Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் கடத்தல்- -கணவன் மனைவி அதிரடியாகக் கைது!! பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்குடன் கடல் வழியாகக் கடத்தப்பட்ட 21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைப் பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றினர். இவற்றைக் கடத்திய குற்றச்சாட்டில் கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரிலிருந்து காரில் கொழும்பு செட்டித் தெரு நோக்கிப் பயணிக்க இருந்த இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர தலைமையிலான குழுவினர் இந்தக் கடத்தை முறியடித்தனர். 24 வயதுடைய கணவனும், 22 வயதுடைய மனைவியும் கைது செய்யப்பட்டனர். இந்தப் போதை மாத்திரைக் கட…

  2. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க அலுவலகம் திறந்து வைப்பு புலனாய்வாளர்களின் அச்சுருத்தலுக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. வன்னியில் இறுதி யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தரவேண்டும் அல்லது அதற்கான பொறுப்புகளை அரசு கூறவேண்டும் என்பதற்காக இன்று மன்னார் சாவற்காட்டுப் பகுதியில் குறித்த அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்தம் முடிவடைந்த பின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொழுது முள்ளிவாய்க்கால் பகுதியில் விசாரணைகளுக்காக பெற்றோர் தமது பிள்ளைகளை இராணுவத்தினரிடம…

  3. புதிய அரசியல் யாப்பு உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்: சுமந்திரன் சிறிலங்காவின் மைத்ரி - ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் தயாரிப்பதாக கூறி தொடர்ச்சியாக இழுத்தடித்துவரும் புதிய அரசியல் யாப்பு விரைவில் தயாரிக்கப்பட்டு, அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன தயாரிப்புப் பணிகளுக்கு பொறுப்பாக இருக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசியல் சாசன தயாரிப்பிற்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினராக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டம…

  4. கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? சம்பந்தனிடம் டெலோ புளொட் கேள்வி? தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகண முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்தப்போகின்றீர்கள் என்பதை விரைந்து அறிவியுங்கள் என புளொட் டெலோ ஆகிய கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வேண்டுகோள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இரு கட்சிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவருகின்றன இது தொடர்பில் சம்பந்தன் தீர்க்கமான அறிவிப்பை வெளியிடவேண்டும் என அவை கோரியுள்ளன. மேலும் தற்போதைய முதலமைச்சர் கட்…

  5. கீரிமலையில்- பிதிர் கடன் செலுத்தும் மக்கள்!! ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் பிதிர்கடன்களை நிறைவேற்றுவதில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். http://newuthayan.com/story/10/கீரிமலையில்-பிதிர்-கடன்-செலுத்தும்-மக்கள்.html

  6. வடக்கில் பெண்­களை தலை­மை­யாக கொண்ட குடும்­பங்­களை முன்­னேற்ற நட­வ­டிக்கை (எம்.சி.நஜி­முதீன்) வடக்கில் பெண்­களை தலை­மை­யாக கொண்ட குடும்­பங்கள் பல உள்­ளன. அவர்கள் வாழ்­வா­தார விட­யத்தில் பல பிரச்­சி­னை­களை எதிர் கொள்­கின்­றனர். அது தொடர்பில் அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாகக் குறிப்­பிட்ட பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அப்­பி­ரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார். சமூக நலன்­புரி மற்றும் ஆரம்ப கைத்­தொழில் அமைச்சின் “தானா­பி­மானி” வேலைத்­திட்­டத்­திற்கு அமை­வாக ஏற்­பாடு செய்­யப்­பட்ட விழிப்­பு­னர்வு செயற்­றிட்டம் நேற்று அலரி மாளி­கையில் நடை­பெற்­றது. அதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்ட…

  7. யாழில் குள்ளர்களின் பின்னணியில் அரசியல் காரணங்கள் என காவற்துறை நம்புகிறது…. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதிகளில் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுவது பொய் என காவற்துறையினர் தெரிவிப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சருக்கும், வட மாகாண காவற்துறை அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் யாழ். கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. வட மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறை அதிபர் றொசான் பெர்னாண்டோ, யாழ். மாவட்ட பிரதி காவற்துறை அதிபர் பாலித பெர்னாண்டோ உள்ளிட்ட காவற்துறை அதிகாரிகளுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க…

  8. சமூக வலைத்தளங்களை கண்காணிக்க இராணுவத்தில் தனிசிறப்பு படையணி (லியோ நிரோஷ தர்ஷன்) சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் ஆரம்பித்துள்ளது. இதற்காக விஷேட பிரிவு ஒன்றை உருவாக்கியுள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வன்முறை பரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அனைத்து சமூக வலைத்தளங்களும் உடனடியாக முடக்கப்பட்டது. இதன் மூலம் வன்முறைகள் ஏனைய பகுதிகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. குறித்த சம்பவத்தின் பின்னரே இலங்கையில் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள…

  9. கிளிநொச்சியில் பதற்றம்- படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்!! மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் சாரதியை சிறப்பு அதிரடிப்படையினர் தாக்கியதால் மக்களுக்கம் படையினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது என்று அறியமுடிகிறது. http://newuthayan.com/story/09/கிளிநொச்சியில்-பதற்றம்-படையினருக்கும்-மக்களுக்கும்-இடையில்-முறுகல்.html

    • 3 replies
    • 517 views
  10. வாராந்தம் அறிக்கை சி.விக்கு செல்லும்? -எம்.றொசாந்த் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள், இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவங்களே என பொலிஸார் தன்னிடம் தெரிவித்துள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வன்முறை சம்பவங்கள் தொடர்பில், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் குறித்து, வாராந்தம் அறிக்கையை தன்னிடம் சமர்பிக்க வேண்டும் எனவும் பொலிஸாரிடம் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் இல்லத்தில் நேற்று (10) நடைபெற்ற பொலிஸாருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தா…

  11. பாகிஸ்தானிய கடற்பாதுகாப்பு கப்பல் இலங்கைக்கு விஜயம் பாகிஸ்தானிய கடற்பாதுகாப்பு கப்பல் பி.எம்.எஸ்.எஸ் “காஸ்மீர்” நான்கு நாள் நல்லெண்ண விஜயம் நிமித்தம் இம்மாதம் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை- பாகிஸ்தான் ஆகியன சிறந்த இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளை பேணுகின்றமையினால் பாகிஸ்தானிய கடற்படைக் கப்பல் தொடர்ந்தும் இலங்கை விஜயம் மேற்கொள்கின்றது. இவ்வாறான துறைமுக விஜயங்கள் இருதரப்பு கடற்படைகளும் பிராந்திய சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு அவசியமான சிறந்த பாதுகாப்பு மற்றும் நன்மைபயக்கும் கடற்சூழலினை ஏற்படுத்துவதற்கான பங்களிப்பினை கொண்டிருக்கின்றனர் என்பதனை நிரூபிக்கின்றது. பி.எம்.எஸ்.…

  12. முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத் தடுத்திருக்கமுடியும் என்ற ஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். துமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி வடக்கு முதல்வரின் அஞ்சலிக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்,தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமானகலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்திகேட்டுத் தமிழ்க் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது 94வது அகவையில் முதுமையின் நியதிக்கு ஏற்பவே காலமாகியுள்ளார். எனினும் அவர் தம…

  13. எக்னெலிகொட வழக்கு – இராணுவப் புலனாய்வு அதிகாரியைக் கைது செய்ய நடவடிக்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிரிதல சிறிலங்கா இராணுவப் புலனாய்வு முகாமில் பணியாற்றிய மேஜர் தர அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார். AH 94 என்ற குறியீட்டுப் பெயரினால் அழைக்கப்பட்ட இராணுவ அதிகாரியையே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட மேஜர் தர அதிகாரி காணாமல் போன அறிக்கை ஒன்றை ஒருங்கிணைத்துள்ளார் என்றும், அது இரண்டாவது சந்தேக நபரான கேணல் சிறிவர்த்தனவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. AH 94 என்ற குறியீட்டுப் பெயரினால் அழைக்கப்பட்ட இராணுவ அதிகா…

  14. கொக்காவில், திருகோணமலையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு பாகிஸ்தான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த 4ஆம் நாள் சிறிலங்காவுக்கு வந்த மேஜர் ஜெனரல் றெகான் அப்துல் பாகி,கேணர் ஒமர் நசிர், கேணல் ஜாவிட் அலி, மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் குழு, சிறிலங்கா இராணுவத்தின் கவசப்படைப்பிரிவு தலைமையகம், மற்றும் கலத்தெவ, கொக்காவில், திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள கவசப்படைப்பிரிவு பயிற்சி பாடசாலை, ஆகியவற்றுக்கும் சென்றிருந்தது. இந்தக் குழுவினர் நேற்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். சிறிலங்கா – பாகிஸ்தான் இராணுவங…

  15. 4 ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு 1,080.55 கோடி ரூபாவை வழங்கியது இந்தியா கடந்த நான்கு ஆண்டுகளில் 1,080.55 கோடி ரூபாவை (இந்திய நாணயம்) அபிவிருத்தி உதவியாக சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியுள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் உள்ள ஆறு அண்டை நாடுகளுக்கு கடந்த நான்கு நிதியாண்டுகளில் இந்தியா வழங்கியுள்ள அபிவிருத்தி நிதி தொடர்பான புள்ளி விபரங்களை இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று ராஜ்ய சபையில் எழுத்து மூலம் சமர்ப்பித்தார். இதற்கமைய, 2014-15 நிதியாண்டு தொடக்கம், 2017-18 நிதியாண்டு வரையான நான்கு ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மாலைதீவு, சிறிலங்கா ஆகிய ஆறு நாடுகளுக்கும், 21,100 கோடி ரூபா அபிவிரு…

  16. கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் சீனக் கடற்படையின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் ‘Qian Weichang’ என்ற பெயருடைய இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தனர். இந்தக் கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினர் ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளில் சீன கடற்படை மாலுமிகள் பங்கேற்கவுள்ளனர். 129 மீற்றர் நீளமும், 17 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் 158 மாலுமிகள் உள்ளனர். நாளை கொழும்புத் துறைமுகத்தில் இருந்து சீன கப்பல் ப…

  17. சிறிலங்கா அதிபரின் விடாப்பிடியால் தயானின் தூதுவர் பதவிக்கு அங்கீகாரம் நீண்ட இழுபறிக்குப் பின்னர், ரஷ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலகவை நியமிப்பதற்கு, உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது. தயான் ஜயதிலகவின் நியமனத்தை அங்கீகரிப்பது தொடர்பாக, கடந்த ஜூலை 17ஆம் நாள் நடந்த உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் கருத்து முரண்பாடு இருந்தது. இதனால் நியமனத்தை அங்கீகரிக்காமல் மேலதிக ஆய்வுக்காக பிற்போடப்பட்டது. நேற்றும் கூட உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு கூடிய போது தயான் ஜயதிலக தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் ச…

  18. விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே, முல்லைத்தீவு மாவட்டத்தை பயன்படுத்துகின்றனர்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முல்லைத்தீவு மாவட்டத்தை விளக்கு ஏற்றி அஞ்சலி செய்வதற்கு மட்டுமே பலர் பயன்படுத்துவதாகவும் எமது மாவட்டம் அபிவிருத்தி அடைவதை அவர்கள் விரும்பாது இருப்பதாகவும் முல்லைத்தீவு அபிவிருத்தி ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. வடமாகாண ஆளுநருக்கும் முல்லைதீவு அபிவிருத்தி ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (10) முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போது ஒன்றியத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார். …

  19. வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது வடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்காக அழைக்க பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, கடற்தொழில் திணைக்களம் மீது தாக்குதல் மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்துவதற்கு முல்லைத்தீவு பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/38245

  20. தமிழக மீனவர்கள் 27 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 27 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவின் தென்கிழக்கு கடற்பகுதியில் வைத்து இன்று(வெள்ளிக்கிழமை) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் நாளை(சனிக்கிழமை) மீன்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊ…

  21. விக்கியால் முடியாவிட்டால் நான் செய்து காட்டுகிறேன் அனுமதி தருமாறு கோருகிறார் டெனீஸ்வரன் வடக்கு மாகாணத்தை வீதி விபத்துகள் அற்ற மாகாணமாக மாற்றவேண்டும் என்று நீதிமன்றால் வடக்கு மாகாண அமைச்சர் என்று அறிவிக்கப்பட்டுள்ள பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வீதி விபத்துத் தொடர்பில், முதலமைச்சரும், அதிகாரிகளும் அடிமட்டத்துக்கு இறங்கி அர்ப்பணிப்போடு சேவை செய்ய முயற்சி செய்யவேண்டும். இல்லையேல் இன்னும் எத்தனையோ எமது உறவுகளை இழக்கவேண்டிவரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முதலமைச்சரால் அவற்றைச் செய்ய முடியாவிட்டால் அமைச்சு பொறுப்பை தரவேண்டாம், தயவு செய்து ஒரு அனுமதியைத் தாருங்கள் இரவுபகலாக நின்று வேலை செய்து தருகிறே…

  22. இலங்கைப் பெண்ணுக்கு- கொரியாவில் கிடைத்த இடம்!! கொரிய நாட்டில் நடைபெற்ற உலக பெண்கள் மற்றும் புதிய முயற்சி போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தயாரித்த புதிய வகை குளிர்களி (Ice Cream) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. கொ’ழும்பு தெஹிஓவிட்ட அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த கே.டீ.பிரியந்தி மல்லிக்கா என்ற பெண் தயாரித்த குளிர்களிக்கே இவ்வாறு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. இவர் தயாரித்த குளிர்களி பலாப்பழத்தில் செய்யப்பட்டிருந்ததனால் இதுவரை காணாத ஒரு படைப்பாக நடுவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர். இதன்மூலம் குறித்த பெண் புதுவகை உணவுத் தயாரிப்பு என்ற வகையில் உலகின் முக்கிய சமயல் போட்டிகளுக்குச் செல்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளத…

  23. அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டாம் வடக்குத் தலைமைச் செயலரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வடக்கு மாகாண அமைச்சர்களின் சம்பளம் மற்றும் அவர்களுக்குரிய கொடுப்பனவுகள், அமைச்சர்களின் பணியாள் தொகுதியினருக்குரிய சம்பளங்கள் என்பவற்றை, அமைச்சரவை மறுசீரமைக்கும் வரையில் வழங்கவேண்டாம் என்று வடக்கு மாகாண தலைமைச் செயலரிடம், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார். http://newuthayan.com/story/16/அமைச்சர்களுக்கு-சம்பளம்-வழங்கவேண்டாம்.html

  24. மனிதப் புதைகுழியை புகைப்படம், வீடியோ எடுக்க நீதிமன்றம் அனுமதி மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணியினை புகைப்படம் வீடியோ எடுக்க மன்னார் ஊடகவியலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஊடகவியலாளர்கள் அங்கு சென்று புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் நீதிமன்றத்தினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் ஊடகவியலாளர்கள் இருவர் இன்று மன்னார் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் ஊடாக நகர்தல் பிரேரனையை தாக்கல் செய்திருந்தனர். மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் B 232 / 2018 கொண்ட வழக்குடன…

  25. “100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை வடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு, தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் பொருட்களுக்கான சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தெரிவித்ததாவது, இந்தியாவின் ஸ்மார்ட் டெக்ஸ் எக்ஸ்போஸ் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.