Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ராக்கெட் ஏவ தயாராக இருந்த அல்-காய்தா தளபதி மீது உளவு விமான ஏவுகணை தாக்குதல் தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கும் எகிப்து சினாய் பகுதியில், மற்றொரு ஆட்டக்காரர் ஓசைப்படாமல் மைதானத்துக்குள் இறங்கியுள்ளார். இந்த ஆட்டக்காரர் வேறு யாருமல்ல, இஸ்ரேல்! சினாய் பகுதியில் எகிப்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தும் அல்-காய்தா ஆதரவு இயக்கத்தின் ராக்கெட் ஏவும் தளத்தின்மீது எதிர்பாராத உளவு விமானத் தாக்குதல் ஒன்று நடந்துள்ளது. உளவு விமான தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பதில் எகிப்து அரசு மௌனம் சாதித்தாலும், அது இஸ்ரேலின் கைங்கார்யம் என்றே ராணுவ வட்டாரங்களில் கூறப்படுகிறது. இங்குள்ள அல்-காய்தா ஆதரவு இயக்கமான அன்சார் பெய்ட் அல்-மக்திஸ், ஜிகாதி இணையதளம் ஒன்றில் வெளியிட்ட அறிக…

  2. மன்மோகன் சிங் தலைமையிலான தேசிய முற்போக்கு முன்னணியின் இரண்டாம் ஆட்சிகாலத்தில், பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் காலியான நிதி அமைச்சர் நாற்காலியை ப.சிதம்பரம் அலங்கரித்து ஓராண்டு நிறைவு பெரும் இவ்வேளையில், நிதி அமைச்சராக அவர் செய்தது, செய்யத்தவறியது என அவர் பணியை எடை போடுவோம். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருந்த இருந்த வேளையில் ப.சிதம்பரம் பதவி நாற்காலியை அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒராண்டு காலத்தில் இவர் கோட்டைவிட்டதையும், கோட்டைப் பிடித்ததையும் இங்கு பார்போம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த பத்தாண்டுகளில் அடையாத வீழ்ச்சியை 2013 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் போது 4.7% விழுக்காட்டில் போய் நிற்கிறத…

    • 1 reply
    • 564 views
  3. வத்திக்கான்: மத நம்பிக்கையுடயவர்களின் பிள்ளைகளுக்கான கற்பித்தலின் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வினை அபிவிருத்தி செய்ய முடியுமென புனித பாப்பரசர் கூறியுள்ளார். அத்துடன் புனித ரமழானின் நிறைவில் உலகளாவிய முஸ்லிம்களுக்கு வாழ்த்துகள் கூறியதை பாப்பரசர் நல்லிணக்கத்துக்காக உலகளாவிய நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இணைந்து பரஸ்பர நல்லிணக்க முற்றுகைகளில் ஈடுபடவேண்டுமெனவும் கூறியுள்ளார். ரோமின் புனித சென்.பீற்றர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றியபோதே பாப்பரசர் இக் கருத்துகளை கூறியிருந்தார், எமது சகோதரர்களான முஸ்லிம்கள் தமது புனித ரமழான் மாதத்தினை நிறைவு செய்துள்ளன. நோன்புப் பிரார்த்தனை தானம் வழங்குதல் என இம்மாதம் அவர்களுக்கு நிறைந்ததெனவும் அவர் கூறியிரு…

    • 2 replies
    • 585 views
  4. இந்தியாவுக்கு அதிநவீனமான 145 ஹோவிட்சர் பீரங்கிகளை விற்பனை செய்வது தொடர்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கை அளித்துள்ளது. எம்777 ரகத்தைச் சேர்ந்த 145 ஹோவிட்சர் பீரங்கிகளையும் அவற்றின் உதிரிபாகங்கள், பராமரிப்பு மற்றும் பயிற்சி உபகரணங்களை தங்களுக்கு விற்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது. இதன் மதிப்பு 888 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.5.3 ஆயிரம் கோடி) என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்த விற்பனையானது அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசியப் பாதுகாப்புக்கு உதவக்கூடியதாகும். ஏனெனில் இதன் மூலம் அமெரிக்க-இந்திய ராணுவ உறவுகளும், அமெரிக்காவின் மிக முக்கி…

  5. பாஜகவில் சுப்ரமணியசுவாமி: கட்சித் தலைவர்கள் வரவேற்பு. டெல்லி: சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் ஞாயிற்றுக்கிழமை இணைந்தது. டெல்லியில் ராஜ்நாத் சிங் வீட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடன் சுப்ரமணியசுவாமி இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கட்சியில் சுப்பிரமணியசுவாமி இணைவதற்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில், இந்த அறிவிப்பை சுப்ரமணியசுவாமி வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், ஜனதா கட்சியின் தேசியத…

  6. அமெரிக்காவில் 'மெஸ்ஸையா' (மீட்பர்) என்று ஒரு குழந்தைக்கு வைக்கப்பட்ட பெயரை மாற்ற வேண்டும் என்று ஒரு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 'மீட்பர் என்று பெயர் வைக்கக் கூடாது' உண்மையான ''மீட்பர்'' இயேசுக் கிறிஸ்து மாத்திரமே என்று கூறியுள்ள அந்த நீதிபதி, அந்தக் குழந்தைக்கு மார்ட்டின் என்று பெயரை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார். டென்னிஸ்லாண்டில் உள்ள மெஸ்ஸையா டெஸ்வான் மார்ட்டின் என்னும் 9 மாதக் குழந்தையின் பெயரை ஏற்க விரும்பாத அதனது பெற்றோர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர். ஆனால், அந்த பெயரை மாற்ற உத்தரவிட்ட நீதிபதி, மீட்பர் என்ற பொருள்படும் மெஸ்ஸையா என்ற பெயரை கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாநிலத்தில் வைத்திருப்பது சங்கடத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார். கடந்த …

    • 1 reply
    • 339 views
  7. இந்தியா முதன்முறையாக உள்நாட்டில் உருவாக்கிய, விமான- தாங்கி கப்பல் தனது கன்னிப் பயணத்தை இன்று தொடங்கியுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த்- இந்தியா உள்நாட்டில் உருவாக்கிய முதலாவது விமானம்- தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற இந்தக் கப்பல் இந்தியாவின் தொழிநுட்ப முன்னேற்றத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய மைல் கல் என்று அந்நாட்டு அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். தென்னிந்தியாவில், கேரள மாநிலத்தின் கொச்சின் துறைமுகத்தில் ஐஎன்எஸ் விக்ராந்த் கடலில் இறக்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் இந்திய கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட முன்னதாக இந்தக் கப்பல், கடலில் தொடர்ச்சியான பரீட்சார்த்த பயணங்களை மேற்கொள்ளும். சீனா உலக சக்தியாக வளர்ந்துவரும் சூழ்நிலையில், இந்தியாவும் இராணுவ வல்லமையில் பின்னடைந்து…

    • 1 reply
    • 631 views
  8. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது பலமுறை சுட்டது. சுமார் 7 மணி நேரம் இந்தத் தாக்குதல் நடந்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் திருப்பிச் சுட்டது. கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் பலியாயினர். அந்த பதற்றம் தணிவதற்குள் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் எஸ்.என். ஆச்சார்யா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில் உள்ள …

  9. சென்னை: பெல்ஜியம் கெளரவ தூதர் பதவியில் இருந்து தொழிலதிபர் ஏ.சி. முத்தையாவை மத்திய அரசு உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு நீக்கியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கடிதம் அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் சென்னையில் உள்ள சர்வதேச தொழில்சார் அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏ.சி. முத்தையா திடீரென நீக்கப்பட்டிப்பதன் காரணம் என்ன என்று தெரியவில்லை. தமிழக திட்டக் குழுவில் தொழில்துறை பிரதிநிதியாக ஏ.சி. முத்தையாவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.oneindia.in/news/2013/08/12/tamilnadu-government-fires-belgiu…

  10. இந்தோனேசியா: இந்தோனேசியாவில் தனிம்பார் தீவில் உள்ள சாம்லேகியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திபெத்திலும் நிலநடுக்கம் இதேபோல் திபெத்தின் எல்லைப்பகுதியான ஜேகாங் மற்றும் மர்காம் பகுதியிலும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டெர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின பொதுமக்கள் வீடுகளை விட்டு அச்சத்துடன் வெளியேறியதாக தகவல்கள…

  11. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்றும் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் நேற்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதன் பின்னரும் தொடர்ந்தும் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று காலை 11.30 மணியளவில் பூஞ்ச் பகுதியில் நூர்கோட், நகர்கோட், மும்தாஜ் உள்ளிட்ட 13 இந்திய நிலைகளை இலக்கு வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய…

  12. ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று நடந்த பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசார தொடக்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி எங்களைப் பார்த்து திருந்தவோ அல்லது குஜராத்தைப் பார்த்து திருந்தவோ மத்திய அரசுக்கு மனம் இல்லை என்றால், பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டைப் பாருங்கள். அங்கு முதல்வர் ஜெயலலிதா திறன் வளர்ச்சிக்காக செய்துள்ள முதலீடுகளைப் பாருங்கள்.அதைப் பார்த்தாவது திருந்துங்கள் என்றார். மாலை 5.08 மணிக்குத் தனது பேச்சைத் தொடங்கினார் மோடி. முன்னதாக தன்னை சந்திக்க மேடையேறி வந்த சுதந்திரப் போராட்ட தியாகி மற்றஉம் மூதாட்டி ஆகியோரை வரவேற்ற மோடி, அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டார். பின்னர் தனது பேச்சைத் தொடங்கினார். தனது பேச்சின் தொடக்கத்தில், ஆந்திர மாநில மக்கள் வளமும…

    • 6 replies
    • 487 views
  13. குடித்துவிட்டு வீதியில் செல்லும் ரொறான்ரொ மேயர் ரொறான்ரோ நகரின் மேயர் Rob Ford குடித்து விட்டு நிதானமின்றி வீதியில் செல்வது பாதசாரி ஒருவரால் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு Taste of Danforth என்கின்ற வீதி நிகழ்வுக்கு சென்றிருந்த மேயர் அங்கே நன்கு குடித்துவிட்டு வீதியால் செல்லுவோருடன் புகைப்படங்கள் எடுத்தும், தான் வண்டி ஓட்டவில்லை என்றும் சொல்லுவது, வேறு பல விடயங்களை முணுமுணுப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இன்னுமொரு வீடீயோவில் மேயர் கோப்பியினை குடித்தவண்ணம் (பெரும்பாலும் குடிபோதையை குறைக்க) பாதசாரிகளுடன் படமெடுப்பது படமாக்கப்பட்டுள்ளது. http://www.ampalam.com/2013/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%…

    • 3 replies
    • 412 views
  14. இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி ஊடுருவுவதும் தொடர்கதையாகி வருகிறது.இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்தியப் பகுதியில் (டங்கார் லா பாஸ்) ரோந்துப்பணியில் ஈடுபட்ட சீன வீரர்கள் இரண்டு லகு ரக வாகனங்களில் நுழைந்தனர். அவர்களை கண்ட இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து வெளியேறவேண்டும் என்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை அவர்களிடம் காட்டினர். அதைத் தொடர்ந்து சமரசத்துக்கு வந்து சீன வீரர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பினர். அங்கிருந்து விடைபெறுகையில் இந்திய வீரர்களுக்கு அவர்கள் மதுபான கேன்களை (பீர் கேன்கள்) வழங்கினர். பதிலுக்கு இந்திய வீரர்க…

    • 2 replies
    • 416 views
  15. ராவணன் தமிழன் 4 லச்சம் கோடி ஊழலா? சோனியா குடும்பம், 4 லச்சம் கோடி ஊழல் பண்ணியதாக சொல்லப்படுகிறது படுகிறது !!!!!!? கருணாநிதி குடும்பத்தை , சோனியா குடும்பம், ஊழலில் தோற்கடித்து விட்டதால், ல், உலக ஊழல் செய்தவர்களில், முதலாம் இடத்தை - சோனியா குடும்பமே பெறுகிறார்கள். நக்கீரன் . பத்திரிகை: றைந்த விலைக்கு விற்கப்பட்ட இந்த நிலத்தின் மூலம் ராபர்ட் வதேரா ஒரு ஏக்கருக்கு ரூ.15.78 கோடி சம்பாதித்து இருந்ததாகவும், இதன் அடிப்படையில் கணக்கிட்டால் மொத்த நிலத்தின் மூலம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3.5 லட்சம் கோடியைத் தாண்டும் என்றும், அந்த கடிதத்தில் கெம்கா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. நில மோசடியில் சோனியா காந்தியின் மருமகன்! ஐ.ஏ.எஸ். அதிகாரி தாக்கல் செய்த அறிக…

    • 2 replies
    • 661 views
  16. நெல்லை: கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ஆதரவு தெரிவித்து கூடங்குளம் செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 10 பேர் கைது செய்யப்பட்டனர். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போரட்டத்தை தூண்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் வெள்ளை கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முருகானந்தம், இந்து மகா சபை நிறுவன தலைவர் ஸ்ரீஜி, மாநகர் மாவட்ட பொது செயலாளர் மணி உள்ளிட்டோர் நெல்லையப்பர் கோவிலுக்கு தேசிய கொடி, மற்றும் வெள்ளை கொடியுடன் பூஜை செய்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக கூடங்குளம் செல்ல முயன்றனர். ஆனால் …

    • 1 reply
    • 380 views
  17. துபாயில் வசித்து வரும் முகைதீன் பிச்சை என்ற மனித வள மேம்பாடு மற்றும் நிர்வாக ஆலோசகர் நடத்திய இமெயில் சர்வேயில், பிரதமர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொருத்தமாக இருப்பார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம். இமெயில் மூலம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தினாராம் முகைதீன் பிச்சை. அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளார். அரபு நாடுகள், சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, இலஙகை, தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரிடம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளார் முகைதீன் பிச்சை. அதன் முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது பிரதமர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இருவருமே பொருத்தமானவர்கள் என பலரும் கர…

    • 1 reply
    • 647 views
  18. ஸ்ரீநகர்: கடந்த 48 மணி நேரத்தில் 3வது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது.பாகிஸ்தான் ராணுவம். இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 5 வீரர்களைக் கொன்று ஒரு வாரத்திற்குள்ளாகவே 3வது முறையாக இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான் ராணுவம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெந்தர் மாவட்டத்தில் இன்று பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சிறு மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் படையினர் சுட்டதாகவும், தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக கனசக் பகுதியில், நடந்த பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இரு தரப்பிலும் கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ள…

    • 2 replies
    • 339 views
  19. ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களும் முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் படகு அகதிகள் தொடர்பான புதிய கொள்கை தொடர்பிலும் இந்த விவாதத்தில் பேசப்பட்டது. முதலாவது தொலைக்காட்சி விவாதத்தில் வெளிநாட்டுக் குடியேறிகள் விவகாரமும் பொருளாதாரமும் முக்கிய இடம்பிடித்தன இந்தத் திட்டம் சாத்தியப்படாது என்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகுகள் தொடர்ந்தும் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்றும் எதிரணியான (பழமைவாத) கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் டோனி அபோட் விவாதத்தின்போது சுட்டிக்காட்டினார்.படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வரும் அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்காமல் பப்புவா நியுகினிக்கு அனுப்பிவிடும் பிரதமர் கெவின் ரட்டின் கொ…

  20. மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் டவாவோ நகரில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராமன்தீப் சிங் கில் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்ப்பட்டுள்ளார். டவாவோ நகரில் வெள்ளிக்கிழமை காலை ஓல் எமர்ஸ் பீச் ரிசார்ட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 30 வயதான ராமன்தீப் சிங் ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்துள்ளார். இதுபற்றி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராமன்தீப் சிங் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளை முயற்சியைத் தடுக்கும் போதுதான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அண்மைக் காலமாக டவாவோ நகரில் நிகழ்ந்துள்ள 38வது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இது என்றும் கூறப்படுகிற http://tamil.o…

  21. ஜெட்டா: சமீபத்தில், சவுதி அரேபியாவில் 46 பேரை பலி வாங்கிய வினோத நோயான ‘மெர்ஸ்' நோய் ஒட்டகங்கள் மூலம் பரவியிருக்கலாம் என முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. கடந்த சில மாதமாக, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் மர்ம நோய் ஒன்று வேகமாக வரவி வருகின்றது. இந்நோய்க்கு இதுவரை சவுதி அரேபியா, ஜோர்டன், கர்த்தார், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, துனிசியா ஆகியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் 46 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதேபோன்று, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் என்ற கிருமி மூலம் பரவிய மர்ம நோயால் ஆசியாவில் பலர் பலியாயினர். தற்போதும் அதே போன்று பரவி வரும் இந்த விநோத நோய்க்கிருமிக்கு ‘மெர்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நோய்க்கான தடுப்பு மருந்து மற்றும் …

  22. ஹைதராபாத்: ஹைதராபாத் வந்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அங்கு தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பிரபலங்களைச் சந்தித்துப் பேசினார். பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை இன்று ஹைதராபாத்தில் தொடங்கி வைப்பதற்காக வந்த மோடியை தெலுங்குத் திரையுலகினர் இன்று பிற்பகல் சந்தித்துப் பேசினர். இன்று ஹைதராபாத் வந்த மோடியைச் சந்திக்க 81 பேருக்கு நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 25 பேர் திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆவர்.பார்க் ஹயாட்ஹோட்டலில் தங்கியிருந்த மோடியை, இயக்குநர்கள் விநாயக், பூரி ஜெகன்னாத், ராம் கோபால் வர்மா, நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். முன்னதாக மோடியை, மறைந்த என்.டி.ஆரின் மகனும், முன்னாள…

  23. ஹைதராபாத்: பாஜகவின் லோக்சபா தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறார். ஹைதராபாத் லால் பகதூர் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த பிரசாரக் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு தனது முதல் பிரசார உரையை நிகழ்த்துகிறார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் அவரது இந்த முதல் பிரசாரக் கூட்டம் பெரும் கவனிப்புக்குரியதாக மாறியுள்ளது. மோடி தனது உரையில் காங்கிரஸுக்கு எதிராக என்னை மாதிரியான திட்டங்களை, பிரசாரத்தை, கோஷத்தை வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மோடியின் இந்தக் கூட்டத்தில் லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று பாஜக தரப…

  24. சியால்கோட்: இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான், பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தத் தூண்டி விட்டதாக பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இன்று காலை பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர்தான் காரணம் என்று டான் பத்திரிக்கை கூறுகிறது. சியால்கோட் பிரிவில், பாகிஸ்தான் ரேஞ்சர்ப் பிரிவின் செக்போஸ்ட் மீது எல்லைப் பாதுகாப்பு்ப படையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அதைத் தொடர்ந்தே பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் டான் கூறுகிறது. இந்த வாரத் தொடக்கத்தில் பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தி 5 பேரைக் கொன்ற பின்னர் 3வது முறையாக பாகிஸ்தான் …

  25. நேற்று வெள்ளிக்கிழமை ஈத் தொழுகையின் பின்னர் மோதல்கள் வெடித்துள்ளன இந்திய நிர்வாக காஷ்மீர் பிராந்தியத்தில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்ட நகரமொன்றில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்காக இராணுவத்தினர் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து எச்சரித்துள்ளனர். பிராந்தியத்தின் முக்கிய நகரான ஸ்ரீநகரிலிருந்து தென்கிழக்காக சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிஷ்ட்வார் நகரில் இரண்டு சமூகங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலையடுத்து கிஷ்ட்வார் நகரமெங்கிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மூண்ட இந்த மோதல்களில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈத் தொழுகைக்கு பின்னர் முஸ்லிம்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.