ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
அர்ஜுன மகேந்திரன் , அர்ஜுன் அலோசியஸூடன் தொலைபேசியில் உரையாடியோர் விபரம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆர்.யசி மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தில் 118 அரசியல் வாதிகள் பணம் பெற்றுக்கொண்டதாக எந்தவொரு ஆவணமும் இல்லை எனவும் மத்திய வங்கி விவகாரத்தில் தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்ட தகவல்கள் மட்டுமே மறைக்கப்பட்ட ஆவணத்தில் உள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அர்ஜுன மகேந்திரன் மற்றும் அர்ஜுன் அலோசியஸுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட அரசியல் வாதிகளின் பெயர்ப் பட்டியலை நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் சபாநாயகர் வெளியிடவுள்ளார். …
-
- 0 replies
- 329 views
-
-
அரசியல் உயர் மட்டத்தின் உறவுக்காகவே -தலைமை அதிகாரி கையூட்டுப் பெற்றார்!! இந்திய வணிகரிடம் கையூட்டுப் பெற்றபோது கைது செய்யப்பட்ட அரச தலைவர் செயலகத்தின் தலைமை அதிகாரி மகாநாம, அரசியல் உயர்மட்டத்தின் நெருங்கிய உறவினருக்காகவே கையூட்டைப் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார் என்று தெரியவருகிறது. கொழும்பில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள அரசியல் கொதிநிலைக்கும், விசாரணைகளில் வெளிப்பட்டுள்ள தகவல்களுக்கும் தொடர்பு இருப்பதாக கொழும்பு அரசியல்…
-
- 0 replies
- 677 views
-
-
சிங்கள மீனவர்களை வெளியேற்றுங்கள்- சுமந்திரன் கோரிக்கை வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அத்துமீறி தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருதங்கேணியில் தமிழ் மக்களிற்கு சொந்தமான நிலத்தில் நூற்றுக்கணக்கான வாடிகளை அமைத்துக்கொண்டு பெருமளவு சிங்கள மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வடமராட்சி கிழக்கு மீனவர்கள் அவர்களை வெளியேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தாங்கள் புலனாய்வ…
-
- 1 reply
- 684 views
-
-
முருங்கை மரம் ஏறப் போகும் சிங்கள வேதாளம் சுதந்திர கட்சி + ஐ தே க கூட்டு அரசு வரும்போதே இது இலங்கைக்கு புதுசே எப்படி என்று பலர் யோசித்தார்கள். இருந்தாலும் மகிந்த எனும் பெரும் பூதத்தினை விழுத்த, இந்தியாவும் மேல் நாடுகளும் சேர்ந்து எடுத்த நடவடிக்கைகளுடன்... சிறுபான்மையினரின் முழு எதிர்ப்பும் சேர மகிந்த வீடு போக வேண்டியதாகி விட்டது. மைத்திரியை, ஜனாதிபதி என்னும் கனவிலும் நினைத்திராத கிளுகிப்பையினை கொடுத்து, அதை அவர் கிளிக்கி கொண்டு இருந்த போது, ரணில் என்னும் குள்ள நரி... சுதந்திர கட்சியினை குதறி விட்டது என்று, உள்ளூர் ஆட்சி தேர்தலில் புது கட்சி தொடங்கி வென்ற மகிந்த தரப்பு, மைத்திரிக்கு ஓதி விட்டது போல உள்ளது. நேற்று நடந்த நல்லாட்சி அரசினை அமைக்க முன் நின்று…
-
- 2 replies
- 861 views
-
-
பசிலின் தூண்டுதலால் களமிறங்கும் கோத்தபாய! மைத்திரியின் பாதுகாப்பு ரணிலிடம்! புதிதாக வகுக்கப்படும் திட்ட வியூகம் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் துண்டுதலினால் தான் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் தீவிரமாக களமிறங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை கொழும்பு அரசியலை பரபரப்பாக்கியது. பதவியேற்ற மறுநாளே தான் நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, நூறுநாள் வேலைத்திட்டம் என்பது மடத்தனமானது என்றும் கடுமையாகப் பேசியிருந்தார். இந்நிலையில், இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதுமாத்திரமன்றி, ஜனாதிபதிய…
-
- 0 replies
- 246 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை எங்கே போனது.? ஈ.பீ.டி.பியுடனே சேர்ந்து செயற்படும் கூட்டமைப்பினரின் தேசியம் என்ற கொள்கை, கெளரவம் எல்லாம் எங்கே சென்று விட்டது, என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினமும் நினைவு பேருரையும் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது, இந் நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலையே ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்…
-
- 0 replies
- 414 views
-
-
முஸ்லிம்களை வளைத்துப் போடும் முயற்சியில் ராஜபக்சக்கள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இம்முறை நடத்திய இப்தார் விருந்துக்கு, இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ரம்ஸான் நோன்பை முன்னிட்டு மகிந்த ராஜபக்ச தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் கடந்தவாரம் இப்தார் விருந்து, அளித்தார். இந்த விருந்துக்கு இம்முறை, முஸ்லிம் வணிகர்களுக்கு மாத்திரமன்றி, மேற்காசிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த இப்தார் விருந்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். மகிந்த ராஜபக்ச …
-
- 0 replies
- 453 views
-
-
அமெரிக்க – சிறிலங்கா விமானப்படை அதிகாரிகள் உயர்மட்டப் பேச்சு அமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளுக்கு இடையிலான பேச்சுக்கள் அண்மையில் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக, அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாத நடுப்பகுதியில் இரண்டு நாட்கள் இந்த உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களில், அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகளும், சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளும் பங்கேற்றனர். இது அமெரிக்க- சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களாகும். இந்தப் பேச்சுக்களில் ஓடுபாதை நடவடிக்கைகள், …
-
- 0 replies
- 168 views
-
-
சட்டம் ஒழுங்கு அமைச்சை ஏற்கமாட்டேன் – சரத் பொன்சேகா சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவியை இனிமேல் வழங்க முன்வந்தாலும், தான் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. தியபெதும பிரதேசத்தில் யானைகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராயச் சென்ற சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவி சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அண்மைய அமைச்சரவை மாற்றத்தின்போது அவருக்கு பிராந்திய அபிவிருத்தி மற்றும் வன வாழ் உயிரினங்கள் அமைச்சுப் பதவியே வழங்க…
-
- 0 replies
- 150 views
-
-
எம்முடன் இருப்தே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பானதாகும் - ரணில் (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடுகள் மீண்டும் தீவிரமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் , நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரதமர் தங்களுடனான கூட்டணியைத் தொடர்வதே ஜனாதிபதிக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பான அணுகுமுறையாக அமையும் என்று கூறியதாக தெரியவருகின்றது. ஜனாதிபதி சிறிசேன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியலை முன்னெடுக்கும் யோசணையை கொண்டிருப்பதாக தெரிகின்றது. ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர க…
-
- 0 replies
- 357 views
-
-
வவுனியாவில் 8 மாத குழந்தை கடத்தல் – லண்டனில் வசிக்கும் தந்தையே காரணம் ? வவுனியா, குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த இனந்தெரியாத குழுவொன்று, 8 மாத குழந்தையொன்றினைக் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வான் ஒன்றில் வந்த ஆறுபேர் கொண்ட குழுவினரே இவ்வாறு குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வசுதரன் வானிஷன் என்ற முழந்தையே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குழந்தையின் தந்தை லண்டனில் இருப்பதாகவும், தந்தைக்கும் தாய்க்கும் இடையில் உள்ள முரண்பாடு காரணமாக தந்தையே ஆட்களை வைத்து குழந்தையை கடத்தியுள்ளதாக குழந்தையின் தாய் கூறியுள்ளார். குறித்த சம்பவம் தொ…
-
- 1 reply
- 680 views
-
-
தேசியப் பிரச்சினைக்கு எம்மால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் - மஹிந்த ராஜபக்ஷ (ரொபட் அன்டனி) வடக்கு, கிழக்கு தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எமது தரப்பினால் மட்டுமே வழங்க முடியும். அதிகாரப்பகிர்வை வலியுறுத்துகின்ற வாசுதேவநாணயக்கார, ராஜா கொல்லுரே, திஸ்ஸவிதாரண போன்றோர் எமது தரப் பிலேயே இருக்கின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார். தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பான ஒரு கலந்துரையாடல் கூட்டு எதிரணியின் தலைவர்கள் மட்டத்தில் முன்னாள் ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடுகையி லேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடர்…
-
- 1 reply
- 479 views
-
-
ஆசிரியருக்கு கற்பித்து, மாணவர்களுக்கு சுடப்பழக்கும் இராணுவம்! வடக்கின் நிர்வாகமே இராணுவத்தை கல்விக்குள் இழுக்கிறதா? குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்.. இராணுவத்தினர் மக்களின் சிவில் வாழ்க்கையிலும் குறிப்பாக கல்வித்துறைக்குள் தலையிடக்கூடாது என்று வடக்கு மாகாண சபையினர் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் இராவணும் நடத்தும் முன்பள்ளிகளை இராணுவத்தினரிடமிருந்து மீட்க வேண்டும் என்றும் தமிழ் தலைமைகள் கோரி வருகின்றன. இந்த நிலையில் வடக்கு மாகாண சபை நிர்வாகம் மற்றும் கல்வி நிர்வாகமே இராணுவத்தை கல்விக்குள் இழுகிறதா என்று கேள்வி எழுப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு கற்பித்த இராணுவம்…
-
- 0 replies
- 504 views
-
-
இராணுவத்தினரின் வசமுள்ளகாணிகளை மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் - சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரின் வசமுள்ளகாணிகளை மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைத்ததாக தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார். கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் எத்தகைய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது எனக்கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில்…
-
- 0 replies
- 301 views
-
-
பிணைமுறி விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிட முடியுமா? சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரினார் ஜனாதிபதி செயலர் (ரொபட் அன்டனி) மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்த அறிக் கையை முழுமையாக வெளியிட முடியுமா என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவிடம்ஆலோசனை கோரியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையை வெளியிடுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய, சுதந்திரக்கட்சியின் மாற்று அணியினர், ஜே.வி.பி.யினர், பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அமைச்சர் மலிக் சமரவிக்ரம உள்ளிட்டோர் ஜனாதிபதி செயலகத்தில் கோரிக்…
-
- 0 replies
- 599 views
-
-
மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் ஹக்கீம்,பௌஸி, ஹிஸ்புல்லாஹ் (எம்.சி.நஜிமுதீன்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ நேற்று முன்தினம் ஏற்பாடுசெய்த இப்தார் நிகழ்வில் அதிகளவான முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், வர்த்தகர்கள் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வருடா வருடம் இப்தார் நிகழ்வை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்வானது எதிர்பார்த்தைவிட வெற்றியீட்டியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அம…
-
- 0 replies
- 430 views
-
-
உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுகிறார் ஜனாதிபதி – சுமந்திரன் நூறு நாள் வேலைத்திட்டம் உட்பட அனைத்து செயற்பாடுகளும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்தே நடைபெற்றதாகவும், தற்போது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவர் கூறிவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களினால் அரசியல் தீர்வு விடயம் சவால் மிக்கதொன்றாக மாறியிருக்கின்ற போதிலும், அரசியல் தீர்விற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளையும் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார். இதேவேளை, ஜனாதிப…
-
- 3 replies
- 557 views
-
-
17 ஆண்டுகளில் சீனாவிடம் 7.2 பில்லியன் கடன்களை பெற்றுள்ள சிறிலங்கா கடந்த 17 ஆண்டுகளில் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் (Exim Bank) இருந்து, சிறிலங்கா 7.2 பில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக, வெளியக வளங்கள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2001ஆம் ஆண்டில் இருந்து. 2017 டிசெம்பர் வரையான காலப்பகுதியிலேயே இந்தக் கடன்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டு வசதிகளின் கீழ் சலுகை அளிக்கும் ஒரே சீன நிதி நிறுவனம், சீனா எக்சிம் வங்கியே என்று, வெளியக வளங்கள் திணைக்களத்தின் 2017ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கடன்கள் பற்றிய விபரங்களையும் உள்ளடக்கியதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன…
-
- 1 reply
- 337 views
-
-
உண்மையை சிலர் மறந்து விட்டனர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவரை நாமே ஜனாதிபதியாக்கினோம்; சத்தியத்துடன் களமிறங்குவோம் என்கிறார் ஹரீன் (எம்.எம்.மின்ஹாஜ்) சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனினும் தற்போது அதனை ஒரு சிலர் மறந்துவிட்டனர். அதனை நாம் மீண்டும் நினைவூட்டுவதற்கு உண்மைகளுடன் கள மிறங்கவுள்ளோம் என ஐக்கிய தேசி யக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல்துறை பிரதானியும் அமைச்சருமான ஹரீன்பெர்னா ண்டோ தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த உண் மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. ஆகவே, அதனை வெளிப்படுத்த வேண்டும். எமது பிரசார பணிகளை சத்தியம் என்ற…
-
- 0 replies
- 232 views
-
-
முல்லைத்தீவு நிலம் பறிக்க புதுமுறையில் வியூகம்- தொல்பொருள் திணைக்களம் களத்தில்!! முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் நாயாற்றுப் பாலத்திலிருந்து, கோம்பா சந்தி வரையான சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தை தொல்பொ ருள் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். தொல்பொருள் திணைக்களத்துக்கு என்று அடையாளப்படுத்தும் நடுகல் அங்கு நேற்று முன்தினம் நடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்…
-
- 0 replies
- 397 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டமே பயங்கரவாதம். – தமிழ் அரசியல்வாதிகள் பயங்கரவாதிகள்…. குளோபல் தமிழ்ச் செய்தியார்.. பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார். அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.பல்கலை கழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலை முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 335 views
-
-
கோத்தாவின் வழக்கை விசாரிப்பதில் இருந்து 4 நீதியரசர்கள் விலகினர் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரிக்கும் குழுவில் இருந்து இதுவரை நான்கு நீதியரசர்கள் விலகியுள்ளனர். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், காரணமின்றித் தாம் கைது செய்யப்படக் கூடும் என்று உச்சநீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மிக் விமானக் கொள்வனவு மற்றும் சில விவகாரங்கள் தொடர்பாக, தமக்கு எதிராக காரணமின்றி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்வதில் இருந்து முதலில் ஒரு நீதியரசரும், அதையடுத்து இரண்டு நீதியரசர்களும், நேற்…
-
- 0 replies
- 156 views
-
-
காணாமல் போனோருக்கான பணியகம் ஏ.எச்.எம்.பௌசியிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கட்டுப்பாட்டில் இருந்த காணாமல் போனோருக்காக பணியகம், தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் போனோருக்கான பணியகத்தை இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியிடம் ஒப்படைத்துள்ளார். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் முன்னதாக, காணாமல் போனோருக்கான பணியகம் சிறிலங்கா அதிபரின் பொறுப்பில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalak…
-
- 0 replies
- 281 views
-
-
அதிபர் வேட்பாளராக பீரிஸ்? – ராஜபக்சக்களின் குடும்ப மோதலால் முடிவு அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவராக உள்ள பேராசிரியர் ஜி.எல்.பீரிசை நிறுத்துவதற்கு, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அதிபர் வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ச குடும்பத்துக்குள் ஏற்பட்டுள்ள பனிப்போரை அடுத்தே, மகிந்த ராஜபக்ச இந்த முடிவை எடுத்துள்ளார் என்று, அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, ராஜபக்ச குடும்பத்துக்குள் கோத்தாபய, பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச ஆகியோர், தமது ஆதரவாளர்களின் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.…
-
- 0 replies
- 301 views
-
-
அடுத்த சில நாட்களில் கைதாகிறார் சிறிலங்காவின் உயர்மட்டப் படைத் தளபதி? கொழும்பில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய, குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் உயர்மட்டப் படை அதிகாரி ஒருவர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளார். சிறிலங்கா காவல்துறை தலைமையக வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சந்தேக நபரான, லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சியைக் கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவருக்கு உதவிய சந்தேக நபர்களையும் கைது செய்யுமாறு, கோட்டே நீதிவான் லங்கா …
-
- 0 replies
- 293 views
-