ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143264 topics in this forum
-
காந்திபூங்காவில் நடிகர் விவேக்…. Editorial / 2019 மார்ச் 13 புதன்கிழமை, பி.ப. 01:27 Comments - 0 மட்டக்களப்பு மாநகரசபைக்கும் மட்டக்களப்பு காந்திபூங்காவுக்கும், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் விவேக், இன்று (13) விஜயம் மேற்கொண்டார். மட்டக்களப்பில் திங்கட்கிழமை நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விவேக்கை, மாநகரசபைக்கு வருமாறு, மேயர் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கமைய, மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திபூங்காவுக்கு வருகை தந்த நடிகர் விவேக்கை, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மா. உதயகுமார், மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன், பிரதி மேயர் ஏ.சத்திய சீலன், மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் எனப் பலரும் வரவேற்றனர். தொட…
-
- 2 replies
- 584 views
-
-
காவடி எடுப்போர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் March 15, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடி எடுப்போர் மற்றும் காவடிக்கு முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்.சாவகச்சேரி சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. அது தொடர்பில் சுகாதார திணைக்களம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, ஆலயத்திற்கு நேர்த்தி வைத்து காவடி எடுப்போரின் நலன் கருதி காவடி முள்ளு குத்துவோர் மற்றும் காவடி எடுப்போர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதார முறைகளை பேணாத முட்களால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதனால் கட்டாய…
-
- 1 reply
- 781 views
-
-
உறவுகளை இழந்து வறுமையில் வாடும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்! உறவுகளை பறிகொடுத்து வறுமையில் வாடும் தமக்கு உதவி செய்யுமாறு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் 25 பேருக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ நாம் கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து, உறவுகளை பறிகொடுத்து தற்போதுவரை தமது உறவுகள் எங்கே என தெரியாத நிலையில் வாழ்ந்து வருகின்றோம். அ…
-
- 0 replies
- 543 views
-
-
வடக்கிற்கு புதிய பல்கலைக்கழகம்!- ஓரிரு வாரங்களில் வர்த்தமானி அறிவிப்பு யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதன்படி இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கில் இரண்டு பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்ற போதிலும், பிரச்சினைகள் காரணமாக வடக்கு மாகாணத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் மாத்தி…
-
- 0 replies
- 861 views
-
-
மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை சீரமைத்து சேவையினை ஆரம்பிக்க அரச அதிகாரிகள் தடை March 15, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை சீரமைத்து சேவையினை மீள ஆரம்பிப்பதற்கு அரச அதிகாரிகள் தடையாக உள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட காசநோய் தடுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் சி. யமுனானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள காசநோய் தடுப்பு அலகில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையானது கடந்த வருடம் தெல்லிப்பழை பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது. எ…
-
- 0 replies
- 434 views
-
-
இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் விபத்து – ஒருவர் பலி March 15, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பாரவூர்தி ஒன்று வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது மோதியதில் வீதியில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் விபத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து பாரவூர்தியும் ;, சாரதியும் கிளிநொச்சி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி அக்கராயன் பகுதியை சேர்…
-
- 0 replies
- 345 views
-
-
இராணுவத்திற்கு எதிரான வழக்கு March 15, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர் ஐவருக்கும் எதிரான முக்கிய கட்டளையை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வரும் ஏப்ரல் 22ஆம் வழங்கவுள்ளது. சுருக்கமுறையற்ற விசாரணையில் அரச தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்த்தாக வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி மன்றில் சமர்ப்பணம் செய்ததையடுத்தே யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கட்டளைக்கான திகதியை நிர்ணயித்தார். யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்த…
-
- 0 replies
- 345 views
-
-
இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் – மகிந்த ராஜபக்ச ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்டுள்ள,சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “ஐ.நா மனித உரிமைகள் பேரவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அமெரிக்கா அதிலிருந்து விலகியுள்ளது. இவ்வாறான நிலையில், உள்நாட்டு விவகாரங்களில் – சிறிலங்காவின் நீதித்துறையில் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு இடமளிக்கும் வகையிலான தீர்மானத்துக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கக் கூடாது. 2015 தீர்மானத்துக்கு இணை…
-
- 0 replies
- 753 views
-
-
காணாமல்போனவர்களை தேடும் பெண்களிற்கு நேர்ந்த அவலம்- அமெரிக்க அறிக்கையில் அதிர்ச்சி தகவல் காணாமல்போன தங்கள் கணவன்மார்கள் குறித்து தகவல்களை கோரிய மனைவிமார் அரசாங்க அதிகாரிகளாலும் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள் 2018 இல் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து நீண்ட அறிக்கையை முன்வைத்துள்ள அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. யுத்தத்தில் கொல்லப்பட்ட படையினரின் மனைவிமார் அரசாங்கத்தினால் வழங்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
இண்டர்போலினால் தேடப்படும் 14 இலங்கையர்கள் தேடப்படும் குற்றவாளிகள் என்ற ‘சிவப்பு அறிக்கையில்’ 6872 பெயர்களை இண்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை தனது இணையத் தளத்தில் பிரசுரித்துள்ளது. அதில் 14 பேர் இலங்கையர்கள் ஆகும் இவர்களில் கொஸ்கொட சுஜீ என அழைக்கப்படும் டி சொய்சா ஜகமுனி சுஜீவா (வயது 34), அன்ரனி எமில் லக்ஸ்மி காந்தன் (வயது 42), முனிசாமி தர்மசீலன் (46), விக்னராசா செல்வநாதன் (வயது 31) ஆகியவர்கள் சிறீலங்கா காவல்துறையினால் தேடப்படுபவர்கள் ஆகும். கொஸ்கொட சுஜீ மீது கொலை வழக்கு சம்பந்தமாகவும், எமில் காந்தன் மீது குற்ற மோசடி சம்பந்தமாகவும் சிவப்பு அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு கைக்குண்டுகள் மற்றும் 200 ரவைகளையும் வைத்திருந்ததற்காக தர்மசீலன் மீதும், …
-
- 0 replies
- 775 views
-
-
14 சீன பிரஜைகளுக்கு ஒரு வருட சிறை தண்டனை! சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 14 சீன பிரஜைகளுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களை நேற்று (வியாழக்கிழமை) காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெ முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 14 பேரும் அண்மையில் தடல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் கட்டட நிர்மாண பணிக்கான உதவியாளர்களாக பணியாற்றி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/14-சீன-பிரஜைகளுக்கு-ஒரு-வரு/
-
- 0 replies
- 303 views
-
-
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது, சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தி யாழ் பல்கலைகழக சமூகம் ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தின் விழிப்புணர்வு ஊர்தி இன்று (14.03.19) கிளிநொச்சியை அடைந்தது கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்திப் பயணம் இன்று காலை யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சியை அடைந்தது. எதிர்வரும் 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள கால அவகாசம் வழங்க கூடாது என வலியுறுத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த ஊர்தி பயணம் ஆரம்பிக்கப்பட்டது. http://globaltamilnews.net/2019/116001/
-
- 0 replies
- 367 views
-
-
March 14, 2019 யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தினால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். http://globaltamilnews.net/2019/116013/
-
- 0 replies
- 487 views
-
-
இந்திய- பாகிஸ்தான் நிலைமைகளை உன்னிப்பாக கவனிக்கும் சிறிலங்கா இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்ற நிலை தீவிரமடையக் கூடாது என்றும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் சாஹிட் அகமட் ஹஸ்மத் நேற்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து, புல்வாமா தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்தார். இதன்போது, கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நிலைமைகளை சிறிலங்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இரண்டு நா…
-
- 6 replies
- 776 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வட மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் 8 போர் கொண்ட குழு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்து மகஜா் ஒன்றிணை கையளித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் சார்பில் ஜெனீவா செல்லவுள்ள 3 போ் கொண்ட குழுவில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனையும் ஜனாதிபதி இணைத்துள்ளார். இந்நிலையில் தாம் ஜெனீவாவில் தமிழ் மக்கள் சார்பில் எதையாவது பேசவேண்டுமானால் அதனை தனக்கு நேரடியாகவோ, எழுத்துமூலமாகவோ சமர்பிக்கும்படி ஆளுநர் பகிரங்கமான அறிவித்தல் ஒன்றிணை வெளியிட்டிருந்தார்கள். இதற்கமைய ஆளுநரின் பொதுமக்கள் தினமான புதன்கிழமை கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சர் அமைச்சில் வலிந்து காணா…
-
- 0 replies
- 344 views
-
-
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை அனுசரணை வழங்குவதிலிருந்து விலக வேண்டும் - மஹிந்த (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் ) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை வழங்கி வரும் இணை அனுசரணையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று 27/2 இன் கீழ் விசேட கூற்று ஒன்றினை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இதை குறிப்பிட்டார். மனித உரிமைகளை பலப்படுத்தும் நகர்வில் இலங்கையின் நீதித்துறை பொறிமுறை செயலிழந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டி சர்வதேச தலையீட்டை ஏற்படுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முயற்சிகளை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார். …
-
- 1 reply
- 282 views
-
-
மஹிந்த தலைமையில் இன்று முக்கிய சந்திப்பு ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து அமைக்கவுள்ள பரந்தளவிலான கூட்டணி தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தலைமையில் எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சமசரக்குழு உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , ஜகத் வெல்லவத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரும், சுதந்திர கட்சி சார்பில் பேராசிரியர் றோஹண லக்ஷ்மன் பியதாச, சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோரும் கலந்து கொள்ளவு…
-
- 0 replies
- 204 views
-
-
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா – ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி March 14, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகம் , ஆலய பங்குத்தந்தை , நெடுந்தீவு பிரதேச செயலகம் , உள்ளிட்டவையுடன் இலங்கை கடற்படையினரும் இணைந்து ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இம்முறை திருவிழாவுக்கு யாழ்ப்பாணம் உள்ளடங்கலாக இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் , இந்தியாவில் இருந்தும் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது. ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பும் இலங்கை பக்தர்களுக்கான படக…
-
- 0 replies
- 212 views
-
-
உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் ‘வாடிக்கையாளர் தினம்’ : March 14, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட வாடிக்கையாளர்களின் நீர்ப்பட்டியல் மற்றும் நீர் இணைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை (15) மன்னாரில் ‘வாடிக்கையாளர் தினம்’ நடாத்தப்பட தேசிய நீர் வழங்கல் சபையினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் சபையின் பொறுப்பதிகாரி டி.யசோதரன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்தில் நாளை காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணிவரை குறித்த சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த சேவையின் போது வாடிக்கையா…
-
- 0 replies
- 296 views
-
-
காத்தான்குடியில் ஆசிரியரால் தாக்கப்பட்ட 18 மாணவர்கள் வைத்தியசாலையில் March 14, 2019 காத்தான்குடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவரினால் தாக்குதலுக்குள்ளான 18 மாணவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த ஆசிரியர் காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளர்h எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறித்த பாடாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்கள் மீதே குறித்த ஆசிரியர் கையினாலும் தடியினாலும் கடுமையாக தாக்கியதாக மாணவர்கள் தெரிவிதுள்ளனர். http://globaltamilnews.net/2019/115983/
-
- 0 replies
- 296 views
-
-
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு எதிர்வரும் 16 யாழில் இடம்பெறவிருக்கும் மாபெரும் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழின அழிப்பு அடையாள ஊர்தியுடன் தமிழர் பிரதேசங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.....
-
- 1 reply
- 143 views
-
-
ஜெனீவா செல்வது யார்? – மஹிந்த சமரசிங்க விளக்கம் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பில் இரண்டு குழுக்கள் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை முன்வைப்பதிலும் பார்க்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானதாக அமையுமென ஜனாதிபதி நம்புவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம்.பி. மஹிந்த சமரசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கைத் தரப்பில் ஒரு குழுவை பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஜனாதிபதி இறுதித் தீர்மானம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் அ…
-
- 0 replies
- 404 views
-
-
வாக்கெடுப்பை நடத்த விடாமல் மைத்திரியைக் காப்பாற்றிய ரணில் சிறிலங்கா அதிபருக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிக்கப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் எச்சரித்திருந்த போதும், வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே அந்த நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பின் மீது, நேற்று குழுநிலை விவாதங்கள் நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகின. சிறிலங்கா அதிபருக்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட ஒதுக்கீடுகள் குறித்த விவாதம் இடம்பெற்றது. நேற்றுக்காலை 10.30 மணிக்குத் தொடங்கிய விவாதத்தில், உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபரை விமர்சித்து காட்டமான உரைகளை நிகழ்த்தின…
-
- 0 replies
- 402 views
-
-
அமெரிக்க தூதுவரைத் தேடிச் சென்ற மகிந்த – பசில் அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்சுடன், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பில் அமெரிக்கத் தூதுவரை மகிந்த ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருடன் இணைந்து தாம் சென்று சந்தித்ததாக, பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அனைத்துலக சமூகத்துடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டிய தேவை உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார். அத்துடன், பல்வேறு நாடுகளின் தூதுவர்களை தொடர்ச்சியாகச் சந்தித்…
-
- 0 replies
- 270 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஜெனிவா தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரித்தானியா, அயர்லாந்து, கனடா, ஜேர்மனி, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா ஆகிய ஆறு நாடுகள் இணைந்து, சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவை, பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளன. இந்த வரைவுக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது. இந்த நிலையில், ஜெனிவா தீர்மான வரைவை, அரசாங்கத்தின் சார்பில் அவை முதல்வர் லக்ஸ்மன் கி்ரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் பின்னர் உரையாற்றிய அவர், “இது சிறிலங்காவுக்கு சாதக…
-
- 0 replies
- 203 views
-