உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26885 topics in this forum
-
ஜெர்மன் சான்சிலருக்கு அமைதி நோபல் பரிசா? பெர்லின் : அகதிகள் விவகாரத்தை மிக திறமையாக கையாண்ட, ஜெர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்கெல்லுக்கு, இந்த ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசை பெற அதிக வாய்ப்புள்ளது என, ஜெர்மனியின் பிரபல நாளிதழான, 'பில்டு' தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் ஐரோப்பாவுக்கு பலர் அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது. உக்ரைன் நாட்டில் ஏற்பட்ட, உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்ட பலர், அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தனர்.அதேபோல, மேற்காசிய நாடுகளுள் ஒன்றான சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரால், பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தனர். இந்த விவகாரத்தில் ஜெர்மனி சான்சிலர் ஏஞ்சல…
-
- 0 replies
- 427 views
-
-
ஃபோக்ஸ்வாகனின் ஊழலை அம்பலப்படுத்தி உலகையே அதிர வைத்த தமிழர்! அமெரிக்காவிலுள்ள மேற்கு விர்ஜினியாப் பல்கலைக்கழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றுபவர் அரவிந்த் திருவேங்கடம். அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த தமிழரான அரவிந்துக்கு தற்போது வயது 32. தானியங்கித் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான அரவிந்துக்கு, அடிக்கடி நீண்ட மகிழுந்துப் பயணம் மேற்கொள்ளுவது பிடித்தப் பொழுதுபோக்கு. குறிப்பாக, சோதனை ஓட்டத்திற்கென்று கொடுக்கப்படும் வாகனங்களைச் சோதிப்பதற்காக நெடுந்தூரம் ஓட்டிச் செல்வது இவரது வாடிக்கை. அப்படித்தான் அண்மையில், ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ’பஸாட்’ காரை ஓட்டிச் சென்ற அரவிந்திற்கு, அது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையப்போகிறது என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். தற…
-
- 8 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவின், நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பாலஸ்தீன கொடி முதல் முறையாக நேற்று (புதன்கிழமை) ஏற்றப்பட்டது.குறித்த கொடியேற்றும் நிகழ்வு, ஐக்கிய நாடுகளின் ரோஸ் கார்டனில் இடம்பெற்றது. குறித்த வரலாற்று நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐ.நா பொதுச் சபையின் தலைவர் மெஜான்ஸ் லீக்கன்டொப்ட் மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமூத் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த கொடி ஏற்றப்பட்டுள்ளதன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பாலஸ்தீன கொடியை ஏற்றுவதற்கு உறுதுணையாக விளங…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழ ஆர்வலர்கள் சிலர் அமரிக்க தேசியக்கொடியையும் ஒபாமா கொடும்பாவியையும் ஈழ ஆதரவு பதாகைகளுடன் எரித்த சேதி அதிற்ச்சி தருகிறது. இது இன்ரைய நிலையில் ஈழ தமிழர் நலன்களுக்கு எதிரான செயலாகும். ஈழத் தமிழருக்கு எஞ்சியுள்ள கடைசிப்பாலங்களையும் தகர்க்கிற குறுங்குழுவாத முயற்ச்சி இது. தமிழக அவர்கள் டெல்ஹி என்கிற கூரையில் ஏறி இந்திய அரசின் ஆதரவு என்கிற கோழியையாவது பிடித்து தருவார்கள் என்பதுமட்டும்தான் கடந்த முப்பது வருடங்களாக ஈழத் தமிழர்களின் எதிர்பார்பாக இருந்தது. ஆனால் டெல்ஹிக் கூரையில் இருக்கிற கோழியை விட்டுவிட்டு வாசிங்டன் என்கிற வைகுந்தத்திற்க்கு சவால் விடுவதிலேயே இவர்கள் குறியாக இருக்கிற்கள். . உலகில் எல்லா மனிதர்களும் எல்லா அரசுகளும்சொந்த நலன்கள் உண்டு. இருந்தும் கழத்தில் சிங்கள அரசு…
-
- 8 replies
- 884 views
- 2 followers
-
-
ஆப்கானிஸ்தானில் குந்தூஸ் நகரை கைப்பற்றிய தாலிபான்கள்: சாலைகளில் சிதறிக் கிடக்கும் சடலங்கள் காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் நகரை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மாகாண தலைநகரான குந்தூஸை தாலிபான்கள் திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை குந்தூஸ் நகருக்குள் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கினர். மேலும் அருகில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு படையினருடன் மோதினர். 2001ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் தாலிபான்கள் முக்கிய நகரை கைப்பற்றியுள்ளனர். மதிய வேளையில் அவர்கள் உளவுத் துறையின் தலைமையகத்தை கைப்பற்றியதோடு மட்டும் அல்லாமல் ஐ.நா. கட்டிடங்களை தீ வைத்து எரித்…
-
- 1 reply
- 491 views
-
-
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை; 7 பேருக்கு ஆயுள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் | கோப்புப் படம்: பிடிஐ கடந்த 2006-ம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட தொடர் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஐவரும் இந்த முக்கியக் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவர்கள். மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிண்டே இத்தீர்ப்பை வழங்கினார். வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மரண தண்டனை பெறும் ஐவர்: கமல் …
-
- 2 replies
- 693 views
-
-
சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா வான் வழி தாக்குதல்: அதிபர் புதினுக்கு நாடாளுமன்றம் அதிகாரம் உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வான் வழி தாக்குதல் நடத்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அந்நாட்டு நாடாளு மன்றம் நேற்று அதிகாரம் வழங்கியது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக ஐ.எஸ்.தீவிரவாதிகளும் அமெரிக்க ஆதரவு பெற்ற புரட்சிப் படையினரும் கடந்த 4 ஆண்டு களுக்கும் மேலாக போரிட்டு வருகின்றனர். இதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், சிரியாவில் அரசுக்கு ஆதரவாக வான்வழி தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா தனது ராணுவத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது.…
-
- 0 replies
- 660 views
-
-
இந்தியா மீது கோபம்: நேபாளத்தில் டிவி சேனல்கள் 'முடக்கம்' இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு செல்லும் சரக்கு லாரிகள் நிறுத்தம். | படம்: ஏஎப்பி. Nepal is angry with India, so it turns off the TV நேபாள விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடுகளை கண்டிப்பதாக கூறி, அந்நாட்டில் இந்திய ஊடகங்களை கேபிள் ஆப்பிரேட்டர்கள் முடக்கியுள்ளனர். மொத்தம் 42 செய்தி மற்றும் பொழுதுபோக்கு சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்தை இந்திய அரசு அதிகாரப்பூர்வமற்ற வகையில் தடைசெய்து நிறுத்தி இருப்பதே இதற்கு காரணமாகவும், தங்களது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை கண்டிக்கும் விதமான இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாகவும் அந்நாட்டுத் தரப்பில்…
-
- 1 reply
- 653 views
-
-
இந்த பேட்டியில், வேண்டும் என்று நிருபர் பிரகாஷ் windup பண்ணுவதாக தெரிகிறது.
-
- 1 reply
- 762 views
-
-
மத்திய அரசு மாட்டிறைச்சியை தடை செய்தது முற்றிலும் தவறு என்று உலகநாயகன் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். பிறப்பால் பிரமணரானாலும், தன்னை ஒரு நாத்திகராகவே வெளிக்காட்டியுள்ளார் கமலஹாசன். எனினும், கடவுளை மதிக்கின்றேன் என்றும் கூறுவார். தனது கருத்துக்களை தைரியமாக வெளியே கூறக்கூடியவர்களில் இவரும் ஒருவர். சமீபத்தில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிக்கு இவர் அளித்த பேட்டியில் மத்திய அரசு மாட்டிறைச்சியை மகாராஷ்ட்ராவில் தடை செய்தது குறித்து கேட்ட போது, ‘ஒருவர் என்ன சாப்பிடவேண்டும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கானது. அதை அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது. மாடுகளைக் கொல்லுவதைத் தடுக்கவேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
மோடியும் மார்க் ஸ்கர்பெர்க் சமீபத்தில் சந்தித்ததிலிருந்து, தேசியக் கொடியின் மூவர்ண சாயலில் பலரும் தங்கள் ப்ரொஃபைலில் உள்ள படங்களை மாற்றி வருகின்றனர். மோடி தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்தை மாற்றி டிஜிட்டல் இந்தியா ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து பலரும் http://fb.com/supportdigitalindia என்ற இணையதளத்தில் தங்கள் புகைப்படங்களை இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தில் மாற்றி வந்தனர். கொடுக்கப்பட்ட லிங்கில் நம் புகைப்படத்தை மூவர்ண சாயலில் மாற்றியப் பிறகு டிஜிட்டல் இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என வரும். இதற்கிடையில் பல இணையதளங்களில் இவ்வாறு புகைப்படங்களை மூவர்ண சாயலில் மாற்றுவது டிஜிட்டல் இந்தியாவை திட்டதிற்கு ஆதரவு அளிப்பதோடு ஃபேஸ்புக்கின் “எல்லோருக்கு…
-
- 0 replies
- 224 views
-
-
வங்கதேசத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் முதல் தாக்குதல் வங்கதேசத்தில் இத்தாலியர் ஒருவரை ஐஎஸ் தீவிரவாதிகள் கொன்றுள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் முதல் தாக்குதலை அந்த தீவிரவாத அமைப்பினர் நடத்தியுள்ளனர். சிசார் டவிலா (50) என்ற இத்தாலியர் நெதர்லாந்தை சேர்ந்த ஐசிசிஓ சர்வதேச அமைப் பின் மேலாளராக டாக்காவில் பணியாற்றி வந்தார். கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுவது உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை சிசார் டவிலா நடைப் பயிற்சியில் இருந்தார். அப்போது அவரை சுற்றி வளைத்த தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 3 குண்டுகள் அவர் மீது பாய்ந்தன. அவரை சுட்டுவிட்டு தீவிரவாதிகள் தப்பியோடினர். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன…
-
- 0 replies
- 650 views
-
-
மோடியை அவமதித்தாரா மைக்ரோசாப்ட் சிஇஓ சத்தியா நாதெள்ள? (வீடியோ) வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது மைக்ரோ சாப்ட் சிஇஓ சத்தியா நாதெள்ள, மோடியை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மோடியை சந்தித்து அவரிடம் அறிமுகம் செய்து கொண்டு பின்னர் கைகுலுக்கும் சத்தியா நாதெள்ள, தனது கைகளை துடைத்துக் கொள்கிறார். இந்த காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. http://www.vikatan.com/news/article.php?aid=53041 விகடனில் ஒருவரின் கருத்து என்னவோ குஜராத்தின் ரத்தம் படிந்த கை என்று சம்மந்தமே இல்லாமல். சிலருக்கு யாருடன் கை கொடுத்தாலும் கையை துடைத்து கொள்வது பழக்கமாக இருக்கலாம்;…
-
- 0 replies
- 682 views
-
-
நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்! உலகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உலக நாடுகளில் மோடிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதில் சில ரகசியங்களும் அடங்கியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி பொலிட்டிக்கல் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றவர். அதோடு அமெரிக்காவில் 'இமேஜ் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஷிப்பில் சிறப்பு பட்டம் பெற்றவர் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு ஒரு விஷயத்…
-
- 14 replies
- 2k views
-
-
பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 1 பாரீஸ் பேரணியில் பங்கேற்ற உலகத் தலைவர்கள்.| படம்: ஏஎப்பி ‘‘வாள்முனையைவிடப் பேனா வலியது’’ என்பார்கள். துப்பாக்கியைவிட வலியதா? இதுதான் பாரீஸின் தற்போதைய தலைப்புச் செய்தி. பிரான்ஸ் நாட்டின் ‘தலை’யான பாரீஸ் மிகப் பெரிய நகரம். இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 23 லட்சம். மொத்த பிரான்ஸில் சுமார் 19 சதவீதம் பேர் பாரீஸில் வசிக்கிறார்கள். பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரம் மார்ஸெய்லெஸ் இது பாரீஸின் அளவில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை. நாட்டின் நிர்வாக, வணிக, கலாச்சார மையம் பாரீஸ்தான். பாரீஸ் தும்மினால் பிரான்ஸுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பார்கள். ’இன்று உலகின் தலைநகரமாகிவிட்டது பாரீஸ்’’ என்கிறார் அதன் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலாந…
-
- 11 replies
- 4.5k views
-
-
ஈராக்கில் 39 இந்தியர்களை ஐ.எஸ்.அமைப்பு சிறை பிடித்து வைத்திருப்பதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. உயிருடன் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்தியர்கள் 39 பேரையும் மீட்க பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஷை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதனிடையே ஈராக்கில் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து இந்தியர்களையும் உயிருடன் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். முன்னதாக கட்டிட வேலை செய்ய ஈராக் சென்ற 39 இந்தியர்களை மெசூல் என்ற இடத்தில் ஐ.எஸ்.அமைப்பினர் கடந்த ஆண்டு சிறைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.co…
-
- 0 replies
- 343 views
-
-
அமெரிக்காவில் கேமராவில் மறைத்த பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடி தள்ளிவிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் சந்தித்து பேசினார். பொதுவெளியில் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை லட்சக்கணக்கான மக்கள் பார்த்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு பேஸ்புக் அலுவலகத்திற்குள் மோடிக்கு பெண் ஒருவர் பரிசு வழங்கினார். அருகில் மார்க் ஜூக்கர்பெர்க்கும் உடனிருந்தார். பரிசளிப்பு நிகழ்வை அங்கிருந்த கேமரா மேன் படம் பிடித்துக் கொண்டிருந்தார். ஆனால் கேமராவை மார்க் ஜூபெக்கர் மறைத்ததாக தெரிகிறது. இதனை மனதளவில் உணர்ந்த மோடி மார்க் ஜூபெக்கரை வலுக்கட்டாயமாக இழுத்…
-
- 0 replies
- 517 views
-
-
ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் ஐ.நா. பாதுகாப்பு பேரவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. நியூயோர்க் நகரில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன், பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹொலாந்த் ஆகியோரை நேற்று தனித்தனியே சந்தித்துப் பேசினார். இதுகுறித்து நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் இந்திய மத்திய வெளியறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது, இந்த மூன்று நாட்டுத் தலைவர்களுடனான பிரதமர் மோடியின் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது…
-
- 0 replies
- 421 views
-
-
ஆட்டோவில் அதிக சத்தம் வந்ததால் கோபமான ஒருவர் அதன் டிரைவரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூர் மாவட்டம், ஹுன்சூர் தாலுகா அருகேயுள்ள பிலிகெரே என்ற ஊரை சேர்ந்தவர் சீனிவாஸ்(40). ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வரும் இவர், சம்பவத்தன்று ஆட்டோவை ஸ்டார்ய் செய்தபோது வண்டி கிளம்பவில்லை. எனவே ஆட்டோவை சரி செய்வதற்காக ஆக்சிலேட்டரை முறுக்கியுள்ளார். இந்த சத்தத்தால் பக்கத்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசகவுடா என்பவர் கடும் கோபம் அடைந்தார். பின்னர் வெளியே வந்த அவர், ஆட்டோவை ரிப்பேர் செய்வதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு சீனிவாஸ் மறுத்தார். இதனால் கோபமடைந்த வெங்கடேசகவுடா அருகிலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து வந்து சீனிவாஸ் தலையில் அடித்துள்ளார…
-
- 3 replies
- 912 views
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; 9 பேர் பலி! காபூல் : ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 3 போலீசார் உள்பட 9பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில், பாகிஸ்தான் எல்லையோரம் பாக்டிகா என்ற இடத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. நேற்று இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் வீரர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தீவிரவாதி ஒருவர்,மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டு வெடிக்க வைத்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலில் 3 போலீசார் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மேலும…
-
- 1 reply
- 591 views
-
-
படகு வெடிப்பில் தப்பினார் மாலைதீவுகள் ஜனாதிபதி மாலைதீவுகளின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூம் பயணித்த அதிவேகப் படகொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் அவர், பாதிப்பெவையுமின்றித் தப்பியுள்ளார். எனினும், அவரது மனைவிக்கும் பாதுகாவலர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மாலைதீவுகளின் தலைநகரான மாலேயின் பிரதான இறங்குதுறைமுகத்தை அவரது படகு அண்மித்த போதே, இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது - See more at: http://www.tamilmirror.lk/155206/படக-வ-ட-ப-ப-ல-தப-ப-ன-ர-ம-ல-த-வ-கள-ஜன-த-பத-#sthash.y6qnO0C0.dpuf
-
- 0 replies
- 455 views
-
-
ஃபேஸ்புக் தலைமையகத்தில் தன் தாயை நினைத்துக் கண்ணீர் உகுத்தார் பிரதமர் மோடி: அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி ஃபேஸ்புக் தலைநகரான மெல்னோ பார்க்கில் அந்நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மார்க் சக்கர்பெர்க் அவர்களுடன் ஒரு சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டார். இந்தியாவை 20 ட்ரில்லியன் பொருளாதார இயங்குதளமாக மாற்றுவதே இச்சந்திப்பின் மூலம் தெரிவிக்க விரும்பும் தனது இலட்சியம் என்று தெளிவுறுத்தினார், பிரதமர். இச்சந்திப்பைப் பொதுவெளியில் வைத்துக்கொள்ளச் சம்மதித்தத் திரு.மோடி அவர்கள் ஐந்து கேள்விகளுக்கு விடையளிக்கவும் சம்மதித்தார். அந்தக் கேள்வி பதில் கலந்துரையாடலின் விவரங்கள் இதோ: கேள்வி 1:- கேட்டவர் : மார்க் சக்கர்பெர்க் இந்திய அரசியலிலும், அரசு செலுத…
-
- 1 reply
- 521 views
-
-
"பன்ச் மேல் பன்ச்" வசனம் பேசி சிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த மோடி சான் ஜோஸ்: டிஜிட்டல் புரட்சி பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒற்றை வரிகளில் பல பஞ்ச் வசனங்கள் பேசி சிலிக்கான் வேலியைச் சேர்ந்த ஐடி பெரும்தலைகளை கவர்ந்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிலிக்கான் வேலி சென்றுள்ளார். அங்கு அவர் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து பேசினார். மேலும் இன்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவரது உரையின் சிறப்பு அம்சங்கள், நான் உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளேன். ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஹஜ் யாத்திரை நெரிசல் பலி எண்ணிக்கை 310: காயம் 450 ஹஜ் புனித யாத்திரையில் கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலி. | மீட்புப் படையினர் பணியில். | படம்: ஏ.பி. சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி 310 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர். மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 310 பேர் பலியானதாகவும், 450 பேர் காயமடைந்திருப்பதாகவும் குடிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து,…
-
- 12 replies
- 2.2k views
-
-
அமெரிக்காவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சவுதி அரேபிய இளவரசர் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி இளவரசரான மஜீத் அப்துல் அஜீஸ் அல் சவுது அமெரிக்காவின் பேவர்லி மலைத்தொடரில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். அந்தஸ்து பெற்ற பிரபலங்களுக்கு மட்டுமே இந்த மலைத் தொடரில் தங்க அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் தனது குடியிருப்புக்கு அருகே வசித்து வந்த இளம்பெண் ஒருவருக்கு சவுதி இளவரசர் பாலியல் தொல்லை அளித்ததாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரினைத் தொடர்ந்து இளவரசர் மஜீத் அப்துல் அஜீஸை போலீசார் நேற்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து மூன்று லட்சம் அமெரிக்க டாலர் பிணைத் தொகையின் பேரில் அப்துல் அஜீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.பாலியல் வழக்கில்…
-
- 4 replies
- 949 views
-