். 2016-07-13 11:08:10 இந்நிலையில் பிரதமர் டேவிட் கெமரூன் இன்று பதவி விலகுகிறார். இதனையடுத்து தெரேசா புதிய பிரதமராக இன்று பதவி ஏற்கிறார். 59 வயதான தெர…

  24. பிரித்­தா­னி­யாவின் புதிய பெண் பிர­த­ம­ராக தெரேஸா மே இன்று பத­வி­யேற்­கிறார் பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­த­ம­ராக தெரேஸா மே இன்று மாலை பத­வி­யேற்­கிறார் .இதன் மூலம் அந்­நாட்டின் இரண்­டா­வது பெண் பிர­தமர் என்ற பெயரை அவர் பெறு­கிறார். அவர் நாட்டின் பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­கான போட்­டியை மேலும் 9 வாரங்­க­ளுக்கு எதிர்­கொள்ள நேரிடும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில், பழை­மை­வாதக் கட்­சியைச் சேர்ந்த அவ­ரது போட்டி வேட்­பா­ள­ரான அன்ட்­றியா லீட்ஸம் திங்­கட்­கி­ழமை அந்தப் போட்­டி­யி­லி­ருந்து ஒதுங்­கி­ய­தை­ய­டுத்து அவ­ரது வெற்றி உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அந்­நாட்டின் பதவி விலகிச் செல்லும் பிர­தமர் டேவிட் கமெ…

  25. இலட்சியத்தில் உறுதியுடன் தொடர்ந்து போராடும் தேசம் தோற்காது – நிர்மானுசன் sri 6 hours ago கட்டுரை 16 Views பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் சனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது …

    • 0 replies
    • 340 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.