Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சர்வதேச ஊடகமான அல்ஜசீரா நடத்திய ஹெட் டூ ஹெட் நேர்காணலில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) முன்வைத்திருந்த கருத்துக்கள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன. இதில் இலங்கையில் மறைக்கப்பட்ட பல இரகசியங்கள் குறித்து ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பப்பட்டன. இதன்போது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய கேள்விகளுக்கு அவர் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்திருந்தார். அத்தோடு சில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியிருந்தார். இலங்கை அரசியலை பொறுத்தவரை சிறந்த அரசியல் புலமைவாய்ந்தவராக எல்லோராலும் பார்க்கப்பட் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கேள்விகளுக்கு பதிலளிக்காமல் திணறியதும் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்ததும் மக்கள் மத்தியில் …

  2. மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி மீது துஷ்பிரயோகம்; துப்புரவுப் பணியாளர் கைது! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டு, உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் துப்புரவுப் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் முடிப்பதாக வாக்குறுதி வழங்கியே மனநலம் பாதிக்கப்பட்ட அந்த யுவதியை அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரான துப்புரவுப் பணியாளரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. சந்தேகநபரை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நகர்வுகளும்…

  3. 12 Mar, 2025 | 03:13 PM யாழ்ப்பாணத்தில் பாரிய வன்முறை குற்றங்களில் ஈடுபட்டுவரும் கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபருக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. யாழில் வன்முறையில் ஈடுபட்டுவந்த கும்பலொன்றின் தலைவர் என கூறப்படும் நபரை வன்முறை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், அந்த சந்தேக நபர் 2022ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றபோது, கூரிய ஆயுதங்களை காட்டி பொலிஸாரை அச்சுறுத்தி, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை தொட…

  4. இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று புதன்கிழமை (12) உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கை மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையை பெற்ற 65 வயதுடைய நபரொருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் இன்றைய தினம் அதிகாலை 12.45 மணியளவில் இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துள்ள நிலையில் மது போதை…

      • Haha
    • 4 replies
    • 396 views
  5. Published By: VISHNU 12 MAR, 2025 | 09:03 PM (எம்.மனோசித்ரா) ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் புதன்கிழமை (12) தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது இரு தொகுதி அமைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் ராஜித சேனரத்ன தொடர்பில் கூறிய போது ரணில் விக்கிரமசிங்க கோபமாக அவர்களுக்கு பதிலளித்தார். தொகுதி அமைப்பாளர் ஒருவருக்கு நியமனக் கடிதத்தை வழங்கிய போது அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பேச முயற்சித்த போதிலும், அவர் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. 'ராஜித சேனாரத்ன வர முன்னர் நாம் தனியாகவே அனைத்து பணிகளையும் முன்னெடுத்தோம். தற்போது அவருக்கு மாத்திரம் முன்னுரிமையளிப்பது தவறாகும்.' என குறித்த தொகுதி அமைப்பாளர் கூறினார். எவ்வாறிரு…

  6. 12 MAR, 2025 | 04:17 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் (சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்) இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. அதற்கமைய முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை 2024 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே தபால் துறைக்கு அனுப்ப…

  7. கனகராசா சரவணன் மட்டக்களப்பு – கூளாவடி பிரதேசத்தில் இடியப்பம், பிட்டு. தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்துவரும் உணவுக்கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை விற்பனையில் ஈடுபட்ட 13 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய கோட்டமுனை மற்றும் இருதயபுரம் பொது சுகாதார பரிசோதகர்களான எஸ்.கஜானந்தன், என்.கருணாகரன், ரி.மிதுன்ராஜ். யே. யசேதரன், ரி.பகீரதன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ தினமான நேற்று இரவு கூளாவடி பிரதேசத்…

  8. அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்! வடக்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் கெவின் பிரைஸ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்துள்ளனர் அதன்படி அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அலுவலர் கெவின் பிரைஸ், அரசியல் நிபுணர்களான நஸ்றின் மரிக்கார் மற்றும் சரித்த பெர்ணாண்டோ ஆகியோரே பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். இதன்போது துணைவேந்தர் பேராசிரியரைச் சந்தித்து வடக்கு நிலைமைகளைக் கேடட்டறிந்த தூதரகக் குழுவினர், தொடர்ந்து பீடாதிபதிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்துரையாடியதுடன் இந்தச் சந்திப்பின் போது பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியா…

  9. மாணவர்களை தாக்கிய ஆசிரியருக்கு பயணத் தடை! மாணவர்களை கட்டாயப்படுத்தி மண்டியிடச் செய்து தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட தனியார் கல்வி வகுப்பின் ஆசிரியர் ஒருவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய ஆசிரியரை நேற்று (11) விசாரணைக்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும், அவர் அந்த அறிவிப்பை புறக்கணித்து ஆஜராகத் தவறிவிட்டதாக NCPA தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றுக்கு அறிவிக்பப்ட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் கல்வி ஆசிரியருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பலர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறைப்பாடு அளித்துள்ளனர். இதன் விளைவாக, …

  10. தண்டனைகளிலிருந்து படையினர் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர் ; அந்தத் துணிவே நாட்டில் முன்னாள் படைத்தரப்பின் குற்றங்கள் அதிகரிக்க காரணம் - தியாகராஜா நிரோஷ் 12 MAR, 2025 | 12:14 PM நாட்டில் முன்னாள் படையினரால் பாரிய குற்றச் செயல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக அரச இயந்திரமும் இராணுவமும் மேற்கொண்ட மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கு எவ்வித பொறுப்புக்கூறலுமின்றி, சட்டத்தில் இருந்து படையினரை அரசு பாதுகாத்துவரும் துணிவுதான் இந்நிலைமைக்குக் காரணம் என்பதை ஒட்டுமொத்த நாடும் உணர்ந்துகொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக தனது க…

  11. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேகநபர் கைது 12 MAR, 2025 | 12:08 PM யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை தரப்பினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். அந்த வைத்தியசாலையில் துப்பரவு பணியில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு …

  12. Published By: VISHNU 12 MAR, 2025 | 06:36 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பிற இனத்தையும், மதத்தையும் அவமதிக்கும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் பேசுவது தமிழர் பண்பாடல்ல, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் வருத்தத்துக்குரியன. பதவிக்கான கௌரவத்தை அவர் பாதுகாத்துக் கொண்டு முறையற்ற வகையில் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் சிறப்பு பிரேரணையை கொண்டு வர நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு மற்றும் டிஜிட்ட…

  13. Published By: DIGITAL DESK 2 11 MAR, 2025 | 09:58 PM ( டானியல் மேரி மாக்ரட் ) பாடசாலையில் உயர்தரத்தை நிறைவு செய்துவிட்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் சில மாணவிகள் பகிடிவதை காரணமாக தங்கள் பல்கலைக்கழகக் கல்வியையே கைவிட்டுவிடக்கூடிய நிலைமை காணப்படுவதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின சமத்துவ மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11) ஆணைக்குழுவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழகத்தில் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சிறப்ப…

  14. Published By: RAJEEBAN 12 MAR, 2025 | 11:29 AM இலங்கையில் அரசியலில் ஈடுபட்ட- பெண் என்பதால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர் மரண அச்சுறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவு காரணமாக நியுசிலாந்தில் தஞ்சமடைந்துள்ளமை தீர்ப்பாயமொன்றின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கையின் 32 வயது பெண் அரசியல்வாதியொருவருக்கு நியுசிலாந்து அடைக்கலமளித்துள்ளது. முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகாக்கள் அந்த பெண் தனது அரசியல்வாழ்க்கையை தொடர்வதற்காக அவருடன் பாலியல் உறவில் ஈடுபடவேண்டும்,என தெரிவித்தனர் அந்த பெண்ணின் நண்பர் ஒருவர் இதனை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பின்னர் அவரை பழிவாங்க முயல்கின்றனர்என்பது தீர்ப்பாயத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட அரசியல்வாதி 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியி…

  15. போலியான கிரிப்டோ மோசடி; அரசாங்கத்தின் அவசர எச்சரிக்கை! பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஏனைய முக்கிய இலங்கை பிரமுகர்களை தவறாக சித்தரித்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தற்போது விளம்பரப்படுத்தப்படும் போலியான கிரிப்டோகரன்சி மோசடி விளம்பரங்களை பிரதமர் அலுவலகம் வன்மையாகக் கண்டித்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களால் இயக்கப்படும் இந்த ஏமாற்று விளம்பரங்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்துவதையும், நன்கு அறியப்பட்ட நபர்களுடன் தொடர்புடைய நம்பிக்கையைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. லிதுவேனியாவை தளமாகக் கொண்ட மோசடி கணக்குகளிலிருந்து உருவாகும் இந்த மோசடி பிரச்சாரங்கள், இலங்கையில் உள்ள பேஸ்ப…

  16. கச்சதீவு திருவிழா: 5 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை editorenglishMarch 12, 2025 கச்சதீவு திருவிழாவையொட்டி ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க 5 நாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த ஆண்டு வருகின்ற மார்ச் 14, 15 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த ஆலய திருவிழாவிற்கு ராமேசுவரத்தில் இருந்து 90 விசைப்படகுகளும், 22 நாட்டுப்படகுகளும் செல்ல விழா கமிட்டியிடம் பதிவு செய்துள்ளது. மேலும் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படகுகளில் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திருவிழாவிற்கு செல்ல பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன் துறை அதிக…

  17. Published By: DIGITAL DESK 3 12 MAR, 2025 | 10:49 AM அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை (12) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். நாட்டின் சகல வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்றையதினம் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அநுராதபுரம் வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் தப்பியோடிய இராணுவச் சிப்பாய் எனக் கருதப்படுபவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நடைபெறுகின்றது. …

  18. கணவர் ஹிரானுடனான திருமண பந்ததில் இருந்து விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ள விடயத்தின் தமிழாக்கம் 👇 நீண்ட யோசனைக்கு பிறகு ஹிரானும் நானும் எங்கள் திருமணத்திலிருந்து பிரிந்து செல்ல முடிவு செய்தோம், இந்த முடிவு பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் எடுக்கப்பட்டது. நாங்கள் கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஒன்றாகக் கழித்துள்ளோம். நாங்கள் எங்கள் கனவுகளின் வாழ்க்கையை ஒன்றாக உருவாக்கியுள்ளோம். நண்பர்களாக நாங்கள் அனுபவிக்கும் அன்பிற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் திருமணம் செய்துகொண்டபோது, நாங்கள் எப்போதும் உறுதியளிக்கவில்லை, ஏனென்றால் வாழ்க்கை எதிர்பாராத …

  19. 1995, செப்டம்பர் 21,அன்று, பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணையகம் நிறுவப்பட்டதும், அது தொடர்பான சில விடயங்களையும் ஊடகம் ஓன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நடப்பு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே, இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கை இந்த ஆணைக்குழுவின் அறிக்கை, 1988/90 காலகட்டத்தில் பட்டலந்த வீட்டு வளாகத்தில் இயங்கிய சித்திரவதை அறை பற்றிய பல விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது. சித்திரவதையில் இருந்து தப்பியவர்கள் ஆணையகத்தின் முன், தாம் தவறாக நடத்தப்பட்ட வீடுகளை அடையாளம் கண்டனர். இந்த விபரங்கள் ஆணையகத்தின் அறிக்கையில் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. வளாகத்தில் உள்ள 2/2 இலக்க வீடு, 1983 முதல் 198…

  20. மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 53 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் வரையில் பயிலும் மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலையில் விற்பனை செய்யப்பட்ட உணவை உட்கொண்டமையால் மாணவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 31 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிற்றுண்டிச்சாலையில் உணவை உட்கொண்ட 53 மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக பாடசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 31 பேர் தங்கியிருந்து சிகிச்ச…

  21. கொழும்பிலிருந்து புத்தூரை துவிச்சக்கரவண்டியில் சென்றடைந்து 74 வயது சிரேஷ்ட பிரஜை சாதனை! 11 Mar, 2025 | 04:52 PM கொழும்பிலிருந்து 450 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வடபகுதி புத்தூர் நகரை துவிச்சக்கரவண்டியின் மூலம் மூன்றே நாட்களில் சென்றடைந்து பருத்தித்துறையைச் சேர்ந்த 74 வயதுடைய செல்வத்தம்பி குலராசா சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் - புத்தூர் சென்ற் லூக்ஸ் மெதடிஸ்ற் மிஷன் வைத்தியசாலைக்கு (St.Luke's Methodist Mission - hospital, Puttur) அத்தியாவசிய சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியை திரட்டுவதற்காக இவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 3 தசாப்த காலத்துக்கு முன்பு அவுஸ்திரேலியா நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்ற செல்வத்தம்பி குலராசா பருத்தித்துறை - புலோலி கிழக்கை …

  22. 11 Mar, 2025 | 05:24 PM கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்கள் இன்றையதினம் (11) பின்வரும் விடயத்தை சுட்டிக்காட்டி முழு கடையடைப்பை மேற்கொண்டனர். அந்த கோரிக்கைகளாவன, நீண்டகாலமாக தற்காலிகமாக தகரக் கொட்டகைகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் புடைவை, அழகுசாதன மற்றும் ஏனைய வாணிப வர்த்தகர்களுக்கு நிரந்தரக் கட்டடத்தை கட்டி வழங்குவதாக பலதரப்பினராலும் வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை காலமும் அவை நிறைவேற்றப்படவில்லை. தற்போது உலக வங்கியின் அனுசரணையில் ரூ40மில்லியன் நிதியில் மேற்படி வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கரைச்சி பிரதேச சபையால் திட்டமிடப்பட்டு 08 கடைகள் அமைக்கப் பெற்று தற்போது வர்த்தகர்களுக்கு எதுவித பயனும் இன்றி கேள்வி கோரல் மூலம் (டென்டர்) கடைகளை வழங்க பத்திரிகையில் வி…

  23. 11 Mar, 2025 | 06:25 PM தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) நீண்டகாலமாக செயற்பட்டுவந்த விந்தன் கனகரட்ணம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்துகொண்டார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், தனது கல்வியங்காடு அலுவலகத்தில் வைத்து விந்தன் கனகரட்ணத்திற்கான கட்சி உறுப்புரிமையை வழங்கி வைத்தார். வடக்கு மாகாணசபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, யாழ் மாநகரசபைகளில் முன்னாள் உறுப்பினராக விந்தன் கனகரட்ணம் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது விந்தன் கனகரட்ணத்தின் புதல்வனும் யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவனுமான வி.கே.மார்க் அன்ரனியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். தமிழரசுக் கட்சியில் ஆயுட்கால உறுப்பினராக இணைந்தா…

  24. எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் நேரில் சென்று ஆராயவுள்ளதாகவும் இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என தான் நம்புவதாகவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சர் தலைமையில் கூடியபோது யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும். யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்…

  25. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக புதிய பரீட்சை – பிரதமர்! மாணவர்கள் மீதான உளவியல் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், 2028 ஆம் ஆண்டளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போதைய புலமைப்பரிசில் பரீட்சை செயல்முறையை மறுபரிசீலனை செய்து சீர்திருத்தம் செய்ய அடுத்த ஆண்டு ஒரு நிபுணர் குழு நியமிக்கப்படும். இளம் மாணவர்கள் மீது ஏற்படும் தேவையற்ற அழுத்தத்தைக் குறைப்பதிலும், கல்வி முன்னேற்றத்திற்கான ஒரு நியாயமான வாய்ப்பாக பரீட்சை இருப்பதை உறுதி செய்வதிலும் இந்தக் குழு கவனம் செலுத்தும் என்றார். புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய கடு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.