Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ‘சிங்கம்’ படத்தின் கதை விவாதம், சென்னையில் நடந்து வருகிறது. ஏப்ரலில் ஷ¨ட்டிங் தொடங்குகிறது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிக்கிறார். ‘காக்க காக்க’ படத்துக்குப் பிறகு மீண்டும் காக்கிச்சட்டை போடுகிறார், சூர்யா. தற்போது ‘அயன்’ படத்துக்கான விடுபட்ட காட்சிகளின் ஷ¨ட்டிங்கில் இருக்கும் அவர், அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டே ‘சிங்கம்’ படத்தில் நடிக்கிறார். இவ்விரு படங்களுக்குப் பின், மிஷ்கின் டைரக்ட் செய்யும் படம், சம்பத் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் என, மேலும் இரு படங்களில் நடிக்கிறார் சூர்யா. http://cinemaseithi.com/index.php?mod=arti...amp;article=429

  2. ரயில் பயணத்தைக் கதைக்களமாகக் கொண்டு நிறையப்படங்கள் வெளிவந்துள்ளன, அந்த வரிசையில் மிக முக்கியமானதொரு படம் John Frankenheimer இயக்கிய The Train, 1964ம் ஆண்டு வெளியான கறுப்பு வெள்ளைப் படமிது, இரண்டாவது உலக யுத்த காலத்தில் புகழ்பெற்ற ஒவியங்களைக் கடத்திச் செல்லும் ஜெர்மனிய ரயில் ஒன்றினை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளபடும் தீவிர முயற்சிகளே படத்தின் கதைக்கரு, 133நிமிஷங்கள் ஒடுகின்ற இப்படத்தில் ரயில் கிளம்பிய மறுநிமிசம் முதல், கடைசிக்காட்சி வரை நம்மால் அடுத்து என்ன நடக்குமென என்று யோசிக்க முடியாது. விறுவிறுப்பான திரைக்கதை என்பது இப்படத்திற்கே பொருத்தமானது, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் திருப்பங்கள், வெற்றி தோல்வி என்று மாறிமாறிச் சுழலும் விதியின் பகடையாட்டம், படம் பா…

  3. பறந்து செல்ல வா - திரை விமர்சனம் காதலே கைகூடாத விளையாட்டுப் பையனை ஒருசேர இரு பெண்கள் காதலித்தால் என்ன ஆகும்? நாயகன் லூத்ஃபுதின் பாஷா விளை யாட்டுப் பிள்ளை. சிங்கப்பூரில் அவ ருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு நண் பர் அறையில் தங்குபவருக்குப் பார்க் கும் பெண்கள் மீதெல்லாம் காதல் பொங்குகிறது. தனது முயற்சிகளில் ‘பல்பு’ வாங்கும் அவரை, ‘உன் முகத் துக்கெல்லாம் காதலா’ என்று நண்பர் கள் கலாய்க்கிறார்கள். நண்பர்களை ஏமாற்ற, முகநூலில் கற்பனைக் காதலியை உருவாக்கி உலவவிடுகிறார். இடையே உண்மையிலேயே அவருக்கு ஒரு காதலி கிடைத்துவிடுகிறார். காதல் சுமுகமாகச் சென்றுகொண்டிருக்கும் போது கற்பனைக் காதலி நிஜமாகவே நேரில் வந்த…

  4. ‘அந்த’ இடத்தில் சத்திர சிகிச்சை செய்துக் கொண்ட அஜித் பட நாயகி திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் தங்களின் அழகை மேலும் அதிகரித்துக் கொள்ள கொஸ்மெடிக் சத்திர சிகிச்சையை செய்து கொள்வார்கள். நடிகை ஸ்ரீதேவி, நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களின் முக அழகிற்கு இடையூறாக இருந்த மூக்கை கொஸ்மெடிக் சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொண்டு நடித்து வருகிறார்கள். அந்த பட்டியலில் தற்போது அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்து வரும் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலும் தன்னுடைய மூக்கை சத்திர சிகிச்சை மூலம் சீராக்கிக் கொண்டிருக்கிறார். இதைப் பற்றி அவர் தெரிவிக்கும் போது, ‘50 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். ரசிகர்களுக்கு என்னுடைய முகம் பிடிக்…

  5. கரகம் என்ற படத்தை தயாரித்த எஸ்.கே.எம்.மீடியா என்ற பட நிறுவனம் அடுத்து தயரிக்கும் படத்திற்கு “அப்பாவுக்கு கல்யாணம்” என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக எம். பாண்டியன் நடிக்கிறார். கதாநாயகியாக ரசிகப்ரியா நடிக்கிறார். மற்றும் எஸ்.எஸ்.மீனாட்சி ,தேவி சரவணன்,சங்கர், கிருஷ்ணமூர்த்தி, அற்புதம், வனிதா ஆகியோரும் நடிக்கிறார்கள். இசை - சார்லஸ்தனா ஒளிப்பதிவு - சி.கணேஷ்குமார் நடனம் - ஜி.சம்பத் , நிர்மல் கலை - ஜி.பாபு தயாரிப்பு நிர்வாகம் - என்.ஜனார்த்தனம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் ஆறுமுகசாமி படம் பற்றி இயக்குனர் ஆறுமுகசாமி..... ஒரு வெட்டியான் தான் ஆசையாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற நினைப்பில் இருக்கிறான்.…

    • 0 replies
    • 591 views
  6. ரஜினியின் வயது 162.. கமலுக்கு 158! ரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. டிசம்பர் 12 ந் தேதி ரஜினிக்கு பிறந்த நாள். அதற்கு முன்னதாக தமிழகமெங்கும் இப்படியொரு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. ரஜினி மட்டுமல்ல, உலகின் முன்னணி பிரபலங்கள் பலரது புகைப்படத்துடன் அவர்களின் வயதை தாறுமாறாக அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த சுவரொட்டியை பார்த்து, ரசிகர்கள் என்னவென்று புரியாமல் வியந்தபடியும் தங்களுக்குள் விவாதித்தபடியும் செல்கிறார்கள். ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு' படத்திற்கான பிரமோஷன் போஸ்டர்தான் அது என்றாலும், படத்தில் இதுகுறித்த விளக்கங்கள் காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தோடு பத்திரிகையாளர்களும் படத்த…

  7. இசைப்பிரியா பற்றிய திரைப்படம் "போர்க்களத்தில் ஒரு பூ" - இயக்குனர் கணேசன் கனடாவில் கலந்துரையாடல் கலந்துரையாடல் [Tuesday, 2014-03-18 20:15:49] ஈழ மண்ணில் ஊடகப்போராளியாய் இருந்து 2009 ஆண்டு இடம்பெற்ற இனவழிப்புப் போரின் பின்னர் சிங்கள அரசினால் கைது செய்யப்பட்டு மிகவும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட ஊடகப்போராளி இசைப்பிரியா பற்றிய திரைப்படம் "போர்க்களத்தில் ஒரு பூ" எனும் பெயரில் உருவாகி வருவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் திரு. கு.கணேசன் அவர்கள், கனடிய மக்களையும், ஊடகங்களையும் சந்தித்து தன்னுடைய திரைப்படம் பற்றி கலந்துரையாட விரும்புவதனாலும், ஈழத்தமிழர்கள் செறிந்து வாழும் கனடிய நாட்டில் திரைப்பட முன்னோட்டக் காட்சி அறிமுகத்தை ச…

  8. ஆனந்தராஜ் முதல் ரவி மரியா வரை... காமெடியன்களாக மாறிய டெரர் வில்லன்கள்! தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது முரட்டு வில்லன்களாக இருந்த சில நடிகர்கள், காலப்போக்கில் காமெடிப் படங்களுக்கு மார்க்கெட்டும் மவுஸும் கூடிக்கொண்டிருப்பதை அறிந்து அந்த ட்ராக்கில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி முரட்டு வில்லன் டு காமெடியன்களாக மாறியவர்கள் யார் யார்? ஒரு சின்ன அலசல்! `நான் கடவுள்' ராஜேந்தர்: சமீபகாலமாக `இவரிடம் கால்ஷீட் வாங்குவதே அபூர்வமாக உள்ளது' என, பல இயக்குநர்கள் தங்களது பேட்டியில் தெரிவித்துள்ளனர். சினிமா துறையில் இவர் முதலில் ஸ்டன்ட்மேனாகத்தான் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். அதற்குப் பிறகு `நான் கடவுள்' பட…

  9. "அடுத்து நான் பாலா படத்தில் நடிக்கிறேன்": 'காலா' ஈஸ்வரி ராவுடன் பிரத்யேக நேர்காணல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு மூலம் தமிழ் சினிமாவில் காலா படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி ஆகியுள்ளார் ஈஸ்வரி ராவ். குறிப்பாக, மிகப் பெரிய இடைவெளிக்கு பிறகான இந்த முதல் படத்திலேயே ரஜினியின் மனைவியாக நடித்து பாராட்டுகளையும் பெற்…

  10. பட மூலாதாரம்,SRI VENKETESWARA CREATIONS கட்டுரை தகவல் எழுதியவர்,சாஹிதி பதவி,பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அபிஞான சாகுந்தலம் என்பது காளிதாசரால் எழுதப்பட்ட ஒரு காதல் நாடகம். சிறந்த கவிதைகளை கொண்டுள்ள இந்த படைப்பிற்கு இலக்கிய உலகில் முக்கிய இடம் உள்ளது. அபிஞான சாகுந்தலத்தில் காதல் இருக்கிறது, விரகம் இருக்கிறது. இது வேதத்தில் உள்ளது. குழந்தைக்காக ஏங்கும் தாயின் ஏக்கம் இருக்கிறது. பெண்களின் அதிகாரம், சுயமரியாதை போன்றவையும் இந்த காவியத்தில் உள்ளன. தெலுங்கில் ஹிட் அடித்த ஒக்குடு, ருத்ரமாதேவி போன்ற படங்களை இயக்கிய குணசேகர் தற்போது இந்த காவியத்தை திரைப்படமாக்க முயன்றுள்ளார். …

  11. 'வீராப்பு' படத்தில் சுந்தர் சி. யுடன் நடித்துக் கொண்டிருந்தார் கோபிகா. மலையாளத்தில் ஊர்வசி நடித்த வேடமாக்கும் என்ற பெருமை முகத்தில் தெரிந்தது. "இந்த வருஷம் எனக்கு ரொம்ப நல்லா தொடங்கியிருக்கு" என்றார் தனது பச்சரிசி பற்களை காட்டி. இவர் மம்முட்டியுடன் இணைந்து நடித்த 'மாயாவி' படமே இந்த வருடத்தின் மெகா ஹிட். சென்னையிலும் ஹவுஸ்புஃல்லாக ஓடுகிறது படம். மம்முட்டி, மோகன்லால், சுந்தர் சி. என முதிர்ந்த நடிகர்களுடன் நடிப்பது ஏன் என்று கேட்டதற்கு, அவங்கயெல்லாம் பெரிய நடிகர்கள் என்றார். மேலும், கதையையும் கேரக்டரையும் பார்ப்பேனே தவிர கதாநாயகனின் வயசை பார்க்க மாட்டேன் என்றார். 'வீராப்பு' படத்தில் கோபிகாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து டெவலப் செய்திருக்கிறார்க…

  12. 'இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உங்கள் இரவுகளை ரணமாக்க வருகிறார்கள்' இப்படி மிரட்டுவது நாமல்ல. திக் திக் பட அழைப்பிதழ்தான் அக்கா புருஷன் மீது தங்கை ஆசைப்படுவதாக கதை சொன்ன 'கலாபக் காதலன்' படத்தை எடுத்து பரபரப்பூட்டிய இகோர் அடுத்து பயமுறுத்தும் படம்தான் 'திக்..திக்..' தலைப்பிலேயே திரில்லர் சஸ்பென்ஸ் தெரியும்போது கதைக்கருவைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. பாக்யராஜின் மகள் சரண்யாவும், மும்தாஜும்தான் நாயகிகள். நாயகனாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். குரு.முனீஸ்வரன் தயாரிப்பில் உருவாகவுள்ள 'திக்திக்'ல் இமான் இசையமைக்க, சண்டோனியோ ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள பழைய பிள்ளையார் கோவிலில் இன்று காலை நடந்தது. பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, த…

    • 0 replies
    • 828 views
  13. மேலும் புதிய படங்கள்மருமகள் ஐஸ்வர்யா ராயின் பெயரில் அமையவுள்ள மகளிர் கல்லூரிக்கு மாமனார் அமிதாப்பச்சன் அடிக்கல் நாட்டினார். உ.பி. மாநிலம் பாரபங்கியில் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் புதிய மகளிர் கல்லூரியை அமிதாப் பச்சன் கட்டுகிறார். இக்கல்லூரிக்கு ஐஸ்வர்யா பச்சன் மகளிர் கல்லூரி என பெயரிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி அமையவுள்ள நிலம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் கடந்த 2 மாத காலமாக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது தாமதமாகி வந்தது. சமீபத்தில் அமிதாப்புக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முடுக்கி விட்டார் அமிதாப். நேற்று அடிக்க…

  14. சிம்பு வெளிநாடு தப்பிக்காமல் இருக்க விமான நிலையங்கள் உஷார்: பாஸ்போர்ட் முடக்கம்? சென்னை: நடிகர் சிம்பு வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாமல் இருக்க, முக்கிய விமான நிலையங்களை போலீசார் உஷார்படுத்தி உள்ளதுடன், சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத்துடன் சேர்ந்து உருவாக்கிய பீப் பாடல், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிம்பு, அனிருத் மீது பல்வேறு மாவட்டங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிம்பு மீது வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், அவரை கைது செய்வதற்காக, 5 த…

  15. சினிமா வாழ்க்கையில் எவருடைய உதவியும் இல்லாமல் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நம் தல அஜித். முதல் முறையாக தனது மனதில் இருக்கும் ஆதங்கங்களை ஆனந்த விகடன் வார இதழிற்கு பேட்டியாக கொடுத்துள்ளார். அதில் இருந்து சில முக்கிய பகுதிகள்: செல்ப் புரமோஷன் கிடையாது... 'நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா௨'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!' மனதை பாதித்த விமர்சனம்... 'படம் நல்லா இருக்காஇ இல்லையானு சொல்லாமஇ சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு …

  16. ‘வில்லு’ ஷ¨ட்டிங்கிற்காக நேற்று, சுவிட்சர்லாந்து சென்றுள்ள விஜய், அடுத்து 2 படங்களில் நடிக்கிறார். ஒன்று ஏவி.எம் பாலசுப்ரமணியம் தயாரிக்கும் படம். அடுத்து அவர் நடிக்கும் 50-வது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் வி.வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் முடிவாகவில்லை. தற்போது வி.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பந்தயம்’ தயாராகி வருகிறது. வில்லு படம் நடித்து முடிந்தவுடன் அடுத்த படம் பற்றி அறிவிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=250

    • 0 replies
    • 773 views
  17. நடுத்தர குடும்பத் தலைவரான நெடுமுடி வேணுக்கு, தன் ரிட்டயர்மென்ட் மூலம் கிடைத்த பணத்தில் வீடு கட்ட ஆசை. 30 லட்ச ரூபாய் கொடுத்து சென்னை புறநகர் பகுதியில் ஒரு கிரவுண்ட் நிலம் வாங்குகிறார். அதை ஆக்கிரமித்துக் கொள்ளும் ரியல் எஸ்டேட் தாதா நாசர், ரூ. 15 லட்சம் கொடுத்தால்தான் காலி செய்வேன் என்கிறார். சட்டமும், போலீசும் நாசருடன் பேசி முடிக்க கமிஷன் பேசுகிறதே தவிர, நியாயம் பேச மறுக்கிறது. மேலும் போலீஸ், ஜெயில் என்று வேணுவை அவமானப்படுத்து கிறது. வெறுத்துப்போகும் வேணு, அந்த நிலமே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். ஆனால் மகன் கார்த்திக், தனது வெளிநாட்டு சாப்ட்வேர் வேலை கனவை துறந்துவிட்டு, தன் காதலி பியா பணியாற்றும் நாடக கம்பெனியுடன் இணைகிறார். நாசர், பிறரை ஏமாற்றி நிலம் பறிக்கும் அ…

  18. சிவாஜி, ரஜினி, விஜய்க்கு திரைக்கு பின் நடந்த கதை! சினிமா... அன்றும், இன்றும் மக்களின் பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாகவே இருந்துவருகிறது. 'கடவுள் யாரது, யார் பார்த்தார்... அதைக் கண்ணில் காட்டியது இந்த சினிமாதான்'. சினிமாவை ஒரே வரியில் இப்படித்தான் வர்ணிக்க முடியும். சினிமா ஏன் இப்படி மெச்சப்படுகிறது... தமிழ் சினிமாவின் பெரிய சாதனையாளர்கள் எப்படி உருவானார்கள்... இன்றைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது... இவற்றை மூன்று பதிவுகளாகக் காணலாம், முதல் பதிவு இதோ! சினிமாவில் நுணுக்கமான விஷயங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அவை எல்லாமே ஒன்றிணைந்து அழகாய் வெளிவரும்போதுதான் முழுமையான சினிமாவாகிறது. காதல…

  19. ட்ரெண்டிங்கில் லீனா மணிமேகலை : என்ன காரணம்? மின்னம்பலம்2022-07-04 சமூகத்தின் அவல நிலையை அப்பட்டமாகத் தோலுரிக்கும் படங்கள் எடுப்பதில் பெயர் போனவர் லீனா மணிமேகலை. தற்போது அவர் இயக்கி நடித்திருக்கும் காளி என்ற ஆவணப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ட்விட்டரில் #ArrestLeenaManimekalai என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் கவிஞர், திரைப்பட இயக்குநர், சமூக செயற்பாட்டாளர், பெண்ணியவாதி எனப் பல தளங்களில் இயங்கக்கூடியவர் லீனா மணிமேகலை. இவர் தனது தேவதைகள், பறை, பலிபீடம் போன்ற ஆவணப் படங்களுக்காக பாராட்டப்பட்டவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த செங்கடல், மாடத்தி போன்ற திரைப்படங்கள் பார்வையாளர்களிடையே கவனம் பெற்றது. …

  20. சினிமாவில் அறிமுகமான சிவகுமாரின் மற்றொரு வாரிசு!!! நடிகர் சிவக்குமாரின் மகளும், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான திருமதி பிருந்தா பின்னணி பாடகியாக திரைதுறையில் அறிமுகமாகியிருக்கிறார். கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், மைம் கோபி, விஜி சந்திரசேகர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் "மிஸ்டர் சந்திரமௌலி", திரு, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு "விக்ரம் வேதா" புகழ் சாம் சி .எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், திருமதி பிருந்தா அவர்கள் கடவுள் வாழ்த்து பாடுவார் என்…

  21. லியோ படத்தில் கை வைத்த சென்சார்! விஜய் நடித்துள்ள லியோ படத்தில் இடம்பெற்றுள்ள நா ரெடி பாடலின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலின் சில வரிகளை சென்சார் போர்டு நீக்கியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் சர்ச்சை வருவதற்கு முன்பு பாடல் வரிகளை சென்சார் போர்டு ஏன் நீக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அக்டோபர் 19 ஆம் தேதி லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. …

  22. திரை விமர்சனம்: ஈட்டி உடலில் சிறு காயம் பட்டாலும் ரத்தம் உறையாமல் வடிந்து கொண்டே இருக்கும் பிரச்சினை கொண்ட ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் ‘ஈட்டி’. புகழேந்தி (அதர்வா) தஞ்சாவூரில் கல்லூரி மாணவர். தடை ஓட்ட வீரரான அவர் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்று தயாராகிவருகிறார். அவருக்கு ரத்த உறைவின்மை நோய் இருப்பது சிறு வயதிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. மகனின் உடலில் சிறு காயம்கூடப் பட்டுவிடக்கூடாது என்று பார்த்து பார்த்து வளர்க்கிறார், காவல் துறையில் வேலைபார்க்கும் அப்பா ஜெயப்பிரகாஷ். இதற்கிடையில், சென்னையில் படித்துவரும் நாயகி காயத்ரி (ஸ்ரீதிவ்யா) யாரையோ திட்டுவதற்குப் பதில் தவறுதல…

  23. இலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்! ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பராசக்தி’. இயக்குனர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகிவரும் இத் திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி மற்றும் மதுரையில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் சுதா கொங்கரா உள்ளிட்ட படக்குழு இலங்கை வருகைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsஇலங்கைக்கு வருகை தந்த சிவகார்த்திகேயன்!'அமரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் நடிப…

  24. [size=4]தாண்டவம் கதைத் திருட்டும் - சில அந்தர் பல்டிகளும் தாண்டவம் கதைத் திருட்டு கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இயக்குனர்கள் சங்கம் என்ற சினிமா சங்கத்தில் இயக்குனர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் இடையே உள்ள ஆழமான பிளவை இந்த விவகாரம் மேலே கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சனையை முன்னிறுத்தி மேலும் பல பிரச்சனைகள் வெளிவரவும், அலசப்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு பிள்ளையார் சுழிபோட்ட தாண்டவம் கதைத் திருட்டு குறித்துப் பார்ப்போம். ராதாமோகனின் உதவி இயக்குனரான பொன்னுசாமி பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவரைப் பற்றிய கதையை தயார் செய்து யு டிவி தனஞ்செயனிடம் கூறியிருக்கிறார். கதையை கேட்டவர் அப்புறம் பார்க்கலாம் என்று வழியனுப்பியிருக்கிறார். கவனிக்கவும், கதை நன்றாக…

  25. போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ஸ்டைலில் அறிவுரை கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.