உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
பிரதமர் மோடிக்கு விருந்தளித்தார் இங்கிலாந்து ராணி எலிசபெத்! லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு ராணி எலிசபெத் மதிய விருந்து அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு பயணமாக நேற்று முன்தினம் இரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றார். நேற்று மதியம் லண்டன் சென்றடைந்த அவருக்கு, விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, லண்டன் டவுனிங் தெருவில் உள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் இல்லத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது பிரதமர் மோடிக்கு ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இருநாட்டு பிரதமர் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, இருதரப்பு ஒத்துழைப்புகள்…
-
- 1 reply
- 621 views
-
-
நரேந்திர மோடி மீது பிரிட்டன் ஊடகங்கள் சரமாரி விமர்சனம் பிரிட்டன் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியின் மீது பிரிட்டன் ஊடகங்கள் காரசார விமர்சனம். | ட்விட்டர் படம். பிரிட்டனில் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கலாம், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கலாம் ஆனால் வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் காலையில் பிரிட்டன் செய்தி ஊடகங்களின் கடும் விமர்சனங்கள் முன் அவர் கண் விழித்துள்ளார். அனைத்து செய்தித் தாள்களும், தி கார்டியன் முதல் தி டைம்ஸ், டெய்லி மெயில், டெய்லி டெலிகிராப் மற்றும் தி இண்டிபெண்டண்ட் ஆகிய பத்திரிகைகள் இருதரப்பு ஒப்பந்தங்களை விடுத்து பிரதமர் மோடியின் குஜராத் முதல்வர் கால செயல்பாடுகளை கடுமையா…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாரிசில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உணவு விடுதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1386457 http://www.t-online.de/nachrichten/panorama/kriminalitaet/id_76124544/explosionen-und-schiessereien-in-paris-offenbar-tote.html
-
- 61 replies
- 3.5k views
-
-
ஊழியர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி: 930 விமானங்களை ரத்து செய்தது லுப்தான்சா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு நாடுகளுக்கு இயக்கும் 930 விமானங்களை லுப்தான்சா நிறுவனம் ரத்து செய்தது. லுப்தான்சா விமான பணியாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் முடிவு எட்டப்படாததைத் தொடர்ந்து 930 விமானங்களை ரத்து செய்வதாக நிறுவனம் அறிவித்துள்ளது. பிராங்பர்ட், மூனிச், டஸல்டர்ப் ஆகிய பகுதிகளிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்லும் நீண்ட தொலைவு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்து வைக்க தாங்கள் விரும்புவதா…
-
- 0 replies
- 1.7k views
-
-
சிரியாவில் அமெரிக்க தாக்குதலில் 'பிரிட்டிஷ்' ஐஎஸ் தலைவர் ஜிகாதி ஜான் பலி அக்டோபர் 3, 2014-ம் தேதி இஸ்லாமிக் ஸ்டேட் வெளியிட்ட தேதி குறிக்கப்படாத வீடியோவிலிருந்து பெறப்பட்ட ஜிஹாதி ஜான் என்று அழைக்கப்படும் நபரின் படம். | ஏ.பி. சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவரான ஜிகாதி ஜான் (26) உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பிணைய கைதிகள் கொடூரமாக முறையில் கழுத்து அறுத்து கொல்லப்படும் வீடியோக்களை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பிணைய கைதிகளை கொலை செய்யும் கல்நெஞ்சுக்காரர் ஜிகாதி ஜான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்பில் முக்கிய நபராக விளங்கும் ஜிகாத…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாலஸ்தீனப் பிரச்னைக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனித் தனி அண்டை நாடுகளாகும் "இரு நாட்டுக் கொள்கை' தீர்வு சாத்தியமே என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார்.ஐ.நா. சபையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசுகையில் அவர் கூறியதாவது:யூதர்களின் ஜனநாயக நாடாக இஸ்ரேலும், அதனருகே தனி நாடாக பாலஸ்தீனமும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் அமைதியான அண்டை நாடுகளாக நீடித்திருப்பது வெறும் கனவு மட்டுமல்ல.பாலஸ்தீனப் பிரச்னைக்கு "இரு நாடுகள்' தீர்வு சாத்தியமே.அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் முயற்சிகளைக் கொண்டு, அந்தத் தீர்வை எட்ட முடியும் என்பதை உணரலாம் என்றார் அவர். http://www.seithy.com/breifNews.php?newsID=144686&c…
-
- 0 replies
- 279 views
-
-
மாணவர் விசா விவகாரத்தை கேமரூனிடம் எழுப்பிய மோடி லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்த சென்ற மோடி, கேமரூன். | படம்: ஏ.பி, இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குக் கல்விக்காக வரும் மாணவர்கள் எண்ணிக்கை கடுமையாக குறைந்திருப்பதையும், மாணவர் விசாக்கள் குறித்த பிரச்சினைகளையும் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனிடம் எழுப்பினார். பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் இந்த விவகாரத்தை எழுப்பினார். இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, "மாணவர்கள் விசா விவகாரத்தை பிரதமர் மோடி மிகவும் வலிமையாக எழுப்பினார். பிரிட்டனில் கல்விக்க…
-
- 1 reply
- 543 views
-
-
ஃபேஸ்புக்கிடம் பதிவுகளை நீக்க கோரியதில் இந்தியா முதலிடம் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் உடன் பிரதமர் நரேந்திர மோடி. | கோப்புப் படம்: ஏபி உள்நாட்டு சட்ட விதிமுறைகளை மீறியதாக உள்ள பதிவுகளை நீக்க வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனத்திடம் நாடிய உலக நாடுகளில் இந்தியா முதலிடம் வகித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இத்தகைய இந்திய அரசின் கோரிக்கைகளின் எண்ணிக்கையை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், இப்போது 3 மடங்கு அதிகரித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஃபேஸ்புக் நிறுவனம் வழக்கமாக தங்களது பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை எந்த அரசுக்கும், புலனாய்வு ஏஜென்சிகளுக்கும் தருவதில்லை. எனினும், தங்கள் பயனாளர்களில் குற்றப் பின்…
-
- 0 replies
- 638 views
-
-
சகிப்பின்மையை இந்தியா சகித்துக்கொள்ளாது: பிரிட்டனில் பிரதமர் மோடி உறுதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூட்டாக பேட்டி. | படம் உதவி: பிஐபி சகிப்பின்மையை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று பிரிட்டனில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார். மேலும், இந்தியக் குடிமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாத்திட தமது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கேமரூன் தலைமையில் இருநாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை பிரதிநிதிகள் அளவிலான இந்த உயர் நிலைக…
-
- 0 replies
- 568 views
-
-
43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்: அதிர்ச்சித் தகவல்கள்! மெக்சிகோ நகரம்: பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளும் கும்பலிடமிருந்து தப்பித்த இளம்பெண், 4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். மெக்சிகோவை சேர்ந்தவர் கர்லா ஜாசின்டோ. அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் மனித கடத்தல் கும்பலிடம் சிக்கியதையும் அதனால் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளையும் விவரித்துள்ளார். அதன் மூலம் மெக்ஸிக்கோ மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் கொடூர மனித கடத்தல்களின் கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கர்லா போன்று உலகில் 10 ஆயிரம…
-
- 5 replies
- 1.1k views
-
-
ஆப்பிள் ஸ்டோரில் கறுப்பின மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு ( வீடியோ) மெல்பர்ன் நகரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கிளையில் கறுப்பின மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் இணையங்களில் வைரலாகியதையடுத்து, ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது மெல்பர்னில் உள்ள பள்ளியில் படித்து வரும் 6 ஆப்ரிக்க மாணவர்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு சொந்தமான கிளை ஒன்றுக்கு பள்ளி சீருடையிலேயே சென்றுள்ளனர். ஆனால் வாயிலிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். உடனே அங்கு வரும் ஆப்பிள் நிறுவன ஊழியர் ஒருவர் ''உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என கூற, அதற்கு அந்த மாணவர்கள் 'ஏன் நாங்கள் எதையாவது திருடிவிடுவோமா? என்று கேள்வி எழுப்புகிறார். …
-
- 0 replies
- 550 views
-
-
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 320 கோடிக்கு ஏலம் போன நீல நிற வைரம்! [Thursday 2015-11-12 21:00] தென்னாப்பிரிக்காவில் உள்ள கல்லீனன் என்ற வைரச்சுரங்கத்தில் கடந்த ஆண்டு வெட்டியெடுக்கப்பட்ட அரிய வகை நீல நிற வைரம் (ப்ளூமூன்), 29.6 காரட் எடையுள்ளது.இந்த வைரம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள சோத்பே என்ற ஏல நிறுவனத்தில் வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. இதில் 48.4 மில்லியன் டாலருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 320 கோடிக்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்காங்கில் உள்ள ஒரு மில்லினியர் இந்த ப்ளூமூன் வைரத்தை தனது 7 வயது மகளுக்காக வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதற்கு முன் தி கிராப்பிங்க் என்…
-
- 0 replies
- 470 views
-
-
டெல்லியில் அமைக்கப்பட உள்ள கலாம் அறிவுசார் மையத்துக்காக அவரது உடமைகளை வழங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவிற்கு பின் டெல்லியில் அவர் வாழ்ந்த இல்லத்தை அறிவுசார் மையமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை.அதற்கு பதிலாக அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேசுவரத்தில் பிரமாண்டமான அறிவுசார் மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனால் டெல்லியில் கலாம் இல்லத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள், ராமேசுவரத்தில் உள்ள கலாம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைக…
-
- 0 replies
- 293 views
-
-
பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கடந்த 2004-ம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை தொடர்ந்து அவரது பத்தா கட்சியை சேர்ந்த மகமது அப்பாஸ் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். ஆனால் அவரது படைகளுடன் ஹமாஸ் இயக்கத்தினர் கடுமையாக சண்டையிட்டு, காசா பகுதியை கடந்த 2007-ம் ஆண்டு கைப்பற்றினர்.அதைத் தொடர்ந்து, யாசர் அரபாத், ரமல்லா நகரில் வாழ்ந்து வந்த இல்லம் மூடப்பட்டு கிடக்கிறது. அந்த இல்லத்தில் யாசர் அராபத் நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.இதற்காக அந்த இல்லத்தை ஹமாஸ் ஆட்சியாளர்கள், யாசர் அராபத் கட்சியினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீனின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். http://www.seithy.com/breifNews.php?newsID=144605&category=WorldN…
-
- 0 replies
- 529 views
-
-
ஆப்பிரிக்காவில் மூளைக்காய்ச்சலுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தடுப்பூசி நடவடிக்கை அபார வெற்றி பெற்றுள்ளது என சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.காம்பியா முதல் எத்தியோப்பியா வரை உள்ள 16 நாடுகளில் மெனின்ஜைட்டிஸ்-ஏ எனும் மூளைக்காய்ச்சல் நோய்க்கெதிராக 2010-ம் ஆண்டு முதல் இதுவரை, 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு அந்தப் பகுதி முழுவதிலும் மொத்தமாக நான்கு பேருக்கு மட்டுமே மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட்டது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.ஒரு காலத்தில் ஆப்ரிக்காவின் மேற்கு தொடங்கி கிழக்கு வரையிலான அந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் தற்போது அங்கு மூளைக்காய்ச்சல் மரணங்களே ஏற்படாதத்து குறி…
-
- 0 replies
- 223 views
-
-
அவசர நிலைப்பிரகடனத்தை திரும்பப் பெற்ற மாலைதீவு அரசு! [Wednesday 2015-11-11 18:00] மாலத்தீவுகள் நாட்டில் அவசர நிலைப்பிரகடனம் திரும்பப் பெறுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.கடந்த வாரத்தில் மாலத்தீவில் அதிபர் மாளிகைக்கு அருகே வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யமீன் அவசரநிலையை பிரகடனம் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது நாட்டில் பாதுகாப்பு நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: நாட்டில் அவசரநில…
-
- 0 replies
- 919 views
-
-
தொடரும் துயரம்: துருக்கியில் படகு கவிழ்ந்து அகதிகள் 14 பேர் பலி படம்: ராய்ட்டர்ஸ். துருக்கியின் ஏஜியன் கடல் பகுதியில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் மூழ்கி பலியாகியுள்ளனர். இவர்கள் கிரீஸ் நாட்டை அடைய முயற்சி மேற்கொண்டனர். இவர்கள் வந்த படகு கனக்கலே என்ற இடத்திலிருந்து கிரீஸின் லெஸ்பாஸ் தீவு நோக்கி வந்த போது இந்த துயரம் நிகழ்ந்தது. துருக்கி கடலோரக் காவற்படையைச் சேர்ந்தவர் சடலங்களை மீட்டனர். இதில் மேலும் 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக டோகன் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. உயிருடன் மீட்கப்பட்டவர்களில் கர்ப்பவதி ஒருவரும் அடங்குவார். இவரது உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித…
-
- 0 replies
- 406 views
-
-
இத்தாலிய ஓவியரின் நிர்வாண நங்கையின் விலை 170 மில்லியன் christies இந்த ஓவியம் இதுவரை ஏலத்தில் விற்கப்பட்டதில்லை இத்தாலிய ஓவியர் அமீடியோ மோடிக்லியானி தீட்டிய நிர்வாண நங்கை ஓவியம் 170 மில்லியன் டாலர்களுக்கு நியூயார்க் நகரில் ஏலம் போயுள்ளது. இத்தாலிய ஓவியர் அமீடியோ மோடிக்லியானி தீட்டிய நிர்வாண நங்கை ஓவியம் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது. இத்தாலியர் ஒருவர் தீட்டிய ஓவியம் இந்த அளவுக்கு விலைபோயுள்ளது இதுவே முதல் முறை. நியூயார்க்கிலுள்ள கிறிஸ்ட்டி ஏல நிறுவனத்தின் அலுவலகத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் ஓவியத்தை வாங்க பெரும் போட்டி நிலவிய சூழலில் ஒன்பது நிமிடங்கள…
-
- 3 replies
- 1.2k views
-
-
மோடி - ஒபாமா புதிய ஹாட்லைனில் தொடர்பு கொண்டு பேச்சு ஒபாமா, மோடி | கோப்புப் படம் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் முதல் முறையாக, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ஹாட்லைனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. துருக்கியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டின்போது முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய சர்வதேச விவகாரங்கள் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் ஆலோசித்ததாக அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறிவரும் பருவநிலையை சமாளிப்பது தொடர்பாக இரு நாடுகளும் மேற்கொண்டுள்ள நடவடிக…
-
- 0 replies
- 375 views
-
-
இஸ்ரேல் ராணுவ வீரரைக் கத்தியால் குத்த முயன்ற பெண் சுடப்பட்டார் (வீடியோ) ஜெருசலேம்: ஜெருசலேம் அருகே இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்த முயன்ற பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஜெருசலேமில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கரை பெய்டர் லிலிட் பகுதியில், பாலஸ்தீனிய பெண் ஒருவர் சாதாரணமாக நடந்து வந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் யூத நகரத்திற்குள் நுழைய ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கிரிடென் பெர்கர் என்ற இஸ்ரேல் வீரர் , அவரிடம் அடையாள அட்டையைக் கேட்கிறார். அடையாள அட்டையை அந்த பெண் காட்டுகிறார்.…
-
- 0 replies
- 556 views
-
-
மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூகி வெற்றி! ரங்கூன்: மியன்மார் நாட்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்எல்டி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் நேற்று(ஞாயிறு) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவை தனது தலைமையிலான அரசும், ராணுவமும் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் தெய்ன் செய்ன் தெரிவித்திருந்தார். ஆளும் கட்சியான ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சி (யுஎஸ்டிபி) கட்சித் தலைவர் ஹதே ஊ, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் தோல்வியை தழுவிவிட்டோம். எனது சொந்த தொகுதியான ஹின்தாடாவிலும் தோல்வி ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. எனது…
-
- 4 replies
- 1k views
-
-
ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோகினூர் வைரம்: பிரிட்டன் அரசி மீது வழக்கு! இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட கோகினூர் வைரத்தை திருப்பித் தரக் கோரி, லண்டன் நீதிமன்றத்தில், பிரிட்டன் அரசிக்கு எதிராக வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரம், 105 கேரட் எடை கொண்டது. இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம், பிரிட்டன் அரசர் நான்காம் ஜார்ஜ் காலத்திலிருந்து ( 1937-ம் ஆண்டு முதல்) பிரிட்டன் அரசிகளின் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது. தற்போது, ராணி இரண்டாம் எலிசபெத்தின் மணி மகுடத்தில் கோகினூர் வைரம் உள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு முதல் அவரது கிரீடத்தில் கோகினூர் வைரம் இடம் பெற்றுள்ளது. தற்போது பிரிட்டன் அரசுரிமை பொருளா…
-
- 3 replies
- 1.5k views
-
-
மேற்கு சஹாராவில் சமரசத்துக்கு இடமில்லை சர்ச்சைக்குரிய மேற்கு சஹாராவின் ஆளுகை குறித்தான சமசரங்கள் எவற்றுக்கும் இடம் கிடையாது எனவும், மொரோக்கோவின் கீழ் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனவும், அந்நாட்டின் அரசர் மொஹமட் ஏஐ தெரிவித்துள்ளார். மேற்கு சஹாரா மீதான ஆளுகை தொடர்பாக பல நாடுகள் தங்களது கோரிக்கையை விடுத்துவரும் நிலையில், இது தொடர்பாக நான்கு தசாப்தங்களாகக் குழப்பம் காணப்பட்டு வருகின்றது. இது தொடர்பான பேரம் பேசலை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை, அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே, பிராந்தியத்துக்குத் தனியாட்சியே தேவைப்படுகின்றது எனத் தெரிவித்த அரசர், 'மொரோக்கோ வழங்கக்கூடிய அதிகபட்ச தீர்வு இதுதான்" எனத் தெரிவித்தார். …
-
- 0 replies
- 553 views
-
-
அரவிந்த் கேஜ்ரிவால். | கோப்புப் படம்: சுசில் குமார் வர்மா. பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணியின் தோல்வி, பிரதமர் மோடியின் அரசின் செயல்பாடுகள் மீதான தீர்ப்பு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கேஜ்ரிவால் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆட்சி மற்றும் அவரது செயல்பாடுகள் மீதான தீர்ப்பே பிஹார் தேர்தல் முடிவுகள். ஆளும், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய ஜனதா தளம், மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றின் வெற்றி, மோடி மற்றும் கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோரது அராஜகம் மற்றும் கர்வத்தை சுக்குநூறாக்கியுள்ளது. வெறுப்பின் மீது கட்டப்படும் அரசியலை பிஹார் மக்கள் அனுமதிக்கவில்லை. நாட்டை சகிப்பின்மை…
-
- 0 replies
- 541 views
-
-
மகா கூட்டணிக்கு மகத்தான வெற்றி; பிஹாரில் மூன்றாவது முறையாக முதல்வர் ஆகிறார் நிதிஷ் குமார் பிஹாரில் நிதிஷ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் | படம்: ரஞ்சித் குமார் பிஹார் மாநில சட்டப்பேரவையின் 243 தொகுதிகளில் 170-க்கும் மேலான இடங்களை வசப்படுத்தும் நிதிஷ் - லாலு - காங்கிரஸ் மெகா கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார். பிரதமர் மோடியின் பிரச்சார யுக்தியும், அமித் ஷாவின் தேர்தல் வியூகங்களும் பிஹாரில் கைகொடுக்கவில்லை என்பது தெளிவானது. | இணைப்பு - பிஹார் தேர்தல் முடிவுகள் - செய்தித் தொகுப்பு | நாடு முழுவதிலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட பிஹார் மாநில சட்டப்பே…
-
- 0 replies
- 465 views
-