Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கூகிழ் தன்னிச்சையாக இயங்கும் மகிழூர்தியை - கார் - வெற்றிகரமாக தெருவில் ஓடவிட்டுள்ளதாம். அமெரிக்கா கலிபோனியாவில் பரீட்சார்த்தமாக தெருக்களில் ஓடவிடப்பட்டுள்ள ஏழு மகிழூர்திகள் 1,000 மைல்கள் தூரத்தை எதுவித சிறு விபத்தும் இன்றி கடந்துள்ளனவாம். விரைவில் இவை சந்தைக்கு வரலாம், அவற்றை வாங்கும் வசதி கிடைத்தால் பெருங்குடிமக்கள் குடித்துவிட்டு கார் ஓடி விபத்துகளை சந்தித்து, மற்றவர்களுக்கும் சிரமம் கொடுத்து, மாமாவிடமும் மாட்டுப்பட்டு இவ்வாறு பல்வேறு சிரமங்களை அனுபவிக்கவேண்டி வராது. பார்டிகள் ஏதாவற்றுக்கு போகும் சமயங்களில் பெருங்குடி மக்களை ஏற்றி இறக்கி சிரமப்படவேண்டிய தேவைகள் அப்பாவிகளான எங்களுக்கும் இதன்பின்னர் வராது. படம்: சீ நெட் செய்தி மூலம்: கூகிழ் கார்

  2. ஆணுறைகளால் பொதுநலவாய போட்டிகளுக்கு வந்த ஆபத்து டெல்லியில் தற்போது பொதுநலவாய போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பங்குபெற்றும் போட்டியாளர்கள் தங்குவதற்கென தனிக்கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் அதிகப்படியான ஆணுறைகள் கழிவு நீர்த்தொகுதியில் அடைப்பட்டுள்ளமையால் அக் கிராமத்தின் கழிவு நீர்த்தொகுதி அடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு போட்டி ஏற்பாட்டாளர்கள் பாடுபட்டுவருவதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொதுநலவாய போட்டிகள் சம்மேளனத்தின் தலைவர் மைக் பெனல், இது ஓர் ஆரோக்கியமான விடயமெனவும் வீரர்கள் பொறுப்புணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இக் கிராமத்தில் போட்டி ஏற்பாட்டாளர்கள் 8,000 இலவச ஆணுறைகளை விநிய…

  3. புதுச்சேரி மற்றும் திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமை 09 Oct 2010 வருகிறார். சனிக்கிழமை நண்பகல் தனி விமானத்தில் சென்னை வரும் அவர், ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறார். அங்கு லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இறங்கும் அவர், அங்கிருந்து புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்துக்குச் செல்கிறார். அந்த மருத்துவமனையையும், அரசு மருத்துவக் கல்லூரியையும் அவர் திறந்து வைக்கிறார். இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய திட்டத்துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி, புதுச்சேரி துணைநிலை ஆளு…

  4. ஜம்மு காஷ்மீர், அருணாச்சல் பிரதேசம் தனி நாடுகள்: ஐ.நா. ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகள் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என்றும், அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒரு அங்கம் என்றும்தான் இதுநாள் வரை ஐ.நா. கூறிவருகிறது. ஆனால் இந்த அணுகுமுறைக்கு மாறாக, அதன் கிளை அமைப்பான ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களை தனி நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்புக்கான இந்திய …

  5. இலங்கை கடற்படையின் எதிர்ப்புக்கு பணிந்து, தமிழக மீனவர்களை மாற்று மாவட்டத்தில் பிழைப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், இலங்கை கடற்பகுதியை சார்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு கடற்படையினர், தொடர்ந்து தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்புகளுக்கு பிறகும் தீர்வு கிடைக்கவில்லை.சமீப காலமாக இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிழைப்புக்கு வழியின்றி வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையை போக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (செப்., 11), கச்சத்தீவு நோக்கி போராட்டம் செய்ய விசைப்படகு மீனவர்கள் அறிவித்திருந்தனர்…

  6. திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதனை சுற்றி உள்ள பெரும்பாலான கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் வனத்துறை எல்லையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வனப்பகுதிகளில் யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் மெயின் ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கணக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ளது. மேலும் கோம்பைக்காடு, தொண்டுபட்டி ஆகிய பகுதிகளும் உள்ளன. மலை அடிவார பகுதியான இங்கு சமீபகாலமாக ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சுக்கம்பட்டி ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 9 யானைகள்…

    • 0 replies
    • 726 views
  7. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:- கேள்வி:- சட்டசபை தேர்தல் பிரசாரத்தை நீங்கள் இப்போதே தொடங்கி விட்டது போல தெரிகிறதே? உங்கள் கூட்டத்தில் அதிக அளவு மக்கள் திரண்டனர். 2011 தேர்தல் அ.தி.மு.க.வுக்கு எப்படி இருக்கும் என கருதுகிறீர்கள்? பதில்:- தேர்தல் நேர்மையாக நடந்தால் அ.தி. மு.க.வும் கூட்டணி கட்சிகளும் பெரும் வெற்றியை பெறும். ஆனால் நேர்மையாக தேர்தல் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கே:- உங்களுடன் ம.தி. மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மட்டுமே கூட்டணியில் உள்ளன. ஆனால் தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் இருக்கின்றன. பா.ம.க. வும் சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எனவே அவர்களை எதிர் கொ…

    • 0 replies
    • 568 views
  8. ஆர்எஸ்எஸ் (RSS) குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி முதலில் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி.,யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு கூறினார். "நாம் பள்ளியில் தான் நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்வோம். ஆர்எஸ்எஸ் குறித்து ராகுல் தெரிவித்த கருத்து கண்டிக்கத்தக்கது. எனவே, நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்வதற்காக ராகுல் மீண்டும் பள்ளிக்குச் சென்று பயில வேண்டும்." என்று சித்து கூறியுள்ளார். தடை செய்யப்பட்ட "சிமி" இயக்கத்திற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்று ராகுல் காந்தி கரு…

    • 0 replies
    • 584 views
  9. சீனாவில் ஆட்சியில் இருந்து.. சீன கம்னீசிய அரசை.. எப்போது அகற்றுவது என்று அமெரிக்கா தருணம் பார்த்து காத்துக்கிடக்கிறது. அதற்கு உதவியாக மனித உரிமை மீறல்கள்.. தாய்வான் பிரச்சனை.. தலாய்லாமா தீபத் பிரச்சனை என்பனவற்றை மட்டுமன்றி சீனாவில் ஜனநாயக ஆதரவுக் குரல்களைப் பலப்படுத்துதல் போன்ற காரியங்களையும் செய்து வருகிறது. இவற்றிற்கு உதவியாக சீன எதிர்ப்பு இந்தியாவையும் தாஜா பண்ணி வைத்திருக்கிறது. ஜனநாயக எழுச்சி என்று.. அடிக்கடி.. சீனாவில் வன்முறைகளையும் தூண்டி வருகிறது. இப்போ அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக.. நேட்டோ அங்கத்துவ நாடான நோர்வேயைக் கொண்டு சீன அரசு எதிர்ப்பாளருக்கு சீன அரசின் எச்சரிக்கையையும் மீறி அமைதிக்கான நோபல் பரிசை அளித்திருக்கிறது அமெரிக்கா. ஏலவே சீன ஆதரவு மிய…

  10. இந்தியாவில் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டிகளில் இப்போது புதிய பிரச்சினையொன்று தலைதூக்கியுள்ளது. விளையாட்டு வீரர்களும்,அதிகாரிகளும் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட கிராமத்தின் கழிவு நீர் வழிந்தோடும் சாக்கடைகள் இப்போது அடைப்பெடுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பாவிக்கப்பட்ட பெருந்தொகையான ஆணுறைகள் மலசல கூடங்கள் வழியாக இந்த சாக்கடைகளுக்குள் வந்துள்ளமைதான்.ஆரம்பத்தில் இங்கு டெங்கு நுளம்பு மற்றும் பாம்புகளின் ஆபத்துகூட இருந்தது. அவற்றையும் மீறியே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. முதல் வாரத்திலேயே ஆயிரக்கணக்கான ஆணுறைகள் சாக்கடைகளை அடைத்துள்ளதால் இப்போது அவற்ற…

  11. கனடாவை நோக்கி அகதிகளுடன் இன்னும் ஒரு கப்பல்? டொரன்டோ: இலங்கை தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு இன்னும் ஒரு கப்பல் கனடாவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் ஈழத்துக்கான இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் [^] ஆயுதங்களை மவுனித்த பிறகு, இங்கையில் தமிழர் வாழ முடியாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வாழப் பிடிக்காமல், தோணிகள், படகுகள், சிறுகப்பல்களில் வேறுபகுதிகளுக்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். பிழைப்புக்காகச் செல்லும் இவர்களை, "விடுதலைப் புலிகளாக இருக்கக் கூடும், எச்சரிக்கையாக இறுங்கள்" என இந்தியா [^] எச்சரிக்கை அனுப்பியுள்ளதால், பக்கத்து நாடுகள் எவையும் அவர்களை ஏற்க மறுக்கின்றன. எனவே கனடா, நிய…

  12. இலங்கை தமிழர்களுக்கான ஒரு நபர் அறிக்கையின் நிலை என்ன? ஜெயந்தி நடராஜன் பதில் இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக ஒரு நபர் குழு தனது அறிக்கையை தீவிரமாக தயாரித்து வருகிறது என, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார். முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சந்தித்தார். இச்சந்திப்புக்கு பின்னர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை அளித்து விட்டதா? பதில்: ஒரு நபர் குழு தனது அறிக்கையை தீவிரமாக தயாரித்து வருகிறது. அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிட…

    • 0 replies
    • 592 views
  13. யாரோ பொருளீட்டுவதாற்காக …….. சொந்த பணத்தில் திருவிழா நடத்திய ரசிகர்கள். படம்-1 – நடிகர் ரஜினி கட்டவுட்டிற்கு அபிஷேகம் செய்ய ஊர்வலமாக பால்குடம் எடுத்துச் சென்ற ரசிகைகள். படம்-2 – உயிரை துச்சமென மதித்து 80 அடி உயரம் சென்று ரஜினியின் கட்டவுட்டிற்கு மாலை அணிவிக்கும் ரசிகர் படம்-3- அதிகாலை 5 மணிக்கே தியேட்டரில் இடம்பிடித்த ரசிகர்கள் படம்-4 - எந்திரன் வெள்ளி விழா காண வேண்டுதல். http://nkl4u.in/?p=4337

  14. ''என் கிணத்தை காணாம்.. என் கிணத்தை காணாம்..''! மதுரை: காணமல் போன கிணற்றை கண்டுபிடித்து தருமாறு சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு [^] தாக்கல் செய்துள்ளார். நடிகர் வடிவேலு ஒரு படத்தில் தனது கிணற்றை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்ற காமெடி காட்சி வரும். அதை மக்களும் ரசித்து சிரித்தனர். ஆனால், நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் [^] திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியில் நடைபெற்றுள்ளது. சின்னுப்பட்டிச் சேர்ந்த பாஸ்கரன் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா கோம்பைபட்டி பஞ்சாயத்துக்…

  15. ஐக்கிய நாடுகள் சபையின் 65வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் இருக்கும் புகைப்படமொன்று நேற்றைய தினம் இலங்கையின் பிரதான பத்திரிகைகள் சிலவற்றில் வெளியிடப்பட்டன. ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட தனது பரிவாரங்களுடன் நாடு திரும்பி நான்கு நாட்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் இவ்வாறான புகைப்படம் வெளியிடப்பட்டமை ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புகைப்படத்தில் காணப்படும் சில யதார்த்தத் தன்மை மேலும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. அத்துடன், ஜனாதிபதியும், பராக் ஒபாமாவும் சந்தித்ததாக எந்த ஊடகங்களும் செய்திகளை வெளியிடவில்லை. அப்படியான சந்திப்புக்கள் இடம்பெற்றிரு…

    • 0 replies
    • 563 views
  16. இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 17 மாதங்களுக்கு முன்பு விடுதலைப்புலிகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. எனினும் இந்தியாவில் அந்த இயக்கத்தின் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகளிடம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், விடுதலைப்புலிகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த அமைப்பின் தீவிரம் இன்னும் இருந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே அதன் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு ந…

  17. http://www.youtube.com/watch?v=wFGaD1IWspY&feature=player_embedded

  18. ரசிக மனநிலையிலிருந்து பைத்திய மனநிலைக்கு தமிழ்நாட்டு இளைஞர்களை சன் குழுமம் உசுப்பேற்றி விட்டுக்கொண்டு இருக்கிறது. தன் படம், வியாபார ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று ஒரு முதலாளியின் இயல்பாக இருக்கும் வேட்கையும், வேகமும் இங்கே வெறியாக மாறிவிட்டது. சகல நியதிகளையும், மாண்புகளையும் கிழித்தெறியும் அதன் அகோரப்பசியை ‘வியாபார உத்தி’ என்று சொல்வதற்கும், பாராட்டுவற்கும் ஒரு கூட்டமே இருக்கிறது. ‘சினிமாதானே, ஏன் இவ்வளவு சீரியஸாகிறீர்கள்’ என்கிறார்கள். ‘பொழுதுபோக்குக்குத்தானே படம், அதுகுறித்து ஏன் கவலைப்படவேண்டும்’ என எதிர்க்குரல்கள் கேட்கின்றன. அதையேத்தான் நானும் கேட்கிறேன். “சினிமாதானே, அதற்கு ஏன் ஆயிரம் பாற்குடங்களும், மொட்டையடித்தல்களும், காவடித்தூக்கல்களும்” என்று. மனத…

  19. ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு எவ்வளவு என்பது நமக்குத் தெரியும்.ஒரு வைரக்கடையின் சொந்தக்காரர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருப்பார் என்பதும் நமக்குத் தெரியும். அப்படியென்றால், நாடு முழுவதும் வைரச் சுரங்கங்களை வைத்திருக்கும் ஒரு நாடு உலகின் கோடீஸ்வர நாடாகத்தானே இருக்கவேண்டும். ஆனால் அந்த நாடு உலகின் மிக ஏழையான நாடுகளில் ஒன்று என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும்.அந்த நாடு ஆப்பிரிக்காவின் இருண்ட நாடுகளில் ஒன்று என்றால் சுலபமாக நம்பி விடுவீர்கள்! ‘அயன்’ திரைப்படத்தில் சூர்யா வைரம் கடத்துவதற்காக ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டிற்குச் செல்வாரே அதே காங்கோ தான் வைரம் கொட்டிக் கிடக்கும் அந்த நாடு. குவிந்து கிடக்கும் வைரத்திற்காகவும், இன்னபிற கனிமங்களுக்காகவும் உள்நாட்டுத்…

    • 0 replies
    • 1.1k views
  20. குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் ஜூனியர் விகடனின் அதிவேக வளர்ச்சியினால் தளர்ந்து போன நக்கீரன் தன்னுடை ரேட்டிங்கை பலப்படுத்தும் விதத்தில் அதனுடைய சமீபத்திய போக்கு மிகவும் மோசமாக போய்விட்டது. வாராவாரம் கடைகளில் மற்றும் சாலைகளில் ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்களை நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால் அதனுடைய தன்மை புரியும். முழுக்க முழுக்க ஆபாசம் நிறைந்த செய்திகளை பச்சையாக படம்போட்டு விளம்பரப்படுத்துகிறது. பேனர்களில் ஒட்டப்படும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் சம்பந்தப்பட்ட செய்திகளினால் மக்கள் ஈர்க்கப்பட்டு அந்த பத்திரிக்கையை வாங்கிப் பார்த்தால் அது முழுக்க முழுக்க இவர்களின் குளிர்சாதன அறையில் எழுதப்பட்ட கற்பனைகளாக இருக்கும். அல்லது இப்படியெல்லாம் அங்கே நடக்கிறது, இங்கே நடக்கிறது …

  21. யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதுவராலயம் திறப்பு ஐப்பசி 21 திகதி யாழ்ப்பாணம் மத்திய வீதியில் ( Main Street ) மூன்று கட்டங்களை இணைத்து இந்த கட்டிடம் திறக்கப்படவுள்ளது. இந்திய வெளிவிகார அமைச்சின் செயலாளர் எஸ். எம். கிருஷ்ணா அவர்களால் திறந்து வைக்கப்படும். http://tamilnet.com/art.html?catid=13&artid=32728

  22. அக்டோபர் 5: 1910 - போர்த்துக்கல் - குடியரசு நாள் 1780 - வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது. 1795 - இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர். 1799 - ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான். 1864 - இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளியினால் சுமார் 60,000 பேர் கொல்லப்பட்டனர். 1978 - ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன்ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார். கிருஷ்ணா வகுந்தவாசன் பற்றி அறிய: http://bit.ly/bxnNlV …

    • 0 replies
    • 453 views
  23. சுமார் 3400 வருடங்கள் பழைமை வாய்ந்த எகிப்திய பேரரசர் ஒருவரின் சிலையின் மேற்பகுதியை தொல்பொருளியல் ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர். இதனை எகிப்திய கலாசார அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் அமெனோடெப் மன்னரின் 4 அடி 3 அங்குலமான இச்சிலையானது கிரனைட் எனப்படும் கல்லினால் உருவாக்கப்பட்டது. இது எகிப்திய கலைச் சிறப்பைப் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிமு 1333 முதல் கிமு 1324 வரை எகிப்தினை ஆண்டதாக கூறப்படும் துட்டன்காமன் மன்னனின் பாட்டனாரே மூன்றாம் அமெனோடெப் மன்னராவார். வரலாற்றுத் தகவல்களின் படி மூன்றாம் அமெனோடெப் மன்னரே எகிப்தில் பாரிய திட்டங்களை முன்னெடுத்தவராகக் கருதபடுகின்றார். மேலும் இவரது காலத்திலேயே எகிப்து தேசம் செல்வச் செழிப்போடு காணப்பட்டதாகவும் கூறப்…

    • 0 replies
    • 431 views
  24. இண்டெல் மற்றும் கொரியா டெலிகொம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தென் கொரியா முழுவதற்கும் வை-மெக்ஸ் எனப்படும் அதிவேக இணையச் சேவையை விரிவுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. இதன் மூலமாக ஆசியாவின் முதல் வை-மெக்ஸ் நாடாக தென்கொரியாவை மாற்றவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதற்கென இண்டெல் நிறுவனம் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது. வைமெக்ஸ் சேவைக்கு இணையான வைப்ரோ சேவையே கொரியாவில் வழங்கப்படவுள்ளது. இச்சேவையின் மூலம் கொரியாவின் 85% இணையப் பாவனையாளர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இச்சேவை கொரியாவின் முக்கிய சில நகரங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

    • 0 replies
    • 466 views
  25. ராமர் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்தவர்களால் ராஜராஜ சோழனின் நினைவிடத்தை கண்டுபிடிக்க முடியாதது ஏன் சென்னை: பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்ததாக கூறப்படும் ராமரின் பிறந்த இடத்தைக் கண்டுபிடித்து விட்டார்களாம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னகத்தையே ஆட்சி புரிந்து வந்த மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த இடத்தையோ, அவனது உடல் புதைக்கப்பட்ட இடத்தையோ, அதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவிடத்தையோ நம்மால் கண்டுபிடிக்க முடியாதது வேதனை தருகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி [^]. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மையில் நடைபெற்ற இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை இணைத்து பார்க்கும்போது, எனக்கு ஒருபக்கம் பிரமிப்பாகவும், பெருமையாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.