ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143314 topics in this forum
-
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சம்பந்தன் விடுக்கும் வேண்டுக்கோள்.! தேசிய அரசாங்கத்தை நீடித்து செல்வதில் தடைகளை தகர்க்கும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்தும், தேசிய அரசாங்கத்தின் தேவை மற்றும் அவற்றில் ஜனாதிபதி - பிரதமரின் இணக்கப்பாடு தொடர்பாகவும் நட்புறவு ரீதியில் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெளிவுபடுத்தியுள்ளார். ஜனாதிபதி- பிரதமர் இருவரும் மக்கள் ஆணையினை முதன்மைப்படுத்தி பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணவேண்டியதன் அவசியத்தையும் இருவருக்கும் வலியுறுத்தியுள்ளார். தேசிய அரசாங்கத்தின் நகர்வுகளில் பிரதான இரண்டு கட்சிகளுக…
-
- 0 replies
- 169 views
-
-
அரசிலிருந்து விலகுகிறது சுதந்திரக்கட்சி நல்லாட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஸ்ரீலங்கா சுந்திரக்கட்சி தீர்மானித்திருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பேச்சாளர் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அறிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தின் அபிப்பிரயாத்தை கோரவுள்ளதாகவும் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுமாலை…
-
- 0 replies
- 153 views
-
-
முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது!! முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது!! சட்ட விரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியா சென்ற முன்னாள் போராளி ஒருவர் இலங்கைக்கு நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டார். அவர் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்து குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 2012ஆம் ஆண்டு 44 பேருடன் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் த…
-
- 0 replies
- 158 views
-
-
கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பதவியில் இருந்து விலக தயாராகும் ரணில் இலங்கையின் அரசியலில் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து விலகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பதவி விலகும் கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாளைய தினம் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் குறித்த தீர்மானத்தை மேற்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆயத்தமாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய பிரதமர் மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில் சபாநாயகரை பிரதமராக நியமிப்பதற்கு, ரணில் விக்ரமசிங்க வ…
-
- 2 replies
- 340 views
-
-
இரணைமடுவில் அரச( ர்) மரமும் உயிரோடு நகர்த்தப்படுகிறது. கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் பகுதிக்கருகில் 2009 க்கு பின்னர் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அண்மையில் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கிருந்த அரச மரமும் உயிரோடு பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. அரச மரத்தைச் சுற்றி பாரியளவில் குழியினை ஏற்படுத்தி மரம் பாதிக்ப்பட்டாத வகையில் உயிரோடு நகர்த்தும் முயற்சிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே குறித்த அரச மரம் மற்றும் ஏற்கனவே குளக்கரையில் இருந்து எடுக்கப்பட்ட புத்தர் சிலையும் பிரிதொரு இடத்தில் வைக்கப்படாலாம் என பொது மக்கள் சந்தேகிக்கின்றனர். http://globaltamilnews.net/2018/…
-
- 2 replies
- 414 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடங்கவுள்ள நிலையில் மகிந்தவை போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து சுமந்திரன் காப்பாற்ற முயற்சி செய்கிறார் 2018-02-18 14:48:37 ஐ.நா மனித உரிமைகள் பேரவை யின் அமர்வு தொடங்கவுள்ள நிலை யில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற செயற்பாட் டிலேயே ஈடுபட்டுவருவதாக குற்றஞ் சாட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை அரசாங்கத்துக்கு வழ ங்கிய கால அவகாசத்தை நிறுத்துமாறு தாங் கள் வலியுறுத்திவரும் நிலையில் ஜெனிவா வில் உள்ள பிரித்தானிய தூதுவரின் அலு வலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவ…
-
- 3 replies
- 335 views
-
-
தமிழ் அரசியல் தலைமைகள் உணர வேண்டிய யதார்த்தம்! மைத்திரி_ -ரணில் கூட்டரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர் இந்த நாட்டில் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதலாவது தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கின்றது. கிராமிய மற்றும் பிரதேச அபிவிருத்தியுடன் தொடர்புடைய இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அந்த நோக்கத்திற்கும் அப்பால் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக நோக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் 'சிறிலங்கா…
-
- 0 replies
- 373 views
-
-
பிரதமர் விவகாரம், நீதிமன்றத்திடம் ஜனாதிபதி கோருவார். சந்திப்பில் முடிவு இல்லை உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை இடம்பெற்ற பேச்சுக்களில் கூட முடிவுகள் எடுக்கப்பட்வில்லையென கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அவசரமாக கூடி, தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடலில், நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு செல்வது மற்றும் புதிய அமைச்சரவை தெரிவு குறித்த விடயங்கள் பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகத் தகவல…
-
- 0 replies
- 157 views
-
-
கரு ஜெயசூரியவுடன் சென்று மைத்திரியை சுற்றி வளைத்தார் றணில்… பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள தற்போது ஜனாதிபதியுடைய உத்தியோகபூர்வ இல்லத்தை சென்றடைந்துள்ளனர். பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்து என்ன? என்பது குறித்த இலங்கையும், சர்வதேசமும் எதிர்பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. http://globaltamilnews.net/2018/67397/
-
- 3 replies
- 742 views
-
-
சந்திரிகாவின் எச்சரிக்கை!! திருடர்களுடன் இணைந்து தற்போதைய அரசு ஆட்சியமைத்தால் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா. கட்டுநாயக்காவில் அமைந்துள்ள விஜய குமாரண துங்கவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றுகையிலேயே இவ்வாறான எச்சரிக்கை சந்திரிகாவிடம் இருந்து வெளிப்பட்டுள்ளது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்திருந்த கூட்டு அரசு, அண்மைய உள்ளூராட்சித் தேர…
-
- 0 replies
- 353 views
-
-
பெண்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக் கூடாது!! பெண்கள் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக் கூடாது!! சிவில் அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் வலியுறுத்து உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீதம் பெண்கள் கட்டாயம் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என்று சிவில் அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் போர்க் கொடி தூக்கியுள்ளனர். தற்போது சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் தொடரவேண்…
-
- 0 replies
- 112 views
-
-
பதவிகளுக்காக சரணாகதி அடைவது கூட்டமைப்பின் கொள்கைக்கு மாறானது!! வடக்கில் தேர்தல் இடம் பெற்ற பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலும் எந்தவித முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அநேகமான உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. தமிழ்க் காங்கிர…
-
- 0 replies
- 372 views
-
-
தமிழினத்தின் அழிவுக்கு கஜேந்திரகுமாரே காரணம்! வீ.ஆனந்தசங்கரி வடக்கு உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்காது என்று அந்தக் கட்சியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழினத்தின் அழிவுக்கு காரணமானவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்றும் தெரிவித்துளார். கடந்த 2004ஆம் ஆண்டு ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த இவர்களால் ஜனநாயகம் பற்றி எப்படிப் பேசமுடிகின்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, இந்தத் தேர்தலில் வடக்கில் 2 சபைகளை மட்டும் அதுவும் அறுதிப்பெரும்பான்மையின்றி வென்றுவிட்டு வீரம் பேசுவதாகவும் வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwi…
-
- 3 replies
- 401 views
-
-
கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்க தயார்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவிப்பு நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்தை பெறாத இடங்களில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க தயாராக உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கில் தமிழ் கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளை கிழக்கு தமிழர் ஒன்றியம் சந்தித்து வருகின்றது. அந்த வகையில் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரை சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், முதல் கட்டமாக த…
-
- 0 replies
- 320 views
-
-
தேர்தலில் போட்டியிட மஹிந்த பசிலின் ஆசிர்வாதம் தேவை எஸ்.வினோத் அமெரிக்க குடியுரிமையை தூக்கியெறிய எந்நேரமும் தயார் என்கிறார் கோத்தா 2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதா இல்லையா என்பதை என்னால் தனித்து தீர்மானிக்க முடியாது. அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆசிர்வாதமும் பசில் ராஜபக் ஷவின் இணக்கமும் தேவை அவர்களின் தீர்மானத்தின் பிரகாரமே அது தொடர்பில் முடிவெடுப்பேன் அத்துடன் எனது அமெரிக்க குடியுரிமையை எந்நேரத்திலும் இரத்து செய்ய நான் தயாராக உள்ளேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபஷ்ச தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்…
-
- 1 reply
- 232 views
-
-
”தமிழ் மக்களின் சாபத்தினைப் பெறமுடியாது” வாசுதேவ நாணயக்கார (இராஜதுரை ஹஷான்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் எதிர்கட்சி பதவியை பறித்து தமிழ் மக்களின் சாபத்திற்கு கூட்டு எதிர்கட்சி ஒருபொழுதும் ஆளாகாது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு எதிர்கட்சி இணக்கமாக செயற்படும் என கூட்டு எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எதிர்கட்சி தலைவரின் பதவி தொடர்பில் தற்போது நாட்டில் எழுந்துள்ள பொய்யான வதந்திகள் தொடர்பில் குறிப்பிடுகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பி;ட்டார். http://www.virakesari.lk/article/30756
-
- 0 replies
- 234 views
-
-
மஹிந்தவின் மீள் எழுச்சி அச்சத்தில் ராஜதந்திர சமூகம்… முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மீள் பிரவேசம் தொடர்பில் ராஜதந்திர சமூகம் கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு திரும்பக்கூடிய சாத்தியம் உண்டு என எதிர்வு கூறப்பட்டு வரும் நிலையில், இது குறித்து உலகின் பல நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த விடயம் குறித்து மேற்குலக நாடுகளின் ராஜதந்திரிகள், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைமையில் ஜனாதிபதி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான தகவல்கள் குறித்து, மேற்குலக நாடுகள் கேள்வி எழுப்பியுள்ளன. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச…
-
- 0 replies
- 236 views
-
-
6 அமைச்சுக்களை மாற்றுவது குறித்து ஆலோசனை : வியாழன் நடைமுறைக்கு வரும் சாத்தியம் எம்.எம்.மின்ஹாஜ் தேசிய அரசாங்கத்தில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. அலரி மாளிகையில் நேற்று பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.சட்டம் ஒழுங்கு அமைச்சு உட்பட ஐந்து அல்லது ஆறு அமைச்சுக்களை மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக ஐ.தே.க கட்சி யின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய அரசாங்கத்தில் பிரதான அமைச்சுக்கள் மாற்றம் செய்வது தொடர்பில் நேற்றும் நேற்று முன் தினமும் அலரிமாளிகையி…
-
- 0 replies
- 246 views
-
-
அமைச்சர் பதவி – கூட்டமைப்புக்கு ஆதரவு என்பதெல்லாம் ஊடகங்களின் புரளி…. குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்… மீன்பிடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளேன் என வரும் செய்திகள் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ்தேவானந்தா குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார்.ஆளும் அரசாங்கத்துடன் இணையாமல் தொடர்ந்தும் வெளியில் இருந்து தனித்துவத்தை பேணுவதற்கே திடம்கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர் அண்மைய நாட்களில் பல புரளிகள் கிளப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ் மாநகரசபையில் ஆட்சியமைத்தல், ஏனைய உள்ளளுராட்சி சபைகளின் தொங்கு சபைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கை இராணுவத்தில் யாழ். இளைஞர், யுவதிகள் யாழ். குடாநாட்டைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர், யுவதியர் ஐம்பது பேர் இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு கடந்த பதினைந்தாம் திகதி யாழ். இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஐம்பது பேரில். முன்னாள் போராளிகளும் அடங்குவர். சேர்த்துக்கொள்ளப்பட்ட ஐம்பது பேரும் இராணுவப் பணி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவர் எனத் தெரியவருகிறது. இந்த ஐம்பது பேருக்கும் மாதமொன்றுக்கு தலா நாற்பதாயிரம் ரூபா சம்பளத்துடன், உணவு, போக்குவரத்து, தங்குமிட, மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மருத்துவ வசதிகள் மேற்படி இளைஞர், யுவதிகளின் குடும்பத்தினருக்க…
-
- 2 replies
- 427 views
-
-
“மகிந்த மனம் வருந்தி, உறவுகளை விடுவித்தால் ஏற்றுக்கொள்வோம்” லீலாதேவி குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… மகிந்த ராஜபக்ச மனம் வருந்தி எமது உறவுகளை விடுவித்தால் ஏற்றுக்கொள்வோம் என லீலாதேவி தெரிவித்துள்ளார் முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இந்த ஜனாதிபதி காலத்தில் அதற்கு நீதி கேட்டு போராடி வருகின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் இழைத்த துரோகங்களுக்கும், தவறுகளுக்கும் மனம் வருந்தி எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தந்தால் நாம் அதனை ஏற்றுக்கொள்வோம். எங்களுக்கு தேவை எங்களின் பிள்ளைகளே என கிளிநொச்சியில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்…
-
- 1 reply
- 327 views
-
-
நாமல் சொன்னது உண்மையா? மைத்திரிக்கு அந்த அதிகாரம் இல்லை! கொழும்பில் மற்றொரு பரபரப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து இறக்கும் நடவடிக்கை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்திருக்கும் கருத்து கொழும்பு அரசியல் தளத்தில் புது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் செல்வாக்கு இழந்துள்ளதன் வெளிப்பாடு என்று அரசியல் அவதானிகள் சொன்னாலும், இன்றைய தினம் நாமலின் கருத்து புதிய பிரச்சினைக்கான அத்தியாயத்தை திறந்திருப்பதை உணர முடிகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமெரிக்க, இந்திய அரசுகளின் அதிகமான ஆதிக்கத்தைக் கொண்டிருப்பவர் என முன்னரே பலமுறை எதிர் த…
-
- 0 replies
- 228 views
-
-
மக்களின் ஆணையை நிறைவேற்றுங்கள் – மைத்திரியை சந்தித்து சம்பந்தன் வலியுறுத்தல் 2015 அதிபர் தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அடுத்து, நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போதே அவர், 2015 அதிபர் தேர்தலின் போது, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரியுள்ளார். இந்தச் சந்திப்புக் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து வெள…
-
- 1 reply
- 210 views
-
-
ரணில் பக்கம் தாவும் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள்? – முடிவுக்கு வரும் குழப்பம் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து, கொழும்பு அரசியலில் ஏற்பட்ட குழப்ப நிலை தற்போது, மீண்டும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சாதகமான திருப்பத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து விட்டு, கூட்டு எதிரணியின் ஆதரவுடன், நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தை அமைக்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி முற்பட்டதால், நேற்று முன்தினம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த இதற்கான நடவடிக்கைகளை, மகிந்த ராஜபக்சவுடன் பேசி முன்னெடுத்திருந்தார். இதற்கமைய, கூட்டு எதிரணியின் தலைவர்கள் சிற…
-
- 1 reply
- 232 views
-
-
ஐதேக அரசு உருவாவதைத் தடுக்கத் திட்டம்? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது பற்றி ஆராய, கூட்டு எதிரணியினரின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை (19) மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐ.தே.க. தலைமையிலான அரசு உருவாவதைத் தடுப்பது குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும் என கூட்டு எதிரணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, தற்போதைய ஸ்திரமற்ற அரசியல் நிலை குறித்து நாளை (19) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர். மஹிந…
-
- 0 replies
- 311 views
-