ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
வடகிழக்கு ஊடக அமைப்புக்களின் கவனயீர்ப்பு போராட்டம்:28.04.2018… நீண்டதொரு யுத்த சூழலில் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளினில் தமிழ் தேசியம் சார்ந்த ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகள் பலவழிகளினிலும் கட்டவிழ்த்து விடப்பட்டே வந்துள்ளது.அது கொலையாகவோ,காணாமல் போகச்செய்வதாகவோ அல்லது தாக்குதல், அச்சுறுத்தலாகவோ பல வழிகளினில் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. இத்தகைய கோரமிக்க சூழலில் நாம் எமது 41 சகபாடிகளை இழந்து இன்றுவரை அவர்களிற்கு நீதிகிட்டாது போராடிவருகின்றோம்.நல்லாட்சியென சொல்லிக்கொண்டு கதிரையேறி அரசு இன்று கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போயுள்ள எமது சக ஊடக நண்பர்களிற்கு விலைபேசி நட்டஈடு தருவது பற்றி பேசிக்கொண்டிருக்கின்றது.அது …
-
- 1 reply
- 352 views
-
-
தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் !! தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் !! தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாண நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. தந்தை செல்வா நினைவு தூபிக்கு தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர், யாழ்.மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பின்கள் மலர் மாலை அணிவித்தனர். அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா ந…
-
- 1 reply
- 626 views
-
-
23 பேரும் அரசில் தொடர்ந்து நீடிப்போம் : 16 பேர் எதிரணியில் இருக்கலாம் என்கிறார் சுதந்திரக் கட்சியின் மஹிந்த சமரசிங்க (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தை குழப்பாது தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானமாகும். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிக்காது நிராகரித்த 23 உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தை பலப்படுத்துவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். பிரதமர் ரணிலை எதிர்க்கும் 16 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமரலாம் எனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கல…
-
- 0 replies
- 380 views
-
-
இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கைக்கு 3 தங்கப்பதக்கம்!! இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கைக்கு 3 தங்கப்பதக்கம்!! பன்னாட்டு இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது. 25 ஆவது தடவையாக இந்தப் போட்டி சேர்பியாவின் தலைநகர் பெல்கிரேட் நகரில் நடைபெற்றது. இலங்கையின் சார்பில் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த சமாஷி விஹங்க முனவ…
-
- 0 replies
- 529 views
-
-
மட்டக்குளிய பகுதியில் சர்வமதத் தலைவர்கள் ஒன்றினைந்து கண்டனப் பேரணி!!! கொழும்பு – மட்டக்குளிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிகரெட் கம்பனிக்கெதிராக வாசகங்கள் பதித்த பதாதைகளை ஏந்தியவாறு இளைஞர்கள் தாய்மார்கள் என ஆயிரக்கணக்கானோருடன் சர்வ மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட சர்வமதத் தலைவர்கள், “இலங்கையில் சிகரெட் பாவனையினால் நாளொன்றிற்கு சராசரியாக 72 பேர் உயிரிழக்கின்றனர். அதாவது வருடத்திற்கு 25000 – 26000 பேர் வரை உயிரிழக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பெண்களின் கணவர்மார்களையும் பிள்ளைகளின் தந்தைகளையும் கொலை செய்யும் கொலை கார சிகரெட் கம்பனியான…
-
- 0 replies
- 307 views
-
-
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூட்டு எதிரணி தீர்மானம் (எம்.சி.நஜிமுதீன்) நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து கூட்டு எதிர்க்கட்சி இன்னும் இறுதி முடிவிற்கு வரவில்லை. இதேவேளை அரசாங்கம் எதிர்வரும் எட்டாம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கவுள்ள கொள்கை விளக்கவுரை மீது இரு நாள் விவாதம் நடத்துமாறு கோருவதற்கும் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்…
-
- 0 replies
- 227 views
-
-
உரிய தீர்வு கிடைக்காவிடில் தமிழர்கள் தம் வழி வகுப்பர்!! உரிய தீர்வு கிடைக்காவிடில் தமிழர்கள் தம் வழி வகுப்பர்!! ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கா விட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியை வகுத்துக்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். கொழும்பு தமிழ் சங்க…
-
- 8 replies
- 959 views
-
-
இலங்கை -– இந்திய ஒப்பந்தம் இன்று உயிர்ப்புடன் இல்லை: புலிகளை முதன்மைப்படுத்தவே இந்தியா அன்று விரும்பியது என்கிறார் வரதராஜப்பெருமாள் (ஆர்.யசி) இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக முன்வைக்கப்பட்ட இலங்கை –இந்திய ஒப் பந்தம் இன்று உயிர்ப்புடன் இல்லை. அதனை நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவிற்கும் தமிழர் தரப்பினருக்கும் எந்த அக்கறையும் இல்லை. ஆகவே இந்த ஒப்பந்தத்தை மீள ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று வடக்கு-கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜபெருமாள் தெரிவித்தார். ஆயுதம் இல்லாத சூழலை உருவாக்க முழு முயற்சியுடன் செயற்பட்ட இந்தியா ஏன் தமிழர் தீர்வு விடயத்தில்…
-
- 2 replies
- 425 views
- 1 follower
-
-
அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் வெடி மருந்துடன் ஒருவர் கைது வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டிப் பகுதியில் 10 கிலோ கிராம் வெடி மருந்துடன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்; குருநகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் குறித்த வெடிமருந்து எதற்காகக் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த மேலதிக விசாரணைகளைப் மேற்கொண்டு வருகின்றனர். http://globaltamilnews.net/2018/76415/
-
- 4 replies
- 504 views
- 1 follower
-
-
இராணுவத்துக்கு எதிரான மனுக்களை நிராகரித்தது முல்லைத்தீவு நீதிமன்றம்!! போரின் இறுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன வகையான, என்ன இலக்கமுடைய பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள் என்று சாட்சியங்களில் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட விடயங்களைக் காரணமாகக் குறிப்பிட்டு ஆள்கொணர்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. …
-
- 2 replies
- 811 views
-
-
சிறீதர் தியேட்டரை – டக்ளஸிடமிருந்து இழப்பீட்டுடன் மீட்கக் கோரி வழக்கு!! சிறீதர் தியேட்டரை – டக்ளஸிடமிருந்து இழப்பீட்டுடன் மீட்கக் கோரி வழக்கு!! ஸ்ரான்லி வீதியிலுள்ள சிறீதர் தியேட்டரை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து, இழப்பீட்டுடன் மீட்டுத் தருமாறு அதன் 6 கூட்டுச் சொந்தக்காரர்களும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடாக நேற்று முன்தினம் வழக்கு…
-
- 1 reply
- 485 views
-
-
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு தடை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவு கூறுவதற்கு நினைவாலயம் அமைக்க பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர். பல்கலைக்கழக வளாக முன்றலில் அதனை அமைக்கும் பணிகளை அவர்கள் கடந்த புதன்கிழமை (18) ஆரம்பித்திருந்தனர். எனினும் அந்த இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்தால் தடங்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்துக்கும்…
-
- 0 replies
- 265 views
-
-
கூட்டமைப்பின் நிர்வாக முடக்க போராட்டத்துக்கு அவசியமிருக்காது!! கூட்டமைப்பின் நிர்வாக முடக்க போராட்டத்துக்கு அவசியமிருக்காது!! கூட்டரசு உருவான நாளிலிருந்து தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க வேண்டும் என்ற சிந்தனையில் அரசு செயற்பட்டு வருகின்றது. தமது காலத்தில் தீர்வை வழங்கிவிட வேண்டும் என்றே இந்த அரசு செயற்படுகின்றது. எனவே கூட்டமைப்பினர் அரச நிர்வாக முடக்கப் போராட்டத்தில் ஈடுபடவேண்டிய தேவ…
-
- 0 replies
- 197 views
-
-
காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர் காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிக்கு அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட சிலரை நியமிப்பதில், சிறிலங்கா அதிபருக்கு உடன்பாடு இருக்கவில்லை. 19ஆவது திருத்தச்சட்டத்தினால் சிறிலங்கா அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விட்டதால், அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்டவர்களை நியமிப்பதை விட அவருக்கு வேறு வழி இல்லை. அரசியலமைப்பு சப…
-
- 0 replies
- 260 views
-
-
திருகோணமலையில் அமெரிக்காவின் பாரிய மிதக்கும் மருத்துவமனை அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது. 279.49 மீற்றர் நீளமும், 32.2 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் முழுமையான கருவிகளைக் கொண்ட 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்களும், 1000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை வசதிகளும் உள்ளன. நவீன மருத்துவ ஆய்வு கூட, பரிசோதனை வசதிகள், மருந்தகம், ஆகியவற்றுடன் இரண்டு பிராண வாயு உற்பத்திக் கூடங்களும் இந்தக் கப்பலில் உள்ளன. அமெரிக்கா, அவுஸ…
-
- 0 replies
- 221 views
-
-
நல்லிணக்கச் செயல்முறைகள் குறித்து சிறிலங்காவுடன் கனடா பேச்சு சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கச் செயல்முறைகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா திறைசேரியில் நேற்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்த, சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர் டேவிட் மக்கினன் மற்றும், பூகோள விவகாரங்களுக்கான கனடிய பணியகத்தின் தெற்காசிய ப் பிரிவு பணிப்பாளர் டேவிட் ஹார்ட்மன் ஆகியோர் இந்தப் பேச்சுக்களை நடத்தினர். டேவிட் ஹார்ட்மனுடன் கனடிய தரப்பில், அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜென் ஹார்ட், கனடா ஏற்றுமதி அபிவிருத்தி உதவித் தலைவர் வில்லியம் பிறவுண், கனடிய வணிக அமைப்பின் ஆசிய பணிப்பாளர் …
-
- 0 replies
- 192 views
-
-
கனேடிய தூதுக்குழு – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு கனேடிய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தக ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆவன்தி கூங்ஜீ உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (25) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நகர மயமாக்கல் காரணமாக ஏற்படக்கூடிய சுத்தமான குடிநீருக்கான கேள்விகள் அதிகரித்து வருவதால், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும் கிராமப்புறங்களுக்கான நீர் மூலங்களை கண்டறிந்து அவற்றை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதிலுள்ள சவால்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பாக இங்கு கலந்துரையா…
-
- 0 replies
- 309 views
-
-
காவல்துறையினரின் சீருடைகள், அடையாள அட்டைகள் தோட்டாக்களை வைத்திருந்த பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் கைது இலங்கை காவல்துறையினரின் உத்தியோகபூர்வ சீருடைகள், உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்த ஒருவர் குற்ற ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் மீகொட காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட தாம்பே பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு தரநிலையில் உள்ள காவல்துறையினரின் உத்தியோகபூர்வ சீருடைகள், காவல்துறைஅதிகாரிகளின் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் , சேவை ஆவணங்கள் , உத்தியோகபூர்வ இலச்சனை பொறிக்கப்பட்ட தொப்பிகள் , வேறு நபர்களுடைய தேசிய அடையாள அட்டைகள் …
-
- 0 replies
- 206 views
-
-
முல்லைத்தீவில் மீண்டும் பற்றியது தேக்கமரக்காடு!! முல்லைத்தீவில் மீண்டும் பற்றியது தேக்கமரக்காடு!! கேப்பாப்பிலவு படைமுகாம் வாயில் அமைந்துள்ள அண்மித்த பகுதியில் உள்ள தேக்க மரக்காட்டில் இன்று இரண்டாவது தடவையாகவும் தீ பரவியுள்ளது. கடும் வெய்யில் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அருகில் உள்ள படை முகாம்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இராணுவ…
-
- 2 replies
- 531 views
-
-
குண்டுச்சட்டிக்குள் ஓடும் குதிரையாக தமிழ் அரசியல்!! கடந்த சில நாள்களாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரும் கவலை அளிப்பவை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இந்த அரசு இழந்துவிட்ட நிலையில், எஞ்சிய ஆட்சிக் காலத்தில் அதனால் புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியாது என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் செயலாளர் என்.சிறிகாந்தா தெரிவித்திருந்தார். தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கிடைத்த வாக்குகளை அடிப்படையாக…
-
- 2 replies
- 561 views
-
-
பேராதனை பல்கலைக்கழகத்தில் தீ... பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பிரிவில் இன்று பிற்பகல் தீப்பரவியுள்ளது. கண்டி நகர சபையின் தீயணைப்பு பிரிவால் தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார கசிவால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சேத விவரங்கள் இது வரை வெளியிடப்படவில்லை. http://www.virakesari.lk/article/32819
-
- 0 replies
- 711 views
-
-
வாக்குறுதியளித்தபடி நிலங்களை இராணுவம் கைவிடவில்லை- முல்லைத்தீவு மக்கள் ஏமாற்றம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக படையினரின் ஆக்கிரமிப்பில்இருக்கின்ற பொதுமக்களுக்குச்சொந்தமான காணிகளை மூன்று மாதகாலத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் உறுதியளித்த காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் தாங்கள் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் வாழ்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக ஏற்கெனவே பொன்னம்பலம் ஞாபாகர்த்த வைத்தியசாலை அமைந்திருந்த பகுதியில் பொதுமக்களுக்குச்சொந்தமான காணிகளை இராணுவம் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப்பின்னர் கையகப்படுத்தி அவற்றைத்தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளனர். …
-
- 0 replies
- 205 views
-
-
மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு பணிப்பு - எஸ்.நிதர்ஷன் “வடக்கு மாகாண அமைச்சரவை மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக” வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பத்திரிகை ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டது. இந்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் இன்று (25) வினவியபோதே ஆளுநர் இவ்வாறு பதிலளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 120 views
-
-
கண்டிக் கலவரம் : 2 பிரதேச சபை உறுப்பினர்கள் தலைமறைவு!!! கண்டிக் கலவரத்தின் பிரதான சந்தேக நபர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியிருக்கும் இரு பிரதேச சபை உறுப்பினர்களை தேடி விசாரணைகள் தொடர்வதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். திட்டம் தீட்டி கண்டி மாவட்டம் எங்கும் இன ரீதியிலான அரங்கேற்றிய வன்முறைகள் தொடர்பில் இது வரை 32 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பௌத்த பிக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அரசியல் வாதிகள் மற்றும் இராணுவத்தினரும் உள்ளடங்குகின்றனர். http://www.virakesari.lk/article/32807
-
- 0 replies
- 274 views
-
-
கரை ஒதுங்கிய உயர் ரக பீடி இலை மூட்டைகள் மீட்பு!!! மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வந்த சுமார் 50 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் ரக பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கடலில் கரை ஒதுங்கியுள்ள நிலையில் குறித்த பீடி மூட்டைகளை இன்று காலை சுங்கத்துறையினர் மீட்டுள்ளனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியான பாம்பன் குந்துகால் கடல்பகுதியல் இன்று அதிகாலை மூட்டை மூட்டையாக நடுக்கடலிலும், கடற்கரை ஓரத்திலும் பெறுமதியான உயர் தரம் வாய்ந்த பீடி இலை மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மீனவர்கள தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சுங்கத்துறையினர் மீனவர்கள் உதவியுடன் கரை ஒதுங்கிய பெறுமதி வாய்ந்த ச…
-
- 0 replies
- 260 views
-