வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5548 topics in this forum
-
விக்ரமின் படத்திலிருந்து விலகிய த்ரிஷா! ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சாமி 2' படத்தில் இருந்து நடிகை த்ரிஷா விலகியுள்ளார். சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியுள்ளதாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சாமி 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. ஹரி இயக்கத்தில் விக்ரம், மற்றும் த்ரிஷா, விவேக் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான படம் சாமி. இந்த படத்தில் விக்ரம் போலீஸாக நடித்திருந்தார். சாமி படம் வெற்றி பெற்றதை அடுத்து 2-ம் பாகத்தை எடுக்க ஹரி முடிவு செய்திருந்தார். இதில் முதல் பாகத்தில் நடித்த விக்ரம், த்ரிஷா, ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகி…
-
- 0 replies
- 370 views
-
-
இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அங்கு திரைப் படத் துறையில் காலூன்றிய/பணியாற்றிய ஒரு சிலரைப் பற்றிச் சொல்வதற்குப் பின்னர் வசதிப் படாமல் போகலாம். அதனால் இப்போதே அதையும் ஒரு கை பார்த்து விடுவோம்! ஆரம்ப கால நடிகையரில் நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கே.தவமணிதேவி. அசல் யாழ்ப்பாணத்தவரான அவர் 'இலங்கைக் குயில்' என்ற சிறப்புப் பட்டத்துடன் 'சதி அகல்யா'[1937] வில் நாயகியாக டி.ஆர்.சுந்தரத்தால் அறிமுகமானார். ஆடைக் குறைப்புடன்'வனமோகினி'[1941]யில் அவர் எம்.கே.ராதாவின் நாயகியாக நடித்தது பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் முதன் முதலாக நாயகனாக நடித்த 'ராஜகுமாரி'யில் தவமணிதேவி தான் வில்லி. 'ராஜகுமாரி' தான் 1946 இல் இருந்து வசனகர…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஞாயிறு அரங்கம்: எங்கே போயின அந்த பேனர்கள்? கடும் பசிகொண்ட கிழவனைப் போல, காலம் பலவற்றை உண்டு செரித்துவிடுகிறது. அவற்றில் அது அதிகமும் தின்றது கலைகளைத்தான். சினிமா துணி பேனர் வரையும் கலை அவற்றில் ஒன்று. சரியாக 17 வருடங்களுக்கு முன்புவரை திரையரங்குகளின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் துணி பேனர்களில், அடர் வண்ண ஓவியங்களாகச் சிரித்தனர் நம் அபிமான நட்சத்திரங்கள். இந்தத் துணி பேனர்கள் காணாமல்போனதன் பின்னணியில், டிஜிட்டல் பிரிண்டிங் எனும் கள்வன் ஒளிந்திருக்கிறான். லாகவமாக நறுக்கப்பட்ட மர ஃபிளைவுட்களில் 30 அடி முதல் 100 அடி உயரம் வரை வரையப்படும் கட்-அவுட்களில் விஸ்வரூபம் காட்டி நிற்கும் சூப்பர் ஸ்டார்களின் தயவில் …
-
- 0 replies
- 745 views
-
-
"இப்போ விஜய்க்கு பையன்... நெக்ஸ்ட் ஹீரோ!’’ - குஷி `மெர்சல்' அக்ஷித் Chennai: "என்னா இளையதளபதி எப்பிடி இருக்கீங்க?" எனக் கேட்டால், சிரிப்பை மட்டும் பதிலாகக் கொடுக்கிறார் அந்த சுட்டி. "இப்ப என்னக் கண்டுபிடிங்க பார்ப்போம்" என ஸ்க்ரீனுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது, ஸ்டுடியோவுக்குள்ளேயே ஓடியாடி திரிவது என அந்த வயதுக்குரிய அத்தனை துறுதுறுப்பும் குறும்புமாக றெக்கை இல்லாமலேயே பறக்கிறார். `மெர்சல்' படத்தில் சிறு வயது விஜயாக "ஐஸு... அதெல்லாம் செட்டாகாது ஐஸு" என க்யூட் பெர்ஃபாமென்ஸ் காட்டியவரிடம் பேச்சுக் கொடுத்தால் "நானெல்லாம் ஒன் டேக் ஆர்டிஸ்ட், வேணும்மா கேள்வி கேளுங்க பார்ப்போம்" என ரெடியாகிறார். "யாரு தம்பி நீங்க?" "என்ன…
-
- 0 replies
- 339 views
-
-
பிரச்சினைகளில் சிக்கிய விஜய்யின் 7 படங்கள்: ஓர் அலசல் பார்வை 2011-ம் ஆண்டிலிருந்து வெளியான விஜய் படங்கள் யாவுமே பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியே வெளியாகியிருக்கிறது. இதற்கு காரணம் விஜய்யாக இல்லாவிட்டாலும், கதைக்களம், பணப்பிரச்சினை என பல காரணங்கள் அடங்கியிருக்கிறது. அவ்வாறு பிரச்சினைகளில் சிக்கிய விஜய் படங்கள் என்ன? ஏன் என்று பார்க்கலாம் காவலன் (2011) : 'சுறா' படத்தின் பெரும் தோல்வியால் ஏற்பட்ட நஷ்டத்தை விஜய் கொடுக்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இறுதியில் விஜய்யுடன் பேசி பணத்தை திரும்ப அளிக்க ஒப்புதல் அளித்தவுடனே 'காவலன்' வெளியானது…
-
- 0 replies
- 425 views
-
-
திரைப் பார்வை: அவன் வீட்டில் கல்லெறியுங்கள்! - ராமலீலா (மலையாளம்) ‘ராமலீலா’ படத்தில் தீலிப், ப்ரயாகா மார்டின் பி ரபல நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் மலையாள நடிகர் திலீப். சிறைக்குச் செல்வதற்கு முன் இவர் நடித்த படம் ‘ராமலீலா’. அக்டோபர் 13 அன்று வெளியான ‘ராமலீலா’, நல்ல விமர்சனங்களைப் பெற்று சிறப்பான வசூலையும் குவித்து வருகிறது. அருண் கோபி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் சேரும் ராமன் உண்ணி (திலீப்) …
-
- 0 replies
- 359 views
-
-
இனிமேல் பாட மாட்டேன் : பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு மைசூரில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா, இசை மேடைகளில் தான் பாடப் போவதில்லை என்று பிரபல பின்னணி பாடகி ஜானகி மீண்டும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத பல இனிமையான பாடல்களை பாடியவர், எஸ். ஜானகி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரை இசை பாடல்கள் பாடி பிரபலமானவர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனால் நெருங்கியவர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் சினிமாவில் பாடினார். கடந்த ஆண்டு 10 கல்பனைகள் என்ற மலையாள படத்திலும் …
-
- 0 replies
- 260 views
-
-
ஓய்வெடுக்க இது நேரமல்ல! - நடிகை சமந்தா பேட்டி “சென்னை பல்லாவரம் பெண்ணான சமந்தா தற்போது ஆந்திர சினிமாவின் முன்னணி நட்சத்திரக் குடும்பமான அக்கிநேனி வீட்டு மருமகளாக ஐக்கியமாகிவிட்டார். ட்விட்டரிலும் தனது பெயரை ‘சமந்தா அக்கிநேனி’ என மாற்றிக்கொண்டிருக்கும் இந்த புதுமணப் பெண், தமிழ், தெலுங்கு சினிமாவில் இன்று அறிமுகமான கதாநாயகிபோல இளமை குன்றாமல் வலம் வந்துகொண்டிருக்கிறார். மத்தாப்புச் சிரிப்பை எப்போதும் அணிந்திருக்கும் இந்தத் தலைத் தீபாவளி நாயகியிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி… விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறீர்கள், எப்படி இருந்தது அனுபவம்? விஜய் சாருடன் நடிப்…
-
- 0 replies
- 926 views
-
-
“கமல் சார் எனக்குக் கடவுள் மாதிரி!” சனா - படங்கள்: கே.ராஜசேகரன் தமிழ்நாடே ஓவியா ஃபீவரில் இருக்க செம உற்சாகத்தில் இருக்கிறார் ஓவியா. ``நிறைய பேசணும். ஆனா எல்லாத்தையும் பேச முடியுமான்னு தெரியல” என கேஷுவலாகப் பேசுகிறார். ஓவியாவுடன் காரில் சென்னையைச் சுற்றிக்கொண்டே பேசிய அரை மணி நேரமும் சிரிப்பு, கலாய்ப்பு, அழுகை என உருக வைத்தார் ஓவியா. ``அப்புறம்... சொல்லுங்க, எப்படி இருக்கீங்க?’’ ``இப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன். கொஞ்சம் மன உளைச்சல்ல இருந்ததால்தான் பிக்பாஸ் வீட்டிலிருந்தே வெளியே வந்தேன். வெளியே வந்ததும் மனசு ஒரு மாதிரி இருந்துச்சு. சாப்பிடப் பிடிக்கல. தூக்கம் வரல. நான் நானாவே இல்ல. என்னைச் சுத்தி எப்போதும் இருந்த மைக்கையும், கேமராவையும் ர…
-
- 2 replies
- 1.5k views
-
-
பரவை முனியம்மாவின் தற்போதைய நிலை! விக்ரம் நடிப்பில் வெளியான தூள் படத்தில் “சிங்கம் போல நடந்து வாரன் செல்லப் பேரண்டி…“ என்ற பாடல் மூலம் பிரபலமடைந்தவர் பரவை முனியம்மா. அவர் தற்போது உடல் நலக்குறைவால் தனக்கு உதவி செய்யுமாறு பலரிடம் கேட்டுள்ளார். சில நடிகர்கள் தாமாகவே அவருக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர். சிவசிவகார்த்திகேயன், விஷால், தனுஷ் என சிலர் நிதியுதவி செய்துள்ளனர். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் மாதாந்தம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. எனினும் தற்போது அவருக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அதனால் தனக்கு வழங்கும் நிதியுதவியை அதிகரித்து வழங…
-
- 0 replies
- 2.1k views
-
-
சென்னையில் ஒரு நாள் 2 திரை விமர்சனம் சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளிவந்து ஹிட் அடித்த படம் சென்னையில் ஒரு நாள். இப்படத்தின் இரண்டாம் பாகமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது JPR இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் சென்னையில் ஒரு நாள்-2. முந்தைய பாகத்தை போல் இதுவும் கவர்ந்ததா? பார்ப்போம். கதைக்களம் சரத்குமார் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டில் உயர் அதிகாரியாக இருக்கின்றார், படத்தின் முதல் காட்சியே ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா? என ஒரு போஸ்டர் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த சம்பவத்தின் தீவிரத்தை அறிந்த சரத்குமார் களத்தி…
-
- 0 replies
- 356 views
-
-
புதிய மலையாள வரவு மலையாளத்திலிருந்து தமிழுக்கு படையெடுத்து வரும் நடிகையரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில், லேட்டஸ்ட் வரவு, நமிதா பிரமோத். கேரளாவின் பிரபல சுற்றுலா தலமான, குமரகோம் தான், மேடத்துக்கு சொந்த ஊர். டிராபிக், விக்ரமாதித்யன், சந்திரேட்டன் எவிடே போன்ற ‘ஹிட்’ படங்களில் நடித்திருந்தாலும், தமிழுக்கு சற்று தாமதமாகத் தான் அடி எடுத்து வைத்துள்ளார். ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிமிர் படத்தில் நடிக்கிறார் நமிதா. இவர் விஷயத்தில் கோலிவூட்டை விட டோலிவூட் முந்திவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்து அங்கு பிரபலமாகிவிட்டார். தமிழ் சி…
-
- 0 replies
- 450 views
-
-
ரெடியாகும் சமந்தா சில மாதங்களுக்கு முன் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா பற்றி சமூக வலைதள சர்ச்சைகள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து இதில் பலரின் பெயரும் அடிபட்டது. இந்தச் சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில், ராஜு காரி காதி- 2 திரைப்படத்தில், சமந்தா நடித்துள்ளாராம். பெண்களுக்கான பிரச்சினையை சமூகவலைதளங்களில் பார்த்து, இரசித்து, பரப்பிவிடுவோருக்கு மெசேஜ் சொல்லும் திரைப்படமாக இது இருக்கிறதாம். இம்மாதம் 6,7ஆம் திகதிகளில் திருமணம் செய்துகொண்ட சமந்தா, தன் அடுத்த வேலைகளை தொடங்கிவிட்டாராம். அத்தோடு மகாநதி திரைப்படத்தின் ஷூட்டிங்கிலும் இணைந்துவிட்டாராம். மேலும் மெர்சல் திரைப்படத்தின் …
-
- 0 replies
- 290 views
-
-
படமாளிகையில் படம் வெளியிட முன்பு எப்படி இணையத்தில் படத்தை வெளியிடுகிறார்கள்??
-
- 0 replies
- 246 views
-
-
“தடை பல தாண்டி... தீபாவளிக்கு ‘மெர்சல்’ ரிலீஸ் உறுதி!” ‘தேனாண்டாள்’ முரளி ‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் அட்லி மீண்டும் இணையும் படம், தேனாண்டாள் நிறுவனத்தின் 100 வது தயாரிப்பு... இப்படி ஏகப்பட்ட பரபரப்புடன் தயாராகிவரும் ‘மெர்சல்’ படத்துக்கு அது தொடங்கிய நாளிலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்பபு. காளை மாட்டுடன் விஜய் இருக்கும் புகைப்படம், படத்தின் முதல் பார்வையாக வெளியானபோது எதிர்பார்ப்பு இன்னும் எகிறியது. தொடர்ந்து ‘ஆளப்போறான் தமிழன்’ பாட்டு வெளியானபோது, ‘கமர்ஷியலில் இது வேறு லெவல் சினிமா’ என்ற எண்ணம் உருவானது. இப்படிப் படிப்படியாக எகிறிக்கொண்டு இருந்த ‘மெர்சல்’ படத்தின் எதிர்பார்ப்பை இறக்கும் வகையில் வழக்குடன் வந்தா…
-
- 6 replies
- 794 views
-
-
12 வருடங்களுக்குப் பிறகு விஜயுடன் மோதும் சரத்குமார்.! 12 வருடங்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும், சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 18ம் திகதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. அன்றைய தினத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்…
-
- 0 replies
- 259 views
-
-
'சிலுக்கு ஸ்மிதா' - ரசிகர்கள் கொண்டாட காரணம் ? 1980களில் தமிழ் ரசிகர்களை ஆட்டிப்படைத்த சிலுக்கு சுமிதாவின் திரை பயணம். விரைவில் .......
-
- 8 replies
- 722 views
-
-
சுறாங்கனி பாடலின் சொந்தக்காரர் யார்? இளையராஜாவா? மனோகரனா? ஆதாரம் இதோ! சுறாங்கனி பாடல் இலங்கை மற்றும் தமிழகம் மட்டுமன்றி இந்திய அழவிலேயே இளையோர் மத்தியில் பாரிய தாக்கத்தினைச் செலுத்திய ஒரு பாடலாகும். பல கல்லூரி மாணவர்களின் எவர்கிறீன் பாடலாகக் கூட இன்றும் இருந்துவருகிறது. இந்த நிலையில் சுறாங்கனி பாடலுக்கு சொந்தக்காரர் யார்? அந்தப் பாடலின் முதலாவது சொந்த மொழி எது என்ற கேள்வி இப்பொழுது பலரிடையேயும் எழுகின்றது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. ஏனெனில் சுறாங்கனி பாடல் தமிழ், சிங்களம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் காலம் காலமாக பல இசையமைப்பாளர்களால் மீளிசைப்படுத்தப்பட்டு பல பாடகர்களால் பாடப்பட…
-
- 0 replies
- 2.1k views
-
-
“பிக்பாஸ்ல என்னலாம் நடந்துச்சு..?” ஓவியா முதல் சிம்பு வரை... ஆரவ் ஷேரிங்ஸ்! “நாகர்கோவில் பையன் நான். சின்ன வயதிலேயே வேலையின் காரணமாக அப்பா, அம்மா திருச்சிக்கு வந்து விட்டனர். நான் ஸ்கூல் படிச்சது எல்லாம் திருச்சியில்தான். அப்போதிலிருந்தே பள்ளியில் நடக்கும் எல்லாக் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன். சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசையும் இருந்தது. ஆனால், வீட்டில் யாரும் சினிமாவுக்கு முதலில் அனுமதிக்கவில்லை” தன்னைப் பற்றிய முழு அறிமுகத்தோடு பேச ஆரம்பிக்கிறார் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ். “சென்னையில்தான் காலேஜ் படித்தேன். அப்போதுதான் எனக்குப் போட்டோகிராஃபி நாட்டம் வந்தது. சினிமா போட்டோகிராஃபர் ஆகணும்னு ஆசை இருந்தது. அப்…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிவகார்த்திகேயன், அம்பானி, ஜூலி, ஆரவ், என் நெகட்டிவ், பாட்டி பயம்! - ஓவியா பெர்சனல் ஷேரிங் #VikatanExclusive ‘பேர் ஓவியாவாம். புதுப்பொண்ணு. நல்லா நடிச்சிருக்கு...’ ‘களவாணி’ படத்தின் மூலம் ஓவியா நமக்கு இப்படித்தான் அறிமுகமானார். தொடர்ந்து ‘மெரினா’, ‘கலகலப்பு’... என சில படங்களில் நடித்ததன்மூலம், ‘ஓ.கே இவரும் நடிக்கிறார்’ என்ற அளவே இவரை நாம் புரிந்துகொண்டோம். ஆனால், ‘ எங்கேயும் எப்போதும் எதற்காகவும் யாருக்காகவும் நடிக்காதவர்’ என்ற அவரின் உண்மை முகத்தை ‘பிக்பாஸ்’ மூலம்தான் தெரிந்துகொண்டோம். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியபோது அந்த நிகழ்ச்சியைப் பலரும் பார்க்கத் தொடங்கியதற்கு முக்கியமான காரணம் சினேகன் சொன்னதுபோல், அந்த ஒற்றை ஆண்…
-
- 0 replies
- 248 views
-
-
மீண்டும் ‘வைகைப்புயல்’ மையம் கொள்ளும்: வடிவேலுவின் கதாபாத்திரங்கள் தமிழ் சமூகத்தின் பகடி நடிகர் வடிவேலு. - கோப்புப் படம். | எல்.சீனிவாசன். “பச்சக்கிளியை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும், ஏனென்றால் அவன் என் கண்ணுக்குள்ளேயே திரியுறான்” பச்சக்கிளியாக வடிவேலு பேசிய வசனம் தற்போதைய நிலையில் அவருக்கு முற்றிலுமாக பொருந்தும். இப்போதிருக்கும் பேஸ்புக்கும் யூடியூப்பும் ட்விட்டரும் இவர் இல்லை என்றால் எப்போதோ காலாவதியாகி இருக்கும் இல்லையெனில் இம்மண்ணுக்கு ஏற்றபடி மாறாமல் அந்நியப்பட்டே நின்று போயிருக்கும். அரசியல், சினிமா, சமூக விழிப்புணர்வு என எல்லாவற்றிற்கும் வடிவேலுவின் கதாபாத்திரங்களும் அதன் வசனங்களும் ப…
-
- 1 reply
- 444 views
-
-
'நோஞ்சான் ஆரவ்வை என் எதிரியாகப் பார்க்கவில்லை' - சினேகனின் பிக்பாஸ் அனுபவம் #VikatanExclusive "சக்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டுப் போனதுக்கு அப்புறம் ஒரு விஷயத்தை ஃபீல் பண்ணினேன். கேமரா முன்னாடி போய்க் கேட்டேன். 50 நாள்கள் கூடவே பழகின சக்தியைப் பற்றிப் பேசினது அவருக்குத் தப்பாகத் தெரிந்தது. அப்போது 10 வருஷம், 20 வருஷம் பழகிய நண்பர்கள் எதிரிகளாகியிருக்கிறார்கள். சில நண்பர்களால் கோடிக்கணக்கில் எனக்கு நஷ்டம். வீடுகளை இழந்திருக்கிறேன். என் திருமண வாழ்க்கை தடைப்பட்டது. ஆனால், அவர்களிடம் எல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியது. இழப்பு எனக்கு இருந்தாலும், அந்த இழப்புக்கான காரணம் ஏதோ ஒரு நண்பன் என்னைப் பற்றி தப்பாகச் சொல்லியிருப்பான…
-
- 0 replies
- 1.1k views
-
-
“பிக்பாஸ் வீட்ல நான் பண்ண ஒரே தப்பு..!?” - கணேஷ் வெங்கட்ராம் ஃபீலிங்ஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற 15 பிரபலங்களில் 100வது நாள் வரை இருந்த மூன்று நபர்களில் கணேஷ் வெங்கட்ராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது பல சர்ச்சைகளும், உள்ளே இருந்த நபர்கள் மீது பல விமர்சனம் வைக்கப்பட்ட நிலையிலும் தன் மீது எந்த ஒரு களக்கமும் இல்லாமல் இருந்த ஜென்டில்மேன் கணேஷ். பிக் பாஸ் முடிந்தப்பிறகு தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேட்க கணேஷைத் தொடர்பு கொண்டோம். “ரொம்ப சந்தோஷமா இருக்கேன் ப்ரோ. நான் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது இந்த ஷோ இவ்வளவு பெரிய ஹிட்டாகும்னு எதிர்பார்க்கவேயில்ல. வெளியில வந்து பார்த்தா எனக்கு பெரிய ஷாக். த…
-
- 0 replies
- 1.9k views
-
-
தாத்தாக்கள் நாயகராகலாம்.. திருமணமான பெண்கள் நாயகியாகக் கூடாதா?: கஸ்தூரி கேள்வி ரஜினிகாந்துடன் கஸ்தூரி (கோப்புப் படம்) நாக சைதன்யா - சமந்தா திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா தெரிவித்தார். இதைக் குறிப்பிட்டு கஸ்தூரி, "திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து உள்ளார். அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் கேட்கல?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு "உங்க கூட நடித்த ரஜினியும் கமலும் இ…
-
- 0 replies
- 247 views
-
-
இதயம் தொட்ட இசை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், திரைப் பாடல்களின் மூலமாகவேதான் நமது பெரும்பாலான உணர்வுகளை அனுபவித்து முடிக்கிறோம். நம் ஜீவனுடன் ஒன்றிய அப்படிப்பட்ட பாடல்களை நமக்கு வழங்கிய பல அற்புதமான இசையமைப்பாளர்களுடனும், அவர்களின் பாடல்களுடனும்தான் இந்தத் தொடரில் பயணிக்கப்போகிறோம். தவிர, இயக்குநர்கள், பாடலாசிரியர்கள், திரைப்படங்கள் என்று மேலும் திரையுலகம் சார்ந்த பல சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்தத் தொடரில் அலசப்போகிறோம். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, ஆங்கிலம் என்று பல பாடல்களையும் பார்க்கப்போகிறோம். மனிதர்களை இணைக்கும் கலை வடிவங்களில் இசையே முதன்மையானது என்ற வகையில், இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பாடலை எடுத்துக்கொண்டு, அப்பாடலின் மூலம் பெருகும் இசையை …
-
- 32 replies
- 25.4k views
- 1 follower
-