Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய நிகழ்ச்சியில் * இயல்புநிலைக்கு திரும்பியது துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம்; ஆனால் ஐஎஸ் அமைப்பிடமிருந்து மகனை மீட்க துருக்கிக்கு சென்ற தந்தையோ சடலமாக துனிஷியா திரும்பினார். * உலகை உலுக்கிய சோம் போரின் நூற்றாண்டு நினைவுநாள் ஐரோப்பா நெடுக அனுஷ்டிக்கப்பட்டது; அதில் பிரிட்டனின் தோல்விக்கான காரணத்தை ஆராய்கிறது பிபிசி. * லண்டனில் சொத்துவாங்க கடன் தருவதை இடைநிறுத்தியது சிங்கப்பூர் வங்கி; ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரியும் பிரிட்டன் பொருளாதாரம் மோசமாவதன் இன்னொரு அடையாளமா?

  2. கோடீஸ்வரி ஆன மலாலா... பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவி மலாலா. இவர் பெண் கல்விக்காக குரல் கொடுத்த காரணத்தால் தீவிரவாதிகளால் தலையில் சுடப்பட்டார். பலத்த காயத்துடன் மலாலா லண்டன் கொண்டு வரப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிர் பிழைத்தார். அதன் பிறகு நாடு திரும்பாமல் லண்டனிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு மலாலா பெண் கல்வி குறித்து பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அவருக்கு 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது அனுபவங்கள் குறித்து “ஐயாம் மலாலா” என்ற புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகத்தை விற்பனை செய்யவும், பதிப்புரிமையை பாதுகாக்கவும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனத்தின் மதிப்பு…

  3. பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம்.இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு உலக வங்கியின் மூலம் ரூ.6,750 கோடி நிதியுதவி அளிப்பதற்கான ஒப்பந்தத்தில், மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயலும், உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்மும் வியாழக்கிழமை கையெழுத்திட்டனர்.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய ஜிம் யாங் கிம், சுற்றுச்சூழலுக்கு உகந்த நீடித்த வளர்ச்சி அடைய இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ""உலக வங்கித் தலைவர் ஜிம் யாங் கிம்முடன், உலக வங்கியுடனான இ…

  4. கனடா மிசிசாகா வெடிப்பு சம்பவத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்றும் தமது சொந்த வீடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தீயணைப்பு படை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். ஒன்ராறியோவின் மிசிசாகாவில் வீடொன்றில் கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் ஒன்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் காயமடைநதனர். அத்துடன் குறித்த சம்பவத்தினால் சுமார் 25 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 6 வீடுகள் மோசமான சேதத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறிருக்க வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சுமார் 33 வீடுகளுக்கான மின், எரிவாயு மற்றும் நீர் விநியோகங்கள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆ…

  5. சோம் போர் 100 ஆண்டுகள்: ஐரோப்பா முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் முதலாவது உலகப் போரின் மிக மோசமான மோதலாகக் கருதப்படும் சோம் போரின் நூற்றாண்டைக் குறிக்கும் வகையில், ஐரோப்பா முழுவதும் நினைவஞ்சலி நிகழ்ச்சிககள் நடைபெறுகின்றன. அஞ்சலி நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் வடக்கு பிரான்ஸில் உள்ள தீப்யல் நினைவு மண்டபத்தில், ஐரோப்பிய மற்றும் பொதுநலவாய நாடுகளின் படைவீரர்கள், வியாழக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினார்கள். ஜெர்மனிக்கு எதிரான தாக்குதல் துவங்கிய நேரத்தைக் குறிக்கும் வகையில், பிரிட்டன் நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த உள்ளது. லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் ராணி எலிசபெத், பிரதமர் டேவிட் கேமரன் உள்ளிட்ட பல்வேறு…

  6. பிரிட்டன் வெளியேறிய பிறகே புதிய வர்த்தகப் பேச்சுவார்த்தை' பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு முழுமையாக விலகிய பிறகே, புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துவக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் சிசிலியா மம்ஸ்ட்ரோம் தெரிவித்துள்ளார். முதலில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, அடுத்து, புதிய உறவு ஆகிய இரு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை, உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படிதான் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மம்ஸ்ட்ரோம் தெரிவித்தார். சமீபத்தில் கனடாவுடன் மேற்…

  7. பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியின் முன்னணியில் தெரஸா மே பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் பொறுப்பேற்பதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு, பெரும்பான்மை அமைச்சரவை சகாக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் உள்துறை அமைச்சர் தெரஸா மே. மைக்கேல் கோவ் மற்றும் தெரஸா மே அவருக்கு எழுபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. போட்டியாளர்களில், அவருக்கான வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அவரது பிரதான போட்டியாளராகக் கருதப்படுபவர், மைக்கேல் கோவ். தானும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடப்போவதாக வியாழக்கிழமை அவர் அறிவித்தார். இதனால், தலைமைப் பதவிக்கான போட்டியில் களமிறங்க…

  8. பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிடவில்லை: போரிஸ் ஜான்சன் பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான மனுத்தாக்கல் இன்னும் சில மணி நேரங்களில் முடிவடையவுள்ள நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிக்கும், பிரதமர் பதவிக்கும் தான் நிற்க போவதில்லை என்று லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். சக உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நாடாளுமன்றத்தின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். `அந்த நபர் நான் இல்லை என முடிவு செய்துள்ளேன்' என அவர் தெரிவித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைமைக்கு முழு ஆதரவை வழங்கப் போவதாகக் கூறிய அவர், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் எந்த நிலைக்கு ஆத…

    • 3 replies
    • 439 views
  9. துப்பாக்கிச் சூடு ; அமெரிக்க இராணுவ விமான தளம் மூடப்பட்டது (வீடியோ இணைப்பு) இனந் தெரியாத நபரால் திடீரென மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் வோஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் இராணுவ விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வோஷிங்டன் நகரத்தில் இருந்து 32 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் இன்று துப்பாக்கி சூடும் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இனந் தெரியாத நபரொருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். குறித்த தகவலை ஆண்ட்ரூஸ் விமான தள டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு காரணமாக விமான தளம் தற்காலிகமாக மூடப்பட்டு, பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு…

  10. இஸ்தான்புல் விமானநிலைய தாக்குதல் ; 13 பேர் கைது இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பாக 13 பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் அமைந்திருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 41 பேர் பலியாகியதோடு, 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இஸ்தான்புல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறித்த தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் டெக்சியில் வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததனையடுத்து…

  11. இலவச வை பை வசதி வழங்குவதாக வாக்குறுதி -ஹிலரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் இலவச வை பை வசதியை வழங்குவதாக வாக்குறுதியை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஹிலரி கிளிண்டன் அவரின் உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில், இரண்டு வார்த்தைகள் - இலவச வை பை. புகையிரத நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் என்று பதிவேற்றியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் 2020க்குள் அனைத்து வீடுகளுக்கும் பிரோட்பேண்ட் வசதி செய்து தரப்படும் என்று ஹிலரி வாக்குறுதி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8351

  12. பிறிக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் பிரான்ஸின் எல்லைக் கட்டுப்பாட்டில் மாற்றம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பிரித்தானியாவில் 'பிறிக்ஸிட்' வாக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு பிற்பாடு பிரான்ஸின் காலெயிஸ் துறைமுகத்தில் பாதுகாப்பு வேலிக்கு அருகில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பிரான்ஸ் கொடி பிரித்தானியாவின் ஐக்கிய கொடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நட்சத்திர சின்னங்கள் என்பவற்றைக் காண்பிக்கும் 4 பாரிய கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு அடையாளப் பலகைகள் அகற்றப்பட்டு புற்றரையில் கைவிடப்பட்டுள்ளது. 12 அடி நீளமும் 9 அடி அகலமும் கொண்ட அந்தப் பலகைகள் பிரான்ஸிலிருந்து வெளியேறும் மோட்டார் வாகன சாரதிகளுக்கு அவர்களது கடவுச்சீட்டுகள் பரிசோதிக்கப்படும் வெவ்வேறு பாத…

  13. அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் நிலவும் போட்டி நீதி அமைச்சர் மைக்கேல் கோவ் மற்றும் உள்துறை அமைச்சர் தெரேசா மே ஐரோப்பிய ஒன்றியம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்புக்குப் பிறகு, பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் ஏற்பட்டுள்ள ஒரு ஆச்சரியமான திருப்பத்தில், நீதி அமைச்சர் மைக்கேல் கோவ், கன்செர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவி மற்றும் பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். கோவ் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சனுடன் சேர்ந்து நடத்தியவர். மேலும் அவர் ஜான்சனின் வேட்புமனுவிற்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பி பி சியின் அர…

  14. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியுள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய உத்தியோகபூர்வ மொழிகளில் இருந்து ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக, அண்மையில் பிரிட்டனில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 52 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்தனர். இதனால், ஒன்றியத்திலிருந்து விலக பிரிட்டன் தீர்மானித்தது. இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்றம் நேற்று கூடி ஆலோசித்ததுள்ளதுடன் பிரிட்டன் விரைவாக வெளியேற வேண்டும் எனவும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விரைவாக பிரிட்டன் விலகவேண்டும் என சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலக…

  15. Brexit: ஜனநாயகமும் தலையில் மண்வாரிப் போடுதலும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் இடம்பெற்ற மாபெரும் சர்வஜன வாக்கெடுப்பில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் எதிர்காலம் குறித்த மிகப்பெரிய முடிவொன்றை எடுத்திருக்கிறார்கள். 1967ஆம் ஆண்டு ஐரோப்பிய சமுதாயம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அமைப்பில், 1973ஆம் ஆண்டு இணைந்த பிரித்தானியா, 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஐக்கிய இராச்சியமாக வெளியேறுகிறது. யாருமே எதிர்பார்த்திருக்காத இந்த முடிவுகள், ஐக்கிய இராச்சியத்தில் மாத்திரமல்லாது உலகம் முழுவதிலுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனஃ ஏற்படுத்தியிருக்கின்றன. ஐக்கிய இராச்சியப் பிரதமர் டேவிட் கமரோனின் கட்சியான …

  16. அமெரிக்க விசாவிற்கு சமூக வலைத்தள விபரங்களும் தேவை அமெரிக்கா செல்வதற்கான விசா விண்ணப்பிக்கும் போது, மற்ற முக்கிய ஆவணங்கள் ,தகவல்களோடு, இணையத்தில் அவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தள விபரங்களையும் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி இனி அமெரிக்கா செல்ல விசா விண்ணப்பிப்பவர்கள் தங்களுடைய பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வளைதள கணக்கு விபரங்களையும் பகிர வேண்டும். இதற்காக விசா விண்ணப்பங்களில் அதற்கான விபரங்களை கேட்டு புதிய கேள்விகள் சேர்க்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள விபரங்களை சேகரிப்பதன் மூலம் குற்ற சம்…

  17. இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதலின் பின் அமெரிக்கா அறிவிப்பு இஸ்தான்புல் தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து துருக்கிக்கு அனைத்து வகையிலும் உதவ தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. உலகையே பதற வைத்துள்ள இந்த கொடூர தாக்குதல்களில் 41 பேர் பலியாகியதோடு, 230 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனை அமெரிக்காவின் ஜனாதிபதி பராக் ஒபாமா தொடர்புக்கொண்டு பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் துரு…

  18. இன்றைய நிகழ்ச்சியில் * இஸ்தான்புல்லை உலுக்கிய பயங்கரவாதம்; பிரதான விமானநிலையத்தில் நடந்த மோசமான தாக்குதலில் 41 பேர் பலி; 239 பேர் காயம். * மெக்சிகோ நாட்டவர் விசா இல்லாமல் கேனடா வர அனுமதி; வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்த கூட்டத்துக்கு முன்பாக கேனடா பிரதமர் அறிவிப்பு. * யானைத் தந்த வர்த்தகத்தை முற்றாக தடுக்கப்போவதாக ஹாங்காங் அறிவிப்பு; சட்டவிரோத யானைத் தந்த வர்த்தகத்தை தடுக்கப்போவதாக உறுதி.

  19. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவை மதிக்க வேண்டும் - ஏங்கலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவு மதிக்கப்பட வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் வெளியேறும் முடிவை மதிக்க வேண்டும். ஆனால், சுதந்திரமான சந்தையை அது விரும்பினால் மக்கள் சுதந்திரமாக சென்று வர அனுமதிக்க வேண்டும் - ஏங்கெலா மெர்கல் ஆனால், எதிர்காலத்தில் சுதந்திரமான சந்தையை அணுக பிரிட்டன் விரும்பினால், மக்கள் சுதந்திரமாக போய் வருவதற்கும் அது அனுமதிக்க வேண்டும் என்று ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிபோது அவர் பேசியுள்ளார். கடந்தகால நெருக்கடிகளில் இருந்து ஐரோப்பா மீண்டு வந்துள்ளது எ…

  20. பிரபல கிட்டார் வாசிப்பாளர் ஸ்காட்டி மூர் மரணம் எல்விஸ் பிரெஸ்லியின் ஆரம்ப இசைக்குழுவின் உறுப்பினரும், ராக் கிட்டார் வாசிப்பில் முன்னோடியுமான ஸ்காட்டி மூர் காலமானார். அவருக்கு வயது 84. ஸ்காட்டி மூர் பல மாதங்களாக மோசமான உடல்நிலையால் பாதிக்கப்பட்டிருந்த மூர், நாஷ்வில் நகரில் இறந்து விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். ப்ளுஸ், காஸ்பல் மற்றும் நாட்டுப்புற இசை ஆகியவற்றின் புதிய இசைக்கலவையை எல்விஸ் வடிவமைக்க உதவியவராக மூர் கூறப்படுகிறார். இந்த இசை 'ராக் அண்ட் ரோல்' என்று பின்னர் அறியப்பட்டது. எல்விஸ் பிரெஸ்லி இசையுலகின் 'அரசனாக' மாற உதவிய இசையமைப்பாளர் ஸ்காட்டி மூர், என்று சிலர் மூரை வர்ணிப்பதுண்டு. எல்விஸின் முதல் வெற்றி பாடலான ''த…

  21. பழைய கோபத்தை மறந்து துருக்கியிடம் தனது அனுதாபத்தை தெரிவித்த புடின் இஸ்தான்புல் சர்வதேச விமான நிலையம் மீது நடந்த தாக்குதலுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்கள் பாதிக்கப்பட்ட துருக்கியிடம் தங்களின் அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். விளாடிமிர் புடின் மற்றும் எர்துவான் ரஷ்ய அதிபர் புடின், துருக்கி அதிபரை தொலைபேசியில் அழைத்து தனது அனுதாபங்களை தெரிவித்ததாக கிரம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த நவம்பரில், சிரியா நாட்டு எல்லையில் ரஷ்ய ஜெட் விமானத்தை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தி இரண்டு விமானிகள் உயிரிழப்புக்கு காரணமான சம்பவத்துக்கு பிறகு, தற்போது தான் இரு நாட்டு தலைவர்களும் முதல்முறையாக உரையாடியுள்ளனர். மேற்க…

  22. கனடா வரும் மெக்சிகோ நாட்டவருக்கு இனி விசா தேவையில்லை அமெரிக்கா கேனடா மற்றும் மெக்சிகோ நாட்டுத்தலைவர்கள் Ottawaவில் விரைவில் சந்திக்கவிருக்கிறார்கள். வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளராக நிற்கக்கூடியவராக பார்க்கப்படும் டொனால்ட் ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் உலக அளவில் நிலவும் ஸ்திரமற்ற சூழலில் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம் என்கிறார் கேனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தமது இந்த நிலைப்பாட்டை செயற்படுத்தும்விதமாக கேனடா வரும்…

  23. இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்! பிரிட்டன் அரசி எலிசபெத் நகைச்சுவை வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் நகரில் ஹில்ஸ்பரோ அரண்மனையில் சந்தித்த பிரிட்டிஷ் அரசி எலிசபெத், வடக்கு அயர்லாந்து துணைப் பிரதமர் மார்ட்டின் மெக்கின்னஸ். பிரிட்டன் அரசி எலிசபெத்தின் உடல் நலம் பற்றிய விசாரிப்புக்கு, "இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்' என்று அவர் நகைச்சுவையாக பதில் கூறினார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருப்பது குறித்து கடந்த வாரம் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், அந்த அமைப்பிலிருந்து விலக வேண்டும் என்ற அத…

    • 2 replies
    • 500 views
  24. எட்டுத் திக்கும் | 'கள்ளநோட்டு' கவர்மென்ட்! சேதி கேட்டோ பலமுனைப் போரில் பரிதவித்துக்கொண்டிருக்கும் சிரியாவில் செய்தி சேகரிக்க ஆளில்லை. இதுவரை 110 செய்தியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதால், செய்தியாளர்களை அனுப்ப பெரிய ஊடகங்கள் மறுக்கின்றன. உள்ளூர் செய்தியாளர்கள்தான் உயிரைப் பணயம் வைத்து செய்திகளைச் சேகரிக்கின்றனர். முறையான சம்பளமும் இல்லை; கடத்தப்பட்டால் அவர்களுக்காகப் பேச யாரும் இல்லை. உலகத்தின் பார்வையிலிருந்து மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது சிரியா! * கடந்தகாலக் கலை பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள பாரிகோட்டில் இந்தோ-கிரேக்க நகரத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்…

  25. பிரிட்டன் இல்லாத ஐரோப்பிய ஒன்றிய கூட்டம்: வாக்கெடுப்பின் எதிரொலி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்று பிரிட்டன் வாக்களித்ததைத் தொடர்ந்து, இன்று நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத்திலிருந்து பிரிட்டன் விலக்கப்பட உள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, முதல்முறையாக இவ்வாறு நடக்கவுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலக வேண்டும் என்று வாக்களித்தன் தாக்கத்தை பற்றி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பின நாடுகளின் தலைவர்கள் விவரிக்கும் கூட்டத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் கலந்து கொள்ளமாட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நடைமுறைகளுக்கான திட்டத்தை உடனடியாக பிரிட்டன் வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.