ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143287 topics in this forum
-
நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதும் மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டினர்- கோத்தபாய தேர்தலிற்காக இன்னமும் ஒன்றரை வருடங்கள் காத்திருந்திருந்தால் மகிந்த ராஜபக்சவினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரதமராகயிருக்கமுடியும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஆனால் நாடு அத்தனை வருடகாலம் பொறுமையாகயிருந்திருக்குமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னமும் ஒன்றரை வருடம் பொறுமையாகயிருந்திருந்தால் மகிந்த ராஜபக்சவினால் பிரதமராகியிருக்க முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சவினால் அவ்வாறுபொறுமையாகயிருந்த முடியும் என்பது எனக்கு தெரியும் ஆனால் நாடு ஒன்றரை வருடங்கள் பொறுமையாக காத்திருந்திருக்க கூடிய நிலையில் காணப்பட…
-
- 2 replies
- 654 views
-
-
ஜனாதிபதி – அனைத்து கட்சி உறுப்பினர்கள் – சபாநாயகருடன் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் கலந்துரையாடல் November 17, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பெரில் நாளை மாலை 5மணிக்கு பாராளுமன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்…
-
- 0 replies
- 404 views
-
-
பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது 14 SLNG படைபிரிவின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பதுங்குகுழியே இன்று உடைக்கப்படுகிறது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இந்த பதுங்குகுழியை கடந்த வருடம் வரை பார்வையிட்டு வந்தனர் அது இவ் வருடம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது இதன் போது ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கோரிய போத…
-
- 0 replies
- 566 views
-
-
இறந்த சிறுவனின் சடலத்திற்கு உரிமை கோரும் இரு தரப்பினர் வவுனியாவில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் பட்டக்காடு குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்களில் 14 வயதுடைய உ.றொசான் என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தாய் தந்தை அற்ற இந்நிலையில் குறித்த சிறுவனின் சடலத்தினைப் பொறுப்பேற்பதற்கு சிறுவனின் தாயின் சகோதரர்களும், உறவினர்களும், தந்தையின் சதோரர்களும், உறவினர்களும் வவுனியா வைத்தியசாலையில் உரிமை கோரிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மரண விசாரணை அதிகாரி, பொலிஸார் தலையிட்டு சடலத்தினை தந்தையின் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் சிறுவனின் தாயின் சகோதரர்கள், உறவினர்கள் சடலத்தை பொறுப…
-
- 0 replies
- 436 views
-
-
உறவுகளை நினைவு கூருவதற்காக துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். ரவிகரன் மக்கள் தங்கள் உறவுகளை விளக்கேற்றி நினைவு கூர்வதற்கான சந்தர்ப்பத்தை முழுமையாக ஏற்படுத்தக்கூடிய வகையில் மாவீரர் துயிலுமில்லங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா - ரவிகரன் தெரிவித்துள்ளார். மாவீரர் தினத்தை முன்னிட்டு தாயகப் பிரதேசமெங்கும் காணப்படும் துயிலுமில்லங்கள் துப்பரவு செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில் முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் 2018.10.27ஆம் நாளன்று நடைபெற்ற துப்பரவுப் பணிகளின் தொடர்ச்சியாக இன்றைய நாள் துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ரவி…
-
- 0 replies
- 299 views
-
-
அளம்பில் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் மீளவும் நடைபெற்றன முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் மீண்டும் இன்று இடம்பெற்றுள்ளன.கடந்த 2018.10.27ஆம் நாள் அன்று துப்பரவுப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இதன் தொடர்சியாகவே 2018.11.17 இன்றைய நாள் துப்பரவுப்பணிகள் இடம்பெற்றுள்ளன.மேலும் துப்பரவுப்பணியில் கலந்துகொண்ட மக்கள், துயிலுமில்லத்தில் இருக்கும் இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தனர்.இந்த துப்பரவுப்பணிகளை அந்தப்பகுதி மக்கள் பலர் ஒன்றுகூடி மேற்கொண்டனர். அவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்திருந்தமை குறி…
-
- 0 replies
- 318 views
-
-
தலைமன்னார் - இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை ஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் சபரிமலைக்கு புனித யாத்திரை செய்வதோடு, ஏனைய தென் இந்திய புனிதத் தலங்களுக்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனிதயாத்திரை மேற்கொள்கின்றனர். அவர்களின் பயணத்தை இலகுபடுத்துவதற்கும், 100 கிலோவுக்கும் அதிகமான பொதிகளை தம்மோடு எடுத்துச் செல்வதற்கும் வசதியாக தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்குமிடையே கப்பல் போக்குவரத்தைநடத்துவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று (17) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப யாத்திரைக்குழுவினருடனான சந்திப்புத் தொடர்பா…
-
- 0 replies
- 287 views
-
-
முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவுடன் பதவிக்கு வந்தபடியால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை: நகரசபை தவிசாளர் வவுனியா பள்ளிவாசலிலுக்கு அருகே காணப்படும் சட்டவிரோத கட்டிடங்கள் இன்று காலை மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உப தவிசாளர் நகர பிதா தற்காலிக தடையுத்தரவினை பிறப்பித்தார். வவுனியா பள்ளிவாசலுக்கு அருகே வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகரசபைக்கு உரித்தான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத வியாபார நிலையம் இன்றையதினம் காலை மீள்புனரமைப்பு செய்யப்பட்டது. இவ் விடயம் தொடர்பாக பொதுமக்கள் வவுனியா நகரசபை தலைவர் உட்பட பலருக்கு தகவலை தெரிவித்திருந்த போதிலும் எவருமே பல மணிநேரமாக அவ்விடத்திற்கு சமூகமளிக்கவில்லை. குறித்த…
-
- 0 replies
- 245 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?- மங்கள தகவல் எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகைள மகிந்த தரப்பினர் இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் தனது டுவிட்டரில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு போலி பிரதமருக்கு ஜனாதிபதி தி;ங்கட்கிழமை வரை காலக்கெடு வழங்கியுள்ளார் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இலஞ்சவிளையாட்டு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது,இலஞ்சம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுவினரிற்கு யோசித ராஜபக்ச தலைமை தாங்குகின்றார் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 491 views
-
-
சம்பந்தனை சந்திக்க அழைக்கிறார் மைத்திரி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. நாளை பிற்பகல் 5 மணிக்கு அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து விவாதிக்கவே, கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு சிறிலங்கா அதிபர் அழைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.puthinappalakai.net/2018/11/17/news/34620
-
- 3 replies
- 661 views
-
-
நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியாயின் பதவி விலகுவேன் – மஹிந்த நாடாளுமன்றம் இன்றளவில் நாடக கூடமாக மாறிவிட்டதாகவும், சட்டரீதியான வகையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறந்துவிட்டு செல்லத் தயார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (வௌ்ளிக்கிழமை) கசாகல விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது எதிர்ப்புகளை வௌிப்படுத்துவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை, எனினும், நாடாளுமன்றத்திற்கு கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் எடுத்து வரப்பட்டமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இருந்த போதும் இதுவரை எந்தவி…
-
- 2 replies
- 630 views
-
-
முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை விட்டுக்கொடுக்க தயார்: மஹிந்த தரப்பு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொருட்டு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை விட்டுக் கொடுக்கவும் தயார் என மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்ற அரச ஆதரவு கட்சித் தலைவர்கள் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் சிறுபான்மை சமூகத்தின் கட்சிகளை அரசாங்கத்திற்குள் இணைப்பது தொடர்பாக அவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தீர்மானித்துள்ளது. அதன்படி ஐக்கிய தேசிய முன்னணியி…
-
- 0 replies
- 295 views
-
-
ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது : மைத்ரி மீண்டும் அறிவிப்பு “ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச்சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். “இன்றைய நம்பிக்கையில்லாப் பிரேரணை தீர்மானத்தினையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். நேற்று எனக்குச் சொன்ன எதனையும் ஐக்கி…
-
- 2 replies
- 504 views
-
-
மகிந்தவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை November 17, 2018 பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பாராளுமன்றம் கூடும் போது பெரும்பாண்மையை நிரூபிக்க மகிந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்காகவே அவ்வாறு முக்கிய கூட்டம் கூட்டப்பட்டு கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/2018/103637/
-
- 0 replies
- 496 views
-
-
பெரும்பான்மை இல்லாமல் அரசாங்கம் எதற்கு? – மகிந்த தரப்பைக் கேட்கும் குமார வெல்கம நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். நேற்று நடந்த குழப்பங்களை அடுத்து கருத்து வெளியிட்டுள்ள அவர். “நம்பிக்கையில்லா பிரேரணையில் எமது வாக்குகளை அளிக்க முடியும். ஆனால், எமது கட்சியில் உள்ள சில சக்திகள் அதனை அனுமதிக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஒரு மதிநுட்பமான அரசியல்வாதி என்பதை நான் அறிவேன். இதனை அவர் அனுமதிக்கமாட்டார். அவர்களுக்குப் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் எ…
-
- 0 replies
- 220 views
-
-
பெரும்பான்மை இல்லாத மஹிந்த பிரதமர் அல்ல- ஆர். சம்பந்தன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாத மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கோ, அவரது அரசாங்கம் பதவியிலிருப்பதற்கோ அரசியலமைப்பில் இடமில்லையெனவும், அவ்வாறு இருப்பதாக கூறுவது சட்டத்திற்கு முரணானது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அத்தகையவர்கள் தமது பதவிகளைத் துறக்காவிட்டால் அவர்கள், ஜனநாயக விரோதிகளாகவே கருதப்படுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவில்லை. பாராளு…
-
- 1 reply
- 625 views
-
-
கிழக்கு மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யவே அரசாங்கத்தோடு இணைந்தேன் - வியாழேந்திரன்
-
- 0 replies
- 234 views
-
-
வரவு- செலவு திட்டத்தின் பின்னரே தேர்தல்!- அஜித் பி பெரேரா எதிர்வரும் ஆண்டின் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தடுப்பதற்கு பொருத்தமான பாதீட்டை நிறைவேற்றியதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல தாம் தயாராக உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அஜித் பி பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தலுக்கு செல்ல நாம் தயாராக உள்ளோம். மேலும் மக்கள் எமக்கு 5 ஆண்டுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கே அதிகாரத்தினை வழங்கியுள்ளனர். ஆகை…
-
- 0 replies
- 411 views
-
-
சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.இச் சம்பவம் பற்றி தெரியவருகையில், முள்ளியவளை பூதன் வயல் பகுதியில் வசித்துவரும் பெண் ஒருவர் தனது 5 வயதுடைய சிறுமியை அயல் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அயல் வீட்டில் இருந்த 13 வயதுடைய சிறுவனும் 74 வயதுடைய சிறுவனின் தந்தையும் குறித்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கடந்த (14.11. 2018 ) அன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி பெண் உறுப்பு வேதனையால் தவித்த போது கடந்த ( 15.11.…
-
- 4 replies
- 832 views
-
-
வியாழேந்திரன் TNAயில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார்… November 16, 2018 1 Min Read புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்டவுடன் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விரைவில் விலக்கப்படுவார். அவர், இனிமேல் நாடாளுமன்ற உறுப்பினராக தொடரமுடியாது. அதற்குரிய நடவடிக்கைகள் …
-
- 1 reply
- 575 views
-
-
அரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலான போரில் ஜனநாயகம் வெற்றிபெற்றது…. November 16, 2018 புலிப் பயங்கர வாதம் என உச்சரித்த வாய்கள் அரச பயங்கரவாதம் என உச்சரிக்கத் தொடங்கியுள்ளன…. அரச பயங்கரவாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் இடையிலேயே இன்று பாராளுமன்றத்தில் ஒரு போராட்டம் இடம்பெற்றது, இதில் ஜனநாயகம் வெற்றிபெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அரச அதிகாரத்தை பாராளுமன்றத்தில் மோசமாக பயன்படுத்தும் இவர்கள் தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். பாரளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் சர்ச்சைக்கு பினனர் ஐக்கிய தேசிய முன்னணியினால் பாராளுமன்ற கட்டிடத்தொக…
-
- 0 replies
- 404 views
-
-
அருச்சுனன் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கஜா புயல் காரணமாகத் தற்போது யாழ்ப்பாணம் குடாநாட்டில் கடும் காற்றுடன் மழை பெய்கின்றது. அதனால் மக்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு முடங்கியுள்ளனர். இன்று இரவு 8 மணியளவில் காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. மழையும் பெய்யத் தொடங்கியது. காங்கேசன்துறை, காரைநகர், வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமானதாகக் காணப்பட்டது. வடமராட்சியில் பலத்த காற்று மற்றும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்ப…
-
- 1 reply
- 514 views
-
-
கொலைச்சதிக்காரர்களின் உண்மை முகம் இன்று வெளிப்பட்டது – அநுரகுமார நாடாளுமன்றத்தில் கொலை சதித்திட்டத்தினை மேற்கொண்டிருந்தவர்கள் ஜனாதிபதியின் ஆதரவாளர்களே என்பது இன்று நிரூபணமாகியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்பநிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மஹிந்த ராஜபக்ஷ மற்று…
-
- 0 replies
- 563 views
-
-
நாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுப்பேன் – சபாநாயகர் நாடாளுமன்றத்திற்காக உயிரையும் கொடுக்க தயார் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்பநிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சவால்களையும் எதிர்கொண்டு நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு உயிரைக் கொடுத்தேனும் செயற்படுவேன் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்ட…
-
- 0 replies
- 308 views
-
-
நாடாளுமன்றில் பொலிஸார் மீதும் கடும் தாக்குதல் இன்று நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது மகிந்த ராஜபக்ச தரப்பினர் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தினர். குறிப்பாக பொலிஸார் மீதான தாக்குதலில் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோர் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சபாநாயகரை நோக்கி ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ எறிந்த கதிரை பொலிஸார்மீது விழுந்ததனால் பொலிஸார் சிலர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் அமர்ந்து மகிந்த ராஜபக்ச மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தினை 3வது தடவையாகவும் நிறைவேற்றியபோது மகிந்த தரப்பினர் கடுமையான அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது மகிந்த தரப்பினரிடமிருந்…
-
- 0 replies
- 553 views
-