Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஈரோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கிய காந்திய மக்கள் இயக்க மாவட்டத் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசுகிறார் காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவிமணியன். உடன் (இடமிருந்து) மாவட்டத் தலைவர் இரா.சிவராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் துரை.செல்வக்குமார். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வோம் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் கூறினார். ஈரோடு மாவட்ட காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா சூரம்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அலுவலகத்தை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசியலில் நல்ல மாற்றத்தை உரு…

    • 1 reply
    • 422 views
  2. ஆஸ்திரேலியாவில் கடுமையான புதிய குடிவரவுக் கொள்கைகளை கண்சர்வேடிவ் கட்சித் தலைவரான டோனி அப்பாட் பிரேரித்துள்ளார். அந்நாட்டில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டோனி அப்பாட் ஆஸ்திரேலியாவில் தற்போது தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ளவர்களுக்கு வேலை பார்க்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதமான தற்காலிக வதிவிட உரிமை மட்டுமே வழங்குவது என்றும், நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில்லை என்றுமான மாற்றத்தை இத்தேர்தலில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்படுத்தும் என அப்பாட் கூறினார். தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களுக்கு அம்முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருந்துவரும் உரிமை ரத்து செய்யப்படும் எனவ…

    • 1 reply
    • 291 views
  3. வெல்லிங்டன்: நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் இன்று அதிகாலை 2.31 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் நாட்டின் வட பகுதியில் உள்ள ஆக்லாந்து முதல் தென் பகுதியில் உள்ள ட்யூன்டின் வரை உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின மற்றும் வீடுகள் சேதம் அடைந்தன. பல அலுவலக கட்டடிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் சிலர் காயம் அடைந்துள்ளனர். உயிர் இழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது வெல்லிங்டனில் உள்ள பல லிப்டுகள் திடீர் என்று நின்றுவிட்டன. பின்னர் அதில் இருந்தவர்…

  4. வாஷிங்டன்: டெக்சாஸைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலின் புதிய வளர்ப்பு மகன் என்று கூறி அவரது வங்கிக் கணக்கு விவரங்களை சேகரித்து, பணம் எடுக்க முயன்று கைதாகியுள்ளார். டெக்சாஸைச் சேர்ந்த ஜானி பிளெட்சர் கூடன் ஜுனியர் (29) என்பவர் பிரையனில் உள்ள சேஸ் வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி ஊழியரிடம் தான் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷலின் வளர்ப்பு மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மிஷலின் வங்கிக் கணக்கு குறித்த விவரங்களை அவர் கேட்டுள்ளார். வங்கி ஊழியருக்கு ஜானி பொய் சொல்கிறார் என்று தோன்றியதால் அவரை வங்கியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். மிஷலுக்கு இந்த வங்கியில் கணக்கு இல்லை என்று கூறியும் அவர் வெளியே செல்ல மறுக்கவே போலீசார் வரவழைக்…

  5. புதுச்சேரி: நாட்டின் அனைத்து மாநிலங்களும் கொண்டாடுவதைப் போல ஆகஸ்ட் 15ஐ சுதந்திர தினமாக கொண்டாடாமல் நவம்பர் 1-ந் தேதிதான் சுதந்திர தினமாக கொண்டாடுவோம் என்று பிரெஞ்ச் புதுவை விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இன்று தேசியக் கொடியேற்றி குடியரசு தினத்தை பிரெஞ்ச் புதுவை விடுதலை இயக்கத்தினர் கடைபிடித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகி சிவ. இளங்கோ, 1954ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதிதான் பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்து புதுச்சேரிவிடுதலை பெற்றது. அந்த நாள்தான் புதுச்சேரி மக்களுக்கான சுதந்திர தினம். அதேபோல் ஆகஸ்ட் 16-ந் தேதிதான் இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் புதுச்சேரி கொண்டுவரப்பட்டது. ஆகையால் அந்த நாளையே நாங்கள் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். இந…

    • 1 reply
    • 508 views
  6. ஷார்ஜா: பாகிஸ்தான் சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்து ஷார்ஜாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாகிஸ்தானியர் ஷார்ஜா போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார். ஷார்ஜாவில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில் குறிப்பிட்ட வீட்டினுள் சுமார் 13 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலர் அடைத்து வைக்க பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, சிறுமிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு வாலிபர், ஷார்ஜாவில் வீட்டு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அழைத்துவந்து, அவர்களை வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. சிறுமிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அவ…

  7. பூஜ்: குஜராத் முதல்வர் நரேந்திரடி சுதந்திர தின நிகழ்ச்சியை இந்திய-பாகிஸ்தான் எல்லையான கட்ச் பூஜ் நகரில் நடத்தியிருப்பதன் மூலம் தம்மை ஒரு தேசிய அளவிலான தலைவராக அடையாளம் காட்டியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்திய- பாகிஸ்தான் இடையே மோதல் என்பது பொதுவாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களையொட்டியதாக கருதப்படுவது உண்டு. நடைமுறையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளுக்கு இணையாக ஆபத்தமானதும் எளிதில் பாகிஸ்தான் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய இடமாகவும் இருப்பது கட்ச் பிராந்தியம்தான். குஜராத்தின் கட்ச் மாவட்டம்தான் இந்தியாவிலே மிகப் பெரிய மாவட்டமாகும். ஆனால் இதன் மொத்த பரப்பளவில் பாதி அளவில்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். எஞ்சிய பாதி அளவு மனிதர்கள் வாழத் தகுதியற்ற சத…

    • 1 reply
    • 436 views
  8. மும்பை: மும்பை பங்குச் சந்தை இன்று மிகப் பெரும் சரிவை எதிர்கொண்டது. பிற்பகல் வர்த்தகத்தின் போது 700 புள்ளிகள் வரை சரிவை எதிர்கொண்டது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 62 ஆக வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சியானது பங்குச் சந்தைகளிலும் கடுமையாக எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தை காலை முதலே சரிவில் இருந்த போதும் பிற்பகலில் 700 புள்ளிகள் வரை சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் பங்குகள் 4.7%, ஹெச்.டி.எப்.சி பங்குகள் 5.8%, அளவிலும் சரிசை சந்தித்தன. மேலும் பேங்க் ஆப் பரோடா வங்கி பங்குகள் 8.2%, யெஸ் பேங்க் பங்குகள் 7.9%, ஆக்சிஸ் பே…

    • 1 reply
    • 750 views
  9. பான்கிமூன்: இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் ஐ.நா சமரசம் செய்யும் இந்தியாவும் பாகிஸ்தானும் விரும்பினால் சமரச நடவடிக்கைகளில் ஐ.நா. பங்கெடுக்கும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக பாகிஸ்தான் செல்வதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'எல்லையில் நடந்த சம்பவங்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டது அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதேவேளையில், பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளை நடத்த இருநாடுகளும் முயற்சிகள் மேற்கொள்வது நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது. இதனை பாராட்டி வரவேற்கிறேன் ' என்று கூறினார். இந்த விவகாரத்தில் ஐ.நா பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் அரசியல்ரீதியாக தலையிடப் போவதில்லை. இரு நாட்டு அரசுகளின் கையில் தான் தீர்வு உள்ள…

    • 4 replies
    • 388 views
  10. பல தளங்களில் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை சிங்க‌ப்பூர் Thursday, August 15th, 2013 பிரதமர் லீ சியன் லூங், வரும் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை ஆற்றவிருக் கும் இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையைப் பல தளங்களில் கேட்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த உரை உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிவழிகளில் நேரடியாக இடம்பெறும்.www.pmo.gov.sg எனும் பிரதமர் அலுவலகம் மற்றும் www.reach.gov.sg/ndrsg எனும் ‘ரீச்’ கருத்து சேகரிப்புப் பிரிவு ஆகியவற் றின் இணைய தளங்களில் பிரதமரின் உரையைப் பார்க்கலாம். http://tamilmurasu.com.sg/story/27674

  11. அதிபரை விடுவிக்கக் கோரி எகிப்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 300 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். சில வாரங்களுக்கு முன் வரை எகிப்தின் அதிபராக இருந்து வந்தவர் மோர்சி. இவர் மக்களுக்கு எதிராகச் செயல் பட்டு வருகிறார் என இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து ராணுவம் அவரை ஆட்சியில் இருந்து அகற்றி, காவலில் வைத்தது. இதனால் ஆத்திரமடைந்த மோர்சியின் ஆதரவாளார்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கலவரம் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/15/world-nearly-300-killed-egypt-clashes-pm-defends-crackdown-181264.html

  12. டெல்லி: இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு.. தொடர்ந்தும் பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்க தயாங்கு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை: பொறுமைக்கும் எல்லை உண்டு அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் பழகவே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானோ போர் நிறுத்தத்தை மீறி எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா அமைதியான போக்கையே கடைபிடித்து வருகிறது. பொறுமைக்கும் எல்லை உண்டு. எல்லையை கட்டிக்காக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியா தயங்காது. இதை பாக…

  13. சிங்கம் போல இருக்கும் திபெத்திய நாய் சீனாவின் மிருககாட்சி சாலையொன்றில் ஆப்பிரிக்க சிங்கம் என்று வைக்கப்பட்டிருந்த விலங்கு, பார்வையாளர்களுக்கு முன்பு திடிரென குரைத்ததால் அது போலி என்பது வெட்ட வெளிச்சமானது. உண்மையான சிங்கத்துக்குப் பதிலாக திபெத்தில் வளரும் மஸ்டிஃப் வகை நாயை அந்த விலங்கு காட்சி சாலை வைத்திருந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உடல் முழுதும் ரோமம் வளரும் திபெத்திய மாஸ்டிஃப் நாய் தூரத்தில் இருந்து பார்கும்போது சிங்கத்தைப் போலத் தோன்றும், இனப்பெருக்கத்துக்காக வேறு ஒரு இடத்துக்கு அந்த ஆண் சிங்கம் அனுப்பப்பட்டதால், அந்த கூண்டில், ஊழியர் ஒருவர் வளர்த்த இந்த நாய் வைக்கப்பட்டதாக அந்த மிருககாட்சி சாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். http://www.bbc.co.uk/tamil/gl…

  14. டெல்லி: இந்தியாவின் பொறுமைக்கும் எல்லை உண்டு.. தொடர்ந்தும் பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்க தயாங்கு என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை: பொறுமைக்கும் எல்லை உண்டு அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் பழகவே இந்தியா விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானோ போர் நிறுத்தத்தை மீறி எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா அமைதியான போக்கையே கடைபிடித்து வருகிறது. பொறுமைக்கும் எல்லை உண்டு. எல்லையை கட்டிக்காக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தியா தயங்காது. இதை பாகிஸ்தான் உணர…

  15. இம்பால்/கவுகாத்தி: நாடுமுழுவதும் 67 வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மணிப்பூர், அஸ்ஸாம் மாநிலங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடும் இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் மொய்ரான்கோம் என்ற இடத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததாக தகவல் தெரிவிக்கின்றது. சேதம் குறித்து உடனடி தகவல் வெளிவரவில்லை. இதேபோல அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியை அடுத்த ஷிராங் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் நேற்று மாலை குண்டு வெடித்துள்ளது. சேதம் அதிகமில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் போதும் தலைநகர் இம்பாலில் 3 இடங்களிலும், தவ்பால்…

  16. அபுஜா: நைஜீரிய தீவிரவாத இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவனான மொபாடு பாமா என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கம் போக்கோ ஹரம். அதன் இரண்டாம் கட்ட தலைவன் மொமொடு பாமா. இவனது தலைக்கு 1.55 லட்சம் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்தது நைஜீரிய அரசு. இந்திய மதிப்பில் இது சுமார் 96 லட்சம் ஆகும். நைஜீரியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியை இஸ்லாமிய சட்ட திட்டப்படி ஆட்சி நடக்கும் இடங்களாக மாற்ற வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள். இதற்காக ஆயுதம் ஏந்திப் போராடும் இவர்களது போராட்டத்தில் சிக்கி, இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்நிலையில், போர்னோ மாநி…

  17. பூஜ்: இந்திய -பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் ஒன்றான கட்ச் பிராந்தியத்தின் காவ்டாவில் எல்லைப் பாதுகாப்புப் படையினரை சுதந்திர தின நாளில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். குஜராத் மாநிலத்தில் கட்ச் பிராந்தியம் பாகிஸ்தான் எல்லைப் பகுதியாகும். கட்ச் பகுதியில் மக்கள் வாழக் கூடிய கடைசி இடமான கவ்டாவில் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. அங்கு எல்லை பாதுகாப்புப் படையினர் முகாமும் உள்ளது. அதற்கு அப்பால் சதுப்பு நிலமாக, மணற்பாங்கான நிலமாக காட்சி தரும் ராண் ஆப் கட்ச் பிரதேசம். ராண் ஆப் கட்ச்-தான் இந்தியா- பாகிஸ்தாஅன் எல்லையாகும். பல நூறு கிலோ மீட்டர் மனித நடமாட்டமே இல்லாத பகுதியில்தான் ராணுவத்தினர் ரோந்து சுற்றி வருகின்றனர். இந்நிலையில் பூஜ் நகரில் இன்று சுதந்தி…

  18. எகிப்த்தில் உஸ்னி முபாரக் பதவிகவிழ்க்கப்பட்ட பின்னர் சனநாயகத் தேர்தல் மூலம் ஆட்சியமைத்த முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் தலைவரான மொர்ஸி அண்மையில் இராணுவச் சதிப் புரட்சியொன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது தெரிந்ததே. அவர் பதவிகவிழ்க்கப்பட்டது செல்லாதென்றும், மறைமுக இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மொர்ஸி அவர்களை விடுதலை செய்து மீண்டும் ஆட்சியில் அமர்த்துமாறும் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் கடுமையான மறியல்ப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை நாம் அறிந்த செய்தி. இவ்வாறான போராட்டங்களின் ஒரு படியாக கைரோவிலும் மற்றும் புறநகர்ப் பகுதியொன்றிலும் நகரப்பகுதியை ஆக்கிரமித்து முகாமிட்டு நீண்டநாட்களாக மொர்சி ஆதரவாளர்கள் போராடி வந்த நிலையில், அவர்கள…

  19. சிங்கப்பூர் நாட்டின் மிக உயரிய விருதான தெமாசெக் விருது (Order of Temasek) அந்நாட்டின் 6 வது அதிபராக இருந்த திரு S.R. நாதன் (செல்லப்பன் ராம நாதன்) அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ( This award was last given to former Chief Justice Yong Pung How in 1999).திரு நாதன் சிங்கப்­பூ­ரின் அதி­ப­ராக இருந்த­தற்கு மட்டும் இவ்­வி­ருது வழங்கப்­பட­வில்லை, மாறாக பொதுச் சேவையில் தமது வாழ்நாள் முழு­வ­தும் ஈடு­பட்டு நாட்­டிற்கு ஆற்றிய சேவைக்­காக திரு நாத­னுக்கு இவ்­வி­ருது வழங்கப்­படு­கிறது என்று சிங்கப்பூர் பிர­த­மர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்ளது. இவர் 1999 மற்றும் 2005 ஆகிய இரண்டு முறையும் சிங்கப்பூரின் அதிபராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்.மூன்றாவது முறையாக தான் போட்டியிட விரும்பவ…

    • 4 replies
    • 627 views
  20. இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள புத்தகாயா பகுதியின் அமைந்துள்ள மகாபோதி விகாரை பிரதேசத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய புலனாய்வு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் இந்து பூசகரான அருப் பிரக்மாச்சாரி என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர், இந்த நபர் பொலிஸாரிடம் சிக்காது தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் புத்தகாயா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பில் இந்திய பொ…

  21. இன்று ஹிந்தியச் சுதந்திர தினமாம், அடுத்தவரின் சுதந்திரத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான உயிர்களை அணு அணுவாய் துடிதுடிக்க அழித்த கொடியவர்களின் சுதந்திர தினமாம். இதோ மறத்தமிழினத்தின் ஒரு கருஞ்சாபம்......... https://www.youtube.com/watch?feature=player_embedded&v=J3Rux6P37bY https://www.facebook.com/lingamvisva?hc_location=stream https://www.facebook.com/lingamvisva?hc_location=stream

    • 7 replies
    • 879 views
  22. டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் 30 கிலோ மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக்கில் சீனா தொடர்ந்தும் ஊடுருவி வருகிறது. இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சவ் மாவட்டத்தில் சங்கலஹாம் பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கின்றனர். சங்கலஹாம் பகுதிக்கு உரிமை கோரி சீன ராணுவ துருப்புகள் பேனரை ஏந்தியபடி ரோந்து சுற்றி வந்ததாகவும் அவர்களை வெளியேறும்படி இந்திய ராணுவத்தினர் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது வரை அங்கு கூடாரங்கள் அமைத்து சீன ராணுவத்தினர் தங்காத நிலையில் அவர்க…

  23. மண்டகசாயம் ® ‏@kasaayam6h RT @Tamiltwits:உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! pic.twitter.com/cknm4Ntt4E <a href="https://pbs.twimg.com/media/BRilzcwCMAARUUS.jpg:large"><img src="myImage.jpg"></a> உங்களுக்கெல்லாம் "தலைவா" ரிலீஸ் ஆகலன்னு கவலை! எங்களுக்கு எங்க தலைவனே ரிலீஸ் ஆகலன்னு கவலை!! pic.twitter.com/vcYv7klwzs

  24. விளையாட்டுத்துறையில் ஊக்க மருந்துப் பரிசோதனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட இந்திய விளையட்டு வீரர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தின் தெரிவித்துள்ளார். இது பல மட்டங்களில் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஊக்க மருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய தொடரோட்ட வீரர்கள். அதிலும் குறிப்பாக பளுதூக்கும் வீரர்களே கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊக்க மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினாலும், 2009 ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று, இந்திய பளுதூக்கும் சம்மேளனம் கூறுகிறது. சிறிய அளவில் பயன்படுத்தினாலும், கண்டுபிடிக்க வழிமுறைகள் உள்ளன. பளுதூக்கும் வீரர்கள் பெரு…

  25. விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய தகவல்களை அளித்த பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்து அவரது ஆதரவாளர்கள் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர். ஜூலியன் அசாஞ்சேவால் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு அமெரிக்காவின் ரகசிய ராணுவ அறிக்கைகள்,இதர நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய கடிதங்களை அளித்தவர் பிராட்லி மேன்னிங்(25).இந்த குற்றச்சாட்டுக்கு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 90 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிராட்லி மேன்னிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பரிந்துரை செய்த கையெழுத்து பிரதிகள் நார்வேயில் உள்ள நோபல் பரிசு அறக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.