ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
கூட்டமைப்பை சந்தித்து பேசவுள்ள பொது எதிரணி: பிரேரணையை வெற்றிகொள்ள சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் (ஆர்.யசி) பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக் கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள ஏனைய கட்சிகளின் ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நோக்கத் தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்க ளான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியூதீன் ஆகியோரை சந்திக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரையும் சந்தித்து நிலைப்பாடுகள் குறித்து ஆராயவும் கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளனர். தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான செயற்பாடுகளை…
-
- 0 replies
- 198 views
-
-
”இறுதி தீர்மானம் ஆகஸ்டில்” ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் கோத்தா.? எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது தொடர்பான அறிவிப்பை முன்னாள் பாதுகாப்புச் செயலா ளர் கோத்தபாய ராஜ பக் ஷ எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் வெளியிடவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. இதற்கேற்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் பலரிடம் இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ தூது அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாட விரும்ப…
-
- 0 replies
- 145 views
-
-
கூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவ முன்வந்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உதவ முன்வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்களக் குடியேற்ற அச்சுறுத்தல்கள் அதிகமுள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் மொத்தமுள்ள 25 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 பெற்றுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 5 ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன. அதேவேளை, சிறிலங்கா பொதுஜன முன்னணி 5 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 3 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும், ஜேவிபி 1 ஆசனத்தையும் வென்றுள்ளன. சிங்களக் கட்சிகள்…
-
- 3 replies
- 466 views
-
-
தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே சிறுபான்மையினரின் உரிமைகளைப்பெறமுடியும் கல்முனை மாநகரசபையில் இலங்கை தமிழரசுக்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் அரகசியப்பேச்சுவார்த்தையொன்று கல்முனையில் இடம்பெற்றது. மு.கா சார்பில் பிரதியமைச்சர் எச்எம்.எம்.ஹரீசும் த.அ.கட்சி சார்பில் அதன் தலைவர் மாவைசேனாதிராஜாவும் கல்முனை மாநகரசபைக்கு இ.த.அரசுக்கட்சிசார்பில் தெரிவான உறுப்பினர்களும் ஏனையோரும் கலந்துகொண்டிருந்தனர். அதன்போது ஆட்சியமைப்புபற்றிப்பேசப்பட்டது. த.அ.கட்சியும் ஸ்ரீல.முகாவும்(ஜ.தே.கட்சி) இணைந்து அதாவது மு.காவின் 12ஆசனங்களும் த.அ.கட்சியின் 7ஆசனங்களும் ஏனைய 3தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கமுடியும். …
-
- 1 reply
- 193 views
-
-
வடக்கில் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள்!! வடக்கில் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள்!! போரினால் துவண்டு போயுள்ள வடக்குப் பெண்கள் மீது அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் பாலியல் வன்முறைகள் தொடர்ந்தும் கட்ட விழ்த்து விடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான பெண்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு உளவியல் செயற்பாட்டாளர்களால், முன்னாள் அரச தலை…
-
- 0 replies
- 336 views
-
-
காப்பாற்ற முயன்றால் சு.க. எதிர்க்கட்சியாகும் தமிழ்க்கூட்டமைப்புக்கு அமைச்சர் தயாசிறி எச்சரிக்கை (ரொபட் அன்டனி) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து பிரதமரை காப்பாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்தால் அது கூட்டமைப்புக்கே பாதகமாக அமையும். பிரதமர் ரணிலுடன் இணைந்து ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முடியாது என்பதனை கூட்டமைப்பு புரிந்துகொள்ளவேண்டும் என்று சிறிலங்கா சுந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பிரதமரை காப்பாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக…
-
- 0 replies
- 133 views
-
-
ரணிலைக் காப்பாற்றுமா கூட்டமைப்பு?- கொழும்பில் மந்திராலோசனை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். ”நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான எமது நிலைப்பாடு குறித்து கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு வருகிறது. நாளையும், நாளை மறுநாளும் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. நாங்கள் நிலைமைகளை குறித்தும், பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிபலிப்புகள் குறித்தும் கலந்துரையாடுவோம். …
-
- 1 reply
- 166 views
-
-
‘சகயின்’ கப்பல் மீள எடுக்கப்பட்டது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, திருகோணமலை துறைமுகத்தை அண்பித்த கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்ட ‘சகயின்’ என்ற கப்பல், இலங்கை கடற்படையின் தொழில் நிபுணத்துவத்தின் கீழ், மீளவும் எடுக்கப்பட்டுள்ளது என கடற்படை அறிவித்துள்ளது. பிரித்தானியாவுக்குச் சொந்தமான மேற்படி ‘சகயின்’ என்ற கப்பல் 75 வருடங்களுக்குப் பின்னர், மீள எடுப்பதற்கு, இலங்கை கடற்படையின் சுழியோடி பிரிவுக்கு முடிந்துள்ளது என்றும் கடற்படை அறிவித்துள்ளது. 138 மீற்றர் நீளமான இந்தக் கப்பல், பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றியிறக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது. அது தனது முதலாவது சேவையை 1924 ஆம் ஆண்டு டிசெம்பர் மா…
-
- 0 replies
- 167 views
-
-
பிரதமர் விரும்பும் கோப்பியை ஜனாதிபதியும் பருகினார் அழகன் கனகராஜ் அப்பம், இடியப்பம், தேநீர் என்பன இலங்கை அரசியல் வரலாற்றில், இடம்பிடித்தவையாகும் என்றாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரும்பி பருகும் கோப்பியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பருகியுள்ளமை, சூடான அரசியலை சூடாக்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு, கடந்த 29ஆம் திகதியன்று கொழும்பில் இடம்பெற்றது. கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இந்தச் சந்திப்பு, சுமார் நான்கு மணிநேரம், நள்ளிரவு 12 மணிவரையிலும…
-
- 0 replies
- 158 views
-
-
ரணிலுக்கு ஆதரவா? – ரெலோ உயர்குழு முக்கிய முடிவு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தமது நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளியிடவுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, ரெலோவின் உயர்குழு, ஒருமனதான முடிவு ஒன்றை எடுத்துள்ளது என்றும் அந்த முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் ரெலோவின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ரெலோவுக்கு இரண்டு ஆசனங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை,…
-
- 0 replies
- 146 views
-
-
ரணிலுக்கு ஆதரவளிக்க ஈபிஆர்எல்எவ் நிபந்தனை – தனியான பேரத்தில் இறங்கியது நம்பிக்கையில்லா பிரேரணை விடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பங்காளியான ஈபிஆர்எல்எவ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனியான பேரத்தில் இறங்கியுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக, சிறிலங்கா பிரதமருக்கு தாம் அனுப்பியுள்ள கடிதத்துக்கான பதிலைப் பொறுத்தே, நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில் தமது முடிவு அமைந்திருக்கும் என்று ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். “வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனவிலங்குகள் திணைக்களம், மகாவலி அதிகாரசபை போன்ற அரச நிறுவனங்களால், காணிகள் அபகரிக்கப்படுகின்றன. பொதுமக்களின் …
-
- 0 replies
- 126 views
-
-
மற்றுமொரு பிரபாகரன் உருவாக இடமளியோம்!! மற்றுமொரு பிரபாகரன் உருவாக இடமளியோம்!! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாட்டை உடைக்க முற்பட்டார். அந்த நிலை இன்று மாற்றம் அடைந்துள்ளது. அதே கொள்கையுடன் மீண்டும் யாரேனும் உருவாக்க நினைத்தால் அதற்கு இடம் கொடுக்க முடியாது. இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். அகுரஸ்ஸ ஹேனேகம ஸ்ரீபோதிராஜ விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். …
-
- 2 replies
- 519 views
-
-
வடக்கின் பாரம்பரிய உணவகம் திறந்து வைப்பு! வடக்கின் பாரம்பரிய உணவகமான “அம்மாச்சி” உணவகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் கீரிமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதனை நல்லிணக்க செயலணியின் தலைவி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க திறந்து வைத்தார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் வட. மாகாணத்தில் சகல பகுதிகளிலும் “அம்மாச்சி” உணவகம் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகமே இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர். …
-
- 1 reply
- 1.2k views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கான 5 ஆண்டு கால உளவியல் மறுவாழ்வு திட்டம்…. வடமாகாணத்தின் கடந்த கால அசாதாரண யுத்த சூழலில் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கான உளவியல் ரீதியான மறுவாழ்வு திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த நடவடிக்கை எதிர்வரும் 05 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தியுள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான தலைவியும் முன்னாள் ஐனாதிபதியும் ஆகிய சந்திரிக்கா பண்டாநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். “எமது துரித நோக்க சிந்தனையின் அடிப்படையில் இவ்வாறான செயற்பாட்டுக்கு நமது அரசாங்கம் முக்கியத்துவத்தினை வழங்கியிருக்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வடுக்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம், கி…
-
- 0 replies
- 293 views
-
-
சிறிலங்கா அமைச்சருக்கு இந்திய ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு சிறிலங்காவின் பௌத்த சாசன அமைச்சரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம், காமினி ஜெயவிக்கிரம பெரேரா இந்தியா சென்றிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காமினி ஜெயவிக்கிரம பெரேரா இந்து அல்ல என்பதாலேயே அவர் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தாம் ஒரு பக்தியுள்ள பௌத்தர் என்று அவர் கூறிய போதிலும், ஆலய நிர்வாகிகள் அவரை அனுமதிக்கவில்லை. புவனேஸ்வரில் உள்ள கலிங்க அனைத்துலக நிறுவகத்தில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றிய காமினி ஜெயவிக்க…
-
- 0 replies
- 430 views
-
-
சீன விண்வெளி நிலையத்தின் சிதைவுகள் சிறிலங்கா மீது விழுமா? சீனாவின் Tiangong-1 விண்வெளி நிலையம் இன்று அல்லது நாளை பூமியின் மீது விழலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதனால் சிறிலங்காவுக்கு ஆபத்து இல்லை என்று ஆர்தர் சி கிளார்க் நிலையம் தெரிவித்துள்ளது. செயலிழந்த சீனாவின் Tiangong-1 விண்வெளி நிலையம் பூமியின் வளிமண்டலத்துக்குள் இன்று அல்லது நாளை நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது, தீப்பிடித்து எரிந்து துகள்களாக பூமியில் விழும் என்றும் கூறப்படுகிறது. இதன் சிதைவுகள், எங்கு விழும் என்று சரியாக கணிக்க முடியவில்லை. எனினும் நியூசிலாந்து மற்றும் அமெரிக்கன் மிட்வெஸ்ட் பகுதிக்கு மேலாக விழுவதற்கு சாத்தியங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரி…
-
- 0 replies
- 152 views
-
-
சிவசக்தி ஆனந்தனின் வாக்கு யாருக்கு? – முடிவெடுப்பாராம் சுரேஸ் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனே முடிவு செய்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 16 உறுப்பினர்களில், ஒருவர் சிவசக்தி ஆனந்தன். கூட்டமைப்பை விட்டு ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள நிலையில், சிவசக்தி ஆனந்தனின் நிலைப்பாடு தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கருத்து வெளியிடுகையில், “ இந்த அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆண்டுகளாக நிபந்தனையற்ற…
-
- 0 replies
- 182 views
-
-
பாடசாலை மாணவன் மீது கத்தி குத்து சந்தேக நபர்களை அடயாளம் காட்டிய போதும் கைது செய்யவில்லை.. கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்வசத்தில் வைத்து கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் மீது கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் திகதி இரவு ஒன்பது மணியளவில் சம்பவம் இடம்பெற்ற போதும் இன்று(01) வரை சந்தேகநபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்படவில்லை. குறித்த சந்தேக நபர்களை பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெளிவாக அடையாளம் காட்டிய போதும் அவர்கள் கைது செய்யப்படாதது காவற்துறையினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கத்திக் குத்துக்கு இலக்கான மாணவனின் பெற்றோர்களான ஆசிரிய…
-
- 0 replies
- 338 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களது சுய கௌரவத்தினை இழந்துவிட்டதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
-
- 1 reply
- 238 views
-
-
இனப் பிரச்சினைக்கான தீர்வு, தடைப்படும் நிலையில் உள்ளது – விக்கியிடம் மங்கள தெரிவிப்பு… சிங்கள மக்கள் தங்கள் தலைவர்களின் தலையைக் கூடக் கொய்து விடுவார்கள் என்ற பயம் தலைவர்களுக்கு இருக்கின்றது. வாரத்துக்கொரு கேள்வி – 31.03.2018 கேள்வி:பிரதமர் பற்றிய நம்பிக்கையில்லாப் பிரேரணை ஏப்ரல் 4ந் திகதி எடுக்கப்பட இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்? பதில்:இவ்வாறான சந்தர்ப்பங்கள் எழும் போது நாங்கள் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியையும் நான் கவனித்துள்ளேன். அவற்றின் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில்த் தான் இவ்வாறான விடயங்களைக் கையாளுகின்றா…
-
- 0 replies
- 492 views
-
-
கல்முனை அபாய அறிவிப்பு - வ.ஐ.ச.ஜெயபாலன் கிழக்கு மாகாணத்தில் உருவாகிவரும் தமிழ் முஸ்லிம் இனமோதல் புயலின் கண்ணாகும் ஆபத்தை கல்முனை பிரதேசம் எதிர்கொள்கிறது. அண்மைக்காலங்களில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கல்முனை பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகளில் பதட்டம் அதிகரித்து வருவது கவலை தருகிறது. எதற்காக தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதை இன்னமும்கண்டுகொள்ளவில்லை. .யாருக்காக அவர்கள் அமைதியாகக் காத்திருக்கிறார்கள்.? . கல்முனை தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் பதட்டம் தொடர்வதும் கலவரமாக வெடிப்பதும் முழு அம்பாறை மாவட்டத்தையும் சீர்குலைத்துவிடும். ஒரு இஞ்சி மண்ணுக்கு மோதி முழு அம்பாறை மாவட்டதையும் அப்பமாக தூக்கி குரங்கிடம் கொடுத்து விடாதீர்…
-
- 3 replies
- 693 views
-
-
மங்களவின் கோரிக்கையை நிராகரித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில், கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று சந்தித்து கலந்துரையாடினார். வரவுசெலவுத் திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்களுக்காக வடக்கு மாகாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர, நேற்றுக்காலை கிளிநொச்சிக்கும் பின்னர் முல்லைத்தீவுக்கும் சென்றிருந்தார். கிளிநொச்சியில் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, முல்லைத்தீவு செல்லும் போது, வழியில் காணாமல் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்தக் கோரி போராட்டம…
-
- 1 reply
- 327 views
-
-
கூட்டமைப்பு முன்னுள்ள ஒரேயொரு தெரிவு Share தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே ரணிலுக்குக் கணிசமான எதிர்ப்பு உள்ள நிலையில் , இந்தத் தீர்மானத்தின் வெற்றி தோல்வி குறித்த பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவவே செய்கின்றது. 225 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி 106 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உள்ள…
-
- 0 replies
- 238 views
-
-
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கபே (நா.தினுஷா) தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையே கலப்பு தேர்தல்முறை பிழையானதென விமர்சனத்துக்குள்ளாகக் காரணமாகும். இதனைக் காரணம் காட்டி மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்படக் கூடாது என தெரிவித்த கபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், 2017 ஆம் ஆண்டு திருத்தச்சட்டத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை கலப்பு முறையில் நடத்தலாம். ஆனால் மாகாண சபைத் தேர்தல் நடத்துவது குறித்து அரசாங்கம் இது வரையில் எந்தவிதமான அறிவிப்பையும் விடுக்காமல் உள்ளது. பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் அப்பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளமை போன…
-
- 0 replies
- 304 views
-
-
யாழ் மருத்துவக் கண்காட்சி 2018 – வாரீர் வளம் பல பெறுவீர்…. விந்தைகள் பலநிறைந்து வினைத்திறனாய் மாறிவரும் உலகில் இயந்திர வாழ்க்கைக்கு இசைவாக்கம் அடைந்துவருகின்றான் மனிதன். வேலைப்பழுக்கள், உணவுப் பழக்கவழக்க மாற்றங்கள் தொற்றுமற்றும் தொற்றாநோய்கள் அதிகரித்துவரும் போதைப் பாவனைகளும்,வீதிவிபத்துக்களும் சராசரிமனிதனின் நாளாந்த வாழ்க்கைக்கு சவாலாக அமைகின்றன. எனவே இவற்றிக்கான காரணிகளை ஆரம்ப நிலைகளிலே கண்டறிவதன் மூலமும் அவற்றைத விர்த்துக் கொள்வதன் மூலமும் உடல், உள ஆரோக்கியத்தைநாம் மேம்படுத்திக் கொள்ளலாம். இவற்றைக் கருத்திற் கொண்டு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமானது தனது 40வது வருடபூர்த்தியை முன்னிட்டு வடமாகாண சுகாதார அமைச்சுடன் இண…
-
- 0 replies
- 469 views
-