ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
கோத்தாவின் பாதையில் செல்ல மறுக்கிறார் வாசுதேவ கோத்தாபய ராஜபக்சவின் வியத் மக திட்டத்துக்கு தாம் ஆதரவு அளிக்கவில்லை என்றும், அது தமது பாதை அல்ல என்றும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். “அண்மையில் நடந்த வியத் மக கருத்தரங்கின் போது, சில பேச்சாளர்கள் வெளிப்படுத்திய கருதுக்களுடன் இணங்க முடியாது. கூட்டு எதிரணியில் உள்ள சிலர் அவருடன் இணங்கிப் போகின்றனர். மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். சிறிலங்கா அதிபர் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும்.” என்றும் அவர் கூறியுள…
-
- 0 replies
- 310 views
-
-
வெளிச்சத்துக்கு வந்தது கூட்டு எதிரணியின் பிளவு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று பிரதி சபாநாயகர் தெரிவின் போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னிறுத்தப்பட்ட சுதர்சினி பெர்னான்டோ புள்ளேக்கு, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை. சுதர்சினி பெர்னான்டோ புள்ளேவின் பெயரை பிரதி சபாநாயகர் பதவிக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க முன்மொழிந்தார். அதனை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார வழிமொழிந்தார். அதேவேளை, ஐதேக தரப்பில் ஆனந்த குமாரசிறியின் பெயர் முன்மொழியப்பட்டதால், இரகசிய வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். இ…
-
- 0 replies
- 325 views
-
-
ரணிலின் சகோதரரின், TNL தொலைக்காட்சி மீள் ஒலிபரப்பு நிலைய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன… நிலையத்தின் செயற்பாடு முடக்கம் – சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் பல பிரதேசங்களில் ஔிபரப்பு பாதிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான ரீ.என்.எல் தொலைக்காட்சி சேவையின் ஒளிபரப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரான ஷான் விக்ரமசிங்கவிற்கு இந்த தொலைக்காட்சி சேவை சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தொலைதொடர்பு ஆணையகத்தின் அதிகாரிகளினால் ஒளிபரப்ப நிலையம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் இயந்திர சாதனங்கள் கையகப்படுத்தப்ப…
-
- 1 reply
- 376 views
-
-
கூட்டமைப்பினர் பம்மாத்து அரசியலில் இருந்து விடுபட வேண்டும் என்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் விருப்பம்! தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பம்மாத்து அரசியலில் இருந்து விடுபட வேண்டும் என்பது தமிழ் மக்களின் விருப்பமாக மாத்திரம் அல்லாமல் நல்லாட்சி அரசாங்கத்தின் விருப்பமாகவும் உள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி கோரி உள்ளார். இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு அலுவலகத்தில் திங்கள் கிழமை (03.06.2018) திங்கள் கிழமை நடத்திய விசேட ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி…
-
- 0 replies
- 352 views
-
-
நான் அமைச்சரவையில் இருப்பது தேங்காய் திருவதற்க்காக அல்ல - மனோ கணேசன்
-
- 0 replies
- 303 views
-
-
அரசமைப்பு உருவாக்கம் -மேலும் முடங்க வாய்ப்பு!! ஆயுட்காலம் முடிவடைந்த, முடிவடையப் போகின்ற ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. தேர்தல்களை நடத்த வேண்டியது சனநாயக விழுமியங்களைப் பின்பற்றும் அரசுகளின் தலையாய செயற்பாடு. அது முதன்மைக் கடமையும்கூட. அந்த வகையில் தன்னை சனநாயக சோசலிசக் குடியரசு என்று கூறிக்கொள்ளும் இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. அவ்வாறு விதிவிலக்காக இருந்துவிட்டால் அது முறையும் அல்ல. அந்த வகையில் மைத்திரியிடம் இருந்து வந்த…
-
- 0 replies
- 304 views
-
-
இலங்கை: ’இன்புளுவென்சா ஏ’ வைரஸ் தாக்கம் - 3000 பேர் வரை பாதிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையின் தென் மாகாணத்தில் பரவிய வைரஸிற்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது. இந்த வைரசினால் 3000 பேர் வரை பாதிக்கப்பட்டு இதுவரை சிகிச்சைப் பெற்றுள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம், மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்…
-
- 0 replies
- 309 views
-
-
தூரநோக்குடன் செயற்படும் தலைமைத்துவம் தமிழ் மக்களுக்கு வேண்டும்… இளையோர் மாநாடு – தமிழ் மக்கள் பேரவை…… வட கிழக்கு தமது தாயகப் பிரதேசமாக நீண்ட வரலாற்றினை கொண்டிருக்கின்ற ஓர் தேசிய இனமாக ஈழத்தமிழர்கள் தமது சுய நிர்ணய உரிமையினை நிலைநாட்டுவதற்கும் இதனடிப்படையில் மக்களுக்கு இருக்கக்கூடிய இறைமையையும் வலியுறுத்தி நீண்ட ஓர் விடுதலைப்போரில் தமது தேசியவிடுதலைக்காக தம்மை அர்ப்பணித்திருந்தனர். தமிழினம் இந்த விடுதலை வேள்வியில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் சொத்துடமைகளையும் வாழ்விடங்களையும் பறிகொடுத்திருந்தது. உலகளாவிய மாற்றங்கள், உலக நாடுகளின் நோக்கங்கள் மற்றும் அவர்களது தவறான புரிதல்கள் இவ்விடுதலைப்போராட்டத்தின் பால் ஈழத்தமிழர்க…
-
- 0 replies
- 371 views
-
-
தமிழ் மக்கள் பேரவை, கட்சி அரசியலில் ஈடுபடாது… தமிழ் மக்களின் விடிவு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் மக்கள் இயக்கமே தமிழ் மக்கள் பேரவை…. தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் இயக்கம். தமிழ் மக்கள் பேரவை, கட்சி அரசியலில் ஈடுபடாது தமிழ் மக்களின் விடிவு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகின்றது. அந்த வகையிலே தமிழ்ச் சமுதாயம் அறிவு பெற வேண்டும், ஆற்றல் பெற வேண்டும், ஆதரவு பெற வேண்டும், தமிழ்ச் சமுதாயத்திற்கு அதன் சகல மட்டங்களிலும் இருந்து அனுசரணை கிட்ட வேண்டும் என்ற ரீதியில் இளையோரைப் பலம் மிக்கவர்களாக ஆக்க இவ்வாறான ஒரு இளையோர் மாநாட்டை வெகுவிரைவில் கூட்ட உள்ளோம். அந்த மகா…
-
- 0 replies
- 519 views
-
-
பொலிஸார் இருவர் மீது தாக்குதல் -காத்தான்குடியில் பதற்றம்!! சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸார் இருவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர் எனத் தெரியவருகிறது. காத்தான்குடி-6 டீன் வீதிப் பகுதியில் சற்றுமுன்னர் இந்தச் சம்பவம் நடத்துள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இருவரும் மட்டக்களப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் http://newuthayan.com/story/16/பொலிஸார்-இருவர்-மீது-தாக்குதல்-காத்தான்குடியில்-பதற்றம்.html
-
- 0 replies
- 159 views
-
-
பளைவீமன்காமத்தில் வீடுகளை- மாற்றியமைத்துள்ள இராணுவத்தினர்!! வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பளைவீமன்காமம் ஜே/ 236 கிராம சேவையாளர் பிரிவில் 36 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டன. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் காணிகள், வீடுகளை பார்வையிட்டு வருகின்றனர். விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகள் சில இராணுவத்தினர் பயன்படுத்தியுள்ள நிலையில் 17 வீடுகள் நல்ல நிலையில் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. அத்துடன் இரு வீடுகளில் அறைகளை உடைத்து அலுவலக அறையாக கூட்டி வித்தியாசமான வடிவில் அமைத்து பயன்படுத்தியுள்ளனர். மேலும் வீடுகளுக்கு வெள்ளை வர்ணம் பூச…
-
- 0 replies
- 182 views
-
-
மனித எலும்புகளை மீட்கும் பணிகள் ஏழாது நாளாகவும் தொடர்கின்றது மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்படவிருந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வு நடவடிக்கைகள் 7 ஆவது நாளாகவும் இன்றும் மேற்கொள்ளப்பட்டது. அகழல்வானது எச்சங்கள் தென்படும் திசையை நோக்கிய அகழ்வாகவே இடம்பெறுகிறது. மன்னார் நகரில் சதொச விற்பனை நிலையம் ஒன்றுக்கான கட்டுமானப் பணி இடம்பெற்றவேளையில் 19.03.2018 முதல் 23.03.2018 வரை இவ் இடைப்பட்ட காலத்தில் இங்கு அகழ்வு செய்யப்பட்டு வெளியில் கொண்டு செல்லப்பட்ட மணலில் மனித எச்சங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்தே குறித்த அகழ்வு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி…
-
- 0 replies
- 427 views
-
-
எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது-மன்னாரில் மனோ கணேசன் நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் இடம் பெற்று வருவதோடு,வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்ஸீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மொழி மூலம் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பை தாம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச,அரச சார்பாற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும்,சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை(4) காலை மன்னார…
-
- 2 replies
- 623 views
-
-
இரண்டு வாரங்களில் புதிய கட்சி: வடக்கு முதல்வரின் முக்கிய முடிவு? வடக்குமான முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக செயற்பட்டு வரும் அவர் அடுத்த மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் புலம்பெயர் அரசியல் கட்சி ஒன்றினை எதிர்வரும் 2 வாரங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்தகாலங்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சி அல்லது முன்னணி ஒன்றை ஆரம்பித்தால், அவருடன் இணைந்து …
-
- 5 replies
- 1.4k views
- 1 follower
-
-
"கோத்தபாயவை ஜனாதிபதியாக்கினால் முழுநாடும் கண்ணீர் வடிக்க வேண்டி வரும்" (எம்.ஆர்.எம்.வஸீம்) புதிய அரசியலமைப்பை அரசாங்கம் கொண்டுவரத் தவறியதாலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்கும் 20 ஆவது திருத்தத்தை நாங்கள் கொண்டுவந்தோம். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருக்கும் நிலையில் கோத்தபாய ராஜபக்ஷவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்தால் முழு நாடும் கண்ணீர் வடிக்கவேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்…
-
- 1 reply
- 574 views
-
-
சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதும் – தவராசா – முடியாது – உறுப்பினர்கள்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்… மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கு மகாவலி அதிகாரசபையில் சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதுமானது என எதிர்கட் சி தலைவர் சி.தவராசா கூறிய கருத்தை, பலரும் மறுத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டு பெருமளவு சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனை கடந்த 4ம் மாதம் 10ம் திகதி வடமாகாணசபை உறுப்பினர்கள் 22 பேர் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர். இதன் தொடர் நடவடிக்க…
-
- 1 reply
- 376 views
-
-
இன்னொரு பிரபாகரனால் மட்டுமே – வடக்கைக் காப்பாற்ற முடியும்!! வடபகுதியில் குற்றச் செயல்கள் துரிதமாகப் பெருகி வரு வதைக் காண முடிகின்றது. திருட்டு, கொள்ளை, கொலை, போதைப் பொருள்களின் விற்பனை ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதையும் காண முடிகின்றது. வவுனியாவில் இரவு வேளையில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த எட்டு மாதக் குழந்தையை வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த சிலர் கடத்திச் சென்றமை வடக்கின் பாதுகாப்பு நிலைமை எந்த அளவில் உள்ளதென்பதைத் தூலம்பரமாக எடுத்துக்காட்டிவிட்டது. இரவு வேளை…
-
- 2 replies
- 873 views
-
-
போராட்டங்கள் ஏதோ ஒரு வடிவில் தொடரும்- சுரேஸ்பிரேமசந்திரன் தமிழர்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தலைவர்காளல் முன்னெடுக்கப்பட்ட அறி வழிப் போராட்டம் து சிங்கள அரசாங்கத்திற்கு புரிந்து கொள் முடியாத மொழியாக இருந்தமையினாலேயே அச் சிங்கள அரசாங்கத்திற்கு விளங்கக்கூடிய மொழியில் தமிழர்களது போராட்ட முறைமை மாற்றம் அடைந்தது என முன்னாள் பாராளுன்ற உறுப்பினரான சுரேஸ்பிரேமதச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதலாவது தியாகியான பொன் . சிவகுமாரின் 44 ஆண்டாது நினைவு நாள் அஞ்சலி நிகழ்வானது தினம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவுச் சிலையின் முன்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் …
-
- 1 reply
- 306 views
-
-
கேப்பாபிலவில் இராணுவத்துக்கு காணி வழங்க -ஐவர் சம்மதமாம்!! முல்லைத்தீவு, கேப்பாபிலவில் உள்ள 59.95 ஏக்கர் காணிகளுக்கு உரித்துடையவர்களில் 5 பேர் தங்களது காணிகளை இராணுவதுக்கு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். கேப்பாபிலவில் படையினர் வசம் உள்ள காணிகளின் விடுவிப்புக்காகப் போராடிக்கொண்டிருக்கும் காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கேப்பாபுலவில் படையினர் வசம் உள்ள காணிகள…
-
- 3 replies
- 550 views
-
-
சுயமரியாதை இருந்தால் அமெரிக்கா சென்று விடுங்கள் -கோத்தாவுக்கு மங்கள ஆலோசனை!! கூட்டரசில் உள்ள அமைச்சர்களைப் போன்று சுயமரியாதை இருந்தால் கோத்தபாய ராஜபக்ச தமது பூர்வீக பூமியான அமெரிக்காவுக்கு இப்போதாவது செல்ல வேண்டும். இங்கு இருந்து பொய்களைக் கூறிக் குழப்பம் ஏற்றப்படுத்தக் கூடாது. இவ்வாறு சாடியுள்ளார் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர. ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பின் அடுத்த கட்டமாக ஊடக மத்திய பிரிவு நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் உத்தியோகப…
-
- 1 reply
- 405 views
-
-
முடிவின்றி முடிந்த யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் : நீண்ட காலத்தின் பின்னர் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் , இணைத்தலைவர்கள் இடையில் வெளியேறி சென்றமையால் , முடிவுக்கு கொண்டு வரப்படாமல் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களும் எழுந்து சென்றனர். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன், அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 9 மணிக்கு யாழ் அரச அதிபர் நா.வேதநாயகனின் வரவேற்பு உரையுடன் , கூட்டம் …
-
- 4 replies
- 1.1k views
-
-
யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கும் நிதி போதாது. – பிரதமரை கேட்டால் சிரிக்கின்றார்….. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்.. யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி போதாமையுள்ளது. அந்நிலையில் அரச அதிகாரிகளை குறை கூறி , அவர்களுடன் முரண்படுவது ஏற்புடையதல்ல என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,இந்த நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்திற்கு அரசாங்கம் அதிகளவிலான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அதனை அரசாங்கம் செய்யவில்லை. இருந்தும் ஏனைய …
-
- 1 reply
- 1.6k views
-
-
வலி.வடக்கில் 33 ஏக்கர் காணிகளுக்கு -விரைவில் விடுதலை!! வலி.வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமிருந்து மேலும் 33 ஏக்கர் காணி மற்றும் நல்ல நிலை யிலுள்ள மக்களின் வீடுகள் என்பன சில தினங்களில் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிருந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் ஆரம்பமாகியிருந்தது. காங்கேசன்துறை வீதியின் கரையோரமாக, அந்தப் பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருந்தனர். 33 ஏக்கர் நிலப்பரப்…
-
- 6 replies
- 1.1k views
-
-
வடக்கு மாகாணத்தில் சிங்கள – ஆக்கிரமிப்பை தடுப்பதற்கு செயலணி!! முல்லைத்தீவிலும், வவுனியாவிலும் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற் றங்களை உடனடியாக நிறுத்தக் கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான விவகாரங்களைக் கையாள்வதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறப்புச் செயலணி அமைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் இடம்பெறும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நா…
-
- 0 replies
- 602 views
-
-
ஒரு மாதம் அவகாசம் தாருங்கள்- கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் கோரிக்கை!! நாங்கள் அதிகளவு பணத்தை முதலீடு செய்துள்ளோம். நோன்புக் காலத்தில் எங்களுக்கு தொழில்தடை விதித்தால் நாங்கள் நெருக்கடிக்குள்ளாகுவோம். மனிதாபிமான அடிப்படையில் ஒரு மாத கால அவகாசம் தாருங்கள். இவ்வாறு வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜில…
-
- 1 reply
- 756 views
-