Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படையில் ரஷ்யா பங்கேற்க ஒபாமா நிபந்தனை! வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப்படையில், ரஷ்யா பங்கேற்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிய நிபந்தனை விதித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலமாகியுள்ள நிலையில், 65 உலக நாடுகள் அவர்களை எதிர்க்கும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்யா, சிரியா நாட்டு அதிபர் பஷர் அல் ஆசாத்தை பாதுகாக்கவும், அந்நாட்டு அரசுக்கு உதவும் வகையில் ஐ.எஸ்.தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கில் ராணுவ தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, "ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தீவிரவாதிகளை ஒழிக்க மட்டுமே தாக்குதல்களை ந…

  2. சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர்விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது. இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் “முதுகில் குத்திவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும். இதை வேறு மாதிரி சொல்லமுடியாது. இன்று நடைபெற்ற சம்பவம் துருக்கி - ரஷ்ய இட…

    • 3 replies
    • 1.4k views
  3. சிங்கப்பூரில் தமிழர் ஹோட்டலில் மசால் தோசை சாப்பிட்ட மோடி! ( வீடியோ) சிங்கப்பூரில் உள்ள பிரபல கோமளவிலாஸ் ஹோட்டலில், பிரதமர் மோடிக்கு மசால்தோசை விருந்தளித்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ . இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பிரபலமான இந்திய ஹோட்டலான, கோமளவிலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் நேற்று இரவு விருந்தளித்தார். இதில் என்ன விஷேசம் என்னவென்றால், தலைவர்கள் இருவரும் அந்த ஹோட்டலுக்கு நேரடியாக சென்று விருந்து உண்டதுதான். பிரதமர் மோடி மசால்தோசை, வடை போன்றவற்றை விரும்பி உண்டார். இந்த ஹோட்டலை ராஜ்குமார் என்பவர் நிர்வகித்து வருகிறார். …

  4. சிரியாவில் ரஷ்ய யுத்த விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது சிரியாவுக்கு மேலே வைத்து ரஷ்யாவின் சுக்கோய் 24 ரக போர் விமானம் ஒன்றை துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது. சிரியாவுடனான எல்லையின் அருகே தமது வான் பரப்புக்குள் அந்த ரஷ்ய விமானம் அத்துமீறி நுழைந்ததால், தமது எஃப் 16 ரக விமானங்கள் இரண்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கிய இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். சுடுவதற்கு முன் ஐந்து நிமிட நேரத்தில் பத்து தடவை அந்த விமானத்தை தாம் எச்சரித்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் ரஷ்ய விமானம் துருக்கிய வான் பரப்பில் நுழைந்ததாகக் கூறப்படுவதை மாஸ்கோ மறுக்கிறது. தமது விமானம் இன்னொரு விமானத்திலிருந்து சுடப்படவில்லை, தரையிலிருந்துதான் சுடப்பட்…

  5. மெசெடோனியாவுக்குள் நுழைய முடியாத குடியேறிகள் வாய்த் தைப்புப் போராட்டம் ====================================== பாரிஸ் தாக்குதல்களை அடுத்து ஐரோப்பாவுக்குள் நுழைவதில் புதிய கெடுபிடிகளை சந்தித்திவரும் இரானிய, பாகிஸ்தானிய குடியேறிகள் வாயைத் தைத்துக்கொண்டு உண்ணாவிரத மற்றும் மௌன விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். http://www.bbc.com/tamil/global/2015/11/151124_refugeesmanivannan

  6. இருந்ததே நான்கு,அதிலும் ஒன்று போய்விட்டது உலகளவில் கடைசியாக எஞ்சியிருந்த வடபகுதி வெள்ளையின காண்டாமிருங்கள் நான்கில் ஒன்று உயிரிழந்துள்ளது. நோலா 'கொலை செய்யப்பட்டாள்'. அறுவை சிகிச்சை பலனளிக்காததால் கருணைக் கொலை. அமெரிக்காவிலுள்ள வனவிலங்கு பூங்காவில் இருந்த 41 வயதான நோலா எனும் பெண் காண்டாமிருகத்தின் உடல்நிலை, அறுவை சிகிக்சை ஒன்றின் பின்னர் மோசமடைந்தது. இடுப்புப் பகுதியில் ஏற்பட்டிருந்த புண் ஒன்றுக்காக நவம்பர் மாதம் 13ஆம் தேதி நோலாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அதன் உடல்நிலை பின்னரும் மோசமடைந்ததால் மருத்துவரீதியில் அதை கருணைக் கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவர்களால் அது கொல்லப்பட்டது. …

  7. இன்றைய நிகழ்ச்சியில்… - துருக்கி சிரியா எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்டது ரஷ்ய யுத்த விமானம்- துருக்கிய வான் பரப்பில் அத்துமீறி நுழையவில்லை என்கிறது ரஷ்யா! - விமானத் தாக்குதல்களால் மட்டும் ஐஎஸ் குழுவினரை தோற்கடிக்க முடியுமா? - சிரியா விவகாரம் பற்றி பேசுவதற்காக பிரான்ஸ் அதிபர் அமெரிக்கா செல்லும் நிலையில், ஐஎஸ் மீதான வான் தாக்குதல்களின் பலன்கள் பற்றி ஆராய்கிறது பிபிசி - பாரிஸ் தாக்குதலை அடுத்து, ஐரோப்பாவுக்குள் குடியேறிகளை அனுமதிப்பதில் அதிகரிக்கும் கெடுபிடிகளுக்கு எதிராக மசெடோனிய எல்லையில் குடியேறிகள் போராட்டம்!

  8. ஐஎஸ்-க்கு நிதி எங்கிருந்து வருகிறது? ஐஎஸ்-க்கு எதிராக போர் புரிய ஐநா அமைப்பே அறிவுறுத்திய பின்பும் கூட உலக நாடுகளுக்கு முன்னால் இருக்கும் பெரிய சவால் ஐஎஸ்.க்கு வரும் பணத்தை முடக்குவது எப்படி என்பதாகவே இருக்கும். டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளிலிருந்து பாக்தாத் புறநகர்ப்பகுதி வரை தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஐஎஸ், உலகிலேயே பெரிய அளவுக்கு நிதியுதவி பெற்று வரும் பயங்கரவாத அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் மத போலீஸ் துறை உள்ளது, இவர்கள் பள்ளிகள் நடத்தி வருகின்றனர், உணவு மையங்கள் மற்றும் பிற நிர்வாக மையங்களையும் ஐஎஸ் நடத்தி வருகிறது. 'தி இகானமிஸ்ட்' பத்திரிகையின் படி, ஐஎஸ் போர் படையினருக்கு மாதம் 400…

  9. தீவிரவாத தாக்குதல் அபாயம்: பெல்ஜியத்தில் உச்சகட்ட பாதுகாப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் மத்திய ரயில் நிலையம் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள். படம்: ஏஎப்பி தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பெல்ஜியம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாயினர். பெல்ஜியத்தை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாத குழு தாக்குதலை தலைமையேற்று நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. பாரீஸை தொடர்ந்து பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட…

  10.  ரஷ்ய விமானத் தாக்குதலில் 2 மாதங்களில் 400 பொதுமக்கள் பலி கடந்த செப்டெம்பரிலிருந்து ரஷ்யா, சிரியாவில் மேற்கொண்டுவரும் விமானத் தாக்குதல்கள் காரணமாக, குறைந்தது 400 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக, மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவிக்கின்றன. செப்டெம்பர் 30ஆம் திகதியிலிருந்து நவம்பர் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.இதில், 97 பேர் சிறுவர்கள் எனவும் அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது. அத்தோடு, கடந்தாண்டு ஒக்டோபரிலிருந்து, குறைந்தது 42,234 விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆவணப்படுத்தப்…

  11. ஐ.எஸ்.க்கு 60 மில்லியன் முஸ்லிம்கள் ஆதரவு இஸ்லாமிய ஆயுத அமைப்பு என தன்மை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழு, உலகிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனினும், குறைந்தது 56 மில்லியன் முஸ்லிம்களின் ஆதரவு, அவ்வமைப்புக்கு உண்டு என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பிரபலமான கருத்துக்கணிப்பு நிறுவனமான பி.ஈ.டபிள்யூ கருத்துக்கணிப்பு நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பிலேயே, இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. லெபனான், இஸ்ரேல், பலஸ்தீனம், பேர்க்கினோ பாஸோ, நைஜீரியா, மலேஷியா, பாகிஸ்தான், துருக்கி, ஜோர்தான், இந்தோனேஷியா, செனகல் ஆகிய 11 நாடுகளிலேயே, இந்தக் கருத்துக் கணிப்பு நடாத்தப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின…

  12. விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது பிரான்ஸ் குண்டுமழை! [Tuesday 2015-11-24 09:00] ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் விமானம் தாங்கி கப்பல்கள் மூலம் பிரான்ஸ் வான்வெளி தாக்குதல்களை தொடங்கியுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 அப்பாவி மக்கள் பலியானதை அடுத்து, ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஹாலண்டே வலியுறுத்தினார். கடந்த திங்கட்கிழமை, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம்கள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.மேலும், ஐ.எஸ். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இரட்டிப்பாக்க அனுமதிக்கவேண்ட…

  13. வெள்ளை மாளிகையை தகர்க்கப்போம்: ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்! வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை தகர்க்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளனர். மேலும், பிரான்ஸில் அதிகமான தாக்குதலை நடத்துவோம் என்றும் அவர்கள் அதில் சபதமிட்டு உள்ளனர். பாரீஸ் தாக்குதலில் 219 பேரை கொன்று குவித்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். இதைத் தொடர்ந்து, சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து ஃபிரான்ஸ் விமானப்படை சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு ஆதரவாக, அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளின் படையும் தங்களின் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தற்கொலை …

  14. ஆந்திர மாநிலத்தில் நெல்லூர், சித்தூர், அனந்தபுரம், கடப்பா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, பிரகாசம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் நெல்லூர், சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.திருப்பதியிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பிடித்த கனமழை நேற்று இரவு வரை விடாமல் கொட்டியது. இதனால் மலைபாதையில் மீண்டும் மண்சரிவு, பாறைகள் விழ தொடங்கின. 1–வது மலை பாதையிலும் மண்சரிவு ஏற்பட்டதால் மலை பாதை நேற்று இரவு மூடப்பட்டது. மேலும் ஒரு வாரமாக மூடப்பட்டு இருந்த பக்தர்கள் நடந்து செல்லும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மழை நீடித்ததால் அந்த…

  15. இன்றைய நிகழ்ச்சியில்… - மூன்றாவது நாளாகவும் முடங்கி கிடக்கின்றது பெல்ஜியத் தலைநகர் - பாரிஸ் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபருக்கு வலைவிரித்து தொடர்கிறது தேடுதல் வேட்டை! - 'ஏற்க முடியாத தாமதம், மெத்தனம்' மேற்கு ஆப்பிரிக்காவின் இபோலா நெருக்கடிக்கு சர்வதேசத்தின் பதில் நடவடிக்கைகள் மீது நிபுணர் குழு விமர்சனம்! - தொழில்துறையில் முன்னேற்றம் காணும் சிங்கப்பூர் பெண்களால் குடும்ப சுமைகளை சமாளிக்க முடிகிறதா?

  16. துபாய் தேரா( Deira ) பகுதியில் பயங்கர தீ விபத்து- இரு 5 மாடி கட்டிடங்கள் எரிந்து சாம்பல்! l தேரா: துபாயின் தேரா பகுதியில் சற்று முன்னர் இரு 5 மாடி கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. துபாயின் தேரா பகுதியில் சலாவுதீன் சாலையில் உள்ள கிரவுன் ப்ளாசா மாலுக்கு அருகே உள்ள இரு 5 மாடி கட்டிடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த இரு மாடி கட்டிடங்களும் தற்போது முழுவதுமாக எரிந்து கொண்டுள்ளன. இக்கட்டிடங்கள் முராகாபாட் போலீஸ் நிலையம் முன்பாக உள்ளன. கடந்த 30 நிமிடங்களுக்கு முன்பு இத்தீவிபத்து ஏற்பட்டது. இதன் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் பிடித்த தீ கட்டிடங்களுக்கும் பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இது உறுதிப்படுத…

  17. 'அப்தஸ்லாம் ஒரு கொலையாளி இல்லை என்றும்- அவர் சரணடைய வேண்டும் என்றும்' அவரது சகோதரர் பெல்ஜியத்தின் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். https://www.facebook.com/bbctamil/videos/10153115215570163/?pnref=story

  18. நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிரியா அகதிகளின் படகை கிரேக்க நாட்டு கடலோர காவல் படை வீரர்கள் வேண்டுமென்றே மூழ்கடிக்க முயற்சிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நாட்டிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் குடியேறும் முயற்சியில் சுமார் 20க்கும் அதிகமான அகதிகள் நள்ளிரவு நேரத்தில் படகில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கிரேக்க நாட்டு கடலோர காவல் படை வீரர்கள் வந்துள்ளனர். படகில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு அகதிகள் கெஞ்சியதாக கூறப்படுகிறது. ஆனால், ரோந்து கப்பலுக்கு அருகில் படகு வந்தவுடன், அதிலிருந்த அதிகாரி ஒருவ…

  19. ரஷ்யாவின் ஏவுகணைகளால் மத்திய கிழக்கில் விமான சேவைகள் பாதிப்பு கிழக்கு-மேற்கு என்று இரண்டு திசைகளிலிருந்தும் ரஷ்யா போர்க் கப்பல்களிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திவருகின்றது சிரியாவில் ஆயுததாரிகளுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டுவரும் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. வடக்கு இராக்கில் உள்ள விமானநிலையங்கள் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு வருகின்ற விமானங்களும் அங்கிருந்து புறப்படுகின்ற விமானங்களும் 'விமான தவிர்ப்பு வலயம்' ஒன்றை சுற்றி வேறு பாதையில் பயணிக்கின்றன. தங்களின் நிலப்பரப்புக்கு மேலாக ரஷ்யாவின் ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு வடக…

  20. மசாஜ் செலவு ரூ.1.72 லட்சம்: கர்நாடக கவர்னரின் ஆடம்பர வாழ்க்கை! பெங்களூரு: கர்நாடகா கவர்னர் வஜுபாய் வாலாவின் மசாஜ் செலவு மாதந்தோறும் ரூ.1.72 லட்சம் என்று செய்திகள் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் கவர்னராக குஜராத்தைச் சேர்ந்த வஜுபாய் வாலா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கவர்னர் மாளிகையில் எவ்வளவு ஊழியர்கள் உள்ளனர்? அவர்களின் பணிகள் என்னென்ன? எவ்வளவு ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது?' என்று ஹலசூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இது தொடர்பாக, கவர்னரின் செயலர் கல்பனா தகவல் …

  21. அமெரிக்க சிறப்பு படையினர் மிக விரைவில் சிரியாவுக்கு செல்லவிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிமை உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே, ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் பிரெட் மெக்கர்க் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியட்ட அவர், “மிக விரைவில் அமெரிக்க சிறப்பு படையினர் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் சிரியாவின் வடக்குபகுதியில் களமிறங்கும் அவர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் உள்ளுர் படையினரை ஒருங்கிணைத்து அவர்களுக்கு உதவுவார்கள்” என்று;தெரிவித்துள்ளார்.இந்த முடிவு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்தபடி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பி…

  22. ஐஎஸ் ஐஎஸ் நடத்தும் பள்ளிக்கூடம்! ஒரு சிறிய பள்ளி, பத்து வயது கூட ஆகாத குழந்தைகள் சிலர் அமர்ந்திருக்கின்றனர். ஆசிரியர் போல நிற்கும் ஒருவர் கரும்பலகையில் இருக்கும் உருது வார்த்தையை காண்பித்து, இது என்னவென்று கேட்கிறார். மாணவர்கள்(சிறுவர்கள்) ஒருமித்த குரலில் சொல்லும் வார்த்தை... 'ஜிகாத்'! இந்தக் காட்சி நடப்பது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறு கிராமத்தில். மாணவர்கள் அமர்ந்திருக்க, ஐஎஸ்ஐஎஸ் என்றழைக்கப்படும் 'இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அண்ட் சிரியா' என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர், அவர்கள் முன்னிலையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார். பாடம் என்றால் வாழ்க்கைப் பாடமல்ல... மாறாக பலரின் வாழ்க்கையை அழிக்கும் துப்பாக்கியையும். வெடி குண்டையும் பற்றிப் படிக்க…

  23. அமெரிக்க விளையாட்டு மைதானத்தில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு:16 பேர் படுகாயம் நியூ ஓர்லியான்ஸ்: அமெரிக்காவின் விளையாட்டு மைதானம் ஒன்றில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அமெரிக்காவில் பதட்டம் நிலவுகிறது. அமெரிக்காவின், நியூ ஓர்லியான்ஸ் நகரில் உள்ள பன்னிஃப்ரெண்ட் பார்க் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை ஒரு இசை வீடியோவுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. இதைக் காண்பதற்காக சுமார் 500 பேர் மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது திடீரென மர்ம நபர்கள் சிலர் கூட்டத்தை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இதில் 16 பேர் படு காயமடைந்தனர், சம்பவ இடத்திற்கு உடனடியாக போலீசார் ஆம்புலன்சுடன் விரைந்து வந்தனர…

  24. எதிர் கருத்து கூறியதால் 12 மாணவர்களை ஐ எஸ் கொன்றுள்ளனர் இராக்கிய நகரான மோஸுலில் ஐ எஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் 12 மாணவர்களை கொன்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மோஸுல் நகர் ஐ எஸ் அமைப்பின் பிடியில் உள்ளது இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் அக்குழுவுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் அந்த மாணவர்கள் முன்னெடுத்தனர் என்று கூறப்படுகிறது. அந்த மாணவர்களின் சடலங்கள் மோஸுலிலுள்ள சவக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. மோஸுல் நகரிலுள்ள ஐ எஸ் ஆதரவாளர்கள் சிலர் மோஸுல் நகரே இராக்கில் ஐ எஸ் அமைப்பின் வலுவான தளமாக உள்ளது. அந்நகரை கடந்த ஆண்டு அவர்கள் கைப்பற்றியது முத…

  25. பாரிஸ் தாக்குதல்:மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படம் வெளியீடு பாரிஸ் தாக்குதலில் ஈடுபட்டிருந்த மூன்றாவது தற்கொலை குண்டுதாரியின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். பாரிஸில் தொடர்ந்தும் கடுமையான ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் அந்த தற்கொலை குண்டுதாரி பாரிஸின் தேசிய கால்பந்து விளையாட்டு அரங்கில் தாக்குதலை நடத்தியவர் என பிரெஞ்ச் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வெளியிட்டுள்ள தற்கொலை குண்டுதாரியின் படம் எம் அல் மஹ்மூத் எனும் நபருடையது என பிபிசி அறிகிறது. இப்போது படம் வெளியாகியுள்ள நிலையில், அத்தாக்குதல் தொடர்பிலான சாட்சிகளை முன்வருமாறு காவல்துறையினர் கோரியுள்ளனர். அந்த நபர் சிரியாவிலிருந்து துருக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.