Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இன்றைய நிகழ்ச்சியில்… பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் பயங்கரவாத தாக்குதல். நகரின் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் கட்டமைப்பில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் முப்பத்து நான்கு பேர் பலி; நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயம். விமான நிலைய குண்டு வெடிப்பை நேரில் பார்த்த பிரஸ்ஸல்ஸ் வாழ் தமிழரின் நேரடித் தகவல்கள். பயங்கரவாத சந்தேகநபரின் ஐஃபோனை அன்லாக் செய்ய ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ள நிலையில், அதற்கு புதிய வழி ஒன்று கிடைத்திருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான நீதிமன்றத்திடம் தெரிவித்திருப்பது குறித்த செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.

  2. மியான்மார் அமைச்சரவை: 4 அமைச்சகங்களுக்கு ஆங் சான் சூச்சி பொறுப்பு அதிபராவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூச்சி, மறைமுகமாக ஆட்சி செய்வார் என்று சிலர் கருதியிருந்தனர். மியான்மாரில் ஜனநாயகத்துக்காக பல தசாப்தங்களாக போராடி வந்த ஆங் சான் சூச்சிக்கு அந்நாட்டு அமைச்சரவையில் ஒரு பதவி கிடைக்கப்போகிறது. கடந்த நவம்பரில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகத்துக்கான தேசிய முன்னணிக் கட்சியால் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில், நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூச்சி நான்கு அமைச்சகங்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவிருக்கிறார். வெளியுறவுத் துறை, கல்வி, எரிசக்தி/மின்சாரம், மற்றும் அதிபரின் அலுவலகம் ஆகிய அமைச்சகங்கள் இவரது பொறுப்பில் இருக்கும். அதிபராவக…

  3. "ஐபோனை அன்லாக் செய்ய புதிய வழி" ஐபோனை அன்லாக் செய்யக்கோரும் அமெரிக்க அரசின் கோரிக்கையை எதிர்க்கும் ஆர்ப்பாட்ட பதாகை (ஆவணப்படம்) ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபோனின் பாதுகாப்பு தொழில்நுட்ப பூட்டை உடைத்து அதற்குள் புகுவதற்கான ஒரு தொழில்நுட்ப வழியை அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை அடையாளம் கண்டிருப்பதாக அமெரிக்க அரசின் நீதித்துறை நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. சான்பெர்னாண்டினோ துப்பாக்கிதாரியான சையத் ரிஸ்வான் ஃபாரூக்கின் ஐபோனின் பாதுகாப்புப் பூட்டை உடைக்க ஐபோனின் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உதவ வேண்டும் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. கடந்த டிசம்பரில் 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தத…

  4. ஒபாமாவை ரால் கேஸ்ட்ரோ அவமதித்துவிட்டார்: டொனால்டு டிரம்ப் ட்வீட்! வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவை கியூபா அதிபர் ரால் கேஸ்ட்ரோ விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்காதது அவமதிப்பு என்று டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். அமெரிக்காவின் அருகில் அமைந்துள்ள தீவு நாடான கியூபாவில், 1959–ம் ஆண்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. சர்வாதிகாரி பாடிஸ்டாவின் ஆட்சிக்கு கம்யூனிஸ்டுகள் முடிவு கட்டினர். அந்நாட்டின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ பதவி ஏற்றார். கியூபாவுக்கு முன்னாள் சோவியத் ரஷ்யா, தனது முழுமையான ஆதரவை அளித்தது. இதற்கிடையே, கியூபாவில் மனித உரிமைகள் மீறப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வந்தது. மேலும் அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது. இத…

  5. வெளிநாடுகளில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வரும் மாணவர்கள் இந்தியாவில் டாக்டர்களாக பணியாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் தகுதித்தேர்வில் வெற்றி அடைந்த பின்னர் தான் அவர்கள் இந்தியாவில் நிரந்தர டாக்டர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.இதுபற்றி தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து தேசிய கல்வி வாரியம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-கடந்த 2004-ம் ஆண்டு 4 சதவீத மாணவர்களே இந்த தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர். அதிகபட்சமாக கடந்த 2005-ம் ஆண்டு நடந்த தகுதி தேர்வில் 2,851 மாணவர்களில் 2,192 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இது 76.8 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டு நடந்த 2 தேர்வுகளில் முறையே 10.4 சதவீதமும், 11.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஜூ…

  6. ஈராக் நாட்டின் மொசூல் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் சுமார் 100 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து மொசூல் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சர்வதேச நாடுகளின் வான்வெளிப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈராக் இராணுவம் டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளது.தாக்குதலின் போது மொசூல் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் யாரும் இல்லை என்றும் பல்கலைக் கழக கட்டிடங்கள் பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் ஈராக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் 17 மூத்த தலைவர்களும், பல்வேறு உள்ளூர் ஆதரவாளர்களும் இந்த வான்வெளி தாக்க…

  7. இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்க- கியூப உறவில் ஒரு புதிய விடியலாக கம்யூனிஸ கியூபாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம். - தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகங்களில் அண்மைக்காலமாக தொடரும் போராட்டங்கள் அங்கு மீண்டும் இன முரண்பாடு தொடர்வதை காண்பிக்கிறது. தனது தேசிய நல்லிணக்க திட்டத்தை பூர்த்தி செய்து விட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. - தனது உயிரை காப்பாற்றியவரை சந்திக்க ஆயிரக்கணக்கான மைல்கள் பயணிக்கும் ஒருபென்குவின்.

  8. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவுக்கு விஜயம் 2016-03-21 10:13:23 அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா கியூபா­வுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ளார். நேற்று பிற்­பகல் அவர் கியூபா தலை­நகர் ஹவா­னாவை சென்­ற­டை­ய­விருந்தார். 1928 ஆண்­டுக்கு பின்னர் பத­வி­யி­லுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒருவர் 88 ஆண்­டு­க­ளுக்கு பின்னர் கியூபா செல்­வது இதுவே முதல் தட­வை­யாகும். இந்த விஜ­யத்தின் போது ஜனா­தி­பதி ஒபாமா அந் நாட்டு முன்னாள் ஜனா­தி­பதி பிடல் கெஸ்ட்­ரோ­வையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். மேலும் ஜனா­தி­பதி ராவுல் கெஸ்ட்ரோவுடன் கூட்டு செய்­தி­யாளர் சந்­திப்பொன்­றையும் ஒபாமா மேற்­கொள்­கிறார். இத…

  9. ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவு மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சாட்கா தீபகற்பப் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவையும், ரஷியாவையும் பிரிக்கும் பெரிங் கடல்பகுதியை ஒட்டியுள்ள மசாட்கா தீபகற்ப தீவுகளில் உள்ள நகரங்களில் சுமார் 3 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள கமாண்டர் தீவுகளின் தென்மேற்கே 146 மைல் தூரத்தில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டங்கள், வீடுகள் குலுங்கின. ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற…

  10. ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 28 இலட்சம் ரூபா வழங்கும் ‘பிளை துபாய்’ 2016-03-21 10:54:38 ரஷ்­யாவில் இடம்­பெற்ற விமான விபத்தில் உயி­ரி­ழந்த 62 பேரின் உற­வி­னர்­க­ளுக்கு 28 இலட்சம் ரூபா வழங்­கப்­ப­டு­மென பிளை துபாய் நிறு­வனம் அறி­வித்­துள்­ளது. நேற்று முன்­தினம் இரவு பிளை துபாய் விடுத்­துள்ள அறிக்­கையில், உயி­ரி­ழந்த ஒவ்­வொரு பய­ணி­களின் குடும்­பத்­தி­ன­ருக்கும் 28 இலட்சம் ரூபா வழங்­கப்­படும் என தெரி­வித்­துள்­ளது. ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் 'பிளை துபாய்' நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மான பிளைட் FZ981 விமானம் ரஷ்­யாவின் தென் பகுதி நக­ரான ரொஸ்டோவ் ஒன் டொன்னில் தரை­யி­றங்க…

  11. அமெரிக்க சனாதிபதி ஒபாமா..குடும்ப சமேதரராய்.. அமெரிக்காவின் முன்னாள் எதிரி நாடு.. பயங்கரவாத நாட்டுக்கு பயணம் போயிருக்காருப்பா. கியூப மக்கள் அமெரிக்க பொருண்மியத் தடையால் சொல்லனாத் துன்பங்களை பல தசாப்தங்களாகச் சந்தித்து வந்தார்கள் என்பதும் அண்மைய ஆண்டுகளில் அமெரிக்க - கியூப உறவில் ஒட்டுதல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.bbc.co.uk/news/world-latin-america-35856126

  12. உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹரிஷ் ரவத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேர், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்ததால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாக கூறும் பா.ஜ.க. அங்கு ஆட்சியமைக்க வியூகம் வகுத்து வருகிறது.இதற்கிடையில், வரும் 28-ம் தேதி சட்டசபையில் ஆளும்கட்சி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அம்மாநில கவர்னர் கிருஷ்ணகாந்த் பால் கேட்டுக் கொண்டுள்ளார். பா.ஜ.க.வின் இந்த மனப்பான்மைக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்…

  13.  'தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடவிருந்தேன்' கடந்தாண்டு நவம்பர் 13ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில், உயிருடன் காணப்படும் பிரதான சந்தேகநபரான சாலா அப்டெல்சலாம், விளையாட்டரங்கை தற்கொலைத் தாக்குதல் மூலம் தாக்கவிருந்ததாகவும், ஆனால் தனது மனதை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பரிஸ் தாக்குதலின் முக்கிய சந்தேகநபரான இவர், தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஜியத்துக்குச் சென்றிருந்தார். அங்கு, நான்கு மாதங்களாகத் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், பிரசெல்ஸில் வைத்து, காலில் சுடப்பட்டு, அவர் பிடிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் வழங்கியுள்ள வாக்குமூலத்திலேயே, இவ்விடயத்தை அவர் வெளிப்பட…

  14. பிரித்தானியாவில் வாழும் சில முஸ்லிம் சமுகத்தினர் தமது பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வகுப்புகளை ஒழுங்கு செய்து படிப்பிக்கிறார்கள்.சிலர் தமது பிள்ளைகள் கேலி வதைகளுக்கு உட்படுத்தப்படுவதை காரணமாக தெரிவித்தே பிள்ளைகளை வீட்டில் வைத்து படிப்பிக்கிறார்கள் வாழ்க்கைமுறைமை, மதம், கேலி வதை ஆகிய காரணங்களுக்காக பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, வீட்டிலே பிள்ளைகளைபடிப்பிக்கும் முறைமை, கடந்த ஆறு ஆண்டுகளில் பிரித்தானியாவில் பெரிதும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளதாக தெரிவிப்பட்டாலும் தீவிரவாத எதிர்ப்பு வியூகத்தின் ஒரு பகுதியாக அரசு விசாரிப்புகளை மேற்கொள்வதால் இம்மாதிரி வீட்டிலேயே தமது குழந்தைகளை படிப்பிப்பதாக சிலர் பிபிசிக்க…

  15. உலகம் முழுவதும் உள்ள நாடு கடந்த திபெத்தியர்கள், தங்களுக்கென்று உள்ள பாராளுமன்றத்திற்காக புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. சீனாவில் தொடர்ந்த போராட்டங்களுக்குப் பின் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி, உள்நாட்டுப் போருக்குப் பின், 1949ல் நாட்டைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. தொடர்ந்து 1951ல் திபெத்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அதை எதிர்த்து 1959ல், திபெத் தலைநகர் லாசாவில் பெரும் புரட்சி உருவானது. சீன ராணுவம் அதை முறியடித்தது. இந்த உள்நாட்டு போரின் போது ஏராளமான திபெத்தியர்கள் புலம் பெயர்ந்து சென்றனர். சுமார் 90 ஆயிரம் திபெத்தியர்கள் உலகம் முழுவதும் தற்போது உள்ளனர். இவர்களுக்கென்ற மாதிரி பாராளுமன்றம்…

  16. உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். பல்வேறு நாடுகளுக்கு கடல் கடந்து செல்லும் அகதிகள் ரப்பர் படகுகள் போன்றவற்றில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்கின்றனர்.மத்திய தரைக்கடல் வழியாக இவ்வாறு அகதிகளை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்லும் படகுகள், நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில், கிரீஸ் நாட்டில் நுழைவதற்காக மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகளில் பயணம் செய்த சுமார் 900 குடியேறிகள் நான்கு நடவடிக்கைகள் மூலம் இத்தாலி நாட்டின் சிசிலி கடற்பகுதியில் மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் …

  17. சர்வதேச கடல் எல்லை விதிமுறைகளை மீறி மீன்பிடித்த குற்றத்துக்காக, 86 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பாதுகாப்பு முகமை கைது செய்தது. இவர்கள் கராச்சியில் கடந்த ஓராண்டாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களை தற்போது விடுதலை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்படும் 86 இந்திய மீனவர்களும் நாளை வாகா எல்லைக்குள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஓரிரு நாட்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.இது குறித்து கராச்சி போலீஸ் அதிகாரி ராஜா மும்தாஜ் கூறுகையில், 86 இந்திய மீனவர்களை இன்று விடுதலை செய்துள்ளோம். மேற்கொண்டு 363 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர் என்று தெரிவித்தார்.முன்னதாக இம்மாதம் 6-ம் தேதி 86 இந்திய மீனவர்கள் மற்றும் ஒரு கை…

  18. குடியேறிகளை துருக்கிக்கு திருப்பி அனுப்பும் நடைமுறை அமலாகிறது. கிரேக்கத்திற்கு வரும் குடியேறிகள் மீண்டும் துருக்கிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற புதிய உடன்படிக்கை ஒன்று அமலுக்கு வந்துள்ள சூழலிலும் குடியேறிகளை ஏற்றிக் கொண்டு படகுகள் கிரேக்கத்தை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. குடியேறிகளை ஏற்றிக் கொண்டு படகுகள் கிரேக்கத்தை வந்தடைந்து கொண்டிருக்கின்றன கிரேக்க தீவான ரோவிற்கு கிட்டத்தட்ட 40 குடியேறிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்றிலிருந்த இரண்டு பெண்பிள்ளைகள் கடலில் தவறி வீழ்ந்து பலியாகியுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு இரண்டு வயது என்றும், மற்றொருவருக்கு ஒரு வயது எனவும் கூறப்படுகிறது. இதனிடையே புதிய விதிமுறைகள் தொடர்பில்,கிரேக்கத…

  19. எல்லைப் பகுதியில் கூடுதல் படையினரை பிரான்ஸ் நிறுத்துகிறது கடந்த வெள்ளிக்கிழமை பிரசல்ஸ் நகரில் ஜிகாதி தீவிரவாதி எனும் சந்தேகத்தின் பேரில் சாலாஹ் அப்தஸ்லாம் கைது செய்யப்பட்ட நிலையில், அந்நாட்டுடனான எல்லைப் பகுதிக்கு பிரான்ஸ் கூடுதல் துருப்புக்களை அனுப்புகிறது. பிரான்ஸில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் பாரிஸில் 130 பேர் உயிரிழக்க காரணமானத் தீவிரவாதத் தாக்குதலில் அப்தஸ்லாம் தொடர்புபட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுகிறது. பிரான்ஸில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் எனும் அச்சுறுத்தல் மிகப் பெரிய அளவில் உள்ளது என உள்துறை அமைச்சர் பெர்ணாட் காசந்யூவே தெரிவித்துள்ளார். இதனிடையே அப்தஸ்லாமின் கூட்டாளிகள் ஐரோப்பாவ…

  20. ஐஎஸ் தீவிரவாதிகளால் பந்தாடப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை! ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள பெண்கள் அனுபவிக்கும் இன்னல்கள் தொடர்பான அதிர்ச்சி தகவலை யாஸிதியின பெண் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். ஐ.எஸ். அமைப்பினர் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக சமீப காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக யாஸிதியினத்தை சேர்ந்த ஆண்களை கொலை செய்தும், பெண்களை பாலியல் அடிமைகளாகவும் ஐ.எஸ். அமைப்பினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பினரால் கலிதா என்ற யாஸிதி இன பெண் அனுபவித்த துன்பங்கள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து கலிதா கூறுகையில், "என்னை கடத்திய தீவிரவாதிகள் ரசாக் …

  21. குடியேறிகளின் சடலங்களுக்கு துருக்கி மயானத்தில் இறுதிச் சடங்கு துருக்கியிலிருந்து கிரேக்கம் நோக்கி படகுப் பயணம் மேற்கொள்ளும் குடியேறிகளில் இந்த ஆண்டில் இதுவரை 360க்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். துருக்கியில் கரை ஒதுங்கும் சடலங்கள் இஸ்மிர் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகின்றன. இஸ்மிர் என்ற இடத்தில் உள்ள மயானம் ஒன்றில் சடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன மத்தியதரைக் கடலில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்தது. துருக்கியில் இவ்வாறு கரை ஒதுங்கிய பிரேதங்களில் அனேகமானவை இனம் காணப்படவில்லை. இவ்வாறான சடலங்கள் இஸ்மிர் என்ற இடத்தில் உள்ள மயானம் ஒன்றில் அடக்கம் செய்யப்படுகின்றன. `உரிமை கோரப்படாத சடலங்கள…

  22. பிணைக் கைதியாக உள்ள பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் ஜான் கான்ட்லீ வீடியோவை ஐ.எஸ்.வெளியிட்டது இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதிகளால் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ள, பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞரான ஜான் கான்ட்லீ தோன்றும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஐஎஸ்ஸிடம் பிணைக் கைதியாக உள்ள புகைப்படக் கலைஞர் ஜான் கான்ட்லீ இந்த வருடத்தில் முதல் தடவையாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ, இராக்கில் ஐ.எஸ். கட்டுப்பாட்டிலுள்ள மோசூல் நகரிலிருந்து வெளியிடப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. கருப்பு நிற ஆடை அணிந்து மெலிந்த தோற்றத்துடன் காணப்படும் கான்ட்லீ, இடிபாடுகளுக்கு மத்தியில் நின்றபடி, அமெரிக்க விமானப்படையினர், ஐ.எஸ்.இன் ஊடகப் பிரிவு மீது தாக்குதல் நடத…

  23. பாலஸ்தீனத்தில் பதின்ம வயது சிறுவன் சுட்டுக்கொலை இஸ்ரேலிய வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்திருக்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்துவருகின்றன. எப்ரோன் நகரில் உள்ள பேட்ரியார்க் குகைக்கு அருகில் 17 வயதான இந்தச் சிறுவனை எல்லைப் படையினர் சுட்டனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதியில் தெருக்களில் தினமும் தாக்குதல் நடப்பது வழக்கமாக இருந்துவருகிறது. அக்டோபர் மாதத்திலிருந்து இம்மாதிரி தாக்குதல்களில் சுமார் 190 பாலஸ்தீனியர்களும் 28 இஸ்ரேலியர்களும் 2 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். …

  24. கைதான நபரை விரைவில் நாடுகடத்த வேண்டும்: ஃப்ரான்ஸ் அதிபர் பாரிஸ் தாக்குதல் தொடர்பாக நேற்று ப்ரஸ்ஸல்ஸ் நகரில் கைதுசெய்யப்பட்ட சலா அப்தேசலாம் மருத்து சிகிச்சை முடிந்து போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். காவல்துறையால் பிடிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்படும் சலா அப்தேஸ்லாம். ப்ரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையின்போது, துப்பாக்கியில் சுடப்பட்டு காயமடைந்த சலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் பிரான்ஸ் நாட்டு அதிபர் ஃப்ரான்ஸ்வா ஒல்லாந்த், விரைவிலேயே ஃப்ரான்ஸிற்கு நாடுகடத்தப்படுவார் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாதக் குழுவுக்கு இருக்…

  25. இஸ்தான்புல் நகரில் குண்டுவெடிப்பு; குறைந்தது நான்கு பேர் பலி துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதியை காவல்துறையினர் முழுமையாக மூடியுள்ளனர். இஸ்திக்லால் தெரு என்ற தெருவில் நடந்த இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தற்போது அந்தப் பகுதிக்கு ஆம்புலன்ஸ்களும் காவல்துறையினரும் விரையும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுவருகின்றன. கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தலைநகர் அங்காராவில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். குர்திய தீவிரவாத இயக்கமான டிஏகே அந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.