ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
வடக்கில் மீண்டும் ஆயுத மோதலை உருவாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது - சம்பிக்க (ஆர்.யசி) வடக்கில் மீண்டும் ஆயுத கலாசாரத்தை உருவாக்கி அதன் மூலமாக வடக்கு மக்களை இருட்டில் தள்ளும் முயற்சிளையே இன்று சிலர் முன்னெடுத்து வருகின்றனர். விடுதலைப்புலிகளுக்கு ஒப்பாக இராணுவத்தை குற்றம்சுமத்த இடமளிக்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இராணுவ நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், மே 18 எம் அனைவருக்கும் முக்கியமான தினமாகும். அதே போல கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த தினம் எம்மால் மறக்க முடியாது. நாம் யுத்த களத்…
-
- 1 reply
- 461 views
-
-
டுவீற்றர் பதிவால் சிக்கலில் சிக்கிக் கொண்ட மைத்திரி!! – பெரும் சர்ச்சை! முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இலங்கையின் வெற்றி தினம் என டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) தனது டுவிட்டரில் பிரசுரித்த பதிவை நீக்கியுள்ளார். அந்தப் பதிவால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்தே அந்தப் பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று இலங்கை, இந்தியா மற்றும் புலம்பெயர் நாடுகளி…
-
- 1 reply
- 361 views
-
-
சோகமயமானது முள்ளிவாய்க்கால் – மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்!!- மே-18 இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. உறவுகள் மண்ணில் புரண்டு கதறி அழுத காட்சியைக் கண்டு பலரது நெஞ்சையும் கலங்க வைத்தது. முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவிடத்தில் சுடயேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது http://newuthayan.com/story/11/சோகமயமானது-முள்ளிவாய்க்கால்-மண்ணில்-புரண்டு-கதறி-அழுத-உறவுகள்.html
-
- 23 replies
- 2.6k views
-
-
நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இன்று சிறிலங்காவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை கடைப்பிடிக்கிறோம். 26 ஆண்டுகளாக நீடித்த போரினால், அளவிடமுடியாத காயங்கள், வாழ்க்கை இழப்புகள், இடம்பெயர்வுகளை சந்திக்க நேரிட்டது. போரில் உயிர் பிழைத்தவர்கள…
-
- 0 replies
- 344 views
-
-
கூட்டு அரசில் இருந்து விலகும் நாளைத் தீர்மானிக்குமாறு சிறிலங்கா அதிபர் தெரிவிப்பு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் நாளை தீர்மானிக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவலை கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், சிறிலங்கா சுதந்திரக் கடட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றிருந்தது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டபோதே தயாசிறி ஜெயசேகர இவ்வாறு கூறியுள்ளார். அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி…
-
- 0 replies
- 205 views
-
-
போரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும்- சிறிலங்கா பிரதமர் போரில் இறந்த பொதுமக்களும் நினைவு கூரப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று கண்காட்சி ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையர்களுக்கு இன்று முக்கியமான ஒரு நாள். போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, அமைதியைக் கொண்டு வந்த நாள் இன்று நினைவு கூரப்படுகிறது. பாதுகாப்புப் படையினரை இன்று நினைவு கூரும் அதேவேளை, ஆயுதப் போரில் உயிரிழந்த பொதுமக்களையும் நாம் நினைவு கூர வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2018/05/19/news/30951
-
- 0 replies
- 197 views
-
-
அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவான்!! -முள்ளிவாய்க்காலில் முழக்கமிட்ட அன்னை!! முள்ளிவாய்க்கால் மண்ணில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு வருகை தந்த தாய் ஒருவர் “எங்கள் அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவான்“ என்று மக்கள் முன் நின்று உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. http://newuthayan.com/story/16/அண்ணன்-பிரபாகரன்-மீண்டும்-வருவான்-முள்ளிவாய்க்காலில்-முழக்கமிட்ட-அன்னை.html
-
- 4 replies
- 1k views
-
-
சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும்… பௌத்த விகாரைகளை தடை செய்ய வேண்டும் – சுமந்திரன் – மைத்திரி, ரணிலின் பதில் என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறித்த தமது நிலைப்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதுடன் தார்மீக விரோத கருத்து எ…
-
- 63 replies
- 5.4k views
-
-
மாணவர்களின் உணர்வெழுச்சிகளைக் கட்டுப்படுத்திவிட முடியாது; பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்! அடக்கு முறைகள் மூலம் மாணவர்களின் உணர்வெழுச்சிகளைக் கட்டுப்படுத்தி விட முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஸ்ணமீனன் தெரிவித்துள்ளார். இன்று மாலை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்வின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது., மே 18-ஆம் திகதி மாபெரும் இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நினைவு கூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்டு வந்த வேளையில் நிறுத்தப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நி…
-
- 0 replies
- 304 views
-
-
பிரான்சில் ஆரம்பமாகியது முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கான ஊர்வலமும் அஞ்சலியும்
-
- 1 reply
- 671 views
-
-
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: ஹெட்டிஆரச்சியை தப்பிக்க உதவியோரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு (எம்.எப்.எம்.பஸீர்) ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரத்தில் பிரதான சந்தேக நபராக கருதி கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சிக்கு எவரேனும் அடைக்கலம் கொடுத்திருப்பின் அவர்களையும், அவர் தப்பி ஒழிந்திருக்க உதவி ஒத்தாசை அளித்த, அளிக்கும் எவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று உத்தரவிட்டார். 5 மாணவர் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே அவர் இவ்வ…
-
- 0 replies
- 228 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரம்; ராஜிதவின் கூற்றுக்கு தெற்கில் கடும் கண்டனம் இராணுவத்தை மின்சாரக்கதிரைக்கு அனுப்பும் முயற்சி என்றும் சாடல் (ரொபட் அன்டனி) யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதில் தவறில்லை என்றும் பொதுமக்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்துக்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் வெளியிட்டுள்ளனர். யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்ததன் மூலம் அமைச்சர் ராஜித சேனாரத்ன இராணுவத்தைக் காட்டிக்கொடுத்துள்ளதாகவும் இராணுவத்தை நேரடியாக…
-
- 0 replies
- 327 views
-
-
முள்ளிவாய்க்காலில் மக்களை இடைமறித்து குளிர்பானம் வழங்கும் படையினர்; காரணம் இதுதானாம்! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஸ்ரீ லங்கா இராணுவத்தினர் கொட்டகை அமைத்து குளிர்பானங்கள் மக்களுக்கு வழங்கிவருவதாக தகவல் கிடைத்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில் தற்பொழுது அங்கு மழை பொழிந்தவண்ணம் உள்ளது. நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அண்மையில் வீதியோரமாக கொட்டகை அமைத்துள்ள படையினர், அவ்வழியால் வரும் மக்களை இடைமறித்து குளிர்பானங்கள் வழங்கிவருகின்றனர். எதற்காக இவ்வாறு செய்கிறீர்கள்? யுத்…
-
- 2 replies
- 856 views
-
-
கோரிக்கைக்குப் புறம்பாக மாகாண பேரவை செயலக கொடி முழுக்கம்பத்தில் வடமாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு , வடமாகாண கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இன்றைய தினம் மாகாண பேரவை செயலக கொடி முழுக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/79615/
-
- 1 reply
- 383 views
-
-
சோகமயமாக காட்சியளிக்கும் யாழ்ப்பாணம் முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகிய இன்று யாழ்ப்பாணம் முழுவது சோகமயமாக காட்சியளிக்கின்றது. யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள அனைத்து வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை மூடி தமது துக்கத்தை அனுஷ்டிக்கின்றனர். வீதியில் சன நடமாட்டம் குறைவாகவும், சில இடங்களில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டு இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. தமிழினப் படுகொலைகள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்றைய தினம் பாரிய நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல இடங்களில் இன்றைய தினம் துக்கதினமாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 485 views
-
-
இன்று கடல் கொந்தளிக்கும்- அவதானமாக இருங்கள்!! காங்கேசன்துறை முதல் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைப் பிரதேசங்களில், கடுமையான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் நிலவுகின்றன. காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோ மீற்றராகக் காணப்படும். இதனால், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள், மிக அவதானமாகச் செயற்பட வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று இரவு 10 மணி வரை, இந்த நிலைமை நீடிக்கும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் அவதானமாக இர…
-
- 0 replies
- 307 views
-
-
ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால்- இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!! ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கும் மேற்பட்ட இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்ற பெயரில் இலங்கைத் துதரக இணையத்தளங்கள், அரசநிர்வாக இணையங்கள் மற்றும் அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். …
-
- 0 replies
- 460 views
-
-
வடக்கில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு! வீதியில் குருதிக் கறை!! – முன்னாள் போராளி இலக்கா? வெள்ளை நிறக் காரில் சிவில் உடையில் வந்த குழு முன்னாள் போராளியின் நண்பரைக் கடத்தித் தமது வாகனத்தில் மறைத்து வைத்துள்ளனர். வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் போராளி வாகனத்தை அவதானித்துள்ளார். நள்ளிரவில் சிவில் உடையில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி முன்னாள் போராளி ஒருவரைக் கைது செய்ய முயன்றனர். அவர்களுடன் முன்னாள் போராளி போராடியதில் அவர்கள் தமது முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் போராளிக்குக் காயம் ஏற்படாத போதும் சம்பவ இடத்தில் குருதி…
-
- 2 replies
- 522 views
-
-
இந்திய இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவட் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். சகோதர அயல்நாடுகள் என்றவகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நற்புறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இந்த உறவினை மேலும் பலப்படுத்துவது தனது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமெனக் குறிப்பிட்டார். இருநாடுகளுக்குமிடையிலான புலனாய்வு தகவல் பிரிவுகளை பலப்படுத்துதல், தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகுமெனக் குறிப்பிட்ட இந்திய இராணுவத்தின் பணிக்குழாம் பிரதானி, இதற்கு இலங்கை அரசாங்கத்தின…
-
- 0 replies
- 383 views
-
-
மோட்டார் சைக்கிள் பேரணி ஆரம்பம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நோக்கிய மோட்டார் சைக்கிள் பேரணி யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்று (18) காலை ஆரம்பமானது. பேரணி ஏ-9 வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க்காலைச் சென்றடையவுள்ளது. “வலிசுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணை நோக்கி மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணி” என்ற தொனிப்பொருளில் மாணவர்கள் இந்த மோட்டார் சைக்கிள் பேரணியை முன்னெடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மோட்டார்-சைக்கிள்-பேரணி-ஆரம்பம்/71-216140
-
- 2 replies
- 697 views
-
-
சாட்சிகள் இல்லாப் போரினை நிகழ்த்தி அப்பாவி மக்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள் எம்மால் நடாத்தப்படும் நான்காவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இது. பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவிதமான நீதியையும் பெற்றுக்கொள்ளமுடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடிவருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம் 9 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை கனத்த இதயங்களுடன் நினைவு கூருகின்றோம். இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் ம…
-
- 0 replies
- 248 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மனக்காயங்களை ஆற்றத்தக்க பரவலான செயற்பாடுகள் அவசியம் – உளவள வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவதாஸ்… முள்ளிவாய்க்கால் துயரம் என்பது ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் துயர முகத்தைக் காட்டுவதாகும். அதனை வருந்தோறும் நினைகூர்வதன் மூலம் அந்த மோசமான துயரத்துக்கு ஆளாகியவர்களைத் அந்தத் துயரத்தில் இருந்து தேற்றிக் கொள்வதற்கு வழி வகுக்கின்றது என உளநல மருத்துவ நிபுணர் டாக்டர் சிவதாஸ் கூறினார். முள்ளிவாய்க்கால் துயத்தின் தன்மை உளவியல் ரீதியான கருத்து என்ன என கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: ஒருவர் துயரமடைவது இயல்பு. அந்தத் துயர…
-
- 0 replies
- 413 views
-
-
வெளிநாட்டு நீதிப் பொறிமுறைமை விசாரணை அறிமுகம் செய்யப்பட வேண்டும் – UK.. இலங்கையில் வெளிநாட்டு பொறிமுறைமை விசாரணை அறிமுகம் செய்பய்பட வேண்டுமென பிரித்தானிய தொழிற்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய, தொழிற்கட்சியின் தலைவர் ஜெர்மி கொர்பைன் எதிர்கால தொழிற்கட்சி அரசாங்கம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார். இதேவேளை இனச் சுத்திகரிப்பு, யுத்தக் குற்றச் செயல்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் சர்வதேச குற்றச் செயல்கள் போன்றன தொடர்பில் சர்வதேச நீதி விசா…
-
- 0 replies
- 300 views
-
-
தமிழர்களின் தியாகங்கள் வீண்போகாது: சுமந்திரன் ஒன்பது வருடங்களிற்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் செய்த அளப்பெரிய தியாகங்கள் வீண்போகாது என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் நிலையில், இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழ் மக்களின் தியாகங்களுக்கான பிரதிபலன் வரப்போகின்ற சந்ததிகளுக்கு கிடைப்பதை உறுதிசெய்வதற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும். தமிழ்த் தேச…
-
- 0 replies
- 775 views
-
-
இலங்கை- யுத்தம் முடிவிற்கு வந்து ஒன்பது வருடங்களின் பின்னர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அந்த புகைப்படங்கள் மிக தெளிவானவையாக காணப்படுகின்றன. தோற்கடிக்க முடியாதவர் என கருதப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரின் உடலிற்கு அருகில் படையினர் அருகில் நின்றுகொண்டிருக்கின்றனர். அவ்வேளை யுத்தம் முடிவிற்கு வந்ததற்காக வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் ஜனாதிபதி நிலத்தை விழுந்து வணங்குகின்றார். அந்த யுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர்,காயமடைந்தனர். ஆனால்; அரசாங்கத்தின் வெற்றி பாரிய சட்டமீறல்களிற்கு மத்தியிலேயே பெறப்பட்டது, யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரு…
-
- 0 replies
- 458 views
-