உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26924 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் இருக்கும் Liberal Party நீண்ட காலமாக பாதுகபப்பை தேடிவரும் அகதிகளுக்கும், எங்களின் தூய்மையான விடுதலைப்போராட்டத்திற்கும் வெவ்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். எதிர்கட்சியின் துணைத் தலைவர் Julie Bishop அவர்கள் சிறிலங்காவிற்கு சென்று வந்ததும் அங்கே தமிழர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திவரும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் சிறிலங்காவை பாராட்டினார். ஆனால் எங்கள் மக்களுக்கு சிறிலங்கா அரசு தொடர்ந்தும் கொடுத்து வரும் பெரும் துயரங்களை நாங்கள் யாவரும் அறிவோம். பாதுகாப்பை தேடிவரும் தமிழீழ அகதிகளின் வரவை எதிர்ப்பவர்களின் வாக்கை தம் பக்கம் திருப்புவதற்காகவும். அவுஸ்திரேலிய பாராள…
-
- 0 replies
- 585 views
-
-
கருணாநிதியின் சொத்து மதிப்பு. 1967-ல் ரூ.1.08 லட்சம். தற்போது ரூ.92.88 கோடி. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கிடைத்த அதிர்ச்சி தகவல். தமிழக முதல்வர்’ பதவி என்பது, எத்தனை சக்தி வாய்ந்தது; அதை வைத்து ஏழை - எளிய மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்யலாம் என்பதை ஒருநாள் முதல்வராக செயல்பட்டு உணர்த்துவார் சாமான்யரான 'முதல்வன்’ அர்ஜுன்! வில்லனால் பழிவாங்கப்பட்டு சொத்துக்கள் அனைத்தையும் இழந்த 'சிவாஜி’ ரஜினி, ஒற்றை ரூபாயைச் சுண்டி, இழந்ததைவிடவும் அதிகப்படியான சொத்துக்களைச் சம்பாதிப்பார். இந்த இரண்டும் ரீலில் சாத்தியம். ரியலில்? 'இதுவும் சாத்தியம்... இதற்கு மேலும் சாத்தியம்’ என்பதை தனிநபராக நிரூபித்திருக்கிறார் கருணாநிதி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மூர்க்கமாகப் பங்கெடுத்தது, …
-
- 3 replies
- 2.6k views
-
-
வைரக்கம்மலை விழுங்கிய கோழி. கொல்ல மனமில்லாமல் 8 வருடங்கள் காத்திருக்க இங்கிலாந்து பெண் முடிவு. இங்கிலாந்தில் ஒரு பெண் கோழி ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் ஆசையாக வளர்த்த கோழி அவரது விலைமதிப்புள்ள வைரத்தோடு ஒன்று தெரியாமல் விழுங்கிவிட்டது. ஆனாலும் கோழியை கொல்ல மனமில்லாமல் அது இயற்கையாக சாகும் வரை காத்திருந்து பின்னர் வைரக்கம்மலை எடுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். இதே நம்மூரில் என்றால் உடனடியாக கோழியை கொன்று சிக்கன் குழம்பு வைத்து சாப்பிட்டுவிட்டு வைரக்கம்மலையும் கைப்பற்றிவிடுவார்கள். அந்த இங்கிலாந்து பெண்ணின் இரக்க குணத்தை அவர்கள் உறவினர்கள் பெரிதும் பாராட்டினார்கள். இங்கிலாந்தின் பெர்க்ஷயர் பகுதியில் வசிப்பவர் Claire Lennon, (38). இவர் வீட்டில் கோழி ஒன்ற…
-
- 0 replies
- 495 views
-
-
தீயினால் பாதிக்கப்பட்ட St. Jacobs Market-ல் உள்ள ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. சென்ற வாரம் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மார்கெட் பகுதி மறுசீரமைப்புக்கு பிறகு குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. St. Jacobs Market என்ற பகுதியில் சென்ற வாரம் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான கடைகள் பெரும் பாதிப்படைந்தன. பின்னர் பாதிக்கப்பட்ட கடைகள் மராமத்து பணிகள் வேகமாக நடைபெற்று நேற்று வியாழக்கிழமை ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஒண்டோரியோ பிரிமியர் Kathleen Wynne இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். 2200 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மிகப்பெரிய கட்டிடத்தின் பாதிக்கப்பட்ட பிற பகுதிகள் மிக வேகமாக மராமத்து பண…
-
- 0 replies
- 284 views
-
-
டொரண்டோவில் ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம். டொரண்டோவில் 17 மாத குழந்தை ஒன்று ஏழாவது மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்தும் அதிசயமாக காயங்களுடன் உயிர் பிழைத்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டொரண்டோவின் Thorncliffe Park Dr., near Don Mills Road and Overlea Boulevard,என்ற இடத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய கட்டிடடத்தின் ஏழாவது மாடியின் பால்கனியில் இருந்து நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் ஒரு குழந்தை தவறி விழுந்தது. ஆனால் அந்த குழந்தை விழுந்த இடம் அடர்ந்த புல்வெளிப்பகுதியாக இருந்ததால் குழந்தை பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தது. போலீஸ் விசாரணையில் குழந்தை பால்கனியில் இருந்த ஒரு நாற்காலியின் மீது ஏ…
-
- 0 replies
- 479 views
-
-
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: சிரியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் சர்வதேச பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிப்படையும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்காக ரஷ்யா சென்றுள்ள சீனாவின் துணை நிதி அமைச்சர் ஜூ குயாங்யோ செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபைதான் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதைவிடுத்து சர்வதேச நாடுகள் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நிச்சயமாக சர்வதேச பொருளாதாரத்தில் குறிப்பாக எண்ணெய் விலையில் பெரும் எதிர்விளைவுகளே உருவாகும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/09/05/world-china-…
-
- 0 replies
- 394 views
-
-
கராச்சி: பாகிஸ்தானில் சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் சிரிமினால் வேலைகளால் தினமும் 83,00,00,000 ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் வர்த்தக நகராக திகழ்வது கராச்சி. இங்கு கிரிமினல் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம். நூற்றுக்கணக்கான ரவுடி கும்பல்கள் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் கடத்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். உலகிலேயே கிரிமினல் குற்றவாளிகள் அதிகம் நிறைந்த நகரங்களில் ஒன்றாகவும் கராச்சி திகழ்கிறது. தினசரி 10 கொலை கராச்சி நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் தினமும் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்படுகிறார்கள். இதன் மூலம் தினமும் அவர்கள் 300 கோடி ரூபாய் வ…
-
- 3 replies
- 1.3k views
-
-
பனாஜி: கோவா மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்களும் கலாசார அடிப்படையில் ஹிந்துக்கள்தான் என்று அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்திய ப்ளாக் வெளியிட்டிருக்கும் மனோகர் பார்க்கர் பேட்டியின் முக்கிய அம்சங்கள்: இந்தியா கலாசார ரீதியாக ஹிந்து நாடு. கோவாவில் உள்ள கத்தோலிக்கர்களும் கூட கலாசார அடிப்படையில் ஹிந்துக்களே. ஏனெனில் அவர்கள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறையானது பிரேசிலில் இருப்பது போல இல்லை. கோவாவில் உள்ள கத்தோலிக்கர்களின் வழிபாட்டு முறையும் கூட ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளை ஒத்ததாகவே இருக்கிறது. நான் ஒரு ஹிந்து என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த தொடர்பு இல்லை. சில ஊடகங்கள் …
-
- 0 replies
- 454 views
-
-
டெல்லி: இருவேறு துருவங்களாக எதிரிகளாக செயல்பட்டாலும் கட்சி வேறுபாடின்றி திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அதிமுக எம்.பி. தம்பித்துரையும் நாள்தோறும் தமிழக பிரச்சனையை எழுப்பி வருகின்றனர். இன்றும் இருவரும் கச்சத்தீவு மற்றும் காமன்வெல்த் மாநாடு விவகாரம் தொடர்பாக லோக்சபாவில் பிரச்சனையை எழுப்பினர். லோக்சபாவில் பேசிய திமுக எம்.பி. டி..ஆர். பாலு, இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது. காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். போருக்கு பின் இலங்கையில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். தமிழர்கள் காணாமல் போனதை பல்வேறு மனித உரிமை அமைப்பு…
-
- 0 replies
- 529 views
-
-
தாலிபான்களிடமிருந்து தான் தப்பி வந்ததை நாவலாக எழுதிய இந்தியப் பெண் ஆசிரியர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிய வர்த்தகரை திருமணம் செய்த கொண்ட, 49 வயதான சுஷ்மிதா பேனர்ஜி, பக்திகா மாகாணத்தில் இருந்து அவரின் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத துப்பாக்கித்தாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானில் தனது வாழக்கை குறித்து காபூலிவாலாவின் வங்காள மனைவி என்ற பெயரில் இவர் எழுதிய புத்தகத்தில் அவர் தனது ஆப்கன் கணவர் ஜான்பாஸ் கானுடன் வாழ்ந்த வாழ்க்கையை வர்ணித்துள்ளார். இந்திப் படம் கடந்த 1995 ஆம் ஆண்டு ஆப்கானில் இருந்து தான் தப்பி வந்தது குறித்து சுஷ்மிதா பேனர்ஜி எழுதிய அந்தப் புத்தகம் 2003 ஆம் ஆண்டு இந்தியில் திரைப் படமாக்கப்பட்டது. இந்தப் புத்தகம் மிகவு…
-
- 1 reply
- 515 views
-
-
சீனாவில் ஆறு ஒன்றில் அமோனியக் கழிவுகள் கலந்ததால் பெருந்தொகையான மீன்கள் உயிரிழந்துள்ளன. சீனாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகனப்பெருக்கத்தின் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய கழிவு நீர் அருகில் இருந்த ஆற்றில் கலந்ததால், அங்கிருந்த மீன்கள் இறந்து கிடக்கும் காட்சி அனைவரையும் திகைப்படையச் செய்துள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள பியுஹே ஆற்றிலேயே மீன்கள் பெருந்தொகையில் உயிரிழந்துள்ளன. இதற்கு அருகில் உள்ள தனியார் இரசாயன தொழிற்சாலையின் அமோனிய கழிவுகள் கலந்தமையே காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆற்றின் மேல்பகுதியில் மீன்கள் இறந்து கிடக்கும் தகவல் அறிந்து விரைந்து வ…
-
- 2 replies
- 587 views
-
-
சிரியா சொந்த மக்கள் மீதே ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தி 1300க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த உள்ளது. இதற்காக அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யா தனது அதிவிரைவு ஏவுகணை போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. இந்தப் போர்க்கப்பல் அந்தப் பிராந்தியத்தில் ஏற்கனவே உள்ள ரஷ்ய கடற்படை பிரிவில் சேர்ந்து கொள்ளும் என தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சிரியா பகுதியில் போர் மேகம் சூழ்ந்துவிட்டதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். http://www.seithy.com/breifNew…
-
- 8 replies
- 942 views
-
-
மும்பை: மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் கோவிந்த் ராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பதவிக்கு நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் கோவிந்த் ராஜன்(50) நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றார். மும்பை மின்ட் தெருவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வந்த ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனது பொறுப்புகளை முன்னாள் கவர்னர் சுப்பாராவ் ஒப்படைத்தார். ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். ரிசர்வ் வங்கியின் இளம் கவர்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான ராஜன் டெல்லி ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகிய இடங்களில் படித…
-
- 0 replies
- 472 views
-
-
நியூயார்க்: கடந்த 1984ம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சியினரை காப்பாற்ற முயன்றதாகக் கூறி அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி காப்பாற்ற முயல்வதாக சீக்கியர்களுக்கான நீதி உரிமை பெறும் அமைப்பு (எஸ்.எஃப்.ஜே) மற்றும் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 பேர் சார்பில் அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த 2…
-
- 1 reply
- 1.7k views
-
-
டெல்லி: 2ஜி ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழல் எல்லாம் ஜுஜுபியாக தெரிகிறது.... தற்போது வெளியாகியுள்ள ஒரு புதிய பரபரப்பான ஊழல் விவகாரம். அதாவது ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் ஊழல்தான் இந்தப் புதிய பரபரப்பு. இந்தியக் கடல் பகுதியிலிருந்து ரூ. 60 லட்சம் கோடி மதிப்பிலான தோரியம் சுரண்டப்பட்டுள்ளதாக இந்தப் பரபரப்பு ஊழல் கூறுகிறது. நாட்டின் இயற்கை வளங்கள் எந்த அளவுக்கு மிக மோசமான முறையிலும், மகா மோசடியாகவும் சுரண்ட்டப்பட்டு வருகிறது என்பதற்கு இந்த ஊழல் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அமைந்துள்ளது. மேலும் அணு சக்தி எரிபொருளான தோரியம், தவறானவர்களின் கைகளுக்குப் போகும் மகா பயங்கரமான ஆபத்தும் இதில் மறைந்திருப்பது பெரும் கவலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. வழக்கம…
-
- 0 replies
- 679 views
-
-
சுவிட்சர்லாந்து பேர்ண் நகரை அடுத்துள்ள ஓபர்லாண்ட் பகுதியில் இன்று வெடித்தொழிற்சாலையில் வெடி விபத்து இடம்பெற்றுள்ளது. காலை 7.30மணியளவில் பாரிய சத்தம் ஒன்று கேட்டதாகவும் நில நடுக்கத்தை போன்று கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் அயலில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைக்கும் படையினரும் காவல்துறையினரும் அந்த இடத்திற்கு சென்று கட்டிடத்தில் பரவி வரும் தீயை அணைத்து வருகின்றனர். கட்டிடம் பாரிய அளவில் சேதமாகவில்லை என்றும் தீயணைக்கும் படையினர் கட்டிடத்தில் பரவியை தீயை அணைத்து விட்டனர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த வெடிப்பிற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவரவில்லை. இந்த தொழிற்சாலையில் 1959ஆம் ஆண்டு நடந்த விபத்…
-
- 0 replies
- 277 views
-
-
டோக்கியோ: ஜப்பானின் சில பகுதிகளில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இஷு தீவில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை . நிலநடுக்கத்தின் எதிரொலியாக புகுஷிமா டாய்ஷி அணுஉலையில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக டோக்கியோ நிர்வாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். உயிர்ப்பலி எதுவும் இல்லை என்று சொல்லப்பட்ட போதிலும், சேதாரத்தின் அளவுகள் இதுவரை தெரிய வரவில்லை. அதேபோல், நேற்று மாலை இந்திய நேரப்படி சுமார் 5 மணியளவில் அமெரிக்காவின் அலாஸ்காவின் ஆண்ட்ரியாப் தீவுகளில் நில நடுக்கம்…
-
- 0 replies
- 320 views
-
-
மும்பை: இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டன் டோகோ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்திய கப்பலான எம்.வி. ஓஷன் சென்ச்சுரியனின் கேப்டனாக இருப்பவர் மும்பையைச் சேர்ந்த சுனில் ஜேம்ஸ் (38). அவரது மனைவி அதிதி. சுனில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி நைஜீரியா அருகே லாகோஸ் என்ற இடத்தில் சென்ச்சுரியன் கப்பலில் சென்று கொண்டிருக்கையில் அதை கடற்கொள்ளையர்கள் தாக்கினர். கடற்படை அதிகாரிகள் போன்று உடை அணிந்து 30 முதல் 35 கொள்ளையர்களை கப்பலுக்குள் வந்துள்ளனர். கடற்கொள்ளையர்கள் கேப்டன் சுனில் மற்றும் மாலுமிகளை ஒரு நாள் சிறைப்பிடித்து வைத்து அதன் பிறகு அவர்களை விடுவித்துள்ளனர்.ஜூலை 31ம் தேதி இந்த சம்பவம் குறித்த விசாரணைக்காக மேற்கு ஆப்பிரிக்காவின் டோகோ நாட்டின் தலைநகர் லோமில் கப…
-
- 1 reply
- 403 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் இரண்டு முக்கிய உரைகள் அடங்கிய டேப்களை ஆல் இந்தியா ரேடியோ பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளது. ஆல் இந்தியா ரேடியோவிடம் ஜின்னா பேசி உரைகள் அடங்கிய டேப்கள் உள்ளன. இதில் 1947ம் ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி மற்றும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ஆகிய 2 நாட்களில் ஜின்னா நிகழ்த்திய உரைகள் அடங்கிய டேப்களை தங்களிடம் அளிக்குமாறு பாகிஸ்தான் பிராட்காஸ்டிங் கார்பரேஷன் (பிபிசி) ஆல் இந்தியா ரேடியோவை கேட்டுக் கொண்டது. பிபிசியின் 4 ஆண்டு கால முயற்சியை அடுத்து அந்த டேப்களை ஆல் இந்தியா ரேடியோ ஒப்படைத்துள்ளது. இந்த டேப்களின் தரத்தை பார்த்துவிட்டு அதை அடுத்த வாரம் ஒலிபரப்ப பிபிசி திட்டமிட்டுள்ளதாம். இது தவிர மேலும் ஒரு உரை அடங்கிய டேப்பையும் அளிக்க இந்த…
-
- 0 replies
- 236 views
-
-
காபூல்: ஆப்கானிஸ்தானில் வாழும் ஹிந்துக்கள், சீக்கியர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் சிறப்பு பிரதிநிதித்தும் வழங்க வகை செய்யும் சட்டத்தை பிறப்பித்து அதிபர் ஹமீத் கர்சாய் உத்தரவிட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கீழவையான Wolesi Jirgaவில் மொத்தம் 249 எம்.பிக்கள் உள்ளனர். Meshrano Jirga எனப்படும் மேல்சபையில் 102 எம்.பிக்கள் உள்ளனர். தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும் ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதால் கீழவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 250ஆக அதிகரித்துள்ளது. ஹிந்து மற்றும் சீக்கியர்களுக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலான சட்ட திருத்தத்துக்கு அந்நாட்டு எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெ…
-
- 0 replies
- 319 views
-
-
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்ஃபாக் பர்வேஸ் கயானி நேற்று பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்தார். ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரோந்து பணி முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்த இந்திய வீரர்கள் 5 பேரை ஆகஸ்ட் 6-ந் தேதியன்று இலக்கு வைத்து பாகிஸ்தான் படுகொலை செய்ததைத் தொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான கோட்டி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ…
-
- 0 replies
- 348 views
-
-
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுகீட்டு ஊழல் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மறுத்துவிட்டதாக அவரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரி டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ. ராசா, 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் 2011 பிப்ரவரி 17-ந் தேதி வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு மே மாதம் 15-ந் தேதி ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சிபிஐ துணை கண்காணிப்பாளரான ராஜேஸ் சஹால் இன்று சாட்சியமளித்தார். அப்போது 2011ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதியன்று ஆ. ராசாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவ…
-
- 1 reply
- 246 views
-
-
வணக்கம் AUSTRALIA உறவுகளே....... நாம் ஆவலுடன் எதிர்பாத்திருந்த பொது தேர்தல் வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது......... ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த தொழில் கட்சியும் 2007 இல் ஆட்சியை பறி கொடுத்த லிபரல் கட்சியும் பிரதான கட்சிகளாக மோது கின்றன..... 2007 இல் பதவியில் அமர்ந்த தொழில் கட்சியானது பல குளறுபடிகள் இருந்த ஆட்சியாக அமைந்து மக்களின் தீர்ப்பிற்காக காத்து இருகின்றது...... இரண்டு கட்சிகளுமே ஒருவரை ஒரு குற்றம் சாட்டியும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வண்ணம் இருகின்றார்கள் ஏகப்பட்ட கடன் சுமை கட்டுகடங்காத அகதிகளின் வருகை என்று அடுத்து ஆட்சி அமைக்க போகின்றவர்கள் முன்னாள் பாரிய பணி இருகின்றது......... அகதிகளின் …
-
- 50 replies
- 4.3k views
-
-
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சீக்கியர்களுக்கான நீதி என்ற மனிதஉரிமை அமைப்பினர் 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தில் சுமார் 30 ஆயிரம் சீக்கியர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியின் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை முன்நின்று நடத்தியவர்களில் முக்கியமானவர்களான கமல்நாத், சஜ்ஜன்குமார், ஜகத…
-
- 5 replies
- 467 views
-
-
குண்டும் குழியுமாக இருக்கு சாலைகள் மராமத்து செய்யப்படாமல் இருக்கும் நிலையை வெளிப்படுத்த, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு நகரவாசிகள், அந்த குண்டு குழிகளுக்கு மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பெயர்களைச் சூட்டியுள்ள விநோத சம்பவம் நடந்துள்ளது. குண்டு குழிகள் நிறைந்த சாலைகள் --புதுமையான எதிர்ப்பு ( ஆவணப்படம் சாலைகள் பொதுவாக மோசமான நிலையில் உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இந்த புதுமையான நடவடிக்கையை சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரவாசிகள் எடுத்துள்ளனர். ராய்ப்பூரின் சாலைகளில் உள்ள குண்டுகுழிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதில் பயணிக்கும் காரோட்டிகள் தாங்கள் இந்த குழிகளில் தவறுதலாகக் காரை செலுத்தினால், தாங்கள் காயமடைவதாகக் கூறுகிறார்…
-
- 1 reply
- 426 views
-