ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
யாழ். பல்கலைக்கழகத்திற்குள் ஆவா குழு (எம்.சி.நஜிமுதீன்) யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வின்போது பல்கலைக்கழகத்திற்குள் ஆவா குழு நுழைந்ததாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழத்தில் பொங்கு தமிழ் நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வைபவம் பல்கலைக்கழக உபவேந்தரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட பின்னர் ஈழக்கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக, தமிழ் மக்களை அடிப்படைவாதத்திற்கு ஈர்ப்பதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வே பொங்கு தமிழ் நிகழ்வாகும். எனவே அதன் தூபி திறப்பு விழா நிகழ்வின்போது யாழ். பல்கலைக்கழகத்திற…
-
- 0 replies
- 639 views
-
-
சியோனிசத்தை முன்னுதாரணமாக்கி இலங்கை அரசு நகரும் அபாயம் புதுப்பிப்பு: செப். 19 14:29 இஸ்ரேல் நாட்டின் குடிகளில் இருபது விகிதத்துக்கு மேற்பட்டோர் யூதர் அல்லாத அரேபியர்கள். இந்த வருடம் வரை அங்கு அரேபிய மொழிக்கு இரண்டாவது உத்தியோக பூர்வ மொழி என்ற அந்தஸ்து இருந்துவந்தது. ஆனால், யூலை மாதம் கொண்டுவரப்பட்ட �அடிப்படைச் சட்டம்� (Basic Law) என்ற சட்டவாக்கம் இந்த அந்தஸ்தை யாப்பு ரீதியாகக் குறைத்துள்ளது. தற்போது ஹீப்ரு (எபிரேயம்) மட்டுமே அரச மொழி. அடுத்தபடியாக, இன ரீதியான யூதக் குடியேற்றங்களைப் பரப்புதல் என்ற கோட்பாட்டை தேசியப் பெறுமானமாக்கி (national value) குறித்த சட்டவாக்கம் பெருமிதம் காண்கிறது. அரச காணிகளில் யூதக் குடியேற்றங்களுக்கு முன்னுரிமையும் …
-
- 0 replies
- 474 views
-
-
உங்களுடைய மாற்று வழி என்ன? இருந்தால் சொல்லுங்கள்! தியாகி திலீபனுடைய 31வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் சுமந்திரன்
-
- 0 replies
- 323 views
-
-
பொங்கு தமிழ் பிரகடனத்தைப் பார்த்து பொங்கியெழுந்த தென்னிலங்கை! பொங்குதமிழ் நினைவுத் தூபியால்குழப்பமடைந்துள்ள கடும்போக்கு சிங்கள அமைப்புக்கள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை மீள நிறுவப்பட்டதற்கு தென்னிலங்கையின் சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்பான பொதுபல சேனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தனித் தமிழீழத்தை உருவாக்குவதற்கான முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ள பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் கம்புரேவெல சந்திரரத்ன தேரர், இந்த நடவடிக்கைகளை ஆரம்பத்திலேயே களைய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கின்றார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் நிறுவப்பட்டிருந்த பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை புனரமைக்கப்ப…
-
- 0 replies
- 604 views
-
-
உண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா? – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு “போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார், எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும். முகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளைப் புறந்தள்களும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மை…
-
- 3 replies
- 894 views
-
-
விடுவித்த காணியை மீண்டும் பிடிக்க முயற்சி – CSDயினருக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… விடுவித்த காணியை மீண்டும் பிடிக்கச் சென்ற சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கும் மக்களுக்குமிடையே முரண்பாடு ஏற்பட்டு சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி – சாந்தபுரம், அம்பாள்நகர் பகுதியில் காணப்படுகின்ற படித்த மகளீர் திட்டத்தில் வழங்கப்பட்ட தனியார் காணிகளை மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது குறித்த காணிகள் அவர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் சாந்தபுரம் கிர…
-
- 1 reply
- 276 views
-
-
யாழில் வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் தாக்குதல் ; 5 பேர் படுகாயம் யாழ்ப்பாணம், தென்மராட்சி கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். “கைதடி ஏ-9 நெடுஞ்சாலையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15 இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும் கூரிய ஆயுதங்களால் வீட்டிலுள்ளவர்களைத் தாக்கியும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குத…
-
- 0 replies
- 1.1k views
-
-
புனர்வாழ்வளிக்கபட்டு மீண்டும் கைதுசெய்த எனது மகனை விடுதலை செய்யுங்கள் - தாயின் மன்றாட்டம் இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு எம்மிடம் கையளிக்கப்பட்ட எனது மகனை மீள கைது செய்து எட்டு ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளதாக அரசியல் கைதியின் தாயான சூரியகாந்தி மாரிமுத்து தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எனது மகன் சூரியகாந்தி ஜெயச்சந்திரன் (வயது 42) இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்தார். சுமார் ஒரு வருட காலமாக புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் 05.04.2010 அன்று எம்மிடம் கையளி…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை, அப்பாவித் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே, பொங்குத் தமிழ் நிகழ்வு என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைகழகத்தில், நாட்டைத் பிளவுபடுத்தும் இதுபோன்ற தீவிரவாத செயற்பாடுகளை நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வாறு அனுமதியளித்தது எனவும் அந்த அணி கேள்வி எழுப்பியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டம் தோற்கடிக்கப்பட்டப் பின்னர், அவர்களது கொள்கையான தனி தமிழீழக் கோரிக்கையைப் பாதுகாக்கும் பிரிவினைவாதிகளின் நிகழ்வே பொங்குத் தமிழ் நிகழ்வு என கூறிய அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர, இந்நிகழ்வு யாழ் பல்கலைகழகத்தின் உப பீடாதிபதியின் தலைமையில், நடைபெற்றதாகவும் கூறினார். பொரளையில் உள்ள என்.எம்.பெரேரா மத்திய நி…
-
- 1 reply
- 1.5k views
-
-
அமெரிக்க தடைக்கு பயந்து ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது சிறிலங்கா ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை சிறிலங்கா நிறுத்தியுள்ளது. அபுதாபியில் இருந்து வெளியாகும் ‘தி நேசன்’ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்தவுடன், நாங்கள், ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்தி விட்டோம். நாங்கள் ஈரானிடம் நேரடியாக எண்ணெய் வாங்கவில்லை. சிங்கப்பூர், டுபாய், புஜாரா ஊடாகவே பெற்று வந்தோம். அடுத்த சில மாதங்களில், அரசுகளுக்…
-
- 1 reply
- 456 views
-
-
விடுதலை புலிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளவே ஆயுதங்களை வைத்திருந்தோம்|
-
- 7 replies
- 1.1k views
-
-
நாடு திரும்பினார் ரவீந்திர - டி.கே.ஜி.கபில முன்னாள் கடற்படைத் தளபதியும் தற்போதைய பாதுகாப்புப் பணியாளர்களின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்ன, இன்று (19) அதிகாலை, நாடு திரும்பினார். டோஹாவிலிருந்து கட்டுநாயக்கா நோக்கி வந்த கட்டார் விமானச் சேவைக்குச் சொந்தமாக கிவ்.ஆர் 668 ரக விமானத்தினூடாக, இன்று அதிகாலை 1.45 மணிக்கு, அவர் நாடு திரும்பினார். http://www.tamilmirror.lk/செய்திகள்/நாடு-திரும்பினார்-ரவீந்திர/175-222146
-
- 0 replies
- 290 views
-
-
தமிழருக்கு ஆளத் தெரியாதாம் – விக்னேஸ்வரனின் சட்டத்தரணி !! தமிழர்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் சட்டத்தரணி கனகேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் பகிரங்கமாகத் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட மூன்று பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையின்போது முதலமைச்சரின் சட்டத்தரணி தமிழர்களுக்கு ஆட்சி செய்யத் தெரியாது என்று நீ…
-
- 0 replies
- 411 views
-
-
3 மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்ட அறிக்கையைத் தயாரிக்கிறது இந்தியா பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகார சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கமைய, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை இந்திய விமான நிலைய அதிகாரசபை தயாரிக்கும். இதுதொடர்பான உடன்படிக்கையில், இந்திய விமான நிலைய அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனில் குப்தாவும், இந்திய வெளிவிவகார அமைச்சின் வங்காள விரிகுடா நாடுகளுக்கான இணைச் ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
வடக்கு முதலமைச்சரின் -ஆட்சேபனைகள் நிராகரிப்பு!! வடக்கு முதலமைச்சர் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேவேளை முலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகள் இணக்கப்பாட்டுக்கு வர மறுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. https://newuthayan.com/story/12/வடக்கு-முதலமைச்சரின்-ஆட்சேபனைகள்-நிராகரிப்பு.html
-
- 3 replies
- 872 views
-
-
தமிழ் கைதிகளையும், இராணுவத்தையும் ஒரே விதமாக நோக்குவது ஏற்புடையதல்ல -இரா.சம்பந்தன்!! தமிழ் கைதிகள் சிலரின் குற்றங்கள் அவர்களின் அரசியல் உரிமையுடன் சம்பந்தப்பட்டுள்ளன. படைத் தரப்பை பொறுத்தவரையில் அவர்கள் இழைத்தனர் என்று கூறப்படும் குற்றங்கள் சர்வதேச மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்களுடன் தொடர்புடையவையாகும். இந்த இரண்டையும் ஒரே அடிப்படையில் பார்ப்பதை ஏற்றுக் கொள்ள கொள்ள முடியாது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தனிப்பட்ட மற்றும்…
-
- 0 replies
- 197 views
-
-
யாழில் பெரும் பதற்றம்! பொலிசார் குவிப்பு!! யாழ் வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்துள்ளனர். இதனால் அப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கின்ற நிலையில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கின் பல இடங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த பெருமளவிலான மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளமும் அழிக்கப்படுவதால் இவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்களும் நடை…
-
- 4 replies
- 1.1k views
-
-
மகசின் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பு ஆரம்பம்!! அநுராதபுரம் சிறைச்சாலை யில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உணவு ஒறுப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மகசின் சிறைச்சாலை யி லுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று அடையாள உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலை யில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டிலிருந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை கர…
-
- 0 replies
- 286 views
-
-
அதிருப்தி வெளியிட்ட சீனா – பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த சிறிலங்கா அதிபர் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் இன்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழுவொன்று இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது. இதன்போது, சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து இருதரப்பும் கலந்துரையாடியது, அத்துடன் எதிர்காலத்தில் சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. சீனாவின…
-
- 0 replies
- 175 views
-
-
ஆட்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலியில் கைது சட்டவிரோதமாக நான்கு பேரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர் இத்தாலியின் மிலன், மல்பென்சா விமான நிலைய எல்லை காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார். டோகாவில் இருந்து தனது மனைவி மற்றும் சுமார் 20 வயதுகளை உடைய, இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் என நான்கு இளையோருடன், சுமார் 50 வயதுடைய சிறிலங்கா இராஜதந்திரி இத்தாலி வந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார். தமதும் மற்றும் மனைவியினதும் இராஜதந்திரக் கடவுச்சீட்டுக்களுடன், குறித்த நான்கு பேரினது கடவுச் சீட்டுக்களையும் இத்தாலிய குடிவரவு அதிகாரிகளிடம் கொடுத்த போதே அவர்கள் சந்தேகம் கொண்டு விசாரித்துள்ளனர…
-
- 2 replies
- 639 views
-
-
சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டதான எஸ்.பீயின் கருத்தை மறுத்தது இராணுவம் பா.நிரோஸ் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணி தெரிவித்துள்ள கருத்தை, இராணுவம் முற்றாக மறுத்துள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணியின் கடந்தவார ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர்களான, எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்…
-
- 5 replies
- 679 views
-
-
இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்க முயற்சிக்கிறது இந்தியா : (ஆர்.யசி) அமைச்சர் மனோ கணேசன் விசனம் இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்னவென தெளிவாக தெரிந்துவிட்டது. இரண்டு பக்கங்களிலும் கால்வைத்து பயணிக்கவே இந்தியா எத்தனிக்கின்றது என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். இலங்கையின் ஆட்சியையோ ஜனாதிபதியையோ - பிரதமரையோ தீர்மானிப்பது நாமே தவிர இந்தியா அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புகளை முன்னெடுத்திருந்த நிலையில் இந்த விவகாரம் இலங்கையில் அரசியல் கட்சிகள் இடையில் மாறுபட்டு பல விமர்சன…
-
- 1 reply
- 541 views
-
-
வெலிக்கடைக்கும் பரவியது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் பரவியுள்ளதாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், இவர்களின் விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது. சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் தலைவரான சட்டவாளர் சேனக பெரேரா இதுதொடர்பாக, கருத்து வெளியிடுகையில், “அனுராதபுர சிறைச்சாலையில் 8 கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நிலைமை இப்போது புத…
-
- 1 reply
- 656 views
-
-
தமிழர்களை அடக்கி வாய் வார்த்தையில் நல்லிணக்கம் பேசுவது பயனில்லை - சிறிதரன் (எம் .எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) நீண்டகாலமாக சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் பேரிலோ அல்லது புனர்வாழ்வளித்தோ உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அவர்களின் நிலைமை இன்னும் விளங்கவில்லையா என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார். தமிழர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி வாய் வார்த்தையில் நல்லிணக்கம் பேசி எந்தப்பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று நடைப்பெற்ற வானூர்தி மூலம் ஏற்றிச்செல்லல் சட்…
-
- 0 replies
- 594 views
-
-
கொக்கிளாய் அக்கரவெளி பகுதியினை மகாவலி எனும் பெயரில் அபகரிக்க முயற்சி : பொதுமக்களினால் முறியடிப்பு கொக்கிளாய் அக்கரவெளி பிரதேசத்தில் வயல் செய்வதற்கேன விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்களின் முயற்சியில் அப்பகுதியை துப்பரவு செய்து அதனை வயல் செய்வதற்கு ஏற்ற இடமாக மாற்றுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த சில நாட்களாக வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த "மகாவலி அபிவிருத்தி" என்ற போர்வையில் சிலர் இன்று அப் பிரதேசத்தில் புகுந்து வேலை செய்த மக்களை தடுத்து நிறுத்தியிருந்தனர். இதனையடுத்து கரைதுறைப்பற்று தவிசாளர் க.தவராசா , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான இ.கவாஸ்கர் , கி.சிவலிங்கம் ஆகியோருடன் பிரதேச செயலக காணி பகுதியினர் மற்றும் க…
-
- 0 replies
- 513 views
-