ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
யாழ் மாநகர சபையின் முதல்வராக சி.வி.கே சிவஞானத்திற்கு சந்தர்ப்பம்! உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் மும்முரமாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி இருந்து வருகிறது. இந்த நிலையில் ஊடகவியலாளர் வித்தியாதரனை யாழ் மாநகர முதல்வராக நிறுத்துவதாகவும் அண்மையில் தகவல்கள் வெளியாகி இர…
-
- 4 replies
- 524 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் சுமார் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளது: மீள்குடியேற்ற அமைச்சு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,67,000 வீடுகளை அமைக்க வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது. 30 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கில் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், அவர்களை மீள்குடியேற்றும் செயற்பாடு இடம்பெற்றதுடன், அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மேலும் 1,66,906 வீடுகளை அமைக்க வேண்டியுள்…
-
- 3 replies
- 540 views
- 1 follower
-
-
முல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் – சாவகச்சேரியில் UNP – கிளிநொச்சியில் மகிந்த தரப்பு – கட்டுப் பணம் செலுத்தின… குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில், ஆலையடிவேம்பு, பொத்துவில், கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய ஆறு பிரதேச சபைகளுக்குமான கட்டுப்பணம் 11.12.2017 நேற்று நண்பகல் செலுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் கட்சியின் முல்லை மாவட்ட முகவர் திலகநாதன் கிந்துஜன் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டது இதன்போது கட்சிய…
-
- 1 reply
- 418 views
-
-
வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேரின் சிறைத்தண்டனையை உறுதி செய்தது யாழ். மேல் நீதிமன்றம் யாழ்ப்பாணத்தில் செயற்படும் பிரபல வாள்வெட்டுக் குழுக்களில் ஒன்றான, டில்லு என்பவர் தலைமையிலான வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 8 பேருக்கான சிறைத்தண்டனையை யாழ். மேல் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் சிறைத்தண்டனையை உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளார். வாள்வெட்டுக் குழுவின் தலைவரான டில்லு உள்ளிட்ட மூவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் ஏனைய ஐந்து பேருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலைய…
-
- 0 replies
- 316 views
-
-
நிலக்கண்ணி வெடிகள் அற்ற பிரதேசமாக முகமாலை எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினரால் அதிகமாக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட கிளிநொச்சி-முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பிரதேசம் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக இன்று(12) பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முகமாலை பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கையை சர்வதேச கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்பு மற்றும் இராணுவத்தின் பொறியியல் அணியினால் முன்னெடுக்கப்பட்டது. நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பு பளை பிரதேச செயலாளர் பிரமோதயன் ஜெயராணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நிலக்கண்ணி வெட…
-
- 0 replies
- 204 views
-
-
வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் சொன்ன இந்நாள் முதலமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வருங்கால முதலமைச்சருக்கு வணக்கம் சொன்னதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தமையால் சபையில் சிரிப்பொழி எழுந்தது. வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற போது முதலமைச்சர் வரவு செலவு திட்டத்தின் ஆரம்ப உரையை நிகழ்த்தினார். உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போது , முதலமைச்சர் அவர்களுக்கும் , அவைத்தலைவர் அவர்களுக்கும் , அமைச்சர்களுக்கும் , உறுப்பினர்களுக்கும் என விழித்து வணக்கம் சொன்னார். அதன் போது குறுக்கிட்ட அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உங்களுக்கு நீங்களே வணக்கம் சொல்லுகின்றீர்களா ? என நக்கலான தொனியில் சிர…
-
- 0 replies
- 435 views
-
-
யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை! இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பெய்த மழையில் தரையில் விழுந்து சிதறிய மீன்கள் யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை இரவு மீன் மழை பெய்ததாக அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர். ஓக்கி புயல் தாக்கத்தினால் நவம்பர் இறுதியில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களிலும் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. தற்போது தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக இலங்கையிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 599 views
-
-
ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி தனித்துக் களமிறங்குகிறது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் களமிறங்குவதற்காக முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி இன்று கட்டுப்பணம் செலுத்தியது. அந்தக் கட்சியின் தலைவர் அ.வரதராஜப்பெருமாள், செயலாளர் சிறிதரன் உள்ளிட்டவர்கள் இன்று பி.ப. 2.40 மணியளவில் கட்டுப்பணத்தைச் செலுத்தினர். இதேவேளை, வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எப் பத்மநாபா அணி, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைகின்றது என செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே அந்தக் கட்சி இன்று தனியாகக் கட்டுப்பணம் செலுத்தியது. http://globaltamilnews.…
-
- 0 replies
- 508 views
-
-
மகாகவி பாரதியாரின் பிறந்த நாளில் யாழ்ப்பாணத்தில் கலை நிகழ்வுகள் புரட்சிக்கவி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 135 ஆவது பிறந்த தின கலை நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துர்க்காதேவி மணி மண்டபத்தில் இன்று (11) மாலை இடம்பெற்றன. யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு துணைத் தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். பாரதியார் புகழ்பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய உதவி உயர்ஸ்தானிகரகத்தால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் சான்றி…
-
- 1 reply
- 1.4k views
-
-
நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது – சி.தவராசா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நியதிச் சட்டங்களை ஆக்கி விட்டால் மட்டும் போதாது. அந் நியதிச் சட்டத்தின் கீழ் நிர்வாக செயற்பாட்டிற்கான ஒழுங்குமுறை விதிகள், தாபன விதிக்கோவைகள் என்பன ஆக்கப்படாமல் அவை பயன்பாடற்ற நியதிச்சட்டங்களாகவே இருக்கும். என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி,தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. அதன் போது வரவு செலவு திட்ட விவாதம் நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , முதலமைச்சர் அவர்களால் …
-
- 0 replies
- 705 views
-
-
வவுனியாவில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் வாக்களிக்க, ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் டீ.கே.அரவிந்தராஜ் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 599 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் ஒரு நகரசபை உட்பட 5 உள்ளூராட்சி மன்றங்…
-
- 0 replies
- 295 views
-
-
கொக்குத்தீவு விசமிகளால் தீ வைத்து எரிப்பு : பறவைகள், பறவை முட்டைகள் எரிந்து நாசம் மட்டக்களப்பில் கொக்குத் தீவு என அழைக்கப்படும் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவுள்ள பறவைகள் சரணாலயம் இனம் தெரியாத விசமிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு முகத்துவாரம், பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் கொக்குத்தீவு என அழைக்கப்படும் பறவைகள் சரணாலயம் இனம் தெரியாத விசாமிகளால் தீயிட்டு நாசமாக்கப்பட்டுள்ளது. தீவுப்பகுதியில் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் உடன் லைட் ஹவுஸ் கழக உறுப்பினர்களுக்கு அறிவித்ததையடுத்து, தொடர்ந்து கழக உறுப்பினர்களினால்…
-
- 0 replies
- 274 views
-
-
ஈபிஆர்எல்எவ் வெளியேறினாலும் கூட்டமைப்புக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு – என்கிறார் சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அண்மையில் வெளியேறியுள்ளது. இந்தக் கட்சி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “தமிழ…
-
- 4 replies
- 243 views
- 1 follower
-
-
“அதிகாரங்களை மத்தியில் தம்வசப்படுத்தி அவற்றை நம்மூடாக நடைமுறைப்படுத்துகிறார்கள்”…. முதலாவது வடக்குமாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்ட உரையில் விக்கி…… முதலாவது வடக்கு மாகாணசபையின் 112வது அமர்வு 12ஃ12ஃ2017 அன்று காலை 9.30 மணிக்கு மாகாண பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்படும் 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அறிமுகவுரை கௌரவஅவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே! இது எமது முதலாவது வடக்குமாகாணசபையின் ஐந்தாவதும் கடைசியுமான வரவு செலவுத் திட்டம். எமது ச…
-
- 0 replies
- 269 views
-
-
ஆச்சரியத்தை ஏற்படுத்திய தரம் ஒன்று மாணவனின் சிகையலங்காரம் கிளிநொச்சி பூநகரி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் சிகையலங்காரம் பாடசாலையிலும் கல்விச் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற போது மாணவனின் சிகையலங்காரம் அனைவரையும் ஆச்சிரியத்திற்குள்ளாக்கியது. அடுத்த வருடம் தரம் இரண்டுக்கு செல்லும் இந்த மாணவனின் பெற்றோரின் அக்கறையின்மையும் பாடசாலைக்குரிய ஒழுக்க விதிமுறைகளை கவனத்தில் எடுக்காத அலட்சிய மனநிலையே இதற்கு காரணம் என பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது. http://tamil.adaderana.lk…
-
- 1 reply
- 424 views
-
-
ரணிலுடன் எவ்விதமான இரகசிய உறவும் இல்லை மஹிந்த உறுதி (லியோ நிரோஷ தர்ஷன்) ஐக்கிய தேசிய கட்சியுடன் கொள்கை ரீதியாக முரண்பாடுகள் காணப்படும் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் எவ்வாறு உறவுகளை வளர்ப்பது? எனவே பிரதமருக்கும் எனக்கும் எவ்விதமான இரகசிய உறவுகளும் கிடையாது என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , ஐக்கிய தேசிய கட்சியுடனான ஆட்சி அதிகார உறவை விட்டு விலகினால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஒன்றிணைந்து பயணிப்பதில் பிரச்சினையில்லை எனவும் குறிப்பிட்டார். உரிகடுவ - ஸ்ரீ வித்தியாசாகர மஹா விகாராதிபதியிடம் நேற்று திங்கட் கிழமை ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர்…
-
- 1 reply
- 357 views
-
-
கருணாவின் அணி மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது! மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தியது. கட்டுப்பணம் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன். இன்று நாம் சுக நேரத்தில் எமது கட்சியின் சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளர்கள் மூலம் இரண்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணத்திணை செலுத்தியுள்ளோம்.அதில் கட்சி சுயேட்சையாக போட்டியிடுவதற்காக எமது மத்தியகுழுவின் தீர்மானங்களுக்கு அமைய போட்டியிடவுள…
-
- 1 reply
- 729 views
-
-
யாழ் மாநகரை சூழ்ந்த மழையும் அகற்றப்படாத குப்பை கூழங்களும்… படங்கள்,வீடியோ – ஐ.சிவசாந்தன் யாழ்ப்பாணம் மாநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று(11) நண்பகல் ஒரளவு மழை வீழ்ச்சி பதிவாகியது. சில மணிநேரம் நீடித்த மழையால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றல் பிரிவால் சீராக கழிவுகள் அகற்றப்படாத இடங்களில் தேங்கிக்கிடந்த குப்பைகள் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றதால்ல் வீதிகளில்ப ரவிக்கிடந்தன. இவ்வாறு வெள்ளத்தில் பரவிய குப்பைகளிலிருந்து துர்நாற்றம் கிளம்புவதாக மக்கள் விசனம் தெரிவித்னதுள்ளனர். http://globaltamilnews.net/archives/54525
-
- 0 replies
- 314 views
-
-
தமிழக மீனவர்கள் 24 பேர் மீண்டும் சிறைப்பிடிப்பு! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 24 தமிழக மீனவர்களை இன்று(12) அதிகாலை கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் நெடுந்தீவுக்கு கடற்பரப்பின் தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது குறித்த தமிழக மீனா்கள் 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் அவா்கள் பயணித்த ஐந்து விசை படகுகளையும், இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் விசாரணையின் பின்னா் குறித்த தமிழக மீனவா்கள் 24 பேரும் …
-
- 0 replies
- 150 views
-
-
இரண்டு நிமிடங்கள் மட்டுமே கூடிய அரசியலமைப்பு சபை உரையாற்ற உறுப்பினர்கள் இல்லை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான ஐந்தாம் நாளுக்கான விவாதத்துக்காக கூடிய அரசியலமைப்பு சபை இரண்டு நிமிடங்களுக்குள்ளேயே ஒத்திவைக்கப்பட்டது. அரசியலமைப்பு சபையின் தலைவர் கருஜெயசூரியவினால் ஆளும் எதிர்த்தரப்பினைச் சேர்ந்த பத்து உறுப்பினர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டபோதும் உரையாற்றுவதற்காக அவர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்காததன் காரணத்தாலேயே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது. புதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் …
-
- 0 replies
- 166 views
-
-
விமலின் முக்கிய சகாக்கள் சுதந்திரக்கட்சியில் இணைவு விமல் வீரவன்சவின் முக்கிய சகாக்களான மூவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க மற்றும் வடமத்திய மாகாண சபை உறுப்பினர் பி.பீ. குமார ஆகியோர் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டனர். இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொ…
-
- 1 reply
- 804 views
-
-
தொடர்கிறது ரயில் வேலை நிறுத்தம் கடும் சிரமத்தில் பொது மக்கள் ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால் பயணிகள் கடும் அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மிகுந்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை ரயில் சேவையை முன்னெடுப்பதனை இலக்காகக் கொண்டு ஓய்வு பெற்றுள்ள ரயில்வே ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. மேலும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானிக்கு நேற்று பாராளுமன்றம…
-
- 0 replies
- 349 views
-
-
"யாழ்.மாவட்டத்திற்கான இன்னொரு மேல் நீதிமன்றம் வேண்டும்" யாழ்.மாவட்டத்திற்கு இன்னுமொரு மேல் நீதிமன்றம் பருத்தித்துறையில் அமைக்கப் பட வேண்டும். பருத்தித்துறையானது யாழ்ப்பாணத்திலிருந்து 22 மைல்கள் தூரத் தில் இருக்கின்றது. புதிய மேல் நீதிமன் றம் அமைப்பதன் மூலம் கிளிநொச்சி தொடக்கம் வலிகாமம்வரை நீதி நியாயாதிக்க வலயம் அமையலாம் என நினைக்கின்றேன். இந்த விடயம் குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடுவேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார். நீதியமைச்சின் 2 கோடியே 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாடிக்கட்…
-
- 0 replies
- 140 views
-
-
சங்கானை சபை மீண்டும் தமிழ் அரசின் கட்டுக்குள்! சங்கானைப் பிரதேச சபையின் தவிசாளர் பதவிக்கு நான்கு ஆண்டுகளும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் ஆசனப் பங்கீடு தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுக்களில், யாழ்ப்பாணத்தில் புளொட் அமைப்பு போட்டியிடும் சபைகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கவில்லை. நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, சுன்னாகம் பிரதேச சபை புளொட் அமைப்புக்கு வழங்கப்பட்டது. மானிப்பாய் பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்…
-
- 0 replies
- 390 views
-
-
கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம்கள் ஐம்பது பேர்!! கூட்டமைப்பின் பட்டியலில் முஸ்லிம்கள் ஐம்பது பேர்!! எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பட்டியலில் சுமார் 50 வரையான முஸ்லிம்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. மன்னார் மாவட்டத்தின் முசலிப் பிரதேச சபை உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இந்த 50 க்கும் குறையாத முஸ்லிம் வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கள…
-
- 0 replies
- 257 views
-