ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
முல்லைத்தீவில் எரிந்த காடுகள்; விடுதலைப்புலிகள் மறைந்திருக்கலாம் என அச்சம்? முல்லைத்தீவில் திடீரென காடுகள் பற்றி எரிந்தமையால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு, கேப்பாபுலவு காட்டுப் பகுதியில் குறித்த அனர்த்தம் நேற்று மாலை ஏற்பட்டுள்ளதாகவும். குறித்த அனர்த்தத்தால் சுமார் 40 ஏக்கர் காணிப் பகுதிகள் தீயினால் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. காட்டுத் தீ திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டதா அல்லது இயற்கையாக ஏற்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸாரால் தீவிர விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. காட்டில் ஏற்பட்ட தீ அனர்த்தம் தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய சம…
-
- 2 replies
- 714 views
-
-
சில்லறை நாணயத் தட்டுப்பாட்டுக்கு குபேரனும் காரணமா? சில்லறை நாணயத் தட்டுப்பாட்டுக்கு குபேரனும் காரணமா? நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அடிக்கடி சென்று வரும் நான், யாழ் குடாநாட்டைத் தவிர வேறு எந்தப் பகுதியிலும் சில்லறை தட்டுப்பாடு என்ற நிலையை உணர்ந்ததில்லை. தரவேண்டிய மீதி இரண்டு ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கூறி ஒரு ‘‘ டொபி ’’ யைத் தந்து கணக்கு முடிக்கும், 5 ரூபாய் மீதிக்க…
-
- 0 replies
- 370 views
-
-
அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ்வரிச் சலுகைத் திட்டம் இன்று முதல் இலங்கைக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இன்றைய தினம் முதல் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் இலங்கை உள்ளிட்ட 120 நாடுகளுக்கு இந்த ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த சலுகையின் அடிப்படையில் இலங்கை சுமார் 5000 பண்டங்களை அமெரிக்காவிற்கு வரிச் சலுகை அடிப்படையில் ஏற்றுமதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்கதக்து. இலங்கையின் பிரதான ஏற்றுமதியாளராக அமெரிக்கா திகழ்கின்றது.அடுத்தபடியாக இலங்கை பிரித்தானியாவிற்கும் அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்கும் பொ…
-
- 0 replies
- 249 views
-
-
பிரதமரை பதவி கவிழ்க்கும் முயற்சியில் தொடர்ந்தும் தீவிரம் காட்டி வரும் கூட்டு எதிர்க்கட்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி கவிழ்க்கும் முயற்சியில் கூட்டு எதிர்க்கட்சி தொடர்ந்தும் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே மாதம் 8ம் திகதி புதிய பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பத்தின் போது, பிரதமரை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய பாராளுமன்ற அமர்வுகளின் தலைமை உரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் கொள்கைகள் பற்றி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த விளக்கம் தொடர்பில் பாராளுமன்ற வாக்கெடுப்பு நடாத்துவ…
-
- 0 replies
- 273 views
-
-
கசூரினா கடற்கரையில் தங்க இரவு 7 மணி வரை அனுமதி கசூரினா கடற்கரையில் தங்க இரவு 7 மணி வரை அனுமதி யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மைச் சுற்றுலா மையமாக விளங்கும் கசூரினா கடற்கரையில் இரவு ஏழு மணிவரை சுற்றுலாப் பயணிகள் தங்கி இருக்க முடியும். எனினும் இரவு 6 மணிவரை மட்டுமே கடலில் நீராட முடியும். இந்த நடைமுறை நேற்று முன்தினம் தொடக்கம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் …
-
- 0 replies
- 438 views
-
-
கூட்டமைப்பில் மீண்டும் இணைய சுரேஷ் இரு நிபந்தனைகள் விதிப்பு!! கூட்டமைப்பில் மீண்டும் இணைய சுரேஷ் இரு நிபந்தனைகள் விதிப்பு!! தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை கூட்டமைப்பு நிறைவேற்றுவதுடன் கூட்ட மைப்புக்கு என யாப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடன் இணைவது குறித்து யோசிக்க முடியும், அதுவரை இணைய மாட்டோம். இவ்வாறு தெரிவித்தார் ஈபி.ஆர்.எல்.எப் அமைப்பின் …
-
- 0 replies
- 293 views
-
-
முல்லைத்தீவில் மொழிப் பிரச்சினையால் நோயாளர் அசௌகரியம்!! முல்லைத்தீவில் மொழிப் பிரச்சினையால் நோயாளர் அசௌகரியம்!! முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கடமையாற்றுவதால், நோயாளர்கள் மொழிப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றார்கள். இதே மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மருத்துவர்கள் பலர் இங்கு கடமையாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வே…
-
- 0 replies
- 382 views
-
-
ஐ.தே.கவுக்குள் தமிழர் பிரிவு!! ஐ.தே.கவுக்குள் தமிழர் பிரிவு!! ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தமிழர் விவகாரங்களைக் கையாள்வதற்குச் சிறப்புப் பிரிவொன்றை அமைக்குமாறு கோரப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி.ராம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.தே.கவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று கருத…
-
- 0 replies
- 393 views
-
-
புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அமைச்சுக்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் தொடர்பாக, ஒழுங்குகள் கடந்த புதன்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றிருந்த சிறிலங்கா அதிபருக்கு அந்த அறிக்கை, உடனடியாகவே தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டது. அத்துடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலர் சமன் எக்கநாயயக்கவிடமும் அந்த அறிக்கையின் பிரதி கையளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் ப…
-
- 0 replies
- 233 views
-
-
லெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற லெபனானுக்கு அனுப்பப்பட்ட 49 சிறிலங்கா படையினர் தொடர்பான மனித உரிமை ஆய்வுகளை முன்னுரிமை கொடுத்து உடனடியாக, மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை பணியக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வுகள் முடிய முன்னரே, சிறிலங்கா இராணுவத்தின் 49 பேர் கொண்ட அணியொன்று கடந்த பெப்ரவரி மாதம் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஏனைய அணிகள் லெபனானுக்கு அனுப்பப்படுவதை ஐ.நா அமைதிப்படைச் செயலகம் தடுத்திருந்தது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா அமைதிகாப்ப…
-
- 0 replies
- 360 views
-
-
அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் சிறிலங்கா நாடாளுமன்றம் முடக்கப்பட்ட போதிலும், அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஏப்ரல் 12ஆம் நாள் நள்ளிரவு தொடக்கம், மே 8ஆம் நாள் வரை நாடாளுமன்றத்தை முடக்கி வைக்கும் உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இதன் மூலம், நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து சட்டமூலங்கள் மற்றும் பிரேரணைகளும் செல்லுபடியற்றதாகி விட்டன. இந்த நிலையில், இவற்றை மீண்டும் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாயின், அவை மீண்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். எனினும், அரசியலமைப்பு பேரவைக்கு அந்த நிலை ஏற்படாது என…
-
- 0 replies
- 373 views
-
-
உதயங்கவை சிறிலங்காவுக்கு அனுப்ப மறுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மிக் போர் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பாக தேடப்படும், ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, நாடு கடத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது. அமெரிக்காவுக்குச் செல்லும் பழியில் டுபாய் விமான நிலையத்தில் உதயங்க வீரதுங்க தடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஐக்கிய அரபு எமிரேட்சை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், உதயங்க வீரதுங்கவை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நாடு கடத்துதல் தொடர்பான உடன்பாடு செய்து…
-
- 0 replies
- 180 views
-
-
தமிழ் தலைமையின் விட்டுக்கொடுப்பை உதாசீனம் செய்யும் இனவாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கும் அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கும் பொது எதிரணி உட்பட பல தரப்புக்களும் தற்போது முயன்று வருகின்றமை கண்கூடாக தெரிகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான பொது எதிரணியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனர். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு அளிக்கவேண்டும் என்று பொது எதிரணியினரும் சிறி…
-
- 0 replies
- 556 views
-
-
பிரதமர் தன்னைத்தானே சுய விசாரணை செய்ய வேண்டும் (எம்.எம்.மின்ஹாஜ்) நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மாத்திரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற் றால் போதாது. நாட்டில் வாழும் 2 கோடி மக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற வேண்டும். மேலும் தான் மக்களின் ஆதரவை பெற்றவரா என பிரதமர் தன்னைத் தானே சுய விசாரணை செய்ய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். அத்துடன் பிரபாகரனும் கருணா அம்மானும் முட்டி மோதிக்கொண்டமையினால் விடுதலை புலிகள் இயக்கத்தின் மோசடிகளும் கொலைகளும் வெளிப்பட்டன. அதுபோன்று நாட்டை கொள்ளையடிக்கும் திருடர்களும் மோதிக்கொள்ளும் போது பல திருட்டுகள் வ…
-
- 0 replies
- 308 views
-
-
இலங்கையின் புதிய வரைப்படம் விரைவில் முழுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படத்தை இந்த ஆண்டில் வெளியிடவுள்ளதாக நில அளவைத் திணைக்கள தலைவர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் வரைப்படத்தில் 2.69 சதுர கிலோமீற்றர் பரப்பளவு அதிகரித்துள்ளதாக தலைவர் பீ. என். பீ. உதயகாந்த தெரிவித்தார். துறைமுக நகர திட்டம் காரணமாக மாற்றமடைந்துள்ள கொழும்பு வரைப்படத்தை அச்சிடும் பணிகளை இந்த மாதத்துக்குள் நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாக நில அளவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, இலங்கையின் புதிய வரைபடத்துக்கு அமைய, சிலாபம் கடற்பரப்பு பகுதியில் குறைவுத் தன்மையும், தென் மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சில…
-
- 0 replies
- 427 views
-
-
“பந்துல குணவர்தனவுக்கு ஏதேனும் நோயா என சிறிவிமல தேரர் என்னிடம் கேட்கிறார்” “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை எதிர்க்கிறேன் அது குறித்து பேசும் போது கவனமாக இருக்கிறேன்” நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை தான் எதிர்ப்பதாகவும் அது குறித்து பேசும் போது மிகவும் கவனமாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டி கெட்டம்பே ராஜமஹா விகாரையின் விகாராதிபதி கெப்பட்டிவில சிறிவிமல தேரரை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று பந்துல …
-
- 0 replies
- 554 views
-
-
சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும், கேணல் ஷு ஜியான்வெய்யும் கலந்து கொண்டார். http://www.puthinappalakai.net/2018/04/21/news/30512
-
- 1 reply
- 440 views
-
-
வரதராஜ பெருமாளின் தனிநாட்டு பிரகடனத்தின் போது நிறைவேற்று அதிகாரமே நாட்டை பாதுகாத்தது… 13வது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும் போது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது ஆபத்தானது – அரசியலமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும் போது, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது என்பது நாட்டை மேலும் சிக்கல்களுக்கு தள்ளும் நடவடிக்கை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் 20வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை தற்போது ஜே.வி.பி பெற்றுக்கொண்டுள்ளது. இதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் சிலர் நிபந்தனைய…
-
- 0 replies
- 247 views
-
-
சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி: உண்ணாவிரதப் போராட்டம் சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இன்று இடம்பெற்றது. தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் இந்த அடையாள உண்ணாவிரம் இடம்பெற்றது. அன்னை பூபதியின் நினைவு தினமான இன்றைய தினத்தில் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட…
-
- 1 reply
- 415 views
-
-
15 வருடங்கள் தலைமறைவானவர் ஜனாதிபதி வேட்பாளரா? சாட்டையால் அடிக்க வேண்டும்… முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தகுதியானவர் என எவராவது கூறுவார்கள் என்றால், அவர்களை சாட்டையால் அடிக்க வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச யுத்தத்திற்கு பயந்து நாட்டில் இருந்து தப்பிச் சென்று 15 வருடங்கள் தலைமறைவாக இருந்த நபர் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் முன்னெடுப்புகளை பார்த்தால், பசில் ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடுவதை விட, வெலிகடை சிறைச்சாலையின் அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடுவது நல்லது என எனக்கு தோன்றுகிறது எனவும் பொன்சேகா குறிப்பிட…
-
- 0 replies
- 442 views
-
-
35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கரவண்டி ஓட்டத்தடை இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். சாரதியின் வயது 35ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட இறுதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தவேண்டு என தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/32682
-
- 0 replies
- 329 views
-
-
கூட்டமைப்பினர் ஆதரவு கோரியமைக்கான ஆதாரங்கள் உண்டு. – ஈ.பி.டி.பி. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன எனவும் தேவை எனில் அவற்றை வெளியிட நாம் தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வாக்குறுதிகளை தந்தனர். உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுற்ற பின்னர…
-
- 3 replies
- 737 views
-
-
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய விசேட அதிரடிப்படையினர் கடமையில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அண்மையில் மிரிஸ்ஸ பகுதியில் நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மீது உள்நாட்டவர்கள் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிரிஸ்ஸ பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இவ்வாறு விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்காலிக அடிப்படையில் இவ்வாறு விசேட அதிரடிப…
-
- 1 reply
- 344 views
-
-
நாங்கள் பட்டுத் தௌிந்தவர்கள்!! ‘ புது விளக்குமாறு நன்றாகக் கூட்டும் ’ என்பது முதுமொழி. அண்மைய உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சபைகளின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட தரப்பினர்களில் பலர் அரசியலுக்குப் புது முகங்கள். அதனால்தானோ என்னமோ, பிரதேச அபிவிருத்தி தொடர்பாக ஏதோ ஏதோவெல்லாவற்றையும் நிறைவேற்றி வைக்கப்போவதாக வாயடித்து வருகிறார்கள். முன்னைய சபைகளது உறுப்பினர்களும் இப்படித்தான் சவடால் பேச்சுப் பேசி காலத்தை கடத்தியதை நாம் மறந்துவிடவில்லை. எனவே உங்கள் சாதனைகளை வாய்வீச்சில் காட்டாமல், செய்கையில் காட்டுமாறு அன்புடன் கோரி நிற்கிறேன். இ…
-
- 0 replies
- 390 views
-
-
நுங்கு விற்ற குடும்பத்தலைவரிடம் இருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டதா? ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நுங்கு விற்ற குடும்பத்தலைவர் ஒருவர் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். நல்லூர் பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவரிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருள் மீட்டதாக காவற்துறையினர் மன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். “ஐயா நான் அன்றாடம் நுங்கு விற்றும் கூலி வேலை செய்தும் குடும்பத்தைப் பார்க்கிறவன். எனது நுங்கு விற்கும் இடத்துக்கு அருகே நின்ற முச்சக்கர வண்டிக்கு கீழே இருந்து சுருட்டு ஒன்றை காவற்துறையினர் எ…
-
- 0 replies
- 386 views
-