உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை சார்பில், சமுதாயத்துக்கு சிறப்பான சேவை புரிபவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இது, மிகவும் பெருமைக்குரிய விருதாகும். இந்த விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய மாணவி ஸ்வேதா பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது பெறும் 11 இளம் பெண்களில் அவரும் ஒருவர் ஆவார். அவருக்கு வயது 15. அமெரிக்காவில், தாமஸ் ஜெபர்சன் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். ஸ்வேதா பிரபாகரனின் பூர்வீகம் திருநெல்வேலி ஆகும். அவருடைய தந்தை பெயர் பிரபாகரன் முருகையா. 1998-ம் ஆண்டில், அவர், தன் மனைவியுடன் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ‘டெக்பெட்ச்.காம்’ என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். வெர்ஜினியா மாகா…
-
- 1 reply
- 831 views
-
-
அண்டை நாடான நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கும் திட்டத்தை, அந்நாட்டு பார்லிமென்ட், நேற்று நிராகரித்தது.நேபாளம், உலகின் ஒரே இந்து நாடாக விளங்கியது. அங்கே, 2006ல், துவங்கப்பட்ட மக்கள் இயக்கத்தின், வெற்றிகரமான பிரசாரத்தால், 2007ல், அது, மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், நேபாள நாட்டின் புதிய அரசியல் சாசன வரைவு மீது, ஓட்டெடுப்பு நடத்தும் நடவடிக்கைகள், பார்லிமென்டில் துவங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக மாற்றும் வகையில், அரசியல் சாசனத்தை திருத்த, இந்து ஆதரவு கட்சிகள் முயன்று வருகின்றன. இதற்கான தீர்மானத்தை, நேபாள தேசிய ஜனநாயக கட்சி, நேற்று பார்லிமென்டில் கொண்டு வந்தது. ஆனால், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், இதற்கு எதிராக ஓட்டளித்து…
-
- 0 replies
- 556 views
-
-
தொழிற்சாலை பெருக்கத்தால், கார்பன் டை ஒக்சைட் வாயு வெளியாவது அதிகரித்து வருகிறது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிப்பதன் மூலமும் அவ்வாயு அதிக அளவில் வெளியாகி வருகிறது. இப்படி எரித்துக் கொண்டே போனால், அது பருவநிலையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.அதன்மூலம், அண்டார்டிக் பனிப்பாறைகள் முழுமையாக உருகி, கடல் நீர் மட்டம் பல மீட்டர் உயரும். அதனால், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், உலகின் முக்கிய பெரு நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று பிரபல பருவநிலை விஞ்ஞானி ஜேம்ஸ் ஹன்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. குறிப்பாக, லண்டன், நியூயோர்க், ஷாங்காய், டோக்கியோ, ஹொங் கொங் , ஹம்பேர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தண்ணீரில் மூழ்கி விடும் என்று அந்த விஞ்ஞான…
-
- 1 reply
- 434 views
-
-
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் மேலாடையின்றி மேடையேறி வந்த பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வடமேற்கு பாரிசில் நடைபெற்ற முஸ்லிம்கள் மாநாட்டில் இஸ்லாம் மதம் சார்ந்த அறிஞர்கள், பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவியரை அடிக்க கணவர்களுக்கு உரிமை உண்டா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது. அப்போது திடீரென இரண்டு பெண்கள் மேலாடையின்றி மேடையேறி வந்தனர். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டு மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். அந்த இரு பெண்களும் பெமைன் என்ற பெண்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ‘யாரும் என்னை அடக்க முடியாது, அட…
-
- 2 replies
- 1.7k views
-
-
நேச நாடா நேபாளம்? - 1 நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆலயம் சமீபத்தில் பூகம்பத்தால் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த நாடு நேபாளம். ரிக்டர் அளவுகோலில் 7.9 என்பது மிக அதிகம்தான். சாலைகளில் மட்டுமல்ல சரிவுகளிலும் பலர் இறந்திருக்கிறார்கள் பூகம்பத்தால் எவரெஸ்டில் ஏற்பட்ட பனிச் சரிவு! இந்தியாவின் சில பகுதிகளையும் இந்த பூகம்பம் பாதித்ததால், இந்தியர்களின் முழுக் கவனத்தையும் நேபாளம் பெற்றது. மற்றபடி நேபாளம் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? இமய மலையின் மிக உயரமான சிகர மான எவரெஸ்ட் இந்தியாவில் உள்ளது என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் தேசியக் கொடிகள் எல்லாமே நீள்சதுரத்தில் அமைந்தவை என்றும் சிலர் எண்ணிக் கொண்டிருக் கிறார்கள். மக்கள் தொகையில் அதிக சதவீதம் …
-
- 7 replies
- 3.1k views
-
-
தாலிபான்களால் ஆப்கன் சிறை தகர்ப்பு: 400 கைதிகள் ஓட்டம் தாலிபான்கள் காஸினி சிறையை தகர்த்து 400 கைதிகளை தப்பிக்கச் செய்தனர். | படம்: ராய்ட்டர்ஸ். ஆப்கானிஸ்தானின் முக்கிய சிறைச்சாலையை தாலிபான் தீவிரவாதிகள் தகர்த்தனர். இதில் சுமார் 400 கைதிகள் தப்பி ஓடினர். ஆப்கானிஸ்தானின் காஸினி மாகாணத்தில் அந்நாட்டின் முக்கிய சிறைச்சாலை உள்ளது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு ராணுவ உடையில் இருந்த தாலிபான்கள் முதலில் கார் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்தனர். தொடர்ந்து சிறைத் துறையினர் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் சிறை கதவுகளை தகர்த்ததாக மாகாண ஆளுநர் முகமது அலி அகமதி தெரிவித்தார். உள்ளே இருந்த 400 கைதிகள் தப்பித்ததாக ஆப்கான் உள்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பல போலீஸார் காய…
-
- 10 replies
- 782 views
-
-
அவுஸ்திரேலியாவில் இன்று நடந்த ஆளும்கட்சி பல பரிட்சையில் தாரளமாவாத கட்சியில் தொடர்பாடல் அமைச்சரும் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான மல்கம் டேர்ன்புல் அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார். மேலும் படிக்க: MALCOLM Turnbull will be Australia’s 29th prime minister, after beating Tony Abbott for the Liberal leadership. The former communications minister won the partyroom ballot 54-44. Mr Turnbull beamed as he left the partyroom flanked by his deputy, Foreign Minister Julie Bishop. Mr Abbott looked stunned as he walked past the cameras. There was a second vote for deputy leader, which Foreign Minister Julie Bishop won over Kevin Andrews, 70-30. There were two extra votes f…
-
- 4 replies
- 922 views
-
-
இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் செப் 14,15,16 ஆகிய தேதிகளில் இந்தியப் பயணமாக வருகிறார். இப்பயணத்தின் போது CEPA என்ற பொருளாதார ஒப்பந்தம், இலங்கைக்கு இந்தியாவுக்குமான தரைவழிப் போக்குவரத்து ஆகியவை குறித்து பேச இருப்பதாக அதிகாரப் பூர்வ செய்திகள் வருகின்றன. இனக்கொலை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும். இலங்கையுடனான அரசியல் பொருளாதார உறவுகளைக் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தொடரில் இலங்கை மீதான பன்னாட்டுப் பொறுக்கூறல் முறைமையைத் தடுத்தி நிறுத்துவதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோருவதும் இந்தப் பயணத்தின் நோக்கமாக இருக்கிறது. இலங்கையை ஐ.நா. வில் பாதுகாத்து…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிசிடிவி கேமராவில் பதிவான, ஆந்திராவில் அட்டூழியம் செய்யும்... ஊசி மனிதனின் உருவம். ஹைதராபாத்: ஆந்திராவில் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஊசி போட்டு வரும் மர்ம நபரின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் மர்ம நபர் ஒருவர் இளம்பெண்கள், சிறுமிகளுக்கு ஊசி போட்டு வருகிறார். இரு சக்கர வாகனத்தில் வரும் அவர் தனது முகத்தை ஹெல்மெட் அல்லது கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு பெண்களுக்கு திடீர் என ஊசி போட்டுவிட்டு தப்பியோடிவிடுகிறார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பரிசோதனை நடத்தியதில் அவர் செலுத்தியது சாதாரண ஊசி தான் என்பது தெரிய வந்துள்ளது. அந்த நபரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்…
-
- 0 replies
- 757 views
-
-
கனடா- வாட்டலூவில் ஒரு ஷாப்பிங் மையத்திற்குள் பாரிய தீவிபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக 14வயதுடைய வாலிபன் ஒருவன் கைது செய்யப்பட்டான். வெள்ளிகிழமை இந்த சம்பவம் நடந்தது.பிளாசாவிற்குள் அமைந்திருந்து டொலராமா கடைக்குள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4மணியளவில் தீ வெடித்துள்ளது.இத்தகைய ஒரு பாரிய தீ ஜூவாலையை கடந்த ஐந்து வருடகாலத்தில் நகரில் காணவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.40ற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பலத்த உபகரணங்களுடன் தீயை அணைக்க பல மணி நேரமாக போராடியுள்ளனர்.சனிக்கிழமை காலை அளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டது.இரவு முழுவதும் போராடிய போது இரு தீயணைப்பு வீரர்கள் வைத்தியசாலைக்கு அனுப்ப பட்டனர். மில்லியன் டொலர்கள் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப…
-
- 0 replies
- 796 views
-
-
ரஷ்யாவின் இரண்டு சரக்கு விமானங்கள் சிரியாவை சென்றடைந்தன. இவற்றில் 80 டொன் மனிதாபிமான உதவிப் பொருட்கள் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும் ரஷ்யா, சிரியாவுக்கு இராணுவ உதவிகளையும், கருவிகளையும் வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அமெரிக்காவும் நேட்டோ படையினரும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தினர். இதற்கு மத்தியிலும் ரஷ்யா இந்த பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/49002.html#sthash.o3jfd2Zy.dpuf
-
- 0 replies
- 838 views
-
-
9/11 நினைவு தினத்தன்று சவுதியில் 107 பேரை பலிவாங்கிய கிரேன் பின்லேடன் குடும்பத்துக்குச் சொந்தமானது! ஜெட்டா: புனித மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பது அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் ஆகும். சவுதி பின்லேடின் குரூப் என்ற நிறுவனம்தான் மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் விஸ்தரிப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. அங்கு ஒரே சமயத்தில் 20 லட்சம் பேரை அனுமதிக்கும் அளவுக்கு இடவசதி விஸ்தரிக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம்தான் சவுதி பின்லேடின் குரூப் என்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் கிரேன்தான் நேற்று முன்தினம் திடீரென சம்பந்தமே இல்லாமல் கீழே விழுந்து பெரும் விபத்…
-
- 6 replies
- 626 views
-
-
தீராத நோய் தாக்கியவர்கள் தங்கள் உயிரை சட்டப்பூர்வமாக மாய்த்துக்கொள்வதற்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாவின் மீது உணர்ச்சிப்பூர்வமான விவாதம் நடந்தது. அதன் முடிவில் மசோதாவுக்கு ஆதரவாக 23 பேரும் எதிராக 14 பேரும் ஓட்டு போட்டனர். இதையடுத்து மசோதா நிறைவேறியது. இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயாளிகள், தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினால் அவர்களுக்கு அதற்கான மருந்தினை மருத்துவர்கள் எழுதித்தரலாம். ஆனால் இந்த சட்டத்துக்கு எதிரானவர்கள், இதன் மூலம் பலர் உரிய காலத்துக்கு முன்பாகவே தற்கொலை செய்துகொள்வர் என கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ஆரிகான், வாஷிங்டன், வெர்மாண்ட், மான்டனா மாகாணங்களில் ஏற…
-
- 2 replies
- 481 views
-
-
டெல்லி : காஷ்மீர் எல்லையில் இந்திய படைகள் ஒருபோதும் அத்துமீறி முதலில் தாக்குதலை நடத்தாது என்று பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கியிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார். ஆனால் ஜம்மு- காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்தவது குறித்து எவ்வித உறுதிமொழியும் அளிக்கமுடியாது என பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் பாதுகாப்பு படை அதிகாரிகளின் இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைத்தலைவர் உமர் பரூக் பர்கி உள்ளிட்ட அதிகாரிகள் சந்தித்து பேசினர். அப்போ…
-
- 3 replies
- 1.3k views
-
-
.View gallery . . . . NEW DELHI (AP) — At least 89 people were killed at a restaurant in central India on Saturday when a cooking gas cylinder exploded and triggered a second blast of mine detonators stored illegally nearby, police said. The restaurant, located next to the main bus station in the town of Petlawad in Madhya Pradesh state, was crowded with people having breakfast when the blasts occurred. The building where the restaurant was located and an adjacent building were destroyed in the explosions, and motorbikes outside the restaurant were flattened, said Mewa Lal Gond, a police inspector in the mining district of Jhabua, where Petlawad is loc…
-
- 0 replies
- 668 views
-
-
.View gallery . . . . NEW DELHI (AP) — At least 89 people were killed at a restaurant in central India on Saturday when a cooking gas cylinder exploded and triggered a second blast of mine detonators stored illegally nearby, police said. The restaurant, located next to the main bus station in the town of Petlawad in Madhya Pradesh state, was crowded with people having breakfast when the blasts occurred. The building where the restaurant was located and an adjacent building were destroyed in the explosions, and motorbikes outside the restaurant were flattened, said Mewa Lal Gond, a police inspector in the mining district of Jhabua, where Petlawad is loc…
-
- 0 replies
- 166 views
-
-
.View gallery . . . . NEW DELHI (AP) — At least 89 people were killed at a restaurant in central India on Saturday when a cooking gas cylinder exploded and triggered a second blast of mine detonators stored illegally nearby, police said. The restaurant, located next to the main bus station in the town of Petlawad in Madhya Pradesh state, was crowded with people having breakfast when the blasts occurred. The building where the restaurant was located and an adjacent building were destroyed in the explosions, and motorbikes outside the restaurant were flattened, said Mewa Lal Gond, a police inspector in the mining district of Jhabua, where Petlawad is loc…
-
- 0 replies
- 155 views
-
-
சிரியாவில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்வது அதிகரித்து வருகிறது. உயிரைப் பணயம் வைத்து வரும் அவர்களுக்கு பல்வேறு நாடுகள் புகலிடம் அளித்து உதவி செய்து வருகின்றன. ஆனால், அமெரிக்கா இந்த விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டில் குறைந்தது 10 ஆயிரம் சிரிய அகதிகளை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிரிய அகதிகளை அனுமதிப்பதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். சிரியாவில் போர் தொடங்கியது முதல் இதுவரை 1500 சிரிய அகதிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 300 பேர் அனுமதி பெற்றுள்ளனர். அவர்கள் அக்டோபர் 1-ம் தேதிக்குள…
-
- 0 replies
- 475 views
-
-
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை அழித்தொழிப்பதற்காக தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்க ஆளில்லா விமானம், ஆப்கனின் கோமல் மாவட்டத்தில், கடந்த புதன் அன்று நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 15 தாலிபான்கள் கொல்லப்பட்டிருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட 15 பேரின் உடல்கள் தென் கிழக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகருக்கு விரைவில் கொண்டு வரப்படும் என்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/48951.html#sthash.zIc0g7dP.dpuf
-
- 0 replies
- 477 views
-
-
சிரியாவில் கடந்த நான்காண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான சமாதான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில் சிரியா அதிபருக்கு ஆதரவாக படைகளையும், ஆயுதங்களையும் அனுப்பிவரும் ரஷ்யாவின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த நான்காண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை சுமார் 11 ஆயிரத்து 500 குழந்தைகள் உள்பட 2.3 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த நான்காண்டுகளில் மட்டும் 11 ஆயிரத்து 493 குழந்தைகள், 7 ஆயிரத்து 371 பெண்கள் உள்பட பொதுமக்களில் 69 ஆயி…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஈராக்கிலும், துருக்கியிலும் ‘பி.கே.கே.’ என்ற பெயரில் இயங்கிவரும் குர்து இன கிளர்ச்சியாளர்கள் பல நகரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் நாட்டில் அவர்கள் காண்டில், ஜாப், அவாஷின் போன்ற மலைப்பகுதிகளில் பதுங்கி உள்ளனர். இந்த நிலையில், அந்த நகரங்களை குறிவைத்து துருக்கி போர் விமானங்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை குண்டு மழை பொழிந்தன. இதில் ஏராளமானோர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. 15-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=140320&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 359 views
-
-
கடந்த அரை நூற்றாண்டு காலமாக (நாடு சுதந்திரம் அடைந்த 1965 முதல்) சிங்கப்பூரை ஆட்சி செய்து வரும் மறைந்த மாமனிதர் லீ குவான் யூ-வை, நிறுவனர்களில் (Founders) ஒருவராகக் கொண்ட மக்கள் செயல் கட்சி (PAP) பொது தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. சிங்கப்பூரின் 12வது பொது தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 29 தொகுதிகளை கொண்ட சிங்கப்பூர் 13 தனிதொகுதியையும், 16 குழுத் தொகுதிகளையும் கொண்டது. இதில் உள்ள, 89 நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியில் 181 பேர் போட்டியிட்டனர். இதில், ஆளும் மக்கள் செயல் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாட்டாளிக் கட்சி 28 தொகுதிகளிலும், தேசிய ஒருங்கிணைப்புக் கட்சி 12 இடங்களிலும், ஜனநாயக கட்சி 11, சீர்திருத்தக் கட்சி 11, சிங்க் பர்ஸ்ட் …
-
- 0 replies
- 300 views
-
-
மெக்கா விபத்தில் 52 பேர் பலி சவூதி அரேபியாவில் மெக்கா மசூதியில் கிரேன் விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர். கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன் விழுந்த இந்த விபத்தில் பலர் படுகாய மடைந்துள்ளனர். மெக்கா மசூதியில் கிரேன் விழுந்து 107 பேர் பலி மெக்கா: முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடந்த விபத்தில் 107 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் பெரிய மசூதி முஸ்லிம்களின் புனித தலமாக விளங்குகிறது. இந்த மாத இறுதியில் ஹஜ் யாத்திரை நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கில் முஸ்லிம்கள் இங்கு கூடுவர்.இங்குள்ள பெரிய மசூதியில், கட்டுமான வேலைகள் நடக்கிறது.…
-
- 8 replies
- 4.4k views
-
-
ஜெர்மனி மேயர் தேர்தல் கருத்து கணிப்பு: இந்திய வம்சாவளி வேட்பாளர் முன்னிலை பெர்லின்: மேற்கு - மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த, ஜெர்மனியில், நாளை மறுநாள், மேயர் தேர்தல் நடைபெறுகிறது. இதில், பான் நகர மேயர் வேட்பாளராக, பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் - சி.டி.யு., கட்சியைச் சேர்ந்த, அசோக் ஸ்ரீதரன், 49, களமிறங்கியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், சமூக ஜனநாயக கட்சி - எஸ்.பி.டி., வேட்பாளர் பீட்டர் ருஹென்ஸ்ட்ரோத் பாயரை விட, கூடுதல் ஓட்டுகளை பெறுவார் என, கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. எனினும், கருத்துக் கணிப்பில் நடுநிலை வகித்த, 26 சதவீத வாக்காளர்களின் ஓட்டு தான், வெற்றியை தீர்மானிக்கும். இந்திய தந்தைக்கும், ஜெர்மனி த…
-
- 6 replies
- 701 views
-
-
மும்பை தொடர் ரயில் குண்டுவெடிப்பு: 12 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு! மும்பை: மும்பையில் நடந்த ரயில் தொடர் குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்த வழக்கில் 12 பேர் குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை புறநகர் ரயில்களின் முதலாம் வகுப்பு பெட்டிகளில் 7 ஆர்டிஎக்ஸ் குண்டுகள் வெடித்தன. இதில் 188 பேர் உயிரிழந்தனர். 829 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 14 பேர் தலைமறைவாக உள்ளனர். குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 8 ஆண்டுகளாக நடைபெற்ற வந்து வழக்கில் 192 பேர் சாட்சியம் அளித்தனர். இதில் 8 ஐபிஎஸ் அதிகார…
-
- 0 replies
- 357 views
-