Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகக் கோரும் தரப்பிலிருந்து கன்சர்வேடிவ் தலைவர் விலகல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக மேற்கொள்ளப்படும் பரப்புரை வெறுப்பையும், வெளிநாட்டு துவேஷத்தையும் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டி ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னால் தலைவர் அந்தப் பிரசார முகாமிலிருந்து பரப்புரையிலிருந்து வெளியேறியுள்ளார். ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவின் இடையிலான எல்லையில் அகதிகளும், குடியேறிகளும் வரிசையாக நிற்பதை காட்டுகின்ற, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான கட்சியான யுகிப்பின் விளம்பரத்தை எடுத்துக்காட்டி சயீதா வார்சி இந்த குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். பல பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து அவைகளின் தொழிலாளர்களுக்…

  2. இன்றைய நிகழ்ச்சியில் - டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சியா? துப்பாக்கியை பறிக்க முயற்சித்ததற்காகவும், ட்ரம்பை கொலை செய்யப்போவதாக கூறியதற்காகவும் ஒரு பிரிட்டிஷ்காரர் கைதானார். - குடிநீருக்காக ஆற்றை மறிக்கும் மத்திய கிழக்கு நாடுகள். வேகமாக வறண்டு கொண்டிருக்கும் மரணித்த கடல். - அமெசான் காடுகளை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் அழிக்கிறார்கள். ஆனால், கூடவே பழங்குடியின மக்களின் வாழ்வும் அழிகிறது.

  3. பெய்ஜிங், என்.எஸ்.ஜி.யில் இந்தியாவை சேர்ப்பது தொடர்பாக் உறுப்பு நாடுகளுடன் ஆலோசிப்பதாக சீனா கூறிஉள்ளது. அணுஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை என்று கூறி அணுசக்தி நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்ப்பதற்கு சீனா மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் என்.எஸ்.ஜி.யில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் அணு ஆயுத தடை பரவல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று சீனாவிற்கு பதிலடி கொடுத்த இந்தியா அதே அடிப்படையில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றது. சீனா தொடர்ச்சியாக எதிர்க்கும் நிலையில் அமெரிக்கா உறுப்பு நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளது. ஆலோசனை …

  4. இன்றைய நிகழ்ச்சியில் - வன்செயலாலும், போராலும், ஆறு கோடியே ஐம்பது லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மோதல்களை தடுக்க அவசர நடவடிக்கை கோருகிறது ஐநா. - சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் தமது மீனவர் மீது சுட்டதாக இந்தோனேசியா மீது சீனா குற்றச்சாட்டு. ஆனால், அவர்கள் வெறும் மீனவர்கள் மாத்திரந்தானா என்பது குறித்த பிபிசியின் சிறப்பு ஆய்வு. - ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்று முடிவெடுக்கவுள்ள பிரிட்டிஷ் மக்கள். இந்த சிக்கலான விவகாரம் குறித்த பிபிசியின் விளக்க காணொளி.

  5. இனிமேல் என் வாழ்க்கையில் எங்கும் செல்லமாட்டேன் : விஜய் மல்லையா அதிரடி எனது வாழ்க்கையில் எங்கும் அழையா விருந்தாளியாக சென்றதில்லை இனிமேலும் செல்லமாட்டேன் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். பண மோசடி குற்றத்தில் சிக்கியுள்ள விஜய் மல்லையா இலண்டனில் தங்கியுள்ளார். அவர், சனியன்று இலண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் இங்கிலாந்துக்கான இந்திய தூதரும் பங்கேற்றார். மல்லையாவை பார்த்ததும் அங்கிருந்து தூதர் வெளியேறிவிட்டார். இதனால் பலத்த சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பாக மல்லையா, “எனது வாழ்க்கையில் எங்கும் அழையா விருந்தாளியாக சென்றதில்லை. இனிமேலும் செல்லமாட்டேன். புத்தக வெளியீட்டு விழாவில் …

  6. இத்தாலி தேர்தல்: ரோமின் முதல் பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இத்தாலியின் மிக பெரிய நகரங்களின் குடிமக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். எட்டு மில்லியன் இத்தாலியர் வாக்களிக்க பதிவு செய்துள்ளனர். ஐந்து நட்சத்திர இயக்கத்தின் எழுச்சிமிகு நடசத்திரமாக ராக்கி பார்க்கப்படுகிறார் ரோம் நகர புதிய மேயருக்கான போட்டி தான் மிகவும் கவனிக்கப்படுகிறது. இங்கு மக்களின் தேவைகளுக்காய் குரல் கொடுக்கும் ஐந்து நட்சத்திர இயக்கத்தின் வெர்ஜீனியா ராக்கி அம்மையார், பிரதமர் மாட்டியோ ரென்சியின் ஜனநாயக கட்சியின் மூத்த அதிகாரியான ரோபர்டோ கியசெட்டிக்கு எதிராக மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் வேட்பாளர்…

  7. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுமா? சூரியன் மறையாத பேரரசு’ என்று ஒரு காலத்தில் மார் தட்டிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறிவிட துடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் கருத்தை அறிய இம் மாதம் 23-ம் நாள் வியாழக்கிழமையை பொது வாக்கெடுப்புக்கான நாளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. 18 வயது நிரம்பிய பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற அனைவரும் நேரிலோ, தபால் மூலமோ வாக்களிக்கலாம். பிரிட்டனில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் இது பதற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. தவிர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொது வாக்கெடுப்பு முடிவு எப்படியிருக்குமோ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. உலக நாடுகள் முழுவதுமே பொர…

    • 1 reply
    • 749 views
  8. உலகம் முழுவதும் அகதிகள் எண்ணிக்கை 6.5 கோடியாக அதிகரிப்பு: ஐ.நா. ஐ.எஸ். பயங்கரவாதத்தால் சொந்த நாட்டில் இருந்து வெளியேறி அகதிகளாக நிவாரண முகாமிகள் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் 2015-ம் ஆண்டின் முடிவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகம் முழுவதும் 6.5 கோடி பேர் நெருக்கடிகள் காரணமாக புலம்பெயந்தவர்களாகவும், அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவுக்கு அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலை அளிப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. சர்வதேச அகதிகள் தினத்தன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் அகதிகளுக்கான தூதரகம். 2015-ம் ஆண்டில் மட்டும் அகதிகள் எண்ணிக…

  9. காபூல் தற்கொலைத் தாக்குதலில் 14 பேர் பலி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில், தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலொன்றில், குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேபாளத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீதே, இந்தத் தாக்குதல், இன்று காலையில் மேற்கொள்ளப்பட்டது. இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளதோடு, காயமடைந்தோரின் எண்ணிக்கை 8 என, இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/175105/க-ப-ல-தற-க-ல-த-த-க-க-தல-ல-ப-ர-பல-#sthash.RQuMHRTu.dpuf

  10. பிரிட்டனில் மீண்டும் தொடங்கியது கருத்தறியும் வாக்கெடுப்பு பிரசாரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா, வெளியேற வேண்டுமா என்பதை அறிந்துகொள்வதற்காக, வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை, இரு தரப்பினரும் மீண்டும் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த வியாழக்கிழமை, தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸ் கொல்லப்பட்டதையடுத்து இரு தரப்பினரும் தங்கள் பிரசாரங்களை இடைநிறுத்தி வைத்தனர். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்னும் பிரசாரத்தை முன்னெடுக்கும் பிரிவின் முக்கிய நபரான மைகல் கோவ், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்ட…

  11. துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம் பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்…

  12. பிரிட்டன் பிரிவது பொருளாதாரம் பின்னடைவை ஏற்படுத்தும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பிரிட்டன் வாக்களித்தால் அதனுடைய பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது. பெருளாதார ஸ்திரமற்றநிலை, உள்ளக முதலீடு இழப்பு, வர்த்தகத்தில் பாதிப்புகள் ஆகிய ஆபத்துக்களை சர்வதேச நாணய நிதியத்தின் இந்த விவரமான அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது. இவையனைத்தும் குறைவான கட்டுப்பாடுகளால் கிடைக்கின்ற பயன்களுக்கு அதிகமாக செல்லும். ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு செலவு திட்டத்திற்கும் எந்த பங்கையும் வழங்காது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2019 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 1.4 சதவீதம் ப…

  13. பலூஜா நகரில் மனிதப் பேரழிவு: இராக் உதவிப்பணியாளர்கள் எச்சரிக்கை பலூஜா நகரிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியேறி வருவதால், அங்கு பெரிய அளவிலான மனிதப் பேரழிவு அரங்கேறிக்கொண்டிருப்பதாக இராக்கில் உள்ள உதவிப்பணியாளர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சில தினங்களாக, ஐ.எஸ் போராளிகளை விரட்டியடிப்பதற்கான முயற்சியில் அரசப்படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், சுமார் முப்பதாயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அதிகப்படியான மக்களுக்கு நீர், உணவு மற்றும் மருந்துகள் வழங்க தாங்கள் போராடி வருவதாக, நார்வே நாட்டு அகதிகளுக்கான சபையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திறந்த வெளியில், மிகுந்த நெருக்கடியான முகாம்களில் மக்கள் தூங்குகிறார்கள்.…

  14. புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எல்லாம் தெரியும். அவருக்கு ரகுராம் ராஜனை போன்ற அறிவாளிகள் தேவையில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு இந்தியர் இல்லை. அவரால் இந்திய பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. எனவே, அவரை அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதோடு, செய்தியாளர்களிடமும் இதை தெரிவித்தார்.இந்நிலையில், ''நான் கவர்னர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை. மீண்டும் ஆசிரியர் பணிக்கே செல்ல விரும்புகிறேன்'' என ரகுராம் ராஜன் கூறியிருந்தார். இதையடுத்து, ''புதிய கவர்னர் விரைவில் அறிவிக்கப்படுவார்'' என மத்திய நிதி அமைச்சர் அருண்…

  15. பிரிட்டன் இருத்தலியல் தெரிவை எதிர்கொள்கிறது - கேமரன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா என்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் “இருத்தலியல் தெரிவை” பிரிட்டன் எதிர்கொள்கிறது என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்திருக்கிறார். எந்த முடிவை எடுத்தாலும் திரும்பி செல்வது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விலக வாக்களிப்பது பெரியதொரு தவறாக அமையும் என்று தெரிவித்திருக்கும் கேமரன், அது ஒரு தசாப்தம் வரை பலவீனமான ஸ்திரமின்மைக்கு வழிநடத்தும் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், பிரிட்டன் விலக வேண்டும் என்று பரப்புரை மேற்கொள்ளும் மைக்கேல் கோவ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு வாக்களிப்பதன் மூலம் ஜனநாயக…

    • 1 reply
    • 502 views
  16. அமெரிக்காவில் வீட்டின் முன்பக்கமாக விளையாடிக் கொண்டிருந்த 5 வயது மகனின் திடீர் அலறல் சப்தம் கேட்டு, வீட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த தாய், மகன் ஒரு மலைச் சிங்கத்தின் பிடியில் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ந்து, அஞ்சாமல் அதனோடு போராடி மகனை காப்பற்றி இருக்கிறார். ஆயுதம் ஏதுமில்லாமல் மலைச் சிங்கத்தோடு நடந்த இந்த சண்டையில் அம்மா, மகன் இருவருக்குமே மிதமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்ட சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அமெரிக்காவில் கொலொரோடா மாவட்டத்தில் ஆஸ்பென்னுக்கு அருகில், பிட்கின் என்ற ஊர் உள்ளது. இது மலைப்பகுதியை ஒட்டியுள்ளதால் அங்கு வாழும் விலங்குகள் சமயங்களில் ஊருக்குள் வந்து விடுவதுண்டு. கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒரு வீட்டில் 5 வயது ச…

    • 1 reply
    • 523 views
  17. பெல்ஜியத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட 12 பேர் கைது தீவிரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் 12 பேரை பெல்ஜியம் போலீசார் கைது செய்துள்ளனர். பெல்ஜியம் போலீஸ் நேற்றிரவில் மட்டும் பிரஸ்ஸல்ஸின் முக்கிய இடங்கள் உள்பட பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தினார்கள். 40 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்த சோதனை நடவடிக்கைகளின்போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று மத்திய அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிக் நாடு என்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர், சிரியாவில் இருந்து புறப்பட்டு ஐரோப்பா நோக்கி வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு எ…

  18. ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு ரஷியாவுக்கு தடை பாரபட்சமானது - புதின் ரஷியாவின் விளையாட்டு வீர்ர்களை ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பாரபட்சமானது, நியாயமற்றது என்று அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்ஸில் ரஷியாவுக்கு தடை பாரபட்சமானது, நியாயமற்றது - புதின் பரவலான ஊக்கமருந்து பயன்பாட்டால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷியாவுக்கு விதித்திருந்த தடையை அகற்ற போவதில்லை என சர்வதேச தடகள கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. இந்த தடையை அகற்ற முயற்சிக்க போவதாக புதின் தெரிவித்திருக்கிறார். கடும் ஊக்கமருந்து கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருப்பதை உறுதி செய்தால் ரஷிய வீரர்கள் தனிப்பட முறையில் போ…

  19. ஆர்லாண்டோ தாக்குதலின்போது 70 பேரின் உயிரை காப்பாற்றிய இந்தியர் இம்ரான் யூசுப் அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகர கேளிக்கை விடுதி தாக்குத லின்போது இந்திய வம்சாவழி யைச் சேர்ந்த இம்ரான் யூசுப் 70 பேரின் உயிரைக் காப்பாற்றியு ள்ளார். அவரை அமெரிக்க மக்கள் ஹீரோவாக கொண்டாடுகின்றனர். கடந்த 12-ம் தேதி அதிகாலை ஆர்லாண்டோ நகர தன்பாலின உறவாளர் கேளிக்கை விடுதிக் குள் புகுந்த ஒமர் என்ற ஐ.எஸ். தீவிரவாதி 49 பேரை சுட்டுக் கொன்றான். அந்த நேரத்தில் அங்கிருந்த இந்திய வம்சா வளியைச் சேர்ந்த இம்ரான் யூசுப் தைரியமாகச் செயல்பட்டு 70 பேரின் உயிரைக் காப்பாற்றி யுள்ளார். அமெரிக்க கடற்படை முன்னாள் வீரரான அவர் சிபிஎஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: …

  20. ஐ.எஸ்.ஸிடம் இருந்து பலுஜா நகரம் மீட்பு பலுஜா நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சிறிய ரக ஏவுகணைகளை வீசும் இராக் ராணுவ வீரர்கள். படம்: ஏஎப்பி ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பலுஜா நகரை இராக் ராணுவம் நேற்று மீட்டது. எனினும் அந்த நகரின் புறநகர்ப் பகுதிகள் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றையும் மீட்க கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இராக், சிரியாவில் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள் ளனர். அவர்களுக்கு எதிராக இராக் ராணுவம், குர்து படைகள் தீவிரமாகப் போரிட்டு வருகின்றன. அமெரிக்க கூட்டுப் படைகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதன்கார…

  21. இந்தோனேசியா ஜாவா தீவில் கரை ஒதுங்கிய 8 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழப்பு! இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் 8 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. தமிழகத்தில் சமீபத்தில் பெருமளவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்தோனேசியாவில் இப்போது திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த திமிங்கலம், ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள் ஆகும். உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு திமிங்கலம்தான். இவற்றில் 80-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. மற்ற மீன் இனங்களைப்போல செவுள்களால் சுவாசிக்காமல் மனிதர் களைப் போலவே நுரையீரல் இருப்பதால் சுவாசிப்பதற்கு கடலின் மேற்பரப்புக்கு அடிக்கடி வந…

  22. சுவீடன் நாட்டில் புகலிடம் தேடுவோர் இல்லத்தில் தங்கிருந்த ஆப்கன் சிறுவர்கள் இருவரை வற்புறுத்தி அந்த இல்லத்தின் பெண் அதிகாரி உறவு கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவீடனில் Sodermanland பகுதியில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் இல்லத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பெண் அதிகாரி ஒருவர் இரண்டு ஆப்கன் சிறுவர்களை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்திருந்துள்ளார். அந்த சிறுவர்களை வேறு நாடுகளுக்கு அனுப்பவோ அல்லது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பவோ அவர் தயாராக இல்லை என தெரிய வந்ததை அடுத்து அந்த சிறுவர்கள் வேறு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த இளவயது சிறுவர்களை கட்டாயப்படுத்தி இதுவரை 5 முறைக்கும் மேல் உறவு கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். விசா…

    • 0 replies
    • 454 views
  23. சீனாவிடம் பேச்சு நடத்துங்கள் என திபெத் மதகுரு தலாய் லாமா அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார்.அமெரிக்க அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் திபெத் மதகுரு தலாய் லாமா சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ”திபெத் விடுதலை குறித்து ஒபாமாவிடம் தலாய் லாமா தெரிவித்தார். மேலும் தனது பிரதிநிதிகளுடன் சீன அரசு மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குமாறும், தலாய் லாமா கூறியுள்ளார். சீனாவில் உள்ள திபெத்தியர்களின் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு ஒபாமா ஆதரவு தெரிவித்தார்” . இவ்வாறு வெள்ளை மாளிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஒபாமா-தலாய் லாமா சந்திப்புக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த சந்திப்பு இருநாடுகளின் உறவில் பாதிப்பை ஏற்படு…

  24. அல்­ஜீ­ரி­யா­வுக்கு கடத்­தி­ச்செல்­லப்­பட்ட 20 சிறார்கள் உட்பட 34 அக­திகளின் சட­லங்கள் நைஜீ­ரிய பாலை­வ­னத்தில் கண்டுபிடிப்­பு அல்ஜீரியா நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட 20 சிறார்கள் உட்­ப­ட 34 அகதிகள் நைஜீரிய பாலைவனத்தில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்­து நைஜீரிய உள்துறை அமைச்சகம் நேற்று முன்­தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் 20 சிறார்­கள் என 34 பேர் கடந்த வாரம் பாலைவனத்தினை கடக்க முயன்று பின்னர் பலியாகி உள்ளனர் என தெரிவித்துள்ளது. அதேவேளையில் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவர்கள் மரணம் அடைந்திருக்கல…

  25. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு சேகரித்து வைத்துள்ளதாக கூறப்படும் கொலைப் பட்டியலில் 151 கனேடியர்களின் பெயர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் உலகெங்கிலும் உள்ள 8,300 நபர்களின் முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஐ.எஸ். அமைப்பு சேகரித்து வைத்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கனேடியர்கள் 151 பேரில் பெரும்பாலும் பெண்கள் என தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஈடுபாடு காட்டும் நபர்களின் பெயர் முகவரிகளை அந்த அமைப்பு சேகரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியளிக்கும் இந்த தகவலை மத்திய கிழக்கு நாடுகளை மையமாக கொண்டு செயல்படும் MEMRI என்ற ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. பட்டியல் மிகவும் பெரிதாக இருப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.