உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26892 topics in this forum
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் கொலைவழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுவிப்பதாக முடிவு எடுத்துள்ளதாகவும், அதற்கான கருத்தை கேட்டு மத்திய அரசின் உட்துறைச் செயலருக்கு, தமிழக தலமைச்செயலர் ஞானதேசிகன் கடிதம் எழுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தின் இந்தக்கைதிகளை விடுதலை தொடர்பான முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெற்றிருக்கிறது மத்திய அரசு. குற்றப்புலனாய்வுப் பிரிவால் குற்றம் சட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்…
-
- 6 replies
- 526 views
-
-
அமெரிக்கத் தேர்தலில் அதிகரிக்கும் பிளவுக்கு என்ன காரணம்? அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான கட்சி மட்ட தேர்தல்கள், அந்த நாடு அரசியல் ரீதியாக எவ்வாறு பிளவு பட்டிருக்கிறது என்பதை காண்பிக்கின்றன. குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒரு நாட்டின் எதிரெதிர் அரசியல் கட்சிகள் என்றில்லாமல் ஒருவரை ஒருவர் அறிந்திராத இரு வேற்றுகிரகவாசிகள் போல மாறிவருவதாக அறிவுஜீவிகள் கூறுகிறார்கள். அமெரிக்கத் தேர்தலிலும் அரசியலிலும் அதிகரித்துவரும் கடும்போக்கு நிலைப்பாடுகள் மற்றும் வேகமாக மறைந்துவரும் மிதவாத மையநிலைப்பாடுகள், அதற்கான காரணிகள் குறித்த ஒரு விரிவான பார்வை. http://www.bbc.com/tamil/global/2016/03/1603…
-
- 0 replies
- 427 views
-
-
ஏழு தமிழர் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்: பெ.மணியரசன் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராசீவ் கொலை வழக்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய 7 தமிழர்கள், தாங்கள் 20 ஆண்டுகளைக் கடந்தும் நீண்ட காலம் சிறையில் வாடுவதைக் குறிப்பிட்டு, தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு செய்திருந்தனர். இதனடிப்படையில், தமிழ்நாடு அரசு இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது என முடிவு செய்து நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்திற்குக் கருத்துக் கேட்டு இன்று, கடிதம் அனுப்பியிருக…
-
- 0 replies
- 677 views
-
-
இந்தியர்களை அவமதித்தாரா மார்ட்டினா நவ்ரடிலோவா ?: ட்விட்டர் காரசாரம்! பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரடிலோவா இந்தியாவையும் இந்திய அரசியல் சூழலையும் அவமதிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்துகளை பகிர்ந்துள்ளார் என அவருக்கு எதிராக எழுந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்திருக்கிறார். ஜே.என்.யூ மற்றும் வேறு சில பல்கலைகழங்களில் வெடித்துள்ள மாணவர் போராட்டங்கள் குறித்தும் அதன் விளைவுகள் குறித்து ஆளும் அரசை சாடும் வகையில் எழுதப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் இரண்டு கட்டுரைகளை பிப்ரவரி 22 ஆம் தேதி மார்டினா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதிலிருந்து இவர் கருத்துக்கு எதிரான காரசாரமான பதிவுகளை ட்விட்டரில் பலர் பதிவேற்றி இவரை வசைபாடி வருகின்றனர். ‘டென்னிஸ் பற்றி…
-
- 0 replies
- 361 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சுமத்ரா தீவுகளில் ஏற்பட்ட பூகம்பம் ஒன்றை அடுத்து இந்தோனேசியா சுனாமி எச்சரிக்கை விடுத்து பின்னர் அதனை மீளப்பெற்றது. - அமெரிக்க அதிபர் தேர்தலுகான வேட்பாளர் தேர்வுகளில் இரு முக்கிய கட்சிகளின் முன்னணி வேட்பாளர்களாக குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பும் ஜனயாகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனும் பெரு வெற்றிகளை பெற்றுள்ளனர்! - பிரிட்டனின் சுகாதார சேவைக்காக பிலிப்பைன்ஸில் தாதிகளை ஆட்சேர்க்கும் அதிகாரிகள்.
-
- 0 replies
- 288 views
-
-
(CNN)A piece of wreckage apparently from a Boeing 777 -- like the missing MH370 airliner -- was found washed ashore over the weekend on the coast of Mozambique, a U.S. official told CNN on Wednesday. The newly discovered debris is on its way to Malaysia for further examination. The wreckage is a piece of horizontal stabilizer skin, the U.S. official said. The horizontal stabilizer is the part of the aircraft's tail that is horizontal as the plane flies. A second aviation source said there was no record of any Boeing 777 missing other than Malaysia Airlines Flight 370, which disappeared on March 8, 2014, wi…
-
- 0 replies
- 574 views
-
-
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் மேற்குபகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாரிய நில நடுக்கத்தையடுத்து இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை. இதேவேளை, குறித்த நில அதிர்வினால் பாதிப்பு கிடையாது என்றும் இருந்தாலும் சற்று கடற்புர வாழ்மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. http://www.tamilwin.com/show-RUmuyDTWSWewyD.html
-
- 0 replies
- 269 views
-
-
வாஷிங்டன், பாகிஸ்தானுக்கு எதிராக போரிட ஒசாமா பின்லேடன் விரும்பியதாக, அமெரிக்க கைப்பற்றிய ஆவணங்களில் தெரியவந்து உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் 110-மாடி இரட்டை கோபுரத்தின் மீதும் விமானங்களை மோதி கடந்த 2001 செப்டம்பர் 11-ந் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை மூளையாக இருந்து செயல்படுத்தியவர் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன். இந்த பின்லேடன் பாகிஸ்தானில் அப்போட்டாபாத் என்ற இடத்தில் பதுங்கியிருந்தபோது, கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி, அமெரிக்க …
-
- 0 replies
- 205 views
-
-
அமெரிக்கா: வேட்பாளர் போட்டியில் ட்ரம்ப், ஹில்லரி முன்னிலையில் ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் ஹில்லரி கிளிண்டன் ஆகிய இருவரும் வரும் அதிபர் தேர்தலில் அவரவர் கட்சியில் அதிக ஆதரவுபெற்ற வேட்பாளர்களாக தங்களின் நிலையை மீண்டும் உறுதிசெய்து கொண்டுள்ளனர். இரண்டு கட்சிகளினதும் அதிபர் தேர்தல் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய உட்கட்சி போட்டியாக பார்க்கப்பட்ட, நேற்றைய 'சூப்பர் டியூஸ்டே' வாக்குப்பதிவில் இருவரும் தங்களின் கட்சி உறுப்பினர்களிடையே அதிக ஆதரவு பெற்றவர்களாக தங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். குடியரசுக் கட்சியின் வேட்ப…
-
- 0 replies
- 260 views
-
-
உலக பணக்காரர்கள் பட்டியல்; 17 வது ஆண்டாக பில்கேட்ஸ் முதலிடம்! நியூயார்க்; பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2016 ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 17-வது முறையாக மீண்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். பிரபல அமெரிக்க வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் உலக அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த 21 ஆண்டுகளாக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுவரும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது. மொத்தம் 1810 பேர் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்த பட்டியலில் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பெற்றுவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் தனது இடத்…
-
- 1 reply
- 769 views
-
-
அல்-கொய்தா தலைவர் பின்லேடன், கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, அந்த இடத்தில், 113 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அராபிய மொழியில் இருந்த அந்த ஆவணங்கள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன.அவற்றில் முக்கியமான சில ஆவணங்களை அமெரிக்க உளவு அமைப்புகள் தற்போது வெளியிட்டுள்ளன. அவற்றில், கையால் எழுதப்பட்ட ஒரு கடிதமும் அடங்கும். அது, 1990-களில் பின்லேடனால் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. அதை பின்லேடனின் கடைசி உயிலாக அமெரிக்க உளவு அமைப்புகள் வர்ணிக்கின்றன.ஏனென்றால், சூடான் நாட்டில் தான் விட்டுச்சென்ற 29 மில்லியன் டாலரை (சுமார் ரூ.200 கோடி), தனது இறப்புக்கு பிறக…
-
- 0 replies
- 227 views
-
-
ஜிஹாதியத்திற்கு உயில் எழுதி வைத்த ஒஸாமா பின் லேடன்: தமிழில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அல் கய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒஸாமா பின் லேடன், ஜியாதிய போராட்டத்திற்காக தனது சொத்துக்களை உயிலாக எழுதி வைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. பின் லேடனின் 29 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்கள் இவ்வாறு உயிலாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை அமெரிக்க ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. அல்லாவின் பெயரினால் தமது சொத்துக்களை ஜிஹாத் போராட்டத்திற்கு பயன்படுத்துமாறு பின் லேடன், தனது உயிலில் குடும்ப உறுப்பினர்களிடம் கோரியுள்ளார். எவ்வாறெனினும் இந்த சொத்துக்கள் ரொக்கமா அல்லது வேறும் வகையிலான சொத்துக்களா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. …
-
- 0 replies
- 338 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவுக்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் - அல்ஹைய்தா தலைவர் ஓசாமாபின்லேடன்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா, பாரிய பேரழிவையேற்படுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் அதன் மூலம் மனித குலத்தை காப்பாற்ற முன்வரவேண்டும் என அல்ஹைய்தா தலைவர் ஓசாமாபின்லேடன் எழுதிய கடிதத்தை அமெரிக்க ஒபாமா நிர்வாகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. ஓசாமா பின் லாடன் பாக்கிஸ்தானிலுள்ள தனது மறைவிடத்தில் வைத்து மே2 2011 ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட வேளை அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இறுதி தொகுதியை ஓபாமா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் கையெழுத்திடப்படாத ,திகதி…
-
- 0 replies
- 232 views
-
-
'ஒன்றரை லட்சம் சிரியா குழந்தைகள் துருக்கியில் பிறந்துள்ளன'! ஜெனீவா: ஒன்றரை லட்சம் சிரியா குழந்தைகள் துருக்கியில் பிறந்துள்ளன என்று துருக்கியின் துணைப் பிரதமர் லுப்தி எல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக, ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தொடக்க கூட்டத்தில் துருக்கி துணை பிரதமர் எல்வன் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, மனிதாபிமானத்தின் பெரும் பகுதியை துருக்கி தன்னால் முடிந்த அளவுக்கு ஏற்றுள்ளது. துருக்கியில் பிறந்த சிரியா குழந்தைகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சத்து 52 ஆயிரமாக உள்ளது. எந்த அண்டைநாடுகளிலும் இல்லாத வகையில், 2.7 லட்சத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் எங்கள் நாட்டில் உள்ளனர்” என்று த…
-
- 1 reply
- 475 views
-
-
சுவிட்சர்லாந்தில், சிறிய குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை நாடுகடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்கும், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று, இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் திட்டம், அந்நாட்டின் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சியால் முன்வைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் குடியேறுபவர்களின் தொகை அதிகரிப்பதுடன், அதை ஒட்டி சமுகப் பிரச்சினைகளும் கூடிவருவதாக தெரிவித்த சுவிஸ் மக்கள் கட்சி, இதனால் சுவிஸ் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களும் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. பத்து ஆண்டுகளில் இரண்டு சிறிய குற்றங்களைப் புரிந்த எந்தவொரு வெளிநாட்டவரும், மேன்முறையீடு செய்யும் உரிமை எதுவும் இல்லாமல், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என வாக்க…
-
- 4 replies
- 655 views
-
-
அகதிகள் மீது பிரான்ஸ் பொலிஸார் தாக்குதல் பிரான்ஸ் நாட்டில் கலே பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த அகதிகளின் குடியிருப்புக்களை அகற்றச்சென்ற பொலிஸாருக்கும் அகதிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதால் பதற்ற நிலை உருவாகியுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அகதி மக்களின் எதிர்ப்பையும் மீறி பொலிஸ் அகற்ற முற்பட்ட வேளையில் இந்த குழப்பநிலை ஏற்பட்டது. இதன்போது, அகதிகள் பொலிஸார் மீது கற்பிரயோகத்தை மேற்கொண்டதிற்கு எதிராக அவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் தாரை பிரியோகித்தனர். மேலும் 23 அகதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். http://www.virakesari.lk/article/3…
-
- 1 reply
- 773 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பிரான்ஸின் கலே துறைமுகநகரில் குடியேறிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான செயற்பாட்டாளர்களுடன் கடந்த இரவு நடந்த மோதலை தொடர்ந்து அதிகாரிகள் , குடியேறிகளின் ‘’ஜங்கிள்’’ முகாமை தொடர்ந்து அழிக்கின்றனர். - ஸீகா வைரஸால் பக்கவாதம் மற்றும் மரணத்துக்கு வழி செய்யும் ஒரு மூளைக்கோளாறு வரலாம் என்பதற்கு புதிய ஆதாராங்கள் கிடைத்துள்ளன. - பிளாஸ்டிக் குப்பைக் கழிவை குறைக்க இந்தோனேசியா, பிளாஸ்டிக் பைகளுக்கு காசு அறவிடுகிறது. ஆனால், அது பலந்தருமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-
- 0 replies
- 293 views
-
-
லொசான் மாநகரசபைத் தேர்தலில் நமசிவாயம் அமோக வெற்றி! [Tuesday 2016-03-01 07:00] சுவிட்சர்லாந்து லொசான் மாநகரசபைக்குகு நேற்று நடைபெற்ற தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான தம்பிப்பிள்ளை நமசிவாயம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார். 9,833 வாக்குகளைப் பெற்று தனது அணி சார்பில் போட்டியிட்ட 100 பேரில் இவர் நான்காவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அது கடந்த முறை இவர் பெற்ற வாக்குகளை விட 4,020 அதிகமாகும். இவரது அணியில் முதலாவது இடத்திற்குத் தெரிவானவர் 10,001 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் இன்னமும் 169 வாக்குகளை இவர் மேலதிகமாகப் பெற்றிருந்தால் இவர் கட்சிப் பட்டியலில் முதலாவது இடத்தைப் …
-
- 0 replies
- 568 views
-
-
பிரிட்டனில் நாடாளுமன்ற உறுப்பினரே எதிர்கொண்டதாகக் கூறும் இனவெறி சம்பவம் பிரிட்டனின் நாடாளுமன்ற மக்களவையில் தான் அடிக்கடி இனவெறி சம்பவங்களை எதிர்கொள்வதாக, கறுப்பின நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். "பிரிட்டிஷ் மக்களவையில் இனவெறி" - நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு டான் பட்லர் என்ற அந்த பெண் எம்.பி, ஜமைக்காவிலிருந்து பிரிட்டனுக்குக் குடியேறிய பெற்றோர்களுக்குப் பிறந்தவர். முதலில் அவர் நாடாளுமன்றத்துக்கு 2005ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு தேர்தலில் மீண்டும் அவர் வெற்றி பெற்றார். தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தில் , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகப் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட மின் தூக்கியைப் ( லிஃப்ட்) பயன்படுத்தும்போது …
-
- 0 replies
- 524 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - போர் நிறுத்தம் தந்த தற்காலிக அமைதியால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க, மோதலில் அகப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரிவுபடுத்த ஐநா முயல்கிறது. - ஐரோப்பிய எல்லைகள் ஒவ்வொன்றாக மூடப்பட கிரேக்கத்தில் அகப்பட்டு, திண்டாடும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. - பாகிஸ்தானின் ஒரு மாகாண ஆளுநரை கொலை செய்த ஒரு முன்னாள் மெய்க்காப்பாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 478 views
-
-
கற்பை காப்பாற்ற தனக்கு தானே தீவைத்து கொண்ட சிறுமி! ஜெர்மனி: ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தனது கற்பை காப்பாற்றிக்கொள்ள, சிறுமி ஒருவர் தனக்கு தானே தீ வைத்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. உலகமுழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைபற்றி இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். ஈராக்கின் வடக்கு பகுதியில் வசித்து வரும் யாஷ்டி இனத்தை சேர்ந்த பல ஆண்களை கொன்று அவர்களின் மனைவி மற்றும் பெண்களை தங்களின் பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அதன் பின் சில காலம் கழித்து அந்த பெண்களை வேறு ஒருவருக்கு விற்று விடுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் தற்போது அவர்களி…
-
- 0 replies
- 514 views
-
-
`பெருங்கோடீஸ்வரர்கள் வாழும் முதல் ஐந்து நகரங்கள்' உலகில், பெரும் எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் அதிகம் வாழும் நகரம் என்ற பெருமையை, முதல் தடவையாக, சீனத் தலைநகர் பீஜிங்கில் பெற்றுள்ளது. பீஜிங்கில் உள்ள பெருங்கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 100 என ஆய்வு முடிவு ஒன்று கூறுகிறது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த நியூயார்க் நகரை பின்னுக்கு தள்ளி, பீஜிங் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இடண்டாம் இடத்தில் உள்ள நியூயார்க் நகரில், அந்த எண்ணிக்கை 95 ஆக உள்ளது. மூன்றாவது இடத்தில், மாஸ்கோ நகரமும், அதற்கு அடுத்ததாக ஹாங்காங், மற்றும் ஷாங்காய் நகரங்கள் ஆகியன உள்ளன. உலகில் பெருங்கோடீஸ்வரர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள் என்ற இந்த ஆண்…
-
- 0 replies
- 693 views
-
-
மகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். மகராஷ்டிரம் மாநிலம் தாணே அருகே சொத்துத் தகராறில் இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். தாணே மாநகர காவல் எல்கைக்குள்பட்டது கசார்வடாவலி பகுதியைச் சேர்ந்தவர் ஹசினில் வரேக்கர் (35). இவர் சொத்துத் தகராறு காரணமாக தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள், 6 பெண்கள் உள்ளிட்ட 14 பேரை சரமாரியாக நேற்று இரவு குத்திக் கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீஸார் கொலை நடந்த வீட்டுக்குச் சென்று பிர…
-
- 0 replies
- 480 views
-
-
அமெரிக்கா, ரஷ்யா முயற்சியால் போர் நிறுத்தம்: சிரியாவில் குண்டு சத்தம் ஓய்ந்தது குர்து போராட்டக் குழுக்கள் அடங்கிய சிரியா ஜனநாயக படை ஹசாகா பகுதியில் செயல்படுகிறது. அந்த படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் நேற்று துப்பாக்கிகளை மறந்து டேப்லெட்டில் பொழுதை போக்கினர். | படம்: ராய்ட்டர்ஸ் அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சி யால் சிரியாவில் நேற்றுமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு தற்காலிகமாக குண்டு சத்தம் ஓய்ந்திருப்பதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே பகைமை நீடிக்கிறது. அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் ஆசாத், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ப…
-
- 1 reply
- 425 views
-
-
நியூயார்க் நகரைக் கலங்கடித்த முதியவர்-சிறுமி திருமணம்(வீடியோ) நியூயார்க்: குழந்தைத் திருமணத்தைத் தடுக்கவும் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டுவரவும் நியூயார்க் நகரில் 65 வயது முதியவருக்கும் 12 வயது சிறுமிக்கும் நடத்தப்பட்ட நாடகத் திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள்,பாலியல் முறைகேடுகள் உலக நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அவசியமாகியுள்ளது. எனவே மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோபை பெர்சன் என்பவர் உருவாக்கியுள்ளார். அதன் மையமாக, 65 வயது முதியவரும் 12 வயதே ஆன சிறுமியும் திருமண உட…
-
- 2 replies
- 520 views
-