Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. "பாலியல் அடிமைகள்" பிரச்சினையைத் தீர்க்க ஜப்பான் முன்னெடுப்பு இரண்டாம் உலகப் போர் காலத்தில், கொரியப் பெண்களை ஜப்பான் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தது தொடர்பில், இரு நாடுகளுக்கும் இடையே மிகநீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ஜப்பான் முயற்சிகளை எடுத்து வருகிறது. "பாலியல் அடிமைகள்" பிரச்சினை இன்னும் தென் கொரியாவில் உணர்வுபூர்வமான ஒரு விஷயமாகவே உள்ளது. இச்சர்ச்சைத் தொடர்பில் அரச நிதியம் ஒன்றை ஜப்பான் ஏற்படுத்துவதற்கு திட்டங்களைத் தீட்டியுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. "சுகமளிக்கும் பெண்கள்" எனக் கூறப்பட்ட இந்தக் கொரியப் பெண்கள், ஜப்பானிய இராணுவத்தின் விடுதிகளில் பாலியல் அடிமைகளாக பலவந்தமாகப் பயன்படுத்தப்பட்டனர். சோலி…

  2. நைஜீரியாவில் ஒரு எரிவாயு டேங்கர் லாரி வெடித்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த விபத்து நடந்ததால் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தென்கிழக்கு நைஜீரியாவில் சமையல் எரிவாயு தொழிற்சாலை அருகே இச்சம்பவம் நடடந்துள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிரப்ப வந்தவர்கள் விபத்தில் சிக்கினர். தீயணைப்பு நிர்வாகம், விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது எனினும் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று அங்கு நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=147755&category=WorldNews&language=tamil

  3. வாழத்தகுதியற்ற நகரமா டெல்லி? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! காற்று மாசுபடுவதால் வருங்காலத்தில் என்னென்ன பிரச்னைகள் வரும் என நாம் படித்திருப்போம். அந்த நாட்கள் அவ்வளவு தூரத்தில் இல்லை என நமக்கு அதிர்ச்சி காட்டியிருக்கிறது சீனத்தலைநகர் பீஜிங்கும், இந்தியத் தலைநகர் புதுடெல்லியும். வரலாற்றில் இல்லாத அளவு காற்றில் மாசின் அளவு அதிகரித்திருப்பதால், இந்த இரண்டு நகரங்களும் திக்கித்திணறி வருகின்றன. பீஜிங்கில் ஏற்கனவே 'ரெட் அலர்ட்' என்னும் அபாய எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. காற்றை விலைகொடுத்து சுவாசிக்கும் நிலையும் அங்கு வந்துவிட்டது. அதேபோல, டெல்லியில் இந்த ஆண்டில், அதிகமான காற்றுமாசு பதிவான நாள் டிசம்பர் 24 ஆன நேற்றுதான் என அறிவித்திருக்க…

  4. ஆப்கானிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியா வரும் வழியில் லாகூர் நகரில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்திக்கிறார். பாகிஸ்தானின் முரட்டுப் பிடிவாதத்தால் இருநாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்த நிலையில் எல்லைப்பகுதியில் சில்லுண்டித்தனம் செய்து, பூச்சாண்டி வேலையால் இந்தியாவை பணியவைக்கும் பாகிஸ்தானின் முயற்சி மண்ணைக் கவ்வியது. இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்பாரி வைக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. இனி, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒட்டுமில்லை; உறவுமில்லை என்ற நிலை நீடித்தபோது சமீபத்தில் லண்டன் தலைநகர் பார்சில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டின்போது, எதிர்…

  5. கிறிஸ்துமஸ் நாளில் உலகின் பல பகுதிகளில் 'அதிகரித்த வெப்பநிலை' இம்முறை கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் உலகின் பல பகுதிகளிலும் வழமைக்கு மாறாக அதிகரித்த வெப்பநிலை உணரப்படுகின்றது. அமெரிக்கா தொடங்கி ரஷ்யா வரை மக்கள் கோட், தொப்பி போன்ற குளிர் ஆடைகளை தவிர்த்து, பெரும்பாலும் கோடைகாலத்தில் அணியக்கூடிய டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்துகொள்வதை காணமுடிகின்றது. எல் நின்யோ எனப்படுகின்ற பசிபிக் பெருங்கடலில் ஏற்படுகின்ற வெப்பநிலை அதிகரிப்பு தான் இதற்கு காரணம் என்று காலநிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த வழமைக்கு மாறான வெப்பநிலை அதிகரிப்பு அமெரிக்காவின் மத்திய பகுதியில் புயல்கள் தீவிரமடைய காரணமாகியுள்ளது. பிரிட்டனிலும் பராகுவேயிலும் வௌ்ளப் பெருக்கு ஏற்படவும் காரண…

  6. பிரதமர் மோடிக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரஷ்ய அதிபர் புதின்! ஆஸ்திரேலியா: 2 நாள் பயணமாக ரஷ்யா சென்ற மோடிக்கு, அந்நாட்டு அதிபர் புதின், மகாத்மா காந்தி தமது கைப்பட எழுதிய டைரியின் பக்கம் ஒன்றினை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கூடவே 18-ம் நூற்றாண்டில் வங்காளத்தில் பயன்படுத்தப்பட்ட வீர வாள் ஒன்றையும் மோடிக்கு அவர் பரிசளித்தார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் "கிரெம்ளின்' மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா - ரஷியா இடையேயான 16-வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாதத் தடுப்பு மற்றும் ராணுவம், பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் ஒத்…

  7. எங்கள் இயக்கத்தில் சேராவிட்டால்... 'மிஸ் ஈராக்' அழகியை மிரட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகள்! பாக்தாத்: எங்கள் இயக்கத்தில் சேராவிட்டால் கடத்தி விடுவோம் என்று ‘மிஸ் ஈராக்’ பட்டம் வென்ற அழகிக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஈராக் நாட்டில் கடந்த 1972–ம் ஆண்டிற்கு பின் 43 ஆண்டுகள் கழித்து சமீபத்தில்தான் முதன் முறையாக ‘மிஸ் அழகி’ போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் பங்கேற்க 200 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால், தீவிரவாதிகளின் கொலை மிரட்டலை தொடர்ந்து 10 பேர் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர். மற்றவர்கள் போட்டியில் இருந்து விலகி கொண்டனர். அந்தப் போட்டியில், ஷாய்மா குயாசிம் அப்துல் ரகுமான் என்ற 20 வயது பெண் ‘மிஸ் ஈராக்’ பட்டத்தை வென்றார். இ…

  8. ஆப்கன் நாடாளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைத்தார் ஆப்கானில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியாவினால் கட்டப்பட்ட அந்நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பயங்கரவாதத்தின் புதிய நிழல்கள் நம்மை நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில்தான் நாம் ஆப்கானிஸ்தானுக்கு துணையாக நிற்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய மக்களின் குரலாக தான் நான் இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். நாம் இணைந்து சாலைகளை அமைத்தோம். மின்சார வசதியை ஏற்படுத்தி ஆப்கன் வீடுகளில் ஒளியேற்றினோ…

  9. காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம், ஒவ் வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:- காந்தியின் கொள்கையால் நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும் என்று அவரின் கால்களுக்கு செருப்பாக இருக்க ஆசை பட்டு அவருடன் சேர்ந்தேன். "தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்க…

  10. கிரீஸில் படகு கவிழ்ந்து 13 அகதிகள் பலி கிரீஸ் நாட்டு கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் பலியாயினர். இதுகுறித்து கடலோரக் காவல் படையினர் கூறும்போது, “துருக் கியிலிருந்து ஐரோப்பிய நாடு களை நோக்கி சென்றுகொண்டி ருந்த சிறிய பிளாஸ்டிக் படகு கிரீஸ் கடல் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தியதில் 13 பேரை சடலமாகவும் 15 பேரை உயிருடனும் மீட்டுள்ளோம். மேலும் காணாமல் போனவர்களை தேடி வருகிறோம்” என்றார். http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%…

  11. கிறிஸ்துமஸ் தினத்தில் பவுர்ணமி: அரிய நிகழ்வென நாசா தகவல் கிறிஸ்துமஸ் தினத்தில் பவுர்ணமி என்பதால் வானில் முழுநிலவு தெரியும். 1977-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. அடுத்து இதே போன்று வரும் 2034-ம் ஆண்டு தான் நிகழும் என அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் தோன்றும் பவுர்ணமி, குளிர்காலத்தின் ஆரம்பத்தில் தோன்றுவதால் ‘குளிர் முழு நிலவு’ (ஃபுல் கோல்டு மூன்) என அழைக்கப்படுகிறது. நாசா இதுதொடர்பாகக் கூறும்போது, “இது அரிய நிகழ்வாகும். வரும் 2034-ம் ஆண்டு வரை இந்நிகழ்வு நடைபெறாது. எனவே, கிறிஸ்துமஸ் தினத்தன்று வானைப் பாருங்கள். வழக்கமாக நிலவைப் பார்ப்பது போல் அல்லாமல் அன்று விசேஷமா…

  12. 2015-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை, அமெரிக்காவின் டைம் பத்திரிக்கை இம்மாத துவக்கத்தில் கவுரவித்து இருந்தது. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு பின் இந்த கவுரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமை மெர்க்கலாவுக்கு உண்டு. சர்வதேச அளவில் அதிக செல்வாக்கு மிக்க தலைவர்களின் பட்டியலில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் மெர்க்கல். இந்நிலையில், மெர்க்கலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஆபத்து இருப்பதாக பிரிட்டனின் முக்கிய உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இங்கிலாந்தின் பிரபல ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஜெர்மனி ஏற்கனவே பிரிட்டன் மற்றும் ரஷ்யாவுடன் முக்கிய உளவுத் தகவல்களை பரிமாறிக் க…

  13. ஜெர்மனி விசாவுக்காக சென்னையில் குவியும் சிரிய குடும்பங்கள்: மொழி, நிதிப் பிரச்சினையால் பரிதவிப்பு கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வந்துள்ளனர். ஜெர்மனி நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக அவர்கள் இங்கு வந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய நாட்டிலிருந்து புகலிடம் தேடும் அகதிகள் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள ஜெர்மனி தூதரகங்கள் வாயிலாக அந்நாட்டுக்குச் செல்ல விசா பெறுவதற்காக சிரிய மக்கள் இந்தியா வருவதாக தெரியவந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் சிரியாவைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் சென்னை வ…

  14. மோடியின் ரஷ்ய விஜயம்; 'பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஏற்படலாம்' 18-ம் நூற்றாண்டின் இந்திய வாள் ஒன்றை புடின் மோடிக்கு பரிசளித்தார் ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், கிரெம்ளின் மாளிகையில் தனிப்பட்ட இரவு விருந்துபசாரம் ஒன்றை அளித்துள்ளார். ரஷ்யப் பிரதமருடனான பேச்சுக்கள் 'பலனுள்ளவையாக' இருந்ததாக நரேந்திர மோடி அவரது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். வணிகத்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்புடன் நரேந்திர மோடியின் ரஷ்ய விஜயம் அதிகாரபூர்வமாக இன்று துவங்கியது. அதிபர் புடினுடனான உத்தியோகபூர்வ பேச்சுக்களையும் மோடி இன்று நடத்தினார். பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் மோடியின் இந்தப் …

  15. இன்றைய நிகழ்ச்சியில்… - ரமாடியில் இருந்து இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை துரத்த முயற்சிக்கும் இராக்கிய படைகள், அங்கு பல மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாக கூறுகின்றன. - கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சி, சாதகமா அல்லது பாதகமா என்ற பிபிசியின் சிறப்பு ஆய்வு. - உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இயேசு பிறந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்டதாக பைபிள் கூறும் பரிசுப் பொருட்களில் தங்கம் தவிர்ந்த ஏனையவை எங்கு கிடைக்கும் என்பது பற்றிய ஒரு பார்வை.

  16. 2015-ன் டாப் 50 வைரல் ஹிட்கள்! ’நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன்..!’ என்று ரஜினி சொல்வது சோஷியல் மீடியா வைரல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். யாரும் எதிர்பாரா சமயம் குபீரென கிளம்புகின்றன வைரல்கள். அதை யார் நினைத்தாலும் உருவாக்க முடியாது, பரபரப்பாக இருப்பதை அடக்கவும் முடியாது. அப்படி 2015-ல் தமிழர்கள் அதிகம் எதிர்கொண்ட வைரல்களில் ‘டாப்-50’ மட்டும் இங்கே... 1. சென்னை வெள்ளம் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்ற வார்த்தைகளுக்கு புது அர்த்தம் கொடுத்தது சென்னை வெள்ளம். சென்னை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது ஆர்வலர்கள், உலகெங்கிலுமிருந்து உதவிக்கரம் நீட்ட ஏதுவாயிருந்த சாதனம் …

  17. 'தலிபான்களின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்' ஆப்கானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் கடுமையான சண்டை நடக்கும் சங்கீன் நகரில் தலிபான் தளபதி ஒருவரும், அவரது போராளிகள் 50 பேரும் கொல்லப்பட்டதாக ஆப்கான் அதிகாரிகள் கூறியுள்ளனர். 'தலிபான்களின் தளபதி கொல்லப்பட்டார்' அந்த பகுதியை மீளக் கைப்பற்றும் முயற்சியாக ஆப்கான் அரசாங்க படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க விமானங்கள் இரண்டு தடவை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட தலிபான் தளபதியான முல்லா நஸீர், தலிபான்களின் தலைவரான முல்லா அக்தார் மன்சூரின் நெருங்கிய சகா என்று உள்துறை அமைச்சகத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர்களுடைய படைகள் இன்னமும் அந்த மாவட்டத்தை தமது முழுமையான கட்…

  18. குர்திய பெண் போராளிகள்: வீர மகளிர் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஒடுக்கப்படும் சமூகம், தான் ஒடுக்கப்படுவதை உணரும் போது தன்னைச் சூழும் மாயைகளை விலக்கிப் போராடத் தலைப்படுகிறது. அப் போராட்டத்துக்கு ஆண், பெண் வேறுபாடு கிடையாது. ஆண்களை விட மனவுரனுடன் சளையாது போராடும் ஆற்றல் பெண்களுக்கு உண்டெனப் பல போராட்டங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. எனினும், உலகை அச்சுறுத்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அஞ்சும் போராளிகளாகக் குர்தியப் பெண் போராளிகள் உள்ளமை கொஞ்சம் வியக்கவைக்கும் உண்மையே. இன்றைய மத்திய கிழக்குச் செய்திகள், சிரியா, அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி என்பவற்றைச் சுற்றிக் கொண்டிருந்தாலும் அனைத்துக்கு நடுவிலும் பல்வேறு ஒடுக்குமுறையாளர்கட்கும் ஆக்கிரமிப்பாளர்கட்கும்…

  19. தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நடந்து சென்ற மோடி தடுத்து நிறுத்திய ரஷ்ய அதிகாரி மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி | பட உதவி பிஐபி. ரஷ்யாவில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அதை கவனிக்காமல் நடந்து செல்ல முயன்ற பிரதமர் மோடியை ரஷ்ய நாட்டு அதிகாரி ஒருவர் மிகவும் நேர்த்தியாக தடுத்து நிறுத்தினார். வருடாந்திர இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். விமானநிலையத்தில் மோடியை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விமானத்திலிருந்து மோடி இறங்கியது அவருக்கு ரஷ்ய நாட்டு பாதுகாப்புப் படையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அ…

  20. பதிவுகள் 2015: கவனிக்கத்தக்க இந்திய - இலங்கை உறவு இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் இந்தியப் பிரதமர் மோடி இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் மோடி அண்டை நாடுகளுடன் சுமுகமான நட்புறவு பேணப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவிலேயே உறுதியளித்திருந்தார். பதவியேற்பு விழாவுக்கே சர்ச்சைகளை மீறியும் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்திருந்தார். இந்நிலையில், 2015-ம் ஆண்டு இந்தியா - இலங்கை உறவு இணக்கமாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது. 2015 இலங்கை அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய…

  21. 70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வருகிறது ஹிட்லரின் புத்தகம்! 70 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட்லரின் 'மெயின் கெம்ப்' புத்தகத்தை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இதற்கு யூதர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர். இவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள், யூதர்கள் பற்றிய எண்ணம் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துக்களுடன் 'மெயின் கெம்ப்' என்ற பெயரில் தனது சுயசரிதையை எழுதினார். அவரது ஆட்சிக்காலத்தில் அப்புத்தகம் பரவலாக விற்பனையானது. இந்நிலையில் அவரது மரணத்துக்கு பிறகு அப்புத்தகத்தை விற்பதற்கு நேச நாடுகள் தடை விதித்தன. மேலும் புத்தகத்தின் பதிப்புரிமை ஜெர்மனியின்…

  22. சவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலி (பதற வைக்கும் வீடியோ) ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சவூதி அரேபிய தலைநகரான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள், குழந்தைகள் என 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சவூதி அரேபிய ராணுவத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்து உள்ளார். மேலும், தீ விபத்திற்கான காரணம் …

  23. இளம்பெண்ணை பலாத்காரம்: மலேசிய போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறை இளம் பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மலேசியாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிக்கு 100 ஆண்டு சிறைத் தண்டனையும் 15 பிரம்படி தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் குற்றச்செயல் தடுப்பு அதிகாரியாக பணியாற்றியவர் துணை கண்காணிப்பாளர் ரொஹைஸத் அப்துல் அனி. இவர் மீது பலாத்கார வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்தபோது (2012) 13 வயது இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக பலாத்காரம் செய்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை போர்னியா தீவில் உள்ள சபா மாகாண தலைநகர் கோடா கினபாலு நீதிமன்றத்தில் புதனன்று நடந்தது. அப்போது அரசு துணை வழக்கறிஞர் அ…

  24. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள 100 ஆளில்லா விமானம் வாங்க இந்தியா திட்டம் அமெரிக்காவின் பிரிடேட்டர் வகை ஆளில்லா போர் விமானம். அமெரிக்காவிடம் இருந்து 100 ஆளில்லா போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தில் வீரர்கள் உயிரிழப்பைத் தடுக்க ஆளில்லா போர் விமானங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக ஆப்கானிஸ்தான், இராக், சிரியாவில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல், உளவுப் பணிகளில் ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. சீன ராணுவ அச்சுறுத்தல் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகியவை மறைமுக கூட்டணி அமைத்துள்ளன. 3 நாடு களும் இணைந்து அடிக்…

  25. தென்சீன கடலில் மலேசியா அருகேயுள்ள குட்டித் தீவு நாடு புருனே. பணக்கார நாடான இது கடந்த 1984–ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இங்கு 4 லட்சத்து 15 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். தற்போது அங்கு மன்னர் ஆட்சி நடக்கிறது. ஹசன்னால் போல்கியா மன்னராக உள்ளார். முஸ்லிம் நாடான இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அந்நாட்டு அரசு அதற்கான தடையை கொண்டு வந்தது. அரசின் உத்தரவை மீறி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். முஸ்லிம்கள் மத வழியில் இருந்து விலகி செல்வதை தடுக்கவே அரசு இந்த நடவடிக்கை மேற் கொண்டுள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.