Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 5ம் தேதி ரஜினி இமயமலை பயணம் மேலும் புதிய படங்கள்சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் 5ம் தேதி இமயமலை செல்கிறார். இரண்டு வாரங்கள் அவர் அங்கு தங்கியிருப்பார். வழக்கமாக ஒரு படம் முடிந்தவுடன் ரஜினி இமயமலைக்கு போய் விட்டு வருவார். இந் நிலையில் இப்போது பி.வாசுவின் இயக்கத்தில் குசேலன் படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மாதம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் 2வது கட்ட படப்பிடிப்பு நடந்தது. இப்போது குசேலனின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள குட்டநாடு பகுதியில் நடந்து வருகிறது. http://thatstamil.oneindia.in/movies/heroe...-on-june-5.html அங்கு நயன்தாரா, மம்தா மோகன்…

  2. எழுதியவர்: இரவி அருணாசலம் முழுதாக ஒரு மூன்று கிழமை தமிழ்நாட்டில் தங்கியிருந்தேன். சென்றதற்கு ஒரு நோக்கம் இருந்தது. `ஈழத்தமிழருக்கான ஒரு சினிமாவை கண்டடைதல்' என்கிற நோக்கம். இதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றுயாரும் கேட்டால் என்ன பதில் சொல்வேன்? சினிமா ஆர்வலன் அவ்வளவும் தான் சொல்ல முடியும்?. ஈழத்துத் தமிழ்ச் சினிமா தொடர்பான அக்கறையும் ஒரு காரணம் என்பேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் ஈழத்துத் தமிழ்ச் சினிமா குறித்து ஈழமுரசு பத்திரிகையில் `செல்லும் வழி இருட்டு' என்று தொடர் கட்டுரை எழுதினேன். அதில்பலதும் பற்றித் தொட்டிருந்தேன். எனது இந்த பயணத்துக்கு அந்தக் கட்டுரையும் ஒரு காரணம். ஈழத்து தமிழ்ச் சினிமாவைக் கண்டடைவதற்கு ஏன் தமிழ்நாடு என்ற ஒரு கேள…

  3. பார்ட்டிக்குப் போவதில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்கிறார் திரிஷா. தென்னிந்திய கனவு தேவதை என ரசிக, ரசிகையரால் பட்டம் சூட்டப்பட்டுள்ள திரிஷா, தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜோடி படத்தில் சிம்ரனுடன், வந்த தோழியர் கூட்டத்தில் ஒருவராக இடம் பெற்றிருந்த திரிஷா, இன்று தென்னிந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரினிகளில் ஒருவர். தற்போது கெளதம் மேனனின் சென்னையில் ஒரு மழைக்காலம், சர்வம், அபியும் நானும் என பிசியாக இருக்கிறார் திரிஷா. சமீபத்தில் திரிஷா அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு தமிழை விட தெலுங்குதான் சிறப்பாக அமைந்துள்ளது. அங்குதான் எனது திறமைக்கேற்ற, கேரக்டருக்கேற்ற படங்கள் கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் நான் நடிப்பை ச…

  4. லேட்டஸ்ட் மேக்ஸிம் பரபரப்பாக மாறியுள்ளார் டிவி நடிகை ஷ்வேதா சால்வே. வர வர மேக்ஸிம் இதழில் அரைகுறை போஸ் கொடுப்பதற்கு பாலிவுட்டில் பெரும் போட்டியே ஏற்பட்டு வருகிறது. லேட்டஸ்டாக புது கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார் டிவி நடிகை ஷ்வேதா சால்வே. இவர் கொடுத்துள்ள பிகினி உடை போஸ்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இப்படிப்பட்ட போஸ்களைக் கொடுத்தது தனக்கு எந்த வகையிலும் அவுசகரியமாக இல்லை என்று கூலாக கூறியுள்ளார் ஷ்வேதா. சோனி டிவியில் ஒளிபரப்பான ஜலக் திக்லா ஜா என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் ஷ்வேதா சால்வே. அந்த ஷோவில், ஷ்வேதாவின் கவர்ச்சிகரமான ஆட்டம் இந்தி ரசிகர்களிடையே ரொம்பப் பிரபலம். இந்தியத் தொலைக்காட்சியின் செக்ஸ் சைரன் என்ற பெயரும் ஷ்வ…

  5. பி.யூ.சின்னப்பா - வாழ்க்கை குறிப்பு சின்னப்பாவின் பூர்வீகம் புதுக்கோட்டை ஆகும். உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும். சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பா முயற்சி எதுவுமின்றியே 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார். சிறு வயதிலேயே பல வேடங்களில் நடித்து ரசிகர்களை அசர வைப்பாராம். சதாரம் நாடகத்தில் அவர் குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். தம் தந்தை நாடகத்தில் பாடி வந்த பாட்டுகளையெல்லாம் சின்னப்பா பாடிக்கொண்டிருப்பாராம். அத்துடன் புதுக்கோட்டையில் நடந்த பஜனைகளில் அவர் அடிக…

    • 0 replies
    • 711 views
  6. 100வது திரைப்படம் திரையுலகத்தை பொறுத்த வரை நடிகராக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி 100 படங்கள் நடிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கும். இப்படி இலட்சிய பயணம் மேற்கொண்டு 100 படங்களை தொட்ட உங்கள் அபிமான நட்சத்திரத்தில் 100வது படம் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் திரைப்படங்கள் சிவாஜிகணேசன் - நவராத்திரி எம்.ஜி.ஆர் - ஒளிவிளக்கு ஜெமினி கணேசன் - சீதா ரஜினிகாந்த் - ஸ்ரீராகவேந்திரா கமல்ஹாசன் - ராஜபார்வை ஜெய்சங்கர் - இதயம் பார்க்கிறது சிவக்குமார் - ரோசாப்பூ ரவிக்கைக்காரி விஜயகாந்த் - கேப்டன் பிரபாக…

    • 6 replies
    • 3k views
  7. Started by Vasampu,

    முதல் படம் தமிழ் திரையுலகின் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் முதன் முதலில் மின்னிய திரைப்படம் பற்றி விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் - நடிகைகள் எம்.ஜி.ஆர் - சதிலீலாவதி , மனோரமா - மாலையிட்ட மங்கை சிவாஜிகணேசன் - பராசக்தி , கோவை சரளா - முந்தானை முடிச்சு ஜெமினிகணேசன் - ஒளவையார் , சாவித்ரி - பாதாள பைரவி எஸ்.எஸ்.ஆர் - பராசக்தி , பத்மினி - கல்பனா முத்துராமன் - அரசிளங்குமரி , சரோஜாதேவி - தங்கமலை ரகசியம் ஏவி.எம்.ராஜன் - நானும் ஒரு பெண் , சவுகார் ஜானகி - வளையாபதி சிவகுமார் - காக்கும் கரங்கள் , கே.ஆர்விஜயா - தங்க ரத்தினம் ஜெய்சங்கர் - இரவும் ப…

  8. முன்னாள் நடிகை ரவளிக்கு பெண் குழந்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் ரவளி. விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தவர். ரவளிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த நீலிகிருஷ்ணாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பின்னர் நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு ஹைதராபாத்தில் கணவருடன் வசித்து வந்தார். இந் நிலையில், ரவளிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. நன்றி தற்ஸ் தமிழ்

  9. தொடர்ந்து பரபரப்பாகவே பேசப்படும் நடிகை நக்மா... நிறைய காதல் கிசுகிசுக்கள், தற்கொலை முயற்சி என்ற செய்தி, கிறிஸ்துவ மதத்துக்கு மாறினார் என்று புது சர்ச்சை. இப்படி தொடர்ந்து செய்திகளில் அடிபட்டுக்கொண்டிருக்கும் நக்மாவிடம் கேட்ட சிக்கலான கேள்விகளுக்குக் கூட சிரிப்புடன் பதில் சொல்கிறார். தொடர்ந்து உங்களைப் பற்றி கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கிறதே? ``எங்கேயிருந்துதான் இந்த மாதிரி செய்திகள் கிளம்புதுன்னு தெரியலை. என்னைப்பற்றி நிறைய சர்ச்சைகள் தொடர்ந்து எழுதிகிட்டுதான் இருக்காங்க. ஆனா எதுக்குமே யாரும் எங்கிட்ட பதில் கேட்பது கிடையாது. நானும் மீடியாவுக்கு ரொம்ப பேட்டி கொடுத்ததில்லை. நான் பேசாம இருந்ததுனாலதான் என்னைப் பற்றி வரும் செய்திகள் உண்மைன்னு நினைச்சிடுறாங்…

  10. உலக நாயகன் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் படத்தை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பார்ப்பதற்கு வசதியாக, ஆங்கில சப் டைட்டிலுடன் அவருக்கு அனுப்பி வைக்கவுள்ளனராம். பெரும் பொருட் செலவில், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள தசாவதாரம் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜாக்கி சானை வரவழைத்து ஆடியோ வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடத்தினர். இப்படத்தில் ஆசின், மல்லிகா ஷெராவத், ஹேமமாலினி, ஜெயப்பிரதா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகர் நெப்போலியன் முக்கிய வேடம் ஏற்றுள்ளார். கமல்ஹாசன் போட்டுள்ள பத்து வேடங்களில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் வேடமும் ஒன்று. இதுதவிர 8 அடி உ…

  11. Started by Vasampu,

    நீயா?? நானா?? தமிழகத்தில் பல தொலைக்காட்சிகள் இயங்கினாலும் தனது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் விஜய் தொலைக்காட்சியினர். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளையே, தமது தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளாக வேறு பெயரில் மற்றைய தொலைக்காட்சியினர் நடாத்துகின்றனர். பொதுவாகவே தொலைக்காட்சியில் தொடர்களையே பார்த்துப் பார்த்து அலுத்துப் போன நமக்கு விஜய் தொலைக்காட்சியின் இந்த வித்தியாசமான கலந்துரையாடல் நிகழ்ச்சி மனதைக் கவருகின்றது. சமுதாயத்திலுள்ள பல பிரைச்சினைகளை, பிரைச்சினைகளோடு சம்மந்தப்பட்டவர்களையே கருத்துக் கூற வைத்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வர வைக்கின்றார்கள். இதன் மூலம் பல தவறான அபிப்பிராயங்களை இனம் கண்டு அவர்களால் மாற்றிக் கொள்ள முடிகின்றது. …

    • 9 replies
    • 2.5k views
  12. மூ‌ன்றே ப‌ட‌ங்க‌ள். மூலை முடு‌க்கெ‌ல்லா‌ம் அ‌வ‌ர் பெய‌ர் சொ‌ன்னா‌ல் அ‌ப்படியொரு ம‌ரியாதை. இர‌ண்டு வருடமாக எடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌லு‌ம் நா‌ன் கடவு‌ள் பட‌த்து‌க்கு மவுசு ஏறு‌கிறதே த‌விர, பழமை தூசு படியவே‌யி‌ல்லை. ரு‌த்ரனாக ‌‌நீ‌ண்ட தலைமுடி தாடி‌யி‌ல் ஆ‌ர்யா. கறு‌ப்பு கலவையாக பூஜா அ‌ம்சவ‌ல்ல‌ி எனு‌ம் அழு‌த்தமான கேர‌க்ட‌ரி‌ல். இசை‌க்கு இளையராஜா. இமை மூடி ரச‌ி‌த்தா‌ல் இமையோர‌ம் ‌நீ‌ர் க‌சியு‌ம் இசை‌‌த் தாலா‌ட்டு. ‌ஒ‌வ்வொரு அடி‌க்கு‌ம், இதய‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல் உறையு‌ம் ‌ஸ்‌ட‌ன்‌ட் ‌சிவா‌‌வி‌ன் ச‌ண்டை‌ப் பய‌ி‌ற்‌சி. கா‌சியையு‌ம், தே‌னியையு‌ம் அத‌ன் யதா‌ர்‌த்த‌ம் குலையாம‌ல் கா‌ட்டு‌ம் ஆ‌ர்த‌ர் ‌வி‌ல்ச‌னி‌ன் கேமரா. ‌பிர‌‌மி‌ட் சா‌ய்‌மீரா‌வி‌ன் தயா‌ரி‌ப்‌பி‌ல்…

  13. தமிழ் திரையுலகின் பெரும்பாலான குட்டி நடிகர்கள் தங்களது சம்பளத்தை படு உயரத்திற்குக் கொண்டு போயுள்ளனராம். இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்த் திரையுலகில் முன்பெல்லாம் உச்ச நடிகர்களின் சம்பளம்தான் மகா உயரத்தில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் ஒரு படம் நன்றாக ஓடி விட்டாலே உடனடியாக சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விடுவது வழக்கமாகி வருகிறது. ஒரே ஒரு படத்தில்தான் நடித்துள்ளார் கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட வினய். உன்னாலே உன்னாலே படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ஜஸ்ட் 3 லட்சம்தான். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ஜெயம்கொண்டான் படத்தில் அவரது சம்பளம் ரூ. 9 லட்சமாகும். அடுத்த படத்திற்கு இந்த சம்பளம் கிடையாதாம். ரூ. 75 லட்சம்தான் இனி அவரது சம்பளமா…

    • 3 replies
    • 1.4k views
  14. மேலும் புதிய படங்கள்கோலிவுட்டின் 'கிளாமர் சைக்லோன்' நமீதாவுக்கு திருமணமாகிவிட்டதாக பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது. நமீதாவிவின் கவர்ச்சியை விட இந்த மேட்டர்தான் இப்போது படு ஹாட் ஆக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து நமீதாவே தனது வாயால் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: எப்போதும் பரபரப்பான செய்தி வளையத்துக்குள்ளேயே இருக்கும் முயற்சிதான் உங்களை இப்படியெல்லாம் குறைந்தபட்ச உடையில் வலம் வர வைக்கிறதா? என்ன உடை போட்டுக் கொள்வது என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு இம்மாதிரி குறைந்த உடையில் வருவதுதான் பிடிச்சிருக்கு. வசதியாவும் இருக்கு. புடவை கட்டினால் கசகசவென்று என்னை ரொம்ப கஷ்டப்படுத்துது. ஆனால் இதுக்காக நீங்கள் எல்லாம் ஏன் இவ்வளவு கஷ்டப்…

    • 9 replies
    • 2.1k views
  15. கேள்விக்குறி கேள்விக்குறி என்ற தமிழ்த் திரைப்படமொன்றை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. சிலவிதங்களில் என்னை அது கவர்ந்திருந்தது. ஆனால் இப்படம் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளில் இப்படம் பற்றி ஒரிடுகைகூட வந்திருக்கவில்லையென்றே கருதுகிறேன். அதிகம் பேசப்படாமற்போன ஒருபடம். ஆனால் தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்தவற்றுள் கவனிக்கத்தக்க படம் என்றே கருதுகிறேன். படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை. ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுக…

    • 0 replies
    • 791 views
  16. மாமதுரையில் அறிமுகமாகி தற்போது தீயவன் படத்தில் நாயகியாக நடித்து வரும் மிதுனாவுக்கு படப்பிடிப்பின்போது கால் தடுமாறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது. மாமதுரை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் மிதுனா. அதன் பின்னர் தற்போது தீயவன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் இரு நாயகர்கள். ஒருவர் உதய், இன்னொருவர் ரஞ்சன். சென்னையில் இந்த மூன்று பேரும் பங்கேற்ற பாடல் காட்சியை சமீபத்தில் படமாக்கினர். அப்போது டான்ஸ் ஒத்திகையில் மிதுனா பங்கேற்றார். அந்த சமயத்தில், திடீரென ஸ்லிப் ஆகி கீழே விழுந்தார். இதில் காலில் அடிபட்டது. வலியால் துடி துடித்தார் மிதுனா. உடனடியாக டாக்டர்களிடம் கூட்டிச் சென்றனர். மிதுனாவுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது காலில் எலும்பு மு…

    • 4 replies
    • 1.7k views
  17. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் தறுதலை மகன். கரித்து கொட்டிக் கொண்டேயிருக்கும் கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார் அப்பா. பாசமான அம்மா. அப்பாவுக்கு அடங்கி ஒடுங்கி நல்ல பெயர் எடுத்துவாழும் அண்ணன். மூன்று தங்கச்சிகள். தறுதலைக்கு ஒரு காதல். பொறுக்கி நண்பர்கள் என்று 1990களின் ஃபார்முலாவைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ‘பாண்டி'. லாரன்ஸ் முரட்டுக்காளை காலத்து ரஜினியை அப்படியே உல்டா அடிக்கிறார். நடை, உடை, சிரிப்பு, அழுகை, காதல் எல்லாவற்றிலும் ரஜினிதான் தெரிகிறார். அது போதாதென்று 'ஒரு கூடை சன்லைட்' பாணியில் ஒரு பாட்டு + நடனம். தர்மதுரை ‘மாசி மாசம்' பாடலின் ரீமிக்ஸ். இதுவரை ரஜினியை இமிடேட் செய்தவர்களில் இவருக்கு தான் நெ.1 இடம். மாருதியின் ஓவியங்களில் வரும் அழகுப்பெண்களை போ…

  18. அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் விரிந்து கிடக்கும் சாமியார்களின் சாம்ராஜ்ஜியத்தில் வெளியே தெரியாத மர்மங்கள் பல பல! வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது மாதிரி எல்லா மாநிலங்களிலும் சாமியார்களை நம்பி மோசம் போன வி.ஐ.பி கள் நிறைய! இந்த வலையில் பெரும்பாலும் நடிகைகள் விழுந்து கிடப்பது மீடியாவுக்கும் பெருந்தீனியாக இருக்கிறது. சமீபத்தில் கேரள சாமியார் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனில் நிருபர் ஒருவரை சுட்டுத் தொலைக்க ஏக களேபரம். இவரை தோண்டி துருவி விசாரித்தபோதுதான் 'அந்த' தகவலை கக்கியிருக்கிறது சாமி. பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் சாமியார் நடத்திய நிர்வாண பூஜையில் கலந்து கொண்டாராம். முதலில் தயங்கிய இவரை முன்னணி நடிகையாக வேண்டாமா? என்று ஆசைகாட்டி அரை நிர்வாணமாக்கியதாக செய்தி சொல்கின்றன …

  19. இன்று தமிழ் தொலைக்காட்சிகளில் சினிமா.சினிமா..சினிமா. 'சினிமாவைத் தவிர வேறொன்றும் தெரியாது பராபரமே!' என்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். சினிமாவை விட்டால் வருடக்கணக்கில் நீளும் அரைத்த மாவையே அரைக்கும் நெடுந்தொடர்கள். நல்ல நிகழ்ச்சிகளும் வருகின்றன. அவை மிக சொற்ப அளவில் உள்ளன என்பது தான் நம் ஆதங்கமே. ஊறுகாய் போலத் தொட்டுக்கொள்ள வேண்டிய விஷயங்களே சாப்பாடாய் ஆகிப்போனது வருந்தத்தக்க விஷயம். நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்ட விஷயங்கள் என்று நினைப்பவற்றைப் புறந்தள்ளிவிட வேண்டியது தானே என்று ஒரு குரல் கேட்கிறது. அய்யா...உங்கள் அளவுக்குப் பக்குவம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மிக மிக மிகக் குறைவு என்பது தான் வேதனையே. உடலில் புண் இருந்தால் அதைச்சுற்றி அரிப்…

  20. படிய வாரிய தலை. ஒட்ட வெட்டிய நகம், வீட்டில் ஒவ்வொரு இடத்திலும் கலையாத ஓர் ஒழுங்கு... சின்னச் சின்ன விஷயத்துக்கு சிரத்தை எடுப்பவர்கள்தான் சிகரத்தை எட்டுகிறார்கள் என்பதற்கு இன்றளவும் சாட்சி, இயக்குநர் சிகரம் கே.பி.தான்... இவர் கேர்ஃபிரீயாக இருக்கும் ஒரே தருணம் பேரப்பிள்ளைகளோடு அடிக்கும் லூட்டிதான்! குழந்தைகளோடு இருக்கும்பொழுது குழந்தையாகவே மாறிவிடுகிறார். `குசேலன்' என்றதும் இயல்பான கம்பீரம், குறும்பான சிரிப்பு என சிகரம் சிம்மாசனத்தில் அமர்ந்தது... `குசேலன்' எப்படி போய்க் கொண்டிருக்கிறது? அதில் உங்களை நடிக்க அழைத்தார்களாமே? ``நாங்கள் எதிர்பார்த்ததைவிட ரொம்ப பிரமாதமா போய்க்கிட்டிருக்கு. ஏற்கெனவே `கத பறையும் போள்'னு மலையாளத்தில் வந்தாலும், அதில் நிறைய மாற்றம் செய்து …

  21. கலீவரின் யாத்திரைகளில் வரும் குள்ளர்களின் உலகத்தை போன்று நார்நியாவும் ஒரு மாறுபட்ட அதிசய உலகம். இவ்வுலகத்தில் பேசும் மிருகங்கள், குதிரை உடலோடு தோன்றும் மனிதர்கள், வினோத தோற்ற ஜீவராசிகள் வாழுகிறார்கள். சி.எஸ்.லூயிஸ் என்பவர் எழுதிய குழந்தைகளுக்கான இந்த இலக்கியத்தொடர் ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பரபரப்பாக விற்பனை ஆனது. சுமார் நாற்பத்தியொன்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட காவியம் இது. இவ்வரிசையில் மொத்தமாக ஏழு புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது. பீட்டர், சூசன், எட்மண்ட், லூஸி என்ற முக்கிய நாலு மனித கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எழுதப்பட்ட நாவல் தொடர் நார்நியா. தொலைக்காட்சித் தொடர்களாகவும், மேடை நாடகங்களாகவும், வானொலி நாடகங்களாகவும் புகழ்பெற்ற நார…

  22. பாலிவுட்டின் கவர்ச்சி சூறாவளி யானா குப்தா, மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்டில் சூட்டைக் கிளப்பியுள்ளன. கவர்ச்சி காட்டி மட்டுமே நடிப்பது என்ற பாலிசியுடன் பாலிவுட்டைக் கலக்கி வருபவர் யானா குப்தா. பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட்டிலும் தனது கவர்ச்சியின் வீச்சைக்காட்டி விட்டு இளம் உள்ளங்களை இம்சித்து விட்டுப் போனவர். நடிக்கிறாரோ இல்லையோ, கவர்ச்சியில் எந்தக் குறையும் வைப்பதில்லை யானா குப்தா. இதனாலேயே அவரை வைத்து படம் எடுப்பவர்கள் கவர்ச்சி பற்றிக் கவலைப்படுவதே இல்லை. வாங்கிய டப்புக்கு டபுள் மடங்காக கவர்ச்சியில் கலக்குபவர் யானா. இப்போது மேக்ஸிம் ஆங்கில இதழுக்கு முழு நீள கவர்ச்சி காட்டி அவர் கொடுத்துள்ள போஸ்கள் பாலிவுட்ட…

    • 11 replies
    • 2.6k views
  23. அப்பா விட்டு சென்ற இடத்தை நிரப்புவேன்...'' -விசாலி கண்ணதாசன் Saturday, 05.17.2008, 06:27am (GMT) கவிஞர் கண்ணதாசன் 1981-ல் மரணம் அடைவதற்கு முன், அவர் கடைசியாக எழுதிய படம், `மூன்றாம்பிறை.' ``கண்ணே கலைமானே'' என்ற பாடல்தான், அவர் கடைசியாக எழுதியது. அந்த பாடலுக்கு, இளையராஜா இசையமைத்து இருந்தார். சமீபத்தில் இளையராஜா, கண்ணதாசனின் மகளான விசாலி கண்ணதாசனை அழைத்து, ``தனம் என்ற படத்துக்காக, நீதான் ஒரு பாடல் எழுத வேண்டும்'' என்று அன்பு கட்டளையிட்டார். திருமணத்துக்குப்பின் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த விசாலி கண்ணதாசன், இளையராஜாவின் அன்பு கட்டளையை ஏற்றுக்கொண்டு, `தனம்' படத்துக்காக, ``கண்ணனுக்கு என்ன வேண்டும்?'' என்று தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறார். விசா…

    • 0 replies
    • 2.2k views
  24. இந்திரலோகம் என்ற எண்ணெய் கொப்பரையில் விழுந்து, தனது வழக்கமான அலப்பறையை தொலைத்தவர் வடிவேலு. “வேணாம்டா இந்த ஹீரோ பொழப்பு” என்று விலகி வேறு திசையில் ஓட ஆரம்பித்தவரை, மறுபடியும் லகான் போட்டு இழுத்திருக்கிறது ஒரு கதை. புரபஷனல் கொலைக்காரன் ஒருவன், கொலை செய்யப்போகிற இடத்தில் எல்லாம் எக்குதப்பாக எதையாவது செய்து மாட்டிக் கொள்வானாம். பிறகென்ன...? தர்ம அடிதான்! படம் முழுக்க இப்படி நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டதுபோல் எக்கச்சக்க நகைச்சுவை. கேட்டவுடன் பிடித்துப் போக, தனது விரதத்தை முடித்துக் கொண்டாராம் வடிவேலு. இந்த கதையில் ஹீரோவாக நடிக்க ரெடி என்று கூறிவிட்டாராம். இப்படி ஒரு கதையை சொல்லி வடிவேலுவின் வைராக்கியத்தை பொடி பொடியாக்கியவர் ராஜு ஈஸ்வரன் என்ற இயக்குனர். சின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.