உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26889 topics in this forum
-
தாய்வான் கடும்பனியில் 50 பேர் பலி அமெரிக்காவை பனிப்புயல் ஒருபுறம் தாக்கியிருக்க மறுபுறம் தென்கிழக்காசியாவில் தாய்வான் நாட்டையும் எதிர்பாராத கடும்பனி தாக்கியுள்ளது. தாய்வான் கடும்பனியில் 50 பேர் பலி 16 வருடங்களில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறையவே அதனால், 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். வழமையாக மிதமான குளிருடன் கூடிய காலநிலையைக் கொண்ட தாய்வானில், திடீரென அதீத குளிர் தாக்கியதில், வெப்பமூட்டிகளின் வசதி இல்லாமல் வாழ்ந்த பெரும்பாலும் முதியவர்களே இறந்தவர்களில் அதிகமாகும். சீனா மற்றும் ஜப்பான் உட்பட தென்கிழக்காசியாவின் பெரும்பாலான நாடுகள் கடுமையான குளிரை எதிர்கொள்ள தடுமாறுகின்றன. தென்கொரியாவில் ஜெஜு விடுமுறைக்கால சுற்றுலா தலத்தில்,…
-
- 0 replies
- 646 views
-
-
ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு: -விமான சேவைகள் ரத்து! [Monday 2016-01-25 07:00] தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். தென் கொரியாவில் வீடும் கடும் பனிப் புயலால் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் கா…
-
- 0 replies
- 415 views
-
-
இஸ்ரேலிய படையினரால் 13 வயது சிறுமி சுட்டுக்கொலை இஸ்ரேலிய வீரர் ஒருவரை குத்திக்கொல்ல முயற்சித்தார் என்ற பெயரில் 13 வயதான சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன எல்லைப் பகுதியில் காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இஸ்ரேல் வீரரை குத்திக்கொல்ல முயன்றதாக 13 வயது பலஸ்தீனச் சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனாடா பகுதியில் இருக்கும் முகாமில் தங்கியிருந்த சிறுமி கையில் கத்தியுடன் ஓடிவந்ததால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த இராணுவ வீரர் அவரை சுட்டு…
-
- 0 replies
- 360 views
-
-
காணாமால் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் கண்டெடுப்பு? கடந்த இரு வருடங்களுக்கு முன், காணாமால் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகங்கள் தாய்லாந்து கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் நோக்கி போய் கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்சின் எம். எச். 370 விமானம் திடீரென்று மாயமானது. எவ்வளவோ தேடுதல் வேட்டை நடத்தியும் விமானம் என்னவாயிற்று என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கடந்த ஆண்டு இந்திய பெருங்கடலில் பிரஞ்சு ரீயூனின் தீவு பகுதியில் உடைந்த விமானத்தின் பாகம் போன்று ஒரு பொருள் கிடைத்தது. அதற்கு பின், வேறு எந்த தகவலும் காண…
-
- 1 reply
- 413 views
-
-
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் January 24, 2016 09:25 pm அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 பதிவாகியிருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் ஏதுமில்லை. http://tamil.adaderana.lk/news.php?nid=76358
-
- 0 replies
- 315 views
-
-
தைப்பூச பக்தர்கள் மீது கார் மோதி மூவர் ஸ்தலத்திலே சாவு கோலாலம்பூர், மலேசியா செனாவாங்கிலிருந்து பத்துமலைக்கு ஊர்வலமாக சென்று கொண்டிருந்த தைப்பூச பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியதில் 3 பேர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளனர். சிரம்பான் கோலாலம்பூர் விரைவுச் சாலையில் குறித்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த விபத்தில் மேலும் 3 பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் 'Universiti Kebangsaan Malaysia' அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஊர்வலமாக சென்று கொண்டிருந்தவர்களை மோதிய BMW கார், நிற்காமல் அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த பக்தர்களின் சடலங்கள்…
-
- 1 reply
- 462 views
-
-
ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர், போக்குவரத்து பாதிப்பு ஆசியாவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் ஷி ஜியாங் பகுதியில் பனியின் தாக்கம் தென் கொரியத் தீவான ஜேஜூவில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுகு பனிப்பொழிவு ஏற்பட்டதால அப்பகுதியில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் ரத்தாகியுள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பல இடங்களில் சிக்கியுள்ளனர். தென் கொரியாவில் வீடும் கடும் பனிப் புயலால் பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடும் பனி மற்றும் வேகமாக வீசும் காற்றின் காரணமாக ஜப்பானிலும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 395 views
-
-
சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் விமான தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 29 பேர் பலி! [Sunday 2016-01-24 09:00] சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள இடங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாரிஸ் தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த பிரான்ஸ் நாடுகள் சூளுரைத்தது. இதனிடையே ரஷ்யாவும் தன் பங்கிற்கு சிரியாவில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவில் நேற்று நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் சுமார் 29 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் கிழக்கு பகுதியில் நடைபெற்ற இந்த தாக்குதலை ரஷ்யாவின் போர் விமானங்கள் நடத்தியதாக சிரிய கண்காணிப்பு குழு ஒன்று தெரிவித்துள்…
-
- 0 replies
- 413 views
-
-
பாகிஸ்தானில் நில நடுக்கம்: - பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்! [Sunday 2016-01-24 08:00] பாகிஸ்தானில் கைபர் பக் துங்வா மாகாணத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் புனர், மலாகண்ட், ஸ்வாட் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவானது. அது அஷ்காசாமுக்கு 13 கி.மீ. மேற்கில், 90.7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறி உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லையில் 80 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி துறை கூறுகிறது. பாகிஸ்தானில் கைபர் பக் துங்வா மாகாணத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்…
-
- 0 replies
- 405 views
-
-
அமரிக்காவின் ஒறிகன் மாநிலத்தில் நடு இரவில் போக்குவரத்துச் செறிந்த வீதியில் காணப்பட்ட சிறு பிள்ளை பொலிஸ் ஒருவரால் காப்பாற்றப்பட்டு குடும்பத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டது. http://www.bbc.com/news/world-us-canada-35390683?SThisFB
-
- 2 replies
- 441 views
-
-
சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்கள் வெளியீடு இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று வெளியிட்டார். சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்கள் வெளியீடு சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான இன்று தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்தக் கோப்புகள் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டன. சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனர். இனி ஒவ்வொரு மாதமும் 25 ரகசியக் கோப்புகளை வெளியிடுவதற்கு தேசிய ஆவணக் காப்பகம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திரபோஸின் குடும்ப உறுப்பினர்களை நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார். அதற…
-
- 0 replies
- 527 views
-
-
சென்னை விமான நிலையத்தில் 160 பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம் [ சனிக்கிழமை, 23 சனவரி 2016, 07:42.58 AM GMT ] சென்னையில் இருந்து 160 பயணிகளுடன் இன்று மலேசியாவுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து உயரக்கிளம்ப முடியாமல் திணறியதால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் உரக் கிளம்ப முயாமல் திணறியதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தகுறை நிவர்த்தி செய்யப்பட்டதும் அதே விமானம் நாளை சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மேற்படி விமானத்தில் …
-
- 1 reply
- 303 views
-
-
சொமாலியா: கடலோர விடுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் சொமாலியத் தலைநகர் மொகதிஷுவில்கடலோரத்து உணவு விடுதிகளில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இருபது பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மாலைப் பொழுதில் இந்த விடுதிகளை ஒட்டி இரண்டு கார் குண்டுகள் வெடித்ததுடன், உள்ளே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது ஆயுததாரிகள் ஐந்து பேர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இறந்தவர்களைத் தாண்டி மேலும் பலர் காயமடைந்துள்ளனர். கண்மூடித்தனமாக ஆயுததாரிகள் சுட்டதையும், மாடியில் இருந்து ஜன்னல் வழியாகக் குதித்து மக்கள் தப்பித்ததையும் சம்பவத்தைக் கண்டவர்கள் வர்ணித்துள்ளனர். இத்தாக்குதலை தாங்களே நடத்தியதாக அல்-ஷபாப் அமைப்பு தெரிவித்துள்ளது. ht…
-
- 1 reply
- 663 views
-
-
கனடாவில் பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி; காயம் 2 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ. கனடா நாட்டின் சஸ்கட்சேவன் மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளிக்குள் புகுந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகினர். 2 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டேவாஸ் நகரிலிருந்து அவர் கூறும்போது, "சஸ்கட்சேவனில் உள்ள லா லோச்சே பகுதியில் ஏழாம் வகுப்பில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் ஐந்து பேர் பலியாகினர்.…
-
- 0 replies
- 438 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - அகதிகள் நெருக்கடி ஐரோப்பாவையே ஆட்டம் காண வைத்துவிடும் என்கிறார் பிபிசிக்கு செவ்வி வழங்கிய பிரஞ்சுப் பிரதமர். - இலங்கை போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் கிடையாது என்கிறார் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. - வெறுப்புணர்வுத் தாக்குதல்களை எதிர்கொள்ள கராத்தே கற்றுக்கொள்ளும் அமெரிக்காவின் முஸ்லிம் யுவதிகள்.
-
- 0 replies
- 291 views
-
-
அவசர மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார் மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் முகமது நஷீத் மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (48) அவசர மருத்துவ சிகிச்சைக்காக நேற்று கொழும்பு நகரிலிருந்து லண்ட னுக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூமின் 30 ஆண்டு கால தொடர் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, முதன்முறையாக ஜனநாயக முறைப்படி கடந்த 2008-ல் அதிபரானார் நஷீத். 2012-ம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டதால், நஷீதுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதையடுத்து அவர் பதவி விலகினார். நீதிபதி கைது செய்யப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நஷ…
-
- 0 replies
- 339 views
-
-
கிறீஸூக்கு அருகில் இரு படகுகள் கவிழ்ந்தால் 11 சிறார்கள் உட்பட 42 பேர் பலி 2016-01-22 18:57:28 குடியேற்றவாசிகளுடன் ஐரோப்பாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரு படகுகள் நேற்றிரவு கவிழ்ந்ததால் 11 சிறார்கள் உட்பட 42 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஏஜின் கடலில், கிறீஸ் நாட்டின் சிறிய தீவுகளில் ஒன்றான கலோலிம்னஸுக்கு அருகில் படகொன்று கவிழ்ந்ததால் 11 34 பேர் உயிழந்தனர். பார்மகோனிசி தீவுக்கு அருகில் மற்றொரு படகு கவிழ்ந்தால் மேலும் 8 பேர் உயிரழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஐரோப்பாவுக்கு சட்ட விரோமாக 10 லட்சம் பேர் சென்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏஜியன் கடல் ஊடாக துருக்கியிலிருந்து கிறீஸுக்கு செல்லும்போத…
-
- 0 replies
- 297 views
-
-
குடியேறிகள் நெருக்கடி ஐரோப்பிய சமூகத்தை ஸ்திரமிழக்கச் செய்யும்: பிரஞ்சுப் பிரதமர் அகதிகள் நெருக்கடி தொடர்பில் பிபிசிக்கு பிரஞ்சுப் பிரதமர் பேட்டியளித்துள்ளார். ஐரோப்பாவுக்கு வரும் ஒவ்வொரு அகதியையும் உள்ளே விட்டுக்கொண்டிருந்தால் ஐரோப்பிய சமூகம் மொத்தமாகவே ஆட்டங்காணும் என பிரஞ்சு பிரதமர் மனுவெல் வால்ஸ் எச்சரித்துள்ளார். இந்தக் குடியேறிகள் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த எதிர்காலத்துக்குமே மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். குடியேறிகளைக் கரம் நீட்டி வரவேற்கும் விதமான ஜெர்மானிய ஆட்சித்தலைவி அங்கேலா மெர்க்கெல்லின் கொள்கை 'தைரியமான ஒரு விஷயம்' என்று அவர் வர்ணித்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில…
-
- 0 replies
- 441 views
-
-
அமெரிக்கப் பனிப்புயல்: கோடிக் கணக்கானவர்கள் பாதிக்கப்படலாம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பனிப்பொழிவிலும் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன (கோப்புப் படம்) அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை மாபெரும் பனிப்புயல் ஒன்று நெருங்குவதால் தலைநகர் வாஷிங்டனில் ஏறக்குறைய-வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் வீசவிருக்கும் இந்தப் பனிப்புயலின் காரணமாக, சில மணி நேரங்களில் இரண்டடி உயரத்திற்கு பனி பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கோடிப் பேர் இந்தப் பனிப்புயலின் காரணமாக பாதிக்கப்படுவார்கள். இந்தப் பனிப்புயலின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதோடு விமானப் போக்குவரத்தும் தடைப்படக்கூடும்…
-
- 0 replies
- 472 views
-
-
2050-ல் கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் தான் இருக்கும்: - உலக பொருளாதார பேரவை எச்சரிக்கை! [Friday 2016-01-22 08:00] உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 8 மில்லியன் டன்கள் அளவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு லாரி குப்பையை கொட்டுவதற்கு சமமானதாகும். இதற்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் 2030-ம் ஆண்டுக்குள் இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே, 2050-ம் ஆண்டுக்குள் 4 மடங்காக அதிகரித்து விடும். இதன் எதிரொலியாக, கடலில் மீன்களை விட பிளாஸ்டிக் குப்பைகளே அதிகம் இருக்கும் அபாயமான நிலை உருவாகும்.தற்போது, கடலில் 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பா…
-
- 0 replies
- 572 views
-
-
சிரியாவில் 1,000 க்கும் அதிகமானோர் பலி! - ரஷ்ய விமானங்களே பொறுப்பு! [Thursday 2016-01-21 22:00] சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் ரஷ்யா தாக்குதல்களை நடத்துவதற்கு ஆரம்பித்தது முதற்கொண்டு இதுவரை 1,000 க்கும் அதிகமான பொதுமக்கள் உயிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் அவதான நிலையம் புதன்கிழமை தெரிவித்தது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் ரஷ்யாவால் சிரியாவில் நடத்தப்பட்ட மேற்படி வான் தாக்குதல்களில் 200 சிறுவர்கள் உட்பட 1,015 பேர் பலியாகியுள்ளதாக அந்த நிலையம் கூறுகிறது. அதேசமயம் இந்தத் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாத குழுவைச் சேர்ந்த 893 பேரும் எதிர்க் குழுவைச் சேர்ந்த 1,141 பேரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிரியாவில் நான்கு மாதங்களுக்கு முன்னர் …
-
- 0 replies
- 374 views
-
-
2016ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம்! சூரிச்: 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 22-வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி முதலிடம் பிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த உலக பொருளாதார மையம், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. சுமார் 60 நாடுகளில், நிலத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், பாரம்பரியம், வணிகம், வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார செல்வாக்கு போன்ற 24 தகுதிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து 16,200-க்கும் மேற்பட்ட மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அவர்களில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகளாக உள்ளவர்கள். மற்றவர்கள் சாத…
-
- 4 replies
- 714 views
-
-
உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்? பணம் எங்கே? உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் இந்த வாரம் சுவிஸ்ஸிலுள்ள டாவோஸில் கூடுகின்றனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம். உலகளவில் அதிகப்படியான பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர் இச்சூழலில் உலகளவில் செல்வம் எங்கு எப்படி பரவியுள்ளது அது எப்படி மாறிவருகிறது என்பது குறித்த ஒரு பார்வை. பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் ஒரு உலகளாவியப் பிரச்சினை. ஆண்டுதோறும் கிரெடிட் ஸ்விஸ் எனும் ஸ்விஸ் வங்கி, உலகப் பொருளாதாரம் மற்றும் அது எங்கு எப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை நாடு வாரியாக, பிரதேச வாரியாக ஆய்வு செய…
-
- 2 replies
- 726 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - முன்னாள் ரஷ்ய உளவாளி லிட்வினென்கோவின் மரணத்தை ஆராய்ந்த பிரிட்டிஷ் விசாரணை, நஞ்சு கொடுக்கப்படுவதற்கு அதிபர் புடினே ஒப்புதல் அளித்திருக்கலாம் என முடிவு தெரிவித்துள்ளது. - மதநிந்தனை செய்ததாக தவறாக நம்பி, தன் கையை தானே வெட்டிக்கொண்ட பாகிஸ்தானிய பையனை பிபிசி சந்தித்தது. - உலகின் எழில்மிகு சுற்றுலாத் தீவுகளில் ஒன்றான டொங்கோ தீவுமக்கள் எதிர்கொள்ளும் உடற்பருமன் பிரச்சினை குறித்த பிபிசியின் சிறப்புத்தகவல்.
-
- 0 replies
- 413 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளை முந்திய ரஷ்யா: வெளியான அதிர்ச்சி தகவல்! சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை விட ரஷ்யா நடத்திய தாக்குதலிலேயே அதிக மக்கள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் உள் நாட்டு பேரில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் பஷார் அல் ஆசாத் படைக்கு எதிராக தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதிபர் ஆசாத்துக்கு உதவும் விதமாக கடந்த ஆண்டின் இறுதியில் ரஷ்யா போரில் களமிறங்கியது. இதையடுத்து வான் வழியாகவும், போர் கப்பல்கள் மூலமாகவும் தங்களது தாக்குதலை நடத்திவருகிறது. அதே வேளையில் ரஷ்யா, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்வதை விட அதிபருக்கு எதிரான குழுக்கள் மீதும், அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நட…
-
- 1 reply
- 585 views
-