உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26894 topics in this forum
-
இன்றைய நிகழ்ச்சியில் - முறியும் நிலையிலுள்ள சிரியாவின் போர் நிறுத்தத்தை காப்பாற்ற ஐநா தூதர் ரஷ்யா விரைந்தார். அதேவேளை, ஐஎஸ் அமைப்புக்கு எதிராக மின்னணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறது. - புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு புதிய சாதனை. நோய்க்கான சிகிச்சைக்கும், அதனை தடுக்கவும் சாத்தியமான புதிய வழியை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். - யானைத்தந்தங்களின் கையிருப்பு அதிகரித்து வரும் உலகின் ஒரே நாடான ஜப்பானில் சட்டவிரோத தந்த விற்பனை குறித்த பிபிசியின் ஆய்வு.
-
- 0 replies
- 278 views
-
-
எரிந்து கொண்டிருக்கும் நான்காவது மாடியில் இருந்து ஒவ்வொரு பிள்ளையாக யன்னலால் தூக்கி போட்டு தானும் குதித்த தாய். நால்வரையும் காப்பாற்றிய அமெரிக்க படையினர். (CNN)The scenario, captured in mobile phone footage, is a mother's nightmare. On the fourth story of a burning building in Pyeongtaek, South Korea, a woman dangles her baby out the window as smoke billows from two floors below. http://www.cnn.com/2016/05/03/asia/south-korea-fire-rescue/index.html
-
- 1 reply
- 338 views
-
-
சிரியா உள்நாட்டுப் போர்: ரஷ்யாவிடம் உதவி கோருகிறது அமெரிக்கா சிரியாவின் அலெப்போ நகரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந் திருப்பதால் ரஷ்யாவிடம் அமெரிக்கா உதவி கோரியுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் மிதவாத எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் சில பகுதிகள் உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சியால் அதிபர் ஆசாத்துக்கும் மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அண்மையில் சண்டைநிறுத்தம் அமலுக்கு வந்தது. அதன்படி தலைநகர் டமாஸ்கஸ், லத்திகா உள்ளிட்ட பகுதிகளில் போர் ஓய்ந்துள்ளது. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள்…
-
- 0 replies
- 411 views
-
-
இமயமலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் 16 ஆண்டுகளின் பின் கண்டுபிடிப்பு இமயமலையில் பனிச்சரிவு ஒன்றில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறிகள் இரண்டு பேரின் உடல்கள் 16 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அலெக்ஸ் லோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் டேவிட் பிரிட்ஜெட்ஸ் புகழ்பெற்ற மலையேறிகளான அலெக்ஸ் லோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் டேவிட் பிரிட்ஜெட்ஸ் ஆகியோர் திபெத்தில் உள்ள ஷிஷாபங்மா மலையுச்சிக்கு சென்று கொண்டிருந்தபோது பலியாகியிருந்தனர். அதே மலை உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்த மற்ற இருவர் இவர்களின் உடல்களைக் கண்டுபிடித்துள்ளனர். உருகும் பனிப்பாறை ஒன்றிலிருந்து அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் ம…
-
- 0 replies
- 437 views
-
-
'ஒபாமா அவுட்' என்று கூறியபடியே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய ஒபாமா! (வீடியோ) வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடான பத்திரிகையாளர்கள் இறுதி சந்திப்பு நடந்தது. இதில் மிகவும் நகைச்சுவையாக தகவல்களை ஒபாமா பகிர்ந்து கொண்டுள்ளார். வழக்கம் போல் டொனால்டு ட்ரம்பை பற்றி பேசிய ஒபாமா, "அவருக்கு வெளிவிவகாரக் கொள்கைகள் பற்றி தெரியாது என்கிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மிஸ்.ஸ்வீடன், மிஸ். அர்ஜென்டினா என வெளிநாட்டவர்களுடன்தான் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். அண்மையில் லண்டன் சென்றிருந்தபோது, இளவரசர் ஜார்ஜ் அரசு விதிமுறைகளை மீறி குளியலறை ஆடையுடன்தான் என்னைச் சந்தித்தார். அது என் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. லண்டன் சென்றிருந்த போது மகாராணி…
-
- 1 reply
- 595 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் • ஸீக்கா வைரஸ் முன்பு நினைத்திருந்ததைவிட அதிக ஆபத்தானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை; • வடகொரியாவில் கொண்டாட்டங்கள் - நான்கு தசாப்தங்களில் நடக்கும் முதலாவது ஆளும் கட்சியின் தேசிய மாநாடு - மிகவும் ரகசியமான தேசத்திலிருந்து பிபிசியின் நேரடிக் குறிப்பு; • யானைகளைக் காப்பாற்றும் முயற்சி - வேட்டையே தீர்வாக முடியும் என்னும் நமிபியாவின் வித்தியாசமான முயற்சியை நேரில் சென்று ஆராயும் பிபிசியின் பிரத்யேகச் செய்திக் குறிப்பு ஆகியவற்றைக் காணலாம்.
-
- 0 replies
- 234 views
-
-
ஈக்குவடோர் பூமியதிர்ச்சி இடிபாடுகளின் கீழிருந்து 13 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட வயோதிபர் ஈக்குவடோரை 7.8 ரிச்டர் பூமியதிர்ச்சி தாக்கி 13 நாட்களின் பின் கட்டட இடிபாடுகளின் கீழிருந்து 72 வயது வயோதிபர் ஒருவர் அதிசயிக்கத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த மீட்பு சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மானுவேல் வஸ்குயஸ் என்ற அந்த நபர் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வெனிசுலாவைச் சேர்ந்த மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி ஈக்குவடோரை தாக்கிய பாரிய பூமியதிர…
-
- 0 replies
- 207 views
-
-
முகத்திரையை தடை செய்ய, வலதுசாரி ஜெர்மனியக் கட்சி கோரிக்கை ஜெர்மனிக்கான மாற்று எனும் வலதுசாரி கட்சி, இஸ்லாம் ஜெர்மனிக்கு உரியது அல்ல எனக் கூறும் தமது தேர்தல் அறிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளது. ஜெர்மனிக்கான மாற்று எனும் கட்சி இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது ஸ்டுட்கார்ட் நகரில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், இஸ்லாமிய கோபுரங்கள், தொழுகைக்கான அழைப்பு மற்றும் முகத்தை மறைக்கும் முகத்திரை ஆகிவை தடை செய்யப்பட வேண்டும் எனும் தீர்மானத்தையும் அக்கட்சி நிறைவேற்றியுள்ளது. கடந்த ஒராண்டில் நாடு முழுவதும் அக்கட்சிக்கான ஆதரவு பெருகி வந்துள்ளது என அங்குள்ள பிபிசியின் செய்தியாளர்கள் கூறுகின்றனர். பெடிகா எனும் அ…
-
- 0 replies
- 322 views
-
-
சிரிப்புடன் விடைபெற்றார் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதிகள், ஆண்டுதோறும் உரையாற்றும் வெள்ளை மாளிகைச் செய்தியாளர்கள் விருந்தில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இறுதியாகக் கலந்துகொண்டார். அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்நிகழ்வில், அமெரிக்காவின் அரசியல்வாதிகள், செய்தியாளர்கள், பிரபலங்களெனப் பலர் கலந்துகொண்டனர். வழக்கத்தைப் போலவே, அமெரிக்க ஜனாதிபதி, நகைச்சுவைமிகுந்த தனது உரையை ஆற்றினார். 8ஆவது முறையாக உரையாற்றின ஜனாதிபதி ஒபாமா, கடந்த காலங்களில் தான் உரையாற்றின புகைப்படங்களைக் காண்பித்து, தனக்கு வயதாகிவிட்டது என்பதை வெளிப்படுத்தியதோடு, முன்னெரெப்போதுமில்லாததைப் போன்று, அவருக்கான ஆதரவு, அமெரிக்காவில் அதிகரித்துள்ளதையும் …
-
- 0 replies
- 790 views
-
-
இராக்கில் இரட்டைக் கார்குண்டுத் தாக்குதல் பலர் பலி இராக்கில் நடைபெற்ற இரட்டைக் கார்குண்டுத் தாக்குல்களில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இராக்கில் தொடரும் குண்டுத் தாக்குதல்களில் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர் இத்தாக்குதல்கள் நாட்டின் தென் பகுதியிலுள்ள சமாவா நகரில் இடம்பெற்றுள்ளது. இதில் 35 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு குண்டுத் தாக்குஹல் மாகாண அரசின் கட்டடம் ஒன்றையும், மற்றொன்று பேருந்து நிலையம் ஒன்றையும் இலக்கு வைத்து நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இத்தாக்குதல்களுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. இதனிடையே இராக்கிய நாடாளுமன்றத்த…
-
- 0 replies
- 276 views
-
-
ஐரோப்பா செல்ல முயன்ற குடியேறிகள் 84 பேர் லிபியக் கடலில் 'மூழ்கினர்' லிபியாவை அண்டிய கடலில், படகு ஒன்று மூழ்கியதில் குடியேறிகள் 84 பேர் காணாமல்போயுள்ளதாக ஐஓஎம் என்ற குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு கூறுகின்றது. லிபியாவின் சப்ராட்டா என்ற இடத்திலிருந்து 4-மைல் தூரத்தில் அவர்களின் காற்றடைக்கப்பட்ட டிங்கி படகு மூழ்கிய நிலையில், 26 பேரை மீட்கப்பட்டுள்ளதாக ரோம் நகரில் உள்ள கடலோரக் காவல்படையை மேற்கோள்காட்டி இத்தாலிய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டில், இதுவரை சுமார் 27 ஆயிரம் குடியேறிகள் படகுமூலம் இத்தாலியை வந்தடைந்துள்ளனர். பால்கன் நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், படகு மூலம் கடப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் எதிர்…
-
- 0 replies
- 444 views
-
-
சிரியாவில் 2 ஆண்டுகளில் 4,000 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஐஎஸ் கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 4,000 பேரை ஐ.எஸ். தீவிரவாத அமைப்ப மரண தண்டனை மூலம் கொன்று குவித்துள்ளதாக அந்நாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. அதாவது ஜூன் 2014-ல் ஐஎஸ்ஐஎஸ். அறிவிப்பு தினம் முதல் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. வேண்டாதவர்களை, இயக்கத்தை எதிர்ப்பவர்களை, அயல்நாட்டினரை என்று பல்வேறு தரப்பினரையும், சுட்டுக் கொல்லுதல், தலையை துண்டித்தல், கல்லெறிந்து கொல்லுதல் மற்றும் கட்டிடங்களிலிருந்து தூக்கி வீசுதல் என்று பல்வேறு கொடூரமான விதங்களில் மரண தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது ஐ.எஸ். ஓர்பாலினச் சேர்க…
-
- 0 replies
- 438 views
-
-
சுட்டெரிக்கும் எல் நீனோவைத் தொடர்ந்து மூழ்கடிக்க வருகிறது லா நீனா! inShare ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல் நீனோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் “லா நீனா’ சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. உலகில் மிக அதிக அளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியட்நாமில், கடந்த 100 ஆண்டுகளி…
-
- 1 reply
- 706 views
-
-
பாகிஸ்தானுக்கு போர் விமானம்: அமெரிக்காவின் முடிவில் மாற்றம் பாகிஸ்தானுக்கு ரூ. 4,650 கோடி மதிப்புள்ள 8 எஃப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்க அதிபர் ஒபாமா அரசு முடிவு செய்தது. ஆனால், இதற்கு பெரும்பாலான அமெரிக்க எம்.பி.க்கள். எதிர்ப்பு தெரிவித்தனர். தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்குப் பதிலாக எஃப்-16 ரக போர் விமானங் களை இந்தியாவுக்கு எதிராகவே பாகிஸ்தான் பயன்படுத்தும் என அமெரிக்க எம்.பி.க்கள் பலர் கவலை தெரிவித்தனர். இந்த போர் விமானங்களின் மதிப்பு 70 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.4,650 கோடி). இத்தொகையில் 43 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.2853 கோடி) அமெரிக்க அரசு மானியமாக வழங்கும். பாகிஸ்தான் 27 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 179…
-
- 0 replies
- 335 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * சிரியாவின் அலெப்போ நகரில் மேலும் உயிர்ப்பலிகள்- வன்முறைகளை நிறுத்துமாறு ஐநா தலைமைச் செயலர் கோரிக்கை; * அழிந்துபோகாமல் காப்பாற்ற முடியுமா? சட்டவிரோத யானை வேட்டைகளை தடுப்பது பற்றி ஆப்பிரிக்கத் தலைவர்கள் ஆராய்கின்றனர்; * ஜப்பானில் ஒல்லி உடம்புக்கு ஆசைப்பட்டு- உணவுப் பழக்கம் குறித்த மன அழுத்தங்களில் சிக்கியுள்ள ஆயிரக் கணக்கான பெண்கள் குறித்த செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 319 views
-
-
நோர்வேயில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து – 11 பேர் பலி -இருவரைக் காணவில்லை 29 ஏப்ரல் 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நோர்வேயில் 13 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில், அதில் சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர். இருவரைக் காணவில்லை. இன்றைய தினம் நோர்வேயின் கல்பாக்ஸ் எண்ணெய் வயலில் இருந்து பெர்ஜன் நகருக்கு 11 ஊழியர்கள் உள்பட 13 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர் டியூராய் தீவுக்கு அருகே பறந்தபோது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொருங்கியுள்ளது. விழுந்தபோது ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதில் இருந்து கரும்புகை எழுந்ததாகவும் அங்கிருந்து தகவல் வெளியானது. தகவல் அறிந்த மீட்புக் குழுவ…
-
- 11 replies
- 1.5k views
-
-
சிரியாவில் குழந்தைகள் மருத்துவமனை மீது விமானத் தாக்குதல்.- 50 பேர் பரிதாப மரணம். சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் அரசுப்படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஐந்து ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டுப் போர் அமெரிக்கா, ரஷியா, உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அங்கு தற்போது சண்டை நிறுத்தம் அமுலில் இருந்து வந்தாலும், அதையும் மீறி சில தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகரை மீட்கும் முயற்சியில் அரசுப்படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதற்காக அரசுப்படைகள் நடத்தும் தாக்குதல்களில் அப்பாவி மக்களும்கொல்லப்படுகின்றன…
-
- 0 replies
- 360 views
-
-
'கட்டாய நாடு கடத்தலுக்கு' ஆளான என்னிடம் இந்தியா திரும்பும் திட்டம் இல்லை: மல்லையா விஜய் மல்லையா. | கோப்புப் படம்: பிடிஐ. 'கட்டாய நாடு கடுத்தல்' நிலைக்கு தான் ஆளானதாகவும், இப்போதைக்கு இந்தியா திரும்பும் எண்ணம் இல்லை என்றும் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'ஃபினான்ஸியல் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நான் இந்தியா திரும்புவதற்கே நிச்சயமாக விரும்புகிறேன். ஆனால், இப்போது நிலைமை கைமீறிவிட்டது. என் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. அரசு அடுத்து என்ன செய்யும் என்று தெரியவில்லை. இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்வதே முக்கியம். மக்களை மட்டுமின்றி அரசிடமும் தேவையின…
-
- 0 replies
- 405 views
-
-
தன்னை தீமூட்டிக் கொண்ட நவ்ரு அகதி மரணம் நவ்ரு தடுப்பு நிலையத்தில் தன்னை தீ மூட்டிக் கொண்ட ஈரானிய அகதியொருவர், பிறிஸ்பேர்ண் வைத்தியசாலையில் மரணமடைந்ததாக குடியேற்ற அமைச்சர் பீற்றர் டுற்றன் உறுதிப்படுத்தியுள்ளார். தனது உடம்பின் பெரும்பாலான பகுதிகள் எரிவடைந்த நிலையில், 23 வயதான ஈரானியரான ஒமிட், பிறிஸ்பேர்ண் வைத்தியசாலைக்கு நேற்று எடுத்து வரப்பட்டிருந்தார். இந்நிலையில், மரணமடைந்தவரின் மனைவிக்கும் நண்பர்களுக்கும் தகுந்த ஆதரவு வழங்கப்படும் என அறிக்கையொன்றில் டுற்றன் தெரிவித்துள்ளார். கன்பெராவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகவரகத்தின் பணியாளர்கள் (யு.என்.எச்.சி.ஆர்) விஜயம் செய்த நிலையிலேயே, நவ்ரு தடுப்பு நிலையத்துக்கு வெள…
-
- 0 replies
- 391 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகள் உளவு பார்த்த குற்றச்சாட்டில் தம்மால் பிடிக்கப்பட்ட இருவருக்கு சிலுவையில் அறைந்த பின்னர் தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செய்திகளை வெளியிட்டுள்ளன. சிரிய ரக்கா நகரில் படமாக்கப்பட்டு' உளவாளிகளை அறுவடை செய்தல்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வில்லாயத் அர் ரக்கா (ரக்கா மாகாணம்) என்ற பெயரிலான ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஐ.எஸ். தீவிரவாதியொருவர், செம…
-
- 0 replies
- 475 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் - அமைச்சரவை மாற்றத்துக்கான ஒரு வாக்கெடுப்பை இராக்கிய நாடாளுமன்றம் பின்போட்டுள்ளது. அரசியல் நெருக்கடி அங்கு தெருப் போராட்டங்களாக வெடித்துள்ளது குறித்து பிபிசியின் தகவல். - பாகிஸ்தானில் பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்ட ஒரு பெண் செய்தியாளரை பாதுகாப்புப் படையினரே கடத்தியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். - இரண்டாம் உலகப்போரின்போது பாலியல் விடுதியாக ஜப்பானிய அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட வீட்டை இடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.
-
- 0 replies
- 364 views
-
-
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரிட்டிஷ் அரசுக்கு எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மல்லையா தற்போது பிரிட்டனில் உள்ளார். மும்பையில் உள்ள நீதிமன்றம் ஒன்று அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்ததை அடுத்து கடந்த வாரம் அவரது ராஜாங்கக் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது. மல்லையா கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் கிங்ஃபிஷர் பீர் ஆகிய நிறுவங்களின் முன்னாள் உரிமையாளர். மல்லையாக கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளதாக இந்தியாவின் நிதி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவரது ஏர்லைன்ஸ…
-
- 0 replies
- 296 views
-
-
அகதிகளுக்காக கண்கலங்க முடியாது: அவுஸ்திரேலியா படகில் வரும் அகதிகளுக்காக அவுஸ்திரேலியா கண்கலங்க முடியாது என அவுஸ்திரேலியாவின் பிரதமர் மல்கொம் டேர்ண்புல் இன்று வியாழக்கிழமை (28) தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு வெளியேயுள்ள செயற்பாட்டு முகாமை மூடவும் என பப்புவா நியூ கினி உத்தரவிட்டமையை அடுத்து, டேர்ண்புல்லின் குடியேற்றக் கொள்கை சிக்கலுக்குள்ளாகிய மறுதினமே மேற் படி கருத்து வெளியாகியுள்ளது. எதிர்வரும் வாரங்களில் தேர்தலை எதிர்கொள்ள எதிர்பார்த்துள்ள மல்கொம் டேர்ண்புல், படகின் மூலமாக வந்தடைந்த உண்மையாக அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியேற்றுவதாலும், மேலும் பலர் ஆபத்தான பயணத்தைத் தொடர ஊக்குவிப்பதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார். ஆட்…
-
- 0 replies
- 521 views
-
-
கட்டார் அரச குடும்பத்தின் முக்கிய நிதி ஆவணங்கள் இணையத்தில் அம்பலம். கட்டார் மன்னர் தமிம் பின் ஹமாட் அல் அதானியின் குடும்பத்தின், வங்கி கடவுச் சொற்கள் மற்றும் முக்கிய தரவுகளை இணைய ஊடுருவிகள் வெளியிட்டுள்ளதாக அல் ஜெசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தகவல் இணையத்தில் வெளியிடப்பட்டமையை அல் ஜெசீரா உறுதிப்படுத்தியுள்ளதுடன் வெளியிடப்பட்ட இந்த தரவுகள் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. கட்டாரின் தேசிய வங்கியின் பாதுகாப்பு பிரிவிடம் இருந்து இணையம் மூலமாக இந்த தரவுகள் திருடப்பட்டுள்ளதாகவும், திருடப்பட்ட தரவுப் பட்டியலில் குறித்த வங்கியின் ஆயிரக்கணக்கான வாடிக்கையா…
-
- 0 replies
- 336 views
-
-
ராகஸ்: கடும் மின்சாரப் பற்றாக்குறை நிலவி வருவதால் வெனிசுலாவில் வாரத்தில் 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு, 2 நாட்கள் மட்டுமே பணி நடைபெறும். தென் அமெரிக்காவிலுள்ள, வெனிசுலா நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து அங்கு மின்சார தட்டுப்பாடு நிலவுகிது. மின்சாரம் இல்லாத காரணத்தால், அந்நாட்டு அரசு அலுவலகங்கள் வாரத்தில் திங்கள், செவ்வாய் கிழமை மட்டுமே செயல்பட உள்ளது. மிக அத்தியாவசியமான பணிகளைத் தவிர, பிற பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளுக்கு புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்கள் என்பதால், திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்கள் மட்டுமே இனி அரசு அலுவலகங்கள் திறந்திருக்கும்.http://tamil.oneindia.com/news/…
-
- 1 reply
- 562 views
-