ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
காணிகளை மீள கையளிப்பது தொடர்பில் விசேட அவதானம் (கண்டாவளை நிருபர்) காணாமல்போனோர் ஆணைக்குழுவும் விரைவில் வரும் கிளிநொச்சி அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்தில் பிரதமர் ரணில் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை மீள வழங்குவதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அத்துடன் வடக்கையும் தெற் கையும் அபிவிருத்தி ஊடாக இணைப்பதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றேன். காணாமல்போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் விரைவில் கிளிநொச்சிக்கு வருகை தந்து தமது செயற்பாடுகளை முன்னெடுப்பார் கள். இதன் ஊடாக மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு எமது அர…
-
- 0 replies
- 325 views
-
-
வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை மறித்து கொள்ளை I வவுனியாவிலிருந்து பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியூடாக வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி நகைகளை பறித்த சம்பவம் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இருந்து நேற்று மாலை(திங்கட் கிழமை) பரந்தன் வழியாக வற்றாப்பளை அம்பாள் ஆலயத்திற்கு வாகனம் ஒன்றில் பயணித்த பக்தர்களை மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர் வழிமறிதது, வாகனத்தில் பயணித்தவர்களை தாக்கி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசி, வாகன சாவியையும் பறித்துச் சென்றுள்ளனர். இச் சமபவம் தொடர்பில் தருமபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இணைந்து…
-
- 0 replies
- 256 views
-
-
முன்னாள் புலிகள் இருவரை விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் நடவடிக்கை…. ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்களான விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு காவற்துறையிர் விசாரணைக்கு உட்படுத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பணத்திற்கு சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் விஷேட கலந்துரையாடலை நடாத்தி இருந்தார். அதன் போது யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கு…
-
- 0 replies
- 176 views
-
-
பிராந்திய பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு - எம்.றொசாந்த், டி.விஜிதா யாழில் இருந்து வெளிவரும் பிராந்திய பத்திரிகையின் ஊடகவியலாளரும், பத்திரிகை விநியோகத்தருமான செல்வராசா இராசேந்திரம் (வயது 56) இன்று (28) அதிகாலை இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் கொழும்புத்துறை பகுதியில் அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிளில் துணியால் முகத்தை முடிக்கட்டிக் கொண்டு வந்த வாள்வெட்டுக்கும்பல், குறித்த நபர் மீது வாள் வெட்டுத்த…
-
- 3 replies
- 760 views
-
-
மகிந்த – மைத்திரி இடையே இணக்கப்பாடு சாத்தியமே – தயாசிறி அரசியலில் நிரந்தர எதிரிகள் என்று எவரும் இல்லை. எனவே, மகிந்த ராஜபக்சவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது சாத்தியமே என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். “கூட்டு அரசாங்கத்தை வெளியேறுவதையே அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் விரும்புகிறார். அதற்கான நாளை தீர்மானிக்குமாறு அவர் மத்திய குழுவிடம் கேட்டுள்ளார். எதிர்க்கட்சியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே. நாற்காலி அல்லது வெற்றிலை சின்னத்தின் கீழ் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட முடியாது என்பதற்கு…
-
- 0 replies
- 149 views
-
-
வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் ஆட்குறைப்பு வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய தேவை உள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான தூதரகங்களின் பணியாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன் பல நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்கள் ஆக்கபூர்வமான முறையில் செயற்படவில்லை என்றும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். http://www.puthinappalakai.net/2018/05/29/news/31113
-
- 0 replies
- 140 views
-
-
அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல்? அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஆலோசகர்கள் கவனம் செலுத்துவதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனையும் பெறப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம், வரும், 2020 ஜனவரியுடன் முடிவடையவுள்ளது. அதேவேளை, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், 2020 ஓகஸ்ட் வரை நீடிக்கும். எனினும் நான்கரை ஆண்டுகள் கழித்தே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2018/05/29/news/31115
-
- 0 replies
- 248 views
-
-
மட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்? வாங்கியவர் யார் தெரியுமா? on: மே 25, 2018 மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் விற்றுள்ளனர். மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அழகு சேர்க்கும் குறித்த தீவு பகுதி பரம்பரை பரம்பரையாக இரு தமிழர் குடும்பத்திற்கு உரித்துடையாதாக காணப்படுகின்றது. இந்நிலையில், அண்மையில் குறித்த தீவுப்பகுதியினை மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம் பிரதி அமைச்சருக்கு விற்றுள்ளனர். குறித்த இரண்டு தமிழ் குடும்பத்தின் சந்ததி வழி பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளால் இவ்வாறு இந்த தீவு விற்கப்பட்டுள்ளது.…
-
- 8 replies
- 2.3k views
-
-
கிளிநொச்சியில் ரணில் – அதிகாரிகளுடன் சந்திப்பு!! தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை கிளிநொச்சிக்குப் பயணித்துள்ளார். அங்கு கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் அபிவிருத்திக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா ,நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை உறுப்பினர்கள் ,பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களங்களி…
-
- 1 reply
- 336 views
-
-
38 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ஜூன் 18 முதல் ஜூலை 6 வரை (ரொபட் அன்டனி) இலங்கை தொடர்பில் கேள்வி எழுப்ப சர்வதேச அமைப்புக்கள் முயற்சி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடர் எதிர் வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளதுடன் இந்தக்கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதே மனித உரிமை அமைப்புக்கள் கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 38 ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கையிலிருந்து விசேட தூதுக்குழுவினர் கலந்துகொள்ளப்போதில்லை என்றும் ஜெனிவாவில் தங்கியுள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகள் இதில் ப…
-
- 0 replies
- 371 views
-
-
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் வாழ்க்கையை குழப்ப முயற்சிக்கவில்லை - கோத்தா (ஆர்.யசி) கடந்த ஆட்சியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் சாதாராண வாழ்க்கை சூழலை குழப்பவோ அவர்களின் இன, மத, கலாசார நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கவே இப்போதும் நாம் முயற்சித்து வருகின்றோம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். பேருவளையில் நேற்று இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், ராஜபக்ஷவினர் குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியி…
-
- 1 reply
- 447 views
-
-
கைதுப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார்.. சிறிதரன் எம்.பி முறைப்பாடு கிளிநொச்சி வனவளத்திணைக்கள அதிகாரி ஜெயச்சந்திரன் என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட அவர் என்னுடன் அப்படி நடந்து கொண்டார் என பாராளுமன்ற உறுப்பினர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறைபாடு செய்துள்ளார். கிளிநொச்சி வனவளத்திணைக்கள அதிகாரி ஜெயச்சந்திரன் என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட அவர் என்னுடன் அப்படி நடந்து கொண்டார் என பாராளுமன்ற உறுப்பினர் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்…
-
- 0 replies
- 522 views
-
-
நீதவான் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பம் (படங்கள்) மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வளாகத்தில் இன்று மாலை 4.15 மணியளவில் முதற்கட்டமாக அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று பகல் 1.30 மணியளவில் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த குறித்த விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது. -மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையி…
-
- 0 replies
- 303 views
-
-
''இராணுவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்புகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சர்வதேச அமைப்புகள் பகிரங்கப்படுத்த முயற்சி'' (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 38 ஆவது கூட்டத்தொடர் இடம் பெறவுள்ளது. இராணுவத்தினருக்கு எதிராக புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சர்வதேச அமைப்புக்கள் பகிரங்கப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்போது அரசாங்கத்தின் காட்டிக் கொடுப்புக்களும் ஒரு முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படும் என தேசப்பற்றுள்ள வல்லுநர்களின் அமைப்பின் பேச்சாளர் அட்மிரல் சரத் வீரகேசர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலம் பெயர் தமிழர் அமைப்புக்களின் கனவு…
-
- 0 replies
- 383 views
-
-
சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ். சென்றார் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன் பலத்த பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். வடக்கின் அபிவிருத்தி குறித்து ஆராய்வதற்காக அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டிருந்தது. அத்துடன், வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் நேரில் சென்று காண்காணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01…
-
- 15 replies
- 1.9k views
-
-
தூத்துக்குடியில் நடந்த படுகொலை – யாழ்.பல்கலையில் திரண்ட மாணவர்கள்!! தூத்துக்குடியில் கடந்த வாரம் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துக்கு கண்டம் தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணப் பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், படுகொலையைக் கண்டிக்கும் படங்களுடன் கூடிய பாதாகைகைளைத் தாங்கியிருந்தனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 13 பேர் கொல்லப்பட்டன…
-
- 0 replies
- 329 views
-
-
தேசிய பிரச்சினைக்கு இரு கட்சிகளும் தீர்வுகாண வேண்டும் என்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது தேசிய பிரச்சினை தொடர்பாக மனம் திறக்கிறார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வாசுகி சிவகுமார் புதிய அரசியலமைப்பு இலங்கைக்கு தவிர்க்கமுடியாததொன்றெனக் கூறும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளின் தேக்க நிலைக்கான காரணங்களை…
-
- 0 replies
- 371 views
-
-
நெடுந்தீவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற – மூன்று மீனவர்களைக் காணவில்லை- உறவினர்கள் அந்தரிப்பு!! நாவாந்துறைப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு படகில் மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவந்துறை வடக்கைச் சேர்ந்த ஜோன் மல்கன் விமல் (வயது––44), செபமாலை அலெக்ஸ் (வயது-–35), மகேந்திரன் ரூபன் (வயது-30) ஆகியோரே காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம் மாலை நாவந்துறை கடலிருந்து படகில் மூவரும் புறப்பட்டுள்ளனர். நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு…
-
- 0 replies
- 273 views
-
-
தனியான தலைவரைத் தெரிவு செய்கிறது 16 பேர் அணி – மெல்லச் சாகும் சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணி, தமக்கென தலைவர், தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் போன்ற பதவிகளை விரைவில் உருவாக்கவுள்ளது. இந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். ”மாத்தறையில் எமது முதலாவது கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. இரண்டாவது கூட்டம், மாத்தளையில் ஜூன் நடுப்பகுதியில் இடம்பெறும். எம்மால் வெற்றிகரமாக அரசியல் பயணத்தை தொடர முடியும். மகிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், ஏனைய பங்காளர்களுடன் இணைந்து பொதுவான அரசியல் தளம் ஒன்றைக் கட்டியெழுப…
-
- 0 replies
- 721 views
-
-
கண்டியயை கதற வைத்த மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க தாக்குதலுக்கு உள்ளானார்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மீது, அனுராதபுரம் சிறைச்சாலையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த அமித் காவற்துறை மற்றும் சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேவேளை அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர…
-
- 1 reply
- 468 views
-
-
இராணுவத் தளபதிகளை இலக்கு வைத்ததை மறந்து விட்டார் மகிந்த – சரத் பொன்சேகா தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை தாம் இலக்கு வைத்ததை, மகிந்த ராஜபக்ச மறந்து விட்டார் என்று, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “போர் வீரர்களை இந்த அரசாங்கம் இலக்கு வைப்பதாக மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டுகிறார். ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் இராணுவத் தளபதிகளை தாம் இலக்கு வைத்ததை, மகிந்த ராஜபக்ச மறந்து விட்டார். மற்றவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு முன்னர், முதலில் அவர் அதனைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார். http://www.puthinappalakai.net/2018/05/28/news/31103
-
- 0 replies
- 457 views
-
-
இதுவரையில் எத்தனைப்பேர் HNB கணக்கை மூடியுள்ளார்கள் தெரியுமா? Posted on May 26, 2018 in இலங்கை செய்திகள் இடைநிறுத்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், வங்கிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிளிநொச்சி ஹற்றன் நஷனல் வங்கியில் கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்ந்தார்கள் என வங்கி ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்பட்டுருந்தனர். அந்நிலையில் தற்போது குறித்த வங்கிக்கு எதிராக கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் உணர்வாளர்கள் பலர் பதிவு செய்து வருகின்றனர். அதேவேளை குறித்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலர் தமது உணர்வுகளை மதிக்காத வங்கி கணக்கினை மூடி வருகின்றனர். இதனால் பாரிய பின்னடைவை சந்தி…
-
- 5 replies
- 1.3k views
-
-
சங்குப்பிட்டிக்குச் செல்வோருக்கு முக்கிய அறிவித்தல் கிளிநொச்சி - சங்குப்பிட்டிப் பாலப்பகுதி ஆழமான கடல் என்பதன் காரணமாக, இப்பகுதிக்கு வருகை தருபவர்கள் கடலில் குளிப்பது தொடர்பாக, மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலா மையமாக சங்குப்பிட்டிப் பாலப்பகுதி வளர்ந்து வரும் நிலையில், ஏ-32 வழியான போக்குவரத்தும் நடைபெறுகின்றபோது, விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே, புகைப்படம் எடுப்பவர்கள் வீதி ஒழுங்குகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்குமாறும் வாகனங்கள் வரும்போது வீதியைக் கவனிக்காமல், வீதியைக் கடக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 547 views
-
-
“இலங்கை/இந்திய உறவுகள் 1979 – 1980” – MI 5 – S.A.S உடனான செயற்பாடுகள் குறித்த கோப்புக்கள் அழிப்பு…. விடுதலைப் புலிகளை கட்டப்படுத்த பிரித்தானியா இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்கள் அழிக்கப்பட்டன… பிரித்தானிய அரசாங்கம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்களை (கோப்புகள்) பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலகம் அழித்துள்ளதாக, தி கார்டியன் ஊடகம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியா…
-
- 2 replies
- 563 views
-
-
தமிழர்கள் மீது அக்கறை கொள்ளாவிட்டால் 6 லட்சம் பேரும் வெளிநாடு ஓடிவிடுவார்கள் -அமைச்சர் சுவாமிநாதன்!! தமிழ் மக்கள் மீது கொழும்பு அரசு அதிக அக்கறை கொண்டு செயற்படவில்லை என்றால் 6 லட்சத்து 20 ஆயிரம் தமிழ் மக்களும் வெளிநாடு சென்றுவிடும் நிலை ஏற்படும் என்று தெரிவித்தார் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன். நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று நடைபெற்ற உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு…
-
- 7 replies
- 1k views
-