Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகள் விடுவிப்பு! யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் பிடியிலிருந்த மூன்று பகுதிகளிலுள்ள காணித் தொகுதிகள் இன்று (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதற்கான காணிப் பத்திரங்கள், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினால், மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமும், ஆணைக்கோட்டை கூலாவடி பகுதியிலுள்ள படை முகாமொன்றும் விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலாலி குரும்பசிட்டி பகுதியிலுள்ள பொதுநூலகம் மற்றும் பாலர் பாடசாலை உள்ளிட்ட கட்டடத் தொகுதியும் விடுவ…

  2. இலங்கை வருகின்றார் ஓ.பி.எஸ்! இலங்கையில் இடம்பெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும், தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் இதனை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 16ம் திகதி இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதில் கலந்துகொள்ளவுள்ளார். இதன் போது யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஒரு இலட்சம் புத்தகங்களையும் வழங்கவுள்ளார். மேலும், இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில், இந்திய ஆசிரியர்களுக்கு இலங்கையிலும், இலங்கை ஆசிரியர்களுக்கு இந்தியாவிலும் சிறப…

  3. இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் ஆறு நாள் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம் இந்திய- சிறிலங்கா கடற்படைகள் இணைந்து நடத்தும் SLINEX-2018 கூட்டு கடற் பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடக்கம் எதிர்வரும் 13 ஆம் நாள் வரை, திருகோணமைலைக் கடற்பரப்பில் இந்தக் கூட்டுப் பயிற்சி நடைபெறவுள்ளது. SLINEX கூட்டுப் பயிற்சி இதுவரையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே இடம்பெற்று வந்தது. இந்த ஆண்டில் இருந்து, SLINEX கூட்டுப் பயிற்சி ஆண்டு தோறும் நடைபெறவுள்ளது. SLINEX-2018 கூட்டுப் பயிற்சியில் இந்தியத் தரப்பில் கூடுதலான கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பங்கேற்கவுள்ளன. இந்தியக் கடற்படையின் 3 போர்க்கப்பல்களும், இரண்டு கடல் கண்காணிப்…

  4. இராஜதந்திரிகளை விட சிறப்பாக பணியாற்றினராம் முன்னாள் படைத் தளபதிகள் – கோத்தா புகழாரம் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் வெளிநாடுகளில் தூதுவர்களாக ஆற்றிய பணி சிறப்பானதாக இருந்தது என்றும், ஏனையவர்களை விட அவர்கள் திறமையாகச் செயற்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய ‘கடொல் எத்து’ என்ற சிங்கள நாவலை கொழும்பில் நேற்று வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”எதற்காக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை இராஜதந்திரிகளாக நியமிக்கிறீர்கள் என்று சிலர் கேட்டனர். அதற்கு ஒரு காரணம், அவர்கள் நாட்டுக்காக அளித்த சேவைக்கு வழங்கிய கௌரவம்…

  5. ’மயிலிட்டி கலைமகள் 200ஆவது வயதில் விடுதலையாகிறாள்’ சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி கலைமகள் வித்தியாலம், 28 வருடங்களின் பின்னர் இராணுவத்தினரிடம் இருந்து நாளை (06) விடுவிக்கப்படவுள்ளது. கடந்த 1818ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை, 200ஆவது வருடத்தில் காலடி வைக்கின்ற நிலையில், தற்போது இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது. உள்நாட்டு யுத்தத்தம் காரணமாக, வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதி, இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு, உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தது. இந்தப் பகுதி காணிகள், தற்போது பகுதிப் பகுதியாக மீள மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலைய…

  6. குற்றம்சாட்டப்பட்டுள்ள படை அதிகாரிகளை பணியிலிருந்து இடைநிறுத்துங்கள்- காணாமல்போனோர் அலுவலகம் பரிந்துரை கடத்தல் மற்றும் காணாமல்போகச்செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள ஆயுதபடையினர் மற்றும் பொலிஸாரை பணியிலிருந்து இடைநிறுத்துமாறு காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது. காணாமல்போனவர்கள் அலுவலகம் சமர்ப்பித்துள்ள இடைக்கால அறிக்கையிலேயே இந்த பரிந்துரை இடம்பெற்றுள்ளது. கடத்தல் மற்றும் காணாமல்போகச்செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள ஆயுதபடையினர் மற்றும் பொலிஸாரை விசாரணைகள் முடிவடையும் பணியிலிருந்து இடைநிறுத்தவேண்டும் அவர்களை இடமாற்றம் செய்யக்கூ…

  7. வந்தாறுமூலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது நினைவேந்தல் கிழக்குப் பல்.கலையிலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மொன இறைவணக்கம், மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர். 1990 ஆண்டு நடுப்பகுதியில் …

  8. ‘சுமந்திரனின் கருத்துகள் தலைமைக்கு கொண்டு செல்லப்படும்’ - எஸ். நிதர்ஷன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தொடர்பில் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் ஒன்றான புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தாத்தன் தெரிவித்தார். இவ்வாறு சுமந்திரன் கூறி வருகின்றமை தவறு என்று சுமந்திரனுக்கு நேரடியாகவும் தெரிவிக்கப்படுமென்றும் குறிப்பிட்டிருக்கும் சித்தார்த்தன்; கடந்த கால அரசியலை கற்றுக் கொண்ட பின்னர் சுமந்திரன் பேச ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். …

  9. வறட்சியால் தவிக்கும் கிளிநொச்சி! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டம் வறட்சியால் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டம் கடுமையான மழை வீழ்ச்சி மற்றும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்படும் நிலை தொடர்கின்றது. இந்த ஆண்டும் மாவட்டத்தின் பல பகுதிகளை வறட்சி வாட்டி எடுக்கத் தொடங்கியுள்ளது. மேய்ச்சலின்றி கால்நடைகள்! மேய்ச்சலற்ற நிலையில் கால்நடைகள் பெரும் அவதிற்கு உள்ளாகியுள்ளன. தரையில் எங்குமே புற்களை காண முடியவில்லை. பனை ஓலைகளையும், காய்ந்த தென்னை ஓலைகளையும் தின்று தமது நாட்களை நகர்த்த வேண்டிய நிலைக்கு க…

  10. கொழும்பில் இன்று அரசைக் கவிழ்க்க கூட்டு எதிரணியின் பலப்பரீட்சை கொழும்பு நகரத்தின் செயற்பாடுகளை முடக்கி , சிறிலங்கா அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில், கூட்டு எதிரணி இன்று கொழும்பில் பாரிய மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. இதற்கு இரகசியமான முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைதியான முறையில் தாம் இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ள போதிலும், அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்ற முக்கியமான இடங்களை முற்றுகையிட்டு அவற்றின் செயற்பாடுகளை முடக்கும் இரகசியத் திட்டம் கூட்டு எதிரணியிடம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சட்டத்தை மீறினால் …

  11. வடக்கின் அபிருத்திக்கு நிதியுதவி வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம் (எம்.நியூட்டன்) வட மாகாணத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியுதவியினை இலங்கை அரசுக்கு வழங்குவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ப்ரைஸ் ஹட்ச்சனை (Bryce Hutchesson) தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை, சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் சந்தித்து கலந்துரையாடியே போதே இதனை தெரிவித்த அவர், இலங்கையில் யுத்தத்தின் பின்னர் வட மாகாண மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சம்பந்தமாகவும் ஆளுநரிடம் கேட்டறிந்…

  12. வடக்கு முதலமைச்சரின் கோரிக்கை -உயர் நீதிமன்றில் நிராகரிப்பு!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்க செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஒத்திவைக்குமாறு, அவரது சட்டத்தரணி கொழும்பு உயர் நீதிமன்றில் இன்று முன்வைத்த கோரிக்கை நீதியரசர் குழாமினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/12/வடக்கு-முதலமைச்சரின்-கோரிக்கை-உயர்-நீதிமன்றில்-நிராகரிப்பு.html

  13. மட்டக்களப்பில் 7ம் திகதி நடக்கப்போவது என்ன? அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு! பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் 07.09.2018 அன்று நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சதாசிவம் வியாழேந்திரன் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகிய மூவரும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர். பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்குரிய …

  14. மிதிவெடி வெடிப்பு ; ஒருவர் பலி, ஒருவர் காயம் மாங்குளம் பகுதியில் மிதி வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் 28 வயதுடையவர் ஆவார். அத்துடன் காயமடைந்த 25 வயதுடைய நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ் முன்னெடுக்கப்படும் மிதி வெடிகள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிந்தே போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/39645

  15. K K S சீமெந்துத் தொழிற்சாலையின் 100 ஏக்கர் காணியில் கைத்தொழில் வலயம்…. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை பயன்படுத்தி அந்த பிரதேசத்தில் சிறிய கைத்தொழிற்சாலைகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் பகுதியில் சிறிய அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கான கைத்தொழில் வலயமாக மேம்படுத்துவதற்கு 998 மில்லியன் ரூபா வரையில் முதலீடு செய்யப்படவுள்ளது. இதன்கீழ் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகரம் வழங்கியுள்ளது. http://globaltamilnews.net/2018/94…

  16. “எங்கே இறுதி யுத்தம் நடைபெற்றதோ அங்கே நினைவுத் தூபி அமைய வேண்டும்” நினைவுத்தூபி தொடர்பில் நான் ஏற்கனவே தனிநபர் பிரேரணை ஒன்றினை இந்தச் சபைக்கு கொண்டு வந்திருந்தேன் என்றார் டக்ளஸ் தேவானந்தாகடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த அனைவரையும் நினைவு கூறுவதற்காகவும், மத அனுஸ்டானங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக அந்த நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும் எனக் கோரியிருந்தேன். அதனை இந்த அரசு ஏற்றுக் கொண்டிருந்தது எனினும் அந்த நினைவுத்தூபி அமைவிடம் தொடர்பில் எமக்கு இணக்கம் இல்லை. மேற்படி நினைவுத்தூபியானது இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதியிலேயே அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இருந்தும் அன்று நினைவுத்தூபி அமைத்தல் தொடர்பில் இந்த அரசு ஏற்றுக் கொண்ட…

  17. கல்லூரி நடைமுறைகளைப் பின்பற்றாத மாணவர்கள் -அதிரடியாக வெளியேற்றம்!! யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கல்லூரியின் நடைமுறைகளுக்கு அமைவாக தாடி மற்றும் தலைமுடிகளை உரிய முறையில் வெட்டாது வருகை தந்த மாணவர்களே இவ்வாறு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் வெளியில் தடுத்து வைக்கப்பட்டனர். வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அறியமுடிகிறது. https://newuthayan.com/story/09/கல்லூரி-நடைமுறைகளைப்-பின்பற்றாத-மாணவர்கள்-அதிரடியாக-வெளியேற்றம்.html

  18. ‘சமஷ்டி, ஒற்றையாட்சி பற்றிப் போதிக்கத் தேவையில்லை’ - எஸ். நிதர்ஷன் “சமஷ்டி என்றால் என்ன ஒற்றையாட்சி என்றால் என்ன என்பதெல்லாம் எனக்கு நன்கு தெரியும். அவற்றைப் பற்றி புரிந்து தெரிந்து உணர்ந்து கொள்ளாமல் நாங்கள் பேசவில்லை. அவற்றைப் பற்றி யாரும் எங்களுக்கு போதிக்கத் தேவையில்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன், அடைக்கலநாதனுக்கு சமஷ்டி பற்றிய அறிவு இருக்கின்றதா எனத் தெரியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்டிருக்கும் கருத்துக்குப் பதிலளிக்கும் வகை…

    • 1 reply
    • 1.1k views
  19. பாதுகாப்புத் தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கக் கூடாது – சிறிலங்கா அதிபர் உத்தரவு நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில், முப்படையினர் தொடர்பான உள்ளகத் தகவல்களை வழங்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சிங்கள இதழான ‘அனித்த’ இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் நாள் தமது இல்லத்தில் நடந்த கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்யரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். லசந்த விக்ரமதுங்க கொ…

    • 5 replies
    • 537 views
  20. துரோ­கத்தில் தொடர்­பில்­லை­யென செல்­வமும் சித்­தார்த்­தனும் வில­கு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது (ரி.விரூஷன்) இவர்­களும் உடந்தை என்கிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய கூட்­ட­மைப்பில் பங்­கா­ளி­க­ளாக இருந்­து­கொண்டு அதில் சம்பந்­தனும், சுமந்­தி­ரனும் செய்­கின்ற துரோ­கங்­க­ளுக்கு துணை போகின்ற ரெலோ, புளொட் ஆகிய கட்­சி­களின் தலை­மைகள், தற்­போது தமக்கு இத்­த­கைய துரோ­கத்தில் தொடர்­பில்லை என கூறி வில­கு­வதை தமிழ் மக்கள் அனு­ம­திக்க மாட்­டார்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்­ன­னியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தெரி­வித்­துள்ளார். கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் கூறி­யதை அது கூட்­ட­மைப்பின் கருத்து இல்லை, அவ­ரத…

    • 3 replies
    • 739 views
  21. முல்லைத்தீவில் புத்தர் சிலை வைக்க சென்ற பிக்குகளுக்கு நடந்த விபரீதம்!!! முல்லைத்தீவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் புத்தர்சிலை ஒன்றிணை அமைக்கும் நோக்குடன் புத்தர்சிலையோடு வருகை தந்த பிக்குமார் அடங்கிய குழுவொறைினை குமுழமுனை பிரதேச இளைஞர்கள் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். சிலை வைக்க வருவதை அறிந்த குமுழமுனை இளைஞர்கள் தடுப்பதற்காக குருந்தூர் மலைக்கு சென்றவேளை அதை அறிந்த பிக்குகள் குழு தப்பி சென்ற நிலையில் தன்னிமுறிப்பு குளக்கட்டுபகுதியில் வைத்து இளைஞர்கள் வழி மறித்துள்ளனர். இதன்போது குறித்த பகுதிக்கு வடமாகாண அமைச்சர் சிவநேசன், உறுப்பினர் ரவிகரன் பிரதேச சபை தவிசாளர் தவராசா பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியு…

    • 7 replies
    • 1.7k views
  22. உயர் நீதிமன்றை நாடவுள்ள மணிவண்ணன் (ரி.விரூஷன்) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் கலந்துகொள்ளவதற்கு தனக்கு மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபணை தெரிவித்தே அவர் இந்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யவுள்ளார். இம் மனுவானது அடிப்படை உரிமைகள் மற்றும் நிர்வாகச் சட்ட வல்லுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சஞ்சீவ ஜெயவர்த்தனவால் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளது. http://www.virakesari.lk/article/39801

  23. அனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாம் ; மனோ கணேசன் தொல்பொருள் வேறு; சமயம் வேறு; அனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாம் என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பிரதி பொலிஸ் மாதிபர் மற்றும் ஒட்டுசுட்டான் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மனோ கணேசன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் வலயம், பிரதேச செயலக பிரிவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் புத்தர் சிலையை வைத்து விகாரை அமைக்கும் முயற்சியில் வெலிஓய விகாரையை சேர்ந்த கல்கமுவ சத்வ போதி தேரர் தலைமையிலான குழு நேற்று எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக இடம்பெற்ற பதட்ட நிலைமைகள் ஏற்பட்டன, இது தொடர்பில், மாவட்ட …

  24. வாள்வெட்டு புகழ் கொக்குவில் “ஆவா” மானிப்பாய் காவற்துறையால் கைது… யாழ். மக்களை மிக நீண்டகாலமாக அச்சுறுத்தி வந்த சட்டவிரோத வாள்வெட்டுக் கும்பலான ஆவாக் குழுவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஆறு மாதக் காலமாக தேடப்பட்டு வந்த கொக்குவில் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து கூரிய ஆயுதமொன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் ஆவா குழுவின் தனுரொக் என்பவருடன் நெருங்கி செயற்பட்டதுடன் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு வன்முறை …

  25. வெடுக்குநாறிமலையின் ஆலயம் 400 மீற்றருக்கு அப்பால் அமைக்க அனுமதி வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் இருந்து 400 மீற்றருக்கு அப்பலே ஆலயம் அமைத்து வழிபடமுடியும் என தொல்லியல் திணைக்களம் பதில் வழங்கியிருப்பதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினரை அழைத்த நெடுங்கேணிப் பொலிஸார் இவ்வாறு தெரிவித்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்வீக பிரதேசமான வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது. குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் என்ற சிவனுடைய லி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.