Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அயர்லாந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பிரித்தானியர் களின் எண்ணிக்கை அதிகரிப்பு; விண்ணப்பப்படிவங்கள் முடிந்துவிட்டதாக சில தபாலகங்களில் அறிவிப்பு ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லி­ருந்து பிரிட்டன் பிரி­வ­தற்கு ஆத­ர­வாக பிரித்­தா­னிய மக்கள் வாக்­க­ளித்த நிலை யில், ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளு­ட­னான தமது தொடர்­பு­களைப் பேண விரும்பும் பிரித்­தா­னிய மக்கள் சிலர் அயர்­லாந்து கட­வுச்­ சீட்டை பெறு­வ­தற்கு அதிக ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். இதனால் பிரித்­தா­னிய தபால் நிலை­யங்­களில் அயர்­லாந்து கட­வுச்­சீட்டு விண்­ணப்­பங்­ க­ளுக்கு தட்­டுப்­பாடும் ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பிரிட்டன் தற்­போ­து­வரை ஐரோப…

  2. பிரெக்ஸிட்டுக்கு பிறகு பிரிட்டனில் தலைதூக்கும் நிறவெறி படம்: ஏ.எஃப்.பி. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளிக்க, அங்கு தற்போது அயல்நாட்டவர்கள் மீதான வெறுப்புப் பேச்சு, சுவரொட்டிகள், தாக்குதல் போன்ற 100 சம்பவங்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளது. பள்ளி ஒன்றின் வாசல் சுவரொட்டி “போலந்து புழு பூச்சிகளுக்கு இனி இடமில்லை” என்ற வாசகத்தை தாங்கியிருந்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் போலந்து சமூக மற்றும் பண்பாட்டு கூட்டமைப்பு கட்டடத்துக்கு வெளியேயும் இதே வாசகம் கொண்ட சுவரொட்டிகள், அட்டைகள் காணப்பட்டதால் ஸ்காட்லாந்து யார்டு விசாரணைக்கு அழைக்…

  3. தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்! (வீடியோ) சிங்கப்பூர் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீ பிடிக்க பிடிக்க தரையிறங்கியது. அதிருஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சிங்கப்பூரில் இருந்து அதிகாலை 2 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று இத்தாலியின் மிலன் நகருக்கு புறப்பட்டது. விமானத்தில் 222 பயணிகளும் 19 ஊழியர்களும் இருந்தனர். வானத்தில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இன்ஜினில் கோளாறு இருப்பதை விமானி அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து விமான நிலையக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். தொடர்ந்து விமானம் மீண்டும் சாங்கி விமான நிலையத்துக்கு திரும்பியது.…

  4. இது பிரிட்டனோடு முடியும் விவகாரம் அல்ல! ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக (பிரெக்ஸிட்) பிரிட்டிஷ் வாக்காளர்களில் பெருவாரியானவர்கள் அளித்துள்ள ஆதரவு மிகப் பெரிய அரசியல், பொருளாதார நிலநடுக்கம் போன்றது. இனி, பிரிட்டன் எந்தத் திசையில் பயணிக்கப்போகிறது என்று பார்க்க வேண்டும். ஐரோப்பியப் பொதுச் சந்தைக்கேற்ப பிரிட்டன் இனி செயல்பட வேண்டியிருக்காது. தனக்கெனச் சொந்தமாக நிதிக் கொள்கையையும், குடியேற்றங்களை அனுமதிக்கும் சட்டங்களையும் அது வகுத்துக்கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் நாட்டுக்கு இரண்டாண்டுகள் அவகாசத்தை விதிகள் அளிக்கின்றன. ஆனாலும் ‘விரைவில் விலகிவிடுமாறு’ ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனைக் கோரியுள்ளது. உலகின் ஐந்தாவது பொருளா…

  5. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தொடர்ந்து தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் அக்டோபரில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தேர்தலுக்கு முன்பே அறிவித்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ள சம்மதித்துள்ளார். இதையடுத்து டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து மற்றொரு தகுதியான நபர் பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட உள்ளார். அந்த போட்டியில் முதலிடம் பெறுபவர் போரிஸ் ஜான்சன். லண்டன் மாநகராட்சியின் முன்னாள் மேயர் இவர். மொத்தம் இரு வேட்பாளர்களை கன்சர்வேட்டிவ் கட்சி தேர்ந்தெடுத்து தங்களுக்குள் ஆலோசித்து கட்சி தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் அறிவிக்க உள்ளது. ஜான்சனுக்கு போட்டியாளர் யார் என்பது இன்னமும் தெரியவில்லை. …

    • 2 replies
    • 529 views
  6. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் எடுத்திருக்கும் முடிவானது, உலகப் பொருளாதாரத்தில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சீனா தெரிவித்துள்ளது.பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றித்தை விட்டு விலகுவதால் ஏற்படும் விளைவுகளை கணிப்பது கடினமானது. ஆனால், இன்னும் பத்தாண்டுகள் அவை உணரப்படும் என்று சீன நிதி அமைச்சர் லோவ் ஜிவெய் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வாக்கெடுப்பை தொடர்ந்து சந்தைகள் மிகைப்படுத்தியே எதிரெலித்திருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த விளைவுகளை பற்றிய புறநிலை பார்வையை உலகம் பெறுவதற்கு முன்னால் அவற்றை அமைதிப்படுத்திவிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http:/…

  7. 285 இந்தியர்கள் பெயர்களுடன் புதிய கொலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ் ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பு புதிய கொலைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 285 இந்தியர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள 4000 பேர் இடம்பெறுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி கொலைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்களில் பாதி பேர் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களாவர். மேலும் இந்த பட்டியலில் இடம் பெற்ற…

  8. பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்தால் தடுக்க முடியும்: நிக்கோலா ஸ்டர்ஜன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் தடுக்க முடியும் என ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார். பிரிட்டன், தனது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர் பதவியை முடிப்பதை அனுமதிக்க ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல் தரவேண்டும் என அவர் நம்புவதாகவும், ஆனால் அதை மறுப்பதற்கு ஸ்காட்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தப்போவதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கருத்து தொடர்பாக சிலர் சந்தேகம் வெளியிடுகிறார்கள். மாறுபட்ட சூழ்நிலைகளில், ஸ்காட்லாந்து தொடர்பான விவகாரங்களில் சட்டம் இயற்றும் அதிக…

  9. பிரிட்டன் தொழிற் கட்சி தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு வலுக்கும் எதிர்ப்பு தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் வாக்களித்ததை தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பு, பெரிய எதிர்க்கட்சியான தொழிற் கட்சியிலும் சூழ்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற கூடாது என்ற பிரச்சாரத்தை தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் கையாண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தொழிற்கட்சியின் நிழல் அமைச்சரவையை சேர்ந்த பாதி உறுப்பினர்கள் இன்றைய தினம் தங்களுடைய பதவிகளை ராஜிநாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், முதலாவதாக நிழல் சுகாதார செயலர் ஹெய்தி அலெக்ஸாண்டர் தனது பதவியை ராஜ…

  10. பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது: ஃபிரான்ஸ் வங்கி ஆளுநர் பிரிட்டன் வெளியேற்றத்திற்கு பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டிஷ் வங்கிகளால் சுதந்திரமாக செயல்பட முடியாது என பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிரான்சிஸ் வில்லேராய் டி கல்ஓ தெரிவித்துள்ளார். எல்லை கடந்த சேவைகளில் வங்கி பாஸ்போர்ட் அமைப்புகளை அணுக, ஒருங்கிணைந்த சந்தையில் அனைத்து விதிகளையும் பின்பற்றி பிரிட்டன் உறுப்பினராக இருப்பதை சார்ந்தே இருக்கும் என வில்லேராய் தெரிவித்துள்ளார். பேங்க ஆஃப் பிரான்ஸ் வங்கியின் ஆளுநர் ஃபிராங்கொய்ஸ் வில்லேராய் டி கலெயு பிரிட்டனின் இந்த வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்பட…

  11. கிரேட் பிரிட்டனுக்கும் இங்கிலாந்துக்கும் உள்ள வேறுபாடு என்ன? (வீடியோ) அண்மையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியது. பெரும்பாலான மக்களுக்கு பிரிட்டன் என்றால் இங்கிலாந்துதான் நினைவுக்கு வரும். ஆனால் பிரிட்டன் என்பது இங்கிலாந்து மட்டுமல்ல, மேலும் 3 நாடுகளை உள்ளடக்கியது. வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்துதான் கிரேட் பிரிட்டன். இதன் முழு பெயர் 'யுனைடெட் கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் அண்டு நார்தர்ன் அயர்லாந்து' என்பது. பிரிட்டனையும் அதன் முழுமையான புவியியல் அமைப்பையும் புரிந்து கொள்ள இந்த வீடியோ உதவும். ஐரோப்பிய யூனியன் என்றால் என்ன? கூகுளில் தேடிய இங்கிலாந்துவாசிகள்! …

  12. அமெரிக்காவில் வெள்ளத்தில் 24 பேர் பலி: விர்ஜீனியா பேரழிவு பகுதி ஆக பிரகடனம் அமெரிக்காவில் வெள்ளத்துக்கு 24 பேர் பலியான விர்ஜீனியாவை பேரழிவு பகுதியாக அதிபர் ஒபாமா பிரகடனம் செய்துள்ளார். அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மேற்கு விர்ஜீனியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக புயல் மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடு ஆக காட்சி அளிக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் 24 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு…

  13. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதன் காரணமாக சர்வதேச சந்தைகளில் 2 லட்சம் கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. தவிர பவுண்ட் நாணய மதிப்பு 31 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. 1985-ம் ஆண்டுக்கு பிறகு அதிக சரிவை இப்போது பவுண்ட் சந்தித்திருக்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் கடும் சரிவு இருந்தது. பிரான்ஸ் பங்குச் சந்தை 8 சதவீதமும், ஜெர்மனி சந்தை 7 சதவீதமும், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் சந்தையும் கடும் சரிவை சந்தித்தன. லண்டன் எப்டிஎஸ்இ சந்தை 3.2 சதவீதம் சரிந்தது. அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸ் வெள்ளிக்கிழமை 3 சதவீதம் அளவுக்கு சரிந்தது. தேவையான சமயத்தில் நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாக பேங்க் ஆப் இங்கிலாந்து, ஐரோப்பிய மத்திய வங்கி, …

    • 0 replies
    • 291 views
  14. பிரிட்டன் வெளியேறும் காலகெடு பற்றி தொடரும் கலந்தாய்வுகள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் காலகெடு பற்றிய கலந்தாய்வுகள் தொடர்கின்றன. பிரிட்டன் வெளியேறும் காலகெடு தொடர்பாக கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன எந்தவொரு பேச்சுவார்த்தையையும் தொடங்குவதற்கு முன்னால் முறையான அறிவிப்பு அவசியம் என்று ஐரோப்பிய கவுன்சில் தெளிவுப்படுத்தியுள்ளது. விலகுவதற்கான வழிமுறைகளை தொடங்குவதற்கு முன்னால் கொஞ்சம் நேரம் எடுத்துகொள்ள விரும்புவதாக பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை காத்திருக்க அவர்கள் விரும்புகின்றனர். நீண்ட, தாமதமான முயற்சிகள் தங்களுடைய அடுத்த வேலைகளை தொடங்குவதற்கு இடைஞ்சல் கொடுக்…

  15. இரண்டாவது பெரிய அரசியல் தலையை பலிவாங்கியுள்ள பிரிட்டன் வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் நிலை பற்றிய பிரிட்டன் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவால் ஏற்பட்டுள்ள அரசியில் விளைவுகள் நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் தலையை பலிவாங்கியுள்ளது. எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையின் சக உறுப்பினர்களை பதவி விலக ஹிலாரி பென் ஊக்கமூட்டினார் என கூறப்படுகிறது எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரிமி கார்பைன், வெளிவிவகார பேச்சாளர் ஹிலாரி பென்னை பதவிலிருந்து நீக்கியுள்ளார். திங்கள்கிழமை விவாதிக்கப்பட இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கோர்பையின் புறக்கணித்தால், பதவி விலகுவதற்கு எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையின் சக உ…

  16. அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க இந்திய அரசியல்வாதிகளிடம் ஹிலாரி பணம் வாங்கினார்: டிரம்ப் குற்றச்சாட்டு அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசுக்கட்சி சார்பில் பெரும் தொழிலதிபரான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். இரு தலைவர்களும் போட்டிபோட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் ஹிலாரி கிளின்டன் பணம் பெற்றதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். டிரம்பின் தேர்தல் பிரச்சார பேச்சுக்கள் அடங்கிய 35 பக்கங்கொண்ட கையேடு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மேற்கண்ட தகவல் அடங்கியுள்ளது. இந்தியா-அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்து…

  17. தேடுதல் வசதி வழங்கும் இணையதளங்கள், அவை வழங்குகின்ற தேடல் முடிவுகளில் விளம்பரத்திற்கு பணம் கொடுப்போரை இனம்காட்டுவதற்கு தேவைப்படுகின்ற விதிமுறைகளை சீனா முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.உடல்நல பராமரிப்பு பொருட்களுக்கான லாபகரமான விளம்பரங்கள் பற்றி இணைதள பயன்பாட்டாளர்கள் முக்கியமாக கருத்தில் கொண்டுள்ளதாக சீனாவின் இணையவெளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த சட்டத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்போம் என்று சீனாவின் மிக பெரிய தேடுதல் வசதி அளிக்கும் இணையதளமான `பெய்து' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. அரிதான புற்றுநோயால் அவதியுற்ற மாணவர் ஒருவர், பெய்து, இணையதளத்தில் தேடி கிடைத்த முடிவுகள் வழியாக கண்டறிந்த சிகிச்சையை சோதித்து பார்த்து, இ…

  18. அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை பணியமர்த்துவதில் உள்ள தடையை அடுத்த மாதம் பென்டகன் நீக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளார்கள். இந்த விதிமுறை காலாவதி ஆகிவிட்டதாகவும், ராணுவத்திற்கு தீங்கு இழைப்பதாகவும் பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் தெரிவித்துள்ளார்.இந்த முடிவு, திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக போராடும் பிரசாரகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ராணுவத்தின் செயலராக எரிக் ஃபேனிங் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்ற பிறகு இந்த முடிவு வெளியாகியுள்ளது. அவரும் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=160221&category=WorldNews&language=tamil

  19. பெல்ஜியத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சோதனையில் இருவர் கைது இரவு முழுவதும் நடத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சோதனையின் போது, இருவரை பெல்ஜியம் போலிசார் தடுத்து வைத்திருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நபர், கிழக்கில் உள்ள வெர்வியர்ஸ் நகரிலும் மற்றொருவர் பிரெஞ்சு எல்லைக்கு அருகில் உள்ள டூர்னை என்ற நகரிலும் கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து பேசுவதற்கு ஏற்ற நேரம் இதுவல்ல என்றார் அவர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நபர், ஞாயிறன்று நடைபெற உள்ள பெல்ஜியம் மற்றும் ஹங்கேரி அணிகள் இடையேயான யூரோ 2016 கால்பந்து ஆட்டத்தின் போது, ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக உறுதி செய்ய முடியாத…

  20. பிரிட்டன் வெளியேறும் நடைமுறை: மாறுபட்ட சமிக்ஞைகளை அனுப்பும் ஜெர்மனி வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சியூட்டிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு விலகுவதற்கான வழிமுறையை பிரிட்டன் எவ்வளவு விரைவாக தொடங்க வேண்டும் என்பதற்கு விரைவாக எனவும் மெதுவாக எனவும் கலவையான செய்திகளை ஜெர்மனி அனுப்பி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற விரைவாக, மெதுவாக என கலவையான செய்திகளை ஜெர்மனி அனுப்பி வருகிறது வெளியேறுவதற்கான வழிமுறையை தூண்டுவதற்கு பிரிட்டன் அவசரப்பட வேண்டாம். ஆனால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என ஜெர்மானிய அரசத் தலைவி ஏங்கெலா மெர்கல் தெரிவித்திருக்க…

    • 2 replies
    • 585 views
  21. பிரெக்ஸிட்: 2-வது வாக்கெடுப்பு நடத்த 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு பிரெக்ஸிட்: 2-வது வாக்கெடுப்புக்கு கோரிக்கை மனு. | படம்: கெட்டி இமேஜஸ். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக பொதுவாக்கெடுப்பு முடிவுகள் வெளியானதையடுத்து, இரண்டாவது பொதுவாக்கெடுப்பு கோரும் மனுவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். தற்போது 2-வது பொதுவாக்கெடுப்பு கோரி மனு ஒன்றில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டதையடுத்து பிரிட்டன் நாடாளுமன்றம் இதனை விவாதித்தாக வேண்டும். வியாழனன்று நடந்த பொதுவாக்கெடுப்பில் 72% வாக்களிக்க, அதில் 52% ஐரோப்பிய யூனியனிலிருந்து விலக ஆதரவாக வாக்களித்தது ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களில் அத…

  22. ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள் பெர்லினில் கூட்டம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்திருக்கும் நிலைமையில், ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவிய ஆறு நாடுகள், கூடிய சீக்கிரம் பெர்லினில் கூட்டம் நடத்தயிருக்கின்றன. ஜீன் கிளாடு யுன்கரும், டேவிட் கேமரனும் வேவ்வேறு திசைகளை நோக்கி பயணம் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தின் வெளியுறவு அமைச்சர்கள் ஒன்றுகூடி, பிரிட்டன் வெளியேறுகின்ற வழிமுறை மற்றும் விரைவாக விலகுவது பற்றி விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பிரிட்டன் பிரதமர் பதவி ஏற்பதற்காக காத்திராமல் பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் தொடங்க விரும்புவதாக ஐரோப்பிய ஆணையத…

  23. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.அந்த நாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன. இ…

  24. ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள். இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிப…

  25. பிரிட்டன் - ஐரோப்பிய ஒன்றிய பிரிவினை: ஏன் இணைந்தார்கள்... ஏன் பிரிந்தார்கள்...? பெரிய சச்சரவுகள் ஏதுமின்றி, ஒரு பிரிவு நிகழ்ந்திருக்கிறது. பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருது வெளியேற முடிவு செய்திருக்கிறது. இது, அந்த நாடு தான்தோன்றித் தனமாக தானே எடுத்த முடிவு அல்ல. அது மக்களிடம் வாக்கெடுப்பு நிகழ்த்தி, ஜனநாயக வழியில் பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறது. வாக்கெடுப்பில் 48.11 சதவீதம் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இருப்போமென்றும், 51.89 சதவீதம் பேர் வெளியேறுவோமென்றும் வாக்களித்து இருக்கிறார்கள். உண்மையில் இது பிரிட்டனுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கடினமான காலம்தான். என்ன ஆனது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு...?: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.