Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னாரில் மனித புதைகுழியிலிருந்து இன்னும் பல உடல்கள் மீட்கப்படலாம் என அகழ்வுபணியில் ஈடுபட்டுள்ள தடயவியல் பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார் பிரிட்டனின் இணைய செய்தித்தாள் இன்டிபென்டன்ட்டிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை மன்னார் புதைகுழிக்குள் காணப்படுவது ஒரு சமூகம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் புதைகுழியே இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி என பேராசிரியர் ராஜ்சோமதேவ தெரிவித்துள்ளார். நாங்கள் இதுவரை 70 வீதமான புதைகுழியையே அகழ்வுசெய்திருக்கின்றோம் என தெரிவித்துள்ள அவர் இதன்காரணமாக மீட்கப்படவுள்ள உடல்களின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என…

  2. புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை. புதிய அமைச்சரவையை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான வாதப்பிரதி வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே உயர் நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது. மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளத…

  3. (நா.தனுஜா) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர். தற்போது பிரபாகரனுக்கு பதிலாக சுமந்திரன் தலைமையிலான அணியினர் செயற்பட்டு வருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியை பின்னிருந்து சுமந்திரனே இயக்குகின்றார். இவ்வாறு சுமந்திரன் தலைமையில் இயங்கும் அணியிடமும், நிழல் பிரதமராக செயற்படும் சம்பந்தனிடமும் நாட்டைக் கையளிப்பதற்கு நாம் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்றைய தினம் மஹிந்த அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்…

  4. December 14, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றைய தினம் இரவு சந்தித்து உரையாடியுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமை தவறு என நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், நடைபெற்ற இந்த சந்திப்பின்போது சபாநாயகர் கருஜெய சூரியவை பிரதமராக நியமிக்க தான் விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். எனினும் ரணில் விக்கிரமசிங்க இதற்கு இணங்கவில்லை என்று தெரிவிக்கப…

  5. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இலங்கையில் சமகாலத்தில் அரசியல் குழப்பம் நிலவிவரும் நிலையில் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பெருமளவு இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் ஊடுறுவதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து இன்று இணையம் யாழ்.ஊடகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இணையத்தின் சார்பில் கருத்து தெரிவித்த மொஹமட் ஆலம் மற்றும் பிறான்சிஸ் ஜோசப் ஆகியோர் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், இன்று காலை வடமாகாண கடற்றொழ…

  6. (நா.தனுஜா) நாட்டைப் பிளவுபடுத்துவதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி சம்மதம் தெரிவித்துள்ளமையாலேயே ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. அவ்வாறு நாட்டைப் பிரிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ துணை போயிருந்தால் 113 பேரின் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வது கடினமானதாக அமைந்திருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  7. (இரோஷா வேலு) பண்டிகை காலங்களில் நாடு தழுவிய ரீதியில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரித்து காணப்பட்ட போதிலும், கொழும்பு நகரின் பாதுகாப்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. இதன்மூலம் கொழும்பு நகரில் மாத்திரம் இன்று 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வரையில் 2000க்கும் அதிகமான பொலிஸார் கடமைகளில் அமர்த்தப்படவுள்ளனர். இவர்கள் பொலிஸ் சீருடையிலும் சிவில் உடையிலும் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவர். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய பகுதிகள் அனைத்தும் குறித்த பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதற்கும், கலகம் மற்று…

  8. மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஆரம்பம் Editorial / 2018 டிசெம்பர் 14 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:57 Comments - 0 மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஆரம்பம் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்றத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளன. நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார மற்றும் விஜித மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட…

  9. மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவி மற்றும் அவரது அமைச்சரவை செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் ஏகமனதாக மறுப்புத் தெரிவித்துள்ளது. இதேவேளை, பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் முகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. தாக்கல்செய்த விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்…

  10. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று மாலை இந் நினைவேந்தல் நடைபெற்றது. அரசில் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றையதினம் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பல இடங்களிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/106579/

  11. December 14, 2018 தீவுகளுக்கான பயணிகள் படகுசேவைகளில் ஈடுபடும் படகுகளின் தரம் மற்றும் கடல்போக்குவரத்துக்கான தகுதி சான்றிதழ்களை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்துள்ளார். எழுவைதீவு , அனலை தீவு உள்ளிட்ட தீவுகளுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபட்டுவந்த எழுதாரகை படகின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை சம்பந்தமாக ஆராயும் விசேட கூட்டம் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இங்கு கருத்து தெரிவித்த உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக்டிறஞ்சன் குறித்த எழுதாரகை படகினை பராமரிப்பு செய்வதற்கு போதுமான…

  12. December 14, 2018 எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளதாகவும் இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளதோடு ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்த பலருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தலைமையிலான குழுவினர் சிலர் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக அரியவருகின்றது. மேலும் இவ்விடயம் தொடர்பில் நேற்றிரவு ஜனாதிபதியை சந்தித்து தெரியப…

  13. மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை கொண்டுவர முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. அதில் நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வௌியிட்ட வர்தமானி அறிவித்தல் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பத்திரிகையை கொண்டுவர மக்கள் விடுதலை முன்னணி முடிவு செய்துள்ளது. http://athavannews.com/ஜனாதிபதி-மைத்திரிக்கு-எ-3/

    • 4 replies
    • 923 views
  14. திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட (தென்னன் மரபு அடி) தென்னமரவாடி என்ற கிராம மக்கள் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வாருவதோடு தமது பகுதியில் உள்ள கந்தசாமி மலையையும் அங்குள்ள முருகன் ஆலயத்தையும் காப்பாற்றி தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட (தென்னன் மரபு அடி) தென்னமரவாடி என்ற கிராமத்தில் காணப்படும் தென்னன் என்ற அரசன் காலத்தில் இருந்த கந்தசாமி மலை மற்றும் அதன்மேல் உள்ள முருகன் ஆலயம் என்பன தாம் 1984 ம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றதன் பின்னர் அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மீண்டும் தாம் மீள்குட…

  15. இடைக்கால தடைக்கு எதிரான மனு: விசாரணை ஆரம்பம் (2ஆம் இணைப்பு) அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக அலுவிஹார மற்றும் வி.மலல்கொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மனுவில் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 122 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், சஜித் பிரேமதாச …

  16. ஜனாதிபதியின் குடியுரிமைக்கு ஆபத்து: விஜித ஹேரத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டுள்ளமை உயர் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிப்பட்டுள்ளமையால் அவரின் குடியுரிமை பறிபோவதற்கு வாய்ப்புள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணாணதென உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதி அரசியலமைப்பு தொடர்பாக நன்கு அறிந்திருந்தும் அதற்கு முரணான வகையில் செயற்படுவாராயின் அவருக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் 38ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர…

  17. "திங்கள் புதிய அரசாங்கம் ; ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் நான் ஒன்றும் செய்ய முடியாது" - மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் திங்­கட்கிழமையன்று புதிய அர­சாங்கம் அமைக்­கப்­படும். ஜனா­தி­ப­தி­யாக நாம் தொடர்ந்து செயற்­ப­டுவேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியினர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். மேலும் ஜனா­தி­பதியாக நான் இருக்கும் வரையில் ரணி­லுக்கு எதி­…

  18. மடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் மடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும்,ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஐனாதிபதி இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு சரியான தொரு முடிவை எமது மக்களுக்கும், எமது மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய செயலாளர் ஜே.ஜே.கெனடி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்ப…

  19. மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம். மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ளமையினால் மேற்படி அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வகழ்வுப் பணிகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த புதைகுழியில் இருந்து இதுவரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், அகழ்வு பணிகளின்போது எடு…

  20. மர்ம காய்ச்சலால் யாழ்.மாணவன் உயிரிழப்பு யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவனொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விதுர்சன் (வயது 14) என்ற மாணவன் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 11ஆம் திகதி இரவு மீண்டும் காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதனை அடுத்து, குடும்பத்தினர் அவரை சங்கானை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருப்பினும் நேற்றைய தினம் சிகிச்சை …

  21. நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் வெளியிட்ட அரசியதழ் அறிவிப்பு, சட்டவிரோதமானது என்று, உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு குறித்து, இந்த வழக்கில் முன்னிலையான சட்டவாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இரா.சம்பந்தனின் சட்டவாளர் கனகஈஸ்வரன் ஒரு மனதாக அளிக்கப்பட்ட தீர்ப்பையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த தீர்ப்பை மதித்து, அதன்படி செயற்படுவார்கள் என்று நம்புகிறோம் எம்.ஏ.சுமந்திரன் உச்சநீதிமன்றம் குறுகிய நாட்களில் விசாரித்து இந்த வரலாற்றுத் தீர்ப்பை ஒருமனதாக அறிவித்துள்ளது. இது சிறிலங்கா…

  22. ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கை தமிழரசுக்கட்சி- தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவராகிய நானும் இணைந்து கைசாத்திட்டதாக தெரிவிக்கும் ஆவணமொன்று வெளியாகியுள்ளது. ஐக்கியதேசிய கட்சி தலைவருடன் இணைந்து நான் அவ்வாறான ஆவணம் எதிலும் கைச்சாத்திடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் அவ்வாறான ஆவணம் போலியானது என்பதையும் நான் தெரிவிக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/46324

  23. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததால்தான், நேற்றைய தினம் நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்கும் யோசனையின் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தான் கலந்து கொள்ளவில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி்னர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நெருக்கடியில் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிப்பதில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிம் தனது கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) சில வாரங்களுக்கு முன்னர் கூடி தீர்ம…

  24. ஐக்கிய தேசிய முன்னணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒற்றையாட்சியையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். கடந்த காலங்களில் சமஷ்டி ஆட்சிப் பொறிமுறை தொடர்பில் அழுத்தம் கொடுத்துவந்த இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்த விடையத்திலும் விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதாகவும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்சன ராஜகருணா, அஜித் பீ பெரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். அது மாத்திரமன்றி ஸ்ரீலங்காவில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை அவ்வாறே பேணுவதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர…

  25. முல்லைத்தீவில் அரசியல் குழப்ப நிலையை சாதகமாக்கி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பாரிய புத்தர்சிலை திறக்க ஏற்பாடு December 13, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் பல நெடுங்காலமாக இருந்த பிள்ளையார் ஆலய வளாகத்தில் தற்போது பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு திறப்பதற்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகிறது இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த காலம் முதல் இறுதி யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து செல்லும் வரை பல நெடுங்காலமாக பிள்ளையார் ஆலயம் தங்களால் வழிபடப்பட்டு வந்ததாக மக்கள் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.