Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நல்லாட்சியில் கிழக்கில் 11 இந்து ஆலயங்கள் உடைப்பு: வியாழேந்திரன் I நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைந்துள்ள நரசிங்க ஆலயத்தின் விக்கிரகங்கள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தை இன்று (வியாழக்கிழமை) நேரில் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்…

  2. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதனை அவதானித்தோம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்தார். மன்னார் பிரஜைகள் குழுவில் இன்று வியாழக்கிழமை(20) காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …

  3. கிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை தொல்லியல் குழு ஆய்வு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி டிப்போச் சந்தியில் 2009 க்கு பின்னர் அமைக்கப்பட்ட புதிய செங்கல் சுவர்கள் கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் முன்னிலையில் கரைச்சி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது. குறித்த சம்பவம் தென்னிலங்கையில் தொல்லியல் சின்னங்கள் உடைக்கப்பட்டதாக செய்திகள் பரவியதனை தொடர்ந்து நேற்று(18-09-2018) வவுனியாவிலிருந்து வருகை தந்த விசேட தொல்லியல் குழு ஒன்று ஆய்வில் ஈடுப்பட்டது. வவுனியா தொல்பியல் திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறிதத் பகுதியில் ஆய்வு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர் ஏற்கனவே நகர திட்டமிட…

  4. பொலிஸ் மா அதிபரை இராஜினாமா செய்யுமாறு அறிவிப்பு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, அப்பதவியை இராஜினாமா செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் அறிவித்துள்ளனர். இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், அந்த இராஜினாமா இடம்பெற வேண்டுமென்றும், ஜனாதிபதியும் பிரதமரும், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/பொலிஸ்-மா-அதிபரை-இராஜினாமா-செய்யுமாறு-அறிவிப்பு/175-222247

  5. சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழில் ‘சுற்றுலாவும் டிஜிற்றல் பரிமாற்றமும்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச சுற்றுலா தின தேசிய நிகழ்வு இம்முறை யாழ் மாவட்டத்தில் பிரமாண்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாப் பணியகம் அறிவித்துள்ளது. யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 26, 27, 28ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சுற்றுலா தின நிகழ்வு தொடர்பில் வட மாகாண சுற்றுலா பணியக அதிகாரிகள் உடனான ஊடக சந்திப்பு நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு குறித்த நிகழ்வு தொடர்பில் விளக்கமளித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பேராசிரியர் க.தேவராஜா, ‘மத்திய அரசின் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சி…

  6. வெப்பம், காலநிலை மாற்றத்தால் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தல் - உலக வங்கி அதிகரித்துவரும் வெப்பநிலையும் மாற்றமடைந்துவரும் மழைவீழ்ச்சி காலங்களும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதுடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் வாழ்க்கைத் தரத்தையும் குறைத்துவிடக்கூடும் என உலக வங்கியின் புதிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் அபாய வலயங்கள் தொடர்பாக உலக வங்கி விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி மாற்றங்கள் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படுத்தும் தாக்கம், தெற்காசியாவின் சனத்தொகையில் ஏறத்தாழ அரைவாசி அளவிலானோர் அபாய வ…

  7. சதோச வளாகத்தில் இது வரை 102 மனித எச்சங்கள் மீட்பு மன்னார் 'சதோச' வளாகத்தில் புதிய கட்டடம் அமைப்பதற்காக அகழ்வுகள் மேற்கொன்ட சமயத்தில் சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்ப்டதை தொடர்ந்து குறித்த வளாத்தில் இன்று திங்கட்கிழமையுடன் 58 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த அகழ்வு பணியானது கடந்த 24 திகதி வெள்ளிக்கிழமை பகலுடன் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை வழமை போல் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. இது வரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்…

  8. அனு­ம­தி­யின்றி கட­லட்டை பிடித்­த­வர்­கள் மறி­ய­லில் வட­ம­ராட்சி கிழக்­கில் அனு­ம­தி­யின்றி கடல்டை பிடித்­த­னர் என்ற குற்­றச் சாட்­டில் கைது செய்­யப்­பட்ட வெளி­மா­வட்­டத்­தைச் சேர்ந்த இரண்டு சந்­தேக நபர்­களை எதிர்­வ­ரும் 26 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு பருத்­தித்­துறை நீதி­வான் உத்­த­ர­விட்­டார். வட­ம­ராட்சி கிழக்கு கடல் பரப்­பில் கடல் அட்டை பிடித்த வெளி­மா­வட்­டத்­தைச் சேர்ந்த 8 பேரை உள்­ளூர் மீன­வர்­கள் நேற்று முன்­தி­னம் தடுத்து வைத்­தி­ருத்­த­னர்.அதன் பின்­னர் பொலி­ஸா­ருக்­கும் பிர­தேச வாசி­க­ளுக்­கும் இடையே நீண்ட முறு­கல் நிலை­யின் பின்­னர் சந்­தேக நபர்­களை பொலி­ஸார் அழைத்­துச் சென்­ற­னர். …

  9. இராணுவத்தினரை தமிழ் அரசியல் கைதிகளுடன் ஒப்பிட முடியாது : சுமந்திரன் இராணுவ வீரர்களையும், தமிழ் அரசியல் கைதிகளையும் சமமாக ஒப்பிட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவ வீரர்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், ”தமிழ் அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு…

  10. மைத்திரி, ரணிலுக்கு சம்பந்தன் அவசர கடிதம் – இன்று திருமலையில் முக்கிய சந்திப்பு தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு, வாய்ப்புத் தருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருக்கு இரா.சம்பந்தன், கடிதங்களை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், சிறிலங்கா அதிபருடனான கடந்த சந்திப்பின் போது, எடுக்கப்பட்ட முடிவுகள் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மற்றொரு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்ட…

  11. வாள்முனையில் கொள்ளை – அதிர்ச்சியில் நிதி நிறுவனம்!! யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது. சுமார் 18 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர். https://newuthayan.com/story/10/வாள்முனையில்-கொள்ளை-அதிர்ச்சியில்-நிதி-நிறுவனம்.html

  12. யாழ். வீதி ஒழுங்குப் பிரச்சினை ; விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் யாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் 15 இடங்களில் வீதி ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளதாகவும், அவற்றை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியபோது அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தின் போக்குவரத்து பிரச்சசினைகள் மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டு இருந்தேன். அதன்போது, யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துக்ளை கட்டுப்படுத்தும் நோக்கில் நாம் வீதி ஒழுங்கு தொடர்பாக…

  13. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இனந்தெரியாதோரால் தாக்குதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள இந்த அலுவலகத்தின் மீது நேற்றிரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- நேற்று இரவு 11 மணியளவில் மேற்படி கட்சியின் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்று கட்சியின் பெயர் பலகையை அடித்து சேதப்படுத்தியுள்ளது. இதன்போது கட்சியின் வயதான உறுப்பினர் ஒருவர் அந்த அலுவலகத்திற்குள் இருந்துள்…

  14. தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தனி ஈழம் கேட்பதற்கு தீனி போடுவதாக அமையும் என்கிறார் ஸ்ரீதரன் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) நாட்டில் தனி ஈழம் சிந்தனை வர கூடாதென்றால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு அநீதிகள் இடம்பெற கூடாது. அரச நிர்வாக போட்டி பரீட்சைகளில் தொடர்ந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது தனி ஈழம் கேட்பதற்கு அரசாங்கம் தீனி போடுவதாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். அத்துடன் மலையக அபிவிருத்தி அதிகார சபை மற்றும் பிரதேச சபை சட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டமை பாராட்டதக்கது. ஆகவே இந்த வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார…

  15. விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார் அட்மிரல் விஜேகுணரத்ன பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன விரைவில் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்படுவார் என்று சிறிலங்கா காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 2008-09 காலப்பகுதியில் 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் தப்பிச் செல்ல உதவினார் என்று குற்றம்சாட்டப்படும், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கடந்த 10ஆம் நாள், குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு அழைத்திருந்தது. அன்றைய நாள் அவரைக் கைது செய்யும் திட்டம் இருந்ததாகவும் கூறப்பட்டது. எனினும், அவர் அன்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முன்னிலையாகாமல், அத…

  16. சம்பிக்கவின் யோசனையை கூட்டமைப்பு நிராகரிப்பு தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகள் மற்றும் போர்க்குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்காப் படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொதுமன்னிப்பு அளித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற யோசனை ஒன்றை சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “போர்க்குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா படையி…

  17. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் வழங்கப்படாது என்றும், அதனை விமானப்படையே முன்னெடுக்கும் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கூட்டு எதிரணி உறுப்பினர் விமல் வீரவன்ச எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என்ற விமல் வீரவன்சவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், நிமல் சிறிபால டி சில்வா, “அவ்வாறு எந்த திட்டமும் இல்லை, பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படாது. விமானப்படையின் உதவியுடனேயே புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. …

  18. யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள்!- தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைப்பு யாழ். நூலகத்திற்கு தமிழ்நாடு அரசாங்கத்தினால் 50 ஆயிரம் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. தமிழகத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பங்குபற்றுதலுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷணனின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது, யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள் கையளிக்கப்பட்டதுடன், வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் வாசிக சாலைகளுக்கு புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நிதி வழங்கப்பட்டும் உள்ளது. http://athavannews.com/யாழ்…

  19. அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில்…

    • 4 replies
    • 2.1k views
  20. ஐ.நா.வை நோக்கிய 1.6 மில்லியன் மக்களின் கோரிக்கைக்கு அமைய இலங்கை விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டிய கடப்பாடு ஐ.நா.வுக்கு உண்டு. அதனைத்தான் வருகின்றதீர்மானத்தின் உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவித்த நாடு கடந் தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன், அதைவிடுத்து தற்போதைய தீர்மானத்தை மீண்டும் கால அவகாசத்துடன் நீடிக்க வைப்பது என்பது நீதிக்காக காத்திருக்கும் மக்களை ஏமாற்றுகின்ற செயலாக அமைந்துவிடும் என்றும் தெரிவித்தார். ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்; கேள்வி : இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைச்சபையில் கால அவகாசத்துடன் கூடிய மற்றுமொரு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்…

  21. தமிழ் ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறிலங்காவின் பெண் படை அதிகாரிகள்: அதிர்ச்சித் தகவல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் உட்பட தமிழ்ஆண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவம், பொலிஸ்உட்பட அரச படையினர் மத்தியில் பெண் அதிகாரிகளும் இருந்ததாக ஜெனீவாவில் இன்றைய தினம்வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் அதிர்ச்சித் தகவலொன்றுஅம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறிலங்கா அரசினால்அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியில் தடுப்புகாவலில்வைத்து சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களினால் அம்பலப்படுத்தப்பட்டமிகவும் பயங்கரவமான தகவல்களை அடங்கிய இந்…

  22. நந்திக்கடலில் வழங்கப்பட்டதே அரசியல் தீர்வு - மேலும் தீர்வுகள் அவசியமில்லை! இலங்கைக்குள் இனப் பிரச்சினை என்று எதுவுமில்லை. நந்திக்கடலில் வழங்கப்பட்டது அரசியல் தீர்வு என்பதால், மேலும் தீர்வுகள் அவசியமில்லை என்று பேராசிரியர் சந்தன ஜயசுமன தெரிவித்துள்ளார். உலக தேசப்பற்றுள்ள இலங்கையர் பேரவையின் சார்பில் மனித உரிமை பேரவையில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ் வேளாள தலைவர்களின் இனவாத நோக்கங்கள் மற்றும் போலியான வரலாறு காரணமாக அனைத்து இலங்கையர்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டுள்ளன. இலங்கை சம்பந்தமாக தமிழ் இனவாதிகள் உருவாக்கியுள்ள மாயையான வரலாறு அனைத்த…

  23. இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை – கூட்டு எதிரணி இலங்கையில் இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்படுவதை கூட்டமைப்பும், புலம்பெயர் தமிழர்களும் விரும்பவில்லை என, கூட்டு எதிரணி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் மேலும் கூறுகையில் “முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்கள் பூர்விகமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஜானகபுர, கல்யாணபுர என்ற பிரதேசத்தில் உள்ள 450 சிங்கள குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு, அம்மாவட்ட…

  24. ஆங்­கி­லம் தெரி­யாது என்­ற­தால்- அனந்தி மீது அவ­ம­திப்பு வழக்கு? வடக்கு அமைச்­சர் அனந்திக்கு ஆங்­கி­லம் தெரி­யாது என்று அவரின் சட்­டத்­த­ரணி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் நேற்­றுத் தெரி­வித்­தார். இந்­தக் கருத்­தால் நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கை எதிர்­கொள்­ளும் அபா­யத்தை திரு­மதி அனந்தி சசி­த­ரன் எதிர்­நோக்­கி­யுள்­ளார். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­க­ளான திரு­மதி அனந்தி சசி­த­ரன், க.சிவ­நே­சன் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கத் தாக்­கல் செய்­யப்­பட்ட நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது. அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் சார்­பில் மன்­றி…

  25. வடக்கு அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு செய்த ஈனச்செயலால் வெட்கப்படுகிறேன் : டக்ளஸ் அன்று மலையக மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் அச்சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்திய வடக்கு மாகாண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளின் ஈனச் செயல்களும் இருந்ததென டக்ளஸ் தெரிவித்துள்ளார். இந்த பாவக் காரியத்தின் பின்னணியில், வடக்கு மாகாண மக்களின் பிரதிநிதியாக இருக்கின்ற நான் வெட்கப்பட வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதே அரசியல்வாதிகளின் குடும்ப வாரிசுகள் தான் இன்று தமது சுயலாப அரசியலுக்காக போலி தமிழ்த் தேசியத்தை தீவிரமாக உச்சரித்துக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.