Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஐஎஸ் அமைப்பின் மீது ரஷ்யாவின் கவனம் திரும்ப வேண்டும்: ஒபாமா வலியுறுத்தல் ஒபாமா. | படம்: ராய்ட்டர்ஸ். பாரீஸ் தாக்குதல்களுக்குப் பிறகே ரஷ்யா தனது கவனத்தை ஐஎஸ் பயங்கரவாதம் குறித்து திருப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். மனிலாவில் ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுறவு ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஒபாமா, இது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் விவாதிக்கவுள்ளதாக தெரிவித்தார். சிரியா அகதிகளை அமெரிக்கா வரவேற்பது பற்றி, இடர்ப்பாடு குறித்த அதீதமான மற்றும் ஆவேசமான, பீதியும் வெறியும் நிறைந்த எதிர்ப்புகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து வெளிவருவதை ஒபாமா கண்டித்தார். "இவ்வகையான எதிர்வினைகள் நிறுத்தப்பட வேண்டும், உலகம் நம்ம…

  2. விமானத்தை அழித்தவர்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துத் தண்டிப்போம்: ரஷ்ய அதிபர் ஆவேசம்! மாஸ்கோ: ரஷ்ய விமானத்தைத் தாக்கி அழித்த தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் கண்டுபிடித்துத் தண்டிப்போம் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31 ம் தேதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள பகுதியாகும். அந்த விமானத…

  3. பயங்கரவாத எதிர்ப்பு பயணப்பட வேண்டிய பாதை! தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல், ‘இஸ்லாமிய அரசு’ (ஐஎஸ்) அமைப்புக்கு எதிராக இணைந்து செயல்பட்டாக வேண்டிய அவசியத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஐஎஸ் பயங்கரவாதிகள் இதுவரை நிகழ்த்தியுள்ள தாக்குதல்களின் எண்ணிக்கையையும் தீவிரத்தையும் கணக்கில்கொண்டு எல்லா வல்லரசுகளும் இணைந்தும் விரைவாகவும் நடவடிக்கை எடுத்தாக வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலில், துருக்கியின் அன்டால்யா நகரில் கூடிய ஜி-20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பானது இதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் இப்பிரச்சினை உடனடியாக அவர்களுடைய கவனத்தை ஈர்த்திருப்பதும்…

  4. கிரீஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம் கிரீஸ் நாட்டின் மேற்கு தீவான லெஃப்கடாவில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 2 பெண் கள் உயிரிழந்தனர். ஏதென்ஸ் நகரில் இருந்து மேற்கே சுமார் 300 கி.மீ. தொலை வில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.10 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு கிரீஸ் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. லெஃப்கடா மற்றும் அதை யொட்டிய கெஃபலோனியா தீவுகளில் கட்டிடங்கள் குலுங்கிய தால் மக்கள் பீதியடைந்து, அவற் றில் இருந்து அவசர அவசர மாக வெளியேறினர். நிலநடுக்கத் தில் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் மேற்கு கிரீஸில் இருந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள் ளனர். போன்டி வாஸ்லிகி பகுதியில் …

  5. குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல்:ஜெர்மனியில் கால்பந்து போட்டி ரத்து ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெறவிருந்த சர்வதேச கால்பந்து போட்டி குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Image caption ஹானோவர் கால்பந்து விளையாட்டு அரங்கத்தில் ஜெர்மனிய பொலிசார் அந்தப் போட்டி ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு இடையே நடைபெறவிருந்தது. ஹானோவர் நகர் முழுவதற்கும் ஆபத்து இருப்பதாக திடமாக உணரப்பட்டது என நகரின் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். அந்த கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னர், அரங்கிலிருந்த ரசிகர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் உத்தரவிட்…

  6. பெய்ருட்டின் 'ஹீரோ" பிரான்ஸ் தலைநகர் பரிஸிலும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும் இடம்பெற்ற மோசமான தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நகரங்கள் மீதும் ஆயுதக் குழுக்கள் மீதும் உலகின் கவனம் திரும்பியுள்ள நிலையில், பெய்ரூட்டைச் சேர்ந்த ஒருவர், கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். 32 வயதான அடேல் டேர்மொஸ், தனது வாழ்க்கையைப் பணயம் வைத்து, தற்கொலைக் குண்டுதாரியிடமிருந்து ஏனையோரைப் பாதுகாத்தமைக்காகவே கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். அடேல் டேர்மொஸ், தனது பெண் குழந்தையுடன் தென் லெபனானிலுள்ள ஷியா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட போது, வெளியே ஏற்பட்ட சத்தத்தைத் தொடந்து, அது என்னவெனப் பார்க்க வெளியே வந்துள்ளார். அதன்போது, தற்கொலை அங்கியணிந்த குண்டுதாரியொ…

  7. 'அகதியின் அடையாளத்தில்' வந்த பாரிஸ் குண்டுதாரி <iframe width="400" height="500" frameborder="0" src="http://www.bbc.com/tamil/global/2015/11/151117_leros_bomber/embed"></iframe> பாரிஸில் தற்கொலை தாக்குதலை நடத்தியிருந்தவர்களில் ஒருவர் அஹ்மெட் அல் மொஹமட் என்று பிரான்ஸ் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். இவர் சிரியாவிலிருந்து வந்தவர் என்று கிரேக்கத்தின் அதிகாரிகள் கூறுகின்றனர். லெரோஸ் தீவு வழியாக மஸிடோனியாவை கடந்து, சேர்பியாவுக்கு போயிருக்கிறார். பின்னர் அங்கிருந்து குரோயேஷியா வழியாக ஹங்கேரிக்கு சென்றிருக்கிறார். பின்னர், ஆஸ்திரியாவுக்கு போனதாக நம்பப்பட்ட அவர், கடைசியில் பிரான்ஸின் பாரிஸ் நகரி…

  8. ஐ எஸ் அமைப்பு மீது ரஷ்யா கூடுதல் தாக்குதல் இஸ்லாமிய அரசு என்று தம்மை கூறிக் கொள்ளும் அமைப்பின் மீது இதுவரை இல்லாத வகையில் மிகக் கடுமையாக கூடுதல் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக ரஷ்யா கூறுகிறது. ஐ எஸ் அமைப்பினர் மீது அதிகரித்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன அவர்களுக்கு எதிராக நீண்டதூர ஏவுகணைகளையும் குண்டு வீச்சுக்களையும் நடத்தியுள்ளது என பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளியான தகவல்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உறுதிப்படுத்தியுள்ளார். ஐ எஸ் அமைப்பினர் பலமாக இருக்கும் ரக்கா மற்றும் டியர் எஸ் ஸார் பகுதிகளிலுள்ள அவர்களின் இராணுவ நிலைகள் மீது தமது விமானங்கள் ஏவுகணைகளை வீசின என்றும் வடக்குப் பகுதியில் குண்டு வீச்சுக்கள் நடைபெற்ற…

  9. எங்கிருந்து வருகிறது ஐ.எஸ் அமைப்புக்குப் பணம் ? Image caption அபு பக்கர் அல் பாக்தாதி - இஸ்லாமிய அரசு அமைப்பின் தலைவர் பாரிஸில் தங்கள் அமைப்புதான் 129 பேர் கொல்லப்பட்ட தாக்குதல்களை நடத்தியது என்று இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்பு கூறியிருக்கிறது. இந்த ஐ.எஸ் அமைப்புக்கு எங்கிருந்து பணம் வருகிறது? வெள்ளிக்கிழமை நடந்த பாரிஸ் தாக்குதல்களை அடுத்து மீண்டும் ஒருமுறை உலகின் கவனம் இஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்பின் மேல் வந்திருக்கிறது. இந்த அமைப்பின் தீவிரவாதிகள் பாரிஸ் தாக்குதல்களைத் தாங்கள்தாம் செய்தோம் என்று கூறியிருக்கிறார்கள். உலகின் மிகப் பணக்கார தீவிரவாதக்குழுவாக இஸ்லாமிய அரசு குழு கருதப்படுகிறது. இது இர…

  10. பாரிஸ் படுகொலைகள்:இசை அரங்கில் நடந்தது என்ன? Reuters உயிர் பிழைத்த ஒருவர்-ரத்த வெள்ளத்தில் bbc AFP முதல் பலிகள் வெளியே இருந்த மதுபானக் கடையில் இடம்பெற்றன. EPA தாக்குதலில் தப்பித்த சிலர் Reuters நூலிழையில் உயிர் பிழைத்தவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் காவல்துறையினர் AFP பலரின் உயிரை காப்பாற்…

  11. ஐ.எஸ் அமைப்புக்கு பிரான்ஸ் பதிலடி சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 14-ம் திகதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் பாரிஸில் நடத்தபப்ட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://tamil.adaderana.lk/ne…

  12. ரஷிய விமானம் மீதான தாக்குதல்: தகவல் வழங்கினால் பெருந்தொகை சன்மானம் எகிப்தின் சினாய் தீபகற்பகத்தில் 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறி விழுவதற்கு காரணமான தீவிரவாதிகள் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5 கோடி அமெரிக்க டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் கடந்த 31–ம் திகதி புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளான பகுதி, ஐ.எஸ். தீவிர…

  13. ஜி-20 மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக துருக்கி நாட்­டுக்கு வந்­துள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவும் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டினும் திடீ­ரென சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்­ளார்கள். கடந்த மாதம் சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக ரஷ்யா தாக்­குதல் நடத்த தொடங்­கி­யது முதல் அமெ­ரிக்­க­ாவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொட ங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது. இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புட்டினும் திடீரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தி யுள்ளனர். இதில் சிரியா பிரச் சினை பற்றி அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. http://www.vir…

  14. ஐஎஸ் இன் அடுத்த இலக்கு வொஷிங்டன்; வீடியோ வௌியீடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடர் தாக்குதல் நடத்தியது போன்று வாஷிங்டனிலும் தாக்குதல் நடத்தப் போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர். ஐ..எஸ்.ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு பிரான்ஸுக்கு ஏற்பட்ட நிலை தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்பைவிட வலிமை பெற்றுள்ளதால் தங்களின் வருகையை யாராலும் தடுக்க முடியாது என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த மிரட்டல் வீடியோ ஈராக்கில் பாக்தாத் வடக்கு பகுதியில் உள்ள சலாசுதீன் மாகாணத்தில் இருந்து வெளியிடப்பட்…

  15. விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் காலமானார்! புதுடெல்லி: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்தவர் அசோக் சிங்கால் (89). கடந்த ஒரு வாரத்திற்கு முன் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (14-ம் தேதி) அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2.24 மணிக்கு அவர் காலமானார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு போ…

  16. '40 நாடுகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி!' மாஸ்கோ: உலகில் உள்ள நாடுகளில் 40 நாடுகள் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு நிதியுதவி வழங்குகின்றன என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஞாயிறன்று பாரீஸ் நகரில் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை அழித்துவிட உலக நாடுகள் தீவிரமாகியுள்ளன. இதனையடுத்து ஃபிரான்ஸ் நாட்டு வான்படை, சிரியாவில் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த வியூகங்களை தொடர்ந்து வகுத்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் சுமார் 40 நாடுகள் …

  17. ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை: ஆவணங்களை வெளியிட்டு சுப்பிரமணியன் சுவாமி 'திடுக்' குற்றச்சாட்டு! புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இது தொடர்பாக சில ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இந்த குற்றச்சாட்டைக் கூறிய பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, பிரிட்டனை சேர்ந்த Backops Limited என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல் காந்தி பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு ஆண்டறிக்கையில் ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டிஷ் பிரஜை எனக் குறிப்…

  18. சமையல் அறைக்குள்ளேயே முடக்கப்பட்டேன்: இம்ரான் கான் முன்னாள் மனைவி ரேஹம் புகார் இம்ரான் கானுடன் ரேஹம். (கோப்புப் படம்) சப்பாத்தி செய்வது மட்டுமே என் வேலை என கூறப்பட்டது, சமையலறையை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப் பட்டேன் என்று இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாஃப் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இம்ரான் கான் பிரிட்டனைச் சேர்ந்த தனது முதல் மனைவியை கடந்த 2004-ல் விவாகரத்து செய்தார். பின்னர் கடந்த ஜனவரியில் ரேஹம் என்ற பிபிசி செய்தி யாளரை மணந்தார். ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தை களுக்குத் தாயான ரேஹம் விவாகரத…

  19. சிரியாவில் அமெரிக்க தாக்குதலில் 'பிரிட்டிஷ்' ஐஎஸ் தலைவர் ஜிகாதி ஜான் பலி அக்டோபர் 3, 2014-ம் தேதி இஸ்லாமிக் ஸ்டேட் வெளியிட்ட தேதி குறிக்கப்படாத வீடியோவிலிருந்து பெறப்பட்ட ஜிஹாதி ஜான் என்று அழைக்கப்படும் நபரின் படம். | ஏ.பி. சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்) இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகளில் ஒருவரான ஜிகாதி ஜான் (26) உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பிணைய கைதிகள் கொடூரமாக முறையில் கழுத்து அறுத்து கொல்லப்படும் வீடியோக்களை ஐ.எஸ். வெளியிட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பிணைய கைதிகளை கொலை செய்யும் கல்நெஞ்சுக்காரர் ஜிகாதி ஜான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்பில் முக்கிய நபராக விளங்கும் ஜிகாத…

  20. இருப்பை அழித்தது 9/11; இருப்பதையும் அழிக்குமா 11/13 ப.தெய்வீகன் உலக வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸின் தலைநகர் பரிஸில், கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் சம்பவங்களும் உலகின் அனைத்துப் பாகங்களையும் கதிகலங்க வைத்திருக்கின்றன. தலைநகரின் வௌ;வெறு பகுதிகளில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கின்ற இந்த திட்டமிட்ட தாக்குதல்களும் அப்பாவிகளைப் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துப் படுகொலை செய்த பாணியும் பயங்கரவாதம் என்பது எவ்வளவு குரூரபண்புகளைக் கொண்டது என்பதை இன்னொருமுறை உலகுக்கு இடித்துரைத்துச் சென்றிருக்கிறது. தாக்குதலில் பலியான அப்பாவிகளுக்கு ஒருபுறம் அஞ்சலி செலுத்தி…

  21. சிரியாவில் நடந்துவரும் படுகொலைகளுக்குத் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன்தான் முக்கியக் காரணம். சிரியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எர்டோகன் அரசு ஆதரவாகச் செயல்படுகிறது. விஷ வாயு உள்ளிட்ட ஆயுதங்களை அந்த அமைப்புகளுக்கு அளிப்பதுடன், துருக்கிக்குச் சுதந்திரமாகச் சென்று வருவதற்கும் அந்த அமைப்பினருக்கு உதவுகிறது. 8 முதல் 15 வயதுள்ள சிறுவர்களுக்குப் பயிற்சியளித்து, சிரியாவின் அலெப்போ நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் பயங்கரவாதக் குற்றங்களில் அவர்களை ஈடுபடவைக்கிறது ஐ.எஸ். அமைப்பு. துருக்கியின் பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். அமைப்பின் கிளைகள் செயல்படுகின்றன. துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள காஸாயின்டெப் மாகாணத்தில் ஐ.எஸ். அமைப்பின் போக்குவரத்து மையம் செயல்படு…

  22. பாரிசில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உணவு விடுதி அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 18 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1386457 http://www.t-online.de/nachrichten/panorama/kriminalitaet/id_76124544/explosionen-und-schiessereien-in-paris-offenbar-tote.html

  23. பாரிஸ் தாக்குதல்:அவசர நிலையை நீட்டிக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கை REUTERS தீவிரவாத்தை எதிர்க்க அரசியல் சாசனத்தின் மாறுதல் தேவை என பிரெஞ்ச் அதிபர் கோரியுள்ளார் பிரான்ஸில் நடைபெற்ற தாக்குதல்களை அடுத்து, அமலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீட்டிப்பதை பரிசீலிக்க பிரெஞ்ச் நாடாளுமன்றம் கோரப்பட்டுள்ளது. பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றத் தாக்குதல்களை அடுத்து அமலுக்கு கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீட்டிப்பது குறித்து பரிசீலிக்க நாடாளுமன்றம் கோரப்பட்டுள்ளது. மிகவும் அபூர்வமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிபர் ஒலாந்(த்), பயங்கரவாதத்தை எதிர்…

  24. சிரியாவில் கடந்த நான்காண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான சமாதான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில் சிரியா அதிபருக்கு ஆதரவாக படைகளையும், ஆயுதங்களையும் அனுப்பிவரும் ரஷ்யாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 500 குழந்தைகள் உள்பட 2.3 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நான்காண்டுகளில் மட்டும் 11 ஆயிரத்து 493 குழந்தைகள், 7 ஆயிரத்து 371 பெண்கள் உள்பட பொதுமக்களில் 69 ஆயி…

  25. அமெரிக்க படைகளால் நூற்றுக்கணக்கான ஐ.எஸ். எரிபொருள் லாரிகள் அழிப்பு படம்: ஏ.எஃப்.பி. கிழக்கு சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்குச் சொந்தமான 116 எரிபொருள் லாரிகளை அமெரிக்கத் தலைமை வான்வழித் தாக்குதல் படை அழித்தது. இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தனது அறிக்கையில் கூறும் போது, “ஒரே வான்வழித் தாக்குதலில் 116 எரிபொருள் லாரிகளும் அழிக்கப்பட்டன. டெய்ர் எஸ்ஸார் மாகாணத்தில் ஐஎஸ் பிடித்து வைத்துள்ள அல்பு கமால் என்ற ஊரில் இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளது. பெட்ரோலிய வளம் மிகுந்த டெய்ர் எஸ்ஸார் மாகாணத்தின் பெரும்பகுதியை ஐஎஸ் தீவிரவாதிகள் தங்கள் வசமாக்கிக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கூட்டணிப் படைகள் வட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.