Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. சுதந்திரம் தித்திக்கும்பழம் தின்னக் கொடுப்பார்; மதுரப் பருப்பு வழங்குவார் உனக்கு; பொன்னே. மணியே, என்றுனைப் புகழ்வார்; ஆயினும் பச்சைக் கிளியே அதோபார்! உன்னுடன் பிறந்த சின்ன அக்கா, வான வீதியில் வந்து திரிந்து தென்னங் கீற்றுப் பொன்னூசல் ஆடிச் சோலை பயின்று சாலையில் மேய்ந்து வானும் மண்ணுந்தன் வசத்திற் கொண்டாள்! தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ? அக்கா அக்கா என்றுநீ அழைத்தாய். அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே? http://www.paraparapu.com/

    • 0 replies
    • 779 views
  2. ஈழத்தில் உருவாகிய முதல் வெண் திரைக்காவியமும் இயக்குநர் ஜாணின் நெறியாள்கையில் உருவானதுமான 'ஆணிவேர்' திரைப்படம் ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தில் நடைபெறும் அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கி

    • 7 replies
    • 2.1k views
  3. இன்ப அதிர்ச்சியா இல்லை கூச்ச உணர்ச்சியா? எதுவாக இருந்தாலும் ஆண் இனத்துக்கே ஓர் அழியாத வடுவை தேடிதந்து விட்டார் விஜய சிரஞ்சீவி. ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்தின் மகன்தான் விஜய சிரஞ்சீவி. மீசை வளர்ந்தாலும் வயசுல விஜய சிரஞ்சீவி இன்னமும் பாலகாண்டம் தான். இவரை வைத்து 'சூர்யா' என்ற படத்தை இயக்கி வருகிறார் ஜாக்குவார் தங்கம். விஜய சிரஞ்சீவியின் ஜோடி கீர்த்தி சாவ்லா. கராத்தே, கம்பி, மான்கொம்பு என சகல சண்டை வித்தைகளும் தெரிந்த விஜய சிரஞ்சீவிக்கு காதல் காட்சி என்றால் மட்டும் குலை நடுக்கம். தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் நாயகியின் வாயை அடைக்க நாயகன் திடீரென அவர் உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுப்பதாக ஒரு காட்சி. ஏற்கனவே காதல் காட்சியில் மகன் கதகளி ஆடிக்கொண்டிருப்பதால…

    • 21 replies
    • 4.3k views
  4. Started by pepsi,

    www.oruwebsite.com/yuvan_hits.html

    • 0 replies
    • 861 views
  5. நிஜத்தில் பாலியல் தொழில் செய்தால் சிக்கல். போலீஸ் பிடிக்கும், பத்திரிகைகள் போட்டோ போடும். சினிமாவில் பாலியல் தொழிலாளியாக நடிப்பது சிறப்பு கவுரவம். பாராட்டுக்களுடன் அதிர்ஷ்டமிருந்தால் விருதும் கிடைக்கும். இந்த காரணங்களினால் பாலியல் தொழிலாளியாக நடிக்க முனைப்பு காட்டுகின்றனர் முன்னணி நடிகைகள். 'புதுப்பேட்டை' படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தார் சினேகா. படம் வெளிவரும் வரை விருது கிடைக்கும், பாராட்டு குவியும் என்று கனா கண்டார். ஆனால், படத்தில் இவரது பாத்திரம் ஓவர் டோஸானதால் எதிர்பார்த்த எதுவும் கை சேரவில்லை. ஆயினும் படம் இவருக்கு திருஷ்டி பரிகாரமாக அமைந்து மீண்டும் இவரது சினிமா கேரியர் சூடு பிடித்தது. மலையாளத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் பாலியல்…

    • 0 replies
    • 1.6k views
  6. "வேணாம் வேணாம்னு சொன்னேன். இப்போ நான் சொன்னபடியே ஆச்சு..." இரண்டு நாள்களாக இதே புலம்பலுடன் இருக்கிறார் பூஜா. அட, அப்படி என்னதான் ஆச்சு? பூஜா சமீபத்தில் 'அஞ்சலிகா' என்ற சிங்கள படத்தில் நடித்தாரல்லவா? படம் பம்பர் ஹிட்! பூஜாவின் அழகில் மொத்த சிங்களர்களும் சரண்டர். பூஜா மேலும் ஒரு சிங்கள படத்தில் நடிக்க, சிங்கள இளைஞர்களின் புத்தர் ஆனார் பூஜா. கடவுள் ஆனபிறகு கோயில் கட்டாமல் இருந்தால் எப்படி? கொழும்பில் பூஜாவுக்கு ஒரு கோயில் எழுந்தது. இதற்கு பூஜாவிடம் அவரது ரசிகர்கள் அனுமதி கோரிய போது, "தமிழ்நாட்ல குஷ்பூனு ஒரு நடிகைக்கு கோயில் கட்டி அதை இடிச்சுட்டாங்க. அதனால நமக்கு அந்த வம்பு வேண்டாம்" என சரித்திர சான்றுகளுடன் மறுத்திருக்கிறார் பூஜா. எந்த காலத்தில் பக்தன் கடவுளி…

    • 1 reply
    • 935 views
  7. "உலகம் ஒரு அலுவலகமாக சுருங்கிவிட்டது" என்றார் காஃப்கா. குழந்தைகளின் உலகம் இன்னும் மோசம். பெற்றோர்களின் ஆதிக்கமும் பள்ளிக் கூடங்களின் அதிகாரமும் அதனை சிறைக்கூடமாக மாற்றிவிட்டன. சிறுவர்களின் உலகம் அவர்களை சுற்றியுள்ள மனிதர்களாலும் சமூக சூழல்களாலும் எவ்வாறு சிதைவுறுகின்றது என்பதை துல்லியமாக காட்சிப்படுத்திய திரைப்படங்கள் ஏராளம். அவற்றில் முக்கியமானது பிரெஞ்ச் இயக்குனர் பிரான்ஸ்வோ த்ரூபோ (Francois Truffot)இயக்கிய 'தி 400 ப்ளோஸ்.' த்ரூபோ 1932-ம் வருடம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார். இவரது தாயின் இரண்டாவது கணவர் இவரை மகனாக ஏற்றுக்கொண்டாலும் பாட்டி வீட்டிலேயே வளர்ந்தார். த்ரூபோவுக்கு கல்வியில் நாட்டம் செல்லவில்லை. பல பள்ளிக்கூடங்கள் மாறிய பின் தனது 14-வது வயதில் பள…

    • 0 replies
    • 1.4k views
  8. பேசாமல் விருது நாயகன் என்ற பட்டத்தை கமலுக்கு கொடுக்கலாம். வருடத்திற்கு மூன்று விருதாவது இவர் பாக்கெட்டுக்கு வந்து விடுகிறது. பதினைந்து முறைக்குமேல் பிலிம்பேர் விருது. மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது. கணக்கில் இல்லாத அளவுக்கு தமிழக அரசு விருதுகள். இவை தவிர டாக்டர் பட்டம் வேறு. அகில இந்திய வர்த்தக சங்கமான எப்.ஐ.சி.சி.ஐ. கமலுக்கு 'வாழும் வரலாறு' என்ற விருதை அறிவித்துள்ளது. இந்தியாவின் மெகா தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கும் இச்சங்கம் இவ்விருதினை இம்மாதம் 28-ந் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் கமலுக்கு அளிக்கிறது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள எப்.ஐ.சி.சி.ஐ., கமல் தனது வாழ்நாளில் ஒரு வரலாறாக திகழ்ந்து வருவதாக புகழ…

    • 2 replies
    • 1.1k views
  9. மகன் தனுஷை மாமனார் ரஜினி ரேஞ்சுக்கு பில்டப் செய்ய ஆரம்பித்துள்ளார் காஸ்தூரிராஜா. தெலுங்கில் செல்வராகவன் இயக்கிவரும் படம் 'ஆடவாரி மாட்டலுகு அர்த்தலே வேறு' தமிழ் தெரிந்த ஒரு தெலுங்குகாரிடம் இதன் அர்த்தம் கேட்டபோது 'பெண்களின் பேச்சுக்கு அர்த்தமே வேறு' என்று மொழி பெயர்த்தார். வெங்கடேஷ்-த்ரிஷா நாயகன், நாயகியாக நடிக்கும் இப்படத்தில் நம்மூர் ஸ்ரீகாந்த், பிரச்சன்னா ஆகியோருக்கும் துக்டா கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ராஜா தயாரிப்பில் இப்படம் தமிழில் தயாராகிறது. மகன் தனுஷ்தான் நாயகன். சமீபத்திய சர்ச்சை புகழ் நயன்தாரா நாயகி. செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜவஹர் இயக்கும் இப்படத்திற்கு 'யாரடி நீ மோகினி' என பெயரிட்பபட்டுள்ளது. சென்னை பிரதாப் ஸ்டுடி…

  10. விஜய், அஜீத் என் நண்பர்கள்: விக்ரம் எனக்கு போட்டியாளர்கள் என்று அழைக்கப்படும் சக ஹீரோக்கள் உண்மையில் என் நெருங்கிய நண்பர்கள் என்கிறார் சியான் விக்ரம். அவர் அளித்த சுவையான பேட்டி இதோ. நான் இதுவரை எடுத்த சிறந்த முடிவுகளுள் ஒன்றாக, ஆஸ்பத்திரியில் நான் இருந்த போது எனக்கு கவுன்சிலிங் கொடுத்த அந்த பெண் உளவியல் நிபுணர் காதலிக்க முடிவெடுத்ததைக் கூறலாம். அவர் வேறு யாரும் அல்ல என் மனைவி ஷைலாவேதான். கடந்த காதலர்தினத்தின் போது நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். இருந்தாலும் மனைவி மீது என் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு பூங்கொத்து வியாபாரியை ஒரு மணிக்கு ஒரு தடவை என் சார்பில் ஷைலாவிடம் பூங்கொத்துக்களையும், பழங்களையும் கொடுக்க ஏற்பாடு செய்தேன். முன்பே காதல் ரசம் சொட்…

    • 3 replies
    • 1.7k views
  11. Started by pepsi,

    http://www.lovetack.com/comedy_videos.html

    • 0 replies
    • 866 views
  12. 'உன்னைத்தேடி' படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா. 'பூப்பறிக்க வருகிறோம்', 'வெற்றிக்கொடிக்கட்டு', 'ஐயா', 'சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் மாளவிகாவை புகழின் உச்சிக்கு உயர்த்தியது 'வாளமீனுக்கும்....' பாடல்தான். தற்போது 'சபரி', உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் மாளவிகா கடந்தமாதம் சுமேஷ்மேனன் என்ற காதலனை மீடியாக்களுக்கு அறிமுகப்படுத்தி கல்யாண தேதியையும் அறிவித்தார். அதன்படி மாளவிகா-சுமேஷ்மேனன் திருமணம் நேற்று நடந்தது. இதற்காக பெங்களூர் ராணுவ வீரர்கள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஏ.எஸ்.சி. சென்டர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மதியம் 12.15 மணியளவில் மணமேடைக்கு வந்தனர் மணமக்கள். ரோஜா நிற பட்டுப்படவையில் முக்காடு போட்டிருந்த ம…

  13. கமலுக்கு சாதனையாளர் விருது மும்பையிலுள்ள யுஎப்ஓ டிஜிட்டல் சினிமா நிறுவனம் கமல்ஹாசனுக்கு விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான வாழும் சாதனையாளர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது. http://www.tamilvanan.com

  14. சிம்புவுடன் நடிக்க மாட்டேன்: நடிகை பாவனா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதையடுத்து வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தற்போது பரத்துடன் கூடல் நகர், மாதவனுடன் ஆர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாவனா நடிகர் சிம்புவுடன் நடிக்க மாட்டேன் என்ற பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:- சிம்புவுடன் நான் நடிக்கப்போவதாக அவர் பத்திரிகைகளில் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன். சிம்புவுக்கு இப்போது ம…

  15. பட்டக்காலிலேயே படும் என்பதற்கு 'நான் கடவுள்' பிரச்சனை நல்ல உதாரணம். ஹீரோ மாற்றம், தயாரிப்பாளருடன் டிஸ்யூம் என படம் ஆரம்பிப்பதற்கு முன்பே பலவித தடுமாற்றத்திற்கு உள்ளாகி பரபரப்பை ஏற்படுத்தியது பாலாவின் 'நான் கடவுள்.' ஒரு வழியாக பஞ்சாயத்துக்கள் தீர்க்கப்பட்டு காசிக்கு ஷுட்டிங் போனார் பாலா. இரண்டு வார காலம் நான்ஸ்டாப்பாக போய்க்கொண்டிருந்த படப்பிடிப்புக்கு மீண்டும் ஒரு பிரச்சனை நங்கூரம் போட்டுள்ளது. படப்பிடிப்பு நின்றதால் நாயகன் ஆர்யா, வீட்டில் உட்கார்ந்து பாலாவின் போனுக்காக காத்திருக்கிறாராம். நாயகி பாவனாவும், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனும் வேறொரு படத்துக்கு கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளானர். பாலா என்ன செய்கிறார்? அறநிலைய துறைக்கு தினமும் நடையாய் நடந்துகொ…

  16. திரிஷாவிடம் சிம்பு சரண்! அத்தனை ஹீரோயின்களும் சொல்லி வைத்தது போல நடிக்க முடியாது என்று கூறி விட்டதால் வெறுத்துப் போன சிம்பு, இப்போது திரிஷாவிடம் போய் கால்ஷீட் கேட்டு நிற்கிறாராம். ஒரு நேரத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஏற்பட்ட அதே கதி இப்போது சிம்புவுக்கும் வந்துள்ளது. லொள்ளு பிளஸ் கில்மா நாயகனாக வலம் வந்தவர் சூர்யா. படு வேகமாக முன்னுக்கு வந்த அவருக்கு அன்பே ஆருயிரே படத்துக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. கூட நடித்த நடிகைகளுடன் பலமாக கிசுகிசுக்கப்பட்டதாலும், அவரே அந்த கிசுகிசுக்களைப் பரப்புவதாக கூறப்பட்டாலும், இன்ன பிற இம்சைகளாலும், அவருடன் ஜோடி சேர நடிகைகள் மறுக்க ஆரம்பித்தனர். திருமகன் படத்திற்கு ஒரு ஆள் கூட கிடைக்காமல் ரொம்பவே நொந்து போயிருந்…

  17. இந்திரலோகத்தில் நா.அழகப்பன். இந்தப் படத்தில் வடிவேலுவின் சம்பளம் இரண்டு கோடி ரூபாயாம். புது புது இளம் நாயகிகளாகப் பார்த்து தேர்வு செய்து கடலை போடுகிறார் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து எப்போதும் பிஸியாகவே உள்ளார் வடிவேலு. அடுத்து வரப்போகும் அவரது படம் இந்திரலோகத்தில் நா.அழகப்பன். இந்தப் படத்தில் வடிவேலுவின் சம்பளம் இரண்டு கோடி ரூபாயாம். கோடம்பாக்கத்தை கலக்கும் தற்போதைய பரபரப்புச் செய்தி இந்த 2 கோடி. இதைத் தொடர்ந்து, புது புது இளம் நாயகிகளாகப் பார்த்து தேர்வு செய்து கடலை போடுகிறார் வடிவேலு. என்ன வடிவேலு, நீ இப்படி மாறிட்டே என்று பழக்கமான சீனியர் நடிகர்கள் யாராவது கேட்டால் பட்டென்று அவர் கூறும் பதில் என்ன அண்ண…

  18. முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த படம் தெலுங்கில் சமீபத்தில் இயக்குநர் முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் சூப்பர் ஹிட் படமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இதனால் கவரப்பட்ட ரஜினி கடந்த வாரம் இயக்குநர் முருகதாசை அழைத்துக் கொண்டு மும்பை சென்றார். அங்கு புதிய படம் தொடர்பாக அவர்கள் நீண்ட ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. முருகதாஸ் இயக்க உள்ள இந்த படத்தை ஆர்.எம்.வீரப்பனின் ஸ்ரீசத்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கான சூட்டிங் 2008 ம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. விடுப்பு : Viduppu.com

  19. அஜித் அவதாரமாயிட்டார்னு ஊரெல்லாம் பேச்சு. நல்ல மனுஷனாச்சே எப்படி இந்த மாதிரி கெட்டுப் போனார்னு ஓடிப்போய் அடிச்சுப் பிடிச்சு ஆழ்வார் படத்துக்கு டிக்கெட் வாங்கி உள்ளப் போனா... ஏண்டா வந்தோம்னு ஆகிப் போச்சு. என்ன வெவகாரம்னுதானே கேட்கிறீங்க? கொஞ்சம் விலாவரியா சொல்ல வேண்டிய சமாச்சாரம் இது. ஆழ்வார்ல அஜித்துக்கு 'களை' பிடுங்கிற வேலை. அதாவது சமுதாயத்துல களையா இருக்கிற ரவுடிகளை போட்டுத் தள்றது. அதுவும், ராமர் கிருஷ்ணர்னு விஷ்ணுவோட அவதார மேக்கப் போட்டு சைக்கிள்ல காத்து பிடுங்கிற மாதிரி ஆயுசை பிடுங்கிடறார். அஜித்தை இப்படி எமதர்மனா மாத்துனதுக்கு இயக்குனர் ஷெல்லா அழகா ஒரு கதை சொல்றார். கதாகாலேட்சபம் பண்ற சாது ஒருதரம் தெரியாதத்தனமா, எல்லா பயப்புள்ளைகளும் கடவுள்தான்டான…

  20. Started by வானவில்,

    இந்திய சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறவர் மணிரத்னம். தனிமனிதப் பிரச்சனைகளை தாண்டி தேசிய பிரச்சனைகளை கையிலெடுத்ததை தொடர்ந்து - குறிப்பாக சொல்வதென்றால் 'ரோஜா' திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் இயக்குனராக இவரது இருப்பு பிரகாசமடைய தொடங்கியது. இவரது புதிய படம் 'குரு' வும் பிராந்திய எல்லைகளை தாண்டிய ஒரு மாபெரும் தொழிலதிபரைப் பற்றியது. குருபாய் என அழைக்கப்படும் குரு கான்ட் தேசாய்க்கு பெரிய தொழிலதிபர் ஆக வேண்டும் என சிறு வயது முதலே கனவு. துருக்கி சென்று சம்பாதிக்கும் பணம் முதலீடு செய்ய போதவில்லை. வரதட்சணையாக பணம் கிடைக்கும் என்பதற்காக சுஜாதாவை (ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்ததும் மனைவி மைத்துனருடன் மும்பை சொல்…

  21. கோயில் கட்டுறது ஒருத்தன் கும்பாபிஷேகம் நடத்துறது இன்னொருத்தன் என்றால் கோபம் வரும்தானே! இதோ பருத்திவீரன் கண்களில் இப்போது கோபம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் வசூலில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கிறது 'பருத்திவீரன்'. தான் நடித்த முதல் படமே இப்படி வெற்றி கோலோச்சும் சந்தோஷத்தில் இருந்த கார்த்தியின் மகிழ்ச்சியில் மண் அள்ளி போட்டிருக்கிறது திருட்டு விசிடி. படம் வெளியான இரண்டு தினங்களிலேயே பருத்திவீரன் திருட்டு விசிடி பிள்ளையார் கோயில் பிரசாதம்போல எளிதாக கிடைக்கிறதாம். இதனை கேள்விப்பட்ட கார்த்தி, கண்களில் கோபம் கொப்பளிக்க கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரில், "பருத்திவீரன் திருட்டு விசிட…

  22. வைரமுத்துவின் வார்த்தையில் ஏதோ உள்ளர்த்தம் இருக்கிறது -சினேகன் சீறல்! இந்த வருடம் Ôஹிட்Õ அடித்ததில் ஏக குஷியாக இருக்கிறார் பாடலாசிரியர் சினேகன். போக்கிரியில் Ôமாம்பழமாம் மாம்பழம்...Õ விற்றவர் இவர்தான். பருத்தி வீரனில் அத்தனை பாடல்களும் சினேகன்தான்! கைபேசியில் வருகிற அத்தனை அழைப்புகளும் பருத்திவீரன் பாடல்கள் பற்றியேதான் பேசுகின்றன. Ôரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார்Õ என்கிற சினேகனுக்கு ஏற்கனவே சிரித்த முகம்! இப்போது, இன்னும்...இன்னும்....! தினமும் ஜிம்முக்கு போகிறார். என்னவென்றால் ஹீரோ என்கிற அடுத்த அவதாரத்திற்குதானாம்! அட....! மனிதனுக்கு Ôதான்Õ என்ற அகங்காரம்தான் இருக்க கூடாது. அதைதான் Ôநான்Õ என்ற அகங்காரம் இருக்க கூடாது என்று திரித்து சொல்லிவிட்டார்கள். தமிழில் …

  23. சைக்கோ...சபலிஸ்ட்...கேவலமான பிறவி... -எஸ்.ஜே.சூர்யா மீது மாளவிகா பாய்ச்சல் நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களில் நடித்து பெண்கள் அமைப்பிடம் ஏகப்பட்ட Ôஅர்ச்சனைÕகளை வாங்கி கட்டிக் கொண்டவர் எஸ்.ஜே.சூர்யா. சினிமாவுக்கு வெளியே இருப்பவர்கள் இவருக்கு செய்த அர்ச்சனைகள் போதாது என்று சினிமாவுக்குள்ளேயிருந்தும் Ôஅர்ச்சனைÕ வர ஆரம்பித்திருக்கிறது இப்போது! வியாபாரி என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் நமீதா. மற்றவர் மாளவிகா. இந்த அழைப்பிதழிலேயே தன் சில்மிஷத்தை காட்டியிருந்தார் சூர்யா. குளித்துவிட்டு டவலோடு வருகிற நமீதாவின் பின்புறத்தை டேப் உதவியால் அளவெடுப்பது போல இருந்தன அந்த படங்கள். இந்த காட்சிக்கான டயலாக் என்ன தெரியுமா? முன் புறத்தையும…

  24. கமலை படமெடுக்கும் அக்ஷரா! -வாரிசுகளால் பெருமைப்படும் அப்பாக்கள்! ரஜினியின் பாபா படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் தன் வீடியோ கேமிராவில் பதிவு செய்திருந்தார் அவரது மகள் ஐஸ்வர்யா. அந்த படம் எப்படி உருவானது என்பதை தனி வீடியோ தொகுப்பாக போடவும் திட்டம் வைத்திருந்தார் அவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த வீடியோ தொகுப்பு வெளியிடப்படவே இல்லை. அது போலவே தன் அப்பா கமல் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பை வீடியோவில் படம் பிடித்து வருகிறார் அக்ஷரா! பத்து கெட்டப்புகளில் தோன்றும் கமல், மேக்கப்புக்காக செலவிடும் நேரம், சிரமம் எல்லாவற்றையும் ஷ§ட் பண்ணுகிறாராம். இதுவாவது வீடியோ பதிவாக வெளிவருமா? அதிருக்கட்டும்.... கமலின் மற்றொரு மகள் ஸ்ருதி இசையை முறையாக படித்து வருகிறார். தமிழில் …

  25. தமிழுக்கு வரும் ஜெமினி மகள்! பாலிவுட்டின் செக்ஸ் சிம்பலாக பல காலம் கலக்கிய காதல் மன்னன் ஜெமினி கணேசன் அழகு மகள் ரேகா, வயது போன காலத்தில் தமிழில் நடிக்க வருகிறார். அந்தக் காலத்து கனவுக் கன்னிகளில் முக்கியமானவர் ரேகா. ஜெமினியின் மகளான இவர் இதுவரை தமிழில் ஒரு படத்தில் கூட தலை காட்டியதில்லை. பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்தவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் ரேகா. ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா என பெரும் தலைகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்த காலத்தில் தனது பாணியில் ரசிகர்களை தக தக்க வைத்தவர் ரேகா. கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம், பிரபல இயக்குநர்கள், சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் ரேகா. பாலிவுட்டில் படு பிரபலமாக இருந்தபோதிலும், கோலிவுட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.