Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. 2016ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம்! சூரிச்: 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22-வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த உலக பொருளாதார மையம், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. சுமார் 60 நாடுகளில், நிலத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், பாரம்பரியம், வணிகம், வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார செல்வாக்கு போன்ற 24 தகுதிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து 16,200-க்கும் மேற்பட்ட மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகளாக உள்ளவர்கள். மற்றவர்கள் சாத…

  2. உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? பணம் எங்கே? உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இந்த வாரம் சுவிஸ்ஸிலுள்ள டாவோஸில் கூடுகின்றனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம். உலகளவில் அதிகப்படியான பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர் இச்சூழலில் உலகளவில் செல்வம் எங்கு எப்படி பரவியுள்ளது அது எப்படி மாறிவருகிறது என்பது குறித்த ஒரு பார்வை. பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் ஒரு உலகளாவியப் பிரச்சினை. ஆண்டுதோறும் கிரெடிட் ஸ்விஸ் எனும் ஸ்விஸ் வங்கி, உலகப் பொருளாதாரம் மற்றும் அது எங்கு எப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை நாடு வாரியாக, பிரதேச வாரியாக ஆய்வு செய…

  3. இன்றைய நிகழ்ச்சியில்… - முன்னாள் ரஷ்ய உளவாளி லிட்வினென்கோவின் மரணத்தை ஆராய்ந்த பிரிட்டிஷ் விசாரணை, நஞ்சு கொடுக்கப்படுவதற்கு அதிபர் புடினே ஒப்புதல் அளித்திருக்கலாம் என முடிவு தெரிவித்துள்ளது. - மதநிந்தனை செய்ததாக தவறாக நம்பி, தன் கையை தானே வெட்டிக்கொண்ட பாகிஸ்தானிய பையனை பிபிசி சந்தித்தது. - உலகின் எழில்மிகு சுற்றுலாத் தீவுகளில் ஒன்றான டொங்கோ தீவுமக்கள் எதிர்கொள்ளும் உடற்பருமன் பிரச்சினை குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல்.

  4. ஐ.எஸ். தீவிரவாதிகளை முந்திய ரஷ்யா: வெளியான அதிர்ச்சி தகவல்! சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட ரஷ்யா நடத்திய தாக்குதலிலேயே அதிக மக்கள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள் நாட்டு பேரில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் பஷார் அல் ஆசாத் படைக்கு எதிராக தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் ஆசாத்துக்கு உதவும் விதமாக கடந்த ஆண்டின் இறுதியில் ரஷ்யா போரில் களமிறங்கியது. இதையடுத்து வான் வழியாகவும், போர் கப்பல்கள் மூலமாகவும் தங்களது தாக்குதலை நடத்திவருகிறது. அதே வேளையில் ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதை விட அதிபருக்கு எதிரான குழுக்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நட…

    • 1 reply
    • 583 views
  5. நேதாஜி உடல் எரியூட்டப்பட்டதற்கான சான்றிதழ் வெளியீடு ! இந்திய தேசிய ராணுவத்தின் தலைவராக இருந்த நேதாஜியின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில், அவர் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் இறந்து விட்டதாக போஸ்பைல்ஸ். இன்போ என்ற பிரிட்டனை சேர்ந்த இணையதளம் நம்பத் தகுந்த தகவல்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜியுடன் பயணித்த இந்திய தேசிய ராணுவத்தின் கர்னல் முஜிபூர் ரகுமான்கான், கடந்த 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அளித்திருந்த அறிக்கையை அண்மையில், இந்த இணையதளம் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், நேதாஜியின் உடலை தானே எரியூட்டியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தற்போது அந்த இணையதளம் நேதாஜி எரியூட்டப்பட்டது தொ…

  6. இதுவும் போட்டோ ஷாப் வேலைதானாம்! கடந்த 2014ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது, பொதுக் கூட்ட மேடை ஒன்றை பிரதமர் மோடி துடைப்பத்தால் பெருக்குவது போன்ற படம் சமூக வலைதளங்களில் உலாவியது. கடந்த 1988-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக நரேந்திர மோடி இருந்த போது,இத்தகைய பணியில் அவர் ஈடுபட்டது போல, அந்த படத்தின் கீழ் விளக்கமளிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் இருப்பது மோடியா? அல்லது சித்து வேலையா? எனற அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார். இந்த நிலையில், ''அந்தப் படத்தில் இருப்பது மோடி அல்ல. ஃபோட்டோஷாப்பில் சில மாற்றம் செய்யப்பட்டு வேறு ஒரு உடலுடன் மோடியின் முகம் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல் பெறும் உரிம…

  7. எழுத்துப் பிழையால் சிக்கல்: 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை பாடப் புத்தக கேள்வி ஒன்றுக்கு எழுத்துப் பிழையுடன் பதில் எழுதிய 10 வயது முஸ்லிம் மாணவரிடம் இங்கிலாந்து போலீஸ் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆங்கில பாடப் புத்தகத்தில், 'நீ எங்க வசிக்கிறாய்?' என்ற கேள்விக்கு terraced house (மாடிவீடு) என்பதற்கு பதிலாக terrorist house (தீவிரவாதி வீடு) என்று எழுதியதால் இந்தப் பிரச்சினை உருவானது. இங்கிலாந்தின் வடகிழக்கைச் சேர்ந்த அந்த முஸ்லிம் மாணவர் லான்க் ஷ்யிரில் குடும்பத்தோடு வசிக்கிறார். பாடப் புத்தகத்தில் சிறுவன் எழுதி இருந்த பதிலை கண்ட பள்ளி ஆசிரியை உடனடியாக சிறுவனை விசாரிக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்தார். இ…

  8. இராக்கில் ஐஎஸ் வசம் அடிமைகளாக 3,500 பேர் தவிப்பு: ஐ.நா. ஐஎஸ் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட யாஷிதி இனப் பெண். | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். இராக்கில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 3,500 பேரை ஐஎஸ் இயக்கத்தினர் அடிமைகளாகக் கொண்டு கொடூர செயல்களில் ஈடுபடுவதாக ஐநா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவர்கள் அங்கு இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்கள் என்று குறிப்பிடும் வகையிலான கொடூர செயல்களில் ஈடுபடுவதாக ஐநா-வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ஐநா மனித உரிமைகள் ஆணையமும் மற்றும் இராக்குக்கான ஐநா உதவி மையமும் இணைந்து இது தொடர்பான கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இராக்கில் பல இடங்களை ஆக்கிரமித்துள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக…

  9. இன்றைய நிகழ்ச்சியில்… - பாகிஸ்தானில் மீண்டும் ஒரு ரத்தக்களரி. பல்கலைக்கழக வளாகம் ஒன்றில் ஆயுதபாணிகள் புகுந்து தாக்கியதில் பத்தொன்பது பேராவது கொல்லப்பட்டனர். - குடியேறிகள் நெருக்கடியை சமாளிக்கும் புதிய திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலிக்க, துருக்கிக்குள் செயலாற்றும் சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பலின் செயல்பாடுகளை ரகசியமாகப் படம்பிடித்தது பிபிசி. சீரற்ற இதயத் துடிப்புள்ள ஆண்களை விட பெண்களுக்கே உயிராபத்து மிக்க இதய பாதிப்பும் மூளைப் பாதிப்பும் வரும் ஆபத்து இருமடங்கு அதிகம் என்கிறது ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு.

  10. கடும்போக்குவாதம்: சிங்கப்பூரில் வங்கதேசப் பிரஜைகள் கைது சிங்கப்பூரில் கடும்போக்குவாதச் செயல்களில் பங்கேற்க திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வங்கதேசப் பிரஜைகள் இருபத்து ஏழு பேரை தடுத்துவைத்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டும் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஏனையோர் சிங்கப்பூரில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்களாக வேலைபார்த்துவந்த இவர்கள் அனைவரும் அண்மைய வாரங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் கடும்போக்கு கருத்துகளையும், ஜிகாதி சித்தாந்தம் தரவுகளையும் பரிமாறிக்கொண்ட ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றன…

  11. பின்லேடன் உடலை ரகசியமாக படம் எடுத்தவர் சிக்கினார்- எப்படி? ஒசாமா பின்லேடனின் உடலை புகைப்படம் எடுத்த கடற்படை அதிகாரி ஒருவர் அமெரிக்காவின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை, கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்கா, பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் வைத்து சுட்டுக்கொன்றது. பின்னர், அவரது உடலை கடலில் வீசிவிட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்தது. ஆனால், அது தொடர்பான புகைப்படங்கள் எதையும் தேச பாதுகாப்பு கருதி வெளியிடவில்லை. பின்லேடனை கொல்ல அமெரிக்கா அனுப்பிய அதிரடிப்படை கடற்படையை சேர்ந்த 'சீல் 6' என்ற பிரிவை சேர்ந்தது. இந்நிலையில், இந்த 'சீல்' கடற்படையில் இடம்பெற்றிருந்த அதிகாரி …

  12. கழுத்தை அறுத்து கொல்லும் கொடூரன் “ஜிகாதி ஜான்” மரணம் - உறுதி செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ் பெய்ரூட்: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் அப்பாவிகள் பலரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யும் வீடியோவில் முகமூடி அணிந்து தோன்றிய ஜிகாதி ஜான் ரக்கா நகர் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் உறுதி செய்துள்ளது. சிரியா, ஈராக்கில் பல்வேறு பகுதிகளை தங்கள்வசம் கொண்டுவந்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகளின் படை தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கிடையே தீவிரவாதிகள் பிணைக் கைதிகளை தலையை வெட்டியும், பெட்ரோல் ஊற்றி எரித்தும் வெறியினைத் தணித்துக் கொள்கின்றனர். பிணைய கைதிகள் கொடூர…

  13. தோற்றத்தால் விமானிக்கு 'உறுத்தல்': யு.எஸ். விமானத்தில் ஒரு சீக்கியர், 3 முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதால் சர்ச்சை அமெரிக்கன் ஏர்லைன்ஸ். | கோப்புப் படம். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து சீக்கிய இளைஞரும் அவரது இஸ்லாமிய நண்பர்களும் இறக்கிவிடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் தோற்றத்தைக் கண்டு அந்த விமானத்தின் விமானிக்கு உறுத்தலாக இருந்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவை பூர்விமாகக் கொண்ட சீக்கிய இளைஞர் ஷான் ஆனந்த்தும், 3 முஸ்லிம் இளைஞர்களும் கடந்த மாதம் டொரண்டோவிலிருந்து நியூயார்க்குக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றுகொண்டிருந்தனர். …

  14. பாகிஸ்தான் பல்கலை.யில் தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்: மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரம் பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி மாணவர்களை மீட்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர். | படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் பக்துவானில் சார்சடா என்ற இடத்தில் அமைந்துள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2014-ல் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பள்ளி மாணவர்கள் உட்பட 140 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவர் தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றது. அதே பாணியில் தீவிர…

  15. தீவிரவாத தாக்குதல்களால் ஈராக்கில் 22 மாதங்களில் 18,800 பேர் பலி 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈராக்கில் 18 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த காலப்பகுதியில் 36 ஆயிரம் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் கடந்த வருடம் மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 4 ஆயிரம் பேர் பலியானதுடன் 7 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேச்சாளர் ரவினா ஷம்தாசனி தெரி…

  16. அகதிகளுக்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் சுவிஸில் வாக்குப்பதிவு! விரைவில் திகதி அறிவிப்பு! [ புதன்கிழமை, 20 சனவரி 2016, 01:12.18 AM GMT ] சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதி வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் சில மாதங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு முக்கிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. அவை அந்நாட்டின் பிரதான கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளாகும். முதலாவதாக, அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கையாகும். சுவிஸில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அரசு கட்டிடங்களில் தங்க வைக்கக் கூடாது. மேலும், அகதிகளுக்கு இலவசமாக சட்ட ஆ…

  17. ஆங்கிலம் தெரியாதவர்கள் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படுவர் - கேமரூன் எச்சரிக்கை இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். எனவே இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு ஆங்கில தேர்வு நடத்தப்பட வேண்டியது அவசியம். ஒக்டோபர் மாதம் முதல் இந்த கொள்கை செயல்படுத்தப்படும். அதற்குள் தயார்படுத்திக்கொண்டு தேர்வில் சித்தி பெறாதவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இங்கிலாந்தில் குடி…

  18. இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கம் இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளது, தமது நாட்டுக்கும் இதர உலகத்துக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்துள்ளது என அதிபர் ஹஸன் ரௌஹானி கூறியுள்ளார். இரான் மீதான சர்வதேசத் தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு சர்வதேச அணுசகதி கண்கணிப்பு அமைப்பு, இரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுபடுத்தியுள்ளது என்பதை உறுதிசெய்த பிறகு, அது தொடர்பில் இரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. இதன் பிறகு நாட்டின் நாடாளுமன்றத்தின் உரையாற்றியபோதே அதிபர் ரௌஹானி இதைத் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து அனைவரும் மகிழ்கின்றனர் எனக் கூறும் இரானிய அதிபர், தமது பிராந்தியத்தில் போரை வ…

    • 5 replies
    • 539 views
  19. இருபத்தைந்து வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துபோன சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் காரணமாக, பெரும் வேலை வெட்டுக்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள். - ஜகார்த்தாவில் சென்ற வாரம் நடந்த தாக்குதல் பற்றி விசாரணைகள் நீடிக்கும் நிலையில், முக்கிய சந்தேகநபரின் சகோதரருடன் பிபிசி கண்ட செவ்வி. - புதுவகைப் படகுகளின் ஆக்கிரமிப்பால், அழியும் ஆபத்தில் சுடானின் மரப்படகு செய்யும் பாரம்பரிய கைத்தொழில்.

  20. ஐ.எஸ் தீவிரவாதிகளின் முதல் தோல்வி எது? ஐ.எஸ் தீவிரவாதிகள் அமைப்பு மிக மோசமான வருமான இழப்பை சந்தித்து வருவதால், உலகம் முழுவதும் உள்ள ஜிகாதிகளின் ஊதியத்தை பாதியாக குறைக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் மற்றும் வல்லரசு நாடான ரஷ்ய போன்ற நாடுகள் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது மோசமான தாக்குதல்களை நாள்தோறும் நிகழ்த்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் முக்கிய எண்ணெய் வளங்கள் மீது ரஷ்யா மற்றும் அமெரிக்க படையினர் பயங்கர தாக்குதல்களை நடத்தினர். இந்த தாக்குதல்களின் எதிரொலியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு மில்லியன் டாலர்கள் கணக்கில் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிரியாவில் உள்…

  21. ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் வான்வழித் தாக்குதல்: - 26 பேர் பலி [Tuesday 2016-01-19 07:00] ஏமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை விமானங்கள் போலீஸ் கட்டிடம் மீது நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.சனாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த காவல் துறையினரின் கட்டடத்தின் மீது சவூதி கூட்டுப் படையின் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் கட்டடம் தகர்ந்தது. ஏமன் தலைநகர் சனாவில் சவூதி கூட்டுப் படை விமானங்கள் போலீஸ் கட்டிடம் மீது நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.சனாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த காவல் துறையினரின் கட்டடத்தின் மீது சவூதி கூட்டுப் படையின் விமா…

  22. பாகிஸ்தானில் யூ டியூப் மீதான தடை நீக்கம் பாகிஸ்தானுக்கான பிரத்யேக யூ டியூப் உருவாக்கப்பட்டிருக்கிறது உலக அளவில் காணொளிகளைப் பகிரும் முன்னணி இணையதளமான யூ டியூபுக்கு பாகிஸ்தானில் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்துவந்த தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இஸ்லாமை இழிவுபடுத்தக் கூடிய காணொளியை பகிர்ந்ததாகக் கூறி யூ டியூப் இணையதளம் பாகிஸ்தானுக்குள் தடை செய்யப்பட்டிருந்தது. யூ டியூபை தற்போது நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் பாகிஸ்தானுக்கான பிரத்யேக யூ டியூப் இணையதளத்தை வடிவமைத்து செயற்பட வைத்திருப்பதால், யூ டியூப் இணையதளம் மீதான தடை இனிமேல் தேவையில்லை என்று பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்காக பிரத்யேகமாக வட…

  23. இன்றைய நிகழ்ச்சியில்… - மேட்ச் ஃபிக்ஸிங் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போது டென்னிஸ் விளையாட்டும் சிக்கியுள்ளது! பிரத்யேகமாக செய்தித் திரட்டியது பிபிசி! - சர்வதேச தண்டனைத் தடைகள் நீங்க இரானுக்கு இது மறக்கமுடியாத முக்கியத் தருணம்! புதிய தொழில்வாய்ப்புகள் பற்றி அண்டையிலுள்ள துபாயிலுருந்து ஒரு ஆய்வு! - எதிர்காலத்தில் ஒருவேளை மனித இனத்தையே காக்கும் பொக்கிஷமாகத் திகழக்கூடிய வடதுருவ விதைகள் காப்பகத்துக்கு ஒரு பயணம்!

  24. உச்ச நீதிமன்ற அதிரடி தீர்ப்பு :வைத்தியர்களின் உதவியுடன் கருணை கொலைக்கு அனுமதி. Sanjith January 17, 2016 Canada கனடாவில் வைத்தியர்களின் உதவியுடன் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் கருணை கொலை செய்வதற்கு அனுமதியளிக்க கனேடிய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் கருணை கொலையை ஒரு வருடத்திற்கு நடைமுறை படுத்த முடியாது என கூறியுள்ள நீதிமன்றம் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசத்தையும் நீதிமற்றம் வழங்கியுள்ளது. பிரான்ஸ் மொழி அதிகம் பேசப்படும் க்யூபெக் மாநிலத்தில் நோயாளி ஒருவர் வைத்தியரின் உதவியுடன் கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளதையடுத்து இத் தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம், நீதிமன்றம் வைத…

  25. 2015-ல் இந்தியாவின் முகநூல் வருவாய் 123.5 கோடி! [Monday 2016-01-18 07:00] இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வருவாய் 2014-15 நிதியாண்டில் 123.5 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய பேஸ்புக் வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த வருவாய் 97.6 கோடியாக இருந்தது. 2012-13ல் இந்த வருவாய் 75.6 கோடியாக இருந்துள்ளது.இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் ஒருவருக்கு சராசரியாக ரூபாய் 9 என்ற மதிப்பில் பேஸ்புக் வருவாய் ஈட்டியுள்ளது. அமெரிக்காவில் ஒரு பயன்பாட்டாளர் மூலமாக இந்நிறுவனத்துக்கு வருவாய் இந்திய மதிப்பில் ரூபாய் 630 ஆக உள்ளது. இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.