ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
கட்டடங்களை மட்டும் உருவாக்குவதன் மூலம் மருத்துவமனைகள் சிறப்பான சேவைகளை வழங்கிவிட முடியாது வெறுமனே கட்டடங்களை மட்டும் உருவாக்குவதன் மூலம் மருத்துவமனைகள் சிறப்பான சேவைகளை வழங்கிவிட முடியாது. மாறாக இம் மருத்துவ மனைகளில் சேவையாற்றுவதற்கு கூடுதலான மருத்துவர்கள்,தாதியர் போன்றோர் பணிக்கு அமர்த்தப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் புகுயுவுஆ திட்ட உதவியுடன் சுமார் 26 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் வருடா வருடம் பல நூற்றுக்கணக்கான மருத்துவர்களை பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீடங்கள…
-
- 0 replies
- 169 views
-
-
யாழ் செம்மணியில் விசமிகளால் அடித்து நொருக்கப்பட்டது இந்துக்கோயில்! யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் இந்துக் கோவில் விசமிகளால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஏ9 வீதி, செம்மணி சந்திக்கு அருகில் அமைந்துள்ள இந்துக் கோவில் இன்று(23-02-2018) காலை விசமிகளால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இந்துக்களின் வழிபாட்டுஸ்தலங்கள் தொடர்ச்சியான முறையில் அழிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டும் வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். https://news.ibctamil…
-
- 3 replies
- 615 views
-
-
தியத்தலாவை குண்டு வெடிப்பு: குண்டை எடுத்து வந்த இரானுவ வீரரின் நிலைமை கவலைக்கிடம் (எம்.எப்.எம்.பஸீர்) பண்டாரவளையிலிருந்து தியத்தலாவை சென்று அங்கிருந்து மஹியங்கனை - ஹிராதுருகோட்டை நோக்கி பயணிக்க சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டியில் கைக்குண்டொன்று வெடித்து பரவிய தீயினால் 19 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்ப்ட்டுள்ளன. அதன்படி சம்பவம் தொடர்பில் இன்று மாலை வரை 25 பேரின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் அதில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையபப்டுத்தி பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஆர்.ஜி.எம்.பி. எல்லபொலவின் நேரடி மேற்பார்வையில் பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்கவின் …
-
- 0 replies
- 279 views
-
-
கிளிநொச்சியில் அமையவுள்ள வடக்கிற்கான விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையமும் பறிபோகும் ஆபத்து?! குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மற்றுமொரு பாரிய அபிவிருத்தி திட்டம் தொடர்பில் சர்சைகளும்,இழுபறிகளும், கருத்து முரண்பாடுகளும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளன. ஏற்கனவே வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலும், இரணைமடு யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகம் தொடர்பிலும் இதேபோன்றே நிலைமைகள் ஏற்பட்டிருந்தன. இறுதியில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை வடக்கு இழந்துவிட்டது. இரணைமடு யாழ்ப்பாணம் குடி நீர் திட்டத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே நடந்து வருகிறது. இது வடகிற்கான ஒரு சாபக்கேடாக அமைந்துள்ளது. இதேபோன்றே தற்போத…
-
- 0 replies
- 392 views
-
-
இரகசியமாகவேணும் வெளிப்படுத்துங்கள்.! தேசிய அரசாங்கத்தை நீடிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை வெளிபடுத்தக்கூறி இன்றும் பாராளுமன்றத்தில் ஆளும் எதிர் தரப்பினரிடையே வாக்குவாதம் நிலவியது. ஒப்பந்தத்தை பிரசித்திபடுத்த முடியாவிடின் இரகசியமாகவேணும் வெளிப்படுத்துங்கள் என கூட்டு எதிர்க்கட்சி குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன சபையில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும் போதே கூட்டு எதிர்க்கட்சி குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது பல கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்த முன்னணியாகும். அவ்வாறு…
-
- 0 replies
- 276 views
-
-
இலங்கை வந்தார் சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சர்ச்சைக்குட்பட்ட பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இன்று இலங்கை வந்தடைந்தார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இலங்கைக்கு மீள அழைக்கப்படுவதாக தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்திருந்தார். இதேவேளை, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையோ விசாரணையோ முன்னெடுக்கப்படாது என்றும் அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கை…
-
- 1 reply
- 361 views
-
-
கிளிநொச்சி புதுமுறிப்புக்குளத்தில் இளஞனின் சடலம் மீட்பு… கிளிநொச்சி புதுமுறிப்புக்குளத்தில் இளஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான ப.டனுசன் என அடையாம் காணப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டி உரிமையாளரான இவர் நேற்று (21.02.18) மாலை கிளிநொச்சியிலிருந்து கிளிநொச்சி மேற்கு நோக்கி முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தியவர்களை ஏற்றிச் சென்ற போதே காணாமல் போனதாக பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் இன்று(22) புதுமுறிப்புக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா, கொலையா என என்பது தொடர்பில் விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். …
-
- 0 replies
- 166 views
-
-
முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்.! முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காணி உரிமையாளர்களும், பொது மக்களும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/30904
-
- 1 reply
- 275 views
-
-
நல்லிணக்க பிரசாரம் தமிழர்களுக்கு மாத்திரம் அறிவுரை கூறுவதாக இருக்கக் கூடாது ; மனோ நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சி, தெற்கில் இருந்து வடக்கிற்கு மாத்திரம் நல்லிணக்க பிரச்சாரங்களை கொண்டு செல்லும் ஒருவழி பாதை ஊடகமாக இருக்கக் கூடாது. இருக்கவும் முடியாதென முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தால் ஆரம்பிக்கப்படும் நேத்ரா நல்லிணக்க தமிழ் தொலைக்காட்சியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமைச்சர்கள் மங்கள சமரவீர, …
-
- 0 replies
- 227 views
-
-
ஸ்ரீலங்காவின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திடீர் இராஜினாமா பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன பதவியை இராஜினாமா செய்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய பிரித்தானிய தூதரகத்திற்கான பாதுகாப்பு பொறுப்பதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ ஸ்ரீலங்காவுக்கு அவசரமாக அழைக்கப்பட்ட நிலையில் உயர்ஸ்தானிகரது பதவி விலகல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதியிலிருந்து தாம் பதவிவிலகுவதாக பிரித்தானியாவுக்கான ஸ்ரீலங…
-
- 0 replies
- 519 views
-
-
சிறிலங்கா இராணுவ உயரதிகாரியைத் தடுத்தது ஐ.நா லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவிருந்த லெப்.கேணல் ஹேவகே என்ற சிறிலங்கா இராணுவ உயர அதிகாரியை ஐ.நா தடுத்து நிறுத்தியுள்ளது. ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் பங்கேற்க லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவத்தின் 150 பேர் கொண்ட அணிக்கு லெப்.கேணல் ரத்னபுலி வசந்தகுமார ஹேவகே என்ற அதிகாரி பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் 2008-09 ஆம்ஆண்டு காலப்பகுதியில் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் என்றும், இவர் குறித்த மனித உரிமை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கரிசனை எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், இவரை லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கை…
-
- 3 replies
- 459 views
-
-
கூட்டமைப்பு எம்.பிக்களின் இலஞ்ச விவகாரத்தால் சபையில் சலசலப்பு 2018ஆம் ஆண்டு, வரவு - செலவுத் திட்டத்துக்கு, ஆதரவு வழங்குவதற்காக, 20 மில்லியன் ரூபாயை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்று சூடுபிடித்திருந்தது. இந்தச் சலசலப்பையடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை அமருமாறும், இல்லையேல் சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றிவிடுவதாகவும் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்தார். “வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு, 20 மில்லியன் ரூபாயை, இலஞ்சமாக நாங்கள் பெற்றதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
-
- 3 replies
- 281 views
-
-
கட்சி மாறுவோரின் உறுப்பினர் பதவி இரத்தாகும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் மாதம் 6ம் திகதி ஆரம்பமாவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு கூறியுள்ளது. இந் நிறுவனங்களது அங்கத்தவர்கள் பற்றி சட்டபூர்வ நிலைமையை விளக்கும் வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இதன் பிரகாரம் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்களுக்கு பொருத்தமான அங்கத்தவர்களை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு வழங்கப்படுகிறது. இந்த வாக்கெடுப்பின் இயல்பு பற்றி அங்கத்தவர்கள் தீர்மானிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்ப…
-
- 0 replies
- 219 views
-
-
மஹிந்தவை ஜெனிவாவில் நல்லாட்சி காட்டிக்கொடுக்கும்.! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கத்தினை நல்லாட்சி அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் ஜெனிவாவில் காட்டிக்கொடுக்கும். குறித்த விடயத்தின் பின்னர் இலங்கை பாரிய சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை எதிர்கொள்ளவுள்ள சவால்கள் தொடர்பில் தெளிவுபடுத்திய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இம்மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 23ஆம் திகத…
-
- 0 replies
- 322 views
-
-
நாளை ஆரம்பமாகின்றது கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா இலங்கை மற்றும் இந்திய கடல் எல்லை களுக்கிடையே அமைந்துள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெரு விழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்ப மாகின்றது. நாளை வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் நற்கருணைப் பெருவிழாத் திருப்பலி வழிபாடுகள் நடைபெறும். நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 7 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை ஆகியோர் இணைந்து பெருவிழா கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றவுள்ளனர். இப்பெருவிழாத் திருப்பலியில் இந்தியாவின் சிவகங்க…
-
- 0 replies
- 244 views
-
-
வாய்மூடி இருந்த சுமந்திரன் ஏன் இறுதி நேரத்தில் குழப்பினார் ; திட்டமிட்ட சதியென்கிறார் வாசு (எம். எம். மின்ஹாஜ், ஆர்.யசி) பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து விவாதத்தை தடுத்தனர். இது திட்டமிட்ட சதியென கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார குற்றம் சுமத்தினர். எனினும் நான் முன்வைத்த கோரிக்கை நியாயமானது, சட்ட விதிமுறைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது என சுமந்திரன் வாசுவின் குற்றச்சாட்டை நிராகரித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றுகையில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக…
-
- 1 reply
- 329 views
-
-
அவதூறு செய்திக்கு நடவடிக்கை இல்லை என யாழில் ஒருவர் தற்கொலை முயற்சி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி ஒருவர் யாழில்.உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , யாழில்.இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் தன்னை பற்றி அவதூறு ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியாகி உள்ளது என தெரிவித்து ஒருவர் யாழில்.அமைந்துள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும் , எந்த விதமான நடவடிக…
-
- 0 replies
- 196 views
-
-
தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கையை வெளிப்படுத்தவும் ; அநுரகுமார (எம்.எம். மின்ஹாஜ், ஆர்.யசி) தேசிய அரசாங்கம் தொடரவேண்டும் என்றால் மீண்டும் பாராளுமன்றத்தின் அனுமதியினை பெறவேண்டும். வாய் வார்த்தைகளின் மூலம் தேசிய அரசாங்கத்தை நீடிக்காது உடன்படிக்கை என்னவென்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய அரசாங்க கால எல்லை மீறியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் தொடர்ந்தும் நீட்டித்துக் கொண்டுசெல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்து தெரிவிக்கும் போதே இதன…
-
- 0 replies
- 223 views
-
-
தேசிய அரசாங்கம் குறித்த இறுதி நிலைப்பாட்டை பாராளுமன்றில் தெரிவித்தார் பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்து பயணிக்கும். நாம் பாராளுமன்றத்திற்கு முன்வைத்த யோசனையை இரத்து செய்யவில்லை. அத்துடன் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதாக பாராளுமன்றத்திற்கு பிரேரணையொன்றை மாத்திரமே நாம் முன்வைத்தோம். அதனைவிடுத்து நாம் ஒப்பந்தகளோ அல்லது ஆவணங்களோ முன்வைக்கவில்லை. ஆகையால் தேசிய அரசாங்கத்தை கொண்டு போவதற்கு எழுத்து மூல ஆவணங்களோ ஒப்பந்தங்களோ அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். இதன்படி அரசியலமைப்பின் பிரகாரம…
-
- 0 replies
- 141 views
-
-
எதுவும் செய்ய முடியாதென கைகழுவினார் சபாநாயகர் ! தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தொடர்ந்து பயணிப்பதாக இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் இதற்கு அப்பால் எனக்கு எதுவும் செய்ய முடியாது. எனினும் இது தொடர்பில் காணப்படும் முரண்பாடுகள் குறித்து தான் அவதானம் செலுத்துவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை தேசிய அரசாங்கம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், தேசிய அரசாங்கம் தொடர்பில் எனது முடிவினை அறிவிப்பதாக கூறினேன்…
-
- 0 replies
- 216 views
-
-
அம்பாள்புரம் மாணவர்களுக்கு இன்றுமுதல் இ.போ.ச பேருந்து சேவை நாள்தோறும் 24 கிமீ தூரம் நடந்து பாடசாலைக்கு சென்று வரும் முல்லைத்தீவு அம்பாள்புரம் மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டு அம்மாணவர்களுக்கு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கடந்தவாரம் ஜனாதிபதி வழங்கிய பணிப்புரையின் பேரில் இன்றுமுதல் (பெப் 21) அம்பாள்புரம் ஊடாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. தினமும் காலையும் மதியமும் இச்சேவை இடம்பெறவுள்ள அதேவேளை இம்மாணவர்களுக்கு தேவையான பேருந்து பிரவேசப் பத்திரங்களை வன்னிவிளாங்கும் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஊடாக மாணவர்களுக்கு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கவுள…
-
- 0 replies
- 140 views
-
-
காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் குறித்த அலுவலகம் மற்றும் காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது. இந்த உறுதிமொழியை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/67829/
-
- 0 replies
- 111 views
-
-
அதிகாரத்துக்குப் போட்டியிடும் சிங்களக் கட்சிகளும் பிரச்சினைகளோடு போராடும் சிறுபான்மையினரும் இவ்வாண்டு தனது 70வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இனப்பிரப்பிரச்சினை நிலவுகின்ற சிறிலங்காவில், வன்முறைகள் நிறைந்த தேர்தல்கள் இடம்பெறும். பெப்ரவரி 10 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் சிறிலங்காவின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றது. இத்தேர்தலில் 75 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றதானது மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காண்பித்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது. தற்போதைய அரசாங்கமானது புதிய தேர்தல் முறைமைக்கான வன்முறைகளற்ற வாக்களிப்பிற்கு பங்காற்றியுள்ளது. ‘முன்னைய தேர்தல்களில் இடம்பெறும் போட்டி…
-
- 0 replies
- 105 views
-
-
கூட்டு அரசாங்கம் தொடர்கிறது – நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து உருவாக்கிய கூட்டு அரசாங்கம் இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், அது தொடரும் என்றும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பிரதமரும் ஐதேக தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீரவும் நாடாளுமன்றத்தில் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தேசிய அரசாங்கம் தொடர்பாக உடன்பாடு இன்னமும் நடைமுறையிலேயே உள்ளது. அதனைத் திருத்துவதற்கு எந்தத் தேவையுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதேவேளை, தேசிய அரசாங்கத்த…
-
- 0 replies
- 105 views
-
-
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டனின் இறுதிக்கிரியை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டனின் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றது. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது 70 ஆவது வயதில் இன்று காலமானார். கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். அன்னாரின் இறுதிக் கிரியை இன்று பொரளை கனத்தையில் இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/30877
-
- 0 replies
- 309 views
-